உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்!
2 posters
பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்!
-
NADIA_MURAD
ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் அமைதிக்கான
நோபல் பரிசு இந்த ஆண்டு காங்கோ நாட்டைச் சேர்ந்த
டெனிஸ் மக்வெஜ்
மற்றும் ஈராக் நாட்டின் யாசிடி இனத்தைச் சேர்ந்த பெண்
சமூக ஆர்வலர் நாடியா முராட் ஆகியோருக்கு
வழங்கப்பட்டுள்ளது.
-
சிரியா எல்லையை ஒட்டியுள்ள ஈராக் நாட்டின் சின்ஜார்
நகரத்தை சேர்ந்த நாடியாமுராட், கடந்த 2014-இல்
ஐஎஸ் தீவிரவாதிகள் சின்ஜார் நகரத்தை தாக்கியபோது
பாலியல் அடிமையாக மொசூலுக்கு கடத்தப்பட்டார்.
அங்கு தீவிரவாதிகளின் கூட்டு பலாத்கார பாலியில்
வன்முறைக்கு ஆளாகி மூன்று மாதங்களுக்குப் பின் தப்பிச்
சென்று ஜெர்மனியில் அவரது சகோதரியிடம்
அடைக்கலமானார்.
போரில் ஆண்களைக் கொன்று பெண்களை பாலியல்
வன்முறைக்கு ஆளாக்கும் அவலத்தை நாடியா
வெளிப்படுத்தியதோடு, தன்னுடைய யாசிடி இன
மக்களுக்காகவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல்
கொடுமைகளுக்காகவும் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து
வருகிறார்.
2016-ஆம் ஆண்டு முதல் பாலியல் அடிமைகளுக்காக
ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக உள்ள நாடியா முராட்
தன்அனுபவத்தை கூறுகிறார்:
-
-------------------
Re: பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்!
"2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று இரவு வடக்கு
ஈராக் எல்லைப்பகுதியில் உள்ள சின்ஜார் நகரத்திற்குள்
நுழைந்த ஐ. எஸ். தீவிரவாதிகள் சிறிய கிராமத்தில் இருந்த
எங்களை சிறைப்பிடித்தபோது, என்னுடைய தாயார் மற்றும்
ஆறு சகோதரர்களை சுட்டுக் கொன்றனர்.
என்னையும், மற்ற இளம் பெண்களையும் மொசூலுக்கு
கடத்திச் சென்றனர். எங்களை சிறை வைத்த இடத்தில்
ஏராளமான பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
தீவிரவாதிகள் முதலில் அழகான பெண்களை தேர்ந்தெடுத்து
அவர்களது தலைமுடியையும், வாயையும் பரிசோதித்து,
பின்னர் நீ கன்னித்தன்மை உடையவளா? என்று கேட்பார்கள்.
ஆம் என்று சொன்னால்போதும், பெண்களை கண்ட
இடத்தில் தொடுவார்கள். எங்களை விலங்குகள் போல்
உடல் முழுக்க கைகளால் தடவுவார்கள். அங்கிருந்த
தீவிரவாதிகளில் தலைவன் என்று கருதப்பட்ட சல்லான்,
என்னை நெருங்கும்போது, அவனது அகன்ற முகம் முழுவதும்
தலைமுடியால் மூடியிருப்பதால் மிருகம் போல் தோன்றுவான்.
உடம்பின் மீது அழுகிய முட்டை நாற்றம் அடிக்கும்.
அவர்கள் அனைவருமே எங்களை பாலியல் அடிமைகளாகவே
நடத்தினர்.
ஆனால் அவர்கள் நடத்தும் பத்திரிகையில், மேலும் பல
புதிய பெண்களை கவர்வதற்காக பெண்களைப் பற்றி
உயர்வாக எழுதுவார்கள்.
நாங்கள் சிறைவைக்கப்பட்ட இடம் திறந்த வெளியாக
இருந்ததால் சுலபமாக என்னால் தப்பிக்க முடிந்தது.
சிலரது உதவியால் ஜெர்மனியில் உள்ள என் சகோதரியிடம்
தஞ்சமடைந்தேன்.
என்னுடைய மிகப்பெரிய மூன்று தவறுகளில் முதலாவது
நான் குர்து இனத்தைச் சேர்ந்தவள், துருக்கி, ஈரான், ஈராக்,
சிரியா போன்ற நாடுகளில் வசிக்கும் குர்து இன மக்கள்,
பல நூற்றாண்டுகளாக தங்களுக்குரிய உரிமைகளுக்காக
போராடி வருகிறார்கள்.
இரண்டாவது நான் உலகிலேயே மிக பழமையான யாசிடி
பிரிவை சேர்ந்தவள். நாங்கள் சாத்தானை வணங்குபவர்கள்
என்பது சன்னி பிரிவினர் நம்பிக்கையாகும்.
மூன்றாவது நான் ஒரு பெண்ணாக பிறந்தது.
எந்த ஆண் வேண்டுமானாலும் என்னை சுலபமாக அடைய
முடியும்.
குர்து பிரிவினரோ, சன்னி பிரிவினரோ அவர்களில்
ஒரு அங்கமாக யாசிடி பிரிவினரை அங்கீகரிப்பதில்லை.
எங்களை சிறை பிடித்த தீவிரவாதிகள் அன்றிரவு
கிராமங்களையும், வழிபாட்டு தலங்களையும் அடித்து
நொறுக்கி கொளுத்தியதோடு, கல்லறைகளை கூட
சேதப்படுத்தினர்.
ஆண்களை வரிசையாக நிற்க வைத்து துப்பாக்கியால்
சுட்டுக் கொன்றனர். இவர்களை எதிர்த்து போராட
வேண்டிய குர்து ராணுவப் படையினர் சந்தடியில்லாமல்
இருட்டில் மறைந்தனர்.
தப்பிவந்த நான் பெண்களை வணிக பொருளாக கருதுவதை
எதிர்த்தும், என் இன மக்களை காப்பாற்றுவதற்காகவும்
போராடத் தொடங்கினேன். இது குறித்து அதிகம் பேசினேன்.
நான் பட்ட துயரங்கள் என்னோடு முடியட்டும் என்ற
நினைப்பில் "கடைசி பெண்' என்ற தலைப்பில் என்
சுயசரிதையை எழுதி வெளியிட்டேன்.
என்னைப்போன்று பாலியல் வன்முறைக்கு ஆளான
பெண்களை இந்த சமூகம் குற்றவாளிகள் போல் பார்ப்பதை
எதிர்த்தேன்.
நாஜிக்களை போல் இந்த ஐ.எஸ். தீவிரவாதிகளையும் போர்
குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை
வழங்க வேண்டுமென்று குரல் எழுப்பினேன்.
இதற்கு மனித உரிமை ஆர்வலர்களும், வழக்குரைஞர்களும்
ஆதரவளிக்க முன்வந்தனர்.
இன்று எனக்கு உலகின் மிகப்பெரிய விருதான "நோபல் பரிசு'
கிடைத்தது குறித்து பெருமைப்படுகிறேன். பெரும்பாலான
உலக நாடுகளில் சரிசமமான அளவில் பெண்கள் எண்ணிக்கை
உள்ளது.
அவர்களில் பாலின வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு
எதிராக போராடுவதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்த பெண்கள்
அனைவரும் முன்வர வேண்டும்.
அதற்கு வழிகாட்டியாக நான் இருப்பேன். பெண்கள்
உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்'' என்று கூறும்
நாடியா முராட், இம்மாத இறுதியில் மும்பை வரவுள்ளார்.
அப்போது அவருக்கு இங்குள்ள ஹார்மனி பவுண்டேஷன்
பெருமைக்குரிய "மதர்தெரசா நினைவு விருது' வழங்கி
கவுரவிக்கவுள்ளது.
-
---------------------------------------
-அ. குமார்
Re: பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்!
[code]
அதற்கு வழிகாட்டியாக நான் இருப்பேன். பெண்கள்
உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்'' என்று கூறும்
நாடியா முராட், இம்மாத இறுதியில் மும்பை வரவுள்ளார்.
அப்போது அவருக்கு இங்குள்ள ஹார்மனி பவுண்டேஷன்
பெருமைக்குரிய "மதர்தெரசா நினைவு விருது' வழங்கி
கவுரவிக்கவுள்ளது/code]
இவர் பட்ட வேதனை
மனதை பிழிந்து எடுக்கிறது.
நோபல் பரிசு இவர் ஆற்றிய
பணிக்கு சாதாரணமே.
நன்றி ஐயா
அதற்கு வழிகாட்டியாக நான் இருப்பேன். பெண்கள்
உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்'' என்று கூறும்
நாடியா முராட், இம்மாத இறுதியில் மும்பை வரவுள்ளார்.
அப்போது அவருக்கு இங்குள்ள ஹார்மனி பவுண்டேஷன்
பெருமைக்குரிய "மதர்தெரசா நினைவு விருது' வழங்கி
கவுரவிக்கவுள்ளது/code]
இவர் பட்ட வேதனை
மனதை பிழிந்து எடுக்கிறது.
நோபல் பரிசு இவர் ஆற்றிய
பணிக்கு சாதாரணமே.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|