ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Go down

தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Empty தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:15 am

நாம் ஏற்கெனவே நன்கறிந்த ஒன்றை ‘நானும்’ இயக்கம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது: ‘அவதூறு என்பது அதிகாரம் மிக்கவர்களின் முதல் புகலிடம்’. பிரியா ரமணியின் மீது எம்.ஜே.அக்பர் கொடுத்திருக்கும் குற்றவியல் புகாரோ அல்லது விந்தா நந்தாவின் மீது அலக் நாத் கொடுத்திருக்கும் உரிமையியல் மற்றும் குற்றவியல் புகாரோ, பாலியல் தொல்லை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினைகள் என்னவாக இருக்கும் என்பதை அனுமானித்துவிட முடியும்: யார் குற்றம்சாட்டுகிறாரோ அவர் மீதே திருப்பிக் குற்றம்சாட்டும் வழிமுறைதான் குற்றவியல் அவதூறுச் சட்டம்.

கருத்துச் சுதந்திரத்துக்கும் நற்பெயருக்குக்கான உரிமைக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும் என்று சொல்வது வழக்கமானதுதான். தவறாகவும் அவதூறாகவும் அமைந்த வார்த்தைகளைப் பொதுவில் பேசுவதற்கு எந்தவொரு சட்ட அமைப்பும் அனுமதிக்காது. தண்டனைகளிலிருந்து விலக்கும் அளிக்காது. அவதூறுச் சட்டம் என்பது இரு தரப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல் நடுநிலையாக நின்று தீர்வு சொல்வதற்கான ஒரு கருவி.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Empty Re: தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:18 am

ஆனால், அவதூறுச் சட்டத்தின் அமைப்பும் வடிவமும் தரப்புக்கேற்றபடி சமநிலை தவறிவிடுகிறதா அல்லது நற்பெயரைப் பாதுகாப்பது போன்ற தோற்றத்தை மட்டும் காட்டுகிறதா, பேச்சுரிமையும் கருத்துச் சுதந்திரமும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறதா என்பதையும் அடிக்கடி தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

காலனிய அடக்குமுறையின் எச்சம்

இந்தியாவின் குற்றவியல் அவதூறுச் சட்டம் சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது வகையைச் சேர்ந்ததுதான். காலனியத்தின் எச்சமாக இன்னும் தொடரும் அச்சட்டம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரசியல் விமர்சனங்களை அடக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499, அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தங்கள் மீதான கடும் விமர்சனங்களையும் அவர்கள் விருப்பத்துக்கு மாறான கருத்துகளையும் அடக்குவதற்கான ஆயுதத்தை அளித்திருக்கிறது.

முதலாவதாக, மற்ற நாடுகளைப் போல இல்லாமல் இந்தியாவில் அவதூறு என்பது ஒரு குற்றச் செயல் (அது வெறும் உரிமைத் தீங்கு மட்டுமல்ல). அதற்கு அளிக்கப்படும் தண்டனை சமூகக் களங்கத்தோடு சிறைத் தண்டனையையும் உள்ளடக்கியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Empty Re: தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:19 am

இரண்டாவதாக, அவதூறு வழக்கில் புகார் அளிப்பவர் தனது நற்பெயர் பாதிக்கப்படுகிறது என்று கூறுவதே சட்டபூர்வமான நடவடிக்கையைத் தொடங்க போதுமானது. எதிர்வாதங்களை விசாரணை தொடங்கிய பிறகுதான் முன்வைக்க முடியும். இடைப்பட்ட காலத்தில் என்ன நடக்கும்? குற்றம்சாட்டப்பட்டவர் பல தடவை நீதிமன்றத்துக்கு இழுத்தடிக்கப்பட்டிருப்பார். நீதிமன்ற நடைமுறைகளே தண்டனையாக அமைந்துவிடும். மூன்றாவதாக, குற்றம்சாட்டப்பட்டவருக்கான எதிர்வாதங்களும்கூட அவரது கருத்துரிமைக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கவில்லை. ஒரு உரிமையியல் அவதூறு வழக்கில் குற்றப் பொறுப்பிலிருந்து விடுபடுவதற்கு எதிர்வாதி தன்னுடைய கருத்து உண்மையானது என்று நிரூபித்தாலே போதுமானது.

குற்றவியல் அவதூறு வழக்கிலோ, குற்றம்சாட்டப்பட்டவர் தனது கருத்து உண்மையானது என்பதோடு பொதுநல நோக்கத்தில் அது கூறப்பட்டது என்பதையும் நிரூபிக்க வேண்டும். நமது சட்ட அமைப்பில் உரிமையியல் அவதூறு நடைமுறைகளின் முடிவுகளைப் பொறுத்தவரையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அதிக அனுகூலங்கள் இருக்கும் நிலையிலும், கடுமையான குற்றவியல் நடைமுறைகள் முரண்பாடான சூழலுக்கே இட்டுச்செல்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Empty Re: தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:20 am

விசாரணையே தண்டனை

குற்றவியல் அவதூறுக் குற்றச்சாட்டுகள் அரசியல் சாசனத்தின்படி செல்லும் தன்மை கொண்டதா என்பது பற்றி உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு 2016-ல் நடந்த வழக்கில் இந்த வாதங்களோடு மேலும் சில வாதங்களும் முன்வைக்கப்பட்டன.

துரதிர்ஷ்டவசமாக, அப்போதைய நீதிபதி தீபக் மிஸ்ரா அந்த வாதங்களைப் பெரிதும் பொருட்படுத்தாமல், “பிரிவு 499 அரசியல் சட்டத்தின்படி செல்லுபடியாகும், அந்த சட்டப் பிரிவு தனிநபர்களின் நற்பெயரைப் பாதுகாக்கிறது” என்று எளிதாக முடிவுசெய்துவிட்டார்.

ஒரு உரிமையியல் தீங்கைக் குற்றம் என்று தீர்மானிப்பதில் உள்ள இந்தச் சமநிலையற்ற தன்மையும் இந்தியக் குற்றவியல் அவதூறுச் சட்டத்தின் தெளிவில்லாத பல்வேறு நடைமுறைகளும் கருத்துரிமையை எப்படி வாட்டி வதைக்கின்றன என்பதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Empty Re: தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:21 am

கொந்தளிப்பின் தருணம்

அதிகாரத்தில் இருப்பவர்களாலும் பிரபலமானவர்களாலும் அடிக்கடி தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி பெண்கள் தெளிவாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பாலியல் வேட்டையாகவும் தவறான நடத்தையாகவும் இருந்தபோதிலும் அதைச் சில நேரங்களில் ஒரு சட்டபூர்வமான குற்றமாக வரையறுக்க முடியாதவாறு, திட்டமிட்டவகையில் ஆண்கள் நடந்துகொள்வதை நாம் அனைவரும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்த இயக்கம் வெளிப்படுத்தியிருக்கிறது.

பணியிடங்களில் உள்ள அதிகாரப் படிநிலைகள், வயது மற்றும் செல்வாக்கு நிலையில் உள்ள வேறுபாடுகள், தங்களது தொழில்களில் மிக உயர்ந்த இடங்களை வகிக்கும் ஆண்களால் கையாளப்படும் அதிகாரம், அந்த செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகியவை தொடர்பான பிரச்சினைகள் - இத்தகைய பிரச்சினைகள் நீண்ட காலமாக அடக்கிவைக்கப்பட்டவை, அவற்றைப் பற்றி எளிதில் வாய் திறக்க முடியாது - கடைசியில்தான் பொதுவிவாதத்துக்கு வந்திருக்கின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Empty Re: தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:23 am

இது கொந்தளிப்பின் தருணம். மதிப்புக்குரியவர்கள் அறநெறிகளிலும் தார்மீக நெறிகளிலும் எப்படி வறண்டு கிடக்கிறார்கள் என்பது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. ‘நானும்’ இயக்கம் அமிழ்ந்து கிடந்த அனுபவங்களை மேலெழச் செய்திருக்கிறது, நடந்ததை எளிதில் வெளியே சொல்ல முடியாது என்று இவ்வளவு காலமாக எண்ணியிருந்தவர்களுக்கு அதைச் சொல்வதற்கான ஒரு புதிய வார்த்தையைத் தந்திருக்கிறது.

அவதூறுச் சட்டம் எனும் ஆயுதம்

குற்றவியல் அவதூறு வழக்கு தொடுப்பதற்கான நோக்கம், வெளிப்படையானது. கருத்துரிமையின் புதிய வடிவமான ‘நானும்’ இயக்கத்தை மௌனமாக்குவதற்காக அதிகாரத்தில் உள்ளவர்கள் அவதூறுச் சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்வதை அனுமதிக்கலாமா? அதிகாரத்தில் இருப்போருக்கு குற்றவியல் அவதூறுச் சட்டம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாமா?

மிக அவசியமான ஒரு மக்கள் இயக்கம் அவதூறுச் சட்டத்தால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. நமது நீதிமன்றங்களுக்கு அரியதொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. குற்றவியல் அவதூறுகள் அரசியல் சட்டத்தின்படி செல்லுபடியாகுமா என்பதை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றாலும்கூட, தனக்கு விருப்பமில்லாத கருத்துகளை அச்சுறுத்தி, தொல்லைப்படுத்தி, மௌனமாக்குவதற்கு அதிகாரத்தின் கருவியாக அவதூறு வழக்குகளைப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தும்வகையில் சட்டப் பிரிவு 499-க்கான நீதிமுறை பொருள்விளக்கங்களை அளிப்பதற்கான வழிகள் நிறையவே இருக்கின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Empty Re: தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum