புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
#MeToo செய்திகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை: மீடூ குறித்த விஜய் கவிதை
மீடூ விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படத்தியுள்ள நிலையில், கவிஞர் பா.விஜய் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்நிலையில் கவிஞர் மற்றும் நடிகர் பா.விஜய் ’மீடூ’ தொடர்பாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கவிதை வருமாறு:
ஒரு மீ டூ கவிதை
எழுதட்டுமா என்றேன்
மீம்ஸ் போடுவார்கள்
மிரட்டினர் நட்புகள்
மீம்சுக்கு பேனாக்கள் மிரளாது
ஞாயிற்றுக் கிழமை என்பதால்
மீ டூ உடன்
மீனும் சேர்ந்து கொண்டது.
மீன் 2-வைப் பார்த்துக் கேட்டது
மீன் 1
மீ டூ மீ டூ என்றால் என்ன?
மீன் 2 சொன்னது
மீ டூ மீ டூ என்றால்..
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றானே பாரதி
அதுதான் மீ டூ
புரிந்த மீன் 1
தெளிந்து கேட்டது..
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றாயே பாரதி... ஒருசில
மாதர் செய்யும் மடமையை
யார் கொளுத்துவது?
மீனிங் புரிந்த மீன் 2
இது மீ டூ பிரச்சனை என்று
மீண்டது.
இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை
-பா.விஜய்
இவ்வாறு கவிதையாக மீடு குறித்து விஜய் கூறயுள்ளார்.
இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை: மீடூ குறித்த விஜய் கவிதை
மீடூ விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படத்தியுள்ள நிலையில், கவிஞர் பா.விஜய் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்நிலையில் கவிஞர் மற்றும் நடிகர் பா.விஜய் ’மீடூ’ தொடர்பாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கவிதை வருமாறு:
ஒரு மீ டூ கவிதை
எழுதட்டுமா என்றேன்
மீம்ஸ் போடுவார்கள்
மிரட்டினர் நட்புகள்
மீம்சுக்கு பேனாக்கள் மிரளாது
ஞாயிற்றுக் கிழமை என்பதால்
மீ டூ உடன்
மீனும் சேர்ந்து கொண்டது.
மீன் 2-வைப் பார்த்துக் கேட்டது
மீன் 1
மீ டூ மீ டூ என்றால் என்ன?
மீன் 2 சொன்னது
மீ டூ மீ டூ என்றால்..
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றானே பாரதி
அதுதான் மீ டூ
புரிந்த மீன் 1
தெளிந்து கேட்டது..
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றாயே பாரதி... ஒருசில
மாதர் செய்யும் மடமையை
யார் கொளுத்துவது?
மீனிங் புரிந்த மீன் 2
இது மீ டூ பிரச்சனை என்று
மீண்டது.
இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை
-பா.விஜய்
இவ்வாறு கவிதையாக மீடு குறித்து விஜய் கூறயுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1282623சிவா wrote:
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றாயே பாரதி... ஒருசில
மாதர் செய்யும் மடமையை
யார் கொளுத்துவது?
.
மீடியாவே கொளுத்தி போடும்.
நள்ளிரவில் கதவை தட்டினார்: இயக்குனர் மீது நடிகை பாலியல் புகார்
பிரபல மலையாள நடிகை ஸ்ரீதேவிகா இயக்குனர் ஒருவர் நள்ளிரவில் கதவை தட்டு எனக்கு பாலியல் தொல்லை அளிக்க பார்த்ததாக பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
மீடு விவகாரம் நாடெங்கும் பூதாகரமாக மாறிக்கொண்டு வருகிறது. பல சினிமா பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகளை தைரியமாக வெளியே சொல்லி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல மலையாள நடிகை ஸ்ரீதேவிகா, தான் சந்தித்த பாலியல் தொல்லைகளை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்ரீதேவிகா தமிழில் ராமகிருஷ்ணா, ஞாபகங்கள், அன்பே வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தான் திரையுலகில் சந்தித்த மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தபோது, இரவு என் ரூமின் கதவை யாரோ தட்டினர். ஆனால் நான் கதவை திறக்கவில்லை. தொடர்ந்து 2,3 நாட்கள் இதே போல் நடந்தது. பிறகு தான் அந்த படத்தின் இயக்குனரே இந்த கீழ்த்தரமான செயலை செய்தது எனக்கு தெரியவந்தது. இதனை வெளியே சொல்ல நினைத்தேன். அப்போதைய, நடிகர் சங்க செயலாளர் இதனை வெளியே சொன்னால் உன் சினிமா வாழ்க்கை பாழாகி விடும் என சொன்னார். அதனால் அப்போது அதை நான் வெளியே சொல்லவில்லை என ஸ்ரீதேவிகா கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீ டு வில் சிம்பு பெயரை கூறிய நடிகை - பொங்கியெழுந்த ரசிகர்கள்
மீ டு - வில் சிம்புவின் பெயரை கூறிய நடிகை லேகா வாஷிங்டனை சிம்பு ரசிகர்கள் ஏகத்துக்கும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
சமீப காலமாக மீ டூ இயக்கம் நாடெங்கும் வேகமாக பரவி வருகிறது. ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகைகள், பெண் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள பற்றி தைரியமாக பேசி வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகாரை கூறியதை தொடர்ந்து பல தமிழ் நடிகைகள், திரை பிரபலங்கள் தங்களுக்குக்கு கொடுத்த பாலியல் சீண்டலகள் பற்றி கூறி வருகின்றனர்.
அந்த வகையில், ஜெயம் கொண்டான், கெட்டவன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளவர் லேகா வாஷிங்டன் தனது டுவிட்டரில் 'ஒரே ஒரு வார்த்தை' 'கெட்டவன்' என்று மீடு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிம்பு நடித்த கெட்டவன் படத்தில் லேகா வாஷிங்டன் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் எதிர்பாராத சில காரணங்களால் பாதியில் கைவிடப்பட்டது. லேகா வாஷிங்டன் சிம்பு மீது 'மீடு' பதிவு செய்திருப்பதை கண்டு சிம்பு ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். எனவே, அவருக்கு எதிராக மோசமான வார்த்தைகளில் அவர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Please read the comments on my previous tweet to find out why women don’t come out in India.
— lekha washington (@washingtonlekha) October 23, 2018
இதைக்கண்ட லேகா தனது அடுத்த டிவிட்டரில் “ எனது முந்தையை டிவிட்டிற்கு வந்துள்ள கமெண்டுகளை படியுங்கள். எதனால் பெண்கள் உண்மையை சொல்ல முன்வரவில்லை என்பது புரியும்” என பதிவிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
'செருப்படி கொடுத்தேன்' பாலியல் தொல்லை அனுபவத்தை பகிர்ந்த கஸ்தூரி!
நடிகைகள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை மீடூ இயக்கம் மூலம் வெளிப்படுத்தி வருவதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் எப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் நடிகை கஸ்தூரி, பெண்களுக்கு எதிரான பல பிரச்னைகளில் பல அதிரடியாக கருத்துக்களை கூறிவருகிறார்,
அந்த வகையில், ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் "உங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறியிருந்தீர்களே அவர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை. தயக்கமா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள கஸ்தூரி, "தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்னிடம் செருப்படி வாங்கிக்கொண்டு இன்றுவரை பொது இடத்தில் என்னை பார்க்கும்போதெல்லாம் எதுவுமே நடக்காத மாதிரி மழுப்புகிற சிலர். இறந்து விட்ட ஒருவர். இழுத்துக்கொண்டு ஒருவர். இவர்களை பற்றி இப்போது பேசுவதற்கு எனக்கே பாவமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் வைரமுத்து மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
சமீபத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது குற்றச்சாட்டிற்கு பதிலளித்த வைரமுத்து அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மையைக் காலம் சொல்லும் என கூறியிருந்தார். ஆனால் சின்மயி விடாமல் வைரமுத்து மீது குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்ட வைரமுத்து, என் மீது புகார் கூறுபவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். நீதிமன்றம் சொல்லட்டும் நான் எப்படிபட்டவன் என்று அதிரடியாக தெரிவித்தார்.
இந்நிலையில் அவதூறு வழக்கில் சிக்கி இதுநாள் வரை எதையும் பேசாமல் மௌனமாக இருந்த ஹெச்.ராஜா நேற்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டு தன் வேலையை மீண்டும் துவங்கிவிட்டார்.
வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த எச்.ராஜா, வைரமுத்து மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், என் தாய் ஆண்டாளை விமர்சித்த வைரமுத்து நிம்மதியாக தூங்க முடியாது எனவும் காட்டமாக பேசினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீ டூ - பிளாக்மெயிலில் போய் நிற்கும்! - நடிகர் ராதாரவி ஆவேசம்
மீ டூ எனும் விஷயம், பிளாக்மெயிலில் போய் நிற்கும் காலம் வரப்போகிறதோ என கவலையாக இருக்கிறது. அதற்கு மீ டூவில் இருந்து சினிமாவைக் காப்பாற்றுங்கள் என்று நடிகர் ராதாரவி வேண்டுகோள் விடுத்தார்.
சின்மயி சொன்ன விவகாரத்தில் தொடங்கி, இயக்குனர் சுசி கணேசன், ஜான் விஜய், அர்ஜுன், ராதாரவி என்றெல்லாம் ஒரு சுற்றுசுற்றி, இப்போது நடிகர் தியாகராஜன் பக்கம் வந்து நின்றிருக்கிறது மீ டூ விவகாரம்.
இதற்காக நடிகர் தியாகராஜன், தன்னிலை விளக்கமாக பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டினார். ‘சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு போடுவேன்’ எனத் தெரிவித்தார் தியாகராஜன்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு நடிகர் ராதாரவி பேசியதாவது:
எங்கு திரும்பினாலும் மீ டூ விவகாரம்தான் பேசப்படுகிறது. யார் வேண்டுமானாலும் இதை வைத்துக்கொண்டு பழியைப் போட்டுவிடுகிறார்கள். ஒருபக்கம் சொல்வதை மட்டுமே வைத்துக்கொண்டு செய்தியாக்காதீர்கள். இன்னொரு பக்க விளக்கத்தையும் கேட்டு செய்தி போடுங்கள். அதுதான் நியாயமாக இருக்கும்.
ஒரு பரபரப்பைக் கிளப்புவதற்காக அவர்கள்தான் சொல்லுகிறார்கள் என்றால், அதேபரபரப்பைக் கிளப்புவதற்காகவும் பத்திரிகை விற்பனைக்காகவும் நாம் பலிகடா ஆகலாமா?
அந்தப் பொண்ணு நல்லபொண்ணுதான். ஆனா யாரோ சொல்லித் தூண்டிவிட்டு, இப்ப வசமா மாட்டிக்கிச்சு. நல்ல குழந்தை அந்தப் பொண்ணு. நல்லாப் பாடுவாங்க. ஆனா இப்ப பாடுறதை விட்டு பேசிக்கிட்டே இருக்காங்க.
என்னோட பாஸ்போர்ட்டை எங்கே வைச்சேன்னு தெரியல. தேடிக்கிட்டிருக்கேன்னு சொல்றாங்க. யாரை ஏமாத்தப் பாக்கறாங்க. இன்னிக்கி டெக்னாலஜி நல்லாவே வளர்ந்திருச்சு. பேரையும் தெருவையும் சொன்னாலே, அப்படி பட்டனைத் தட்டினா, எப்போ பாஸ்போர்ட் எடுத்தோம், முதல்ல எங்கேபோனோம், எத்தனை நாள் இருந்தோம், எத்தனை முறை பாஸ்போர்ட்டை பயன்படுத்தினோம்னு எல்லாமே வந்துருது. இதெல்லாம் அந்தக் குழந்தைக்குத் தெரியாது போல!
இந்த மீ டூ விவகாரம் இப்படியே போயிகிட்டிருந்துச்சுன்னா, ஒருகட்டத்துல இது பிளாக்மெயில்ல கொண்டுபோய்விடும். அது ரொம்ப மோசமான இடம். அப்படியொரு நிலைக்குப் போகாம, நாமதான் இதைக் காப்பாத்தணும். சரிபண்ணனும்.
தியாகராஜன் மிகச்சிறந்த நடிகர். அவர் மகனும் நடிகர். தியாகராஜனுக்கு பேரன், பேத்தியெல்லாம் இருக்காங்க. எனக்கும் பேரன், பேத்தியெல்லாம் இருக்காங்க. எல்லாருக்கும் குடும்பம் இருக்கு. இந்த சினிமாக் குடும்பத்துக்கு கண்ணியம், கெளரவம்லாம் இருக்கு. பிளாக்மெயிலுக்குள்ளே சினிமா உலகத்தைச் சிக்கவைக்காம பாதுக்காக்கறது நம்ம கடமை.
இவ்வாறு ராதாரவி பேசினார்.
இவரை யாரோ பிளாக்மெயில் செய்றாங்க போலிருக்கு, அதனால் தான் இப்படி உணர்ச்சி வசப்படுகிறார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
#MeToo விவகாரத்தில் ஏன் இத்தனை கடுமை? தீர்வை நோக்கி செயல்படுவதில் என்ன சிக்கல்?
இதை நீங்கள் ஏன் முன்னரே சொல்லவில்லை, நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம்? சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை?
மீ டூ (#MeToo) இயக்கத்தின் மூலம், பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானதாக கூறப்படும் பெண்கள் முன் வைக்கப்படும் அடுத்தடுத்த கேள்விகள் இவை.
ஒரு புகாரை தெரிவிக்கும் போது அதன் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு கேள்விகள் கேட்பது இயல்புதான். ஆனால் புகாரை தெரிவிப்பவர்களை ஒட்டு மொத்தமாக ஒடுக்கிவிடுவதாக நமது கேள்விகள் இருப்பதில் நியாயமில்லை.
மீ டூ வை யாரும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது. இது எந்த ஒரு தனிமனித தாக்குதலுக்கும் வித்திடக்கூடாது என்ற ஆதங்கம் சரிதான். ஆனால் அதே சமயம் புகார் கூறும் பெண்கள் தரப்பில் இருந்து யோசித்துப் பார்க்க வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இவ்வாறு ஒரு புகார் தெரிவித்தால் முதலில் அந்தப் பெண்ணின் ஒழுக்கத்தை நோக்கிய கேள்விகள்? பின் நீ ஏன் அங்கு சென்றாய்? ஏன் அவ்வாறு நடந்து கொண்டாய்? அவர்கள் உன் மீது அந்தத் தாக்குதலை நடத்தும்படியாக நீ என்ன செய்தாய் என ஆயிரம் கேள்விகள்?
நம் வீட்டில் ஒரு பொருள் திருடு போய்விட்டது என்றால் அதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவோ அல்லது அதுகுறித்து வெளியில் கூறவோ தயங்குவதில்லை.
ஏனென்றால் அதில் குற்றம் செய்தவர் தண்டனைக்குரியவராகவும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு நியாயமானதாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒரு பெண் வெளியே கூறுவதற்கான இணக்கமான சூழல் ஒன்றும் இங்கு நிலவவில்லை.
மேலும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண் மட்டும் அல்ல அவளது குடும்பத்தினர் முழுவதும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
அப்படியென்றால் யார் புகாருக்கு ஆளாகிறார்களோ, அவர்களுக்கு குடும்பம் இல்லையா? அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களை அவர்கள் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கேட்கலாம்?
இந்த மீ டூ இயக்கத்தில் ஒரு புகார் கூறிவிட்டால் மறு தரப்பில் உள்ளவர் குற்றவாளி என்று அர்த்தமில்லை. இது முழுக்கமுழுக்க பெண்கள் தாங்கள் பேசத் தயங்கியதை தைரியமாக எடுத்துக் கூறுவதற்கான ஒரு கருவிதான்.
சென்னையில் சின்மயி, லீனா மணிமேகலை, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீ டூ புகார் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இருதரப்பினருக்கு பொதுவானதாக கேள்விகளை முன் வைப்பது பத்திரிகையாளர்களின் கடமைதான். ஆனால் மீ டூ போன்ற புகார்கள் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அத்தனை கடுமை காட்ட வேண்டிய அவசியம் என்ன?
இரண்டு தரப்பையும் நியாயமாக அணுகவேண்டும் என்ற எண்ணம் சரிதான். ஆனால் ஒருவர் புகார் கூறினால் அதை பொறுமையாக கேட்டு அதற்கு தீர்வு என்ன என்பதையும், இதைப் போன்ற குற்றங்கள் எதிர் வரும் காலங்களில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் யோசிப்பதே மீ டூ புகார்களை நாம் ஆக்கப்பூர்வமானதாக அணுகுவதாக அமையும்.
என்ன நடந்தது? எப்போது நடந்தது? இத்தனை வருடங்கள் கழித்து சொல்வது ஏன்? என திரும்ப திரும்ப கேட்ட கேள்விகளையே கேட்க வேண்டிய அவசியம் என்ன?
மீ டூ வை பொறுத்த வரையில் சமூக வலைத்தளங்களே முக்கிய ஊடகம். இருப்பினும் தொலைக்காட்சி போன்ற முதன்மை ஊடகங்கள் இம்மாதிரியான விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது அதிக பொறுப்புணர்வுடன் செயல்படுவது இருதரப்பிலும் ஏற்படும் மன உளைச்சல்களை பெருமளவு குறைக்கக்கூடும்.
பள்ளிகள், கல்லூரிகள், பொது வெளிகள், பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு பெண்கள் ஆளாகின்றனர் என்பதை நாம் செய்தியில் பார்த்தோ அனுபவத்தினாலோ தெரிந்து கொள்கிறோம்.
பெண்கள் தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கும்போது அவர்களின் கனவுகளுக்கு இடையூறாக பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ, பணியிடங்களிலோ பாலியல் தொல்லைகளை சந்தித்தால் எவ்வளவு பெரிய கொடுமை அது?
விசாகா வழிகாட்டுதலின்படி பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். அதில் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வழக்குரைஞர் ஒருவரும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சினிமா துறையில் உள்ள பெண்களுக்கென இம்மாதியான பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்ற விமர்சனம் இருக்கிறது.
ஹாலிவுட் தொடங்கி தற்போது இந்தியா சினிமா, தென்னிந்தியா சினிமா, தொலைக்காட்சித் துறை என அனைத்திலும் தங்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்பட்ட தொல்லைகள் குறித்து பெண்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
திரைத் துறைகளில் மட்டும் அல்ல சிறு சிறு நிறுவனங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் பெண்கள் வெளிப்படையாகப் பேச வேண்டும்.
அதற்கு வழிகாட்டியாக ஊடகங்கள் இருக்க வேண்டும் ஆனால் அத்தகைய முக்கிய பொறுப்பில் இருப்பவர்களே அது குறித்து ஏளனமாக கேள்வி கேட்பதும், புகார் கூறுபவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதும் சரியன்று.
புகார் கூறுபவர்களை கேலி செய்யும் விதமாக மீம்களை தயாரிப்பது என்கிற போக்கும் ஆரோக்கியமானதாக இல்லை.
இன்னும் சில இடங்களில் பெண்கள் நெருப்பாக இருந்தால் ஏன் மீ டூ எழுகிறது என்பது போன்ற கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன.
இது பெண்களை பாராட்டுவதாக நினைத்து அவர்கள் கூறுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இதுவும் பெண்ணின் நடத்தை குறித்து மறைமுகமாக எழுப்பப்படும் கேள்விதான்.
இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது பெண்கள் அவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியில் சொல்ல. எனவே இம்மாதிரியான புகார்களை அணுகுவதில் ஆண்களுக்கும் பெரும் பங்குண்டு.
பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கினால் மட்டுமே அதற்கான தீர்வை எட்ட முடியும். எனவே காலம் காலமாக நீடிக்கும் இந்த பிரச்சனை குறித்து இப்போது பேசத் தொடங்கியுள்ளனர் என்பதை நாம் வரவேற்க வேண்டும்.
மீ டூ மூலமாக பெண்கள் மீது தொடுக்கப்படும் குற்றங்கள் அனைத்தும் குறைந்துவிடும் என்பதோ அல்லது இதனால் அனைத்துமே மாறிவிடும் என்பதோ பொருள் அல்ல. இதன்மூலம் பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டால் அதை வெளிப்படையாக கூற முன் வருவார்கள்.
இம்மாதிரியான தருணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளியாக சித்தரிக்கப்படும் நிலை மாறும்.
பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்கு தங்களின் பெயர் வெளியே வந்துவிடும் என்று தெரிந்தால் அச்சம் ஏற்படும். இது இந்த மீ டூ இயக்கத்தின் தொடக்கப்புள்ளி.
எனவே தற்போது பெரிதாக வெடித்துள்ள இந்த மீ டூ வை அழுத்தி வைக்கப் பார்க்காமல் அதன் மூலம் நாம் என்ன தீர்வை எட்டப் போகிறோம் என்பதை யோசிக்க வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முடிவுக்கு வராத வைரமுத்து விவகாரம்: இன்னொரு பெண் புகார்...?
மீடூ விவகாரம் எப்போது இந்திய இணையதளங்களில் காலெடுத்து வைத்ததோ அப்போதிலிருந்தே தவறிழைத்த பல பிரபலங்களின் மானம் கப்பலேறிக்கொண்டே வருகிறது.
வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியதும் அவ்விவகாரம் தமிழ் சினிமாத்துறையில் பூகம்பமானதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக பாடகி புவனா ஷேஷன் என்பவரும் வைரமுத்து தன்னை தவறாக எண்ணத்தில் அழைத்ததாக கூறி வைரமுத்து மீது குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து ஷேஷன் கூறுகையில் நான் பாதிக்கப்பட்ட விஷயத்தை வெளியில் சொல்ல என் மகன் தான் எனக்கு முதலில் தைரியம் தந்தான். அதன் பிறகுதான் இதை வெளியே சொல்ல எனக்கு துணிவு வந்தது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அவரின் சம்மதத்தோடுதான் உறவு வைத்துக்கொண்டேன் – எம்.ஜே அக்பர் பதிலடி
மீ டூ சர்ச்சையில் சிக்கி தனது அமைச்சர் பதவியை இழந்த எம்.ஜே. அக்பர் தன் மீது புகார் கூறிய அமெரிக்க வாழ் பெண் பத்திரிக்கையாளரான பல்லவி கோகாய் குறித்து கருத்து தெர்வித்துள்ளார்.
மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி, அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி.பு.காம்ப், போர்ப்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப் உள்ளிட்ட பலர் முன்னாள் பத்திரிக்கையாளரும் தற்போதைய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான எம்.ஜே.அக்பர் மீது பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்தனர்.அடுத்தடுத்த புகாரால் எம்.ஜே. அக்பர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
இதுபோலவே தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பெண் பத்திரிக்கையாளரான பல்லவி கோகோய், 23 வயதில் தான், அக்பருடன் இணைந்து பணியாற்றியபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கூறினார். அவரது பேட்டி அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிக்கையில் வெளியானது.
இதையடுத்து இந்த புகார் குறித்து தற்போது பதிலளித்துள்ள எம்.ஜே. அக்பர் ’நான் யாரையும் பாலியல் துன்புறுத்தல் செய்ததில்லை. பல்லவி கோகாயின் சம்மதத்துடனேயே அவரோடு உறவு வைத்துக் கொண்டேன். ஆனால் அந்த உறவால் என் குடும்ப வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டதால் அந்த உறவில் இருந்து விலகி விட்டேன்’ எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் எம்.ஜே. அக்பரின் மனைவி மல்லிகாவும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். ’20 ஆண்டுகளுக்கு முன்னால் தினமும் என் கணவருக்கு பின் இரவுகளில் பல்லவி கோகாயிடம் இருந்து அழைப்பு வரும். அதனால் எங்கள் குடும்ப வாழ்வில் பல பிரச்ச்னைகள் எழுந்துள்ளன. இப்போது பல்லவி எதனால் இப்படி பொய் சொல்கிறார் எனத் தெரியவில்லை’ என கூறியிருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|