ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்!

2 posters

Go down

பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்! Empty பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்!

Post by ayyasamy ram Sat Nov 03, 2018 7:25 am

பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்! NADIA_MURAD
-
NADIA_MURAD

ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் அமைதிக்கான
நோபல் பரிசு இந்த ஆண்டு காங்கோ நாட்டைச் சேர்ந்த
டெனிஸ் மக்வெஜ்
மற்றும் ஈராக் நாட்டின் யாசிடி இனத்தைச் சேர்ந்த பெண்
சமூக ஆர்வலர் நாடியா முராட் ஆகியோருக்கு
வழங்கப்பட்டுள்ளது.
-
சிரியா எல்லையை ஒட்டியுள்ள ஈராக் நாட்டின் சின்ஜார்
நகரத்தை சேர்ந்த நாடியாமுராட், கடந்த 2014-இல்
ஐஎஸ் தீவிரவாதிகள் சின்ஜார் நகரத்தை தாக்கியபோது
பாலியல் அடிமையாக மொசூலுக்கு கடத்தப்பட்டார்.

அங்கு தீவிரவாதிகளின் கூட்டு பலாத்கார பாலியில்
வன்முறைக்கு ஆளாகி மூன்று மாதங்களுக்குப் பின் தப்பிச்
சென்று ஜெர்மனியில் அவரது சகோதரியிடம்
அடைக்கலமானார்.

போரில் ஆண்களைக் கொன்று பெண்களை பாலியல்
வன்முறைக்கு ஆளாக்கும் அவலத்தை நாடியா
வெளிப்படுத்தியதோடு, தன்னுடைய யாசிடி இன
மக்களுக்காகவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல்
கொடுமைகளுக்காகவும் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து
வருகிறார்.

2016-ஆம் ஆண்டு முதல் பாலியல் அடிமைகளுக்காக
ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக உள்ள நாடியா முராட்
தன்அனுபவத்தை கூறுகிறார்:
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்! Empty Re: பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்!

Post by ayyasamy ram Sat Nov 03, 2018 7:27 am


"2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று இரவு வடக்கு
ஈராக் எல்லைப்பகுதியில் உள்ள சின்ஜார் நகரத்திற்குள்
நுழைந்த ஐ. எஸ். தீவிரவாதிகள் சிறிய கிராமத்தில் இருந்த
எங்களை சிறைப்பிடித்தபோது, என்னுடைய தாயார் மற்றும்
ஆறு சகோதரர்களை சுட்டுக் கொன்றனர்.

என்னையும், மற்ற இளம் பெண்களையும் மொசூலுக்கு
கடத்திச் சென்றனர். எங்களை சிறை வைத்த இடத்தில்
ஏராளமான பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தீவிரவாதிகள் முதலில் அழகான பெண்களை தேர்ந்தெடுத்து
அவர்களது தலைமுடியையும், வாயையும் பரிசோதித்து,
பின்னர் நீ கன்னித்தன்மை உடையவளா? என்று கேட்பார்கள்.

ஆம் என்று சொன்னால்போதும், பெண்களை கண்ட
இடத்தில் தொடுவார்கள். எங்களை விலங்குகள் போல்
உடல் முழுக்க கைகளால் தடவுவார்கள். அங்கிருந்த
தீவிரவாதிகளில் தலைவன் என்று கருதப்பட்ட சல்லான்,
என்னை நெருங்கும்போது, அவனது அகன்ற முகம் முழுவதும்
தலைமுடியால் மூடியிருப்பதால் மிருகம் போல் தோன்றுவான்.

உடம்பின் மீது அழுகிய முட்டை நாற்றம் அடிக்கும்.
அவர்கள் அனைவருமே எங்களை பாலியல் அடிமைகளாகவே
நடத்தினர்.

ஆனால் அவர்கள் நடத்தும் பத்திரிகையில், மேலும் பல
புதிய பெண்களை கவர்வதற்காக பெண்களைப் பற்றி
உயர்வாக எழுதுவார்கள்.

நாங்கள் சிறைவைக்கப்பட்ட இடம் திறந்த வெளியாக
இருந்ததால் சுலபமாக என்னால் தப்பிக்க முடிந்தது.
சிலரது உதவியால் ஜெர்மனியில் உள்ள என் சகோதரியிடம்
தஞ்சமடைந்தேன்.

என்னுடைய மிகப்பெரிய மூன்று தவறுகளில் முதலாவது
நான் குர்து இனத்தைச் சேர்ந்தவள், துருக்கி, ஈரான், ஈராக்,
சிரியா போன்ற நாடுகளில் வசிக்கும் குர்து இன மக்கள்,
பல நூற்றாண்டுகளாக தங்களுக்குரிய உரிமைகளுக்காக
போராடி வருகிறார்கள்.

இரண்டாவது நான் உலகிலேயே மிக பழமையான யாசிடி
பிரிவை சேர்ந்தவள். நாங்கள் சாத்தானை வணங்குபவர்கள்
என்பது சன்னி பிரிவினர் நம்பிக்கையாகும்.

மூன்றாவது நான் ஒரு பெண்ணாக பிறந்தது.
எந்த ஆண் வேண்டுமானாலும் என்னை சுலபமாக அடைய
முடியும்.

குர்து பிரிவினரோ, சன்னி பிரிவினரோ அவர்களில்
ஒரு அங்கமாக யாசிடி பிரிவினரை அங்கீகரிப்பதில்லை.

எங்களை சிறை பிடித்த தீவிரவாதிகள் அன்றிரவு
கிராமங்களையும், வழிபாட்டு தலங்களையும் அடித்து
நொறுக்கி கொளுத்தியதோடு, கல்லறைகளை கூட
சேதப்படுத்தினர்.

ஆண்களை வரிசையாக நிற்க வைத்து துப்பாக்கியால்
சுட்டுக் கொன்றனர். இவர்களை எதிர்த்து போராட
வேண்டிய குர்து ராணுவப் படையினர் சந்தடியில்லாமல்
இருட்டில் மறைந்தனர்.

தப்பிவந்த நான் பெண்களை வணிக பொருளாக கருதுவதை
எதிர்த்தும், என் இன மக்களை காப்பாற்றுவதற்காகவும்
போராடத் தொடங்கினேன். இது குறித்து அதிகம் பேசினேன்.

நான் பட்ட துயரங்கள் என்னோடு முடியட்டும் என்ற
நினைப்பில் "கடைசி பெண்' என்ற தலைப்பில் என்
சுயசரிதையை எழுதி வெளியிட்டேன்.

என்னைப்போன்று பாலியல் வன்முறைக்கு ஆளான
பெண்களை இந்த சமூகம் குற்றவாளிகள் போல் பார்ப்பதை
எதிர்த்தேன்.

நாஜிக்களை போல் இந்த ஐ.எஸ். தீவிரவாதிகளையும் போர்
குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை
வழங்க வேண்டுமென்று குரல் எழுப்பினேன்.

இதற்கு மனித உரிமை ஆர்வலர்களும், வழக்குரைஞர்களும்
ஆதரவளிக்க முன்வந்தனர்.

இன்று எனக்கு உலகின் மிகப்பெரிய விருதான "நோபல் பரிசு'
கிடைத்தது குறித்து பெருமைப்படுகிறேன். பெரும்பாலான
உலக நாடுகளில் சரிசமமான அளவில் பெண்கள் எண்ணிக்கை
உள்ளது.

அவர்களில் பாலின வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு
எதிராக போராடுவதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்த பெண்கள்
அனைவரும் முன்வர வேண்டும்.

அதற்கு வழிகாட்டியாக நான் இருப்பேன். பெண்கள்
உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்'' என்று கூறும்
நாடியா முராட், இம்மாத இறுதியில் மும்பை வரவுள்ளார்.

அப்போது அவருக்கு இங்குள்ள ஹார்மனி பவுண்டேஷன்
பெருமைக்குரிய "மதர்தெரசா நினைவு விருது' வழங்கி
கவுரவிக்கவுள்ளது.
-

---------------------------------------
-அ. குமார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்! Empty Re: பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 03, 2018 7:50 am

[code]
அதற்கு வழிகாட்டியாக நான் இருப்பேன். பெண்கள்
உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்'' என்று கூறும்
நாடியா முராட், இம்மாத இறுதியில் மும்பை வரவுள்ளார்.

அப்போது அவருக்கு இங்குள்ள ஹார்மனி பவுண்டேஷன்
பெருமைக்குரிய "மதர்தெரசா நினைவு விருது' வழங்கி
கவுரவிக்கவுள்ளது/code]
இவர் பட்ட வேதனை
மனதை பிழிந்து எடுக்கிறது.
நோபல் பரிசு இவர் ஆற்றிய
பணிக்கு சாதாரணமே.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்! Empty Re: பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்...
» மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்
» தூக்கில் தொங்க விட்டாலும் கூட முஸ்லிம்கள் உரிமைக்காக பாடுபடுவேன்: குர்ஷித்
» கவிதைப் போட்டி 4 முடிவு நாள் அடுத்த மாதம் இறுதிவரை நீடிக்கப்படுகிறது..!
» 6,400 உயிர்களைக் காத்து கொரோனாவை எதிர்த்து இறுதிவரை போராட்டம்... ஒரு மரணத்தால் கலங்கிய இரான்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum