புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 6%
prajai
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
Barushree
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_m10ஞானக்கூத்தன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானக்கூத்தன் கவிதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 17, 2018 1:01 pm

ஞானக்கூத்தன் கவிதைகள் Gnana2949760f
-
அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன்
சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

-
-----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 17, 2018 1:01 pm



அசைவு

--------------

திங்கள் கிழமை போய்விட்டது
செவ்வாயும் போய்விட்டது
கோல வாசலைப்
புதனின் வெயில் உலர்த்துகிறது.

இன்னும் உன்னை நான்
பார்த்த பாடில்லை, ஞானாட்சரி

ஒருபகல் ஒருராத்திரி மீண்டும்
ஒருபகல் ஒருராத்திரி கடந்தால்
அடையப் பெறும் ஒரு நகரம் போல
ஆகிவிட்டாய் நீ ஞானாட்சரி

ஒரு வாகனம் போல என் சரீரம்
உன்னை நோக்கி நகர்கிறது
அறிவாயோ நீ ஞானாட்சரி
-
--------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 17, 2018 1:02 pm



கீழ்வெண்மணி


மல்லாந்த
மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின

புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்
குருவிகள் இவைகள் என்றார்

குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலோ பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க
-
---------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 17, 2018 1:02 pm



காலவழுவமைதி

-
“தலைவரார்களேங்…
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.

தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”

‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’

“வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?

தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்

தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்”

‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்

அமைதி… அமைதி…
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 17, 2018 1:03 pm



மரவட்டை


ஊர்ந்து
செல்கிறது மெல்ல மெல்ல
செந்நிறமான நீள் மரவட்டை

ஓரிடத்தை எதனாலோ விட்டுவிட்டு
எங்கேயோ செல்கிறது. பரபரப்பாய்.

போகட்டும் பையா மரவட்டை அதன்
துக்குணிக் கால்களைப் பரவிக் கொண்டு
தடைகள் அங்கங்கே ஏற்பட
சுருண்டு கொள்கிறது அச் சீவன்.

தீண்டாதே பையா அதனை. தொட்டால்
சுருண்டு கொள்ளும் பயந்தபடி.

வட்டமாய்ச் சுருண்டு கிடக்கும் அப்போது
என்னென்ன தோன்றுமோ அதன் மனதில்?

தொடாதே பையா, நீ அதனை
தொட்டால் சுருண்டு பின் உடம்பை
நீட்டும் போதில் ஒருவேளை
மறக்கக் கூடும் தன் மார்க்கத்தை.
-
---------------------------

நன்றி- தி இந்து



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 17, 2018 2:23 pm

Code:
அம்மாவின் பொய்கள்
.

என்னை எந்தன் இளம் வயதிற்கு அழைத்து சென்ற கவிதை
படித்து முடித்ததும் என்னையுமறியாமல் ஒரு புன்முறுவல் புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 26, 2018 8:20 pm


ஸ்ரீலஸ்ரீ- கவிதை - ஞானக்கூத்தன்

----------------

யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார். அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு
-
-----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 26, 2018 8:22 pm

யெதிரெதிர் உலகங்கள் ~ ஞானக்கூத்தன் படைப்புகள்
------------

கண்ணிமையாக் கால்தோயாத் தேவர் நாட்டில்
திரிசங்கைப் போகவிட மாட்டேன் என்று
ஒருமுட்டாள் சொன்னதுபே ராபத்தாச்சு

தன்னாளைத் திருப்பியதும் விஸ்வா மித்ரன்
கொதித்தெழுந்தான். பிரம்மாவுக் கெதிர்ப்படைப்புத்
தான் செய்வே னென்று சொல்லி ஆரம்பித்தான்

கண்ணிமையாக் கால்தோயாத் தேவரெல்லாம்
ஓடிவந்தார் கடவுளுடன். வேண்டாமென்று
முனிவர்களில் மாமணியைக் கெஞ்சிக் கேட்டார்.

சினம்தணிந்தான் தவஞானி. ஆனால் அந்தக்
கணம்மட்டும் படைத்தவைகள் உலகில் என்றும்
இருந்துவர வேண்டுமென்றான். வரமும் பெற்றான்

அன்றுமுதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர
மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து
வாழ்ந்துவரல் வழக்காச்சு. எடுத்துக்காட்டு:

மயிலுக்கு வான்கோழி புலிக்குப் பூனை
குதிரைக்குக் கழுதை குயிலுக்குக் காக்கை
கவிஞர்களுக் கெந்நாளும் பண்டிட்ஜீக்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக