ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Empty தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu 25 Oct 2018 - 4:25

First topic message reminder :

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f4ab



ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது.

கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன. இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வடஇந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.

இப்பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் மக்கள் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.

புதிய ஆடைகளை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள்,  பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர்.

புதுமணத் தம்பதியர் தலைதீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிபாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu 25 Oct 2018 - 4:48


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f4ab

திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

தீபாவளி வந்தாலே மனதில் ஒரு குதூகலம், தீபஒளி, தீபங்களின் வரிசை, புது உடைகள், இனிப்புகள், கூடவே பட்டாசுகள் என்று நம் மனக் கண் முன்னால் பல காட்சிகள் வந்து விடுகின்றன. தீபாவளி என்பது நமக்குள் இருக்கும் (அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவைப் பெறும்) இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும்.

தீயன அழிக்கப்பட்டு, மன இருள் நீங்கி, உள்ளே ஒளி பாய்ந்து, பரவி பிரகாசித்து, நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் திருநாளே தீபாவளிப் பண்டிகையாகும். தீபாவளி ஒரு சம்ஸ்கிருத பதம். இதைப் பிரித்துப் பார்த்தால் (தீப + ஆவளி-வரிசை) விளக்குகளின் வரிசை எனப் பொருள்பெறும். தீபாவளி தினம் நாம் வீட்டில் தீபங்கள் ஏற்றி வீட்டிற்கு வெளிச்சம் கொண்டு வருவது போல் அகத்து இருள் நீங்க அகத்திலும் ஒளி விளக்கு ஏற்றி உள் ஒளி பெருக்கிடல் வேண்டும்.



கங்கா ஸ்நானம் செய்தபின் இந்த முக்கிய பூஜையைச் செய்ய வேண்டும். அன்று லட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்கி சிறுவர்களுக்குத் தரவேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும். கன்னிகளுக்குத் திருமணம் நடைபெறும்.



தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். இதனால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். “சுக்லாம் பரதரம்’ சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.



“ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம’.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu 25 Oct 2018 - 4:49


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f4ab

ராவண சம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

1. ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌசல்யாதேவி, ''விளக்கேற்ற வந்த திருமகளே... சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று! அந்தகாரம் விலகி அருள் பரவட்டும்'' என்றாள். உடனே, தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள்!

2. இதேபோல், ஞான தீபாவளி என்றும் போற்றுவர்! பிரகலாதனின் பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள் தீபாவளி. அன்று ஏற்றப்படும் தீபம் “எம தீபம்” எனப்படும். வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலி சக்ரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு தன் ஞானத் திருவடி சூட்டிய நாள்தான் தீபாவளி என்பாரும் உளர்.

3. வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர் - சீதாதேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம்.

தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும் விரதமும் இருக்கிறார்கள். குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் கொழிக்க வேண்டும் என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள்.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu 25 Oct 2018 - 4:50


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f4ab

நரகாசுரனை எதிர்த்துச் போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடைய கோபமடைந்த சத்தியபாமா, நரகாசுரனுடன் சண்டை இட்டு அவனை வெட்டி வீழ்த்தினார் என்றும் கூறுவாரும் உளர்.

அச்சந்தர்ப்பத்தில் சத்தியபாமா தன் சக்தியை கிருஷ்ண பரமாத்மாவுக்கு அளிக்கப் பெற்று கிருஷ்ண பரமாத்மாவே நரகாசுரனை அழித்தார் எனவும் கூறுவாரும் உளர்.

நரகாசுரன் இறக்கும் தறுவாயில் ஸ்ரீ மகாவிஷ்ணு காட்சி அளித்தார். அவனுக்குத் தேவையான வரம் கொடுப்பதாகச் சொன்னார், நரகாசுரன் தனது இறப்புக்கு காரணம், எல்லோரையும் தான் வருத்தியதும், விளக்கேற்றக் கூடாது என்று கட்டளையிட்டதும் என்ற தவறை உணர்ந்து, அதற்கு பிராயச்சித்தமாக கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்டான், தன்னை சம்ஹாரம் செய்த அந்த நாளில் மக்கள் அனைவரும் தாம் பட்ட துன்பம் தீர்ந்தது என தலையில் எண்ணை தேய்த்துக் கங்கையில் நீராடினால் அவர்களுடைய துன்பங்களும், பாவங்களும் தீர்க்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் எல்லோரும் அன்றைய தினம் புத்தாடை அணிந்து. தீபமேற்றி, வெற்றித் திருநாளாக கொண்டாட வேண்டும் என்றும் இரந்து கேட்டான்.

"அப்படியே ஆகட்டும்" என கிருஷ்ணர் வரமளித்தார். இதுவே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

எம் மனதில் இருக்கும் இருளை அகற்றி தீப ஒளியை ஞான ஒளியை ஏற்றி வைப்போம். அதற்கிணங்க இந்துமக்கள் அத்தினத்தை தீபாவளி தினமாக எண்ணை வைத்து அதிகாலையில் தோய்ந்து, தீபங்கள் ஏற்றி, புத்தாடை அணிந்து, இனிப்புப் பண்டங்கள் பரிமாறி மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர்.

இவ்வாறும் கூறுவாருமுளர்..... தாயான பூமாதேவி மகனான நரகாசுரனுக்கு அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை. மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன்( அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனைக் கொல்ல உத்தரவிட்டார். பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை. இந்த விஷயத்தை விஷ்ணுவிடமே ஒப்படைத்தார்.

பூமாதேவி சத்யபாமாவாகவும், விஷ்ணு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்று கொண்டு சத்தியபாமா அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள்.

கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனுடன் போரிட்டார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசுரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனே சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்கி எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக இருந்து, இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் கையாலேயே அவன் அழிந்தான்.

அவன் இறக்கும் சமயத்தில் சத்யபாமாவுக்கு (பூமாதேவிக்கு) முற்பிறவி ஞாபகம் வந்தது. கிருஷ்ணரிடம், "எனது மகன் கொடியவன் என்றாலும் அவன் என் கையால் அழிந்தது வருத்தமளிக்கிறது. அவன் இறந்த இந்நாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் விழா எடுக்க வேண்டும். ஐப்பசி சதுர்த்தசி திதியில் அவன் இறந்ததால், இந்த நாளை இனிப்புகளுடனும், தீபங்களுடனும் அனைவரும் கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தாள். கிருஷ்ணரும் அவளின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu 25 Oct 2018 - 4:52

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f4ab



ஓமவல்லி இலை - 10
துளசி இலை - 10
இஞ்சி - 1 துண்டு
லவங்கம் - 3
நெய் - 2 டீஸ்பூன்
மிளகு - 10
தேன் - சிறிதளவு



மிளகு, லவங்கத்தை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். ஓமவல்லி, துளசி, இஞ்சியை விழுதாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, நெய்யை விடவும். அரைத்த விழுது, பொடித்த வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு வதக்கவும். லேகியம் போல் ஆனதும் இறக்கி ஆறவைத்து, தேன் சேர்க்கவும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு நல்லது.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu 25 Oct 2018 - 4:53

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f4ab

புராணக் கதைகளின் படி, கிருஷ்ணரின் மனைவியர் (திருமகள், பூமகள்) இருவருள் ஒருவரான பூமகளுக்கும் (பூமாதேவிக்கு) மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பிறந்த மகன் தான் நரகாசுரன்.

ஆரம்பத்தில் அவன் மிக நல்லவனாக தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், நாளடைவில் நரகாசுரன் கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். இதற்கு இடையில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்யலானான். பிரம்மாவும் மனம் மகிழ்ந்து காட்சித் தந்து, "அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், விரும்பிய வரம் கேள்" என்றார்.

"நான் சாகக்கூடாது, எனக்குச் சாகா வரம் அருளுங்கள்" என்றான். அதற்கு "உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள்: அழியத்தான் வேண்டும் அது தர இயலாது என பிரமா கூறி, வேறு எதாவது கேள்" என்றார். அதனால் அவன் "ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு எவராலும் மரணம் அடையக்கூடாது" என்று வரமருளக் கேட்டான்.

வரத்தை வாங்கியதும் நரகாசுரனுக்கு கர்வம் (அசுரக் குணம்) தலைக்கேறியது. ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாசம். அதனால் அவன், அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எவரும் இரவில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது என்றும் உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்ச விளக்குகளை வீட்டில் வைத்திருந்தவர்களின் தலைகளைக் கொய்தான்.

இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர். "கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்" என்றார் கிருஷ்ணர்.

ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது. அவனை பூமாதேவியினால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், பூமாதேவியின் அவதாரமானசத்தியபாமாவுடன் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார் கிருஷ்ணர்.

கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. முதலில் நரகாசுரனின் படைத் தளபதி முரன் என்பவனைக் கொன்றார் கிருஷ்ணர். அதனால்தான் கிருஷ்ணனுக்கு "முராரி" என்ற பெயர் வந்தது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் தன் ”கதையை” வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்ததுபோல் விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா?

எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர், ஆனால் காரணம் இல்லாமல் காரியமா? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்? அந்த சந்தற்பத்தை ஏற்படுத்தவே கிருஷ்ணர் மயங்கியதை அறியாத சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு எழுந்தாள்,"என் கண்ணனுக்கா இந்த நிலை" என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் (நரகாசுரன்) கீழே சாய்ந்தான். அவன் கேட்ட வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான்.

நரகாசுரன் கொல்லப்பட்ட அந்நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடி வருகின்றோம்.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu 25 Oct 2018 - 4:54


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f4ab

தீபாவளி வருகிறது. தீபாவளியென்றால் பட்டாசுக்குப் பிறகு இனிப்பு வைகைகள்தான் சிறப்பு. இதில் நாமே சில இனிப்புகளை வீட்டில் தயார் செய்யலாம். அப்படி ரவா லட்டு எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.



வறுத்த ரவை - 100 கிராம்

பொடி செய்த சக்கரை - 200 கிராம்
(மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்)

நெய் - 50 கிராம்

பால் - 50 மில்லி

முந்திரி, திராட்சை - தேவையான அளவு



வறுத்த ரவையுடன், நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சையை போடவும். பொடி செய்த ச‌ர்க்கரையை வறுத்த ரவையுடன் சேர்க்கவும்.

இந்த கலவையில் சூடான பாலை விடவும். பொறுக்கும் சூட்டில் அதை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சுவையான ரவா லட்டு தயார்.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu 25 Oct 2018 - 4:55

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f4ab

மௌனத்தைக் கலைத்துச் சென்று
ஆகாயத்தில் வட்டமிட்டு
அழகுறச்செய்தபடி கீழே விழும்

ஒரு மனிதன் நாள் முழுக்க
கந்தகத்தில் புரண்டு புரண்டு
செய்த பட்டாசினை

இன்னொரு மனிதன்
வாங்கி வெடிக்கும் மகிழ்வில்
ஒரு குடும்பம் பசியாறுகிறது

சிரிப்பை விட்ட முகங்களும்
அப்போது சிரிக்கும்

சாலைகளின்
நெருக்கடிகளுக்குள்
அகப்பட்டுக்கொண்டிருக்கும்
பட்டாசின் மின்னல் துளிகளானது
தீபத்தின் முகத்தை
பளிச்சென படமெடுக்கிறது

பாறை மனம் கொண்டவரும்
அசுர குணம் கொண்டவரும்
தீபத்தின் முன்னே
குழந்தை மனம் கொள்வது இயல்பு

பட்டாசு புகையின் நெடிகளிலும்
மழலைகளின் குபீர் சிரிப்புகளிலும்
வீடுகள் தெருக்கள்
மயங்கிக் கிடக்கும்

அதிகாலை
சூரியக் குளியலின் நீரினில்
கெட்டவை யாவும்
அறுந்து போகும்

தேசமெங்கும் கேட்கும்
பட்டாசுகளின் ஒட்டுமொத்த
குரலோசையும்
பிரிவினை வாதத்திற்கு
கண்டனம் தெரிவிப்பதாய்

பலமிழந்து கிடக்கும்
மனித உரிமையின் உணர்வின்
மத்தியில் தீபம்
நிமிர்ந்து நின்று
எழுச்சியூட்டும் வெற்றி
கீதத்தை இசைகிறது.

கவிஞர் கோபால்தாசன்


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu 25 Oct 2018 - 4:56

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f4ab

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

பொதுவாக, ‘தீபம்’ என்றால் ‘விளக்கு’. ‘ஆவளி’ என்றால் ‘வரிசை’. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் விளக்கினை ஏற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது. அதுபோல மனதில் உள்ள இருளையும் போக்கி, ஒளியேற்றி வைப்பதாகும்.



உலகில் உள்ள எல்லா இந்துக்களும் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இது மிக மிகப் பழங்காலதிருந்தே இந்துக்களின் வாழ்க்கையோடு கலந்துபோன கொண்டாட்டமாகும்.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற்கேற்ப தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வட இந்தியாவில் சில இடங்களில் தீபாவளியன்று நரகாசுரனுடைய உருவங்களைக் கொளுத்தி கிருஷ்ண பகவானுடைய வெற்றியைக் கொண்டடுவதுண்டு.

இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால், அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி மகாவீரர் நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu 25 Oct 2018 - 4:58

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f4ab

பெரியவர்களை விட தீபாவளித் திருநாள் அன்றும், அதற்கு முந்தைய நாட்களிலும் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். அது இயல்பானதுதான்.

ஏனெனில் புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் உள்ளிட்ட உணவு வகைகள், பெற்றோரின் கணிவு, பள்ளிக்கு விடுமுறை என்று அடுக்கடுக்கான இனிமைகள் அந்த வேளையில் ஒன்றுகூடுவதால் அவர்களின் உற்சாகத்திற்கு அளவில்லாமல் போகிறது.

ஆனால், அந்த நாட்களில் வளர்ந்துவிட்ட நம்மிடமும் ஒரு மகிழ்ச்சி ஊடுருவி நம்மையும் இன்பத்தில் ஆழ்த்துவதை உணரலாம். சிறுவர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை, எனவே அவர்களால் எதையும் முழுமையாக அனுபவித்து களிக்க முடியும்.

ஆனால், பெரியவர்களுக்கு அப்படியில்லையே. நாட்டுப் பிரச்சனையில் (ஒன்றா, இரண்டா) இருந்து வீட்டுப் பிரச்சனை வரை தீராத பிரச்சனைகள் எப்போதும் இல்லத்தையும், இதயத்தையும் சூழ்ந்திருக்கையில், இந்த ஒரு நாள் கொண்டாட்டம் அவர்களை எப்படி முழுமையான மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது?

பலரும் இதனை உணர்ந்திருப்பார்கள். எல்லா பிரச்சனைகளையும் தாண்டி அந்த சில நாட்களில் நம்மையும் அறியாமல் நாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். அது எப்படி, எதனால்?

நீண்ட காலம் சிந்தித்தும் விடை கிட்டவில்லை. ஸ்ரீ அரவிந்தர், அன்னை ஆகியோரின் எழுத்துக்களை படிக்கும்போது அது புரிந்தது. அவர்கள் இவ்வாறு அதனை விளக்குகிறார்கள்: நம்மைச் சுற்றி எப்போதும் பல்வேறு உணர்வலைகள் வட்டமிடுகின்றன. அது பலரையும் தழுவி - ஒரு ஆற்றில் ஒடும் நீரைப்போல் எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு வந்த நம்மையும் தொடுவதுபோல் - பிறகு நம்மையும் வந்து தழுவுகிறது.

அந்த உணர்வலைகளில் உள்ள உணர்ச்சிகள் நம்மை தழுவுகின்றன, தாக்குகின்றன, மகிழ்ச்சியிலோ அல்லது துக்கத்திலோ கூட அமிழ்த்துகின்றன. அதற்கேற்றாற்போல் நம் மன நிலையும் மாறுகிறது என்று கூறியுள்ளனர். இந்த உணர்வலைகளின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களாக யோகிகள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆம், இதைத்தான் நாமும் உணர்கிறோம். தீபாவளி நாட்களிலும் நம்மைச் சுற்றியுள்ள பிரச்சனைகளும், சிக்கல்களும் விலகிவிடுவதில்லை. ஆனால், அவைகளின் தாக்கம் குறைகிறது, ஏனெனில் நமது சிந்தனையில் நமது வீட்டிலுள்ள குழந்தைகளின் சிறுவர்களின், வீட்டுப் பெண்களின், பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்வதில் சிந்தனையைச் செலவிடுகிறோம்.

அவர்களை மகிழ்விப்பதிலும், அவர்கள் மகிழ்வதைக் கண்டு அதில் மகிழ்ச்சியைத் தேடுவதிலும் கவனைத்தை செலுத்துகிறோம். இது நம் ஒருவரில் மட்டுமே நிகழவில்லை. ஒரு சமூகமாக எல்லா பெரியவர்கள் மத்தியிலும் நிகழ்கிறது.

அதே நேரத்தில் மற்றொன்றும் நடக்கிறது. பொதுவாக தொல்லை ஜீவன்களாக கருதப்படும் சிறுவர்களும், குழந்தைகளும், குடும்பத்தினரும் அப்போது நமது மனக் கண்களில் தேவையாகிவிடுகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பே நம்மை முழுமையாக ஆக்கிரமிக்கிறது.


இதன் விளைவு, பொதுவாக நம்மைத் தாக்கும் உணர்வலைகளில் கலந்திருக்கும் கலப்படமான பல்வேறு உணர்ச்சிகள் இந்த பண்டிகை வேளைகளில் இருப்பதில்லை. நாமும் அப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இல்லை. எனவே, பிள்ளைகளின் அந்த மகிழ்ச்சியே இத்தினங்களில் உணர்வலைகளை நிரப்புகின்றன.

அந்த காலத்தில் அடிக்கும் வெயில், பெய்யும் மழை, வீசும் காற்று என அனைத்தும் ஒரு தனித்த தன்மை கொண்டதாக நாம் - நம்மை விட அதிகமாக பிள்ளைகள் உணர்கின்றனர். ‘அந்தச் சூழலே இனிமையானது’ என்று நாம் கூறுகிறோமே அது இந்த உணர்வலையின் இயல்பு காரணமாகவே ஏற்படுகிறது.

நாம் உணரும் அந்த இனிமையான சூழல் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக - பொதுவாக வீட்டின் பெரியோர்கள் - அதீத கவனத்துடன் எல்லோரையும் எச்சரிப்பதையும் பார்க்கிறோம். ஏனெனில் அந்த இனிய சூழல் எவ்வித அசம்பாவிதத்தாலும் கெட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு. இதுதான் அவர்களை சிறுவர்களுக்கு இணையாக பரபரப்பாக வைத்துக்கொள்கிறது.

தீபாவளி பண்டிகை நாளை நெருங்கும் நாட்களில் இந்த மகிழ்ச்சி உணர்வு தொடர்ந்து அதிகரிப்பதையும், அந்த நாளில் அதிகாலைப் பொழுதிலேயே அது உச்சத்தை அடைவதையும், தீபாவளிக்கு மறுநாள் முதல் அந்த உணர்வு நிலை கொஞ்சம் கொஞ்மாக மாறுவதையும், சில நாட்களில் பழைய நிலையை அடைவதையும் உணரலாம்.

இன்னும் சற்று ஆழ்ந்து உள்நோக்குவோமானால், நமது இளம் பிராயத்தில் தீபாவளி நாளில் ஒலித்த பாடல் அல்லது நடந்த இனிமையான நிகழ்வு ஆகியன, அதன் பசுமை மாறாமல் நமது நினைவில் நிழலாடுவதையும் உணரலாம்.

இதற்கு மற்றொரு பக்கமும் உண்டு. அது இப்படிப்பட்ட நாளில் ஏற்படும் மரணம். அது சம்மந்தப்பட்டவர்களை பெரிதும் பாதித்து விடுகிறது. ஊரே கொண்டாடிக்கொண்டு இருந்த வேளையில் அவர்களது வீட்டில் ஏற்பட்ட துக்கம், அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆட்டுவிப்பதைக் காணலாம். அதிலிருந்து விடுபட ஒரு தலைமுறைக் காலம் கூட ஆகிவிடுவதுண்டு.

எனவே, தீபாவளி போன்ற பண்டிகை தினங்களை நமது வாழ்நாளில் திரும்பிப் பார்ப்போமானால், அந்த நாட்களை மகிழ்ச்சியால் நிரப்பிய பெருமையனைத்தும் குழந்தைகளையும், சிறுவர்களையும், வீட்டுப் பெண்களையுமே சார்ந்திருப்பதைக் காணலாம்.

அந்த உன்னத நினைவுகள் இந்த தீபாவளித் திருநாளிலும் உங்கள் இல்லங்களில் மலரட்டும், நாட்டிலும் மலரட்டும்!...


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu 25 Oct 2018 - 5:13

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 1f4ab

தீபாவ‌ளி எ‌ன்றா‌ல் இ‌னி‌ப்பு, ம‌த்தா‌ப்பு, புது ஆடை எ‌ன்று ப‌ல்வேறு வகைக‌ளி‌ல் நா‌ம் ம‌கி‌ழ்வத‌ற்கான வா‌ய்‌ப்புகளை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளுவோ‌ம்.

அ‌ம்மா‌க்க‌ள் இ‌னி‌ப்புகளை செ‌ய்வது‌ம், அதனை நா‌ம் ப‌ல்வேறு வகைக‌ளி‌ல் ‌கி‌ண்டல‌டி‌ப்பது‌ம் எ‌ல்லா ‌‌வீடுக‌ளிலு‌ம் நட‌க்கு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். மைசூ‌ர் பா‌க்கை செ‌ங்கலு‌க்கு இணையாக வ‌ர்‌ணி‌ப்பது‌ம், அ‌திரச‌த்தை ச‌ங்கு ச‌க்கரமாக பா‌வி‌ப்பது‌ம் ‌தீபாவ‌ளி கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ளி‌ன் ஒரு பகு‌திதா‌ன்.

பல ப‌ள்‌ளிக‌ளி‌ல் ‌சற்று முன்பாகவே ‌விடுமுறை தொடங்‌கி‌வி‌டு‌கிறது. குழ‌ந்தைக‌ள் இ‌ன்றைய ‌தினமே ப‌ட்டாசை வெடி‌க்க‌த் தொடங்‌கி‌விடுவா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு ‌விடுமுறை ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டாலே ‌தீபாவ‌ளி வ‌ந்து‌வி‌ட்டதாக அ‌ர்‌த்த‌ம்தானே.

பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திகளு‌க்கோ இது தலை ‌தீபாவ‌ளி. மா‌மியா‌ர் ‌வீ‌ட்டி‌ல் மருமக‌னு‌க்கு தடபுட‌ல் ‌விரு‌ந்தோடு தலை ‌தீபாவ‌ளி ‌சிற‌ப்பாக க‌ழியு‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்த மாமாவை மனை‌வி‌யி‌ன் த‌ங்கைகளு‌ம், சகோதர‌ர்களு‌ம் ஏகபோகமாக ‌கி‌ண்டலடி‌த்து ச‌லி‌த்து‌விடு‌ம் இ‌ந்தத் ‌தீபாவ‌ளி.

வயதானவ‌ர்களை ‌விட, குழ‌ந்தைகளு‌க்கு‌த்தா‌ன் இ‌ந்த ‌தீபாவ‌ளி அ‌திக‌க் கொ‌ண்டா‌ட்ட‌த்தை‌க் கொடு‌க்கு‌ம். அவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் ‌தீபாவ‌ளி‌யி‌ல் மு‌ன்னு‌ரிமை. ஆடை, ப‌ட்டாசு, இ‌னி‌ப்புக‌ள் என எ‌ல்லாமே அவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன். இ‌ப்படி இரு‌க்க, ப‌ம்பரமா‌ய் சு‌ழ‌ன்‌று ‌விளையாடு‌ம் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌தீபாவ‌ளி எ‌ன்றாலே அது ‌திரு‌விழாதானே.

கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் அனை‌த்துமே ம‌க்களு‌க்காக ம‌க்களா‌ல் கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டவைதா‌ன். ந‌ம் இய‌ந்‌திர‌த் தன‌த்தை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள ந‌ம் மன‌ங்களு‌‌க்கு ஒரு பு‌த்துண‌ர்‌ச்‌சி அ‌ளி‌க்கவ இ‌ந்த கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் ‌பிற‌ந்தன. இவ‌ற்றை நா‌ம் முழுமையாக அனுப‌வி‌க்க வே‌ண்டு‌ம். ‌தீபாவ‌ளியை‌க் கொ‌ண்டாட பு‌த்தாடையோ, ப‌ட்டாசுகளோ ம‌ட்டு‌ம் போதாது. அத‌ற்கு மேலு‌ம் நா‌ம் செ‌ய்ய வே‌ண்டிய ‌‌சில ‌விஷய‌ங்க‌ள் உ‌ள்ளன.

நடு‌த்தர‌க் குடு‌‌ம்ப‌த்தை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் ‌‌வீ‌ட்டு‌ப் ‌பி‌‌ள்ளைகளு‌க்கு பு‌த்தாடை எடு‌த்து‌க் கொடு‌க்கவே ‌தி‌ண்டாடி‌ப் போவா‌ர்க‌ள். இ‌ந்த ‌நிலை‌யி‌ல், வறுமை‌க் கோ‌ட்டி‌ற்கு‌க் ‌கீழே வாழு‌ம் ‌பி‌ள்ளைகளை கொ‌ஞ்ச‌‌ம் மன‌தி‌ல் ‌நினை‌த்து‌ப் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம். எ‌ல்லோருமே அவரவ‌ர் ச‌க்‌தி‌க்கு ஏ‌ற்ற வகை‌யி‌ல் யாரேனு‌ம் ஒருவரு‌க்கு ‌தீபாவ‌ளியையொ‌‌ட்டி ‌‌சிறு உத‌வியாவது செ‌ய்ய வே‌ண்டு‌ம். நமது அ‌ண்டை அயலா‌ர்க‌ளி‌ல் எ‌த்தனையோ ஏழை ‌வீடுக‌ள் இரு‌க்கு‌ம். அதுபோ‌ன்ற குடு‌ம்ப‌த்‌தி‌ல் உ‌ள்ள குழ‌ந்தைகளு‌க்கு ஆ‌டையோ, ப‌ட்டாசுகளையோ வா‌ங்‌கி‌க் கொடு‌த்து அவ‌ர்களது ம‌கி‌ழ்‌ச்‌சி‌க்கு ‌தீபாவ‌ளி ம‌ட்டு‌‌ம் அ‌ல்ல நாமு‌ம் ஒரு காரணமாக இரு‌க்கலா‌ம்.

வச‌தி படை‌த்தவ‌ர்க‌ள், அனாதை ஆ‌சிரம‌ம், மு‌தியோ‌ர் இ‌ல்ல‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று அ‌‌ன்றைய ‌தின‌த்‌தி‌ற்கு ‌சிற‌ப்பான உணவை அ‌ளி‌க்க ஏ‌ற்பாடு செ‌ய்யலா‌ம். சோக‌த்தை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் போது பா‌தியாக‌க் குறையு‌ம். அதுவே இ‌ன்ப‌த்தைப் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் போது அது இர‌ட்டி‌ப்பாகு‌ம்.

உ‌ங்க‌ள் ‌தீபாவ‌ளி‌க் கொ‌ண்டா‌ட்ட‌த்தை உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்தவ‌ர்களுட‌ன், வறுமை‌யி‌ல் வா‌ழ்பவ‌ர்களுட‌ன் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்களது ம‌கி‌ழ்‌ச்‌சி அவ‌ர்களையு‌ம் தொ‌ற்‌றி‌க் கொ‌ள்ள‌ட்டு‌ம்.

பர‌ப்புவோ‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியை. கொ‌ண்டாடுவோ‌ம் இ‌னிய ‌தீபாவ‌ளியை.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 2 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum