ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

3 posters

Go down

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Empty சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 10:39 am

எனது வடநாட்டு  நண்பர் ஒருவரிடம், ஒரு விசித்திரமான பழக்கம். யாரைப் பார்த்தாலும் தனது கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்து விடுவார். தான் யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசித்துப் பேச மாட்டார்.

மற்றவர்கள் தன் மேல் பச்சாதாபம் காட்டினால் அவருக்கு அதில் ஒரு தனி மகிழ்ச்சி. அவர் பெயரா?  எனக்கு என்ன, உங்கள் ஆசைப்படி குமார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாள்,டெல்லியில்  ஒரு கல்யாண வீட்டில் நாங்கள் நண்பர்கள் ஐந்து பேர் இரவு உணவை முடித்து விட்டு, பேசிக் கொண்டு இருந்தோம். எங்களைப் பார்த்து வேகமாக ஒரு நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார் குமார். நாங்கள் அமர்ந்திருந்த நாற்காலி வட்டத்திற்கு இடையில் தன் நாற்காலியைத் திணித்து விட்டு, அதில் உட்கார்ந்து கொண்டார்.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Empty Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 10:44 am

நாங்கள் கேட்காமலேயே, அன்று மாலை தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார் குமார். வீட்டை விட்டுக் கிளம்ப நேரமாகி விட்டதாம். மனைவி சேலை கட்ட தாமதமானது தான் காரணமாம். காரில் இவருடன் முன்பக்கம் அமர்ந்திருந்த அவர் மனைவி வழியெல்லாம் வாக்குவாதம் செய்து கொண்டே வந்தாராம். கரோல் பாக்கில் சிக்னலில் கார் காத்திருந்த பொழுது, இவர்கள் சண்டையைத் திறந்திருந்த காரின்  ஜன்னல் வழியே ஒரு  மோட்டார் சைக்கிள்காரர் முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

பச்சை விளக்கு விழுவதற்கு 10 நொடிகள் முன்பு சடாரென பைக்கை விட்டு இறங்கியவர், குமார் அருகில் வந்து,  ‘ஏண்டா இப்படி பெண்டாட்டியைப் படுத்துகிற?' என இந்தியில்  கத்தியதுடன், கண்ணிமைக்கும் நேரத்தில் குமார் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஓர் அறை விட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமல், பைக்கை ஓட்டிக் கொண்டு போய் விட்டாராம்!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Empty Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 10:49 am

அப்பொழுது தான் அவர் கன்னத்தைக் கவனித்தோம். சிவந்து இருந்தது. அவர் மனைவி இது நடந்த பின்னும் இவர் மேல் பச்சாதாபப்படவில்லையாம். ‘நீங்கள் செய்யும் அட்டகாசங்களை அடக்க எங்க அண்ணன் இங்கு இல்லையே என்று நினைத்தேன். நியாயத்தைக் கேட்கக் கடவுளாகப் பார்த்து அந்த நல்லவரை அனுப்பி விட்டார்' என்றாராம்! எங்களுக்குத் தெரிந்தவரை அவரும் அவர் மனைவியும் இணக்கமான தம்பதிகள் தான். அன்பான இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. அன்று ஏதோ இந்த அசம்பாவிதம் நடந்து இருக்கிறது. அவ்வளவு தான். ஆனால் வேறு யாரும் பார்க்காத, வேறும் யாருக்கும் தெரியாத அந்த விஷயத்தைப் பல பேர் முன்னிலையில் சொல்லித் தன்னைத் தானே கேலிப் பொருள் ஆக்கிக் கொண்டு விட்டார் அந்த இந்திக்கார குமார்.

சில கிண்டல்காரர்கள் இன்றும் அவரைப் பார்த்தால் தங்கள் கன்னத்தில் கை வைத்து ஜாடை செய்து அவரை சங்கடப்படுத்துவார்கள்! கவியரசு கண்ணதாசன் குழந்தையும் தெய்வமும் படத்திற்கு எழுதிய இந்தப் பாடல் வரிகளைத் தொலைக்காட்சியிலாவது கேட்டு ரசித்திருப்பீர்களே?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Empty Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 10:53 am

நடந்ததெல்லாம் நினைப்பது துயரம் என்று ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று... குமாரிடம் இருந்த கெட்ட பழக்கம் இது. தன் வியாபாரத்தில் இறக்கம் ஏற்பட்டாலும், பணம் வசூலிப்பதில் சுணக்கம் ஏற்பட்டாலும் பார்த்தவர்களிடம் எல்லாம் அதைச் சொல்லிக் கொண்டு திரிவார்! அவர் இப்படிப் பினாத்துவது அவரது நலம் விரும்பும் நண்பர்களிடமோ, உதவ நினைக்கும் உறவினர்களிடமோ எனும் நிலையில் இருந்திருந்தாலாவது ஏதோ பலன் கிடைத்திருக்கும்.

ஆனால் போகிறவன் வருகிறவனிடம் எல்லாம் இவ்விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதால் அவரது நிறுவனத்தின் பெயர் தான் கெட்டுப் போனது. உண்மை என்னவென்றால் இச்செய்தி பலர் வாய் மூலம் பரவியதால், அவரது வணிகத்தில் ஏற்பட்ட நட்டங்கள் பல மடங்குதவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. இதனை குமாரின் போட்டியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். சாதாரணப் பிரச்சினை, குமாரின் லொடலொடத்த வாயினால் பெரிய பிரச்சினைக்கு வழி வகுத்தது.

சரி, ‘நோவற்ற நொந்தது...' எனத் தொடங்கும் குறள் படித்தது உண்டா? ' நம் குறைபாடுகளை பகைவர்கள் முன் காட்டக்கூடாது, நம் துன்பத்தை அதை உணராத நண்பர்களிடம் சொல்லக்கூடாது ' என்று வள்ளுவரும் 877வது குறளில் இதையே தான் சொல்கிறார்!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Empty Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:04 am

இது பற்றி சாணக்கியர் சொல்வதைப் பாருங்கள். ‘நாம் இழந்த செல்வம், நமது சொந்த வாழ்வு சோகங்கள், மனைவி நடத்தையில் சந்தேகம், நமக்கு நடந்த இழிவான செயல் ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது ' என்பது அவர் அறிவுரை!

உண்மை தானே? உங்கள் சோகத்தைப் பகிர்ந்து கொள்வதால் மனப்பளு குறையலாம். ஆனால் அதை ஆள் பார்த்து அல்லவா சொல்லணும். அத்துடன் சிலவற்றை யாரிடமும் சொல்லவே கூடாதல்லவா?

என் சொந்த பதிவு

நிச்சயமாக நம்முடைய குடும்ப
பிரச்சினையை எல்லோரிடமும்
பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நம் தலை மறைந்த உடன் கிண்டல் பண்ணி
கேலி பேசுவார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Empty Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by ஞானமுருகன் Wed Nov 07, 2018 7:18 pm

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? 103459460


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Empty Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by ayyasamy ram Wed Nov 07, 2018 7:39 pm

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? 103459460
-
‘நாம் இழந்த செல்வம்,
நமது சொந்த வாழ்வு சோகங்கள்,
மனைவி நடத்தையில் சந்தேகம்,
நமக்கு நடந்த இழிவான செயல்

ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம்
பகிர்ந்து கொள்ளக் கூடாது '
-
சாணக்கியர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Empty Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 8:28 pm

ஞானமுருகன் wrote:சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1284770
நன்றி ஞானமுருகன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Empty Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 8:29 pm

ayyasamy ram wrote:சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? 103459460
-
‘நாம் இழந்த செல்வம்,
நமது சொந்த வாழ்வு சோகங்கள்,
மனைவி நடத்தையில் சந்தேகம்,
நமக்கு நடந்த இழிவான செயல்

ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம்
பகிர்ந்து கொள்ளக் கூடாது '
-
சாணக்கியர்
மேற்கோள் செய்த பதிவு: 1284774
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Empty Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum