புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_c10அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_m10அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_c10அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_m10அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_c10அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_m10அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_c10அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_m10அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_c10அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_m10அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 28, 2018 10:42 pm

அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Kurppi_02_15026
-
அரசுப் பள்ளி என்பது ஏற்றத் தாழ்வற்று, அனைத்து மாணவர்களும்
ஒன்றாக கல்வி பெறுவதற்கான அற்புதமான இடம். இன்று,
மிகப் பெரிய பதவிகளில் இருக்கும் பலரும் அரசுப் பள்ளியில்
படித்தவர்களாகவே இருப்பார்கள்.

அவர்களிடம், தங்கள் பள்ளி வாழ்க்கையைப் பற்றி கேட்டால்
மணிகணக்கில் சிலாகிப்பார்கள். அந்தப் பருவத்தில் உருவான
நட்பு என்பது நெடுங்காலத்துக்கு தொடந்துவரும்.

அதெல்லாம் சரி. அதை ஏன் இப்போது சொல்கிறேன் என
கேட்கிறீர்களா?

இப்போதும் அரசுப் பள்ளியில் நெகிழ்வான தருணங்களுக்குப்
பஞ்சமில்லை. அந்த அழகான தருணங்களையும், கூடுதலாக
அருமையான செய்தியையும் வெளிப்படுத்தும் விதத்தில்
ஒரு குறும்படம் வெளியாகியுள்ளது.

கூர்ப்பி – ஷார்ப்பனர் என்பதன் தமிழ்ப் பெயர்.

இந்தக் குறும்படம், நம்மை புதுக்கோட்டை மாவட்டம்,
ஒடப்பவிடுதி அரசு நடுநிலைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறது.
அங்கு நான்காம் வகுப்பு படிக்கும் முகிலா எனும் மாணவிக்கு
மந்திரக் கூர்ப்பி ஒன்று கிடைக்கிறது.

அந்தக் கூர்ப்பியில் பென்சிலைத் துருவும்போது நாம் என்ன
கேட்கிறோமோ அந்த உருவத்தைத் தரும். உதாரணமாக,
குடை எனக் கேட்டு பென்சிலைத் துருவினால், பென்சிலின்
துருவல் குடை வடிவத்தில் கிடைக்கும்.

ஆனால், 24 மணிநேரத்தில் ஒரு முறையாவது இந்தக் கூர்ப்பியைப்
பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், கூர்ப்பியின் மந்திரத்
தன்மை அதை விட்டு விலகிவிடும்.

இந்தக் கூர்ப்பியால் முகிலாவை மாணவர்கள் எப்போதும்
சூழ்ந்துகொள்கிறார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 28, 2018 10:42 pm

அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Kurppi_04_15017
-
முகிலாவும் மாணவர்கள் கேட்கும் வடிவங்களை உருவாக்கித்
தருகிறாள். ஒரு நாள் இரவு, வீட்டில் முகிலா படித்துக்
கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைபட்டு, ட்யூப் லைட்
அணைந்து விடுகிறது.

மண்ணெண்ணெய் விளக்கு எடுத்து வைக்கிறார் முகிலாவின்
அம்மா. அப்போது இருட்டில் கூர்ப்பியை அம்மா உதைத்து
விடுவதால், பாத்திரத்தின் இடுக்கில் அது மாட்டுக்கொள்கிறது.

எவ்வளவு தேடியும் முகிலாவால் கூர்ப்பியைக் கண்டுபிடிக்க
முடியவில்லை.

மறுநாள் பள்ளிக்குச் செல்லும் முகிலாவிடம் நண்பர்கள்
வழக்கம்போல உருவங்களை வரவழைக்க கேட்கிறார்கள்.
தான் கூர்ப்பியை வீட்டில் மறந்து வைத்துவிட்டதாக கூறுகிறாள்.

அடுத்த நாளும் கூர்ப்பி இல்லாமல் பள்ளிக்குச் செல்ல,
முகிலாவிடம் முன்பு போல ஒட்டாமல் பழகுகிறார்கள்
நண்பர்கள். அன்று மாலை வீட்டுச் செல்லும்போது,
கூர்ப்பியைக் கண்டுபிடித்து அவளின் அம்மா தருகிறார்.

ஆனால், அது மந்திரத் தன்மையை இழந்துவிடுகிறது.
ஆனால், கூர்ப்பி முகிலாவுக்கு சூப்பரான ஒரு ஐடியாவைக்
கொடுக்கிறது. அது என்னவென்று நீங்கள் படத்தைப் பார்த்து
தெரிந்துகொள்ளுங்கள்.

கூர்ப்பி குறும்படம் அதில் மாணவர்களின் படைப்பாற்றலை
வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கச் சொல்கிறது.
மந்திரங்கள் நிரந்தமல்ல… அல்லது மந்திரத்தால் ஏதும்
சாத்தியமில்லை, விருப்பமும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
படைப்பாற்றலை உருவாக்கி, வளர்த்துக்கொள்ள முடியும்
என்கிறது கூர்ப்பி குறும்படம்.

முகிலாவாக நடித்திருக்கும் லக்‌ஷ்யா எனும் மாணவி காட்சியை
உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 28, 2018 10:43 pm

அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்! Kurppi_01_15251
-
கதை ஒரு புறம் சென்றாலும் ஓர் அரசுப் பள்ளியின் அழகான

தருணங்கள் காட்சிப் படுத்தியிருக்கும் விதம்
பார்வையாளர்களை பழைய பருவத்துக்கே அழைத்துச்
செல்கிறது.

ஹோம் வொர்க் ஏன் செய்யவில்லை என மாணவியிடம் கேட்கும்
ஆசிரியர், பிரேக் டைமில் டயர் வைத்து விளையாடுவது என
பள்ளியின் நடுவே நாம் பயணிக்க வைக்கிறது.

இன்னுமொரு காட்சியில், முட்டையுடன் சத்துணவு கொடுக்கப்
படுகிறது. அதை ஒரு மாணவன் எடுத்து வரும்போது தட்டிலிருந்து
முட்டை மண்ணில் விழுந்துவிடுகிறது.

இதைக் கவனித்த ஒரு மாணவி தன் தட்டிலிருக்கும் முட்டையின்
பாதியை அந்த மாணவனின் தட்டில் வைக்கிறாள்.
இதுபோல படம் முழுக்க நெகிழ்வான காட்சிகள் இருக்கின்றன.

ஒடப்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்
சாமியப்பன் எழுதிய கதையை எம். வெங்கடேசன் சிறப்பாக
இயக்கியிருக்கிறார்.

ச.ஹரிஹர சுதன் இயல்பான காட்சிகளாக ஒளிப்பதிவு
செய்துள்ளார். பள்ளியில் மாணவர்களின் சத்தம் படம் முழுக்க
வருகிறது. அது நம்மை படத்துடன் ஒன்றச் செய்கிறது.

படத்தின் 18 நிமிடங்கள். இவ்வளவு நீளம் தேவையில்லை என்றே
தோன்கிறது. ஏழு அல்லது எட்டு நிமிடங்களில் இந்தக் கதையை
இன்னும் அழுத்தமாக பதிய வைத்துவிட முடியும்.

கதையாசிரியர் சாமியப்பனிடம் பேசியபோது,
“இந்தப் படம் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கையை
விதைத்துள்ளது. லக்‌ஷ்யாவின் இவ்வளவு அழகாக நடிப்பாள்
என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.

தான் நடித்ததை காட்டச் சொல்லிப் பார்ப்பாள். சரியில்லை
என்றால் அவளே இன்னொரு முறை நடித்த காட்சிகள்
இருக்கின்றன.” என்கிறார்.

நல்ல கதையைக் கொண்டு நல்ல முயற்சியை மேற்கொண்ட
இந்தப் படக் குழுவின் பயணம் வெல்லட்டும். அரசுப் பள்ளி
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பணியில்
தொடர்ந்து ஈடுபடட்டும்.

—————————–
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 28, 2018 10:44 pm



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 7:42 am

???? பருவம் எல்லோராலும் மறக்க முடியாத அனுபவம் . அப்படியொரு அனுபவத்தை
நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளது.
அருமை
நன்றி ஐயா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 7:42 am

???? பருவம் எல்லோராலும் மறக்க முடியாத அனுபவம் . அப்படியொரு அனுபவத்தை
நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளது.
அருமை
நன்றி ஐயா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக