புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 0:43

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Today at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 21:06

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 21:05

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 19:54

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 19:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:07

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:41

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 15:10

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu 27 Jun 2024 - 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu 27 Jun 2024 - 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu 27 Jun 2024 - 17:43

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu 27 Jun 2024 - 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
69 Posts - 42%
ayyasamy ram
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
67 Posts - 41%
T.N.Balasubramanian
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
2 Posts - 1%
prajai
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
2 Posts - 1%
jothi64
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
431 Posts - 48%
heezulia
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
304 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
29 Posts - 3%
prajai
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_m10சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 2 Nov 2018 - 3:16

சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? CBIjpgjpeg

மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி உருவானது, அதன் நோக்கங்கள் – செயல்பாடுகள் என்ன, அது எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன என்ற கதை இந்தியர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது, சுவாரஸ்யமானது.



மிக முக்கியமான ஊழல், பொருளாதாரக் குற்றங்கள், முறைகேடுகள், பயங்கரவாதச் செயல்கள் போன்றவற்றை விசாரிக்கும் நாட்டின் முன்னணி விசாரணை நிறுவனம், ‘மத்தியப் புலனாய்வு அமைப்பு’ (சிபிஐ). இரண்டாவது உலகப் போர் சமயத்தில், போருக்குத் தேவையான கொள்முதல்களில் லஞ்சம், இதர முறைகேடுகள் நடந்ததால் அரசு ஊழியர்களை விசாரிக்கத் தனி அமைப்பாக ‘சிறப்பு போலீஸ் பிரிவு’ ஒன்று 1941-ல் ஏற்படுத்தப்பட்டது. அதுவே 1.4.1963-ல் உள்துறை அமைச்சகத் தீர்மானத்தால் ‘சிபிஐ’ என்ற புதிய பெயரால் அழைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது.



மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி, சிபிஐ அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்படுவார். இவருடைய பதவிக் காலம் இரண்டாண்டுகள். ஊழல் கண்காணிப்பு, விழிப்புணர்வுத் துறைச் சட்டப்படிதான் சிபிஐ தலைமை இயக்குநர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாட்டின் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய உயர்நிலைக் குழு, சிபிஐ தலைமை இயக்குநரைத் தேர்வுசெய்கிறது. அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லாத சூழலில்,  அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் உறுப்பினராக உரிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.



சிபிஐ மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வராது. பணியாளர் நலத் துறையின் கீழ்தான் வருகிறது. கடின உழைப்பு, நடுநிலைமை, நேர்மை ஆகியவை சிபிஐயின் லட்சியங்கள். தலைமையகம் டெல்லியில் இருக்கிறது. இதன் சார்பு அமைப்பான சிபிஐ அகாடமி என்ற பயிற்சிப் பிரிவு உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ளது. 2017 மார்ச் 1 நிலவரப்படி இந்த அமைப்புக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 7,274. நிரப்பப்பட்ட இடங்கள் 5,685. காலியிடங்கள் – 1,589 (21.84%).



சிபிஐயில் தலைமை இயக்குநர் தவிர, உள்ள இதர அதிகாரப் பணியிடங்களுக்கு ஐபிஎஸ், ஐஆர்எஸ் துறை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். தவிர, மாநிலக் காவல் துறைகளிலிருந்தும் வருமானவரித் துறை, சுங்கத் துறைகளிலிருந்தும் அயல்பணி அடிப்படையில் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவர். பெரும்பாலானவர்கள் ‘எஸ்எஸ்சி’ என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பொதுத் தேர்வு நடத்தி வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவர்.



ஊழல் விசாரணை, சிறப்புக் குற்றச் செயல்கள், பொருளாதாரக் குற்றங்கள், கொள்கை – சர்வதேச ஒத்துழைப்பு விவகாரங்கள், சிபிஐ நிர்வாகம், வழக்கு தொடுப்பதற்கான இயக்ககம், மத்திய தடயவியல் ஆய்வுக்கூடம் என்று ஏழு பெரும் பிரிவுகள் சிபிஐக்குள் உள்ளன.



சிறப்பு போலீஸ் பிரிவாக இருந்தபோது, 1955 - 1963 காலகட்டத்தில் செயல்பட்டவர் டி.பி.கோலி. அவரே சிபிஐயின் முதல் தலைமை இயக்குநராகவும் 1963-1968 காலகட்டத்திலும் தொடர்ந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் எஃப்.வி.அருள், சி.வி.நரசிம்மன், டி.ஆர்.கார்த்திகேயன், ஆர்.கே.ராகவன் ஆகியோர் சிபிஐ இயக்குநர்களாகப் பொறுப்பு வகித்துள்ளனர்.



தேர்தல் ஆணையம்போல அரசியலமைப்புச் சட்டரீதியிலான உருவாக்கத்தைப் பெற்றதல்ல சிபிஐ. தன்னாட்சி, சுதந்திரம் என்றெல்லாம் பேசப்பட்டாலும், பெரும்பாலும் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே அது செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு முக்கியமான காரணம் இதுவே. எனினும், சிபிஐ பல சிறப்பதிகாரங்களைப் பெற்றிருக்கிறது. ஓர் உதாரணம், சிபிஐ விவகாரங்களைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற முடியாதபடி இது விலக்கு பெற்றுள்ளது. விசாரணையை எல்லாம் ரகசியமாக முடித்துவிட்டு, கைகளில் துருப்புச் சீட்டுகள் கிடைத்த பின் வெளிப்படையான விசாரணையைத் தொடங்குவது சிபிஐயின் உத்திகளில் ஒன்று.



மாநில அரசு எப்படிக் காவல் துறையை ஆட்டுவிக்கிறதோ, அப்படி மத்திய அரசின் ஆட்டுவிப்புக்கு ஏற்ப சிபிஐ ஆடும் என்பதுதான்.முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, லாலு பிரசாத், முலாயம் சிங், மாயாவதி போன்ற பலர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்த விதம் இக்குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டும் விதத்திலேயே இருந்தன. பாஜக தலைவர் அமித் ஷா சம்பந்தப்பட்ட சோராபுதீன் என்கவுன்டர் வழக்கு இந்த ஆட்சியில் அந்தக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வழக்குகளில் ஒன்று.



சிபிஐ அமைப்பின் தன்னாட்சி, சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் அரசியலமைப்புச் சட்டரீதியிலான பாதுகாப்பை உருவாக்க வேண்டும். ஆளுங்கட்சியின் அழுத்தங்களிலிருந்து அதைப் பாதுகாக்க வேண்டும்.

- வ.ரங்காசாரி



சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 2 Nov 2018 - 3:18




சிபிஐ சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதையே நாடு விரும்புகிறது. மக்களின் எண்ணத்தையே அறிவுறுத்தல்களாகத் தொடர்ந்து சொல்லிவருகிறது உச்ச நீதிமன்றம். அவற்றைப் பின்பற்ற வேண்டிய மத்திய அரசோ அதற்கு எதிராகவே செயல்பட்டுவருகிறது. மத்திய அரசு நினைத்தால் சிபிஐ இயக்குநரை ஒரு நள்ளிரவில் பதவியிலிருந்து நீக்கிவிட முடியும் என்ற எண்ணமும் முயற்சியும் இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

பத்திரிகையாளரும் ஊழல் எதிர்ப்புச் செயல்பாட்டாளருமான வினீத் நாராயண் தொடுத்த வழக்கில், சிபிஐ மேற்கொள்ளும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று 1997-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஹவாலா ஊழல் விசாரணைகளை மேற்கொண்டதில் சிபிஐ கடமை தவறிவிட்டது என்பதையும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்குக்கு ஆளாகிவிட்டது என்பதையும் அந்த வழக்கில் சுட்டிக்காட்டியது. மத்திய அரசின் கைப்பாவையாக சிபிஐ இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கண்காணிப்பின் கீழாக சிபிஐ அமைப்பைக் கொண்டுவரவும் உத்தரவிட்டது. இணைச்செயலர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிப்பதற்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையையும் செல்லாது என்று அப்போது உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

உத்தரவுகளின் வழியாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டும் அறிவுறுத்தல்களுக்குச் சட்ட வடிவம் கொடுக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் கடமை. ஆனால், சிபிஐ சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மத்திய அரசு தொடர்ந்து தவிர்க்கத்தான் பார்க்கிறது. 2003 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டத்தின்படி, ஆணையத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகுதான் உயர் அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக நின்றது. அரசாணை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகு, அரசாணைக்குச் சட்ட அந்தஸ்து கொடுப்பதன் வாயிலாக மீண்டும் அதை தக்கவைத்துக்கொள்ளும் செயல் இது. சுப்பிரமணியம் சுவாமியும் பிரஷாந்த் பூஷனும் தொடுத்த வழக்கில் இச்சட்டப் பிரிவு செல்லாது என்று 2004-ல் உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றம். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம், உயர் அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்பதைத் தனது தீர்ப்பில் வலியுறுத்தியது.

இப்போதும்கூட, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்தக் கால அவகாசம் போதாது, இடையில் தீபாவளி விடுமுறை வருகிறது என்றெல்லாம் நீதிமன்றத்தில் பல்வேறு காரணங்களைச் சொல்லி விசாரணையைத் தள்ளிப்போடவே முயற்சிகள் நடந்திருக்கின்றன.

டெல்லி சிறப்புக் காவல் நிறுவகச் சட்டத்தில் 2014-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி பிரிவு 4 (ஏ), இயக்குநரை நியமிக்கும் குழுவானது பிரதமர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் அல்லது எதிர்க்கட்சிக்குப் போதிய பெரும்பான்மை இல்லாதபோது அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். பிரிவு 4(பி) (1)-ன்படி, சிபிஐ இயக்குநரின் பதவிக்காலம் இரண்டாண்டுகளாக இருக்கும். பிரிவு 4 (பி) (2)-ன்படி நியமனக் குழுவின் முன்கூட்டிய ஒப்புதல் பெறாமல் இயக்குநரைப் பணிமாற்றம் செய்யக் கூடாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விஷயத்தில், அவர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவரா என்பதல்ல கேள்வி. அவர் எப்படிப்பட்டவராயினும், அவர் மீது எந்தக் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முன் பணிநியமனத்தோடு தொடர்புடைய எதிர்க்கட்சித் தலைவரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. காங்கிரஸ் கட்சி முன்வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு மறுக்கப்பட முடியாதது. ஆனால், மத்திய அரசோ சிபிஐ இயக்குநர் பணியிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படவில்லை, விடுப்பில்தான் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று வார்த்தை விளையாட்டை நடத்துகிறது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துதான் பதவியிலிருந்து நீக்க முடியும் என்ற அரசியலமைப்புப் பாதுகாப்பைப் பெற்றிருக்கும் மத்திய அமைச்சரவையையும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் விசாரிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கும் ஒரு அமைப்பு, தன்னாட்சி அதிகாரத்தோடு சுதந்திரமாகத் தனித்தியங்க முடியாது என்ற உண்மை நிலை இப்போது தெளிவாகியிருக்கிறது. அப்படியென்றால், உச்ச நீதிமன்றம் விமர்சித்ததுபோல, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் மத்திய அரசின் கூண்டுக் கிளிதானா சிபிஐ?





சிபிஐ - ஏன், எதற்கு, எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக