ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு !

2 posters

Go down

காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ! Empty காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு !

Post by krishnaamma Sat Nov 03, 2018 8:41 pm

காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு !

காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ! 2uV8RNkSge4s2u1iGs40+WhatsAppImage2017-03-17at7.29.18PM

"நரகாசுரனைப் போற்ற வேண்டும் என்று உணரவைத்த பெரியவாளும் பரபிரும்மஸ்வரூபமே.

சொன்னவர்-தேதியூர் V.J. ராமன்
“காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ஒன்றை திரு. ரா. கணபதி அவர்கள் அற்புதமாக விவரித்துள்ளார்கள். இதைப் புரிந்துகொண்டால் பகவான் தன்னை உணர இரண்டை எப்படிப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்பது உங்களுக்குப் புரியும்.”

“தீபாவளி சமயம். எனக்கு என்னமோ பகீரதனை விட, நரகாசுரனே உயர்ந்தவன். ரொம்ப பிடிச்சிருக்கு அவனை என்று ஆரம்பித்தார் பரமாச்சார்யாள்.”

கூடியிருந்த அனைவருக்கும் பெரியவா என்ன சொல்லப் போறா என்பதில் ஆர்வம் கூடியது. பகீரதனையும் நரகாசுரனையும் compare பண்ணிப் பேசப் போறாங்கறது மட்டும் புரிந்தது.

“பகீரதன் பெரிய தபஸ்வி. அவன் பட்ட கஷ்டங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையால்தான் கங்கை நம் பாரதத்துக்குக் கிடைத்தது. ஆனால் நரகாசுரனோ பெரிய கொடுமைகள் மாபாதகங்கள் பலவும் செய்தவன். என்னடா. இப்பேர்ப் பட்ட பாபியை நான் உசந்தவன்னு சொல்றேன்னு பார்க்கிறேளா.”

“தபஸ், பித்ரு பக்தி, சிரத்தை இதுக்கெல்லாம் பகீரதனைப் போற்ற வேண்டும். ஆனாலும் Comparitiveஆ அந்த அசுரன் லோகம் பூராவும் சந்தோஷமா தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடனும்னு வரம் வாங்கித் தரும் அளவுக்கு அந்திம காலத்திலே அடிபயோட சேஞ்ச் ஆனதுக்கு அவனை ஜாஸ்தி கொண்டாடனும் இல்லையா. ஒன்றின்னு எடுத்துண்டா இருவரையும் compare பண்ண முடியாது.”

பெரியவா என்ன சொல்ல வரா என்று எவருக்குமே கொஞ்ச நாழி புரியலே..

“உத்தேசித்துப் பண்ணினாலும் உத்தேசிக்காமல் பண்ணினாலும் பண்ணியவருக்கு நன்றி சொல்றதுதான் நம் பண்பாடு. இல்லையா. . . அப்படிப் பார்த்தா நரகாசுரனுக்குத்தான் அதிகமா நாம் நன்றி சொல்லணும். கடன் பட்டா திருப்பிக் கொடுக்கணும். இல்லாட்டா சட்டப்படி குற்றம். தான தர்மம் பண்றது அப்படி இல்லே. பண்ணிணா புண்யம். பண்ணாட்டா பாவம் ஆகாது. குற்றம்னு யாரும் கேஸ் போட முடியாது. அதே மாதிரிதான் பகீரதனுக்கு நன்றி சொன்னா புண்யம், சொல்லாட்டா குத்தம் இல்லே. அது Optional ஆனால் நரகாசுரனுக்கு நன்றி சொல்ல வேண்டியது Obligatary. அவசியம்.”

“பகீரதன் கங்கையை பாரதத்தில் ஓடவிட்டது உபகாரம்தான். ஆனால் அவன் அனைத்து ஜனங்களையும் உத்தேசித்துக் கொண்டு வரலே. பாதாள லோகத்திலே பல வருஷமா கிடந்த தன்னோட பித்ருக்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவே கொண்டு வந்தான். இதைத் தன்னலம்னுகூடச் சொல்லலாம். பகீரதன் செஞ்சது incidental, intentional இல்லே.”

“ஆனால், நரகாசுரனோ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவோட சுதர்ஸன சக்ரத்தாலே கழுத்து அறுபட்டு ப்ராணன் போற சமயத்திலேகூடத் தன்னோட க்ஷேமத்தையோ தன்னுடைய பந்துக்கள், பித்ருக்கள் க்ஷேமத்தையோ நினைக்காமல் லோக க்ஷேமத்துக்காகத் தன்னோட இறந்த நாளை என்னென்னிக்கும் கங்கையோட ஸாந்நித்யம் எல்லாத் தீர்த்தத்திலேயும் பூர்ணிமா கிடைச்சு, ஜனங்களோட அனைத்துப் பாவங்களும் பூர்ணமா போகணும்னு ப்ரார்த்தனை செய்து வரன் பெற்றான். அன்னிக்கு ஸ்னானம் பண்ற எந்த ஜலமானாலும் அதிலே கங்கை ஆவிர் பவித்துவிடுகிறாள். கங்கா ஸ்னானம் ஆகி ஆனந்தமா பண்டிகைக் கொண்டாடும் எல்லோருமே மோக்ஷம் பெற வேண்டும் என்று வரம் பெற்றான். ஆனால் தனக்கு மோக்ஷம் வேணும்னோ அல்லது ஒசத்தியான வேறு ஜென்மம் வேணும்னோ கேட்கவே இல்லை.”

தொடரும்....


Last edited by krishnaamma on Sat Nov 03, 2018 10:14 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ! Empty Re: காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு !

Post by krishnaamma Sat Nov 03, 2018 8:42 pm

“பகீரதன் கொண்டுவந்த கங்கையை நாம் வடதேசம் தேடிச் சென்றுதான் ஸ்னானம் பண்ண வேண்டும். ஆனா நரகாசுரனோ லோக க்ஷேமத்துக்காகத் தீபாவளியன்று எல்லார் வீட்டிலுமே கங்கை ப்ரவாஹிக்க வேண்டும். அந்த நாளில் எல்லா ஜலமும் கங்கையாக ஆகி எல்லா ஜனங்களும் புண்யத்தைப் பெற வேண்டும் என்று ப்ரார்த்தித்தானே அவன் உசத்தியா! அல்லது பகீரதன் உசத்தியா! ஆக நாம் நரகாசுரனுக்குத்தான் அதிகம் நன்றி செலுத்த வேண்டும். தீபாவளி அன்று அவனை ஜாஸ்தியா பூஷிச்சு ஸ்தோத்ரம் பண்ணனும்.” சொல்லி முடித்தார் பரமாச்சார்யாள்.

“இப்படி ஒரு தபஸ்வியையும் ஒரு அரக்கனையும் ஆக இரண்டு எதிர்மறை நோக்கம் கொண்டவர்களை பெரியவா compare பண்ணியதன் விளக்கத்தில் இருந்து நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்.”

ஒன்றும் சொல்லத் தெரியாமல் விழித்தார்கள் இருவரும். எப்படி கங்கை யமுனை இந்த இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் சரஸ்வதியும் திரிவேணி சங்கமமாகப் பிரவாஹித்து இருப்பதுபோல இப்படிப்பட்ட விளக்கங்கள் பகவானால் மட்டுமே சொல்ல இயலும் என்பதைப் புரியவைத்துள்ளாரே அந்த பிரத்யஷ பரமேஸ்வர ஸ்வரூபம். இரண்டைப் புரியவைக்க மூன்றாவது ஒரு சக்தி தேவைபடுகிறதல்லவா. அந்த தெய்வ சக்தியை அங்கு கூடியிருந்தவர்கள் பரமாச்சார்யாள் மூலம் உணர்ந்தார்கள், மற்றும்  பரவசமடைந்தார்கள் இல்லையா. அந்தக் கண்ணுக்குத் தெரியாத ஆனந்தம்தான் இந்த இரண்டின் விசேஷம்.

கிருஷ்ணசாமிக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. “பெரியவா மாறுபட்ட இரண்டு பேரை compare பண்ணினது புரிந்தது. நீங்கள் சொன்ன மூன்றாவது ஒன்று புரியவில்லையே.”

“கிருஷ்ணசாமி. பகவான் எல்லாமே இரண்டாகப் படைத்ததன் நோக்கம் அதன் மூலம் மூன்றாவது ஒன்றை நீங்கள் உணர வேண்டும் என்பதே.”

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன். . .

“இப்போ உங்களுக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருக்கான் ஆண்டவன். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டுங்கள். சப்தம் வருகிறதா. உங்கள் பேரன் பட்டாஸையும் வத்திக்குச்சியையும் இணைக்கும்போது வெடிசப்தம் கேட்கிறதா. இந்த சப்தம் உங்களால் உணர முடிகிறதே தவிர அதை உங்களால் படம்போட்டுக் காட்ட முடியுமா. இன்னும் விளக்கமாச் சொல்றேன். தீபாவளிக்கு உங்காத்து மாமி ஸ்வீட் பண்ணி இருக்காளா.”

“ம். . . பண்ணி இருக்கா. ரவா லாடு. . .”

“சரி. ரவா லாடு இருக்கு. அதை எடுத்து உங்கள் வாயில் போடும்போதுதானே இனிப்பு என்ற உணர்ச்சியை. சந்தோஷத்தை நீங்கள் பெறுகின்றீர்கள். அந்த இனிப்பு என்கிற சுவையான ஆனந்தத்தை உணர முடிகின்றதே ஒழிய உங்களால் என்ன என்று காட்ட இயலுமா. தீபாவளி வரப்போகின்றது என்று ஒரு மாதம் முன்பே எல்லோரும் ஆனந்தப்படுரோமே . எல்லோர் மனதிலும் ஒரு குதூகலம் நிலவுகிறதே. அந்த ஆனந்தத்தை உணர்வுபூர்வமாகத்தானே உணர முடிகிறது. . .”

“கங்கையைப் பகீரதன் கொண்டுவந்தாலும் அதை பரிபூர்ணமாக அனுபவிக்கச் செய்து அதன் மூலம் புண்ணியம் என்ற கண்ணுக்குத் தெரியாத ஒன்றை உங்களுக்குப் பெற்றுத் தந்துள்ளானே நரகாசுரன். தீபாவளி அன்று நாம் எல்லோருமே அனைத்துப் பாபங்களையும் போக்கி, புண்ணிய ஆத்மாக்களாக ஆகிவிடுகின்றோம் என்பதை பாரதம் பூராவும் அன்று நிலவும் ஆனந்தம், மகிழ்ச்சி நமக்கு உணர்த்துகின்றதே. இந்த ஆனந்தத்தையும் புண்யத்தையும் பெற்றுத் தந்த அந்த நரகாசுரனைப் போற்ற வேண்டும் என்று உணரவைத்த பெரியவாளும் பரபிரம்மஸ்வரூபமே. சாக்ஷாத் பரமேச்வரனான அவரை ஆத்மார்த்தமாக அனுபவித்தவர்களுக்கே ஆனந்தம் என்றால் என்ன என்று புரியும்.”

நன்றி whatsup  !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ! Empty Re: காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு !

Post by krishnaamma Sat Nov 03, 2018 8:43 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ! Empty Re: காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு !

Post by krishnaamma Sat Nov 03, 2018 8:44 pm

மேலே இதை சொன்ன, தேதியூர் V.J. ராமன் எங்க குடும்ப ஜோசியர் மாமா புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ! Empty Re: காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு !

Post by ayyasamy ram Sat Nov 03, 2018 10:04 pm

காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ! 103459460
-
காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ! P400a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ! Empty Re: காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு !

Post by krishnaamma Sat Nov 03, 2018 10:15 pm

நன்றி அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ! Empty Re: காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum