ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

3 posters

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

Go down

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Empty தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

Post by சிவா Mon Oct 22, 2018 11:34 pm

First topic message reminder :


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 277927208083201














தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Empty Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

Post by சிவா Tue Oct 23, 2018 12:12 am

வேதம் மட்டுமில்லை! மற்ற சாஸ்திரங்கள், கலைகள் எல்லாவற்றையுமே ரக்ஷித்து அந்தந்தக் கலையைத் தொழிலாகக் கொண்ட பிற ஜாதியாருக்குப் போதிக்க வேண்டியது பிராம்மணனுக்கான தொழில். சமுதாயத்தின் அறிவை, பண்பாட்டைக் வளர்க்கிற இந்தப் பொறுப்பும் அவனுக்கு இருக்கிறது. யுத்த சாஸ்திரமாகிய தனுர்வேதம் உள்பட எல்லாவற்றையும் அவன் கற்று, அந்தந்தத் தொழிலைப் பாரம்பரியமாகப் பெற்றிருப்பவர்களுக்கு போதிக்க வேண்டும். இப்படி சகல தொழில்களும் இவனுக்குத் தெரிந்திருந்தும்கூட இவன் அவற்றில் எதையும் தானே செய்து அதனால் ஜீவனோபாயத்துக்கு வழி பண்ணிக் கொள்ளக்கூடாது என்பது சாஸ்திரம். இவன் அவற்றைப் பிறருக்குத்தான் உபதேசிக்க வேண்டும்; தானே செய்யக்கூடாது என்று விதி. எத்தனை லாபம் தருகிற தொழிலானாலும், சௌகரியமான தொழிலானாலும் இவன் அவற்றைச் செய்யக்கூடாது! வேத அத்யயனமும் (தான் படிப்பது; ஓதுவது) அத்யாபனமும் (பிறருக்கு படிப்பிப்பது; ஓதுவிப்பது) தான் இவனுடைய தொழில். மந்திர சித்திக்கு வேண்டிய மகா கடுமையான விதிகளை, விரதங்களை உபவாசங்களை அநுசரித்துக் கொண்டு இவன் ஜீவனை ரக்ஷித்துக்கொள்கிற அளவுக்கு மட்டுமே ஆஹார விஹாரங்களைச் சுருக்கிக்கொண்டு குடிசையில்தான் வாழ வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. இவன் வேறு தொழில் செய்து பணம் சம்பாதித்து, இந்திரிய சுகங்களில் விழுந்துவிடக்கூடாது. பணம் சம்பாதிக்கிற லட்சியம் இவனுக்கு இருக்கக்கூடாது. பரம தியாகியாக லோக க்ஷேமார்த்தமாக, வேத ரக்ஷணம், கர்மாநுஷ்டானங்கள் செய்து கொண்டே காலம் கழிக்க வேண்டும்.

இவன் பட்டினி கிடந்து சாகாமல் மற்றவர்கள் இவனை ரக்ஷிக்க வேண்டும். அத்யாவசியமாக உயிர் வாழ்வதற்கு என்ன அவசியமோ, அவற்றை இவனுக்குத் தந்து காப்பாற்ற வேண்டும். யக்ஞாதிகளுக்கு வேண்டிய திரவியங்கள் இவனுக்குத் தட்டில்லாமல் கிடைப்பதற்கு வசதி செய்து தர வேண்டும். மற்ற தொழில்களில் சம்பளம் கொடுக்கிறோம். ஒரு பண்டத்தை வாங்கினால் அதற்கு விலை கொடுக்கிறோம். அந்தந்தத் தொழில்களால், பண்டங்களால், நமக்கு ஒரு சௌகரியம் கிடைப்பதால் இப்படிச் செய்கிறோம். அதேபோல் சமூகம் முழுவதற்கும் மந்திர சப்தங்களாலும் யக்ஞ கர்மாநுஷ்டானங்களாலும் க்ஷேமம் ஏற்படுத்துகிறவர்களுக்கும் பிரதியாக, அவர்களுடைய, ஜீவனோபாயத்துக்கானதைச் செய்யத்தானே வேண்டும்? இதிலே சாஸ்திரங்கள், ‘பிராம்மணனுக்கு அரண்மனைக் கட்டிக்கொடு, பவுன் பவுனாக வாரிக்கொடு’ என்று சொல்லவில்லை. யக்ஞங்களில் திரவிய லோபம் இல்லாமலிருக்க அவனுக்கு வேண்டிய செல்வத்தையும் தர வேண்டியதாயிருக்கும். ஆனால் அவனுடைய தனி வாழ்க்கையில் துளிக்கூட ஆடம்பரமே இருக்கக்கூடாது! அவன் இந்திரியங்களை வாட வாட வைத்து, அதனால் கிடைக்கிற மந்திர ஸித்தியால்தான் லோக க்ஷேமத்தை உண்டு பண்ண வேண்டும்.

நடுநடுவே வேதத்தை எழுதிப் படிக்காமல், கேட்டுத்தான் பாடம் பண்ண வேண்டும் என்றேனல்லவா? அதற்குக் காரணம் சொல்கிறேன். வேதங்களின் சப்தம் லோகத்தில் இருக்க வேண்டியது முக்கியமாதலால் அது எழுத்தில் புஸ்தகமாக இருக்க வேண்டியதில்லை. இருக்கக்கூடாது. அது புஸ்தகமாக வந்துவிட்டதோ, அப்புறம் அதை மனப்பாடம் பண்ணி தினமும் ஓதுகிற காரியம் போயே போய்விடும்—இதில் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை. ‘விஷயம்தான் புஸ்தகத்தில் இருக்கிறதே! அவசியமேற்படுகிறபோது அதைப் பார்த்துக் கொண்டால் போச்சு. பொழுதைச் செலவழித்து மனப்பாடம் பண்ணுவானேன்?’ என்கிற அசிரத்தை வந்து விடும். இதற்கு சமீப காலத்தில் கிடைத்திருக்கிற ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். இப்போது ‘பஞ்சாங்காரன்’ (பஞ்சாங்கக்காரன்) என்று சிலரைச் சொல்கிறோம். ‘நான்காம் வர்ணத்தவர்களுக்கு அநுஷ்டானங்களைப் பண்ணி வைப்பதுதான் இவனுடைய தொழில்’ என்று நடைமுறையைப் பார்த்து நினைக்கிறோம். ஆனால், ‘பஞ்சாங்கக்காரன்’ என்ற பெயரைப் பார்த்தால், இது அவனுடைய முக்கியமான தொழில் இல்லை என்று தெரிகிறது. பஞ்சாங்கம் கணிக்கிறவன் எவனோ, அவனே உண்மையில் பஞ்சாங்கக்காரன். பஞ்சாங்கம் என்றால் என்ன? ஒரு நாளுக்குப் பஞ்ச (ஐந்து) அங்கங்கள் இருக்கின்றன. திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் என்று. ஒரு நாள் நல்ல நாளா இல்லையா, அன்றைக்கு என்னன்ன காரியம் செய்யலாம், செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதற்கு இந்த ஐந்தும் தெரிந்திருக்க வேண்டும். இந்த நாளில் கிரீன்விச் லாபரட்டரியில் பெரிய அஸ்ட்ரானமர்கள் உட்கார்ந்து கொண்டு, சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்களின் உதய அஸ்தமனங்களைக் கணக்குப் போடுகிறார்கள் என்றால், மூன்று நாலு தலைமுறைக்கு முன்வரையில் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த பஞ்சாங்கக்காரனுக்கு இந்தக் கணக்கெல்லாம் அத்துப்படியாகியிருந்தது. கிரகணம் எப்போது பிடிக்கிறது, விடுகிறது என்பதை அஸ்ட்ரானமர்களுக்குக் கொஞ்சம்கூடச் சளைக்காமல் கணனம் செய்கிற சாமர்த்தியம் இந்தப் பஞ்சாங்கக்காரனுக்கு இருந்தது. ஜோதிஷ சாஸ்திரத்தின் மூலம் இவன் இந்தக் காரியத்தைச் செய்தான். இவன் அன்றாடம் ஒரு சிறிய ஓலையில்—பஞ்சாங்கக்காரனுக்கு ‘குட்டைச் சுவடி’ என்றே இன்னொரு பெயர் இருந்திருக்கிறது—அன்றைய தினத்தின் பஞ்ச அங்கங்களையும் எழுதிக் கொண்டு வீடு வீடாகப்போய் அதைப் படிக்க வேண்டும். அதிலிருந்து ஜனங்கள் லௌகிக காரியம், மதாநுஷ்டானம் இரண்டுக்குமே அவசியமாக இருக்கிற திதி, வார, நக்ஷத்திர, யோக, காரணங்களைத் தெரிந்து கொண்டு பயனடைவார்கள். பஞ்ச அங்கங்களைக் கணித்து, வீடு வீடாகச் சொன்னதாலேயே ‘பஞ்சாங்காரன்’ என்ற பெயரும் ஏற்பட்டது.

இப்போது பஞ்சாங்காரர்கள் இந்தப் பெரிய சாஸ்திரத்தை அடியோடு மறந்து விட்டிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன? அச்சுக் கூடம் (Printing press) வந்தது. “பஞ்சாங்கம்” என்று ஒரு நாளுக்கு மட்டுமில்லாமல் வருஷம் முழுவதற்குமாகச் சேர்த்து புஸ்தகமாகவே அச்சுப் போட ஆரம்பித்தார்கள். புஸ்தகத்தில் வந்து விட்டது என்றவுடன், அதற்கு மூலமான சாஸ்திரத்தை மனப்பாடம் பண்ணி அப்பியாசம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே போய்விட்டது. ஆகக்கூடி இன்று பெயரளவில் மட்டும் பஞ்சாங்கக்காரர்கள் இருந்துகொண்டு, அவர்கள் தங்களுக்கு இந்தப் பெயர் ஏன் உண்டாயிற்று என்றுகூடத் தெரிந்துகொள்ளாத நிலையில் இருக்கிறதைப் பார்க்கிறோம். ஜோதிஷத்தில் ஒரு பாகமான பஞ்சாங்கம் என்ற பெரிய புராதன சாஸ்திரமே உதாசீனம் செய்யப்பட்டு, மறைந்து போகிற ஸ்திதி ஏற்பட்டிருக்கிறது.

வேதங்களை மட்டும் புஸ்தகத்தில் எழுதி வைத்துக் கற்றுக் கொடுக்கலாம் என்று வைத்திருந்தார்களோ, அதற்கும் இதே கதிதான் உண்டாகியிருக்கும். வேத சப்தங்கள் லோகத்தில் இருந்துகொண்டு, சமஸ்த ஜீவராசிகளுக்கு க்ஷேமத்தைக் கொடுப்பதற்கு இடமே இல்லாமல் போயிருக்கும்.

எழுதி வைத்துவிட்டால் அசிரத்தை வந்துவிடும் என்று நம் முன்னோர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வேதத்தை எழுதிப் படிப்பவன் (லிகித பாடகன்) அதமன் என்று வைத்தார்கள். தமிழிலோ வேதத்துக்கு ‘எழுதாக் கிளவி’ என்றே பெயர். ஸம்ஸ்கிருதத்தில் வேதத்துக்கு ‘ச்ருதி’ என்று ஒரு பெயர். ‘ச்ருதி’ என்றாலும் காதால் கேட்கப்பட்ட வேண்டியது, அதாவது எழுத்தில் படிக்கக்கூடாதது என்றே அர்த்தம். வாயால் சொல்லி, காதால் கேட்டு மனப்பாடம் பண்ணுவது என்பதால்தான் இது பகுதி நேர (part-time) வேலையில்லாமல் முழு நேர (whole-time) வேலையாயிற்று. ஒருத்தர் பாதம் பாதமாக சொல்லிக் கொடுப்பதும், சிஷ்யர்கள் ஒவ்வொரு பாதத்தையும் இரண்டு முறை ஸந்தை சொல்லுவதுமாக, வேத சப்தமானது சூழல் முழுதும் நிரம்பப் பரவிவந்தது. இப்படி எத்தனையோ ஆயிரம் தலைமுறைகள் பெரிய சமுத்திரமாக விரிந்து கிடக்கிற வேத சாகைகளை வாய்மொழியாகவே வாழ வைத்து இந்த நூற்றாண்டு ஆரம்பம் வரை கொண்டு வந்துவிட்டார்கள். இந்த லக்ஷம் காலப் பயிரை—நமக்கு பகவதாக்ஞையாக வந்த கடமையை—நாம் நாசம் செய்துவிட்டால் அதைவிடப் பாபம் வேறில்லை.

வேதம் போய்விட்டால், அதற்கப்புறம் பிராம்மணன் என்று தனி ஜாதியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இப்போது, ‘பார்ப்பானே வெளியே போ’ என்று சொல்கிற மாதிரி எங்கேயாவது, ‘குயவனே வெளியே போ; வண்ணானே வெளியே போ’ என்கிற வார்த்தைகளைக் கேட்டிருக்கிறோமா? மாறாகக் குயவர்களோ வண்ணார்களோ திடீரென்று ஓர் ஊரைவிட்டுப் போகிறார்கள் என்றால், மற்றவர்கள் அவர்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாவது இருத்தி வைத்துக் கொள்வார்கள். காரணம் என்ன? குயவனால், வண்ணானால் சமூகத்திற்குப் பிரயோஜனம் இருக்கிறது.

வேத ரக்ஷணத்தைச் செய்துகொண்டு, ஸத்வ குணத்தோடு படாடோபமில்லாமல் பிராம்மணன் இருந்து கொண்டிருந்த வரையில், மற்றவர்கள் இவனால் சமூகத்துக்குப் பெரிய பிரயோஜனம் இருக்கிறது என்று கண்டார்கள். இவனிடம் நிறைந்த அன்பும், மரியாதையும், விசுவாசமும் காட்டி வந்தார்கள். இன்று உள்ள மாதிரி துர்பிக்ஷமும் வியாதிகளும் இல்லாமல் அப்போதெல்லாம் சமூகம் சௌக்கியமாகவே இருந்தது என்றால், அதற்குக் காரணம் வேத சப்தமும் யக்ஞாதி கர்மங்களும்தான் என்பதை மற்ற ஜனங்கள் உணர்த்திருந்தார்கள்.

இப்படி ஒரு சமூகப் பிரயோஜனம் இவனுடைய கர்மாவிலிருந்து கிடைத்ததோடு மட்டுமில்லாமல், இன்னொரு பெரிய பிரயோஜனம் இவனுடைய வாழ்க்கையின் உதாரணத்திலேயே (personal example) அவர்களுக்கு உண்டாயிற்று. ஆசைகளைக் குறைத்து, சாந்தர்களாக, சகல ஜீவராசிகளிடமும் தயையோடு, ஸதா பகவத் ஸ்மரணையோடு, தங்களுக்கு உடனடியாக ஒரு லாபமும் தராமலிருந்தும், கர்மாக்களை ஏகப்பட்ட நியமங்களோடு அநுஷ்டிக்கிற தியாக சீலர்களாக, இப்படி ஒரு ஜாதி இருக்கிறதைப் பார்த்துப் பார்த்தே மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட பண்புகளிலும், ஆத்ம குணங்களுக்கும் ஸ்வபாவமாக இருந்த ஈடுபாடு அதிக மாயிற்று. தங்களால் முடிந்த அளவில், தங்கள் தொழில் இடம் கொடுக்கிற அளவில், அவர்களும் பல நியமங்களை, விரத உபவாஸங்களை மேற்கொண்டார்கள். பிராம்மணன் மற்ற ஜாதிக்காரர்களை எழும்பவொட்டாமல் அமுக்கி வைத்தான் என்றால் அது முழுத் தப்பு. தன் personal example-ஆல் இவன் மற்றவர்களும் தாங்களாகவே எழும்பி உயர்வை அடையச் செய்ய வேண்டும் என்பதுதான் சாஸ்திரம் இவனுக்கு அமைத்துக் தந்திருக்கிற வாழ்க்கை முறை.

வேதத்தை மற்றவர்கள் அத்யயனம் செய்யக்கூடாது என்று வைத்தால், அவர்களை இவன் அழுத்தி வைத்து விட்டான் என்று நினைப்பது சுத்தப் பிசுகு. வேத ரக்ஷணம் ஒரு (Life-time) ஆயுட்கால தொழிலானதைச் சொன்னேன். எந்தத் தொழிலையுமே அந்தப் பரம்பரையில் வந்தவன் மட்டுமே அநுஷ்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், போட்டி – பொறாமை வரும் என்பதுதானே விதி! – வேத ரக்ஷணம் ஒரு தொழில் ஆனபின் இதில் இன்னொருவரை விட்டால் தொழிலாக பங்கீட்டில் குளறுபடியும் கோளாறுகளும் தானே உண்டாகும்? இதனால் சமூகப் சீரமைப்பு குலையத்தானே செய்யும்? அந்தந்தத் தொழிலுக்கும் உயர்த்திதான். தன் தொழிலைவிட வேத ரக்ஷணம் உயர்ந்தது என்று ஏன் இன்னொருவன் நினைத்து இதற்கு வரவேண்டும்?

மற்றவர்கள் வேதத்தை அத்யயனம்தான் செய்யக்கூடாதே தவிர, அதிலுள்ள தத்துவங்களைத் தெரிந்து கொள்வதில் ஒரு தடையுமில்லை. ஆத்மாபிவிருத்திக்கு வேண்டியது இதுதான். லோகக்ஷேமத்துக்கு வேண்டிய வேத சப்த ரக்ஷணத்தை ஒரு தொழிலாக வைத்துக் கொண்டு, சிலர் மட்டுமே இருந்தால் போதும். ஆத்மாபிவிருத்திக்கான அதிலுள்ள அபிப்பிராயங்களை சகலரும் தெரிந்து கொள்ளலாம். அப்பர் ஸ்வாமிகள், நம்மாழ்வார் போன்ற பிராம்மணரல்லாதாரின் பாடல்களில் வேத வேதாந்த தத்துவங்கள் நிறைய இருப்பதைப் பார்க்கவில்லையா!

பிராம்மணர்கள் ஞானம், பக்தி இவற்றை ஏகபோக்கியம் (monopolise) பண்ணிக் கொண்டு மற்றவர்களை கீழே அமுக்கி வைத்திருந்தால் ஒரு அப்பர் ஒரு நம்மாழ்வார் மட்டுமில்லை, இன்னும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கால்வாசிப் பேரும், ஆழ்வார்களில் பலரும் தோன்றியிருக்க முடியுமா? பறக்குலத்திலிருந்து, குயவரிலிருந்து இப்படியே சகல ஜாதியிலிருந்தும் நாயன்மார்கள் தோன்றியிருக்கிறார்கள். தாயுமானவர், பட்டினத்தார் மாதிரி ஞானிகளை எங்கே பார்க்க முடியும்? ஸமீபத்திலேயே ராமலிங்க ஸ்வாமிகள் இருந்திருக்கிறார்கள். பக்தியிலும் ஞானத்திலும் இப்படி பிராம்மணர்களும் ஸ்தோத்திரம் செய்கிற மாதிரி மற்ற வர்கத்தார் உயர்வாக வந்தது மட்டுமில்லை; சிவாஜி போன்று பெரிய சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்து வேத தர்மத்துக்குப் புத்துயிர் ஊட்டிய ராஜாதி ராஜர்கள் நாலாம் வர்ணத்திலிருந்தே தோன்றியிருக்கிறார்கள். எனவே அமுக்கி வைப்பது, சுரண்டுவது (exploitation) என்பதெல்லாம் புதிதாகக் கட்டிவிட்ட கதைதான்.


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Empty Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

Post by சிவா Tue Oct 23, 2018 12:13 am


பிசகே இருந்திருக்காது என்று நான் சொல்லவில்லை. ஆனால் தப்பிதங்கள் நடப்பது எதிலுமே சகஜம்தான். பொதுவாக பிராம்மணன் சமூகநலனுக்காக நல்ல காரியங்களைச் செய்து கொண்டு, நல்லவனாக வாழ்ந்து, மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக (guide) இருந்தால்தான் இத்தனை யுகங்களாக மற்றவர்கள் எல்லோரும் இவனை மதிப்புடன் வாழ வைத்திருக்கிறார்கள்.

அந்தப் பிரயோஜனம் இவனால் இல்லை என்றவுடன் ‘பார்ப்பானே, வெளியேறு’ என்கிறார்கள்.

ஒரு நோக்கம் (purpose) இல்லாமல், வெறுமே மற்றவர்களுக்குப் போட்டியாக இவனும் பணத்தைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறான் என்றால், அப்புறம் இவன் பிராம்மணன் என்று தனியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இப்படி ‘பர்பஸ்’ இல்லாமல் பிராம்மண ஜாதி இருந்தால், அதை மற்றவர்கள் அழிப்பதற்கு முன்னால் நானே அழித்துவிட வேண்டும் போலிருக்கிறது. பிரயோஜனம் (utility) இல்லாமல் ஒரு வஸ்துவும் இருப்பதற்கு உரிமையில்லை. லோகத்துக்குப் பயன் இல்லாவிடில் பிராம்மண ஜாதி வேண்டியதே இல்லைதான்.

இப்போது ‘டோல்-கேட்’ என்று பல இடங்களில் சொல்கிறார்களே, இங்கே அநேகமாக ‘கேட்’ இருப்பதில்லை. பின் இந்தப் பெயர் ஏன் வந்தது என்றால், முன்பெல்லாம் அந்த எல்லையைத் தாண்டிப் போகிறபோது சுங்கம் வசூலித்து வந்தார்கள். அதற்காக ‘கேட்’ போட்டு வசூலிக்க வேண்டியவர்களை நிறுத்தி வைத்தார்கள். அப்புறம் இந்தச் ‘சுங்க’ வசூல் நின்று விட்டது. அது நின்ற பிற்பாடு ‘கேட்’ எதற்கு? ‘கேட்’டும் போய்விட்டது. பயன் (purpose) இல்லாமல் எதுவும் இருக்காது, இருக்கவும் கூடாது. இப்போது வேதம் இல்லாத பிராம்மணன் சுங்கம் இல்லாத டோல்கேட்டாகி விட்டான் என்றால், அப்புறம் இவனைத் தூக்கி எறியக்கூடாது என்று எப்படி நியாயம் கேட்கமுடியும்?

இப்போதிருக்கிற பிராம்மணன், தனக்கு ஏதோ தனி மரியாதை எதிர்பார்த்தானானால், இவனை துவேஷிக்கத்தான் வேண்டும்; இவனைத் தூஷிக்கத்தான் வேண்டும். ஆனால், துவேஷமும் தூஷணையும் நியாயமானதாக இருக்கவேண்டும். இவன் தன் தர்மத்தை விட்டதற்காகத் தூஷிக்க வேண்டுமே ஒழிய வேத தர்மமே தப்பு என்று அந்த பெரிய மூலதனத்தையே தூஷிக்கக்கூடாது. அந்த தர்மத்தை பிராம்மணன் மேற்கொண்டு நடத்துவதற்குத்தான், மற்றவர்கள் சகாயம் செய்ய வேண்டும். லோகம் நன்றாக இருக்க வேண்டுமானால், வேத ரக்ஷணம் நடக்கத்தான் வேண்டும்; இதையே பாரம்பரியத் தொழிலாகக் கொண்டவர்களும் இருக்கத்தான் வேண்டும் என்ற மனப்பான்மையை மற்றவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிராம்மணன் வேதத்தை விட்டதுபோல் மற்றவர்களும் வைதிக மதத்தில் நம்பிக்கையை விட்டுவிட்டால், அப்புறம் இவனை அவர்கள் துவேஷிப்பது நியாயமே இல்லை. வேதம் வேண்டாம் என்றால் அப்போது இவன் தன் தர்மத்தை-குலத் தொழிலை விட்டதுதான் சரி என்றாகி விடுகிறது. அந்தத் தொழில் போனபின் இவன் ஜீவனோபாயத்துக்கு வேறு தொழில் செய்துதானே ஆக வேண்டும். எனவே, இவன் மற்றவர்களுக்குப் போட்டியாக வந்துதான் ஆக வேண்டும்! ஆகையால், ‘வேத தர்மமும் கூடாது; ஆனால் பிராம்மணன் வேறு தொழிலுக்கும் வரக்கூடாது; இரண்டையும் எதிர்ப்போம்’ என்றால் அது பகுத்தறிவு இல்லை. வேதம் தப்பானது; வேதத்தைவிட வேண்டும் என்று சொன்னால் அதை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு வருகிறவனை வெறுப்பது நியாயமே இல்லை. ஒரு நாய் நரிகூட பட்டினி கிடந்து பார்க்கக் கூடாது என்பதுதான் மனுஷ்ய தர்மம். எல்லா மதங்களும் சொல்கிற தர்மம் இது. ஒரு மதமும் வேண்டாம் என்பவர்களும்கூட இப்படிப்பட்ட அன்பையும் தியாகத்தையும் சொல்லாமலிருக்கமாட்டார்கள். எனவே ஒருத்தனுக்குப் பாரம்பரியத் தொழிலும் கூடாது; அவன் வேறு தொழிலுக்கும் வரக்கூடாது, அவன் பட்டினி கிடந்து சாக வேண்டும் என்று நினைப்பது நியாயமில்லை.

பிராம்மணனை உண்மையான பிராம்மணனாக வேதத்தை ரக்ஷித்துக் கொண்டிருக்கப் பண்ணுவதே மற்றவர்கள் செய்ய வேண்டிய பெரிய உபகாரம். முன்பெல்லாம் நானே கேள்விப்பட்டிருக்கிறேன்; சில பிராம்மணர்கள், ‘நானும் நீயும் ஒன்றாகி விடலாம்’ என்று சொல்லிக் கொண்டு சேரிக்குப் போவார்கள். சேரி ஜனங்களோ, ‘வேண்டாம், வேண்டாம்! நீ உன் காரியத்தையே செய்து கொண்டிரு. அதுதான் உனக்கும் எனக்கும் நல்லது, இங்கே வராதே’ என்று சொல்லித் தங்கள் ஆஸ்தியான பானைகளைப் போட்டு உடைத்து அவர்களை வரமுடியாதபடி பண்ணுவார்களாம். காரியத்தில் பிரிந்திருந்தாலும், சமூகத்தில் கலந்து பழகாவிட்டாலும், மனசில் அன்புடன் அவரவரும் தங்கள் தொழிலைச் செய்து கொண்டு, பொது நலனைப் பேணவேண்டும் என்ற உணர்வு இந்த அளவுக்கு அதி சாமானியமான ஜனங்களுக்குக்கூட இருந்திருக்கிறது.

இப்போதும்கூட பொது ஜனங்கள் எல்லோருக்கும் உள்ளூற வைதிக சிரத்தையும் ஆஸ்திக்ய புத்தியும் போகவே இல்லை – அது போகவே முடியாது – என்பதுதான் என் அபிப்பிராயம். துவேஷப் பிரச்சாரம் இருக்கிறதே என்றால் அது ஏதோ அரசியல் (political) காரணத்துக்காக நடக்கிறது. உள்ளுக்குள் பார்த்தால், வேதம், அதன் சடங்குகள் வைதிக ஆச்சாரங்கள் எல்லாவற்றிலும் மக்களுக்குப் பயபக்தியும் விசுவாசமும் இருக்கவே செய்கின்றன. பிராம்மணன் மட்டும் கொஞ்சம் நேராகிவிட்டால் போதும். எல்லாத் துவேஷமும் போயே போய்விடும். மற்றவர்கள் தன்னை ஆதரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காமல் இவன் ஸ்வதர்ம உணர்ச்சியுடன் சாகவும் துணிய வேண்டும் என்று சொன்னேன். ஆனால் வாஸ்தவத்தில் இவன் எதிர்பார்க்காவிட்டாலும் அப்படிப்பட்ட துர்க்கதிக்கு இவனை நம் சமூகம் ஒரு நாளும் விடாது என்பதுதான் என் நம்பிக்கை. விட்டாலும் பரவாயில்லை என்று இவன் நம் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே என் கட்சி. மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் சரி, உபசரித்தாலும் சரி, கரித்துக் கொட்டினாலும் சரி, அவர்கள் நலனுக்காக இவன் வேதத்தைக் காப்பாற்றத்தான் வேண்டும்.

இத்தனை நாள் பிராம்மண சமூகத்துக்குச் சொல்கிறேனே இது மற்ற சமுதாயத்தாரையும் உத்தேசித்துத்தான். அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தர்மங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவர்களும் தெரிந்து கொள்ள ஆசையோடு இருக்கிறார்கள். விளக்கிச் சொன்னால் நம்பிக்கையோடு எடுத்துச் கொண்டு நன்றாக அநுஷ்டிப்பார்கள். ஆனால், அவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன் எனக்கு நானே அதற்கான யோக்கிதையை நிச்சயப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன். பிராமண சமூகம் எனக்கு விசேஷமாக கட்டுப்பட்டிருக்கிறது என்று பொதுவாக ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. மடத்தில் வைதிக அநுஷ்டானங்கள் நிறைய இருப்பதால் வேதத்துக்காக என்றே ஏற்பட்ட ஜாதியிடம் எனக்கு நிறைய பாத்தியதை இருப்பதாக – தப்பாகவோ, சரியாகவோ – ஒரு அபிப்பிராயம் பொதுவாக உண்டாகியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நான் மற்றவர்களுக்கு தர்மோபதேசம் செய்ய ஆரம்பித்தால், அவர்கள் அன்போடு பணிவோடு சிரத்தையோடு அதை எடுத்துக் கொள்வார்கள் என்றே வைத்துக் கொண்டாலும்கூட, இன்னொரு கேள்வியும் அவர்களுடைய மனசுக்குள் தோன்றலாம். “இவரை ரொம்பவும் ஆசிரயிக்கப்பட்ட பிராம்மணர்கள் ஒருவிதத்திலும் திருந்தக்காணோமே! இதே நிலையில் நமக்கு உபதேசம் பண்ண வந்துவிட்டாரே!” என்று தோன்றலாம். வாஸ்தவத்தில் எனக்கு எல்லாரும் ஒன்றுதான். பார்க்கப்போனால், பரம ஸ்ரேயஸ்கரமான வேதத்தை விட்டுவிட்ட பிராம்மணனிடம்தான் எனக்கு அதிருப்தி ஜாஸ்தி. இருந்தாலும், லோக அபிப்பிராயப்படி பிராம்மணர்கள் ஏதோ எனக்கு விசேஷமாக கட்டுப்பட்டிருப்பதாக ஏற்பட்டிருப்பதால், அவர்களிடம், ‘வேத ரக்ஷணத்தை மறுபடி முழு மூச்சோடு ஆரம்பியுங்கள்’ என்று ஓயாமல் ஒழியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதில் கொஞ்சத்தில் கொஞ்சமாவது பிராம்மணர்களான நீங்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்தால்தான், மற்றவர்களிடம் அவரவருக்கான தர்மங்களைச் சொல்வதற்கு எனக்கு வாய் இருக்கும். நல்லவைகளைத் தெரிந்து கொண்டு செய்வதற்கு ஆசையாக இருக்கிற மற்ற சமூகத்தார்களுக்கு நான் எனக்குத் தெரிந்த தர்மங்களைச் சொல்வதற்கு பிராம்மணர்கள்தான் சகாயம் செய்ய வேண்டும்-கூடிய மட்டும் நான் சொல்கிற வேத ரக்ஷணம்-கர்மாநுஷ்டானம் இவற்றை அநுசரிப்பதால்.

சகல ஜனங்களும்-ஜீவ ஜந்துக்கள் அத்தனையும் க்ஷேமமாக இருக்க வேண்டும். பரஸ்பர சகாயத்துக்காகவே ஜனங்கள் அவரவருக்கு ஏற்பட்ட தர்மங்களை உயர்வு தாழ்வு எண்ணமேயில்லாமல் பின்பற்ற வேண்டும். எல்லோருக்கும் தனதான்ய ஸம்ருத்தி, ஆத்ம க்ஷேமம் கிடைப்பதற்காகச் சிலரிடம் வேத சப்தம் இருந்தே ஆக வேண்டும். ‘மற்ற தொழில்கள் பாரம்பரியமாக வருவதில் நன்மையிருப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த வேதரக்ஷணம் என்று தனி ஜீவிய காலத் தொழில் ஒன்று எதற்காக இருக்க வேண்டும்?’ என்ற கேள்வியை ஆரம்பத்தில் எழுப்பினேன். இப்போது, முடிக்கிறபோது, மற்ற எந்தத் தொழில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவை ஒன்றுக்கொன்று கலந்தாலும் கலக்காவிட்டாலும் வேதரக்ஷணம் என்பதுதான் நிச்சயமாக ஒரு தனித் தொழிலாக இருக்க வேண்டும் என்று ஏற்பட்டிருக்கிறது.


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Empty Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

Post by சிவா Tue Oct 23, 2018 12:13 am


நான் பாட்டில் எங்கேயாவது கிராமத்தில் ஏகாந்தமாக இருந்து கொண்டு, பூஜையைப் பண்ணிக் கொண்டு, தியானம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம். மடம் நடப்பதற்கு இப்போது நீங்கள் பட்டணத்தில் தருகிற மாதிரி இவ்வளவு பணம் வேண்டுமென்பதேயில்லை. மடங்களுக்குப் பணபலம், ஆள்பலம் எல்லாமே ரொம்பக் குறைச்சலாக இருக்க வேண்டும் என்றுதான் என் அபிப்ராயம். பரிவாரம், சிப்பந்திப் பட்டாளங்கள் நிறைய வேண்டியதில்லை. மடத்தில் அதிபதியாக இருக்கப்பட்டவரின் யோக்கியதைதான் அதற்குப் பணம், பலம் எல்லாம்.

ஆதலால், நீங்கள் நிறையப் பணம் தருகிறீர்கள் என்பதற்காக நான் ஏகாந்தத்தைவிட்டு இங்கே டவுன்களுக்கு வரவில்லை. என்னிடத்தில் உங்களுக்கு நிரம்ப அன்பு, பக்தி இருக்கிறது. நீங்கள் கூப்பிட்டு நான் சம்மதித்து வந்திருப்பதில் உங்களுக்கு ரொம்பவும் சந்தோஷமாயிருக்கிறது. ஆனாலும், நான் வரவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டது, அந்த ஆசை நிறைவேறியதில் சந்தோஷப்படுவது இரண்டும் உங்கள் காரியம். பட்டணங்களுக்கு நான் வந்திருப்பதில் என் காரியம் ஒன்று இருக்கிறது. அது என்ன?

என்னவென்றால், பிராம்மணர்கள் வேதத்தை விடக்கூடாது என்று சொல்லி, தொடர்ந்து வேதரக்ஷணத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுமாறு பண்ணவேண்டும் என்றுதான் வந்திருக்கிறேன். நம்முடைய மதத்தின் சகல சித்தாந்தங்களுக்கும், வாழ்க்கை முறைக்கும் மூலமாக, வேராக இருக்கிற வேதம் இந்தத் தலைமுறையோடு நசித்துவிடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்ய வேண்டும் என்று அழுத்தங்கொடுத்துச் சொல்லத்தான் வந்தேன்.

அநாதியான வேத தத்துவம் அதன் மூல ரூபத்திலேயே என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஜோதியை, தீவர்த்தியை, தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற மசால்ஜி (சேவகன்) யாகப் பிராம்மணன் இருக்க வேண்டும். இப்போதுள்ள சமஸ்தப் பிரஜைகளுக்கும் எதிர்கால வாரிசுகளுக்கும் (posterity) இவன் செய்தே தீரவேண்டிய கடமை இது.

மற்றவர்களை அதட்டிக் கொண்டு, ‘தனக்கு உயர்த்தி கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிரம்மண்யம்’. சமூகத்தின் மசால்ஜி (peon) வேத விளக்கைப் பிடித்துக் கொண்டு வழிகாட்டுவதற்காகத்தான் அது இருக்கிறது. ‘விளக்கை அணைத்து லோகம் முழுவதையும், நம்மோடு மட்டுமில்லாமல் எதிர்காலம் முழுவதற்கும் இருட்டாகி விடாதீர்கள்’ என்று பிராம்மண சமூகத்தைக் கேட்டுக் கொள்வதற்காகத் தான் நான் நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

பட்டணங்களில்தான் இப்படி ஆயிரக்கணக்கில் ஜனங்கள் வருகிறீர்கள். அதனால், நான் எங்கேயோ உட்கார்ந்துகொண்டு, யாரோ ஒரு சிலரிடம் சொல்லி, அவர்கள் மற்றவர்களிடம் சொல்லுவது என்று சுற்றி வளைக்காமல், நேராக நானே நிறைய ஜனங்களுக்குத் தெரிவித்துவிட முடிகிறது. இதை உத்தேசித்தே, மடத்து ஆசாரங்களுக்குத் பட்டணங்களில் எத்தனையோ பங்கம் ஏற்பட்ட போதிலும் பட்டணங்களுக்கு வருகிறேன். நான் நினைத்ததை விடவும் ரொம்ப ஜாஸ்தி கூட்டமாக இருக்கிறது. சிரமப்படுகிறேன்; உங்களையும் சிரமப்படுத்துகிறேன்!

நீங்கள் எத்தனையோ செலவழித்து பேட்டைக்குப் பேட்டை பெரிதாகக் கொட்டகை, பந்தல் போட்டு என் பேச்சுக் கச்சேரியை கேட்க வேண்டும் என்றே எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவே வருகிறீர்கள். உங்கள் தப்பைச் சொல்லி மனஸைக் கஷ்டப்படுத்தாமல் கச்சேரி செய்துவிட்டுப் போய்விடலாம் என்றால் அதற்கு மனசு இடம் தரமாட்டேன் என்கிறது. உங்கள் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு உங்களுக்கும் ஊருக்கும் உலகத்துக்கும் எது நல்லது என்று எனக்கு தோன்றுகிறதோ அதைச் சொல்லாமல் போய்விட்டால் பிரயோஜனமே இல்லை என்று படுகிறது. அதனால்தான் ‘வேதத்தை ரக்ஷியுங்கள், பிராசீன தர்மங்களை அநுஷ்டியுங்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன். உங்களை அப்படி செய்யும்படி பண்ணுகிற சக்தி எனக்கு இருக்கிறதோ இல்லையோ. ‘செய்யுங்கள், செய்யுங்கள்’ என்று உங்கள் காதில் போடவாவது என்னால் முடிகிற மட்டும், இப்படிக் காதில் போட்டுக் கொண்டிருக்கலாமே என்றுதான் வந்திருக்கிறேன்.

எனக்குக் கனகாபிஷேகம், பீடாரோஹண உத்ஸவம் எல்லாம் ரொம்பவும் விமரிசையாகப் பண்ணுகிறார்கள். மிகுந்த அன்பினால் பண்ணிப் பார்க்கிறார்கள். இதற்காகக் கமிட்டி போடுகிறார்கள். வசூலிக்கிறார்கள். ராப்பகல் உழைக்கிறார்கள். ஆனால் இந்தக் கனகாபிஷேகம் மடத்துக்கு இனிமேல் வருகிற ஆச்சாரியார்களுக்கு சாசுவதமாக நடப்பது எப்படி? வேதம் இல்லாவிட்டால் மடம் எதற்கு மடாதிபதி எதற்கு? ஆகவே இப்போது என் கனகாபிஷேகத்துக்கும், பீடாரோகணத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணத்தில் காட்டி, அதற்காகக் கமிட்டி, திட்டம் எல்லாம் வசூல் செய்யுங்கள் என்கிறேன்.

வேத ரக்ஷணத்தை அடுத்த சந்ததிக்கு ஜீவிய கர்மமாக, ஆயுட்காலப் பணியாக வைக்க முடியாவிட்டால் கூடப்போகிறது. எட்டு வயசிலிருந்து ஆரம்பித்து அப்புறம் பத்து வருஷங்களுக்கு தினம் ஒரு மணி இளம்பிள்ளைகளுக்கு வேத மந்திரங்களிலும் பிரயோகங்களிலும் வகுப்பு நடத்தப் பேட்டைக்கு பேட்டை கூட்டுறவு அடிப்படையில் ஏற்பாடு பண்ணுங்கள் என்கிறேன். இதுதான் எனக்கு வாஸ்தவமான கனகாபிஷேகம், உத்ஸவம் எல்லாம்.

சிரமம் இல்லாமல் எந்தக் காரியமும் இல்லை. நாமாக ஒரு காரியத்தை இழுத்துப் போட்டுக் கொண்டால் அதற்காக எத்தனை கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் சகித்துக் கொள்கிறோம்? ஏதோ ஒரு கண்டத்தில் உள்ள ஏதோ ஒரு யூனிவர்ஸிடியில் ஏதோ ஒரு படிப்பு பார்த்தால் பெரிய உத்தியோகம். பணம் கிடைக்கிறது என்கிறபோது உடனே ‘ஸிலபஸ்’ வரவழைத்து விடுகிறோம் – அங்கே போய் பரிட்சை எழுத ஏற்பாடெல்லாம் செய்கிறோம். நமக்கென்றே ஏற்பட்ட தர்மத்தை கஷ்டம் இருக்கிறது என்று விட்டுவிடலாமா? கஷ்டம் இருந்தும் செய்தால்தான் ஜாஸ்தி பலன், ஜாஸ்தி பெருமை.

இப்படி உங்களை கஷ்டப்படுத்தத்தான் வந்திருக்கிறேன். நான் சொன்ன பிரகாரம் செய்வதாக நீங்கள் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை முடித்து வருகிற வரையில், இங்கேயே உட்கார்ந்து கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தால் என்ன என்று கூட நினைக்கிறேன். எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு யாரையாவது உபத்திரவப்படுத்தத்தானே வேண்டும்? இங்கேதான் உட்கார்ந்து உபத்திரவம் பண்ணுவோமே என்று தோன்றுகிறது.

பட்டணங்களில் பஜனை, கோயில் திருப்பணி, புராணப்பிரவசனங்கள் எல்லாம் ரொம்பவும் விருத்தியாகியிருப்பதைப் பார்க்க, சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இவற்றுக்கொல்லாம் வேர்-மூலமான வேதம் – மட்கிப் போகவிட்டால், இவை அப்புறம் எத்தனை நாளைக்கு ஜீவிக்க முடியும்? வேதத்தை அப்பனிடமிருந்து பெற்று பிள்ளைக்குத் தரவேண்டும் என்கிற பெரிய தர்மந்தான் அஸ்திவாரம். அதை மறந்ததாலேயே இப்படி மதம் ஆட்டம் கண்டிருக்கிறது. பிராம்மணன் வேதத்தை விட்டதால் இன்றைக்கு லோகத்தில் உள்ள அத்தனை கோளாறுகளும், கஷ்டங்களும், விபரீதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

ஜாதி அழிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. லோக க்ஷேமம் போகிறதே என்றுதான் கவலைப் படுகிறேன். வேத ரக்ஷணம் விட்டுப்போனால் இந்தப் பரம்பரையை மறுபடியும் உண்டு பண்ணவே முடியாதே என்றுதான் கவலைப்படுகிறேன்.

‘லோக க்ஷேமம்’ என்று சொன்னது வேத சப்தத்தாலும், யக்ஞாதி கர்மாக்களாலும் ஏற்படுகிற நன்மையை மட்டுமல்ல. வேதாந்தத்தைப் பார்த்தால்தான் சகல தேசங்களில் உள்ளவர்களுக்குமே பொதுப்படையான மகோன்னதத் தத்துவங்கள் கிடைக்கின்றன. இந்தத் தத்வங்களால் எல்லா தேசத்தாரும் ஆத்மாபிவிருத்தி அடைகிறார்கள். வேதாந்தத்தைப் பார்க்க வேண்டும் என்று இதர தேசத்தவர்களுக்கு எப்படி நாட்டம் வந்தது? அவர்கள் இங்கே வந்தபோது வேத ரக்ஷணமே ஜீவியப் பணி என்று ஒரு கூட்டம் இருந்ததால்தான். “இதென்ன. இப்படி வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிக்கும்படியான புஸ்தகம்!” என்று அவர்களுக்கு ஓர் ஆர்வம் பிறந்தது. அதை ஆராய்ச்சி செய்தார்கள். பல விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள். குறிப்பாக உலகம் முழுவதிலும் உள்ள பண்பாடுகளில் (Culture) இருக்கிற ஒற்றுமைகளை இந்த ஆராய்ச்சியால் தெரிந்து கொண்டார்கள். லோகத்துக்கெல்லாம் உபயோகம் என்பது மட்டுமில்லாமல், லோகம் முழுக்கவே வேத கல்ச்சர்தான் ஆதியில் இருந்தது என்பது என் அபிப்ராயம். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மற்றவர்களும் இந்த அபிப்ராயத்துக்கு வரலாம். எல்லாருக்கும் பொதுவாக ஒன்று இருப்பதாக அறிவதிலேயே சர்வதேச சௌஜன்யம் ஸர்வ மத சமரஸ பாவனை எல்லாம் வந்துவிடுகிறது. அது தவிர, இதன் தத்வங்களால் எந்த மதஸ்தர்களும் தங்களை உயர்த்திக் கொள்ளவும் முடிகிறது. வேதத்துக்காக என்றே சகலத்தையும் தியாகம் செய்கிற ஒரு கூட்டம் நம் தேசத்தில் இல்லா விட்டால், மற்றவர்களுக்கு அதில் எப்படிப் பிடிப்பு ஏற்படும்? உதவாத விஷயம் என்று நாமே ஒன்றை விட்டுவிட்டால், மற்றவர்களுக்கு அதன் தாத்பரியங்களை அறிவதில் எப்படி ஈடுபாடு உண்டாகும்? அதாவது, நம் அசிரத்தையால் வேதத்திலிருந்து பிறர் பெறக்கூடிய பிரயோஜனத்தை அவர்களும் பெற முடியாமல் தடுத்தவர்களாகிறோம். நம் தேசத்தின் சகல ஜாதியாரை உத்தேசித்து மட்டுமின்றி எல்லாத் தேச மக்களையும் உத்தேசித்து வேத பரம்பரையைத் தொடர்ந்து இருக்கப் பண்ண வேண்டியது இப்போதைய தலைமுறையின் பெரிய பொறுப்பு. இதைச் செய்யாமல் எனக்குக் கனகாபிஷேகம் செய்து பிரயோஜனம் இல்லை.

பின் ஏன், கனகாபிஷேகத்துக்கு ஒப்புக் கொண்டேன் என்றால், அப்படி ஒப்புக் கொண்டால்தான் இப்படி உத்ஸவக் கூட்டமாக நீங்கள் கூடுகிறீர்கள். நான் சொல்ல வேண்டியதைக் கேட்பதற்கு நிறைய ஆள் கிடைக்கிறீர்கள். கூட்டம் சேர்த்து என் காரியத்தை நடத்திக் கொள்வதற்காகத்தான் உங்கள் ஆசையைப் பூர்த்தி பண்ணினேன்.

இப்போதிருக்கிற துவேஷம், மனக்கசப்பு, கோபதாபங்கள் போக வேண்டுமானால், வேத ரக்ஷணம் என்கிற கடமையைப் பெற்றவர்கள் அதைச் செய்து, ஸாதுக்களாக, சாந்தர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும். இதன் பலன் மற்றவர்களுக்கு உடனே புரியாமல் போகலாம். ஹர்த்தால் வந்து கடைகளை மூடினால் உடனே சிரமம் தெரிகிற மாதிரி, வேத ரக்ஷணம் நிற்பதனால் ஏற்படும் சிரமம் சமூகத்திற்குப் தெரியாமல் போகலாம். ஆனால் உண்மையில் இது நின்று போவதால் ஏற்படுகிற நஷ்டமே பெரிசு. இது நாளாவட்டத்தில் புரிந்து விடும். வேத ரக்ஷணத்துக்காக என்றே சிலர் ஆயுசை அர்ப்பணித்து வாழ்வதில் பெரிய சமூகப் பிரயோஜனம் இருக்கிறது என்று எல்லாரும் காலப்போக்கில் உணர்வார்கள். கடமையில் பின்வாங்காமலே நின்றால், ஒரு நாள் இப்போது எத்தனைக்கெத்தனை துவேஷம் இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை பிரீதி உண்டாகத்தான் செய்யும்.

ஆதியில், மநு இருந்ததே தமிழ் நாட்டில்தான். இங்கேதான் வேத வித்யை, ஞானம், பக்தி எல்லாமே ரொம்பச் செழிப்பாக இருந்திருக்கிறது. த்ரவிடேஷு பூரிச: என்பார்கள். தமிழ்நாட்டில் தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்தான் என்றில்லை; மதாந்தரங்களைச் (அன்னிய மதங்களை) சேர்ந்த வேதநாயகம்பிள்ளை, மஸ்தான் சாகிப் போன்றவர்கள்கூட தமிழ்நாட்டு மண்ணின் விசேஷத்தால் பரம வேதாந்திகளாக இருந்திருக்கிறார்கள். வேத தர்மத்துக்கு ஆதி வீடே இதுதான். அந்தத்திலும் கலி முடிவில் வேத ரக்ஷணத்துக்காக அவதரிக்கப் போகிற கல்கி திராவிட தேசத்தில் திருநெல்வேலிச் சீமையில் தோன்றப்போகிறார் என்றுதான் சொல்லியிருக்கிறது. அங்கேதான் வேத தர்மத்தில் தவறாத பிராம்மணர் இருக்கப் போகிறார்; அவருக்குப் புத்திரராகக் கல்கி அவதரிக்கப் போகிறார் என்று புராணத்தில் சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட தேசத்தில் வைதிகத்துக்கு விரோதமே இருக்கக்கூடாது. இதைச் செய்வதற்கு விசை பிராம்மணர்களிடமேதான் இருக்கிறது என்று சொல்லத்தான் பட்டணத்துக்கு வந்திருக்கிறேன்.

மநுஷ்யனைத் தன் நிஜமான நிலைக்கு உயர்த்த எத்தனை கட்டுப்பாடுகள் வேண்டுமோ அத்தனையையும் சொன்னது நம் மதம்தான். தனி மனிதனுக்குக் பலவிதக் கட்டுப்பாடுகள்; சமூகத்துக்கும் பலவிதக் கட்டுப்பாடுகள். கட்டுப்பாடு என்றால் கரை போடுவது என்று அர்த்தம். கரையில்லாமல் ஒரு ஏரி இருக்க முடியுமோ! கட்டுப்படுத்தக் கூடாது என்று அப்படியே கரையை உடைத்துவிட்டால் ஜலம் முழுதும் பாழாகி ஊரும் பாழாக வேண்டியதுதான். ரொம்பவும் விசித்திரமாக இருப்பது என்னவென்றால், மிக அதிகமான கட்டுப்பாடுகள் உள்ள நம் மதத்தில்தான் இப்போது அடியோடு ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது!

இதில் சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பிராம்மணர்களைக் கொஞ்சம் கொஞ்சம் கட்டிப் போடலாம் என்றுதான் ஊர் ஊராகச் சுற்றி, ஓயாமல் உபந்நியாசம் பண்ணுகிறேன். பிராம்மணர்கள் அப்படி நினைக்கிறார்களோ இல்லையோ, நான்தான் அப்படி நினைக்கிறேனோ இல்லையோ – அவர்கள் எனக்கு மற்றவர்களைவிடக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள் என்று பொதுவில் பரவலாக அபிப்ராயம் இருக்கிறது. எனவே முதலில் இவர்களை இவர்களுடைய தர்மத்தில் கொஞ்சம் கட்டுபட்டிருக்கச் செய்தாலே, அப்புறம் மற்ற ஜனங்கள் எல்லோருக்கும் அவரவர்களுக்குச் சொல்லவேண்டியதை நான் உபதேசிப்பதற்கு எனக்கு ஒரு சக்தி உண்டாகும். ஆகவே என் வார்த்தைகளுக்குப் பிராம்மணர்கள் கொஞ்சம் கொஞ்சம் கட்டுப்பட்டு, இதர சமூகத்துக்கெல்லாம் நான் செய்யக்கூடியதை செய்வதற்கு சகாயம் பண்ண வேண்டும்.

சுருக்கமாக என்னச் செய்யச் சொல்கிறேன்? ஆசாரியாள் சரீரத்தை விடுவதற்குமுன் சாரமாக உபதேசம் செய்த ஐந்து சுலோகங்களில், எடுத்த எடுப்பில் என்ன சொன்னாரோ அதையேதான் சொல்கிறேன்: வேதோ நித்யம் அதீயதாம். இதையே மொழி பெயர்த்த மாதிரி ஔவையாரும் உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்கிறாள். ‘தினமும் வேதத்தை அத்யயனம் பண்ண வேண்டும்’ என்று ஆசாரியாள் ‘பாஸிடி’வ்வில் சொன்னதையே அவ்வை ‘நெகடிவ்’-ஆக ‘ஒரு தினம்கூட அத்யயனம் பண்ணாமல் இருக்க வேண்டாம்’ என்றாள். ‘ஓதுதல்’ என்று வெறுமே சொன்னாலே ‘வேதம் ஓதுதல்’ அதாவது ‘அத்யயனம்’ என்றுதான் அர்த்தம். எழுதாமல் படிக்காமல் வாயாலேயே ஓதவேண்டியது வேதம் என்பதால் இப்படிப் பெயர் வந்தது. வேதத்துக்கு ‘ஓத்து ‘என்றே பெயர். திருக்குறளிலும் இப்படி வருகிறது. வேதங்கள் ஈசுவரனை பூஜை செய்த வேதபுரி என்கிற ஸ்தலத்துக்கு ‘திருவோத்தூர்’ – ‘திரு ஓத்து ஊர்’ என்றே பெயர் இருக்கிறது. பிரம்ம சிருஷ்டியிலிருந்து நம் வரைக்கும் வந்துள்ள இந்த ஓதும் பணி சாசுவதமாக நடக்க வேண்டும் என்று உங்கள் எல்லோருடைய காதிலும் போடத்தான், இப்படிப் பட்டணம் பட்டணமாகத் திரிந்து கொண்டு, உங்களுக்கெல்லாம் செலவு வைத்து, சிரமங்களைத் தந்து கொண்டிருக்கிறேன்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Empty Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

Post by சிவா Tue Oct 23, 2018 12:14 am

இத்தனை ஆயிரம் பேர் கூடுகிற இடத்தில் சொன்னால் ஒரு பத்து இருபது மனசுக்குள்ளாவது அது இறங்கிக் காரியத்தில் பலிக்காதா என்று எனக்கு ஆசை.

பட்டண வாழ்க்கைக்கு வந்த பின்தான் தர்மவிருத்தமாக (முரணாக)ப் போகவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. இங்கேதான் நவநாகரிகத்தின் ஆட்டம் அதிகம். ஆகையால் இனிமேல் பட்டணங்களுக்குப் போவதில்லை என்று நடுவாந்தரத்தில் நான் ஒரு தீர்மானம் பண்ணிக் கொண்டு கிராமங்களிலேயே இருந்து வந்தேன். ஆனால் பட்டணத்துக்காரர்கள் ‘வரவேண்டும் வரவேண்டும்’ என்று ரொம்பவும் பிரீதியோடு வற்புறுத்தினார்கள். அப்போது அவர்களிடம், நம்முடைய பழைய வழிக்கு நீங்கள் கொஞ்சமாவது திரும்பினால்தான் வருவேன். உடனே, அத்யயனத்துக்குத் திரும்பாவிட்டாலும் பரவாயில்லை. அதற்காக் ஏற்பட்ட வெளி அடையாளங்களையாவது வைத்துக் கொள்ளுங்கள். வேதத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய தீவட்டிக்காரன் என்றால் அதற்குச் சில அடையாளம் சொல்லியிருக்கிறது. பியூன் என்றால் ஒரு டவாலி, யூனிஃபாரம் இருக்கிறதோ இல்லையோ? அப்படித்தான் இவனுக்கும் சிகை (குடுமி), பஞ்சகச்சம் இவைகளை அடையாளமாகச் சொல்லியிருக்கிறது. இவையெல்லாம் ‘நான் உசத்தி’ என்று காட்டுகிற (Superiority-க்கு) அடையாளம் (Symbol) இல்லை. நான் சமஸ்த ஜனசமூகத்துக்கும் சேவகன், வேதத்தின் சேவகன் என்று தெரிவிக்கவே அவை இருக்கின்றன. இந்த அடையாளங்களை நீங்கள் போட்டுக் கொண்டால்தான் “நான் பட்டணத்துக்கு வருவேன்” என்று நான் ‘கிராக்கி’ செய்து வந்தேன்.

நான் கிராக்கி செய்தது பலிக்கவில்லை. நடை உடை பாவனைகளை மாற்றிக் கொள்ள இஷ்டம் இல்லையோ? அல்லது துணிச்சல் இல்லையோ? ஆனால் என்னை வருந்தி வருந்திக் கூப்பிடுவதும் நிற்கவில்லை. கடைசியில், ‘நாம் சொன்னதை செய்யாவிட்டாலும்கூட நம்மை இவர்கள் கூப்பிடுவது நிற்கவில்லை. அதனால் இன்னமும் நம்மிடம் ஒரு பிரியம், அபிமானம், மரியாதை இருக்கிறது என்றுதான் அர்த்தம். சரி, இவர்கள் ஆசைக்குத்தான் விட்டுக் கொடுத்து, பட்டணத்துக்குப் போகலாமே. அங்கேபோய் இவர்களுக்கு நடுவிலேயே உட்கார்ந்து கொண்டு நம் ஆசையைத் திரும்பத் திரும்பச் சொல்லி ஏதாவது துளி பலிக்கிறதா என்று பார்ப்போமே! மடம் என்று ஒரு ஸ்தாபனம் (institution) இருப்பதே ஜனங்களின் தோஷங்களுக்கு நிவிருத்தி சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்துவதற்குத்தானே. நமக்குக் குறையாகத் தோன்றுவதை, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதானே நம் கடமை?’ என்று முடிவு பண்ணினேன். கிராக்கி பண்ணிக் கொண்டதை விட்டுவிட்டு மறுபடி பட்டணத்துக்குப் போக ஆரம்பித்தேன்.

ஜனங்கள் ரொம்ப சந்தோஷத்துடன் எனக்கு உபசாரம் பண்ணி, பேட்டைக்குப் பேட்டை கொட்டகை, வீதி பவனி எல்லாம் செய்கிறபோது, அவர்கள் மனசைப் புண்படுத்துகிற மாதிரி தோஷங்களைச் சொல்லலாமா? அவரவருக்கும் வாழ்க்கையில் எத்தனையோ சிரமங்கள், இப்போது லோகம் முழுதும் இருக்கிற தத்தளிப்பில் ஒவ்வொருவனுக்கும் உள்ள கஷ்டங்களுக்கு எல்லையே இல்லை. இதன் நடுவே கொஞ்சம் கஷ்டத்தை மறந்திருக்கலாம் என்று இங்கே வருகிறார்கள். அவர்களிடம் இது தப்பு, அது தப்பு என்று சொல்லி மனஸைப் புண்படுத்தலாமா? அல்லது ஏதோ வந்தவர்களெல்லாம் சந்தோஷப்படுகிற மாதிரியே (பேச்சுக்) கச்சேரி செய்துவிட்டுப் போய்விடலாமா?

அவர்கள் வாழ்க்கைக்கு, சமூக க்ஷேமத்துக்கு நல்லதாக எதையும் சொல்லாமல், தாற்காலிக சந்தோஷமாகக் கச்சேரி செய்வதென்றால் அதற்கென்றே சங்கீதக்காரர்கள் இருக்கிறார்கள். ஆகையால் என்னைக் கச்சேரிக்கு கூப்பிட வேண்டாம். நான் பணத்துக்குக் கச்சேரி செய்கிறேன் என்றால், அப்போதைக்கு சந்தோஷப்படுத்திவிட்டுத்தான் போக வேண்டும். ஆனால் பணம் வாங்க நான் வரவில்லை. மடத்துக்கு இவ்வளவு பணம் தேவையில்லை. அதிகமாகப் பணம் வந்தால் இன்னும் அதிகமாக ஸந்தர்ப்பணை, ஸதஸ் என்று நடத்தி உடனே செலவாகித்தான் போகிறது. எனவே இவ்வளவு பணம் இல்லாமலே கிராமங்களில் சுற்றிக் கொண்டு மடத்தை நடத்திவிடலாம். ஆனால் ஜனசமூகம் முழுவதற்கும் நல்லதை எடுத்துச் சொல்லப் பிரயத்தனம் செய்ய வேண்டும். மடத்தின் குறிக்கோள் (purpose) இதுதானே!

இப்படியெல்லாம் யோசித்துக் கடைசியில், “கேட்பவர்கள் காரியத்தில் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அது அவர்கள் விஷயம். அவர்களுக்குப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி, நம்-கடமை, ‘அப்பா, இது இதுகள் ஆத்ம சிரேயசஸுக்கும் லோகக்ஷேமத்துக்கும் நல்லது. நீ இவற்றைச் செய்ய உன்னாலான பிரயத்தனங்களைப் பண்ணிப் பாரப்பா’ என்று சொல்வதுதான்; இவ்விஷயத்தைத் திரும்பத் திரும்பக் காதில் போடுவதுதான் நம் ‘டியூட்டி (கடமை)’” என்ற முடிவிற்கு வந்தேன். இப்படி வெறும் வாய் வார்த்தையாக சொல்லுவதற்குமேல் நான் ஒன்றும் தண்டித்து, சிக்ஷை பண்ண முடியாது. எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்கிற கட்சிகளில்கூட ஒழுக்கக் குறைவுக்கு நடவடிக்கை (disciplinary action) என்று எடுத்து, சிலரைத் தீண்டாதார் மாதிரி வெளியே தள்ளி விடுகிறார்களே (expel) அம்மாதிரி பிரஷ்டம் (excommunicate) பண்ண எனக்கு அதிகாரமில்லை. அத்தனை அதிகாரம் ‘ரைட்’ நான் கேட்கவும் இல்லை. காதில் போடுவதுதான் என்னால் முடிந்தது. நான் கேட்கிற ‘ரைட்’ அதுதான். என்னால் முடிந்ததைச் செய்யாமலிருக்ககூடாது என்றே வந்திருக்கிறேன்.

எங்கேயோ யாரோ ஒருத்தர் நான் சொல்வதை எடுத்துக் கொண்டு ஆரம்பித்துவிட்டால் போதும். அதுவே துளித்துளியாக வளர்ந்துவிடும். கொஞ்சம்கூட நியாயமில்லாத இயக்கங்களையெல்லாம் பத்துபேர் கூப்பாட்டில் ஆரம்பித்து மகாபெரிசாக வளர்ந்துவிடவில்லையா? நல்லதற்கு இப்படிப் பத்துப்பேர் சேர்ந்தால் போதும்.

அப்படிப்பட்டவர்கள் கிடைப்பார்கள் என்று நம்பிக் கொண்டுதான் நானும் விடாமல் சொல்கிறேன். உங்களிடமெல்லாம் நான் ரொம்பவும் அதிருப்திப்படுவதாக நினைத்துத் துக்கப்பட வேண்டாம். நவீன வாழ்க்கை முறையின் சிக்கல், கோளாறு எனக்குத் தெரியாமலில்லை. அதிலே மாட்டிக் கொண்டால், விடுபடுவதில் உள்ள சிரமம் தெரிகிறது. இத்தனைக்கும் நடுவில் அங்கங்கே கும்பாபிஷேகம், பஜனை, பிரவசனம் என்று நீங்கள் நிறைய ஏற்பாடு செய்வதைப் பார்த்தால் – இவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் – சந்தோஷமாகவே இருக்கிறது. இவற்றைப் பார்த்தே, இவை எல்லாவற்றுக்கும் எது ஜீவாதாரமோ, உயிர் நிலையோ அந்த வேதரக்ஷண தர்மத்தை எடுத்துச் சொல்லலாம் என்று எனக்கே ஒரு நம்பிக்கை, தெம்பு வந்திருப்பதால்தான் இதையெல்லாம் சொல்கிறேன். சாஸ்திர விரோதமான தப்புகளுக்கு இப்போது நிறைய இடமிருந்தாலும், வருங்காலம் என்ன ஆகுமோ என்ற விசாரத்துக்கு நிறைய இடம் இருந்தாலும், க்ஷேமத்துக்கான அறிகுறிகளையும் அங்கங்கே பார்க்கிறேன், ‘எல்லாம் போய்விட்டது; பாக்கியிருப்பதும் போய்விடும்’ என்று அழாமல் வளர்ந்து வருகிற இந்த நல்ல அம்சங்களை மேலும் விருத்தி செய்து, வளர்க்க வேண்டியதையும் எடுத்துச் சொல்லி வருவதுதான் முறை; அப்படிச் செய்தால் தப்பு வழியில் போகிறவர்களுக்கும் நாளடைவில் க்ஷேம வழியில் புத்தி வரும்.

இந்த நம்பிக்கையோடு பழைய வழிமுறைகளைக் காதில் போடுகிறேன். ‘பழையது’ என்பதற்காகவே அதுதான் உயர்த்தி என்று சொல்லவேயில்லை. ஆனால் ‘பழையது’ என்பதாலேயே அது உதவாதது என்று ஒதுக்கிவிடவும் கூடாது. புதிசு, பழசு என்பதால் ஒன்று வேண்டும், வேண்டாம் என்பதேயில்லை. அதன் பிரயோஜனம் என்ன என்பதைப் பரீட்சித்துப் பார்த்தே எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது தள்ள வேண்டும். அல்லது இருக்கிற புதிசையும் எடுத்துக் கொள்வோம். தப்பாக இருக்கிற பழசைத் தள்ளுவோம். அப்படியே புதிசில் இருக்கிற கெட்டதுகளைத் தள்ளுவோம். பழசில் இருக்கும் நல்லதுகளை எடுத்துக் கொள்வோம். காளிதாசன்கூட இப்படித்தான் சொல்கிறான்.

ஆசையாகக் கூப்பிட்டு எனக்கு உபசாரம் செய்கிற உங்களிடம், முதலில் உங்களுடைய புது வழிகளில் இத்தனை கெடுதல் இருக்கிறது என்று சொல்ல எனக்கே மனசு வரவில்லைதான். மற்ற விஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்தேன். பக்தி, ஞானம், கலாச்சாரம், ஊர்க்கதை எல்லாம் சொன்னேன். அதெல்லாம் நல்ல விஷயங்கள்தான். ஆனாலும் அவை எல்லாம் கிளை, பூ, பழம், மாதிரி என்றால், அவற்றுக்கெல்லாம் ஆதாரமாக ஒரு வேர் இருக்கிறது – அது வேதம்தான். வேரான வேதரக்ஷ்ணம் இல்லாமல் வேறு எதுவுமே இல்லை. இதை விட்டுவிட்டு மற்றதைச் சொல்லிப் பயனில்லை. இந்த மூல கைங்கரியத்தைச் சொல்வதென்றால், குறைகளைச் சொல்லத்தான் வேண்டும். மற்ற விஷயங்களைப் பேசிக் கொஞ்ச நாளைக் கழித்தபின், இத்தனை நாள் உங்களில் ஒருத்தனாக பழகிவிட்டதால், எனக்கே உங்களிடம் சிநேகிதம், ஸ்வாதீனம் வந்துவிட்டது. குறையைச் சொல்ல முன்போலத் தயங்கவேண்டாம் என்று வேத விஷயத்துக்கு வந்திருக்கிறேன்.

இந்தக் காரியத்துக்குத்தானே நான் வந்திருப்பதே! என் காரியத்தை எடுத்த எடுப்பில் சொல்லலாமா? என்னை உபசரித்து சந்தோஷப்படுகிற உங்கள் காரியத்தை நீங்கள் முடித்துக் கொண்டுவிட்ட பிறகு, இனிமேல் என் காரியத்தைச் சொல்லலாம் என்று சொல்கிறேன். வேத ரக்ஷணம்தான் அந்தக் காரியம்.

இதற்காக, இத்தனை நாள் உங்களை இத்தனை சிரமப்படுத்தி, இத்தனை பணச்செலவு வைத்தது போதாது என்று விநோபா மாதிரி நானும் ஒரு “ஸம்பத்தி தானம்” கேட்கிறேன். அவரவரும் அத்யயனம் செய்து, தங்கள் பிள்ளைக்கும் செய்விக்க வேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இது அவசியம் செய்ய வேண்டியதுதான். அதைவிட அவசியமாக முதலில் செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு; அதாவது, இப்போது மூச்சைப் பிடித்துக் கொண்டு நடந்து வருகிற வேத பாடசாலைகள் மூடிப்போகாமல் அவற்றைத் தொடர்ந்து நடைபெறப் பண்ண வேண்டும். இதற்காக வித்யார்த்திகள் (மாணவர்கள்) அத்யாபகர்கள் (ஆசிரியர்கள்) இருவருக்கும் நிதி உதவி செய்ய வேண்டும். இன்னும் பல பாடசாலைகளை வைத்து வேத மூலத்தை சொல்லிக் கொடுப்பது, அப்புறம் அதன் அர்த்தத்தை – வேத பாஷ்யத்தை – சொல்லிக் கொடுப்பது, இவற்றில் பரீட்சை வைப்பது ஆகிய காரியங்களைச் செய்ய வேண்டும். படிக்கிற காலத்தில் வித்தியார்த்திக்கு ஸ்டைஃபண்ட் (உபகாரச் சம்பளம்) கொடுக்க வேண்டும். பரீட்சையில் பாஸ் பண்ணியவுடன் மார்க்கைப் பொறுத்துக் கணிசமான சம்பாவனை செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் வேதம் இருக்கும். இதற்கெல்லாம் மூலதனம் வேண்டும்.

இதற்காக சில டிரஸ்ட்கள் இருக்கின்றன. பலர் தனித்தனியாக பூதானம் செய்திருக்கிறார்கள். விநோபா மாதிரி பூதானம் வாங்கினேன். இப்போது உச்ச வரம்புகள் சட்டங்கள் வந்துவிட்டன. இனி நில உரிமைகள் எப்படியிருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதனால்தான் ‘ஸம்பத்திதான்’ கேட்கிறேன்.

அதாவது ஒவ்வொருவரும் மாஸா மாஸம் தங்கள் ஜன்ம நக்ஷத்திரத்தன்று என்னை நினைத்துக் கொண்டு (நான் தானே கொடுக்கச் சொல்லிக் கேட்கிறேன்!) ஒரு ரூபாயை ஒரு உண்டியில் போட்டுவிட வேண்டும். ஒரு வருஷம் ஆனதும் இந்த 12 ரூபாயை வேத ரக்ஷண நிதிக்கு அனுப்பிவிட வேண்டும். இப்படி அனுப்புகிறவர்களுக்கு இங்கே மடத்தில் நடக்கிற பூஜைப் பிரசாதம் – விபூதி, குங்குமம், மந்திராக்ஷதை – மாஸா மாஸம் அவர்கள் ஜன்ம நக்ஷத்திரத்தன்று அனுப்பி வைக்கப்படும். வருஷந்தோறும்* இந்த தர்மத்தைப் புதுப்பித்துக் கொண்டிருந்தால், சந்திரமௌலீசுவரப் பிரசாதமும் நிற்காமல் அகத்தைத் தேடி வந்துகொண்டிருக்கும்.

எத்தனையோ செலவு செய்கிறீர்கள். வரிகள் (tax) கொடுக்கிறீர்கள். இது நான் போட்டிருக்கிற டாக்ஸ். மாஸம் ஒரு ரூபாய் எனக்காகக் கொடுக்க வேண்டும். எல்லோரும் அப்படிச் செய்தால் பல துளி பெறு வெள்ளம் என்று வேத ரக்ஷணத்துக்கும் பெரிய பலம் கிடைக்கும்.

அடுத்த சந்ததிக்கு எப்படியாவது வேதத்தை ரக்ஷித்துக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆலோசனைதான் எனக்கு எல்லாவற்றையும்விட முக்கியமாக இருக்கிறது.

வேதம் ஏன் இருக்க வேண்டும் என்றால், முதலில் அந்த மந்திர சப்தம் அதிலுள்ள யக்ஞாதி கர்மாக்கள் லோகத்தில் இருந்து கொண்டிருந்தாலே சகலருக்கும் பெரிய க்ஷேமம். இதனால் மழை, தன தானிய சுபிக்ஷம் உண்டாவதோடு ஜனங்களின் எண்ணங்களும் உத்தமமானதாக ஆகும். இரண்டாவதாக உலகம் முழுவதற்குமான ஒரு மதமாக வைதிகமே இருந்திருக்கிறது என்பது சகல தேசத்தவருக்கும் தெரிந்து, இதனாலேயே ஓர் ஒற்றுமை, சாந்தி ஏற்பட வேண்டுமானால், நம் தேசத்தில் வேதத்துக்கென்றே வாழ்க்கையை அர்ப்பணித்த (dedicate) ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இப்படியாக இன்றைக்கும் என்றைக்கும் நம் தேசத்துக்கு மட்டுமின்றி லோகம் முழுவதற்கும் சுபிக்ஷத்தையும் ஆத்ம சாந்தியையும் உண்டாக்குவதற்காகத்தான், வேத ரக்ஷணத்தை அதி முக்கியமாகச் சொல்லி வருகிறேன்.

வேதம் படிக்காமல் அடுத்த தலைமுறையில் ஒரு பிராம்மணன்கூட இருக்கக்கூடாது. அதட்டி மற்றவர்களை அதிகாரம் செய்வதற்காக பிராம்மணன் இருக்க வேண்டும் என்று சொல்லவேயில்லை. நம் தேசம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒன்றாகியிருப்பதாக, இவனிடம் வந்திருக்கிற ஆதிமூலமான தர்மத்தை இவன் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்றே சொல்கிறேன்.

இங்கே நம் தேசத்தில் இப்படி ஒரு சின்ன கூட்டம் இருந்தால் லோகம் முழுவதும் எப்படி க்ஷேமமடையும் என்றால்… பவர் ஹவுஸ் இருக்கிறது. அங்கே நாலுபேர்தான் வேலை செய்கிறார்கள். ஆனால் ஊர் முழுக்கப் பிரகாசமாய் விடுகிறது. அந்த நாலுபேர் வேலை செய்யாவிட்டால் ஊரே இருட்டாகி விடுகிறது. இப்படியே லோக மங்கள தீபமான வேதத்தைத் தூக்கிப் பிடிக்க இங்கே கொஞ்சம்பேர் இருந்தால் போதுமானது. இதற்கான விதை முதலை எப்படியாவது காப்பாற்றித்தந்துவிட வேண்டும் என்கிற காரியத்துக்கே வந்திருக்கிறேன். இதற்காகவே எனக்குச் செய்கிற உத்ஸவங்களுக்கு ஒப்புக் கொண்டேன். இந்த உத்ஸவங்களில் போட்ட ‘ஜய ஜய சங்கர’, ‘ஹரஹர சங்கர’ கோஷம்தான் இத்தனை பேரை இங்கே என் பேச்சை கேட்க இழுத்து வந்திருக்கிறது. இப்படி ஒரு கோஷம், கீஷம் இருந்தால்தான் ஆள் சேர்ந்து அதன்மூலம் நாம் காரியத்தைப் சாதித்துக் கொள்ளப் பார்க்கலாம் என்றே ஒப்புக்கொண்டேன். எனக்கு உத்ஸவம் நடத்தியவர்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும்; கேட்பதற்கு பிரயாசையாவது படவேண்டும்.

சிரமத்தோடு சிரமமாக எனக்காகவும் கொஞ்சம்படுங்கள். உங்களுக்காக எத்தனையோ காரியம் செய்து கொள்கிறீர்கள் – ஆபீஸ், பொழுதுபோக்கு இப்படி பலவிதமான பிஸினஸ் பண்ணுகிறீர்கள். எனக்காக இந்த வேத ரக்ஷணத்தைப் பண்ணுங்கள்.

எனக்காக, உங்களுக்காக என்று வித்தியாசம் என்ன? நான், நீங்கள் எல்லாம் ஒன்றுதான். என் காரியம் உங்கள் காரியம்தான். வேதத்தை ரக்ஷித்துவிட்டால் அதுதான் எல்லோருக்கும் பரம சிரேயஸைத் தருகிற ஒரே காரியம். இதைத் செய்வதால் க்ஷேமம் உங்களுக்கு, பெயர் எனக்கு.


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Empty Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

Post by சிவா Tue Oct 23, 2018 12:14 am


இரண்டு கட்சிக்காரர்களின் இழுப்புக்கு நடுவே ஜனங்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாஸ்திரங்களின் வழியிலேயே போக வேண்டும் என்று சொல்கிற நாங்கள் ஒரு பக்கம் இழுக்கிறோம்; சாஸ்திரங்களை மாற்ற வேண்டும் என்கிற ‘சீர்திருத்தக்காரர்கள்’ இன்னொரு பக்கம் இழுக்கிறார்கள். நவீனப் படிப்புமுறை காரணமாகச் சிறு பிராயத்திலிருந்தே சீர்திருத்தங்கள் எனப்படும் மாறுதல்களை சிலாகித்துத்தான் ஜனங்கள் படித்திருக்கிறார்கள். படிப்பு இப்படி இருந்தாலும், பழக்கம் அடியோடு போகவில்லை. யுகாந்திரமாக வந்துள்ள நமது சாஸ்திர தர்மங்கள் துளித்துளி எல்லார் வீட்டிலும் சமூகத்தில் பழக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பழக்க வாசனை ஒரு பக்கமும், ஜனங்களை இழுக்கின்றன. இப்போது ஏற்படுத்திக் கொண்ட நாகரிக வாழ்க்கையில் திருப்தி இல்லை என்று எல்லோருக்கும் தெரிகிறது. பழைய காலத்தில் இருந்த நிம்மதி இன்று இல்லை என்று அனைவருக்கும் சர்வ நிச்சயமாகத் தெரிகிறது. இப்போது முன்னைவிட அதிகப் பணம் இருப்பதாக பாவனை இருந்தாலும், தரித்திரம் போகவில்லை என்று நன்றாகத் தெரிகிறது. ‘எல்லாம் சுபிக்ஷமாயிருக்கிறது; நம் தேவைக்கு அதிகமாகவே தானியம் விளைந்திருக்கிறது’ என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், எங்கே பார்த்தாலும் திகில் போகவில்லை. முன்னே இருந்த கூரை அல்லது ஓட்டுவீடு இப்போது மாடிக் கட்டிடமாகி விட்டது. அப்போதெல்லாம் ஏதோ நாலைந்து பாத்திரங்கள், பனைமட்டைப் பெட்டி, சுரைக்குடுக்கைகள் இவை மட்டுமே வீட்டுக்குவீடு இருந்தனவென்றால், இப்போது ஏராளமாக பண்டங்கள் வந்து நிரம்பிவிட்டன. இவையெல்லாம் நாகரிக வாழ்க்கையில் வந்தவைதான். ஆனாலும் அன்று இருந்த நிம்மதி இன்று இல்லவே இல்லை என்று தெரிகிறது.

பழைய ஆசாரப்படி நிம்மதியாக வாழ வேண்டும் என்று உள்ளுக்குள்ளேயே நினைக்கிறார்கள். ஆனால் வெளியிலே நாகரிகத்தையும், சீர்திருத்தப் பெருமையையும் விடுவதற்குத் துணிச்சல் இல்லை. இரண்டு வழியிலும் சேராமல் சங்கடப்படுகிறார்கள். இந்த இரண்டுங்கெட்டான் நிலைக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்; அநேகமாக எல்லாவீடுகளிலும் காந்தியின் படமும் இருக்கிறது. என் படமும் இருக்கிறது. ஆனால் காந்தி சொன்னாரே என்பதற்காக விதவா விவாஹம் பண்ணிக் கொள்கிற துணிச்சலும் முக்காலே மூணு வீசம் பேருக்கு வரவில்லை; நான் சொல்கிறேன் என்று குடுமி வைத்துக் கொள்கிற துணிச்சலும் இல்லை. பாவம்; ஜனங்கள் நிலை தெரியாமல் இரண்டுக்குமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். உறுதி வேண்டும்; சாஸ்திரத்தில் தளராத பிடிப்பு, தைரியம் அவசியம் வேண்டும்.

சாஸ்திர விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக் கொடுப்பது என்று வந்தால்கூடத் கடைசியில் வெறும் லௌகிக சௌகரியத்தை மட்டும் அநுசரிக்கும்படித்தான் ஏற்பட்டுவிடும். சிலர் நல்லெண்ணத்துடனேயே என்னிடம் வந்து, “தர்ம சாஸ்திரங்களை ரிஷிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். நீங்களும் ரிஷி மாதிரி இருக்கிறீர்கள். அதனால் காலத்துக்குத் தகுந்தபடி சாஸ்திரங்களை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று கேட்கிறார்கள். வயலில் களை எடுப்பதுபோல இப்போது கால நிலையை அநுசரித்துச் சில ஆசார தர்மங்களை எடுத்துவிட வேண்டும் என்பது இவர்கள் அபிப்ராயம். இப்போது சிலவற்றைக் களை என்று நினைத்து நான் எடுத்தால், இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பின் இன்னொருத்தர் வேறு சில ஆசாரங்களைக் ‘களை’ எடுக்கலாம். இப்படியே போய்க்கொண்டிருந்தால், எது பயிர், எது களை என்கிற வியவஸ்தை இல்லாமல் வயல் முழுவதுமே போய்விடும்.

ரிஷிகள் ஏதோ சொந்த அபிப்பிராயத்தில் சொன்னார்கள் என்பதற்காக தர்ம சாஸ்திரத்தை நாம் அநுசரிக்கவில்லை என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். என்றைக்கும் மாறாமல் சாசுவதமாக இருக்கும் ஈசுவர ஆக்ஞையான வேதத்தை அநுசரித்தே ரிஷிகள் இந்த விதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதால்தான் இவற்றைப் பின்பற்றுகிறோம். அதை உள்ளபடி ரக்ஷிக்கத்தான் பிரயத்தனப்பட வேண்டுமேயன்றி, மாறுதல் செய்வதற்கு என்று அதிகாரம் இல்லை.

சாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்தக் காலத்தில் சாத்தியமே இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. வியாபார வேகத்தில் வளர்ந்துவிட்ட லௌகிக நாகரிகத்தை விட்டுவிட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண்டால் யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காகப் பறக்கவேண்டியதில்லை. பணத்துக்காக பறக்காதபோது பகவத் ஸ்மரணத்துக்கு நிறைய அவகாசம் கிடைக்கும்; வாழ்க்கையில் நிம்மதியும், திருப்தியும், சௌக்கியமும் தன்னால் உண்டாகும்.

கர்ம அநுஷ்டானங்களைப் செய்யப் பணவசதி வேண்டியதேயில்லை. ஆடம்பரமாக செலவு செய்து பூஜை செய்யவேண்டும் என்பதில்லை. காய்ந்த துளசி தளமும், வில்வ பத்திரமும் பூஜைக்கு போதும். நாம் சாப்பிடுகிற அன்னத்தையே நைவேத்தியம் என்று காட்டினால் போதும். ‘விவாகமும் சாஸ்திர அநுஷ்டானம்தானே? அதற்கு ஏகமாகச் செலவாகிறதே!’ என்று கேட்கலாம். ஆனால் இப்போது நடக்கிற ஆடம்பரம் எதுவுமே சாஸ்திர சம்மதமான விவாகத்துக்குத் தேவையில்லை. குறிப்பாக, இப்போது விவாகங்களில் மிகப் பெரிய செலவாக உள்ள வரதக்ஷிணைக்குச் சாஸ்திர சம்மதமே இல்லை. சாஸ்திர சம்மதமான கர்மங்களுக்குப் பணம் முக்கியமாக இருந்தால், பணக்காரர்களுக்கு மட்டும்தான் நம் மதம் உரித்தானது என்றாகிவிடும். உண்மையில் அப்படி இல்லவே இல்லை.

அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நாலு வாழ்க்கைப் பயன்களில் இன்பத்தை மட்டும் தேடி அதற்காகப் பொருளுக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். இதை மாற்றி வீட்டுக்காக (மோக்ஷத்துக்காக) அறத்தின் (தர்மம்) மூலம் பாடுபட வேண்டும். வாழ்க்கையை எளியதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டாம்; அறங்களை அப்போது பின்பற்ற முடியும். அறத்தின் பயனாகக் கிடைக்கிற பேரானந்த வீட்டையும் பெறமுடியும்.


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Empty Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

Post by சிவா Tue Oct 23, 2018 12:15 am


சமய விதிகளில் சில லௌகிகத்தில் அசௌகரியம் உண்டாக்குகின்றன; தர்ம சாஸ்திர விதிகளில் சில சமூக வாழ்வில் (Social Life) கஷ்டம் உண்டாக்குகின்றன – என்பதைக் காரணம் காட்டிச் சீர்திருத்தக்காரர்கள் சாஸ்திரங்களை மாற்றுகிறார்கள்.

நமது தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையையும் லக்ஷியத்தையுமே இந்த சீர்திருத்தக்காரர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்கள் ‘சமூக வாழ்வு’ (Social life) என்கிறபோது, ஆத்மார்த்தமானதைக் குறிப்பிடவில்லை. புதுப்புது அரசியல் முறைகள், ஸயன்ஸ்கள், வியாபார மாறுதல்கள், பொருளாதாரம், ஃபாஷன்கள் இவற்றையே சமூக வாழ்வு என்கிறார்கள். இவை யாவும் பலவிதமான மாறுபாடுகளுக்கு ஆளாகிக்கொண்டிருப்பவை. வெறுமே லௌகிகத்தை மட்டும் சமூகம் குறிக்கோளாகக் கொண்டிருந்தால், சமூக வாழ்வுக்காக உள்ள விதிகளும் அதற்கேற்ப மாறலாம். ஆனால், நம் சாஸ்திரங்கள் சமூக வாழ்வை இப்படி லௌகிகமாக மட்டும் கருத்தில் கொண்டவை அல்ல, அவை ஆத்மார்த்தமானவை, மனிதனானவன் சம்ஸாரத்திலிருந்து விடுபடுவதற்கு வழி சொல்வதே சாஸ்திரத்தின் லக்ஷியம். லௌகிகமாக மட்டுமே அரசியல், அறிவு நூல்கள், பொருளாதாரம் ஆகியன உள்ளபோது தான் அவை மாறும். நம் பண்பாட்டிலோ வெறும் லௌகிகம் என்று எதுவுமே இல்லாமல் ராஜாங்கம், சமூக வாழ்வு, அறிவு சாஸ்திரம், பொருளாதாரம், கலைகள் ஆகிய எல்லாமும் ஆத்ம அபிவிருத்திக்கு உபாயங்களாகவே உள்ளன. ஆத்மார்த்தமான சத்தியங்கள் எந்நாளும் மாறுவதில்லை. மாறுகிற சமூகத்தை அந்த மாறாத சத்தியத்தில் நிலைப்படுத்துவதற்காக சாஸ்திரங்கள் விதித்த நியதிகளும் மாறாதவையே.

லட்சியம் லௌகிகமாக மட்டும் இருந்தால், அவ்வப்போது சமூக வாழ்வுக்கான விஷயங்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், ஆத்மக்ஷேமத்தையே லட்சியமாக வைத்து, அதற்கு அனுசரணையாக லௌகிக வாழ்வுக்கு விதிகள் செய்து தருகிற போது, இவ்விதிகளை மாற்ற முடியாது. தர்ம சாஸ்திர விதிகள் லௌகிகத்தில் அசௌகரியமாயிருக்கிறது என்று குறைபடுவதே பொருந்தாது. ஏனென்றால், தர்ம சாஸ்திரம் இகலோக சௌக்கியத்தை முக்கியமாகவே கருதவில்லை. இகலோகத்தில் பலவித அசௌகரியங்களை அனுபவித்தாவது பரலோக சுகம் பெறுவதற்கே அது உபாயம் சொல்கிறது. ஆனபடியால், அதை உலக ரீதியில் நமது சௌகரியப்படி மாற்ற வேண்டும் என்பது நியாயமில்லை.

சீர்திருத்தக்காரர்களை குற்றம் சொல்லிப் பயனில்லை. அவர்கள் இப்படிக் கருதுவதற்குக் காரணம். நம்முடைய கல்வி முறையே ஆகும். மற்ற தேசங்களில் அவரவருடைய மதத்துக்கும் படிப்பு முறைக்கும் இடையே முரண் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, நம் தேசத்திலோ வெள்ளைக்காரர்கள் காலத்தில் ஏற்பட்ட பள்ளிக்கூடங்கள் நம் மதத்தொடர்பே இல்லாமல் உருவாயின. ஜீவனத்துக்காக எல்லோரும் இந்தப் படிப்பிலேயே போய் விழும்படி ஆயிற்று. குழந்தைப் பருவத்திலேயே இவ்வாறு சொந்த சாஸ்திரங்களில் தொடர்பில்லாமல் அந்நிய முறையில் ஊறியதால், நம் புராதன சாஸ்திரங்களில் பற்றோ நம்பிக்கையோ ஏற்படவே வழி இல்லாமல் ஆகிவிட்டது. சாஸ்திரங்களின் உத்தேசம் இன்னது என்றே தெரியாததால், அவற்றின் விதிகளையும் மனம் போனபடி மாற்றலாம் என்று எண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

புராணங்கள் புளுகு மூட்டை, சாஸ்திரங்கள் குருட்டு நம்பிக்கையை வளர்ப்பவை என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்தே நம் குழந்தைகள் கேட்டு வருகிறார்கள். இவர்களுக்கு எப்படி நம் மத அநுஷ்டானங்களிலும் ஆசாரங்களிலும் பிடிப்பு ஏற்பட முடியும்?

சிறு பிராயத்திலிருந்தே ஆஸ்திக புத்தியை வளர்க்க வேண்டும். நமது மத அநுஷ்டானங்களை விடாமல் பற்றி ஒழுகி உத்தமமாக வாழ்கிற சிஷ்டர்களின் சங்கத்தில் குழந்தைகளைப் பழக்க வேண்டும்! இந்திரிய அதீதமான அநுபவம் பெற்ற ரிஷிகள் பிரத்யக்ஷ அநுபவத்தின்மீது தந்த கிரந்தங்களே ஆத்ம க்ஷேமத்துக்கு வழிகாட்டுபவை என்ற நம்பிக்கையை உண்டாக்க வேண்டும். இகலோக சௌக்கியம், சமூக வாழ்வு இவற்றையும் ஆத்ம க்ஷேமத்துக்கு உகந்த முறையில் ஒழுங்குபடுத்தித் தரவே ரிஷிகள் சாஸ்திரங்களைத் தந்தார்கள் என்ற விசுவாசத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் லௌகிக சௌக்கியத்துக்கும் மேலாக சமய விதிகளைக் கருதி அநுசரிக்கிற அறிவு நாட்டில் வளரும்.


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Empty Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

Post by சிவா Tue Oct 23, 2018 12:15 am


இப்போது பெரிய பெரிய தலைவர்களிலிருந்து ஆரம்பித்து தெருவில் போகின்றவன் வரை அத்தனை பேரும் ஜாதி எதற்கு என்கிறார்கள். நாமும்தான் இதைப் பற்றி பேசலாமே என்று ஆரம்பித்தேன். நன்றாக ஆலோசனைப் பண்ணிப் பார்த்தால், இப்படிப்பட்ட ஒரு பாகுபாடு இருப்பதுதான் எல்லாருக்கும் க்ஷேமம் என்று தெரிகிறது. சமூகம் முழுவதும் முன்னேறுவதற்கும் சரி, அவரவரும் சித்த சுத்தியடைந்து ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கும் சரி, இந்த ஏற்பாடே நிரம்ப சகாயம் செய்கிறது என்று தெரிகிறது.

இதை நான் சொல்கிறேன் என்பதற்காக ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை; சாஸ்திரங்கள் சொல்கின்றன என்பதற்காக ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை. “முன்னேற்றத்”துக்கு விரோதிகளான பிற்போக்குக்காரர்கள் என்றே எங்களை வைத்துவிட்டாலும் சரி, ஆனால் இந்தத் தேசம் எப்படியும் முன்னேற வேண்டும் என்பதுதான் ஒருத்தருக்கு லட்சியமாக இருந்தது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். தேசத்தில் இருந்த பேதங்களை, மூட நம்பிக்கையை எல்லாம் நீக்கி, பிற்பட்டவர்களை மற்றவர்களுக்குச் சமமாக ஆக்குவதற்காகவே அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட அந்த ஒருத்தரான காந்தி இந்த வர்ணாசிரம தர்மத்தை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு ரொம்பவும் சிலாகித்திருக்கிறார். இதைத் சொன்னாலாவது எல்லோரும் இந்த ஏற்பாட்டில் இருக்கிற நல்லதை எடுத்துக் கொள்வீர்களோ என்பதால் சொல்கிறேன். My Varnashrama Dharma (என் வர்ணாசிரம தர்மம்) என்றே காந்தி ஒரு வியாஸம் எழுதியிருக்கிறார். அதிலே,1 ‘இந்த வர்ணாசிரமம் என்பது மநுஷ்யனுக்குத் தானாக ஏற்பட்டது. ஸ்வாபாவிகமானது, இயல்பானது, ஒருத்தனுக்குப் பிறப்பாலேயே அமைந்துவிட்ட விஷயம் அது. இந்த இயற்கை விதியை ஹிந்து மதம் ஒரு ஸயன்ஸாக, சாஸ்திரமாக ஒழுங்குபடுத்தித் தந்திருக்கிறது’ என்றார். ‘இந்த ஏற்பாடு, தொழிலை நாலாகப் பிரித்துக் கடமைகளைத்தான் தருகிறதே தவிரச் சலுகைகளைத் தரவில்லை. ஒருத்தன் தனக்கு உசத்தி கொண்டாடிக் கொள்வதோ, இன்னொருத்தனை மட்டம் தட்டி வைப்பதோ ஹிந்து மதத்தின் உயிர்ப் பண்புக்கே விரோதமானது. அவரவரும் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டு வாழவும், சமுதாயத்தின் சக்தியை விரயமாக்காமல் சிக்கனமாக காக்கவுமே வர்ணாசிரமம் இருக்கிறது’ என்றெல்லாம் ரொம்பவும் சிலாகித்துக் சொல்லியிருக்கிறார். ‘தீண்டாமையைத்தான் நான் தீமை என்று சண்டை போடுகிறேனே ஒழிய, வர்ணாசிரமம் என்பது சயன்ஸ் மாதிரி ஒரு சத்தியத்தையே சொல்கிறது என்பதால் அதை ஆதரிக்கவே செய்கிறேன். ஒருத்தனுடைய பிறப்பை அடிப்படையாக வைத்துத் தொழில்களைப் பிரித்துக் கொடுக்கிற வர்ணாசிரம தர்மம் சமுதாய வாழ்வுக்கு ரொம்பவும் ஆரோக்கியமூட்டுவது என்பதே என் அபிப்பிராயம். இது ஏதோ குறுகிய புத்தியால் செய்த ஏற்பாடில்லை. இந்த ஏற்பாடு ஒரு தொழிலாளிக்குக்கூட பெரிய அறிவாளிக்குள்ள அந்தஸ்தைத் தருகிற அமைப்பு என்பதே என் அபிப்பிராயம்’2 என்றெல்லாம் சநாதனிகளைவிடப் பெரிதாக ஆதரித்துப் பேசுகிறார்.

‘ஆனாலும் அவர் செய்த பல காரியங்கள் ஆசார அநுஷ்டானங்களில் உள்ள வித்தியாசங்களைப் புறக்கணிப்பதாகவே இருந்தனவே; கலப்பு மணத்தைக்கூட அவர் ஆதரித்தாரே’ என்றால் அதற்குக் காரணம், ‘வர்ண தர்மம் ரொம்ப நல்லதுதான் என்றாலும் தற்போது அது சீர் குலைந்து போயாகிவிட்டது. இனிமேல் அதை மறுபடி புத்துயிர் கொடுத்துப் பழையபடி எழுப்ப முடியாது. சாரம் போனபின் சக்கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற மாதிரி, வர்ண தர்மப் படியான தொழில் பங்கீடு சிதறிப் போய்விட்ட இன்றைக்கு, வெளி வித்தியாசங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொள்வது மகா தப்பு’ என்று அவர் நினைத்துவிட்டார்.

நான் அப்படி நினைக்கவில்லை. நம்முடைய மதத்துக்கு முதுகெலும்பு மாதிரி இருக்கும் ஒரு ஏற்பாடு சொஸ்தப்படுத்த முடியாதபடி பாழாகிவிட்டது என்று விட்டுவிடுவதானால் மடமும் வேண்டியதில்லை, மடாதிபதியும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆணி வேரான தர்மம் போகவிட்டு, மதாசாரியன் என்று சொல்லிக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை நடத்துவது சமூகத்தைப் பிடுங்கித்தின்கிற காரியம்தான். வாஸ்தவமாகவே பழைய ஏற்பாடு போயே போய்விட்டது என்றால் மடம் வேண்டியதில்லை! கலைத்துவிட வேண்டியதுதான். ஆனால் இன்னமும் அப்படி ஆகிவிடவில்லை என்றே நம்பிக்கொண்டிருக்கிறேன். அல்லது இன்னும் கொஞ்சம் நாளில் அது அடியோடு அழிந்துபோகிறதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் நான் நினைத்துவிடவில்லை. இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு செய்ய வேண்டியதை முழு மூச்சோடு செய்தால் அதை புது தெம்போடு எழுந்திருக்கப் பண்ணலாம் என்றே நம்புகிறேன். மற்றத் தொழில் பிரிவினைகள் எப்படிக் கலந்து போனாலும் போகட்டும். எல்லாவற்றுக்கும் உயிர் நாடியாக இருக்கப்பட்ட வேதாத்யயனம் இன்னமும் அங்கங்கே ஒரொரு பாடசாலையில் பழைய வழி தப்பாமலே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது கணிசமான வசதிகளை செய்து கொடுத்து வேத வித்தைப் பரப்புவதற்காக எடுத்திருக்கிற பிரயத்தனங்களுக்கும் உற்சாகமான வரவேற்பு இருக்கிறது. நிறைய வித்யார்த்திகள் சேருகிறார்கள். அடுத்த தலைமுறையில் வேதம் என்று ஒன்று இருக்கப் பண்ணுவதற்கு ஒரு சின்னக் கூட்டமாவது நிச்சயமாக இருக்கிறது. இதை இருக்கப் பண்ணுவதும் மேலும் விருத்திப் பண்ணப் பாடுபடுவதும்தான் என் கடமை. இது ஒன்று இருந்துவிட்டால் மற்ற வர்ணங்களில் ஏற்படுகிற குழறுபடிகளால் உண்டாகும் தோஷங்களுக்கும் நிவிருத்தியாக வழி பிறக்கும். ஓர் உதாரணமாக (example), வழிகாட்டிகளாக (guide) பிராம்மணம்-அத்தனை பிராம்மணர்களும் இப்படி செய்யாவிட்டாலும், ஒரு சிலராவது–தன் பிராசீன வழியிலேயே உறுதியாக இருந்து கொண்டிருந்தால், இதுவே மற்றவர்களையும் அவரவர்களுக்கான தர்மத்தில் திருப்பி விடுகிற சக்தியாக (influence) இருக்கும்.

காந்தியும் என்னைப் போலவே வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்தவர்தான். ஆனால் அது, யதார்த்தத்தில் கெட்டுப்போய் விட்டது. அதை சீர்திருத்த முடியாது என்று நினைத்து அவர் நினைத்துக் கொண்டிருந்தார். நானோ இந்தத் தர்மம் மங்கிததான் போய்க் கொண்டிருக்கிறது என்றாலும், அடியோடு அணைந்துவிடவில்லை, இருக்கிற பொறிகளை ஊதி ஊதி நன்றாக மூட்டிவிட முடியும், என்று நினைக்கிறேன். ஏனென்றால் இதை விட்டால் சமுதாயத்துக்கு மகத்தான கஷ்டம்தான் வருகிறது என்பது நம் தேசத்தின் கடைசி ஐம்பது வருஷ சரித்திரத்தைப் பார்த்தாலே தெரிகிறது, வர்ண தர்மம் இல்லாத மற்றத் தேசங்களின் பெரிய நாகரிகங்களுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தாலும் தெரிகிறது.

மெஷின்கள், பெரிய ஆலைகள் வந்ததுதான் பழைய பாரம்பரியத் தொழில்கள் நலிவதற்கு முக்கியமான காரணம். எளிய வாழ்க்கையில் மெஷினுக்கு அதிக இடமில்லை. கைத்தொழில்களே செய்து எல்லோரும் எளிமையாக வாழ்ந்தால் பழைய ஏற்பாடுகளைக் காப்பாற்றி விடலாம். ‘மநுஷ சக்தியைக் கொண்டுதான் காரியங்கள் நடக்க வேண்டும். ராக்ஷஸ மெஷின்கள் கூடாது; வாழ்க்கையே ரொம்ப எளிமையாக இருக்க வேண்டும்; அத்யாவசியத் தேவைக்கு அதிகமாகத் துளிக்கூட டாம்பிகமே உதவாது’ என்றெல்லாம் காந்தியும்தான் ஓயாமல் சொல்லி வந்தார். இப்படி அவர் சொன்னதெல்லாம் வர்ண தர்மத்தை நிலைப்படுத்துவதற்கு அநுகூலம்தான்.

ஆனால் இப்போது சர்க்கார் திட்டங்கள், ஜனங்களின் மனப்பான்மை எல்லாமே இந்த எளிய வாழ்க்கை, கைத்தொழில்கள் இவற்றுக்கு வித்தியாசமாக ஆகியிருக்கின்றன. ஆனால் இன்னமும் வாயால் ‘காந்தி’ ‘காந்தி’ என்று ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டிருப்பதை மட்டும் விடக்காணோம். ஏனென்றால் அவர் நிச்சயமாகவே சமுதாயத்துக்கு நல்லதை நினைத்து, சமத்துவத்துக்காகப் பாடுபட்ட சீர்திருத்தவாதிதானே தவிர, பழசு என்பதற்காகவே சாஸ்திரங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிற ‘முரட்டு ஸநாதனி’ அல்ல என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கையிருக்கிறது. அதனால்தான் இப்படி நடுநிலையிலிருந்து பார்க்கப்பட்டவர் வர்ணாசிரமத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று எடுத்துச்சொன்னால், அது உங்களுக்கு மனஸில் கொஞ்சம் அழுத்தமாகவே பதியக்கூடும் என்று நினைத்தேன்.

இப்போது பொதுவாக ஜாதி வேண்டாம் என்று ஏன் சொல்கிறார்கள் என்றால் இதனால் உசத்த -தாழ்த்தி உண்டாகி, சண்டை ஏற்பட்டு விடுகிறது எனறு நினைப்பதால்தான். வாஸ்தவத்தில் உயர்த்தி-தாழ்த்தியே இல்லை என்பதாகச் சொல்கிறேன்.

‘வாஸ்தவத்தில் இருக்கிறதோ இல்லையோ, இப்படி ஒரு அபிப்ராயம் வந்துவிட்டதால் சண்டைகள் ஏற்பட்டிருப்பது நன்றாகத் தெரிகிறதோ, இல்லையோ? இந்தச் சண்டைகள் வேண்டாம் என்கிறோம்’ என்கிறார்கள்.

ஆனால் இப்படிச் சொல்வது, தலையை வலிக்கிறது என்பதற்காகச் சிரச்சேதம் பண்ணிக் கொள்கிற மாதிரிதான். பழைய தர்மத்துக்கு ஒரு தலைவலி மாதிரி சண்டை வருகிறது என்றால், உண்மையை எடுத்துச் சொல்லி, பக்குவமாக, ஹிதமாக, சாந்தமாக, விடாமல் விளக்கிச் சொல்லி – அதைப் போக்கடித்து, பழைய தர்மத்தை ஆரோக்கியமாக வைப்பது தான் சிகித்ஸை முறை, சண்டை வந்திருக்கிறதே, அதனால் மூலதர்மத்தையே கொன்றுவிடலாம் என்றால், அது அஸம்பாவிதம்.

ஒருவிஷயம் சண்டைக்கு ஆஸ்பதமாக இருக்கிறது என்ற ஒரு காரணத்துக்காக, அந்த விஷயத்தையே அழித்துவிட வேண்டும் என்றால் லோகமே நடக்க முடியாது. லோகத்தில் எதையெடுத்தாலும் கட்சி – பிரதி கட்சி இருக்கத்தான் செய்யும்; அபிப்பிராய பேதம் வரத்தான் செய்யும். அப்படியானால் ஒவ்வொரு விஷயமாக அழித்துக் கொண்டே போவதா?

இப்போது குறிப்பாக இரண்டு சமாச்சாரங்களால் ஏகப்பட்ட சண்டை உண்டாகி வருகிறது. ஒன்று, பாக்ஷை; இன்னொன்று, கொள்கை (ideology) இதற்காக பாக்ஷையே வேண்டாம், கொள்கையே வேண்டும் என்று ஆக்கிவிடுவதா?

இப்போது இந்தத் தேசத்தில் வந்திருக்கிற பாஷைச் சண்டை மாதிரி எங்கேயும் பார்த்ததில்லை. ஜாதிச் சண்டையெல்லாம் இதனிடம் உறைபோடக் காணாது என்கிறமாதிரி அங்கங்கேயும் வெறிக் கூத்தாகப் பார்த்துவிட்டோம். தமிழனுக்கும் தெலுங்கனுக்கும் சண்டை, ஹிந்திக்காரனோடு ‘உரிமைப்போர்’. பெங்காலிக்கும் பீகாரிக்கும் சண்டை, கன்னடியனுக்கும் மராட்டியக்காரனுக்கும் சண்டை, ஹிந்திக்கும் இங்கிலீஷுக்கும் சண்டை என்று தேசம் முழுவதும் கசாமுசா என்று ஆனதைப் பார்க்கிறோம். பாஷை விஷயம் வாய்ச்சண்டையாக இல்லாமல் கையும் ஓங்கி அசல் சண்டையாகவே ஆகியிருக்கிறது. ‘பல பாஷைகள் இருப்பதால்தான் இப்படிச் சண்டைகள் வருகின்றன. பாஷைகளையே அழித்து விடலாம், ஊமையாகி விடலாம்’ என்றால் இதற்குப் பரிகாரமாகுமா?

இன்னொன்று; எந்தக் கொள்கை (ஐடியாலஜி)யின் பேரில் ஆட்சி இருக்க வேண்டும். ராஜாங்கம் அமைக்க வேண்டும் என்பதற்காக நடக்கிற சண்டைகள் கொஞ்சமல்ல. இதிலே கம்யூனிஸம், காபிடலிஸம் என்பது பெரிய பிரிவு – பெரிய சண்டைக்கு இடமாகி, லோகம் முழுக்க கண்டத்துக்குக் கண்டம் பரவியிருக்கிறது. தினம் பேப்பரைப் பார்த்தால் சின்னச் சின்ன தேசங்களையும் இந்தச் சண்டை விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது. உலக யுத்தம் என்று மூளாமலே, எத்தனையோ தேசங்களில் அன்றன்றும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் அநியாயமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ-காபிலிடசச் சண்டை தவிர அங்கங்கே மானார்கி (முடியரசு) விழுந்து குடியரசு வருவதும், மிலிடரி ஆட்சி, டிக்டேடர்ஷிப் (சர்வாதிகாரம்) என்று வருவதும், அவைகளுக்காகப் பலபேர் பலியாவதும், இந்த ‘ஐடியாலஜி’யால்தான். எல்லோரும் பொதுவாகத் தங்கள் கொள்கையை ஜனநாயகப் பண்பு (டெமாக்ரஸி) என்று மட்டும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உள்ளூற இருக்கிற வித்தியாசங்களோ பெரிதாக இருப்பதால்தான் இத்தனை சண்டை ஏற்படுகிறது.

சண்டையிருக்கிறதே என்பதற்காக ஒரு ‘ஐடியாலஜி’யும் வேண்டாம் என்றால், ராஜாங்கம் என்பதே ஒவ்வொரு கொள்கையை உடையவர்களால் ஏற்படுவதுதானே? அரசியல் கொள்கை ஒன்றுமே வேண்டாம் என்றால், சர்க்காரே வேண்டாம். என்றல்லவா ஆகும்? அப்படியானால் சர்க்கார் என்ற அமைப்பையே அடித்துவிட்டு மிருகங்கள் மாதிரி ஆகிவிடுவதா? பாக்ஷைச் சண்டையிருப்பதால் பாஷையே வேண்டாம், கொள்கைச் சண்டையிருப்பதால் கவர்மெண்டே வேண்டாம் என்று ஒப்புக் கொண்டால், ஜாதிச் சண்டை – மதச் சண்டைகள் இருப்பதால் ஜாதி மதமும் வேண்டாம்தான். ஆனால் அப்போது இன்னொரு படி மேலே போய்ப் பார்த்தால், நாம் எல்லோரும் இருப்பதால்தானே சண்டை போட்டுக் கொள்ள முடிகிறது. அதனால் நாமே… (பேசவொண்ணாமல் ஸ்ரீ பெரியவர்கள் சிரித்து விடுகிறார்கள்).

ஆக, பரிகாரம் என்னவென்றால் சண்டைகளைத் தீர்ப்பதுதானே தவிர, மூல தத்துவத்தையே தீர்த்துக் கட்டி விடுவதல்ல.

இப்போது ஜாதியே கூடாது என்று பெரிதாகச் சொல்கிறார்களே தவிர, ‘எலெக்ஷன்’ என்று வந்துவிட்டால் அங்கே ஜாதிதான் முக்கியமாகி விடுகிறது. சகல கட்சிகளும் ஜாதியை வைத்துதான் ‘வோட்’ வாங்கக் காரியம் நடந்துகின்றன. ‘ஜாதியே வேண்டாம்’ என்பது உண்மையில் ‘ஒரு ஜாதி மட்டும் வேண்டாம்’ என்பதற்காகத்தான் இருக்கிறது.

வாஸ்தவத்தில் தனக்கென ஒரு சமூகப் பொறுப்பு இல்லாமலே பெயரளவில் மட்டும் இருக்கிற ஜாதிகளை வெறும் சுயாபிமானத்துக்காக வளர்ப்பது நியாயமே இல்லை. சமூக க்ஷேமத்துக்காகவே ஒவ்வொரு கூட்டத்தாரிடம் பாரம்பரியமாக ஒவ்வொரு காரியத்தைக் கொடுத்து வளர்ப்பதுதான் எல்லோருக்கும் நல்லது. முக்கியமாக சப்த விசேஷம், தத்வார்த்தம் இரண்டாலும் உயிர்க்குலம் முழுவதற்கும் நன்மை செய்கிற வேதத்தை ஓதிக்கொண்டு, அதிலிருக்கும் கர்மாநுஷ்டானங்களைச் செய்வதையே, வாழ்க்கைப் பணியாக (life work) கொண்ட ஒரு கூட்டம் இந்தத் தேசத்தில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.

ஜாதியிருப்பதால்தான் உயர்த்தி-தாழ்த்திச் சண்டை என்று புது நாகரிகக்காரர்கள் நினைத்தாலும், இந்த உயர்த்தி தாழ்த்தி அபிப்ராயம் அடியோடு போக வேண்டும் என்பதற்காகவே நான் இந்தத் தர்மம் இருந்தாக வேண்டும் என்கிறேன். ‘நாம் இப்படிப் பிறந்தோமா? சரி, இது ஈசுவரச் சித்தம். ஈஸ்வராக்ஞையால் நமக்கு இந்தக் காரியம் லபித்திருக்கிறது. இதைச் செய்து நம்மாலான சமூக க்ஷேமத்தைச் செய்வோம். இன்னொருத்தனுக்கு இன்னொரு காரியம் பாரம்பரியமாக வந்திருக்கிறது என்றால், அது அவனுக்கு ஏற்பட்ட ஈசுவர ஆக்ஞை. அவரவரும் அதைச் செய்து ஈச்வரார்ப்பணம் பண்ணுவோம்’ என்ற மனோபாவம் ஏற்பட்டுவிட்டால், அப்புறம் ஒரு காரியம் உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்று நினைப்பதற்கு இடமேயில்லை அல்லவா? இந்த மனோபாவம் உண்டாகத்தான் நாம் பிரயத்தனம் செய்ய வேண்டும். பிரசாரம் செய்ய வேண்டும்.

பெரிய பிரயத்தனம் முதலான பிரசாரம் என்னவென்றால் நாமே அப்படி வாழ்ந்து காட்டுவதுதான். அப்போது வாய்ப்பிரசாரமே தேவைக்கூட இல்லை. ஏற்கெனவே ஜாதி முறையால் உயர்வு-தாழ்வு வந்திருந்தால் அது மூல தத்துவத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாததன் கோளாறுதான். இந்தக் கோளாறுகூடப் போகிற மாதிரி இப்போது நாம் இந்த தர்மத்தைக் குற்றமில்லாமல் அநுஷ்டித்து வளர்க்கச் சங்கற்பம் செய்து கொள்ள வேண்டும்.

‘ஜீவனம், ஜீவனம்’ என்று எப்போது பார்த்தாலும் பணத்தின் ஞாபகமாகவே இருப்பதுதான் இப்போது ஜாதி தர்மம் போனபின் நாம் பார்க்கிற நிலை. 70, 75 வருஷம் முந்தி வரைக்கும் எவனுக்குமே இப்படி ஜீவனத்தின் ஞாபகம் இருக்கவில்லை. கடமையின் ஞாபகம்தான் இருந்தது. ஜீவனமே குறி என்றால் யார் யாரிடம் அதிகப் பணமோ, பெரிய பதவியோ போகிறதோ அவர்களைப் பார்த்து மற்றவர்கள் அசூயைப் படவேண்டியதுதான்; சண்டை போட வேண்டியதுதான். அவனவனுக்கும் அதது கடமை என்கிறபோது, அதில் உயர்வு-தாழ்வு இல்லவே இல்லை. ஆனால் பணம் குறிக்கோள், பதவி குறிக்கோள் என்றால் அதிகப் பணம் சேர்க்கிறவன் உசத்தி, மற்றவன் தாழ்த்தி; பெரிய பதவியில் வருகிறவன் உயர்த்தி, மற்றவன் தாழ்த்தி, என்ற பேத அபிப்ராயங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அதாவது வர்ண தர்மத்தில் வாஸ்தவத்தில் இல்லாத ஏற்றத் தாழ்வு, அது எடுபட்டு போனால்தான் உண்டாகிறது. அதனால் ஜாதிகள் எல்லாமே போய் ஜாதிச் சண்டை போய்விட்டாலும் வேறுவிதத்தில் வகுப்புப் பூசல் (Class conflict) ஏற்படத்தான் செய்யும். இதைத்தான் பிரத்யக்ஷமாகவே நன்றாக அனுபவித்து வருகிறோம்.

உயர்த்தி – தாழ்த்தியே இல்லாமல், சண்டையே இல்லாமல் எல்லோரும் அரன்குடி மக்களாக அன்போடு, ஐக்கியத்தோடு, சௌஜன்யத்தோடு, பரஸ்பர விசுவாசத்தோடு, பரஸ்பர சகாயம் செய்துகொண்டு எங்கேயும் சாந்தியும் சந்தோஷத்தையும் உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே பழைய தர்மங்களை நலியாமல் காப்பாற்றும்படி சொல்கிறேன். இந்த லட்சியத்தில் நாம் கொஞ்சம் அடி எடுத்து வைத்தால் ஸ்வாமி கை கொடுப்பார். அவரைத்தான் பிரார்த்தனை பண்ணுகிறேன்.


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Empty Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

Post by சிவா Tue Oct 23, 2018 12:16 am


நம்முடைய மதம் என்பது சைவம், வைஷ்ணவம் என்று இரண்டு பெரிய பிரிவுகளாக இருக்கின்றது. ‘இதை ‘இரண்டு மதம் என்று சொல்வதா, ஒரே மதந்தான் என்று சொல்வதா?’ என்று சந்தேகம் வரும்.

கிறிஸ்துவ மதத்திலும் காத்லிக், ப்ராடெஸ்டன்ட் என்று இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இருந்தாலும், ஒரே மதம் என்று சொல்கிறார்கள். காரணம் என்ன? இரண்டு பேரும் பொதுவாகப் பூஜை செய்ய ஒரே கர்த்தரின் பெயரைச் சொல்லி வணங்குகிறார்கள். புத்த மதத்தில் ஹீனயானம், மஹாயானம் என்று இரண்டு மதமாகச் சொல்வதில்லை! காரணம் அவர்கள் இரண்டு பேருக்கும் புத்தரே தலைவர்.

இப்படி, சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் ஒரே ஸ்வாமி இருக்கிறாரா? இல்லை. இப்போது சாதாரண வைஷ்ணவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு ஆசாரிய புருஷர்களாக இருப்பவர்கள் சிவன் கோயில் பக்கமே வரமாட்டார்கள். விஷ்ணுதான் அவர்களுக்கு ஸ்வாமி, அவர்களுக்கு சிவன் ஸ்வாமியே அல்ல. விஷ்ணுவினுடைய பக்தர்களுக்கு, சிவனும் ஒரு பக்தன்தான் என்பது அபிப்பிராயம். சைவர்களிலும் தீவிரவாதிகள், ‘விஷ்ணு ஸ்வாமியே அல்ல; சிவன்தான் ஸ்வாமி; விஷ்ணு அவருக்குப் பக்தன்’ என்று சொல்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது?

‘அது போகட்டும்; இவர்கள் இரண்டு பேரையும் ஒரு மதம் என்று சொல்ல இரண்டு பேருக்கும் பொதுவாக ஏதாவது ஒரு மதப் புஸ்தகமாவது இருக்கிறதா?’ என்று பார்க்கலாம். கிறிஸ்துவம் இஸ்லாம் முதலியவற்றில் பல பிரிவுகள் இருந்தாலும், எல்லாருக்கும் பொதுவாக பைபிளும் குர் ஆனும் இருப்பதுபோல், சைவ வைஷ்ணவருக்குப் பொதுவான பிரமாண கிரந்தம் இருக்கிறதா என்று பார்க்கலாம். சைவர்கள் தேவாரம் முதலிய திருமுறைகளைத் தங்கள் மத நூல்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வைஷ்ணவர்களோ நாலாயிர திவ்வியப் பிரந்தம் தமது ஆதார நூல் என்கிறார்கள். புஸ்தகங்களும் வேறாகப் போய்விட்டன. ஸ்வாமியும் வேறாகப் போய்விட்டார். அப்படி இருக்க இரண்டு பேரையும் ஒரே மதம் என்று எப்படிச் சொல்லுவது?

நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாகிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்!

அப்படியானால், நமக்கு ஒரு மதமா, இரண்டு மதமா? வைஷ்ணவர்களுக்கு ஸ்வாமி வேறே, புஸ்தகம் வேறே, சைவர்களுக்கு ஸ்வாமி வேறே, புஸ்தகம் வேறே என்று சொன்னாலும் உண்மை அப்படி அன்று. இப்போது இருக்கிறவர்களுடைய மனோபாவத்தைக் கவனித்தால் அது வேறு மதம், இது வேறு மதம் என்று சொல்லக்கூடிய ஹேது வளர்ந்திருக்கிறதே தவிர, அவர்களுடைய முதல் நூல்களைப் பார்த்தோமானால் உண்மை தெரியவரும். சைவத் திருமுறைகள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்கிற இரண்டையும் பாடினவர்கள் தங்களது நூலே “முதல் நூல்” என்று சொல்லவே இல்லை; நினைக்கவே இல்லை. அவர்கள் தங்களை மதஸ்தாபகர்களாகவும் நினைத்துக் கொண்டதே இல்லை. அவர்கள் காலத்துக்கு முந்தியே ஒரு மதம் இருந்திருக்கிறது. ஆழ்வார்கள் பாடுவதற்கு முந்தி வைஷ்ணவம் இருந்திருக்கிறது. நாயன்மார்களுக்கு முந்தியும் சைவம் இருந்திருக்கிறது. இவற்றுக்கு முதல்நூல் எது என்று பார்த்தால் மறைகள்தாம்: அதாவது வேதங்களே. சைவர்கள் ஈசுவரனையே,

‘வேதமோ டாறங்க மாயி னானை’

‘வேதநாதன், வேத கீதன், ஆரணன்காண்’

என அநேக இடத்தில் சொல்கிறார்கள். வைஷ்ணவ நூல்களிலும் இப்படித்தான், ‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லியிருப்பதை நாம் சரியாகக் கவனித்தால், இவ்விருவர்களுக்கும் மூலப் புஸ்தகம் ஒன்றே என்பது தெளிவாகும். இப்போது சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் முக்கியமாக இருக்கிற தேவாரமும், பிரபந்தமும் ஒரே பொது மூலமான வேதத்தை ஆதாரமாகக் கொண்டு உண்டானவையே. தேவாரத்தையும் பிரபந்தத்தையும் பாடிய மகான்கள் எங்கு பார்த்தாலும் வேதத்தின் பெருமையையே பேசுகிறார்கள். எந்த க்ஷேத்திரத்தை வர்ணித்தாலும் ‘அங்கே வேத ஒலி மிகுந்திருந்தது; ஹோமப் புகை மிகுந்திருந்தது; வேதம், அதன் அங்கங்கள் எல்லாம் தழைத்திருந்தன’ என்று பரவசமாகச் சொல்கிறார்கள். ஸ்வாமியைப் பற்றிச் சொல்கிற அளவுக்கு வேதத்தைப் பற்றியும் சொல்கிறார்கள்.

வேதம் ஒரே தத்துவத்தைப் பல மூர்த்திகளாக்கித் தந்திருக்கிறது. வேதம் என்ற நதியில் இந்த ஒவ்வொரு மூர்த்தி வழிபாடும் ஒரு துறை மாதிரி, ‘வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க’, என்று இதையே சேக்கிழார் சுவாமிகள் சொல்கிறார்.

இப்படியே சாக்தம், காணபதம் (பிள்ளையார் உபாஸனை), கௌமாரம் (முருகன் வழிபாடு), ஸௌரம் (சூரியனையே பரமாத்மாவாக உபாஸிப்பது) முதலான எதை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆதார நூல்களில், இந்த வழிபாட்டுக்கு ஆதாரம் வேதத்திலேயே இருக்கிறது; ‘எங்கள் ஸ்வாமி வேதத்திலேயே ஸ்தோத்திரம் பண்ணப்பட்டவர்’ என்றே சொல்லியிருக்கும்.

ஆக ‘ஹிந்து’ மதம் என்ற பெயருக்குள் உள்ள அத்தனை பிரிவுக்கும் ஆதாரமான நூல் ஒன்றே என்றாகிவிட்டது.

அந்த ஆதாரமான வேதத்தில், சைவ-வைஷ்ணவ-ஸ்மார்த்த சம்பிரதாய ஆசாரியர்கள் எல்லோரும் தசோபநிஷத்துக்கள் என்கிற பத்து உபநிஷதங்களுக்குப் பாஷ்யம் செய்திருக்கிறார்கள். இந்த உபநிஷதங்களுள் பிரம்மம் ஒன்றே ஸ்வாமி என்றுதான் சொல்லியிருக்கிறது. அதற்கே ஓரிடத்தில், கடோபநிஷத்தில் விஷ்ணு என்றும், இன்னோரிடத்தில் மாண்டூக்ய உபநிஷத்தில் சிவம் என்றும் பெயர் சொல்லியிருக்கிறது. வேத சம்ஹிதைகளில் வருகிற மித்ரன், வருணன், அக்னி, இந்திரன் முதலான அத்தனை தெய்வங்களும்கூட இந்த சத்தியத்தின் பல பேர்கள்தான் என்றும் அதே வேதத்தில் சொல்லியிருக்கிறது. (ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி)

ஆனபடியால், நம் மதத்தின் அத்தனை பிரிவுகளுக்கும் பொதுப் புஸ்தகம், பொது ஸ்வாமி இரண்டும் இருப்பதாக ஆகிவிட்டது. பொதுப் புஸ்தகம் வேதம், பொது ஸ்வாமி பிரம்மம். எனவே, சந்தேகமில்லாமல் நாம் எல்லாரும் ஒரே மதந்தான் என்று தீர்மானமாகச் சொல்லிக்கொள்ளலாம்.

அந்தப் பொது ஸ்வாமியையும் நமக்குக் காட்டிக் கொடுத்திருப்பது பொதுப் புஸ்தகமான வேதம்தான். ஸ்வாமியைக் காட்டிக் கொடுத்திருப்பதோடு, ஆசாமிகளான நாம் எப்படி வாழ்க்கை நடத்தி முடிவில் அந்த ஸ்வாமியாகவே ஆகவேண்டும் என்பதற்கும் நமக்கு வழிகாட்டிப் பரமோபகாரம் செய்வது இந்த வேதம்தான். இகம், பரம் இரண்டுக்கும் அதுதான் நமக்குக் கதி; அதுதான் இத்தனை சம்பிரதாயங்களுக்கும், சித்தாந்தங்களுக்கும் மூலம், வேர். நம்முடைய மதப்பிரிவுகள் எல்லாம் வேதத்திலிருந்தே வந்தவை. வேர் ஒன்று; கிளைகள் பல.

ஆராய்ந்து பார்த்தால், ஹிந்து மதப் பிரிவுகளுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள எல்லா மதங்களுக்குமே மூலம் வேதம்தான் என்று தெரியும். அந்த மூலத்தை மங்காமல் ரக்ஷிக்க வேண்டும் என்பதே நம்முடைய தலையாய கடமை.


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Empty Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

Post by சிவா Tue Oct 23, 2018 12:16 am


கரிகால சோழனின் சாஸனம் ஒன்று இருக்கிறது. அது நல்ல சமஸ்கிருத பாஷையில் அமைந்திருக்கிறது.

பாத்ராகலித வேதானாம் சாஸ்த்ர மார்க்கா நுஸாரிணாம் |

ததேது அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாஸனம் ||

கரிகாலன் இதில் தன்னை ‘அரிகாலனாகிய கரிகாலன்’ என்கிறான். ‘அரி’ என்றால் விரோதி என்று அர்த்தம். விரோதிகளுக்கு யமனாக இருக்கிற வீராதி வீரன்தான் ‘அரிகாலன்’. சரி, கரிகாலனுடைய அந்த விரோதிகள் யார்? வேத சாஸ்திர மார்கத்தை அநுசரிக்காதவர்கள் அனைவரும்தான் அவனுடைய விரோதிகள். வேத சாஸ்திர வழியில் செல்கிறவர்களை ரக்ஷிக்க வேண்டும் என்பதே கரிகாலனின் சாஸனம்.

பிரசித்தி பெற்ற நம்முடைய தமிழ் மன்னர்கள் வைதிக மதத்தை மனமார வளர்த்தார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்றே ஒரு சங்ககால அரசனுக்குப் பெயர் இருக்கிறது. ‘வழுதி’ என்றால் பாண்டியராஜா. பிற்காலத்திலும் கல்வெட்டுகளில் எங்கு பார்த்தாலும் தமிழரசர்கள் வேத வித்துக்களுக்கு வரியில்லாத ‘இறையிலி’ யாக நிலத்தை சாஸனம் செய்தது தெரிகிறது. நான்மறைகளின் வளர்ச்சிக்காகவே தானமாக வழங்கப்பட்ட பல கிராமங்கள் ‘சதுர் வேதி மங்கலம்’ என்ற பெயரில் உள்ளன.

வெளிதேசத்து விஷயம் ஒன்று புதிதாக நம் ஊருக்கு வந்தால், அதற்கு உள்ளூர் பாஷையில் வார்த்தையிருப்பதில்லை. வெளிநாட்டிலிருந்து நம் தேசத்துக்கு வந்த ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம் பாஷையில் வார்த்தையில்லை. பிற்பாடு இப்போது இவற்றுக்கும் ஏதேதோ புரியாத தமிழில் வார்த்தைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பழக்கத்தில் சரளமாக வரமாட்டேன் என்கிறது.

வேதம், யாகம் முதலியன சிலர் சொல்கிறமாதிரி தமிழ் நாட்டின் ஆதி நாகரிகத்துக்குப் புறம்பாகப் பிற்பாடு வந்தவை என்றால், யாகம், வேதம் முதலிய பதங்களுக்குச் சரியான தமிழ் வார்த்தை இருக்க முடியாது. ஆனால், மிக மிகப் பழைய தமிழ் இலக்கியங்களிலேயே ‘வேதம்’ என்பது ‘மறை’ என்றும், ‘யாகம்’ என்பது ‘வேள்வி’ என்றும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இவை மிகவும் அர்த்தபுஷ்டி நிறைந்த பதங்கள் என்பதை சமஸ்கிருத பண்டிதர்கள் – தமிழ் புலவர்கள் இருவருமே ஒப்புக் கொள்வார்கள். வேட்டலிலிருந்து ‘வேள்வி’ வந்திருக்கிறது. எல்லா தர்மத்துக்கும் வேரான வேதம், வேரைப் போலவே வெளியில் தெரியாமல், அதாவது எல்லாரிடமும், புழக்கத்துக்கு வராமல், அதை ரக்ஷிப்பதற்கான கடும் நியதிகளைப் பின்பற்றும் சிலரிடமே மறைந்து இருக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைச் சொல்லும் வார்த்தைதான் மறை. வைதிகப் பண்பாடும், யக்ஞ அநுஷ்டானமும் தமிழ்நாட்டில் ஊறிப் போயிருந்தாலொழிய, அந்த நாகரிகத்தைக் காட்ட இத்தனை அழகான சொந்த மொழி வார்த்தைகள் உண்டாக்கியிருக்க முடியாது. வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், தலைமுறைத் தத்துவமாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே கற்க வேண்டும் என்பதால் தமிழில் ‘எழுதாக் கிளவி’ என்ற பெயரும் வேதத்துக்கு உள்ளது. கேள்வியிலேயே பாடம் பண்ணுவதால்தான், வேதத்துக்கு ஸம்ஸ்கிருதத்திலும் “ச்ருதி” என்று பேர். ‘மறை’ என்பதைப் போல் வேத ரக்ஷணத்தைப் பளிச்சென்று சொல்கிற நேர் வார்த்தை ஸம்ஸ்கிருதத்திலேயே இல்லை.

வேதத்தின் ஆறு அங்கங்களுக்கு ‘ஷடங்கங்கள்’ என்று பெயர். அதிலிருந்துதான் மத சம்பந்தமான எந்தக் காரியத்தையும் ‘சடங்கு’ என்று சொல்கிற வழக்கம் வந்திருக்கிறது, வைதிக அநுசரணையே தமிழ்நாட்டின் தொன்று தொட்ட பழக்கம் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.

தமிழ் மறை என்று சொல்கிற குறள் முழுக்க முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்ராயம். வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத்தான் முதலிடம். அப்புறம்தான் வேத யக்ஞம். பித்ருக்களைக் குறித்த தர்ப்பணமும் திவஸமும் செய்தபின்தான் வேத பூஜை செய்ய வேண்டும். இதே வரிசையில் திருவள்ளுவரும் சொல்கிறார்.

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை..

பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்று ஐந்து பேரையும் போஷிக்க வேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான தென்புலத்தாரைச் சொல்லி, அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதாக வைதிக நம்பிக்கையிலேயே, மூதாதைகளைத் ‘தென்புலத்தார்’ என்கிறார்.

இந்த ஐந்து பேருக்கும் பாகம் பிரித்துத் தருவது நாமாகச் செய்வது. இது தவிர ராஜ ஆக்ஞையாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வரி போக மீதமுள்ளதை மேலே சொன்னபடி ஐந்தாகப் பிரிக்க வேண்டும். தனக்கு என்று அதில் ஒரு பங்குதான் வைத்துக் கொள்ளப்படுகிறது. பித்ருக்களை உத்தேசித்துக் சிலருக்கு அன்னமாக ஒரு பங்கு போகும். கோயில்களுக்கு ஒரு பங்கு போகும். விருந்தாளிகளுக்கு ஒரு பங்கு போகும். வசதியற்ற உறவுக்காரர்களுக்கு ஒரு பங்கு போகும். பாக்கி ஒரு பங்குதான் ஒருத்தனின் சொந்தக் குடும்பத்துக்கு. வைதிகமும், வள்ளுவரும் விதிக்கிற இந்தத் தர்மத்தைவிடப் பெரிய சோசலிஸம் எதுவும் இல்லை. தனக்கென்று மட்டும் வாழாமல் லோகோபகாரமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்கிற தியாகம்தான் வைதிக மதத்தின் அஸ்திவாரம். திருவள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார். தமிழ் மறையான குறளும் சரி, மற்ற தமிழ் நீதி நூல்களும் சரி, மறையின் மரபில் வந்தவைதான்.

திருவள்ளுவர் வைதிகத்தைத்தான் சொன்னார். ஒளவையார் ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்பதாக உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே, வேதாத்யயனம் ஒரு நாள்கூட நடைபெறாமல் இருக்கக்கூடாது என்கிறாள். ஆழ்வாராதிகளும் சைவத் திருமுறைக்காரர்களும் எங்கே பார்த்தாலும், ‘வேதியா! வேதகீதா! சந்தோகன் காண், பௌழியன் காண்’ என்றெல்லாம் வேதங்களையும் அவற்றின் சாகைகளையும் சொல்லியே பகவானைத் துதிக்கிறார்கள். க்ஷேத்திர வர்ணனைகளிலெல்லாம், ஊர் முழுக்க ஹோமப் புகை சூழ்ந்திருந்தது. வேத சப்தம் ஒரே கோஷமாகப் பரவியிருந்தது என்று அவர்கள் சொல்லாமலிருப்பதில்லை.

இந்தத் தமிழ் நாட்டில் வேத பாடசாலைகளை வைத்து நடத்துவதில் பிராம்மணரல்லாதார் செய்திருக்கிற கைங்கரியம் கொஞ்ச நஞ்சமில்லை. நிலமாகவும் பணமாகவும் வாரிக்கொடுத்து இந்தப் பெரிய தர்மத்துக்குப் பரமோபகாரம் செய்திருக்கிறார்கள்.

இப்போதும்கூட ஏதோ அரசியல் காரணங்களுக்காக அவைதிகமான, நாஸ்திகமான அபிப்ராயங்கள் கொஞ்சம் தலைதூக்கியிருந்தாலும், மொத்தத்தில் தமிழ் ஜனங்களுக்கு உள்ளூர வைதிக சிரத்தையும், பழைய சாஸ்திர ஏற்பாடுகளில் பக்தி விசுவாசமும் போகவேயில்லை என்பதுதான் என் அபிப்பிராயம். அவர்களுடைய அன்புக்குப் பாத்திரராகிற மாதிரி பிராம்மணர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் ஆசார அநுஷ்டான சீலர்களாக ஆகிவிட்டால், இங்கே வேத ரக்ஷணம் நிரம்பவும் நன்றாக நடந்துவிடும் என்பதே என் நம்பிக்கை.


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Empty Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

Post by சிவா Tue Oct 23, 2018 12:16 am


பாஷையை வைத்துக் கொண்டு, ‘இது என் பாஷை, அது உன் பாஷை, இந்த பாஷை தான் உயர்ந்தது. அந்த பாஷை தான் உயர்ந்தது’ என்று இப்போது பலர் சண்டை போடுவதைப் பார்த்தால் மிகவும் துக்கமாக இருக்கிறது. நாம் எல்லோரும் ஊமையாகப் போனால் தேவலை என்றுகூடத் தோன்றுகிறது. நம்முடைய அபிப்பிராயத்தைத் தெரிவிக்க இருக்கும் கருவி பாஷை. அது எல்லா ஊரிலும் ஒன்றாக இருக்க முடியாது. ஒவ்வொரு கூட்டம் ஒவ்வொரு பாஷையைப் பேசும். ஒவ்வொரு சீமையிலும் ஒரு பாஷை இருக்கும். எனவே, ‘இது என் பாஷை’ ‘அது உன் பாஷை’ என்பதும் ‘இது உசத்தி, அது தாழ்த்தி’ என்று சண்டை பிடிப்பதும் அர்த்தமில்லாத காரியம். ‘தெரிந்த பாஷை, தெரியாத பாஷை’ என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய, ‘என் பாஷை, உன் பாஷை’ என்பதே தப்பு. பாஷையால் சண்டை என்பது பெரிய தப்பு. மதத்தைக் காட்டிலும் ஸ்வாமியைக் காட்டிலும் பாஷைதான் உயர்வென்று நினைப்பது மிகவும் தப்பு. பாஷை என்ற ஒரு காரணத்துக்காக மட்டும் ஸம்ஸ்கிருதம் வேண்டுமா என்றால் நான்கூட வேண்டாம் என்றே சொல்வேன். ஆனால் நம்முடைய மதத்துக்கு மூலமான வேதம், சாஸ்திரம் எல்லாம் அந்தப் பாஷையில் இருப்பதனால் வேதத்தையும் சாஸ்திரங்களையும் ரக்ஷிப்பதற்காக சம்ஸ்கிருத பாஷையையும் ரக்ஷிக்கத்தான் வேண்டும் என்கிறேன்.

திருவள்ளுவர் குறளை எழுதி அதை அரங்கேற்ற மதுரைக்கு வந்தார். பொற்றாமரைக் குளத்தில் சங்கப்பலகை இருந்தது. திருவள்ளுவர் தம் புத்தகத்தைக் கொண்டுபோய் சங்கப் பலகையில் வைத்தாராம். குட்டைப் புத்தகம் அது. அதுமாத்திரம் பலகையில் இருக்கப் புலவர்கள் எல்லோரும் குளத்தில் விழுந்து விட்டார்களாம். குறள் அங்கே அரங்கேற்றப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் இன்னார் பண்ணினார், இதில் இன்ன உயர்ந்த விஷயங்கள் இருக்கின்றன என்று அதைப் பற்றிப் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். “திருவள்ளுவ மாலை” என்று அதற்குப் பெயர். அதில் ஒருவர் பாடுகிறார்;

ஆரியமும் செந்தமிழும் ஆராயத் திதனினிது

சீரிய தென்றொன்றைச் செப்பரிதாம்-ஆரியம்

வேதம் உடைத்து தமிழ்திருவள்ளுவனார்

ஓது குறட்பா உடைத்து



“ஸம்ஸ்கிருதம் உயர்வா? தமிழ் உயர்வா?” என்று யோசனைப் பண்ணிப் பார்த்தேன். “ஸம்ஸ்கிருதமும் தமிழும் சமம்தான். ஒன்று உயர்வு, ஒன்று மட்டம் என்று சொல்ல முடியாது. எதனாலே என்றால், ஸம்ஸ்கிருதத்தில் வேதம் இருக்கிறது. தமிழில் இப்போது திருக்குறள் வந்துவிட்டது. இது தமிழ் மறை. வேதத்துக்குச் சமமான ஒன்று தமிழில் இல்லை என்றால் ஸம்ஸ்கிருதம் உயர்வாக இருக்கலாம்! திருக்குறள் வேதத்துக்குச் சமானமாக வந்திருக்கிறது. அதனாலே இப்போது இரு பாஷைகளும் சமமாயின” என்று இச்செய்யுளில் கவி சொல்லியிருக்கிறார்.

ஸம்ஸ்கிருதத்துக்கு எதனால் கௌரவம்? வேதம் அதில் இருபதனால்தான் என்பதை அந்தப் புலவர் சொல்லியிருக்கிறார்.

‘வேதம் ஸம்ஸ்கிருதத்தில் இருந்தால் என்ன மொழி பெயர்த்துவிடலாமே’ என்று நினைக்கலாம். பல நூல்கள் அப்படி இந்தக் காலத்தில் மூல பாஷையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலமே உருமாறிப் போவதுமுண்டு. ஒரு விஷயத்தை ஒரு மனிதன் சொன்னால், அது அவனிடமிருந்து எந்த வாக்கில் வருகிறதோ அதே வாக்கில் இருந்தால், ஒரு காலத்தில் இல்லாவிட்டாலும் மற்றொரு காலத்தில் அதன் உண்மைப் பொருளை முழுவதும் தெரிந்து கொள்ள முடியும். ஒரு பொருளைச் சொல்வதற்கு ஒரு பாஷையில் அழகான சொல் ஒன்று இருக்கும்.. அதை மொழி பெயர்க்கும்போது, அதற்கு ஏற்ற சொல் இதர பாஷையில் இருக்காது. சில சமயங்களில் நான்கைந்து வார்த்தைகளைப் போட்டுச் சுற்றிவளைத்துச் சொல்ல வேண்டியிருக்கும். அந்த வார்த்தை அந்த இடத்தில் எந்த அபிப்பிராயத்தை வெளிப்படுத்துகிறதோ, அதே அபிப்பிராயத்தை மொழி பெயர்ப்பில் காணமுடியாமல் போகலாம். இரண்டாவது, மொழி பெயர்க்கிறவன் தன்னுடைய ஞானத்துக்கு ஏற்றாற்போலத்தான் பொருள் பண்ணிக் கொண்டு சொல்ல முடியும். ஒருவன் பண்ணிய மொழி பெயர்ப்புச் சரி அல்ல என்று இன்னொருவன் எண்ணுவான். பண்ணுகிறவனுடைய அபிப்பிராயத்துக்கும் பாஷா ஞானத்துக்கும் ஏற்றபடி அந்த மொழி பெயர்ப்பு இருக்கும். இப்படியாக பல மொழிப்பெயர்ப்புகள் ஏற்பட்டு, அவற்றில் எதை எடுத்துக் கொள்வது என்ற சந்தேகம் வரும்போது, மூலம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டிவரும்.

ஆகவேதான் மூலமாகிய வேதத்தை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். மூலமாக இருக்கும் ஒரே வேதத்தைத் தங்கள் கருத்தின்படி பொருள் கொண்டு ஒவ்வோர் ஆசாரியரும் ஒவ்வொரு சித்தாந்தத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆசாரியர்கள் தத்தம் சித்தாந்தங்களையே ஆதாரமாகக் கொண்டு மூலவேதத்தை மாற்றி வெவ்வேறு மதங்களைச் செய்துவிடவில்லை. மூலம் ஒன்றாக இருக்கிறது. மூலம் மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே இருந்து கொண்டிருப்பதால்தான், அந்த அந்த ஆசாரிய புருஷருக்கு ஏற்றபடி காலத்துக் காலம் புது அபிப்பிராயம் சேர்த்து வந்திருக்கிறது. ஆதாரமான வேதத்தை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டு, அதை ரக்ஷித்து வந்தால்தான் அந்தந்த ஆசாரியரின் புது அபிப்பிராயமானது இன்னொரு தனி மதமாகப் போகவேண்டிய அவசியம் ஏற்படாமல் இருந்து வந்திருக்கிறது. இந்த மதங்களுக்கெல்லாம் வைதிக மதம் என்ற பொதுப் பெயர் இருந்து கொண்டிருக்கிறது.


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 5 Empty Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum