Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
3 posters
Page 18 of 19
Page 18 of 19 • 1 ... 10 ... 17, 18, 19
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
First topic message reminder :
தெய்வத்தின் குரல் - இரண்டாம் பகுதி - விரைவில்
தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஐந்தாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - இரண்டாம் பகுதி - விரைவில்
தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஐந்தாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி- விரைவில்
தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி- விரைவில்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
காமாக்ஷியின் சரிதை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
காஞ்சிபுரத்தில் பரம கருணாமூர்த்தியான அம்பாள் எப்படியிருக்கிறாள்? கரும்பு வில்லும் (இக்ஷுசாபம்) மலரம்பும் (புஷ்பபாணம்) வைத்திருக்கிறாள். இந்த இரண்டும் இன்னொருத்தருக்கும் உண்டு. மன்மதன் என்கிற காமன்தான் அது. காமன் காமாக்ஷி இருவருக்கும் கரும்பு வில், புஷ்ப பாணம் ஆகியன காமன் (Common) – பொது. மன்மதன் கரும்புவில்லை வைத்துக்கொண்டிருக்கிறான். அதற்கு நாண் தேன் வண்டுகள். வளைந்த கரும்பு வில்லின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரையில் குறுக்காக வண்டுகள் நாண் மாதிரி வரிசையாகச் சேர்ந்திருக்கின்றன. இந்தக் கரும்பு வில்லில் ஐந்து மலர் அம்புகளைத் தொடுத்துத்தான் சமஸ்த ஜீவப் பிரபஞ்சத்தையும் மன்மதன் ஆட்டிவைக்கிறான். உலகத்தில் உள்ள தித்திப்பு பக்ஷணங்கள் அத்தனையும் வெல்லம், சர்க்கரையில் செய்ததுதான். வெல்லம், சர்க்கரைக்கு ஆதாரம். கரும்பு தித்திப்புச்சுவை மன்மதனுக்கு வில். சுகந்தத்துக்கும் மென்மைக்கும் ரூப ஸெளந்தர்யத்துக்கும் புஷ்பங்கள் பெயர் போனவை. இப்படிப்பட்ட புஷ்பங்களில் ஐந்து அவனுக்குப் பாணங்களாக இருக்கின்றன. காதுக்கு சுகமான ரீங்காரம் வண்டிடமிருந்து வருகிறது. இப்படியாக தன் வில், அம்பு, நாண் இவற்றால் நம் பஞ்சேந்திரியங்களுக்கான அத்தனை விதமான அழகுகளையும் காட்டி, லோகத்தை காமத்தில் கட்டிப் போடுகிறான் என்று அர்த்தம். அம்பாள்தான் அவனுக்கு இப்படி இரும்பு வில்லுக்கும் பாணத்துக்கும் பதிலாகக் கரும்புவில்லையும் புஷ்ப பாணங்களையும் தந்து, எல்லா உயிரனங்களையும் கவர்ந்து இழுத்து ஆட்டி வைக்கிற சக்தியை அநுக்கிரகிக்கிறாள். சிருஷ்டி லீலை நடக்க வேண்டும் என்பதற்காகக் காமனுக்கு இந்த அதிகாரம் தந்திருக்கிறாள்.
ஆனால் ஜீவப் பிரபஞ்சம் முழுவதும் எப்போதும் இந்திரிய சுகங்கள் என்கிற துக்கத்திலேயே சிக்கிக்கொண்டு கிடப்பதையும் அம்பாள் விரும்பவில்லை. லோக ரீதியாக வாழ்க்கை நடத்துகிறவர்களும் காமத்தினால் தர்மத்தை விட்டுவிடக்கூடாது; அர்த்த காமங்களையும் (பொருள் ஈட்டுதலையும்) ஆசைகளை அநுபவிப்பதையும்) கூட தர்மத்துடனேயே இணைத்து ஒழுங்கோடு வாழ வேண்டும். மனசும் இந்திரியமும் போன போக்கில் விட்டுவிடாமல் அவற்றை தர்மத்தில் கட்டுப்படுத்த வேண்டும். லோக விவகாரத்தை முழுதும் விடாமலே இப்படி கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருப்பது முதல் நிலை. அப்புறம் மனசு, இந்திரியம் இவை கொஞ்சம்கூடச் சலனமே இல்லாமல் இருக்கிற ஞான நிலை சித்திக்கும். அந்த நிலை வந்துவிட்டால் அப்புறம் ஜன்மமே இல்லை. சிருஷ்டி லீலைக்கு சகாயம் செய்கிற மன்மதனுக்கு இங்கு வேலையே இல்லை. மன்மதனுக்கு காமத்தை உண்டாக்குகிற சக்தியைத் தந்த அம்பாளேதான், காம விகாரத்தைக் கட்டுப்படுத்த தர்மத்தையும் முடிவாக அவளுடைய சிருஷ்டி லீலையிலிருந்து விடுபடுகிற ஞானநிலையான மோக்ஷத்தையும் ஏற்படுத்தியிருக்கிறாள்.
காமத்துக்காகவே ஏற்பட்ட மன்மதனுக்கு அவள் தந்த கரும்பு வில்லையும், மலர் அம்பையும் ஒரு சமயம் அவளே அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளும்படியாகி விட்டது. பரம காருண்யத்தால் அவள் அப்படிச் செய்தாள். வெளி நினைப்பே இல்லாத பிரம்ம ஸ்வரூபம் லோகத்திடம் கருணை கொண்டு கடாக்ஷிக்க வேண்டும். லோகத்துக்குத் தர்மத்தையும் ஞானத்தையும் அநுக்கிரகிக்க வேண்டும் என்றே, அம்பாள் காமனுக்குத் தந்த தனுஸையும் பாணங்களையும் எடுத்துக்கொண்டு காமாக்ஷியானாள்.
அது பரமேசுவரன் தக்ஷிணாமூர்த்தியாக அமர்ந்துவிட்ட சந்தர்ப்பம். ஒரே ஞானமயமான மூர்த்தியாக, பரம சாந்த ஸ்வரூபமாக, நிச்சலனமாக உட்கார்ந்துவிட்டார் தக்ஷிணாமூர்த்தி. எல்லாம் ஒன்றாகியிருக்கிற அத்வைத வடிவமாக அவர் இருக்கிறார். ஆனால் அவர் இப்படி ஞான ஸ்வரூபமாய் பரதத்துவமாய் இருந்தால் ஜீவராசிகள் என்ன ஆவது? ஜீவராசிகளைக் கை தூக்கி விடுவது யார்? இந்த ஞான ஸ்வரூபி கருணைக் கடலாகி, எல்லோரையும் கடாக்ஷிக்க வேண்டும் என்று ஜகன்மாதா திருவுள்ளம் கொண்டாள். இவள் தன் கடாக்ஷத்தாலேயே ஸர்வ லோகத்தையும் ரக்ஷித்து விடலாம்தான். ஆனாலும் ஜனங்களுக்கு உத்தம ஸதியின் லக்ஷணத்தைத் தானே நடத்திக் காட்ட நினைத்து, ஈசுவரனுக்கும் பெருமை கொடுக்க உத்தேசித்தாள். அவள் வேறு, அவர் வேறு அல்ல, ஒன்றேதான். அதாவது தன்னுடைய ஞானத்திலேயே காருண்யமும் பொங்கியிருக்க வேண்டும் என்று எண்ணினாள். அப்போது சந்தர்ப்பமும், அவள் கரும்புவில், மலர்ப்பாணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காமேசுவரியாவதற்கு அநுகூலமாக ஆயிற்று.
தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அசுரர்கள் மூன்று லோகங்களையும் ஹிம்ஸித்து வந்த சந்தர்ப்பம் அது. இவர்கள் நிரம்பத் தபஸ் பண்ணி எல்லையில்லாத பலம் பெற்றிருந்தார்கள். சாக்ஷாத் பரமேசுவர தேஜஸிலிருந்து உண்டாகும் குமாரர்தான் தங்களை வதம் செய்ய முடியுமென்று இவர்கள் வரம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பரமேசுவரனோ இப்போது பரம ஞான மூர்த்தியாக, எந்தக் காரியமும் இல்லாமல், ஆத்மானந்தத்தில் முழுகி, தக்ஷிணாமூர்த்தியாக உட்கார்ந்துவிட்டார்.
இவரை எப்படிப் புத்திரோத்பத்தி செய்ய வைப்பது? அசுரர்களால் ஹிம்ஸிக்கப்பட்ட தேவர்களுக்கு ஒரே வழிதான் தெரிந்தது. அப்போது ஹிமயபர்வத ராஜனுக்குப் புத்திரியாகப் பிறந்திருந்த பார்வதி தேவி, இந்த தக்ஷிணா மூர்த்திக்குக் கைங்கரியம் செய்து வந்தாள். காமத்துக்கு அதிதேவதையான மன்மதன், பார்வதியிடம் பரமேசுவரனின் மனஸைத் திருப்பிவிட்டால், பிறகு சிவகுமார ஜனனம் ஏற்பட்டுவிடும் என்று தேவர்கள் எண்ணினார்கள். மன்மதனிடம், ‘உன் சக்தியைப் பரமேசுவரனிடம் காட்டு’ என்று ஏவி விட்டார்கள்.
லோகம் முழுக்க ஸ்வாதீனம் பண்ணிக் கொள்கிற ஆற்றலை, மனமதனுக்குத் தந்ததே பரமேசுவர சக்திதான். இவன் அந்தப் பரமேசுவரனிடம் பக்தியோடு போய்த் தன் சக்தியை அவரிடம் அர்ப்பணம் பண்ணியிருந்தாலே போதும். கருணா மூர்த்தியான அவர் காரியத்தை முடித்துத் தந்திருப்பார். ஆனால் இவனோ அப்படிப்பட்ட சமர்ப்பண புத்தி இல்லாமல், அகங்காரத்தோடு போனான். பரமேசுவரனையே தன்னால் வசப்படுத்தி பார்வதியிடம் மோகிக்கச் செய்ய முடியும் என்று அகம்பாவப்பட்டுக்கொண்டு போனான். பெற்ற தாயிடமே கற்ற வித்தையைக் காட்டுவதுபோல் பரமேசுவரன் மேல் மலர் அம்புகளை விட்டான்.
சட்டென்று ஸ்வாமிக்கு ஒரு சலனம் உண்டாகிறாற்போலிருந்தது. கண்களைத் திறந்தார். அவருக்கு மூன்று கண்கள். ஆனால் இப்போது மூன்றுக்கும் வேலை வைக்கவில்லை. அக்கினி மயமான நெற்றிக் கண்ணை மட்டும்தான் துளித் துளி திறந்தார். அவ்வளவுதான்! மன்மதன் அக்னி ஜ்வாலையான அந்தத் திருஷ்டியில் அப்படியே எரிந்து பஸ்பமாகிவிட்டான். ‘தான் மகா அழகன்’ என்ற கர்வம் அவனுக்கு உண்டு. சரீர ஸெளந்தர்யம் ஞானாக்னியின் முன்னால் நிற்க முடியாது என்று காட்டுகிற மாதிரி, இப்போது பரமேசுவரன் முன்னால் சாம்பல் குவியலாகி விட்டான். எவன் சர்வாங்கசுந்தரன் என்று பேர் பெற்றிருந்தானோ, அவனுக்கு இப்போது அங்கமே இல்லாததால் ‘அனங்கன்’ என்ற பேர் ஏற்பட்டது.
மன்மதனின் பத்தினியான ரதி புலம்பினாள். பார்வதி தேவி அவளுக்கு அபயம் தந்து, அவள் கண்ணுக்கு மாத்திரம் மன்மதன் தெரியும்படியாக அநுக்கிரகித்தாள். மன்மதனைப் பார்த்து, “நான்தான் உனக்கு இந்த வில்லையும் அம்பையும் தந்து சகல ஜீவராசிகளையும் காம வசப்படுத்தும்படி அநுக்கிரஹம் செய்கிறேன். இப்போது இருக்கிற ஜனங்கள் எல்லாரும் ஸநகாதி முனிவர்களைப்போல் ஞானிகளாக இருந்துவிட்டால், ஏராளமான கர்மா பாக்கியோடு மரணம் அடைந்து இன்னமும் ஜனனம் எடுக்காமல் இருக்கிற ஜீவாத்மாக்கள் மறுபடி பிறக்க முடியாமல் ஆகி, பெரிய கஷ்டம் உண்டாகும். அவர்கள் மறுபடியும் ஜன்மா எடுத்தால்தான் சித்தசுத்தி செய்துகொண்டு, கர்மாவை தீர்த்துவிட்டு ஜனன நிவிருத்தி பெறமுடியும். இதற்காகத்தான் லோகத்தில் பிரஜா உற்பத்தி நடக்க வேண்டுமென்று உனக்குச் சக்தி தந்து உன்னை ஒர் அதிகாரியாக வைத்தேன். ஆனால் நீ இப்போது மேலதிகாரியிடமே உன் கை வரிசையைக் காட்டிவிட்டாய். சக்தியைக் காட்டிப் பிரயோஜனம் இல்லை; பக்திக்குத்தான் அவர் வசப்படுவார். அவரிடம் எப்படிக் காரியம் நடத்திக் கொள்வது என்று இப்போது பார்” என்று அம்பாள் சொல்லிவிட்டு, அவனுக்குத் தந்திருந்த கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் தானே கையில் எடுத்துக் கொண்டாள். ஈஸ்வரனிடத்தில் போய் நின்றாள். அன்புமயமாக அவரைப் பார்த்தாள். கரும்பு வில்லும், மலரம்பும் தரித்து, இப்படி அன்பு பொங்கப் பார்த்தபோதுதான் அவளுக்கு காமாக்ஷி என்று பேர் வந்தது. காம – அன்பு; அக்ஷி – கண்; அன்பு பொங்கும் கண்ணை உடையவள் காமாக்ஷி. “காமாக்ஷி” என்பதற்கு வேறு தத்வார்த்தங்களும் சொல்வதுண்டு. அது இருக்கட்டும். நேர் அர்த்தம் ‘காமக்கண்ணி’.
“காமக்கண்ணி” என்ற இந்த காமாக்ஷி நாமம் தமிழில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. சங்க காலப் பெண் புலவர் ஒருத்தருக்குத் ‘காமக் கண்ணியர் நப்பசலையார்’ என்று பெயர். காமாக்ஷி வழிபாடு தமிழ்நாட்டில் ஆதிகாலத்திலேயே இருந்ததினால்தான், அந்தப் பெண்மணிக்கு இப்படி பெயர் இருந்திருக்கிறது. இது இருக்கட்டும். கதைக்குப் போகலாம்.
முதலில் மன்மதன் பரமேசுவரன் மேல் பாணப்பிரயோகம் செய்தான். எதிரியாகப் போர் செய்தான். எரிந்து போனான். அம்பாளோ வில் கரும்பையும் அம்பு புஷ்பங்களையும் ஈஸ்வரனுடைய பாதத்தில் அர்ப்பணம் செய்து, நமஸ்கரித்தாள். அவர் தன்னையே அவளுக்கு ஸ்வாதீனப் படுத்திவிட்டார். அன்புக்கு அடக்கத்துக்கு உள்ள சக்தி இது!
இவளுடைய அன்பு ததும்புகிற கண்களை, கண்டவுடனேயே அவருக்கும் அன்பு சுரந்தது. பஞ்ச இந்திரியங்களாலும், மனஸாலும் ஜீவ சமூகத்தை எல்லாம் ஆட்டிப் படைத்து விளையாடும் மகாசக்தி படைத்த இவள், அந்தச் சக்திக்கு அடையாளமான ஐந்து பூக்களையும் கரும்பையும் அவர் முன் போட்டு சமர்ப்பணம் பண்ணி நமஸ்காரம் செய்தவுடன் ஈசுவரனுக்குப் பிரேமை பொங்கியது.
பிறகு பார்வதி கல்யாணம் – அதன்பின் குமார ஸம்பவம் அதாவது முருகக் கடவுளின் உற்பத்தி, அப்புறம் சுப்பிரமணியரால் தாரகன், சூரபத்மா ஆகியோரின் சம்ஹாரம் எல்லாம் நடந்தன.
யாருமே இன்னொருவரிடம் தோற்றுப்போனால் அவமானம்தான் கொள்வார். ஆனால் இதற்கு ஒரு விதி விலக்கு உண்டு. சொந்தப் பிள்ளையிடம் தோற்றுப்போனால் மட்டும் அவமானத்துக்குப் பதில் பெருமையாகவே இருக்கும். ‘புத்ராத் இச்சேத்பராஜயம்’ என்று இதையே சொல்வார்கள். இதற்கு அநுசரணையாக, பரமேசுவரனும் கூடத் தன்னாலேயே வதைக்க முடியாத தாரகாதி அசுரர்களை, தன் குமாரனான சுப்பிரமணியன் சம்ஹாரம் செய்ததில் பெருமையே கொண்டார். இதற்கு முன்னால் தக்ஷிணாமூர்த்தியாக, மூல குருமூர்த்தியாக இருந்த அவரே சுப்பிரமணியஸ்வாமியிடம் பிரணவ உபதேசம் வாங்கிக்கொண்டு, தன்னைவிட ஒருபடி பிள்ளையை உயர்த்திக்காட்டிப் பெருமை அடைந்தார். இப்படியாக ஈஸ்வரன் ஞானம், வீரம் இரண்டிலும் தன்னைவிடத் தானே அதிகப் பிரகாசமான ரூபமெடுத்துக்கொண்டு சுப்பிரமணியராக வந்ததற்குக் காரணம் அம்பாளின் சேர்க்கைதான். காமன் எரிந்தபின் அவள் கரும்பு வில்லும், மலர் அம்பும் தரித்துக் காமேசுவரியாகி, இவரைத் தன்னிடம் அன்பு கொள்ள வைத்ததுதான் இத்தனைக்கும் காரணம்.
இந்தப் புராணக் கதைக்கு திருஷ்டாந்தமாகவே, இன்றைக்கும் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் ஆலயத்துக்கும், காமாக்ஷியம்மன் ஆலயத்துக்கும் நடு மத்தியில் குமரக்கோட்டம் என்கிற சுப்பிரமணியர் ஆலயம் இருக்கிறது. ஸோமாஸ்கந்த மூர்த்தத்தில் எப்படி ஈஸ்வரனுக்கும் உமாதேவிக்கும் நடுவில், ஸ்கந்தர் இருக்கிறாரோ, அப்படியே காஞ்சியில் காமாக்ஷியின் காமக்கோட்டம் அல்லது காமகோடிக்கும் ஏகாம்பரேசுவரரின் ஆலயமான ருத்ரகோடிக்கும் மத்தியில் குமரக்கோட்டம் இருக்கிறது.
தக்ஷிணாமூர்த்தியைக் கல்யாணசுந்தரராகக் காமாக்ஷி மாற்றினாளே, அது எதற்காக? தாரகாதிகளின் வதத்துக்காக மட்டுமல்ல. ஜனன மரணங்களிலிருந்து விடுபடுவதற்காகவே பல ஜீவர்கள் ஜனனம் எடுக்க வேண்டும். அவர்களின் கஷ்டங்களையும், அஞ்ஞானத்தையும் போக்குவதற்காகக் கருணாமூர்த்தியான ஒரு கடவுள் வேண்டும். தக்ஷிணா மூர்த்திக்கு மாயா பிரபஞ்சத்தையோ, அதிலிலுள்ள பிரஜைகளையோ அவர்களுடைய கஷ்டங்களையோ பற்றிச் சிந்தையே இல்லை. ஞான சாகரமாக இருந்த அவரைத் கிருபா சமுத்திரமாக்கி ஜீவராசிகளின் துயர் தீர்க்கவைக்கவே, அம்பிகை, காமேசுவரியாகி அவரைக் கல்யாண சுந்தரராக்கினாள். இவளே இந்த லோக அநுக்கிரகத்தைச் செய்கிற யோக்கியதை வாய்ந்தவள்தான். அவரை இவள் அநுக்கிரகம் செய்ய வைப்பதாகச் சொன்னாலும், வாஸ்தவத்தில் செய்பவள் இவளேதான். சும்மா இருப்பதுதான் அவர் சுபாவம். செயல் என்று வந்துவிட்டாலே அது இவளுக்கு உரியதுதான். இருந்தாலும் ஒரு லீலையாக அவர் செய்வதுபோல் காட்டினாள். அவ்வளவுதான். லோகத்தில் ஸ்திரீ தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காகத் தனக்குப் பதில் ஒருத்தனை ஏற்படுத்திக்கொண்டு, அவனுக்கே பெருமையை எல்லாம் சேர்த்தாள்.
பரமேசுவரனிடம் தம்மீது மோகத்தை உண்டாக்கினாள் காமாக்ஷி. எதற்காக? மநுஷ்யர்களின் மோகத்தை அவர் அடக்கி, அவர்களுக்கு ஜனன நிவிருத்தி தரவேண்டும் என்பதற்காகவே. கலப்பில்லாத ஞான மயமாக இருக்கிற ஈஸ்வரனை லோக க்ஷேமத்துக்காக மோகிக்க வைத்த சிவகாம சுந்தரி அவள். ‘இப்படிப்பட்ட நீயே மோகத்தில் மூழ்கிக் கிடக்கிறவர்களைக் கைதூக்கி மோக்ஷம் தருகிறாயே, என்ன ஆச்சரியம்!’ என்று பாடுகிறார் மூகர்.
பரமேசுவரனுக்குக் காமத்தை உண்டாக்கியவாறே நம்முடைய காமத்தைக் கண்டிக்கிறாள். காமன் பஞ்ச புஷ்ப பாணங்களையும் கரும்பு வில்லையும் பிரயோகித்து நம்முடைய பஞ்ச இந்திரியங்களையும் மனசையும் தடுமாறிப் போகச் செய்கிறான். பரதேவதை இந்தப் பஞ்ச பாணங்களைத் தன் திருக்கரங்களில் பிடித்துக் கொண்டிருப்பதாலே, நம்முடைய இந்திரியங்கள் வெறித்து ஒடாமல் தன் பிடிப்பில் வைத்துக் கொண்டு ரக்ஷிக்கிறாள். அவளுடைய கையில் மனோரூபமான இக்ஷு (கரும்பு) இருப்பதால் நம் சித்த விவகாரங்கள் எல்லாம் நசிக்கின்றன. சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம் என்று ஐம்புலன்கள் அநுபவிக்கிற அழகுகள் எல்லாம் அவளுடைய அழகுதான். இவற்றை அநுபவிக்கிற நம் மனசும் அவள் கையில் வசப்பட்ட வஸ்துதான் என்று உணர்த்துவதற்காகக் கரும்பு வில்லும், மலரம்புகளும் வைத்துக்கொண்டு, காமாக்ஷியாக திவ்ய ரூபம் கொண்டிருக்கிறாள். கரும்பின் மாதுரியமும், புஷ்பங்களின் மிருதுத்தன்மையும் கொண்டவளாக இருக்கிறாள்.
எந்த அக்ஷரங்களால் (கண்களால்) ஈசுவரனுக்குக் காமத்தை உண்டாக்கி காமாக்ஷியானாளோ, அதே கண்களின் கடாக்ஷம் நம்மேல் துளி விழுந்தால்போதும். நமக்கு எந்த விதமான காமமும் பறந்துவிடும். நாம் பார்ப்பதை எல்லாம் அவளுடைய பல வேஷங்களாகவே பார்ப்போம். எல்லாம் ஒன்றாகி விடும். அத்வைதமாகிவிடும். ஒன்று உசத்தி, ஒன்று தாழ்த்தி என்று இராது. “காடும் வீடும், சத்துருவும் மித்திரரும், ஓடும் யுவதியின் உதடும் சமமாகவே தெரியும். ஸ்ரீ காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு” என்று மூகர் இதையே சொல்கிறார். எல்லாம் சமமாகும் அந்த நிலைதான் பிரம்ம ஞானம் என்பது.
பார்வதீ கல்யாண வைபவத்தின்போது சகல லோகங்களும் ஆனந்தமாக இருந்தன. அப்போது மன்மதனுக்கு மட்டும் தேகமில்லாத குறை இருக்க வேண்டாம் என்று அம்பாளும் ஈஸ்வரனும் கிருபை கொண்டு அவனுக்கு எரிந்துபோன சரீரத்தை மறுபடியும் தந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
தபஸ்வியாக இருந்த பரமேசுவரன் பார்வதியைத் திருக்கல்யாணம் செய்துகொண்டார். பிறகு குமரோத்பத்தியும் செய்துவிட்டார். ஒருவிதத்தில் இது தன்னுடைய வெற்றிதான் என்று மன்மதன் சந்தோஷப்பட்டான். இதைத் தன் வெற்றியாக அகில லோகமும் மதிக்கச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். தாம்பத்யம் செய்துவைப்பது இவன் டிப்பார்ட்மெண்ட்தானே? அம்பாளே இந்த இலாகாவுக்கு அவனை ஆபீஸராகப் போட்டிருந்தாளே! தன் இலாகாவுக்குள் வருகிற காரியம் நடந்தபோது, அதற்குரிய பெருமை தனக்கே சேரவேண்டும் என்று நினைத்தான். பரமாநுக்கிர மூர்த்தியான அம்பாளைப் பிரார்த்தித்தாலே தன் ஆசை நிறைவேறும் என்று கண்டுகொண்டான்.
ஸர்வ வியாபினியாக இருக்கிற பரப்பிரம்ம சக்தியான அம்பாள், காஞ்சீ மகா க்ஷேத்திரத்தில் விசேஷ சாந்நித்தியத்தோடு காமாக்ஷியாக எழுந்தருளியிருப்பதை அறிந்து கொண்டான். பூலோகத்தை ஒரு ஸ்திரீயாகப் பாவித்தால் அவளுக்குப் பூட்டிய ஒட்டியாணம் மாதிரி காஞ்சீபுரம் உலகத்தின் மையமாக இருக்கிறது. காஞ்சீ என்றால் ஒட்டியாணம் என்றே அர்த்தம். அதில் நாபி ஸ்தானத்தில் காமாக்ஷியின் வாஸஸ்தானமான கர்ப்பகிருஹம் இருக்கிறது. அதற்குப் பேர் பிலாகாசம். பிலம் என்றால் குகை. நாபிக்கொடியிலிருந்து கர்ப்பத்திலிருக்கிற குழந்தை ஆகாரம் பெறுகிற மாதிரி, சகல ஜீவராசிகளும் இந்த பிலாகாசத்திலிருந்துதான் அம்பாளின் அநுக்கிரஹத்தால் சகல சக்திகளையும் பெறுகிறார்கள்.
ஆகாசம் என்பதே ஆத்ம ஸ்வரூபம். எங்கும் பரவியிருக்கும் வெளியை மாஹாகாசம் என்பார்கள். அந்த வெளியே நமக்குள்ளே ஆத்மாவாக, ஞான மயமாக இருக்கிறபோது, பேரம்பலம் சிற்றம்பலமாகிறது. மஹாகாசம் தஹராகாசமாகிறது. சிதம்பரம் என்பதும் அதுதான். சித் என்றால், ஞானம், அம்பரம் என்றால் ஆகாசம். நம்மை நாமே அறிந்து கொள்ளும் ஞானம் உண்டாகும்போது, நம்முடைய சகல எண்ணங்களுக்கும் மூலமான வஸ்து, நம்முடைய சுவாசத்துக்கும் மூலமாக இருதய ஆகாசமாக இருப்பதை அநுபவிக்க முடியும்.
லோகத்தையே ஒரு புருஷ வடிவமாகக் கொண்டால் அந்த விராட் புருஷனின் இருதய ஸ்தானம்தான் சிதம்பர க்ஷேத்திரத்தில் ரகசியமாக உள்ள ஆகாசம். “சிதம்பர ரஹஸ்யம்” என்றே அதைச் சொல்வார்கள். அதுவேதான் காஞ்சிபுரத்தில் பிலாகாசமாகவும் இருக்கிறது. “காம கோஷ்டம்” என்று சமஸ்கிருதத்திலும், “காமகோட்டம்” என்று தமிழிலும் சொல்லப்படுகிற காமாக்ஷி ஆலயத்தின் கர்ப்பகிருஹத்தில் பிலாகாசம் இருந்தாலும், அதன் சக்தி காஞ்சி மண்டலம் முழுவதுமே பரவியுள்ளது. சிதம்பரத்தில் சித்சபையில் மட்டுமே ஞானாகாசம். இங்கோ காஞ்சீ மண்டலம் முழுக்க அது வியாபித்திருக்கிறது. புராணம் இப்படித்தான் சொல்கிறது.
பிலாகாச ரூபிணியான அம்பிகை காமனின் கரும்பு வில்லையும், மலர் பாணங்களையும் தானே தாங்கிக் காமாக்ஷியாக அமர்ந்திருக்கிறாள். ராஜராஜேஸ்வரியான அவளை வேண்டினால் தன் காரியம் நடக்கும் என்று தெரிந்து கொண்ட மன்மதன் காஞ்சிபுரத்திற்கு வந்து தபஸ் செய்தான்.
கருணாமூர்த்தியான அம்பாள் அவனுக்குப் பிரஸன்னமானாள்.
“அம்மா! என்னை பஸ்மம் செய்த அதே பரமேசுவரன் பிற்பாடு உன்னிடம் பிரேமை கொண்டான். காமத்துக்கு அதிகாரியாக என்னை நீதான் நியமித்தாய். அதனால் எவர் பிரேமை கொண்டாலும் அது என் அதிகார எல்லையைச் சார்ந்தது” என்று Jurisdiction பேசினான் மன்மதன்.
“அம்மா, பரமேசுவரன் உன்னை விவாகம் செய்து கொண்டது என் வெற்றிதான். ஆனால் அவர் என்னைச் சாம்பலாகச் சுட்டெரித்ததுதான் லோகப் பிரசித்தமாயிருக்கிறதே ஒழிய, நான் அவரை ஜயித்தது எங்குமே பிரகடனமாகவில்லை. எல்லோருக்கும் மாதாவாக இருக்கிற நீதானம்மா, இந்தக் குழந்தையிடமும் கருணை கொண்டு, என்னை ஜயசாலி என்று பிரகடனப்படுத்த வேண்டும்” என்று காமாக்ஷியைப் பிரார்த்தித்தான் மன்மதன்.
கருணை நிறைந்த அம்பிகை அக்குழந்தைக்கு மனமிரங்கினாள்.
உடனே கைலாஸத்திலும், மற்றும் ஸகல க்ஷேத்திர சிவாலயங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளிலும் இருக்கிற தன்னுடைய சக்தியையெல்லாம் ஆகர்ஷித்து, இந்த பிலாகாசத்துக்குள் அடைத்துக் கொண்டு விட்டாள். கைலாஸத்தில் பார்வதியின் ஜீவசக்தியைக் காணவில்லை. அப்படியே பூலோகத்தில் எல்லா சிவன் கோயில்களிலும் உள்ள அம்பாள் மூர்த்திகளும் ஜீவகளை இழந்துவிட்டன. கைலாஸத்திலும், மற்ற க்ஷேத்திரங்களிலும் எழுந்தருளியிருக்கிற பரமேசுவரன் தம்முடைய பிரிய பத்தினியை இழந்து தவிக்க ஆரம்பித்து விட்டார். அவருக்கு மன்மதனின் ஆசையும் அம்பாளின் லீலையும் தெரியாதா? அவன் ஆசைப்பட்டபடிதான் இருக்கட்டுமே என்று அவரும் தவித்ததுபோல் நடித்தார். முன்பு தாம் எரித்த மன்மதனுக்கு விட்டுக்கொடுத்து விளையாடினார்; க்ஷேத்திரந்தோறும் இப்படி சிவன் தவிப்பதையும் கைலாஸத்திலும் அவர் பரிதவிப்பதையும் பார்த்த பிரம்மா காமாக்ஷியிடம் ஈஸ்வரனுக்காகப் பரிந்து தூது பேசினார்.
‘பரமேசுவரன் மன்மதாவஸ்தைக்கு ஆளாகித் தவிப்பது இப்போது ஜகப் பிரசித்தியாகிவிட்டது. மன்மதன் வேண்டியதும் இதுதான். அதற்காகவே இப்படி என்னுடைய சகல கலைகளையும் இங்கேயே ஆகர்ஷித்துக் கொண்டேன்’ என்று அம்பாள் பிரம்மாவுக்குக் கூறி, மறுபடியும் ஜீவகலையை கைலாசத்துக்கும் மற்ற சகல க்ஷேத்ரங்களுக்கும் அனுப்பி வைத்தாள். அவற்றில் அம்பிகையின் சாந்நித்தியம் உண்டாயிற்று. பரமேசுவரனும் தாபசமனமாகி திருப்தி அடைந்தார்.
இது “காமாக்ஷி விலாஸ”த்தில் காணப்படும் விருத்தாந்தம். இந்தப் புராண வரலாற்றுக்குச் சரித்திர ரீதியிலும் கல்வெட்டுகளில் நிரூபணம் ( proof ) இருக்கிறது.
அநேக சிவஸ்தலங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளுக்குக் ‘காமகோட்டம்’ என்ற பெயர் இருப்பதாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. சோழர் காலத்திலிருந்து பல அரசர்கள் இந்த சந்நிதிகளுக்குத் திருப்பணி செய்ததை சிலர் சாஸனமாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். அவிநாசி, விஜயமங்கலம், திருவொற்றியூர், திருக்காட்டுப்பள்ளி, வல்லம், திருப்பழனம், கோயிலாடி மாதிரி பல க்ஷேத்திரங்களில் உள்ள அம்பாள் சந்நிதிக் கல்வெட்டுகளில், அந்தந்த அம்பாளைப் பற்றிச் சொல்லும்போது, “திருக்காமக் கொட்டத்து நாச்சியார்”, “திருக்காமக் கொட்டமுடைய அழகமர் மங்கையார்”, “திருக்காமக் கொட்டமுடைய அகிலநாயகியார்” என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் குறிலைக் குறிக்கும் ஒற்றைக் கொம்பு, நெடிலைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு என்ற வித்தியாசமே கிடையாது. இதனால்தான் ‘காம கோட்டம்’ ‘காம கொட்டம்’ என்று இருக்கிறது. சிதம்பரத்திலும் இப்படி ஒரு தமிழ் கல்வெட்டு இருக்கிறது. அதோடு ஸம்ஸ்கிருதத்திலும், “காமகோஷ்ட ஸ்திதாயா;” என்று அங்குள்ள சிவ காமேசுவரியைச் சொல்லும் சாஸனம் இருக்கிறது.
எல்லா சக்தி கோட்டங்களிலும் இருந்த ஜீவகளை காஞ்சிபுரத்திற்கு இழுக்கப்பட்டு மறுபடியும் அங்கிருந்து அந்தந்த க்ஷேத்திரத்திற்கு அனுப்பப்பட்டதாகப் புராணம் சொல்லுகிறதல்லவா? அதாவது இப்போது நாம் எந்த ஒரு க்ஷேத்திரத்து அம்பாள் சந்நிதியிலும் அநுபவிக்கிற சாந்நித்தியமானது ஒரு காலத்தில் காஞ்சி காமாக்ஷியின் சந்நிதிக்கு இழுக்கப்பட்டு, பிறகு அங்கிருந்தே இந்த க்ஷேத்திரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகும். இப்படிக் காமக்கோட்டத்திலிருந்தே எல்லா ஸ்தலங்களுக்கும் ஜீவகளை வந்ததால்தான், இதர ஸ்தலங்களிலுள்ள அம்பாள் சந்நிதிகளையும் “காமகோட்டம்” என்றே குறிப்பிடுகிற வழக்கம் வந்திருக்க வேண்டும்.
இன்று ஆலங்குடி என்கிற, பழங்காலத் திருஇரும்பூளையில் ஞானசம்பந்தர் பாடியுள்ள தேவாரத்தில், “கச்சிப் பொலி காமக் கொடியுடன் கூடி” என்கிறார். முன்பே சொன்னதுபோல் குறில் – நெடில் கொம்பு வித்தியாசத்தை நினைத்தால், இங்கே காமகோடி என்பது ‘காமக்கோடி’ அல்லது ‘காமகோடி’ என்றேயிருக்கலாம். ஆலங்குடி அம்பாளை ‘காமகோடி’ என்று சொன்னதோடு மட்டுமின்றி, அது ஏதோ அந்த க்ஷேத்திரத்துக்கே சுபாவமாக ஏற்பட்ட பேர் அல்ல என்று தெளிவு படுத்துகிற மாதிரி, ‘கச்சிப்பொதி’ என்று காஞ்சீபுரத்தைப் பிரஸ்தாபிக்கிறார் ஞானசம்பந்தர். அப்பர் ஸ்வாமிகள் திருவதிகைத் திருத்தாண்டகத்தில் “கொழும் பவளச்செங்கனி வாய்க்காமக் கோட்டி” என்கிறார். இதிலிருந்தும், மற்ற க்ஷேத்திரங்களிலும் கூட காமாக்ஷியின் சக்தியே அருள்பாலித்தது என்று ஆகிறது. காம கொட்ட வாஸினி என்பதால் அப்பர், காமக்கோட்டி என்றார் போலிருக்கிறது.
‘காமகோடி’ வேறு. ‘காமக்கோட்டி’ வேறு. காமாக்ஷியின் இருப்பிடமான கோட்டம் காமகோட்டம். கர்மங்கள் எல்லாம் முடிந்து போகிற கோடியாக, அதாவது ஞான ஸ்வரூபமாக இருப்பது காமகோடி. காமாக்ஷியேதான் காமகோடி. மூர்த்தியாகச் சொல்லுகிறபோது காமாக்ஷி. பீடமாகச் சொல்லும்போது காமகோடி. காமாக்ஷி சந்நிதியில் காமகோடி பீடம் இருக்கிறது. பாகவதத்தில் பரசுராமனின் தீர்த்த யாத்தரையின்போது, அவர் காஞ்சிபுரத்திற்கு வந்ததைக் கூறுகையில், ‘காமகோடி புரியான காஞ்சிக்கு’ என்றே சொல்லியிருக்கிறது. (காமகோடி புரீம் காஞ்சீம்) காஞ்சிபுரத்தில் ஏராளமான சிவ, விஷ்ணு ஆலயங்கள் இருந்தாலும், அம்பாளின் காமகோடி புரியாகவே அது ஆதி காலத்திலிருந்து விசேஷிக்கப்பட்டிருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.
இதர க்ஷேத்திரங்களில் அம்பாள் சாந்நித்தியத்தை மறுபடியும் ஏற்படுத்திய காமாக்ஷி மன்மதன் வெற்றிக்குக் காஞ்சியில் மட்டும் சாசுவதமான அடையாளம் இருக்க வேண்டும் என்று கருணை கொண்டாள். அதனால் காஞ்சீபுரத்தில் மட்டும் எந்தச் சிவாலயத்திலும் அம்பாள் சந்நிதி இருக்கலாகாது என்றும், மன்மதன் சிவனை ஜயித்ததற்கு அடையாளமாகக் காஞ்சிக்கு ‘சிவஜித்’ க்ஷேத்திரம் என்று பெயர் வழங்க வேண்டும் என்று உத்திரவிட்டாள். இப்படிச் செய்தால், ஏன் இந்தக் காஞ்சி மண்டலத்தில் ஒரு சிவன் கோவிலில்கூட அம்பாள் சந்நிதி இல்லை? இதற்கு ஏன் சிவஜித் க்ஷேத்திரம் என்று பெயர் இருக்கிறது? என்று எல்லோரும் யோசிப்பார்கள் அல்லவா? அப்போது புராணத்தை, அல்லது புராணம் பார்த்தவர்களைக் கேட்பார்கள். உடனே இது மன்மதனுக்கு அம்பாள் தந்த வரப்பிரசாதம் என்று பதில் தெரியும். அதாவது மன்மதன் பிரார்த்தித்தப்படி அவனுடைய வெற்றி என்றென்றும் லோகத்தில் விளங்கும். இப்படித் தீர்மானம் பண்ணி, அபச்சாரம் பண்ணின மன்மதனுக்கும் அநுக்கிரஹம் செய்தாள் அம்பாள். இன்றைக்குக்கூட காஞ்சியில் எத்தனையோ சிவாலயங்கள் இருந்தும், காமாக்ஷீ கோவிலைத் தவிர வேறு அம்பாள் சந்நிதியே கிடையாது.
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் காஞ்சீபுரத்தில் உள்ள ஓணகாந்தன்தளியில் பாடும்போது
வாரிருங்குழல் வாள்நெடுங்கண் மலைமகள்,
மதுவிம்மு கொன்றைத்
தாரிரும் தடமார்பு நீங்காக் தையலாள்,
உலகுய்யவைத்த
காரிரும்பொழில் கச்சிமூதூர்க் காமகோட்டம்
உண்டாக நீர்போய்
ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே,
ஓணகாந்தன் தளியுளீரே.
என்கிறார். இந்தத் ‘தளி’ அல்லது கோயிலுக்குத் தனியாக அம்பாள் இல்லாததால்தான், ‘உலகுக்கெல்லாம் சோறு போடுகிற காம கோட்டத்துக் காமாக்ஷி இருக்க, நீ ஏன் பிக்ஷாடனனாகக் கப்பரையோடு திரிகிறாய்?’ என்று பரமேசுவரனைக் கேட்கிறார். காமாக்ஷி ஞானப் பிரதமான தெய்வம் மட்டுமில்லை. ஞானப்பால் தருவதோடு அன்ன பூர்ணேசுவரியாக உலகுக்கெல்லாம் சோறும் போடுகிறாள். இரு நாழி நெல்லைக் கொண்டு அவள் முப்பத்திரெண்டு அறங்களையும் ஆற்றினாள் என்று தமிழ் நூல்கள் சொல்லும். அவள் நமக்குச் சோறு போடுவாள். நம் காமனைகளை எல்லாம் கடாக்ஷத்தால் நிறைவேற்றித் தருவாள். “காமாக்ஷி” என்றாலே நம் ஆசைகளைத் தன் கடாக்ஷத்தால் நிறைவேற்றுபவள் என்றும் ஓர் அர்த்தமாகும்.
காமனுக்கு அநுக்கிரஹம் செய்து, பரமேசுவரனைக் காமேசுவரனாக்கிய அந்த சிவகாம சுந்தரியைத் தியானித்தால், நம்முடைய ஆசைகள், காமங்கள் எல்லாமே கடைசியில் அழிந்து போகும். அவளுடைய கடாக்ஷம் கிடைத்துவிட்டால் அதன்பின் எவ்வளவு ஆசையை உண்டு பண்ணக்கூடிய வஸ்துவும், நமக்கு ஆசை உண்டாக்காது. காமம், குரோதம், லோபம் (பணத்தாசை), மோகம், மதம், மாத்சரியம் (பொறாமை) ஆகிய துர்குணங்களில் ஒன்றும் இல்லாமல் நம் சித்தம் பரிசுத்தம் ஆவதற்கு அவளையே பிரார்த்திக்க வேண்டும்.
ஸர்வ வியாபினியாக இருக்கிற பரப்பிரம்ம சக்தியான அம்பாள், காஞ்சீ மகா க்ஷேத்திரத்தில் விசேஷ சாந்நித்தியத்தோடு காமாக்ஷியாக எழுந்தருளியிருப்பதை அறிந்து கொண்டான். பூலோகத்தை ஒரு ஸ்திரீயாகப் பாவித்தால் அவளுக்குப் பூட்டிய ஒட்டியாணம் மாதிரி காஞ்சீபுரம் உலகத்தின் மையமாக இருக்கிறது. காஞ்சீ என்றால் ஒட்டியாணம் என்றே அர்த்தம். அதில் நாபி ஸ்தானத்தில் காமாக்ஷியின் வாஸஸ்தானமான கர்ப்பகிருஹம் இருக்கிறது. அதற்குப் பேர் பிலாகாசம். பிலம் என்றால் குகை. நாபிக்கொடியிலிருந்து கர்ப்பத்திலிருக்கிற குழந்தை ஆகாரம் பெறுகிற மாதிரி, சகல ஜீவராசிகளும் இந்த பிலாகாசத்திலிருந்துதான் அம்பாளின் அநுக்கிரஹத்தால் சகல சக்திகளையும் பெறுகிறார்கள்.
ஆகாசம் என்பதே ஆத்ம ஸ்வரூபம். எங்கும் பரவியிருக்கும் வெளியை மாஹாகாசம் என்பார்கள். அந்த வெளியே நமக்குள்ளே ஆத்மாவாக, ஞான மயமாக இருக்கிறபோது, பேரம்பலம் சிற்றம்பலமாகிறது. மஹாகாசம் தஹராகாசமாகிறது. சிதம்பரம் என்பதும் அதுதான். சித் என்றால், ஞானம், அம்பரம் என்றால் ஆகாசம். நம்மை நாமே அறிந்து கொள்ளும் ஞானம் உண்டாகும்போது, நம்முடைய சகல எண்ணங்களுக்கும் மூலமான வஸ்து, நம்முடைய சுவாசத்துக்கும் மூலமாக இருதய ஆகாசமாக இருப்பதை அநுபவிக்க முடியும்.
லோகத்தையே ஒரு புருஷ வடிவமாகக் கொண்டால் அந்த விராட் புருஷனின் இருதய ஸ்தானம்தான் சிதம்பர க்ஷேத்திரத்தில் ரகசியமாக உள்ள ஆகாசம். “சிதம்பர ரஹஸ்யம்” என்றே அதைச் சொல்வார்கள். அதுவேதான் காஞ்சிபுரத்தில் பிலாகாசமாகவும் இருக்கிறது. “காம கோஷ்டம்” என்று சமஸ்கிருதத்திலும், “காமகோட்டம்” என்று தமிழிலும் சொல்லப்படுகிற காமாக்ஷி ஆலயத்தின் கர்ப்பகிருஹத்தில் பிலாகாசம் இருந்தாலும், அதன் சக்தி காஞ்சி மண்டலம் முழுவதுமே பரவியுள்ளது. சிதம்பரத்தில் சித்சபையில் மட்டுமே ஞானாகாசம். இங்கோ காஞ்சீ மண்டலம் முழுக்க அது வியாபித்திருக்கிறது. புராணம் இப்படித்தான் சொல்கிறது.
பிலாகாச ரூபிணியான அம்பிகை காமனின் கரும்பு வில்லையும், மலர் பாணங்களையும் தானே தாங்கிக் காமாக்ஷியாக அமர்ந்திருக்கிறாள். ராஜராஜேஸ்வரியான அவளை வேண்டினால் தன் காரியம் நடக்கும் என்று தெரிந்து கொண்ட மன்மதன் காஞ்சிபுரத்திற்கு வந்து தபஸ் செய்தான்.
கருணாமூர்த்தியான அம்பாள் அவனுக்குப் பிரஸன்னமானாள்.
“அம்மா! என்னை பஸ்மம் செய்த அதே பரமேசுவரன் பிற்பாடு உன்னிடம் பிரேமை கொண்டான். காமத்துக்கு அதிகாரியாக என்னை நீதான் நியமித்தாய். அதனால் எவர் பிரேமை கொண்டாலும் அது என் அதிகார எல்லையைச் சார்ந்தது” என்று Jurisdiction பேசினான் மன்மதன்.
“அம்மா, பரமேசுவரன் உன்னை விவாகம் செய்து கொண்டது என் வெற்றிதான். ஆனால் அவர் என்னைச் சாம்பலாகச் சுட்டெரித்ததுதான் லோகப் பிரசித்தமாயிருக்கிறதே ஒழிய, நான் அவரை ஜயித்தது எங்குமே பிரகடனமாகவில்லை. எல்லோருக்கும் மாதாவாக இருக்கிற நீதானம்மா, இந்தக் குழந்தையிடமும் கருணை கொண்டு, என்னை ஜயசாலி என்று பிரகடனப்படுத்த வேண்டும்” என்று காமாக்ஷியைப் பிரார்த்தித்தான் மன்மதன்.
கருணை நிறைந்த அம்பிகை அக்குழந்தைக்கு மனமிரங்கினாள்.
உடனே கைலாஸத்திலும், மற்றும் ஸகல க்ஷேத்திர சிவாலயங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளிலும் இருக்கிற தன்னுடைய சக்தியையெல்லாம் ஆகர்ஷித்து, இந்த பிலாகாசத்துக்குள் அடைத்துக் கொண்டு விட்டாள். கைலாஸத்தில் பார்வதியின் ஜீவசக்தியைக் காணவில்லை. அப்படியே பூலோகத்தில் எல்லா சிவன் கோயில்களிலும் உள்ள அம்பாள் மூர்த்திகளும் ஜீவகளை இழந்துவிட்டன. கைலாஸத்திலும், மற்ற க்ஷேத்திரங்களிலும் எழுந்தருளியிருக்கிற பரமேசுவரன் தம்முடைய பிரிய பத்தினியை இழந்து தவிக்க ஆரம்பித்து விட்டார். அவருக்கு மன்மதனின் ஆசையும் அம்பாளின் லீலையும் தெரியாதா? அவன் ஆசைப்பட்டபடிதான் இருக்கட்டுமே என்று அவரும் தவித்ததுபோல் நடித்தார். முன்பு தாம் எரித்த மன்மதனுக்கு விட்டுக்கொடுத்து விளையாடினார்; க்ஷேத்திரந்தோறும் இப்படி சிவன் தவிப்பதையும் கைலாஸத்திலும் அவர் பரிதவிப்பதையும் பார்த்த பிரம்மா காமாக்ஷியிடம் ஈஸ்வரனுக்காகப் பரிந்து தூது பேசினார்.
‘பரமேசுவரன் மன்மதாவஸ்தைக்கு ஆளாகித் தவிப்பது இப்போது ஜகப் பிரசித்தியாகிவிட்டது. மன்மதன் வேண்டியதும் இதுதான். அதற்காகவே இப்படி என்னுடைய சகல கலைகளையும் இங்கேயே ஆகர்ஷித்துக் கொண்டேன்’ என்று அம்பாள் பிரம்மாவுக்குக் கூறி, மறுபடியும் ஜீவகலையை கைலாசத்துக்கும் மற்ற சகல க்ஷேத்ரங்களுக்கும் அனுப்பி வைத்தாள். அவற்றில் அம்பிகையின் சாந்நித்தியம் உண்டாயிற்று. பரமேசுவரனும் தாபசமனமாகி திருப்தி அடைந்தார்.
இது “காமாக்ஷி விலாஸ”த்தில் காணப்படும் விருத்தாந்தம். இந்தப் புராண வரலாற்றுக்குச் சரித்திர ரீதியிலும் கல்வெட்டுகளில் நிரூபணம் ( proof ) இருக்கிறது.
அநேக சிவஸ்தலங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளுக்குக் ‘காமகோட்டம்’ என்ற பெயர் இருப்பதாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. சோழர் காலத்திலிருந்து பல அரசர்கள் இந்த சந்நிதிகளுக்குத் திருப்பணி செய்ததை சிலர் சாஸனமாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். அவிநாசி, விஜயமங்கலம், திருவொற்றியூர், திருக்காட்டுப்பள்ளி, வல்லம், திருப்பழனம், கோயிலாடி மாதிரி பல க்ஷேத்திரங்களில் உள்ள அம்பாள் சந்நிதிக் கல்வெட்டுகளில், அந்தந்த அம்பாளைப் பற்றிச் சொல்லும்போது, “திருக்காமக் கொட்டத்து நாச்சியார்”, “திருக்காமக் கொட்டமுடைய அழகமர் மங்கையார்”, “திருக்காமக் கொட்டமுடைய அகிலநாயகியார்” என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் குறிலைக் குறிக்கும் ஒற்றைக் கொம்பு, நெடிலைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு என்ற வித்தியாசமே கிடையாது. இதனால்தான் ‘காம கோட்டம்’ ‘காம கொட்டம்’ என்று இருக்கிறது. சிதம்பரத்திலும் இப்படி ஒரு தமிழ் கல்வெட்டு இருக்கிறது. அதோடு ஸம்ஸ்கிருதத்திலும், “காமகோஷ்ட ஸ்திதாயா;” என்று அங்குள்ள சிவ காமேசுவரியைச் சொல்லும் சாஸனம் இருக்கிறது.
எல்லா சக்தி கோட்டங்களிலும் இருந்த ஜீவகளை காஞ்சிபுரத்திற்கு இழுக்கப்பட்டு மறுபடியும் அங்கிருந்து அந்தந்த க்ஷேத்திரத்திற்கு அனுப்பப்பட்டதாகப் புராணம் சொல்லுகிறதல்லவா? அதாவது இப்போது நாம் எந்த ஒரு க்ஷேத்திரத்து அம்பாள் சந்நிதியிலும் அநுபவிக்கிற சாந்நித்தியமானது ஒரு காலத்தில் காஞ்சி காமாக்ஷியின் சந்நிதிக்கு இழுக்கப்பட்டு, பிறகு அங்கிருந்தே இந்த க்ஷேத்திரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகும். இப்படிக் காமக்கோட்டத்திலிருந்தே எல்லா ஸ்தலங்களுக்கும் ஜீவகளை வந்ததால்தான், இதர ஸ்தலங்களிலுள்ள அம்பாள் சந்நிதிகளையும் “காமகோட்டம்” என்றே குறிப்பிடுகிற வழக்கம் வந்திருக்க வேண்டும்.
இன்று ஆலங்குடி என்கிற, பழங்காலத் திருஇரும்பூளையில் ஞானசம்பந்தர் பாடியுள்ள தேவாரத்தில், “கச்சிப் பொலி காமக் கொடியுடன் கூடி” என்கிறார். முன்பே சொன்னதுபோல் குறில் – நெடில் கொம்பு வித்தியாசத்தை நினைத்தால், இங்கே காமகோடி என்பது ‘காமக்கோடி’ அல்லது ‘காமகோடி’ என்றேயிருக்கலாம். ஆலங்குடி அம்பாளை ‘காமகோடி’ என்று சொன்னதோடு மட்டுமின்றி, அது ஏதோ அந்த க்ஷேத்திரத்துக்கே சுபாவமாக ஏற்பட்ட பேர் அல்ல என்று தெளிவு படுத்துகிற மாதிரி, ‘கச்சிப்பொதி’ என்று காஞ்சீபுரத்தைப் பிரஸ்தாபிக்கிறார் ஞானசம்பந்தர். அப்பர் ஸ்வாமிகள் திருவதிகைத் திருத்தாண்டகத்தில் “கொழும் பவளச்செங்கனி வாய்க்காமக் கோட்டி” என்கிறார். இதிலிருந்தும், மற்ற க்ஷேத்திரங்களிலும் கூட காமாக்ஷியின் சக்தியே அருள்பாலித்தது என்று ஆகிறது. காம கொட்ட வாஸினி என்பதால் அப்பர், காமக்கோட்டி என்றார் போலிருக்கிறது.
‘காமகோடி’ வேறு. ‘காமக்கோட்டி’ வேறு. காமாக்ஷியின் இருப்பிடமான கோட்டம் காமகோட்டம். கர்மங்கள் எல்லாம் முடிந்து போகிற கோடியாக, அதாவது ஞான ஸ்வரூபமாக இருப்பது காமகோடி. காமாக்ஷியேதான் காமகோடி. மூர்த்தியாகச் சொல்லுகிறபோது காமாக்ஷி. பீடமாகச் சொல்லும்போது காமகோடி. காமாக்ஷி சந்நிதியில் காமகோடி பீடம் இருக்கிறது. பாகவதத்தில் பரசுராமனின் தீர்த்த யாத்தரையின்போது, அவர் காஞ்சிபுரத்திற்கு வந்ததைக் கூறுகையில், ‘காமகோடி புரியான காஞ்சிக்கு’ என்றே சொல்லியிருக்கிறது. (காமகோடி புரீம் காஞ்சீம்) காஞ்சிபுரத்தில் ஏராளமான சிவ, விஷ்ணு ஆலயங்கள் இருந்தாலும், அம்பாளின் காமகோடி புரியாகவே அது ஆதி காலத்திலிருந்து விசேஷிக்கப்பட்டிருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.
இதர க்ஷேத்திரங்களில் அம்பாள் சாந்நித்தியத்தை மறுபடியும் ஏற்படுத்திய காமாக்ஷி மன்மதன் வெற்றிக்குக் காஞ்சியில் மட்டும் சாசுவதமான அடையாளம் இருக்க வேண்டும் என்று கருணை கொண்டாள். அதனால் காஞ்சீபுரத்தில் மட்டும் எந்தச் சிவாலயத்திலும் அம்பாள் சந்நிதி இருக்கலாகாது என்றும், மன்மதன் சிவனை ஜயித்ததற்கு அடையாளமாகக் காஞ்சிக்கு ‘சிவஜித்’ க்ஷேத்திரம் என்று பெயர் வழங்க வேண்டும் என்று உத்திரவிட்டாள். இப்படிச் செய்தால், ஏன் இந்தக் காஞ்சி மண்டலத்தில் ஒரு சிவன் கோவிலில்கூட அம்பாள் சந்நிதி இல்லை? இதற்கு ஏன் சிவஜித் க்ஷேத்திரம் என்று பெயர் இருக்கிறது? என்று எல்லோரும் யோசிப்பார்கள் அல்லவா? அப்போது புராணத்தை, அல்லது புராணம் பார்த்தவர்களைக் கேட்பார்கள். உடனே இது மன்மதனுக்கு அம்பாள் தந்த வரப்பிரசாதம் என்று பதில் தெரியும். அதாவது மன்மதன் பிரார்த்தித்தப்படி அவனுடைய வெற்றி என்றென்றும் லோகத்தில் விளங்கும். இப்படித் தீர்மானம் பண்ணி, அபச்சாரம் பண்ணின மன்மதனுக்கும் அநுக்கிரஹம் செய்தாள் அம்பாள். இன்றைக்குக்கூட காஞ்சியில் எத்தனையோ சிவாலயங்கள் இருந்தும், காமாக்ஷீ கோவிலைத் தவிர வேறு அம்பாள் சந்நிதியே கிடையாது.
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் காஞ்சீபுரத்தில் உள்ள ஓணகாந்தன்தளியில் பாடும்போது
வாரிருங்குழல் வாள்நெடுங்கண் மலைமகள்,
மதுவிம்மு கொன்றைத்
தாரிரும் தடமார்பு நீங்காக் தையலாள்,
உலகுய்யவைத்த
காரிரும்பொழில் கச்சிமூதூர்க் காமகோட்டம்
உண்டாக நீர்போய்
ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே,
ஓணகாந்தன் தளியுளீரே.
என்கிறார். இந்தத் ‘தளி’ அல்லது கோயிலுக்குத் தனியாக அம்பாள் இல்லாததால்தான், ‘உலகுக்கெல்லாம் சோறு போடுகிற காம கோட்டத்துக் காமாக்ஷி இருக்க, நீ ஏன் பிக்ஷாடனனாகக் கப்பரையோடு திரிகிறாய்?’ என்று பரமேசுவரனைக் கேட்கிறார். காமாக்ஷி ஞானப் பிரதமான தெய்வம் மட்டுமில்லை. ஞானப்பால் தருவதோடு அன்ன பூர்ணேசுவரியாக உலகுக்கெல்லாம் சோறும் போடுகிறாள். இரு நாழி நெல்லைக் கொண்டு அவள் முப்பத்திரெண்டு அறங்களையும் ஆற்றினாள் என்று தமிழ் நூல்கள் சொல்லும். அவள் நமக்குச் சோறு போடுவாள். நம் காமனைகளை எல்லாம் கடாக்ஷத்தால் நிறைவேற்றித் தருவாள். “காமாக்ஷி” என்றாலே நம் ஆசைகளைத் தன் கடாக்ஷத்தால் நிறைவேற்றுபவள் என்றும் ஓர் அர்த்தமாகும்.
காமனுக்கு அநுக்கிரஹம் செய்து, பரமேசுவரனைக் காமேசுவரனாக்கிய அந்த சிவகாம சுந்தரியைத் தியானித்தால், நம்முடைய ஆசைகள், காமங்கள் எல்லாமே கடைசியில் அழிந்து போகும். அவளுடைய கடாக்ஷம் கிடைத்துவிட்டால் அதன்பின் எவ்வளவு ஆசையை உண்டு பண்ணக்கூடிய வஸ்துவும், நமக்கு ஆசை உண்டாக்காது. காமம், குரோதம், லோபம் (பணத்தாசை), மோகம், மதம், மாத்சரியம் (பொறாமை) ஆகிய துர்குணங்களில் ஒன்றும் இல்லாமல் நம் சித்தம் பரிசுத்தம் ஆவதற்கு அவளையே பிரார்த்திக்க வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
காமாக்ஷியின் கண்கள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
நம் அவயவங்களில் கண் மிகவும் முக்கியம். ‘என் கண்ணே’ என்று பிரியமானவர்களைச் சொல்கிற மாதிரி ‘காதே, மூக்கே’ என்பதில்லை அல்லவா? அம்பாள் என்பதாகப் பரமாத்மா மூர்த்திகரிக்கிறபோது அவளுடைய கண் எத்தனை முக்கியமாகும்? காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்கிறபோது அக்ஷி என்பது அவளது கண் விசேஷத்தையே சொல்கிறது.
காமாக்ஷியின் கைகளில் மன்மதனின் வில்லும் அம்பும் இருப்பதாகச் சொல்கிறோம். அவளுடைய கைகளில் மட்டுமில்லை, கண்களிலும்கூட இவையே இருக்கின்றன என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கவித்வ நயத்தோடு சொல்கிறார். (‘ப்ருவெளபுக்நே கிஞ்சித்’ என்கிற ஸ்லோகம்)
என்ன சொல்கிறார்? அம்பாளுடைய புருவம் கொஞ்சம் நெரிந்திருக்கிறதாம். கவலை இருந்தால்தான் புருவம் நெரியும். லோக மாதாவுக்கு ஜனங்கள் எல்லோரும் கெட்டுப்போகிறார்களே, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலை. அதனால் புருவம் வளைந்திருக்கிறது. அம்பாளுடைய பரம லக்ஷணமான புருவங்கள் வில் மாதிரி இருக்கின்றன. இரண்டு வளைந்த பாகங்களைக் கொண்ட தனுஸைப் போல் அவை உள்ளன. ஆனால் புருவ மத்தியில், அதாவது நாசி தொடங்கும் இடத்துக்கு மேலே ரோமம் இல்லை. ரோமம் இருந்தால் அது உத்தமமல்ல! சாமுத்திரிகா லக்ஷணம் ஆகாது. கூடின புருவம் கெடுதல் உண்டாக்கும் என்பார்கள். அம்பாளுடைய புருவங்களின் மத்தியில் ரோமமில்லாதது உத்தம ஸ்திரீ லக்ஷணம்தான். ஆனால் இது புருவங்களை வில்லுக்கு உவமிக்கும்போது அவ்வில்லுக்கு நடுவே ஊனம் செய்தாற்போல் தோன்றலாம். அப்படி ஊனம் தோன்றாமல் ஆசார்யார் ஒரு காரணம் சொல்கிறார். வில் என்று ஒன்று இருந்தால், அதை எய்கிறவன், அதன் மத்தியில் தன் முஷ்டியால் அதைப் பிடித்துக் கொண்டுதானே நாணில் அம்பு பூட்டி இழுப்பான்? முஷ்டி பிடித்திருக்கிற இடம் வில்லின் இரண்டு பாகங்களுக்கு மத்தியில் அந்த வில்லை மறைக்கத்தானே செய்யும்? இப்படித்தான் அம்பாளின் புருவ வில்லையும் எவனோ மத்தியில் பிடித்துக்கொண்டு அம்பைப் பூட்டுகிறான். அவனுடைய முஷ்டி உள்ள அந்த மத்ய பாகம்தான் ரோமம் இல்லாத இடைவெளி என்கிறார்.
இப்படி அம்பாளின் புருவத்தை வில்லாக வளைப்பவன் யார்? மன்மதன்தான். அவனுடைய கரும்பு வில் போலத்தான் கருணையால் வளைந்த லோக மாதாவின் புருவம் இருக்கிறது. மன்மதனுடைய வில்லுக்கு வண்டுகள் தானே நாண் கயிறு. அதற்கேற்றாற்போல் இந்த புருவத்துக்குக் கீழே அம்பாளுடைய வண்டு விழிகள் இப்படியும் அப்படியும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒருத்தரும் விட்டுப் போகாமல் ஸமஸ்த பக்தர்களுக்கும் அநுக்கிரஹம் செய்ய வேண்டுமென்பதால் அவை இப்படிச் சஞ்சரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நாணிலும், வில்லிலும் மன்மதன் தன்னுடைய சக்தியை வைத்து எய்கிறான். அதனால்தான் ஞான மூர்த்தியாயிருந்த பரமேசுவரன் அம்பாளிடம் பிரேமை கொண்டான். அதனால் ஜீவப் பிரபஞ்சம் முழுதிடமும் அன்புகொண்டான். ஆசையில்லாத பிரம்மம் அசைந்துகொடுத்து, சகல ஜனங்களையும் ரக்ஷித்தது; அம்பாளுடைய கவலையும் தீர்ந்தது.
வில்லைப் பிடித்த மன்மதன் முஷ்டி அம்பிகையின் புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியாகவும், அவனுடைய மணிகட்டு நாண் கயிறான வண்டு விழிகளுக்கு நடுவில் நாசியின் அடிப்பாகமாகவும் ஆகிவிட்டது. இப்படி ஆசார்யாள் துதிக்கிறார்.
ஈசுவரனின் மீது காம பாணத்தை போடும் அந்தக் கண்களேதான் பக்தர்களைக் கடாக்ஷிக்கும்போது காமத்தைத் துவம்ஸம் செய்து ஞானத்தைப் பொழிகின்றன. மன்மத பாணங்கள் என்பவை என்ன? தாமரை, மல்லிகை, கருங்குவளை, மாம்பூ, அசோக புஷ்பம் ஆகியவைதான் அவனுடைய அம்புகள். ரூபம், ரஸம், கந்தம், ஸ்பரிசம் ஆகிய நான்கால் நம்முடைய நான்கு இந்திரியங்களை ஆகர்ஷிப்பது புஷ்பம். அதன் அழகு கண்ணுக்கும், அதில் சுரக்கிற தேனின் ரஸம் நாக்குக்கும், வாசனை மூக்கிற்கும், மென்மை தொடு உணர்ச்சிக்கும், இன்பம் தருகின்றன. பாக்கி இருக்கிற இந்திரியம் காது. அதற்குதான் வண்டு நாண் – அது எப்போதும் ரீங்காரம் செய்வது. இந்த ஐந்துக்கும் மேலே கரும்பு வில் – அதுதான் எல்லா இந்திரிய சேஷ்டைக்கும் காரணமான மனம்.
வெறும் பூவையும், கரும்பையும், வண்டையும் வைத்துக் கொண்டு மன்மதன் ஸமஸ்த ஜீவராசிகளையும் இந்திரிய வியாபாரத்தால் இழுத்துத் தள்ளுகிறான் என்றால் என்ன அர்த்தம்? ஸாக்ஷாத் பராசக்தியின் அநுக்கிரஹம் இருந்துவிட்டால், வல்லவனுக்குப் புல்லும் ஆயதமாகிவிடும் என்று அர்த்தம். உலக லீலை நடப்பதற்கே அவனுக்கு இந்தச் சக்தியை அநுக்கிரஹித்தாள். ஆகவே கவித்வ அழகுக்காக அவன் அவள் புருவத்தை வளைத்து அம்பு எய்வதாகச் சொன்னாலும் அவள்தான் அவனுக்கும் சக்தி தந்தவள். அவளுடைய சக்தியால்தான் அவன் நம் இந்திரியங்களை வெறித்தோடச் செய்கிறான். இதிலிருந்தே அவளுடைய கிருபை இருந்தால் தான் இந்த இந்திரியங்களை வசமாக்கி, ஓடாமல் நிறுத்த முடியும் என்றும் ஏற்படுகிறது.
தண்டிப்பது, காப்பாற்றுவது (சிக்ஷணை, ரக்ஷணை) இரண்டும் செய்கிறவன்தான் பிரபு. நம் கர்மத்துக்காக நம்மை ஆட்டிவைத்து சிக்ஷிக்கிறாள். காமனை அதிகாரியாகக் கொண்டு அவனுக்கும் ஜயம் வாங்கித் தருகிறாள். அந்தக் காமன் நம்மிடம் வாலாட்ட முடியாதபடி நாம் காம ஜயம் செய்யவும் அவளே கதி. அந்த ரக்ஷணையைச் செய்ய வேண்டுமென்றே லோகமாதாவான அவள் எப்போதும் கவலையோடு புருவ வில்லை வளைத்துக்கொண்டு அம்பு என்கிற பாணத்தை வீசிப் பரமேசுவரனைக் கருணையில் திருப்பிக் கொண்டிருக்கிறாள்.
அம்பாளுடைய கண்களிலிருந்து பொங்குகிற கடாக்ஷம் ஸ்ரீ ஆசார்யாளிடம் பூரணமாகப் பொலிந்துகொண்டிருந்த போது, அவரது வாக்கிலிருந்து ஒரு சுலோகம் வந்தது. இதுவும் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் இருக்கிறது. ‘த்ருசா த்ராகீயஸ் யாதரதளித நீலோத்பல ருசா’என்ற சுலோகம். அவளுடைய கடாக்ஷம் இல்லாமல் இப்படிப்பட்ட அமிருதம் போன்ற சுலோகம் பிறக்க முடியாது. ஆனால் இந்த சுலோகத்திலோ ஆசார்யாள் அம்பாளின் கடாக்ஷம் தமக்குக் கிட்ட வேண்டுமென்றே பிரார்த்திக்கிறார். தமக்குக் கிட்ட வேண்டும் என்று மட்டுமில்லை, ‘தமக்கும்கூட கிட்டவேண்டும்’ என்கிறார் – பக்தியிலும் ஞானத்திலும் சிகரமாக இருந்தும் துளிகூட அகம்பாவமே இல்லாத நம் ஆசார்யாள்.
காமாக்ஷியின் கடாக்ஷ வீக்ஷண்யத்தின் பெருமையை இந்த சுலோகத்தில் சொல்லுகிறார். அவளுடைய கண் பார்வை எத்தனை தூரமும் தாண்டி விழுமாம் – ‘த்ருசா த்ரா கீயஸ்வா’ என்கிறார். ஒரு தாயார்க்காரி பச்சைக் குழந்தைகளைத் தன்பார்வைக்குள்ளேதான் வைத்துக் கொள்வாள். அம்பாளுக்கும் நாம் எல்லோரும் பச்சை குழந்தைகள்தான். பெரிய பெரிய காரியம் சாதித்தவர்கள், அகடவிகடம் செய்கிறவர்கள், எல்லோரும்கூட அவளுக்குப் பச்சைக் குழந்தைகள்தான். மிருகங்கள், பட்சிகள், புல்பூண்டு எல்லாவற்றுக்கும் தாயார்க்காரி அவள். எல்லையில்லாத பிரபஞ்சத்துக்கு அம்மா அவளே. இத்தனையும் அவள் பார்வைக்குள்தான் இருக்கின்றன. எனவே அவளுடைய கடாக்ஷத்துக்கும் எல்லையில்லை. அது நீண்டு நீண்டுபோய், தகுதியே இல்லை என்று எட்டாத் தொலைவில் நிற்கிறவர்கள் மீதும் விழுகிறது. அந்தக் கண்கள் பாதி மூடி, பாதி விரிந்திருக்கிற “நீலோத்பல புஷ்பம்” மாதிரி இருக்கின்றனவாம். ஜலத்தில் நனைந்த நீலோத்பலம் மாதிரி பரம சீதளமாக இருக்கிறது, அவளுடைய திருஷ்டி. நீண்ட நேத்திரங்கள், நீலமான நேத்திரங்கள், குளிர்ந்த நேத்திரங்கள் – இதனால் நீலோத்பலத்தை உவமிக்கிறார். ‘இப்படி நீள நெடுக எங்குப் பார்த்தாலும் போய்க் கொண்டிருக்கும் உன் கடாக்ஷப்பிரவாகத்தில் என்னையும்கூட முழுகும்படியாக செய்தருளேன்’ என்கிறார். ‘மாம் அபி’ – ‘என்னைக்கூட’ என்கிறார். “எனக்கு உன் கடாக்ஷம் கிடைக்க நியாயமே இல்லை என்றாலும் தீனனான என்னையும் உன் பார்வையால் ஸ்நானம் பண்ணி வையம்மா” என்கிறார். ‘தீனம்’, ‘மாமபி’ என்று மிகமிக விநயத்துடன் சொல்லுகிறார் பரமேசுவராவதாரமான ஆசார்யாள். ‘எனக்கு யோக்கியதை இல்லாவிட்டாலும் ஏன் கேட்கிறேன் என்றால், இப்படிக் கடாக்ஷிப்பதால் உனக்கு ஒன்றும் நஷ்டம் வந்துவிடவில்லை என்பதாலேயே கேட்கிறேன்’ என்கிறார். தோஷமுள்ளவர்களைப் பார்த்தாலும்கூட அவளுடைய பார்வைக்குத் தோஷம் வராது – எந்த ஹானியும் வராது. ந ச தே ஹாநிரியதா, ‘உனக்கு நஷ்டமில்லை என்பது மட்டுமில்லை; எனக்கோ இதனால் பரம லாபம் சித்திக்கிறது; நான் தன்யனாகிறேன்’ என்கிறார். ‘அனேனாயம் தன்யோ பவதி’. தனத்தை உடையவன் தன்யன். அம்பாளின் கடாக்ஷத்தால் அருட்செல்வம் என்ற தனம் கிடைக்கிறது, அதற்குமேல் பெரிய செல்வம் எதுவுமில்லை.
‘தகுதியைப் பார்க்காமல் கடாக்ஷிப்பாய்’ என்றதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறார். பூரண சந்திர ஒளிபிரகாசிக்கிறது. அது வித்தியாசம் பாராட்டாமல் எல்லா இடங்களிலும் ஒரே போல் அமிருதமான நிலாவைக் கொட்டுகிறது – சக்கரவர்தியின் மாட மாளிகை நிலா முற்றத்தில் சந்திரிகையைப் பொழிகிறது. அதே போல் ஒரே முள்ளுப்புதர் மண்டிய காட்டிலும் நிலவைப் பொழிகிறது. உப்பரிகையில் விழுந்ததால் அரண்மனையின் சௌகரியங்கள் நிலாவைச் சேரவில்லை. காட்டில் விழுந்ததால் அதற்கு முள் குத்தவும் இல்லை. இப்படித்தான் அம்பாளின் கடாக்ஷம் எங்கு விழுந்தாலும் அதற்குக் கூடுதல் குறைவு இவை இல்லை. என் மேல் அது விழுந்தால் ஒன்றும் குறைந்துவிடாது. நானோ அதன் ஸ்பரிசத்தால் நிறைந்தவனாகிவிடுவேன். உனக்கு ஒரு நஷ்டமும் இல்லாமலே எனக்குப் பரம லாபம் கிடைக்கிறது. அதனால் என்னையும் உன் கடாக்ஷத்தில் முழுக்கடிப்பாய் அம்மா என்கிறார்.
என்னையும் என்று ‘உம்’ போட்டுச் சொன்னது நம்மையெல்லாம் உத்தேசித்துச் சொன்னதுதான். அம்பாளும் ஈஸ்வரனும் ஆசாரியாளும் ஒன்றேதான். அப்படிப்பட்ட ஆசார்யாள் பரம கருணையினால் நம்மோடு சேர்ந்து நின்று கொண்டு நமக்காக இந்த சுலோகத்தை அநுக்கிரகித்திருக்கிறார். மனமாரப் பிரார்த்தித்து விட்டால், எத்தனை யோக்கியதை இல்லாதவர்களையும் அம்பாள் கடாக்ஷிக்கிறாள்; நிலாப்போலவும் நீலோத்பலம் போலவும் குளிர்ந்தது அவளது கடாக்ஷம். அது எவரையும் கைதூக்கிவிடும் என்று நமக்குக் காட்டிக் கொடுக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
அம்பாளின் ஸ்வரூபம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
“நீதான் பரமேசுவரன் சரீரம்” என்று ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிறார். சரீரத்திற்குள் உயிர் இருக்கிறது. பல சரீரங்களுக்குள் பல உயிர்கள் இருக்கின்றன. இத்தனை உயிர்களுக்கெல்லாமும் உயிராக ஒரே மூல வஸ்துதான் இருக்கிறது. அந்த மூல வஸ்துவான பிரம்மம்தான் பரமேசுவரன் என்றால், அதன் இத்தனை தோற்றங்களுமே பராசக்தி. இது அவ்வளவும் அதற்குச் சரீரமாகவும், அது இவற்றுக்குப் பிராணனாகவும் இருக்கிறது. பிரபஞ்சம், அதிலுள்ள ஜீவராசிகள் அவற்றின் மனசு, புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் பரமேசுவரன் என்ற உயிருக்குச் சரீரம் மாதிரி. இது அத்தனையும் ஸாக்ஷாத் அம்பாள்தான். உடலும் உயிரும் மாதிரி பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரியாமல் இருக்கின்றன. உடலில் எல்லா இடங்களிலும் உயிர் ஓடுகிற மாதிரி பராசக்திக்குள் முழுக்க பிரம்ம தத்வமேதான் நிறைந்திருக்கிறது. அந்த பிரம்மத்துக்கே ஒர் உடம்பு கொடுத்துப் பரமேசுவரன் என்று வைத்தால், அந்த உடம்புக்குச் சாத்திய கவசமாக இருக்கிறவள் அம்பாள். கர்ணகவசம் மாதிரி, பிரிக்கவே முடியாத கவசம்.
அம்பாள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாமல் கலந்திருப்பதைத்தான் ஒரு மாதிரியாக, இவள் பாதி – அவர் பாதியாக ஒன்று சேர்ந்ததுபோல் அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில் பார்க்கிறோம். சொல்லும் பொருளும் போல் ஈசுவரனும் அம்பிகையும் பிரிக்க முடியாமல் ஐக்கியமாயிருக்கிறார்கள் வாக் அர்த்தாவிவ – என்று மகாகவி காளிதாஸர் சொல்கிறார். நான் ‘பசு’ என்று சொன்னால் அது ‘ப’ என்கிற ஒரு சப்தமும் ‘சு’ என்கிற ஒரு சத்தமும்தான். சொல்லின் சத்தத்திலோ எழுத்திலோ அந்த மிருகம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது? எப்படியிருக்கிறது, என்று கேட்டால் எப்படிச் சொல்வது? எப்படியிருக்கிறது, எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த வார்த்தையைச் சொன்னவுடன் பசுவின் நினைவு உண்டாகிறது. வாக்கும், அர்த்தமும் பிரிக்க முடியாதபடி இருக்கின்றன. இப்படித்தான் பிரபஞ்சத்தில் ஜீவராசிகளில் அவற்றின் எண்ணங்கள் காரியங்கள் ஆகியவற்றில் பிரம்மம் எங்கே எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் இவை எல்லாம் ‘சொல்’ என்றால் ‘பொருளாக’ அந்த மூலப்பொருள் இருக்கிறது.
அம்பாளுடைய ஸ்வரூபம் என்ன என்றால் நாம் பார்க்கிற அத்தனை உருவங்களும்தான். உருவங்கள் மட்டுமில்லை. எண்ணங்கள், காரியங்கள் எல்லாமும் அவள்தான். அவளின்றி நம் சரீரம், மனசு, உயிர் எதுவுமில்லை. ‘சரீரம் த்வம் சம்போ:– நீ பரமேசுவரனின் சரீரமாயிருக்கிறாய்’ என்று சௌந்தரிய லஹரியில் சொல்கிற ஆசார்யாள் அடுத்த ஸ்லோகத்தில் நீதான் சூக்ஷ்மமான மனதாய் இருக்கிறாய் என்கிறார். அந்த மூலமான மனஸிலிருந்து, சூக்ஷ்மமான ஆகாசம் உண்டாகிறது. அது மேலும் மேலும் ஸ்தூலமாகி, காற்று, அக்னி, ஜலம், மண் எல்லாம் வந்தன. இதெல்லாமும் நீதான் என்கிறார். நீ இல்லாமல் வேறு வஸ்து எதுவுமே இல்லை என்கிறார்; த்வயி பரிணதாயாம் நஹி பரம்.
‘சம்பு’ என்ற உயிருக்கு நீ சரீரம் என்று சொன்னாலும், உயிர், உடல் என்ற பேதமில்லாமல் ஒன்றாக இருந்ததும் நீதான். நீயேதான் விசுவம் என்கிற சரீரமாகப் பரிணமித்தாய் – த்வம் ஏவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ வபுஷா.
இங்கே நம் சங்கராசாரியார் சொல்வது, ‘உலகம் எல்லாம் பரமாத்மாவுக்கு சரீரம்; உள்ளேயிருக்கிற உயிர், அந்தர்யாமி அவரே’ என்கிற ராமாநுஜ சித்தாந்தம் மாதிரி இருக்கிறது. ஆனால் அப்போதுகூட உடம்பு, உயிர் என்ற வித்தியாசம் – துவைதம் – இருக்கிறது. கொஞ்சம் த்வைதம் மாதிரி சொன்னவர் தொடர்ந்து அத்வைதத்தையே சொல்கிறார். ‘எங்களிடம் இருக்கிற துளித் துளி ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் மூலமான பரம ஞானமும், பரமானந்தமும் நீதான். இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும் அநுபவிப்பதற்கே ஒன்றாக இருந்தவள், இரண்டு மாதிரி ஆகி சிவயுவதி என்ற பாவத்தைத் தாங்கியிருக்கிறாய்’ என்கிறார். இது பாவம்தான். வாஸ்தவத்தில் விச்வ சரீரமும் அதன் உயிரான அம்பாளும் ஒன்றுதான். அந்த அம்பாளும் யாருக்கு சரீரம் மாதிரி இருக்கிறாளோ அந்த சம்புவும் அவளும்கூட ஒன்றுதான். அத்வைதம்தான்.
ஒன்று எங்கேயும் இருக்கிறது என்றால், அதற்குத் தனி உருவம் எப்படி இருக்க முடியும்? காற்று அநேகமாக எங்கேயும் செல்ல முடிகிறது. அதற்கு ரூபம் இருக்கிறதோ? அம்பாளோ அதைவிட சூக்ஷ்மம். காற்று இல்லாத சூனியத்தை (vaccum) கூட உண்டாக்குகிறார்கள். ஆனால் அவள் இல்லாத இடம் இல்லை. மனசு, எண்ணம் இதற்குள்ளும் இருக்கிறாள். அப்படியானால் அவளுக்கு எப்படி உருவம் இருக்க முடியும்? ஆனால் இது நம் சாமானிய நிலையில் மனசுக்கு ஹிதமாக இல்லை. அவளிடமிருந்து நாம் வந்தோம் என்பதால் அவள் அம்மாவும் நாம் குழந்தைகளும் மாதிரி. அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று குழந்தைக்குத் தெரிந்து விட்டால் மட்டும் அது சந்தோஷப்படுமா? அவள் இருந்தால் மட்டும் போதாது, அவளைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என்று ஆசைப்படும்.
அவள் எல்லா ரூபமாகவும் இருக்கிறாள் என்று நம்மால் உணர முடியவில்லை. அருவமாகவே அவளைத் தியானிக்க நமக்குப் பக்குவம் போதவில்லை. இப்படிப்பட்ட நமக்காகவே, நாம் அன்பு செய்வதற்காகவே, அவள் இப்போது காருண்யமும் லாவண்யமும் ஒரு ரூபமாகித் திவ்விய மங்கள விக்கிரகமாக வருகிறாள். ரூபமில்லாத நெய்யை நன்றாகக் குளிர வைத்தால் பாளம் பாளமாகப் பெயர்த்து எடுக்கிற மாதிரி கெட்டிப்பட்டுப் போகிறது அல்லவா? இப்படித்தான் ‘க்ருத காடின்யவத்’ என்கிற நியாயப்படி, பக்தர்களுடைய நெஞ்சின் குளிர்ச்சியில் பரம சூக்ஷ்மமான அம்பிகை உறைந்து போய், ஸ்தூலமான பல திவ்விய ரூபங்களை எடுத்துக் கொள்கிறாள்.
அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்?
சாதாரணமாக, பத்துப் பேருக்கு, நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள். அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது? சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது. ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனிடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன. மகா பாபங்களைச் செய்து – காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான். அவளுடைய அன்பையும், அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் என்கிறார்கள். அவளைப் பற்றி ‘ஸெளந்தர்ய லஹரி’ என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். இத்தனை ஸெளந்தர்யம், லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு போய்விடுகிறது. அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு அந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேசுவரி, புவனேசுவரி, துர்க்கை, காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.
ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால், அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள். அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர் அவளை ஸர்வ வாணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே என்று ‘சியாமளா தண்டகத்தில்’ ஸ்துதி செய்கிறார். ‘வர்ணம்’ என்றால் ‘நிறம்’ என்று நினைப்பீர்கள்.’வர்ணம்’ என்றால் ‘அக்ஷரம்’ என்று அர்த்தம். ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை. ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.
ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை ‘வீசிதரங்கம்’ என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை ‘முகுளம்’ என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் “மாத்ருகா” என்பது. ‘மாத்ரு’ என்றால் ‘தாயார்’ என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான்; அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம். அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்சம் முழுக்க வந்தது. நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஓங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். அ,உ,ம மூன்றும் சேர்ந்து ‘ஓம்’ என்று ஆகிறது. அ – சிருஷ்டி; உ – பரிபாலனம்; ம – சம்ஹாரம் என்பார்கள். அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், உ – ம – அ – என்றாகும். அதுதான் உமா என்பது. உபநிஷதமும் அவளை ‘உமாஹைமவதி’ என்றே சொல்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
அம்பாளின் இருப்பிடம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
பராசக்தி இல்லாத இடம் ஏதுமில்லை. ஆனால் மனசுக்குப் பிடிப்பு உண்டாவதற்காக அவளுக்குப் பல வாஸஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறது. முக்கியமாக ஸ்ரீ வித்யா என்கிற தேவி உபாஸனா மார்க்கத்தில் சொல்கிறபோது, அவள் அமிருத சாகரத்தின் மத்தியில், மணித்வீபம் என்கிற மணிமயமான தீவில் இருப்பதாகச் சொல்கிறோம். மணித்தீவில் பல கோட்டைகள் உத்தியான வனங்களுக்குள், சிந்தாமணிகளயை இழைத்துச் செய்த கிருகத்துக்குள் இருக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், ஸதாசிவன் இவர்கள் நாலு கால்களாகவும், உட்காருமிடமாகவும் அமைந்து உருவான மஞ்சத்தின்மேல், பிரம்ம ஸ்வரூபமான காமேசுவரனின் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறது. அவள் இருக்கும் இடத்தை ஸ்ரீபுரம் என்று கூறியிருக்கிறது. அமிருத ஸாகரத்தில் இருப்பதாகச் சொல்கிற மாதிரியே ஸ்வர்ணமயமான மேருசிகரத்தில் இந்த ஸ்ரீபுரம் இருப்பதாகவும் சொல்வதுண்டு.
தியானம் செய்வதற்குப் பரம சௌக்கியமாக இன்னொரு வாஸஸ்தானமும் சொல்லியிருக்கிறது. ‘லலிதா ஸஹஸ்ரநாமத்’தின் பலச்ருதியில் சொல்லியிருக்கிற இந்த முறையில் பல மகான்கள் அவளுடைய இருப்பிடத்தைத் தியானம் செய்து பரமானந்தத்தை அநுபவிக்கிறார்கள். அது என்ன என்றால், பூரண சந்திர மண்டலத்திற்குள் அம்பாள் அமர்ந்திருப்பதாகத் தியானம் செய்வதாகும். ஸஹஸ்ர நாமத்திலேயே ‘சந்திர மண்டல மத்யகா’ என்று ஒரு நாமம் வருகிறது.
பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகுள்ளது சந்திரன். நிலாச் சாப்பாடு, நிலாவில் பாட்டுக் கச்சேரி எல்லாம் வைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறோம். இருந்தாலும் எலெக்ட்ரிக் ஜோடனை அதிகமாகிவிட்ட இக்காலத்தவர்களுக்குச் சந்திரன் அருமை தெரிந்திருக்க நியாயமில்லை. சீதளமான அதன் பிரகாசம் அலாதியானது. கண்ணை உறுத்தாத ஒளி வாய்ந்தது சந்திரன். அதிலும் பௌர்ணமி சந்திரனின் அழகு விசேஷம். இந்த அழகு விசேஷமாகத் தெரிய வேண்டும் என்பதற்கே ஈசுவரநியதியில் முப்பது நாட்களுக்கு ஒரு முறைதான் பூர்ணிமை வருகிறது. தினமும் பௌர்ணமி இருந்தால் பூரண சந்திரனில் நாம் இத்தனை சந்தோஷம் அடைய முடியாது. இந்தப் பூரண சந்திரமண்டலத்தை முதலில் தியானித்து, அதில் அம்பாளைத் தியானிக்க வேண்டும்.
பூரண சந்திரனைத் தியானிக்கிற போதே மனசும் அது போல் குளிர்ந்து போகிறது. அங்கே துக்கத்துக்கும் துவேஷத்துக்கும் இடமில்லாமல் சாந்தமாகிறது. வெளிப் பிரபஞ்சமெல்லாம் ஜீவனுக்குள்ளே இருக்கிறது. அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள். சகல ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக இருக்கிற பராசக்தியின் மனஸே சந்திரனாக ஆகியிருக்கிறது. ‘புருஷ ஸூக்த’த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. இதனால் ஜீவராசிகளின் மனத்துக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இங்கிலீஷில் சித்தப் பிரமை பிடித்தவர்களை lunatic என்கிறார்கள். Lunar என்றாலே சந்திரனைப் பற்றியது என்றுதான் அர்த்தம். இது சித்தத்தின் விபரீத நிலையைச் சந்திரனோடு சேர்த்துச் சொல்கிறது. சித்த சுத்திக்கு அதே சந்திர மண்டலத்தில் அம்பாள் தியானத்தை நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.
சந்திரனில் அம்பாள் அமர்ந்திருப்பதாகச் தியானிக்க வேண்டும். தியானம் செய்கிறவனுக்கோ புலித்தோலை ஆசனமாக விதித்திருக்கிறது. சந்திரனுக்கு நேர் எதிராக புலி என்றால் உக்கிரமாக இருக்கிறது. புலி எப்படி தன் லக்ஷியமான இரையை ஒரே பாய்ச்சலில் பிடித்து விடுகிறதோ அப்படி நம் தியான லக்ஷியத்தை மனசு விடாப் பிடியாகப் பிடித்துக்கொள்வதற்கே வியாக்ராஸனம் விதித்திருக்கிறது. அதில் அமர்ந்து அம்பாளை சந்திர மண்டல வாஸினியாக தியானித்தால், நம் மனமும் அவள் மனத்திலிருந்து வந்த சந்திரனைப்போல் குளிர்ச்சி அடையும். சந்திரன் தாபத்தைப் போக்குவதுபோல் நம் தாபமும் சமனமாகும். சந்திரிகையில் இருட்டு விலகுகிற மாதிரி அஞ்ஞானம் விலகும்.
சூரியனை ஞான ஸ்வரூபமாகச் சொல்லியிருக்கிறது. ஆனால் சூரியப் பிரகாசம் தாபம் உண்டாக்குகிறது. அதுவே சந்திரனில் பிரதிபலித்து பரம சீதளமாகிறது. சந்திரனுக்கு ஸ்வபாவமாக ஒளி கிடையாது. அம்பாள் சூரியனைப்போல் ஸ்வயம் பிரகாசமாகவும், சந்திரனைப்போல் சீதளமாகவும் இருக்கிறாள். தாபத்தைப் போக்கும்போதே ஞானப் பிரகாசமும் தருகிறாள். ஞானம் தருகிற குருமூர்த்தி அவளேதான். காளிதாஸர் ‘தேசிக ரூபேண தர்சிதாப்புதயாம்’, ‘குரு வடிவத்தில் வந்து தன் மகிமையைக் காட்டுகிறவள்’ என்று அம்பிகையை வர்ணிக்கிறார். எனவே சந்திரமண்டலத்தில் குரு பாதத்தையும் தியானிக்கலாம். நம் தாபங்கள் விலகவும், ஞானப்பிரகாசம் உண்டாகவும், நாம் எல்லோரிடம் குளிர்ந்து இருக்கவும் இம்மாதிரி சந்திர மண்டலத்தில் அம்பாளையோ, குரு பாதுகையையோ தியானிக்க வேண்டும். அம்பாளையோ குருவாகத் தியானிக்க வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
ஞானாம்பிகை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
‘ஸ்ரீ வித்யா’ என்று தேவி உபாஸனையைச் சொல்கிறோம். ‘வித்யா’ என்றாலே ஞானம்தான். அவித்யை என்றால் அஞ்ஞானம், ஞானப்பால் தருகிற குருவான அம்மாவாக அம்பிகை இருக்கிறாள். இந்திராதி தேவர்களுக்கும் ஞானம் தந்தவள் அவளே என்று ஸாம வேதத்தைத் சேர்ந்த கேன உபநிஷதம் ஒரு கதை சொல்கிறது.
கதை இதுதான்:
ஒரு காலத்தில் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் ஜயம் பெற்றார்கள். ‘பரமாத்மா தந்த சக்தியைக் கொண்டே யுத்தம் செய்தோம்; அவரது அநுக்கிரகத்தாலேயே வெற்றி பெற்றோம்’ என்பதை மறந்து, தேவர்கள் தங்களைத் தாமே மெச்சிக் கொண்டார்கள்.
தங்கள் சக்தியால் தாங்களே வெற்றியைச் சாதித்துவிட்டதாகச் கர்வப்பட்டார்கள். ‘இது ஏதடா, அசுரர்களை ஜயித்த இந்த தேவர்களுக்கே அசுர குணம் வந்துவிடும் போலிருக்கிறதே’ என்று பார்த்தார் பரமாத்மா.
அவர்கள் அப்படிக் கெட்டுப் போகாமல் ரக்ஷிப்பதற்காக அவர்களுடைய கண்ணுக்கெட்டுகிற தூரத்தில் அடிமுடி தெரியாத ஒரு ஜோதிஸ்வரூபமாய் நின்றார்.
‘இதென்ன யக்ஷ வடிவம்?’ என்று தேவர்கள் அதிசயித்தார்கள். நமக்குப் புரியாததை ‘யக்ஷிணி’ என்று இப்போதும் சொல்கிறோம் அல்லவா? அம்மாதிரி தேவர்கள் அதை ‘யக்ஷம்’ என்கிறார்கள். அதனிடம் அக்னியை அனுப்பினார்கள்.
அது என்ன என்று தெரிந்துகொண்டு வருவதற்காக அக்னியை அனுப்பினார்கள். அவன் அதை நெருங்கி “நீ யார்?” என்று கேட்பதற்கு முன்பே, அது இவனைப் பார்த்து “நீ யார்?” என்றது?.
“நான் அக்னியாக்கும். ‘ஜாத வேதஸ்’ என்கிற பெயரும் எனக்கு உண்டு” என்றான்.
“சரி, உனக்குள்ள சக்தி என்ன?” என்று யக்ஷம் கேட்டது.
“நான் எதையும் எரித்து பஸ்மீகரம் பண்ணிவிடுவேன்” என்றான் அக்னி.
“ஒஹோ! அப்படியானால் இதை எரி பார்க்கலாம்” என்று சொல்லி ஒரு துரும்பை எடுத்துப்போட்டது யக்ஷம்.
அக்னி தன் பூரண சக்தியையும் அந்தத் துரும்பின் மேல் பிரயோகித்தான்.
ஆனால் துரும்பு எரியவே இல்லை.
அக்னி வெட்கமடைந்து தேவர்களிடம் திரும்பி வந்து நடந்ததைச் சொன்னான்.
‘இதென்னடா! நாம் வெற்றி கொண்டாடும்போது இப்படி நம்மில் ரொம்ப சக்திமானான ஒருத்தனுக்கு – அக்னிக்கு – அபஜயம் வந்ததே’ என்று தேவர்கள் நினைத்தார்கள். யக்ஷம் இன்னதென்று தெரியாததே ஒரு தோல்விதான்; அப்புறம் இந்த அபஜயம் வேறு. அதன்பின் அவர்கள் வாயுவை யக்ஷத்திடம் அனுப்பினார்கள்.
முன்போலவே, “நீ யார்” என்று கேட்டது யக்ஷம்.
‘நான் வாயு’. ‘மாதரிச்வன்’ என்றும் பெயர் பெற்றவன். எதையும் புரட்டித் தூக்கிக்கொண்டு போகும் சக்தி வாய்ந்தவனாக்கும்’ என்றான் வாயு.
“சரி, இந்த சின்னத் துரும்பைத் தூக்கிப்பார்” என்றது யக்ஷம்.
வாயு பிரம்மப் பிரயத்தனம் செய்தும் அவனால் துரும்பை அசைக்க முடியில்லை.
வாயுவும் திரும்பி வந்தான்… “நீ யார்?” என்று யக்ஷத்தைக் கேட்பதற்கே வாயில்லாதவனாக.
‘நாம் அசுரரிடம் அடைந்த ஜயத்தைக் கொண்டாடும் வெற்றி விழாவை இப்படி இது அபஜயமாக்கிவிட்டதே’ என்று தேவர்கள் யோசித்தார்கள்.
இப்போது தேவராஜனுக்கே ஒருவித அடக்கம் உண்டாகிவிட்டது. தங்களைவிடப் பெரியதொரு சக்தி இருக்கிறது என்கிற அறிவு உண்டாயிற்று. அகம்பாவம் போய், ஒரு க்ஷணம் ஈசுவர பக்திகூட உண்டாகிவிட்டது.
நாம் ஏதோ சாதித்துவிட்டதாக அவ்வப்போது வெற்றிவிழாக் கொண்டாடுகிறோம். இப்போது நம் தேசத்தில் இது ரொம்ப ஜாஸ்தி. கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் அந்த வெற்றி எங்கே போச்சு என்று தெரிவதேயில்லை. வேறு யாரோ வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். அப்புறம் அவர்கள் கதையும் மாறிப்போகிறது. மாறாத ஜயம் ஆத்ம ஜயம்தான். அந்த ஜயமும் சரி. மற்ற லௌகிக வெற்றிகளும் சரி, பரதேவதையின் கிருபையாலேயே கிடைப்பவை.
இதைப் புரிந்துகொண்டு, தேவதைக்கெல்லாம் சக்கரவர்த்தியாக இருக்கப்பட்ட இந்திரன் யக்ஷத்தை விநயத்துடன் நெருங்கினவுடன், மகாகாருண்யம் பொருந்திய அது இவனுக்கு ஞான அநுக்கிரஹம் செய்வதற்காக திவ்விய ஸ்திரீ ரூபத்தில் நின்றது.
(யக்ஷம் நின்ற) ‘அந்த ஆகாசத்திலேயே மகத்தான சோபை பொருந்திய ஹைமவதியான உமாதேவி பிரகாசித்தாள்’ என்கிறது உபநிஷத்து.
உருக்கிய பொன்னைப் போன்ற பிரகாசத்தோடு, அதாவது ஞான ஒளியாக ஒளித்துக்கொண்டு நின்ற அம்பாளை இந்திரன் நமஸ்கரித்தான். “சற்று முன் இங்கு தோன்றிய யக்ஷ வடிவம் என்ன?” என்று கேட்டான்.
சாக்ஷாத் அம்பிகை அவனுக்கு ஆசாரிய ஸ்தானம் வகித்து ஞானோபதேசம் செய்தாள்;
“அப்பா, பிரம்மம்தான் அந்த யஷ வடிவம். இவ்வளவு பிரபஞ்சத்துக்கும், உனக்கும். சகல தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் காரணமாக, ஆதாரமாக இருப்பது அது ஒன்றுதான். அதன் அகண்டமான சக்திதான் எல்லா ஜீவராசிகளிடமும் கண்டம் கண்டமாக, துளித் துளி இருக்கிறது” என்று உபதேசித்தாள்.
முதலில் யக்ஷ வடிவமாக நின்று, தேவர்களை அவமானப்படுத்தினாள். அவமானப்படுத்தியது அகம்பாவத்தை அடக்குவதற்கே! அகம்பாவம் அடங்கினவுடன் பரமாநுக்கிரஹமாக ஞானோபதேசம் தந்தாள்.
தேவராஜன் உண்மையை இதுவென (இதம்) முதலில் கண்டுகொண்டதாலேயே (த்ர) அவனுக்கு ‘இந்திரன்’ என்று பெயர் உண்டாயிற்று. மற்ற தேவர்கள் பிரம்ம ஸ்வரூபத்தை பார்த்ததோடு சரி. இவன்தான் அதன் கருணாமூர்த்தமான அம்பாளைத் தரிசனம் செய்து, அவளிடமிருந்து பிரம்ம ஸ்வரூப ரஹசியத்தை உபதேசமாகப் பெற்றுக்கொண்டு வந்தவன்.
இந்த உபநிஷத்தில், ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களின் பாஷ்யத்தில் பஹுசோபமானா – ‘மிகவும் சோபை பொருந்தியவள்’ என்பதற்கு அர்த்தம் செய்கிறபோது, ‘சோபை உள்ளவற்றுக்கெல்லாம் மேலான உத்கிருஷ்டமான சோபை ஞானம்தான் – வித்யைதான். அந்த வித்யா ரூபிணியே உமா. ஹைமவதியாகி ஹேம (பொன்) ஆபரணங்களை அணிந்தும், இந்தச் சோபையை வெளிப்படக் காட்டுகிறாள். எல்லாவற்றையும் அறிகிற அறிவான ஸர்வக்ஞ தத்துவமே பரமேசுவரன். அந்த அறிவோடு இரண்டறச் சேர்ந்திருக்கிற ஞான ஸ்வரூபிணியே அவள்’ என்கிறார்.
அறிகிறவன், அறியப்படுகிற பொருள், அறிவு எல்லாமே தானாக ஆகிய ஏக வஸ்துவான பிரம்மத்தின் சக்தி அவள். ‘சித்தமிசை குடிகொண்ட அறிவான செய்வமே’ என்று இந்த ஞான ஸ்வரூபத்தைத்தான் தாயுமான ஸ்வாமிகள் சொல்கிறார்.
அடி முடி தெரியாத யக்ஷ வடிவம் என்று சொன்னவுடன், இந்தக் கதைக்கும் அருணாசலத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக தோன்றும். இந்த உபநிஷக் கதை ஸ்ரீ காளஹஸ்தியுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.
நான் காளஹஸ்திக்கு போயிருந்தபோது, கிரிப்பிரதக்ஷிணம் செய்தேன். வழியில் ஒரு மலைமேல் ஏறி, அங்கு வனத்திலுள்ள சிவலிங்கத்தைத் தரிசனம் செய்துகொண்டேன். அந்த லிங்கம், ‘ஸஹஸ்ர லிங்கம்’ – அதாவது லிங்காகாரமான ஒரே சிலைக்குள் சின்னச் சின்னதாக ஆயிரம் லிங்கங்கள் வடித்திருக்கும். அந்த ஸஹஸ்ர லிங்க ஆலயத்தில் ‘யக்ஷ லிங்கம்’ என்று ஒன்றைச் சொல்கிறார்கள். ‘இந்திர லிங்கம்’ என்றும் ஒன்று இருக்கிறது. காளஹஸ்திப் பெரிய கோயிலில் இருக்கிற அம்பாளின் பெயரோ ஞானாம்பிகை அல்லது ஞானப்ரஸுனாம்பிகை. ப்ரஸுனம் என்றால் பூ, ஞானப்ரஸுனாம்பிகையை ஞானப் பூங்கோதை என்பார்கள். இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால், கேன உபநிஷத்தில் சொல்லியிருக்கிற சம்பவம் – யக்ஷம் தோன்றினதும், பிறகு அம்பாள் ஆவிர்பவித்து இந்திரனுக்கு ஞானோபதேசம் செய்ததும் – இந்தக் காளஹஸ்தியில்தான் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
அம்பாளை ஆராதிக்க நாமாகப் புது மார்க்கம் கண்டு பிடிக்க வேண்டியதில்லை. ஸ்ரீகாளஹஸ்தியைப்போல் தேவர்களும் பெரிய ரிஷிகளும் மகாத்மாக்களும் அவளை ஆராதித்த இடங்கள் இன்று மஹா க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. அங்கே போய் நமஸ்கரித்துத் தியானம் செய்தால் போதும். அவளுடைய கடாக்ஷம் கிட்டிவிடும்.
புஷ்பமும் சுகந்தமும்போல், பாலும் சுவையும்போல், அக்னியும் பிரகாசமும்போல், அவள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாத ஞான சக்தி. இதேமாதிரி ஸ்ரீமந் நாராயணனோடும் பிரிக்க முடியாமல் சகோதர் பாவத்தில் இருக்கிறாள். அவள் துர்க்கையாக வந்து அசுரர்களை வதைத்தபோது வைஷ்ணவியாக இருக்கிறாள். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியின் போதே யசோதையின் கர்ப்பத்திலிருந்து விஷ்ணு மாயையாக இந்த துர்க்கை அவதரித்தாள். துர்க்கையை சரத்கால நவராத்திரியில் பூஜிக்கிறோம். கெட்டதை வதைத்தவள் அவள். இந்த சம்ஹாரத்துக்கு பிறகு நல்லதை வளர்க்க வேண்டும். ஞானத்தை வளர்க்க வேண்டும். ஞானோபதேசம் செய்ய அம்பாள் ஆவிர்ப்பதையே வஸந்த காலத்தில் ஒரு நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். கிருஷ்ணனோடு துர்க்கை தோன்றின மாதிரி, ஸ்ரீராம நவமியின்போது ‘ஞானாம்பிகை’ தோன்றினாள். இந்த நவமி முடிய ஒன்பது நாட்கள் ‘வஸந்த நவராத்திரி’ எனப்படும். சண்டிகையாக உக்கிர ரூபத்தில் எந்தப் பராசக்தியை சரத்கால நவராத்திரியில் பூஜித்தோமோ, அவளையே இப்போது ஸெளம்ய ரூபத்தில் ஞானாம்பாளாக பூஜிக்க வேண்டும். சண்டிகையாகிக் கெட்டதை சிக்ஷித்தவளே ஞானாம்பிகையாகி நல்லதை உபதேசித்து ரக்ஷிக்கிறாள்.
உமா என்பது பிரணவ ஸ்வரூபம் முன்பே சொன்னேன். நாதமே அவளுக்கு சரீரம் மாதிரி. நம் சரீரம் எத்தனை அழகாக இருக்கிறது என்று நாம் அகம்பாவப் பட்டுக் கொண்டாலும், துளி மேலே கீறிவிட்டால்கூட உள்ளே பார்க்கச் சகிக்காமல் இருக்கிறது. எத்தனையோ கழிவடைகளை உள்ளே அடைத்து வைத்திருக்கிறோம். இதற்குள் எங்கே என்று சொல்லத் தெரியாமல் அறிவு என்கிற ஒரு மணி இருக்கிறது. அவளுடைய சரீரமோ நாதமயம், சப்த மயம், வாக்கு மயம் – ஐம்பத்தோர் அக்ஷரங்களுமே அவளுக்குச் சரீரமாக இருக்கிறது. அதில் முழுக்க முழுக்க அறிவே வியாபித்திருக்கிறது. அந்த அறிவைத்தான் ஞானாம்பிகை என்பது.
மாறிக்கொண்டும் அழிந்துகொண்டும் இருப்பவைகளைச் சத்தியமென்று நினைக்காமல், மாறாமல் சாசுவதமாக உள்ள ஒரே வஸ்துவை, அதற்கு வேறாக நான் என்று தனியாக ஒன்று இல்லை என்று அநுபவத்தில் தெரிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு. இந்த அறிவைத் தருகிற பராசக்தி ஞானாம்பிகையாகி திவ்விய மங்கள ஸ்வரூபிணியாக விளக்குகிறாள். அவளை எந்நாளும் தியானம் செய்து அநுக்கிரஹம் பெறுவோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
பவானித்வம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
அம்பாளிடம் நாம் இன்னின்ன வேண்டும் என்று சொல்லிப் பிரார்த்திக்க வேண்டிய அவசியமே இல்லை. “உனக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? ஆனாலும் மலயத்வஜ பாண்டியனின் புத்திரியான ஹே மீனாக்ஷி! மனஸில் உள்ள குறையை வாய்விட்டுச் சொல்லாவிட்டால், அது உள்ளுக்குள்ளே உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதனால்தான் இப்படிப் பிரார்த்தனைப் பண்ணுகிறேன். உனக்குத் தெரியாததைத் தெரியப்படுத்துவதற்காக அல்ல; எனக்கு உள்ளே கருணைக்கிழங்கு மாதிரி அரிப்பதைக் கொஞ்சம், சமனப்படுத்திக் கொள்ளவே பிரார்த்தனை பண்ணுகிறேன்” என்று நீலகண்ட தீக்ஷிதர் ‘ஆனந்த ஸாகர ஸ்தவம்’ என்கிற ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்.
நாம் கேட்காவிட்டாலும், அம்பாளை உபாஸித்து விட்டால் அவளே அநேக அநுக்கிரஹங்களைப் பண்ணுகிறாள். முதலாவதாக நல்ல புத்தி உண்டாகிறது. மனஸில் நல்ல எண்ணங்களே உண்டாகின்றன. நல்லதைச் செய்வதற்கான வழி புத்தியிலே பளீரென்று பிரகாசிக்கிறது. லோக க்ஷேமத்தைச் செய்வதற்கான திரவிய பலமும் தானே கிடைக்கிறது. எல்லோரிடத்திலும் சமமான அன்பு உண்டாகிறது. மனஸில் இந்த அன்பு ஊறாமலே வாய்ப்பேச்சில் இன்று ‘சகோதர சகோதரிகளே’ என்று பிரசங்கம் பண்ணி சமத்துவத்தைப் பற்றி நிறையப் பேசுகிறோம். அம்பாளிடம் பக்தி பண்ணாத வரையில் இது அநுபவத்தில் வராத வாய்ச் சவடால்தான்; புரளிதான். சாக்ஷாத் ஜகன்மாதாவைத் தெரிந்துகொண்டாலே, ‘உண்மையாக அவள் ஒருத்திதான் இத்தனை பேருக்கும் அம்மா; லோகத்தில் உள்ள பசு, பட்சி உட்பட நாம் இத்தனை பேரும் அவள் குழந்தைகள்தான்; அதனால் நாம் எல்லோரும் வாஸ்தவமாகவே சகோதர சகோதரிகள்” என்ற உண்மையான அன்பு உணர்ச்சி உண்டாகிறது. அவளைத் தெரிந்துகொண்டால் அதன்பின் நமக்குள் வெறுப்பு, துவேஷம் வரவே வராது. தப்புக் கண்டுபிடிக்க வராது. தப்பு நடக்கிறபோதுகூட அதைப் பரிவோடு திருத்துகிற மனப்பான்மை வருமே தவிர, தப்பைத் பிரகடனம் பண்ணிச் சண்டையில் இயங்கத் தோன்றாது. அம்பாளை உபாஸிப்பதால் லோகம் முழுக்க ஒரே குடும்பம் என்ற அன்பு உணர்ச்சி உண்டாகிறது. சத்துரு, சிநேகிதன் என்கிற வித்தியாசமே காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு இராது என்கிறார் மூகர்.
எல்லாம் சமமாகத் தெரிகிற ஞானநிலையின் உச்சிக்கே அம்பாளின் அநுக்கிரஹம் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. ‘அவள் அம்மா; அவளுடைய குழந்தைகளே நாம் எல்லோரும்’ என்பதற்கு மேலே ஒரு படி போய் – அம்மா, குழந்தை என்கிற வித்தியாசம்கூடப் போய் – எல்லாமே அவள்தான் என்று தெரிகிறது. ‘ஒரு சக்திதான் இத்தனை ஆகியிருக்கிறது; ரூபங்களில்தான் பேதம், உள்ளே இருக்கிறது ஒன்றுதான்’ என்கிற பரம அத்வைத ஞானம் சித்திக்கிறது. இதைத்தான் மூகர் சொல்கிறார் – “சிவ சிவ பச்யந்து ஸமம்” என்கிற சுலோகத்தில், காமாக்ஷியின் கருணா கடாக்ஷ வீக்ஷண்யம் பெற்றவனுக்குக் காடும் வீடும் சமமாகத் தெரிகின்றன; சத்துருவும் மித்ரரும் சமமாகத் தெரிகின்றனர் என்கிறார்.
அம்பாளைத் தாயாராகவும் நம்மைக் குழந்தையாகவும் வைத்துக்கொண்டு உபாஸிக்க ஆரம்பித்தாலும் அவளே காலக்கிரமத்தில் இந்த இரண்டும்கூட ஒன்றேதான் என்கிற பரம ஞானத்தை அநுக்கிரஹம் செய்கிறாள். இதை ஆசாரியாள் ஒரு ச்லேஷை (சிலேடை) மூலம் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் சொல்கிறார்.
“பவானி, உன்னுடைய அடிமை நான்” என்று பக்தன் துதிக்க ஆரம்பிக்கிறானாம். ‘பவானித்வம் –’, “பவானி உன்னுடைய”, (‘த்வம்’ என்றால் ‘உன்’) என்று இவன் சொல்லுகிறபோதே, அம்பாள் இவனுக்கு ‘பாவானித்வம்’ என்கிற நிலையை அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சிலேடை பண்ணுகிறார். முதலில் இவன் பிரார்த்திக்கிறபோது ‘பவானி’ என்றால் அம்பாள். பரமசிவனுக்கு முக்கியமான எட்டுப் பெயர்களில் ஒன்று பவன் என்பது. பவனின் பத்தினி பவானி. மறுபடி, பவானித்வம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளை இவன் சொன்ன மாத்திரத்தில், அம்பாள் ‘பவானித்வம்’ என்ற நிலையை அநுக்கிரஹம் செய்வாள் என்னும்போது, ‘பவானி என்றால் ஆகிவிடுகிறேன்’ என்று அர்த்தம். ‘தீர்க்க ஸுமங்கலி பவ’ என்கிறோமே, இங்கே ‘பவ’ என்றால் ‘ஆவாய்’ என்று அர்த்தம். ‘பவானி’ என்றால் ‘ஆகிறேன்’. ‘பவானித்வம்’ என்றால் ‘நீயாவே நான் ஆகிவிடுகிறேன்’; எல்லாம் பிரம்மம் என்ற அத்வைத ஞானம் உண்டாகி இப்படிச் சொல்கிறான் பக்தன். தாஸனாக இருக்கப் பிராத்தித்தவனைத் தானாகவே ஆக்கிக்கொண்டு விடுகிறாள் அம்பிகை. “பவானி, உன் தாஸனாக என்னைத் துளி கடாக்ஷியம்மா” என்று பிரார்த்திக்க ஆரம்பித்த பக்தன் மூன்றாவது வார்த்தையைச் சொல்லக்கூட அவகாசம் தராமல், “பவானி உன்” (பவானித்வம்) என்று அவன் சொல்லும்போதே அம்பாள் இடைமறித்து, “ஆமாமப்பா பவானித்வம்தான்; அதாவது நானும் நீயும் ஒன்றேதானப்பா” என்கிற பரம ஞானத்தை வழங்கி விடுகிறாள். ‘பவானித்வம்’ என்றால் ‘பவானியின் தன்மை’ என்றும் அர்த்தம். பக்தனே பவானித்வம் பெற்று பராசக்தியோடு தன்மயமாகி விடுகிறான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
வாக்குவன்மை வருஷிப்பாள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
ஜகன்மாதாவாக இருக்கிற அம்பாளைப்பற்றி அநேக மகான்கள், கவிகள், ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள் மூன்று மிகவும் சிரோஷ்டமானவை. முதலாவது ‘ஸெளந்தரிய லஹரி’. ஸ்ரீ சங்கரர் பகவத் பாதர்கள் கைலாசத்துக்கு போன போது சாக்ஷாத் பரமேசுவரன் தாமே, அம்பிகையைப் பற்றி செய்திருந்த சௌந்தர்ய லஹரி சுவடிக்கட்டை நம் ஆசாரியாளுக்குக் கொடுத்து அநுக்கிரஹித்தார். அதில் மொத்தம் நூறு சுலோகங்கள் இருந்தன. ஆசாரியாள் கைலாஸத்திலிருந்து திரும்பி வரும்போது, வாசலில் காவலிருந்த நந்திகேசுவரர், மகா பெரிய சொத்து கைலாஸத்திலிருந்து போகிறதே என்று நினைத்து, ஆசாரியாள் கொண்டு வந்த சுவடியிலிருந்து தம் கைக்குக் கிடைத்ததை அப்படியே உருவிக் கொண்டுவிட்டார். முதல் 41 ஸ்லோகங்கள் மட்டுமே ஆசாரியாள் கையில் நின்றன. பாக்கி 59 சுலோகங்கள் நந்திகேசுவரர் கைக்குப் போய்விட்டன. அப்புறம் ஆசாரியாள் தாமே அந்த 59 சுலோகங்களையும் கடல் மடை திறந்த மாதிரிப் பாடிப் பூர்த்தி செய்துவிட்டார். இவ்விதத்தில்தான் இப்போது நூறு சுலோகங்களோடு உள்ள ‘ஸெளந்தரிய லஹரி’ உருவாயிற்று.
அதில் முதல் நாற்பத்தியோரு சுலோகங்கள் மந்திர சாஸ்திர சூக்ஷ்மங்கள், குண்டலினி யோக தத்வங்கள், ஸ்ரீ வித்யா ரகசியங்கள் முதலியவற்றைச் சொல்கின்றன. அதில் உபாஸகர்களுக்கு ரொம்பவும் உபயோகமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும் பின்னாலுள்ள, ஆசாரியாள் வாக்கிலிருந்து வந்த 59 சுலோகங்கள் அழகே அழகு! இந்த சுலோகங்களில் அம்பாளின் சிரஸிலிருந்து பாதம் வரையில் அங்கம் அங்கமாக வர்ணித்திருக்கிறார். கம்பீரத்துக்கும் சரி, மாதுர்யத்துக்கும் சரி, இந்த வாக்குதான் சிகரம் என்று சொல்கிறமாதிரி அப்படிப்பட்ட அற்புதமான சுலோகங்கள் இவை. பழங்காலத்தில் செய்த அதி சுந்தரமான விக்கிரங்களிலும் சிற்பங்களிலும் நகத்தளவு பங்கமானாலும்கூட, பிற்காலத்தவர்களால் அதே மாதிரி வேலைப்பாட்டோடு செய்து ஒட்டுப் போட முடியவில்லை. இந்த மாதிரிதான், ஆசாரியாளின் ஸெளந்தரிய லஹரி சுலோகத்தில் ஒரு வார்த்தையை எடுத்துவிட்டு அதற்குப் பதில் இன்னொரு வார்த்தையை யாரும் போடமுடியாது. ஆதி ஸெளந்தரிய லஹரியில் 59 சுலோகம் நஷ்டமானதே நம் பாக்கியம்தான்! நந்திகேசுவரர் அதை உறுவிக் கொண்டிரா விட்டால் ஆச்சாரியாளின் இந்த அற்புத வாக்கு லோகத்துக்குக் கிடைத்திருக்காதல்லவா, என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட கவித்துவ பொக்கிஷமாக ஒரு கிரந்தத்தைச் செய்து முடிக்கிறபோது, ஆசாரியாள் “இதில் நான் செய்தது என்ன அம்மா இருக்கிறது? எல்லாம் நீ கொடுத்த வாக்கு. நீ தந்த வாக்கால் உன்னையே துதித்தேன்” என்று விநய சம்பத்துடன் சொல்கிறார். அவளைத் துதிக்கிற கவித்வமும் அவளது உபாஸனையாலேயே அவளருளால் ஸித்திக்கிறது என்று தெரிவிக்கிறார்.
அம்பாளைப் பற்றிய முக்கியமான மூன்று கிரந்தங்களில் இன்னொன்று ‘மூக பஞ்ச சதீ’. காமாக்ஷி அம்பாளின் பொதுவான மகிமை பற்றி ‘ஆர்யா’ என்ற விருத்தத்தில் நூறு சுலோகங்கள். அவளுடைய பாதார விந்தங்களின் அழகைப் பற்றி மட்டும் நூறு சுலோகங்கள், ஸ்துதிக்கு உகந்த அவளது குணங்களைப் பற்றி நூறு சுலோகங்கள், அம்பாளின் கடாக்ஷ வீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் நூறு சுலோகங்கள், அவளுடைய புன்சிரிப்பின் ஸெளந்தர்யத்தைப் பற்றியே நூறு சுலோகங்கள் என்றிப்படி மொத்தம் ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து விட்டார் மூகர். நூறு சுலோகங்கள் கொண்ட தொகுப்புக்கு ‘சதகம்’ என்று பெயர். தமிழில்கூட, ‘தொண்டை மண்டல சதகம்’, ‘அறப்பளீசுவர சதகம்’ என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் மேலே சொன்ன ஐநூறு சுலோகங்களுக்கு முறையே ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்த ஸ்மித சதகம் என்று பெயர். ஐந்து நூறும் சேர்ந்த நூலுக்கு ‘மூக பஞ்ச சதீ’ என்று பெயர். ஆர்யா சதக முடிவில் அம்பாளை ஆராதிக்கிறவனுக்கு அமிருதம் போன்ற வாக்கு சித்திக்கிறது என்று சொல்லியிருக்கிறது.
அம்பாளைப் பற்றிய முக்கியமான ஸ்தோத்திரங்களில் மூன்றாவது ‘ஆர்யா த்விசதி’ என்பது. த்வி – இரண்டு, சதம் – நூறு. ‘ஆர்யா த்விசதி’ என்ற இந்த ஸ்துதி ஆர்யா என்ற விருத்தத்தில் இருநூறு சுலோகங்கள் கொண்டது. ‘லலிதா ஸ்தவ ரத்னம்’ என்றும் அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அம்பாளுடைய பிரஸாதத்தைப் பரிபூரணமாகப் பெற்ற துர்வாஸ மஹரிஷி செய்த நூல் இது. இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் பண்ணினாலே நல்ல வாக்கு உண்டாகும் என்பது கண்கூடு. ஸ்ரீ காமாக்ஷி ஆராதனை கிரமத்தைச் செய்தவரே துர்வாஸர்தான். ‘பட்டாரிகை’ எனப்படும் பராசக்தியின் மூன்று முக்கிய உபாஸகர்களுக்கு மட்டுமே ‘பட்டாரகர்’ என்ற பட்டம் உண்டு. இந்தப் பட்டம் பெற்றவர்களில் ஒருத்தர் சாக்ஷாத் ஈசுவரன்; இன்னொருத்தர் காளிதாஸர்; மூன்றாமவர் துர்வாஸர்தான். காமாக்ஷி ஆலயத்தில் இவருக்கு பிம்பம் இருக்கிறது.
அம்பாளைப் பற்றிய இந்த மூன்று பிரதானமான ஸ்தோத்திரங்களும் அவள் அருளால் நல்ல வாக்கு சித்திக்கிறது என்கின்றன.
ஆனால் முடிந்த முடிவாக இந்தத் துதிகள் எல்லாம் அம்பாள் உபாஸனையின் முக்கிய பலனாக ஞானம் ஸித்திக்கிறது என்பதையே சொல்கின்றன. அஞ்ஞானம் நீங்கி, ஞானம் வருவதுதான் மோக்ஷம். இதை அம்பாள் அநுக்கிரஹிக்கிறாள்.
அம்பாளின் பாதத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய திரி மூர்த்திகளும் நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இவள் பாதத்தில் நாம் பண்ணுகிற அர்ச்சனை அவர்களுடைய சிரஸுக்கும் பண்ணிய அர்ச்சனையாகிறது என்று ஆச்சாரியாள் சொல்கிறார். ‘பவானி உன் தாஸன் நான்’ என்று துதிக்க ஆரம்பிக்கிறவனுக்கு அம்பாளாகவே ஆகிவிடுகிற அத்வைத மோக்ஷத்தை அவள் அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சொல்கிற போதும், அவளுடைய பாதத்தில் விஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலானவர்களின் கிரீடத்தில் உள்ள ரத்தின மணிகளிலிருந்து எழுகிற ஒளி கற்பூர ஹாரத்தி செய்வதுபோல் பிரகாசிக்கிறது என்கிறார். இப்படி எல்லா தேவர்களும் அவள் பாதத்தில் கிடப்பதாகச் சொல்வதற்கு தாத்பரியம் ஒரு தேவதை உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்பதல்ல. எல்லா சக்திகளும் – மநுஷ்யர்களின் சக்தி, மிருகங்களின் சக்தி, தேவர்களின் சக்தி, இயற்கையில் காண்கின்ற பல சக்தி, இவை எல்லாமும் மூலமான ஒரு சக்தியின் திவலைகளே என்பதுதான் அதன் தாத்பரியம். இதைத்தான் ஸயன்ஸிலும் ஒரே எனர்ஜி (Energy) பலவிதமான அணுக்களாக (Particle) அலைகளாக (Wave) ஆகியிருக்கிறது என்கிறார்கள். அந்த மூல சக்தியை அன்போடு ஆராதித்தால் அதுவும் அன்போடு அநுக்கிரஹம் செய்கிறது. மற்ற தனித் தனித் தேவதைகளுக்கு இருக்கிற சக்தி எல்லாமும் இதனிடமிருந்து வந்ததுதான். எனவே அந்த சக்தியை அம்பாளாக ஆராத்திக்கிறபோது எல்லா தேவதைகளின் அநுக்கிரஹத்தையும் பெற்றுவிடலாம். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் எல்லாம் அந்த ஒரே சக்தியிடமிருந்து உண்டானவைதாம். அதனால், அவர்களைப் பூஜிப்பதால் பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்களையும் பூஜித்ததாகிறது. இவள் ஆராதனையே ஸரஸ்வதி, லக்ஷ்மி ஆகியவர்களுக்கும் வழிபாடாகிறது; வித்யை, செல்வம் எல்லாம் பக்தனுக்குச் சித்திக்கின்றன. அம்பாளை உபாஸித்தால் கிடைக்காததில்லை. சாஸ்திரங்கள் இதிலே பல பலன்களைக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. அம்பாளை உபாஸிப்பதால் மிகவும் உத்தமமான வாக்கு சித்திக்கிறது. கவித்வத்தை விசேஷமாக அநுக்ரஹிக்கிறாள். காளிதாஸர் பூர்வத்தில் மிகவும் மந்தமாக இருந்தார் என்றும், உஜ்ஜயினியில் காளி அநுக்கிரஹம் கிடைத்தே அவர் கவி சிரேஷ்டரானார் என்றும் கதை கேட்டிருப்பீர்கள். ஊமையாக இருந்த மூகரும் அவளருளாலேயே க்ஷணத்தில் மகா கவியானார்.
தான் பெற்ற இன்பத்தை உலகமும் பெறும்படி செய்வது வாக்கு வழியாகத்தானே? இதனால்தான் மகா பெரியவர்களுக்கு அம்பாள் அருள் செய்தது மட்டுமின்றி, அந்தப் பேரருள் அசடுகளான நமக்கும் பாயவேண்டும் என்ற கருணையிலேயே அந்த மகான்கள் தம் அநுபவத்தைப் பாடுவதற்கான வாக்குவன்மையையும் வருஷித்தாள்.
கவித்வம், சங்கீதம் முதலிய கலைகள் எல்லாம் அம்பிகையின் அநுக்கிரஹத்தால் உண்டாகின்றன. பொதுவாக இதற்கெல்லாம் ஸரஸ்வதியை அதி தேவதையாகச் சொல்கிறோம். இப்படிப்பட்ட ஸரஸ்வதி, அம்பாளின் சந்நிதானத்தில் எப்போதும் வீணையோடு கானம் பண்ணிக்கொண்டிருக்கிறாளாம். என்ன பாட்டுக்கள் பாடுகிறாள்? அம்பாளின் பெருமையைப் பற்றியா? இல்லை. மகாபதிவிரதையான அம்பாளுக்கு ஈச்வரனைப் பாடினாலே சந்தோஷம். அதன்படி வாணி ஈசுவரப் பிரபாவத்தைப் பாடிக்கொண்டேயிருக்கிறாள். அம்பாள் அதை ரொம்பவும் ரஸித்து ஆனந்தப்படுகிறாள். கேட்கிறவர்கள் ஆனந்திப்பதே பாடுகிறவனுக்கும் ஆனந்தத்தைத் தந்து மேலும் உற்சாகப்படுத்தும். அப்போதுதான் வித்வானுக்கு மேலே மேலே கற்பனை விருத்தியாகும். கேட்கிறவன் தப்புக் கண்டுபிடிக்கிற மாதிரியே உட்கார்ந்திருந்தால், வித்வானுக்கு சுபாவத்தில் இருக்கிற பிரதிபா சக்தியும் போய்விடும். அம்பிகை ஆனந்தத்தோடு உத்ஸாகப் படுத்தப் படுத்த ஸரஸ்வதி பரமாற்புதமாக கானம் பண்ணிக்கொண்டே போகிறாள். அம்பாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டுத் தலையை ஆட்டிக்கொண்டு “பேஷ் பேஷ்” என்று வாய் விட்டுச் சொல்லி விடுகிறாள். அவ்வளவுதான்! அம்பாளுடைய அந்த வாக்கின் மாதூர்யத்தில் ஸரஸ்வதியின் வீணா நாதம் அத்தனையும் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறதாம். ‘இப்படிப்பட்ட மதுரவாக்குக் கொண்டவளுக்கு முன்பா என் வித்தையைக் காட்டினேன்?’ என்று வெட்கப்பட்டுக்கொண்டு ஸரஸ்வதி தன் வீணையை உறையில் போட்டு மூடி வைத்து விடுகிறாளாம். “விபஞ்ச்யயா காயந்தீ” எனறு ஆரம்பிக்கிற ஸெளந்தரிய லஹரி ஸ்லோகம் இந்த சம்பவத்தை நாடகம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி வர்ணிக்கிறது. அம்பாளை உபாஸிப்பதால் நம் ஆனந்தத்தைப் பிறர்க்கும் தர வைக்கிற ஸங்கீதம் முதலான சகல கலைகளிலும் எளிதில் ஸித்தி பெறலாம் என்பது அர்த்தம்.
அம்பாளை வழிபடுவதால் குருபக்தி, பதிபக்தி இவையும் விசேஷமாக விருத்தியாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
பதிபக்தியும் குருபக்தியும் வழங்கும் தேவி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
அம்பாளை உபாஸிப்பதால் பதிபக்தி உண்டாவது ரொம்பவும் நியாயம்தான். ஏனென்றால் அவளே மகா பதிவிரதையாக இருக்கிறவள். பிரியம் வைக்க முடியாதவரிடம் மகாப் பிரியமும், விசுவாசமுமாக இருப்பதுதான் விசேஷம். சகல ஐசுவரியமும் உள்ள வைகுண்டத்தில் அலங்காரப் பிரியராக ரூபலாவண்யத்தோடு இருக்கிற மகா விஷ்ணுவிடத்தில் மஹாலக்ஷ்மி பிரியமாக இருப்பதில் சுவாரஸ்யம் இல்லை. மயானவாசியாக, புலித்தோலை கட்டிக்கொண்டு கபால மாலை போட்டுக் கொண்டு, ஊரெல்லாம் பிச்சை எடுக்கிற பரமேசுவரனிடத்தில் அம்பாள் மாறாத அன்போடு இருப்பதே விசேஷம். தாக்ஷாயணியாக அம்பாள் பிறந்தபோது அவளது பிதாவான தக்ஷன் ஈசுவரனை மதிக்கவில்லை. இதைக் கண்டு பொறுக்க முடியாத தாக்ஷாயணி தகப்பனுடைய யாகசாலையில், “என் பர்த்தாவை மதிக்காத தக்ஷனுக்குப் பெண்ணாக பிறந்து, தாக்ஷாயணி என்று வைத்துக் கொண்டிருக்கிற இந்தச் சரீரமே எனக்கு வேண்டாம்” என்று பிராணனை விட்டாள். யாக குண்டலத்திலேயே உயிரைத் தியாகம் செய்தாள் என்பது கதை. தாக்ஷாயணிக்கு ‘ஸதி’ என்றே இயற்பெயர். ‘தக்ஷனின் புத்ரி’ என்கிற அர்த்தத்தில் ‘தாக்ஷாயணி’ என்ற காரணப் பெயரும் ஏற்பட்டது. இதனால்தான் வெள்ளைக்காரர்கள் பதிவிரதத்தின் உச்சியாக உடன்கட்டை ஏறுகிறதை Suttee (ஸதி) – என்றே சொன்னார்கள். ‘ஸதி’ என்றாலே கற்புக்கரசி என்று அர்த்தமாகிவிட்டது. அதற்கப்புறம் தாக்ஷாயணியே பர்வத ராஜபுத்திரியாக ஜனித்து பார்வதி என்று பேர் பெற்றாள். சம்ஹார மூர்த்தியும், கோர மசானவாசியுமான பரமேசுவரனிடம் இப்போதும் அவளுடைய அன்பு மாறவே இல்லை. அவரையே மறுபடியும் பதியாக அடைய வேண்டும் என்று சின்னஞ்சிறு வயதிலேயே உக்கிர தபஸ் செய்தாள் பார்வதி. கடைசியில் ஈசுவரனைக் கல்யாணம் செய்து கொண்டாள். இவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட விசேஷத்தால், ‘கோர கோர தரேப்ய:’ என்று வேதம் சொல்கிற கோரருத்திரனும், பரம மங்கள ஸ்வரூபியாக, சிவமாக ஆனார். அவளுக்கு ‘சிவா’ என்ற பேர் உண்டாயிற்று.
அம்பாளைவிட மங்கள வஸ்து இல்லை. ‘ஸர்வ மங்கள மாங்கல்யே’ என்பார்கள். அவளுடன் சேர்ந்திருப்பதாலே பரமேசுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்? இதனால்தான் ஆலஹால விஷம் சாப்பிட்டுக்கூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார் என்று ஆசாரியாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கூறுகிறார். காதில் தோடு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் கருகுமணி இத்யாதி மங்கள சின்னங்களெல்லாம் சுமங்கலி லக்ஷணம். அம்பாளும் காதில் தாடங்கம் அணிந்திருக்கிறாள். சாதாரண பனை ஒலையைத்தான் தாடங்கமாகப் போட்டுக் கொண்டிருக்கிறாள். ‘தாலீபலாச தாடங்கம்’ என்று இதை ஸ்தோத்திரங்கள் சொல்கின்றன. பழைய காலத்தில் எல்லோருமே படாடோபம் இல்லாமல் எளிமையிலேயே சுபிட்சமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்தமாகத் தோன்றுகிறது. அம்பாளைப் போலவே எல்லா ஸ்திரீகளும் பனை ஒலைதான் போட்டுக் கொண்டிருக்கவேண்டும். இதனால்தான் பிற்காலத்தில் வைரத்தோடு போட்டுக் கொள்கிற டாம்பீகம் வந்தபின்கூட, அதை ‘வைர ஓலை’ என்றே சொல்கிற வழக்கம் உண்டாகியிருக்கிறது.
அம்பாளுடைய தாடங்கத்துக்கு வருவோம். மங்களச் சின்னமான தாடங்கம் அவள் காதிலிருந்து இறங்கக்கூடாது. அப்படியானால் பரமேசுவரன் எக்காலத்திலும் ஜீவிக்கத்தான் வேண்டும். இதனால்தான் அவர் ஆலஹால விஷம் உண்டும்கூட அது அவரைப் பாதிக்கவில்லை. ‘இது உன் தாடங்க மகிமையம்மா!’ என்கிறார் ஆசாரியாள். திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியின் தாடங்கத்திலேயே ஸ்ரீ சக்ர, சிவ சக்ரப் பிரதிஷ்டை செய்து, அவளை ஸெளம்ய மூர்த்தியாக்கின ஆசாரியாள், இப்படி இங்கே ‘தவ ஜனனி தாடங்க மஹிமா’ என்கிறார்.
விஷத்தைச் சாப்பிட்டும் பரமேசுவரன் சொஸ்தமாக இருப்பதற்குக் காரணம், எந்த விஷத்தையும் முறிக்கிற மருந்தாக, அமிருதமாக, அம்பிகை அவரோடு சேர்ந்து இருப்பதுதான். வேத வாக்கியமான ‘ஸ்ரீ ருத்ர’த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. “ருத்திரனாக கோரமாக இருக்கிற உனக்கு ‘சிவா’ என்று ஒரு மங்கள சரீரம் இருக்கிறது. இந்த சிவாதான் லோகம் முழுவதற்கும் மருந்து. (சிவா விச்வா ஹபேஷஜீ) லோகத்துக்கு மட்டும்தான் அது மருந்தா? இல்லை. ருத்திரனாக உனக்கும்கூட ‘சிவா’ தான் மருந்து. (சிவா ருத்ரஸ்ய பேஷஜீ) என்று வேதம் சொல்கிறது. கோர ஸ்வரூபியையும் தன் பதிவிரத்யத்தால் மங்களமாக்கி, அவரை என்றென்றும் ஜீவிக்கும்படி செய்கிறவளை ஸ்திரீகள் ஆராதித்தால் பதிபக்தியும், தீர்க்க ஸெளமங்கல்யமும் ஸித்திக்கும்.
பெண்களுக்குப் பதியேதான் குரு. பழைய காலத்தில் காமம் உள்ளே புகுமுன் காயத்ரீ புகுந்துவிடவேண்டும் என்று கருதி எட்டு வயசுக்குள் புருஷப் பிள்ளைகளுக்கு உபநயனம் செய்து குருவிடம் சேர்த்தார்கள். அதே வயசில் பெண்களுக்குக் கல்யாணம் செய்து புருஷனிடம் சேர்த்தார்கள். அவனேயே குருவாகவும் தெய்வமாகவும் இவளுக்கு வைத்தார்கள். பிற்பாடுதான் காமம் ஏற்பட்டு, அவனை அவள் பதியாகப் பார்ப்பதே. எனவே குருபக்தியும், பதிபக்தியும் பெண்களுக்கு ஒன்றேதான். பதிவிரதா சிரோமணியான அம்பாளை ஆராதிக்கிற பெண்களுக்கு அவள் தீர்க்க ஸெளமாங்கலியத்தைத் தருகிறாள். ஸ்ரீமத் பாகவதத்தில் கோபிகா ஸ்திரீகள் மார்கழி மாதம் முழுதும் தினம் அதிகாலையில் ஆற்றங்கரையில் அம்பாளை பூஜித்து, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை அடைந்தார்கள் என்று சொல்லியிருக்கிறது. பிற்பாடு ருக்மணியும் அம்பாளை ஆராதனை செய்தே பகவானை பர்த்தாவாக அடைந்தாள் என்று வருகிறது. தமிழ்நாட்டிலும் சங்க காலத்திலேயே ‘அம்பாவாடல்’ என்கிற பேரில் கன்னிப் பெண்கள் கல்யாணமாவதற்கு அம்பாளை வழிபட்டார்கள் என்று தெரிகிறது. இதற்குப் ‘பாவை நோன்பு’ என்ற பேர் இருக்கிறது. இன்னமும் கன்னிப் பெண்கள் கல்யாணமாவதற்காக கௌரீ பூஜை பண்ணுகிறார்கள். ஆந்திர தேசத்தில் அவ்வழக்கம் அதிகம் இருக்கிறது.
எப்பேர்ப்பட்ட பர்த்தா வந்தாலும், அவனையே தெய்வமாகப் பாவித்துத் தன்னை சரணாகதி செய்துவிட வேண்டும் என்பதுதான் உத்தம பதிவிரதா லக்ஷணம். ஏதோ ஓரிடத்தில் மனஸை பரிபூரணமாக அர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். பிறகு அதை மாற்றக்கூடாது என்பதுதான் முக்கியம். அந்த ஓரிடம் முக்கிய வஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; அதனிடத்தில் மனஸைப் பூரணமாகச் சமர்ப்பித்துவிட்டால், அப்புறம் நமக்கென்று தனியாக எதுவுமே செய்து கொள்ள வேண்டும் என்பதில்லாமல் போய்விடுகிறது. இது தன்னலனை அடியோடு இழந்து கொள்கிற நிலை. இப்படி அகங்காரம் அடியோடு போய்விட்டதனால் மோக்ஷமார்க்கத்துக்கு வாசலைத் திறந்து விட்டாற் போலிருக்கிறது. நாம் சரணாகதி பண்ணுவதுதான் இதில் முக்கியம். அது எந்தப் பாத்திரத்தைக் குறித்து என்பது அவ்வளவு முக்கியமல்ல. ஒரு ஸ்திரீ எப்படிப்பட்ட புருஷன் கிடைத்தாலும் அவனிடம் சரணாகதி செய்து, பதிவிரதையாக இருந்து, அவனையே பரமேசுவரனாக நினைத்து விட்டாளானால், நிச்சயமாக அந்தப் பரமேசுவரன் இந்தப் புருஷன் மூலமாகவே அவளுக்கு அநுக்கிரஹம் பண்ணிவிடுவார். மகாகுரூபமும், விபரீத குணமும் படைத்த பதியிடம் அதி விசுவாசத்தோடு இருந்த நளாயினிக்கு சூரியனையே உதிக்காமல் நிறுத்தி வைக்கிற சக்தி உண்டாயிற்று. பதிவிரதை பூஜிக்கிற அந்தப் பதிக்கு ஒரு சக்தியும் இராது! நளாயினியின் பதியால் சூரியனை உதிக்காமல் நிறுத்தி வைக்க முடியுமா? முடியாது. பரமேசுவராம்சம் லவலேசம்கூடத் தனக்கு இருப்பதாக ஒரு பதிக்குத் தெரியாதபோதுகூட அவனை ஈஸ்வரனாக மதிக்கிற இவளுக்கு சகல சக்தியும் வந்து விடுகிறது. குரூபியிடமும், குணஹீனனிடமும்கூடப் பதிபக்தி பாராட்டுவதுதான் விசேஷம். “அவர் இயற்கையாகவே நல்லவராக இருந்தால் நம் தியாகத்தைக் காட்ட வழி ஏதுமில்லை. அதற்காகவே பகவான் இப்படிக் குணஹீனனான புருஷனாக நமக்குக் கொடுத்திருக்கிறார்” என்று நினைக்க வேண்டும். இப்படிப்பட்ட பதியை அநுசரிப்பதால் ஏற்படுகிற அவமானமும் கொஞ்ச காலம்தான் இருக்கும். ‘தனியாக நமக்கென்று மான அவமானம் என்ன இருக்கிறது?’ என்று இவள் இருக்க வேண்டும். மொத்தத்தில் விஷயம், ‘தனக்காக ஒன்றைப் பண்ணிக் கொள்வது’ என்பது அடிபட்டுப்போனால், அப்புறம் மோக்ஷம் சமீபம்தான்.
குரு விஷயமும் இப்படித்தான். நல்லவர் என்று நினைத்துதான் ஒருவரை குருவாக வரிக்கிறோம். பிற்பாடு அப்படியில்லை என்று தெரிந்தாலும்கூட, விடாமல் சிசுரூஷை செய்தால் நம் மனசு சுத்தமாகிவிடும் என்று எனக்குத் தோன்றுகிறது. எல்லாமாக ஆகியுள்ள பரமேசுவரன்தான் இங்கே இப்படி ஆகியிருக்கிறார் என்கிற பாவத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். தகாத இடம் என்று தோன்றுகிறபோதும் சிசுரூஷையை குறைக்காமலிருந்தால் ஜாஸ்தி பலன் என்றுகூடத் தோன்றுகிறது. நன்றாக இருக்கிற ஒன்றிடம் பிரியம் வைப்பதில் விசேஷம் என்ன இருக்கிறது? கெட்டதிடமும் அதே பிரியத்தை வைத்துவிட்டால், நம் பிரியத்தாலேயே கெட்டதும் நல்லதாகலாம் – கோரமான ருத்திரன்கூட அம்பாளால் மங்கள ஸ்வரூபியான மாதிரி.
குரு ஸ்வரூபமாக வருகிறவளும் அவள்தான். இந்த மாயா லோகம் அவளால்தான் நடக்கிறது. அதிலிருந்து கைதூக்கி விடுவதற்காக அவளே குருவாக வருகிறாள். குண்டலினி யோக சாதகர்கள் தங்கள் சிரஸின் உச்சியில் பிராண சக்தியைக் கொண்டுவந்து அங்கே பூரண சந்திரனில் அம்பாள் பாதத்தைத் தரிசிக்கிறார்கள்; இதையே குருபாதுகை எனறும் சொல்கிறார்கள். காளிதாஸரும், “தேசிக ரூபணே தர்சிதாப்யுதயாம்” – ஆசாரிய வடிவில் தன் மகிமையைக் காட்டுகிறவள்” என்று அம்பாளை ஸ்துதிக்கிறார்.
‘ஈசுவரன் மயானத்தில் வசிக்கிறாரா, வசிக்கட்டும்; பேய் பிசாசுகளோடு கூத்தடிக்கிறாரா, அடிக்கட்டும்; சம்ஹார தாண்டவம் பண்ணுகிறாரா, பண்ணட்டும்; ஊர் ஊராகப் பிச்சை எடுக்கிறாரா, எடுக்கட்டும் – அவர் எப்படியிருந்தாலும் அவருக்கே இருதயத்தை அர்ப்பணம் செய்வேன்’ என்று அவரிடமே தீவிரமாக அன்பு வைத்து, தக்ஷ யக்ஞத்தின் தன் பிராணனையே தியாகம் செய்த அம்பாள்தான், இப்படிப்பட்ட பதிபக்தியை, குருபக்தியை அநுக்கிரஹம் செய்கிறாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
‘நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம்’ என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது? இந்தப் பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மால் ஒரு சுவாசம்கூட விடமுடியுமா? ஒருநாள், இத்தனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத்தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இதை அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் அதிகம் கிடைக்கும்.
அவதார புருஷர்களாக வந்தவர்களும் இந்த அடக்கத்தை நமக்கெல்லாம் போதிப்பதற்காக ரொம்பவும் விநய சம்பத்தோடு வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ராமசந்திரமூர்த்தி இப்படித்தான் தர்மத்துக்கும், சத்தியத்துக்கும், சாஸ்திரத்துக்கும் அடங்கி மநுஷ்யன் மாதிரியே நடந்து காட்டினார். அவருடைய விநயத்தை நினைக்கிறபோது எனக்குத் தோன்றுகிற ஓர் எண்ணத்தைச் சொன்னால் உங்களுக்கு விசித்திரமாக இருக்கும். எல்லோரும் ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்று வருத்தப்படுவார்கள் அல்லவா? எனக்கோ நான் அப்படிப் பிறக்காமல் போனதே நல்லதுதான் என்று தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ராமர் தாம் ஒரு க்ஷத்திரியர் என்பதால் அடக்கத்தோடு வேத வித்துக்களையும், ரிஷிகளையும் ஆசாரியர்களையும் விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். அவர் காலத்தில் ஒரு மடாதிபதியாக இருந்தால், அவர் வந்து நமஸ்கரிக்கும் படியாக ஆகிவிடும். அது எத்தனை தர்மசங்கடமாயிருக்கும்! இப்போதோ அவரை நான் நமஸ்காரம் செய்து சந்தோஷப்பட முடிகிறது.
எதற்குச் சொல்கிறேன் என்றால், சாக்ஷாத் நாராயணனான ராமசந்திரமூர்த்தி விநயமே வடிவமாக இருந்தார். அவதாரம் என்பதால் ஜனங்களுக்கு எட்டாத கொம்பிலே இருக்கவேண்டும் என்றில்லாமல் மநுஷ்யராகவே நடித்தார். பொது ஜனங்களுக்கு இருக்கிற துக்கம் கஷ்டம் எல்லாம் கூடத் தமக்கு இருக்கிற மாதிரி நடித்தார். சீதையைப் பிரிந்ததற்காக அழுதார்; லக்ஷ்மணன் மூர்ச்சித்த போது புலம்பினார். சமுத்திர ராஜனிடம் ரௌத்ராகாரமாகக் கோபம் கொண்டார். ஜனங்களுக்கு, ‘இவரும் தங்கள் மாதிரி ஒருத்தர்’ என்று பிடிமானம் உண்டாவதற்கே அவதார புருஷர்களுக்கு கோபம், பயம், துக்கம் எல்லாம் வந்த மாதிரி ஓரொரு சந்தர்ப்பங்களில் காட்டிக் கொள்வார்கள். கைகால் ஆடுகிற மாதிரி, மனசும் அதனுடைய சாதாரண சுபாவப்படி கொஞ்சம் ஆடிவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடுவார்கள். ஆனால் உள்ளூற இவர்கள் இந்த உணர்ச்சி பேதங்களால் பாதிக்கப்படாமல் சாந்தமாகவே இருப்பார்கள். உள்ளூறத் தங்கள் ஈசுவரத்தை உணர்ந்தபோதிலும் வெளியே மநுஷ்யர் போல இருப்பார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக அடக்கமாக இருப்பார்கள். ராமரே அடக்கமானவர் என்றால், புத்தி, தேகபலம் எல்லாவற்றிலுமாக சக்திமானாக இருந்த ஆஞ்சநேயரே அடங்கி அடங்கி இந்த ராமனுக்கும் தாஸனாக இருந்து கொண்டே அசாத்தியத்தை எல்லாம் லகுவாக சாதித்தார்.
இவர்களைப் போலவேதான் நம் ஆதிசங்கர பகவத் பாதாளும். அவர்களைக் காட்டிலும் ஒரு பெரிய அவதாரம் இதுவரைக்கும் ஆவிர்பவித்தது உண்டா என்று தோன்றுகிறது. பரமேசுவராவதாரமான ஆசார்யாள், சொற்ப காலமே இந்த பூமியில் வாழ்ந்த போதிலும், லோகம் முழுக்கச் சேர்ந்தாலும், செய்ய முடியாத காரியங்களைச் சாதித்துவிட்டார். ஆசேது ஹிமாசலம் சஞ்சாரம் பண்ணித் தனியொரு மநுஷ்யராக இருந்துகொண்டு வைதிக மதத்தைப் புனர் உத்தாரணம் பண்ணினார். அத்வைத ஸ்தாபனம், ஷண்மத ஸ்தாபனம் எல்லாம் பண்ணினார். ஞானியாக, பக்தராக, கவியாக, மகாபுத்திமானாக, ஏகப்பட்ட காரியம் சாதிக்கிற சக்திமானாக, பரம கருணாமூர்த்தியாக – இப்படி எல்லாமாகவும் இருந்திருக்கிறார். அவருடைய பாதபங்கஜத்தில் சகல ஞானிகளின் சிரசுகளும் வண்டுகள் மாதிரி மொய்த்துக்கொண்டு கிடந்தன என்று கம்போடியா தேசத்தில் உள்ள எண்ணூறு வருஷங்களுக்கு முற்பட்ட ஒரு கல்வெட்டு அழகான ஸம்ஸ்கிருதத்தில் சொல்கிறது.
நிச்சேஷ மூர்த்தாலி மாலா லீடாங்க்ரி பங்கஜாத்
“பகவான்” என்றே அவரை அக்கல்வெட்டு சொல்கிறது. அப்படிப்பட்டவர் அம்பாளிடம் எத்தனை அடக்கத்துடன் பக்தி செலுத்தினார் என்பது ஸெளந்தர்ய லஹரியின் கடைசி ஸ்லோகத்திலிருந்து தெரிகிறது.
‘ஸெளந்தர்ய லஹரி’ போல் ஒரு கிரந்தத்தைச் செய்கிறவருக்கு எத்தனை அஹம்பாவம் வேண்டுமானாலும் ஏற்படுவதற்கு நியாயமுண்டு. பூலோகம் ஏற்பட்ட நாளாக இதற்கு முந்தியோ, பிந்தியோ இவ்வளவு பூரணமான ஸெளந்தர்யம் உள்ள வாக்கு தோன்றியதும் இல்லை. இனி தோன்றப்போவதுமில்லை என்று சொல்லும்படி, எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அழகு வாய்ந்ததாக இருப்பது ‘ஸெளந்தர்ய லஹரி’. இப்படிப்பட்ட கிரந்தத்தைச் செய்த நம் ஆசாரியாளுக்கோ தாம் அதை பண்ணினோம் என்ற அகங்காரம் எள்ளளவும் இல்லை. ஸ்தோத்திரத்தைப் பூர்த்தி செய்து அம்பாளின் சரண கமலத்தில் அர்ப்பணம் பண்ணுகிற நூறாவது சுலோகத்தில் மிகவும் விநயமாகச் சொல்கிறார். (ப்ரதீப ஜ்வாலாபி: என்று தொடங்கும் ஸ்லோகம்)
அம்மா, வாக்கு ஸ்வரூபிணியான உன்னை வாக்கினால் துதிக்கிறேனே, இது எப்படி இருக்கிறது? சூரியனுக்கு கர்ப்பூர ஹாரத்தி காட்டுகிற மாதிரித்தான் இருக்கிறது” என்று ஆரம்பிக்கிறார். சூரிய தேஜஸ் எங்கே? கர்ப்பூரத்தின் அற்ப ஒளி எங்கே! சூரியனால்தான் கர்ப்பூரத்துக்கு எரிகிற சக்தியே உண்டாகிறது. நாலு நாள் வெயில் அடிக்காவிட்டால் கர்ப்பூரம் லேசில் பிடித்துக் கொள்வதில்லை. ஸங்க்ராந்தியன்று சூரிய பூஜை செய்து, அந்த தேஜோமயத்துக்குக் கர்ப்பூரம் காட்டுகிறோமே. அதனால் சூரியனையா விளக்கிக் காட்டுகிறோம்? சூரிய ஒளியில் கர்ப்பூரத்தின் ஸ்வாபமான பிரகாசம்கூடத் தெரியாமல் அது மங்கிப்போவதைத்தான் பார்க்கிறோம். அம்பாளைத் தாம் வாக்கால் வர்ணிக்கப் பார்த்தது அப்படிப்பட்ட காரியம்தான் என்கிறார் ஸ்ரீ ஆசார்யாள்.
இன்னோர் உதாரணம் சொல்கிறார்: “சந்திர காந்தக்கல்லானது சந்திரனுக்கு அர்க்கிய ஜலம் விடுகிற மாதிரி உன்னை இந்த வாக்கால் துதிக்கிறேன்” என்கிறார். சந்திர காந்தக்கல் என்பது பூர்ணிமை சந்திரன் உதிக்கிற சமயத்தில் அந்த நிலவை உள்ளே வாங்கிக்கொண்டு ஜலமாகக் கக்கும் என்பார்கள். வாஸ்தவத்தில் இப்படி ஒன்று உண்டோ இல்லையோ கவிகள் சம்பிரதாயமாக (poetic tradition) இதைப் பற்றிச் சொல்லி வருகிறார்கள். இப்படிப்பட்ட சந்திரகாந்தக் கல் சந்திரனைப் பூஜை செய்கிறேன் என்று ஆரம்பித்து, பதினாறு உபசாரங்களில் ஒன்றாக ‘அர்க்கியம் சமர்ப்பயாமி’ என்று நீர் வார்க்கிறபோது, நிலவின் சக்தியிலேயே பிறந்த ஜலத்தை அர்க்கியமாக வடித்தால் எப்படி இருக்கும்? அம்பாளின் அநுக்கிரகமே தமக்குள் பிரவேசித்து இந்த வாக்கை வடித்திருக்கிறது என்று ஆசார்யாள் இங்கே சொல்லாமல் சொல்கிறார்.
முன்றாவதாக இன்னொரு திருஷ்டாந்தம்.
“சமுத்திரத்துக்கு அதன் தீர்த்தத்தையே எடுத்து ஸ்நானம் செய்விக்கிற மாதிரி, உன்னை இந்த ஸ்துதியால் புகழ்கிறேன்” என்கிறார். ராமேசுவரத்திற்குப் போனால் சேதுவில் சமுத்திர பூஜை செய்வார்கள். அப்போது பூஜா அங்கமாக சமுத்திரத்திற்கு அபிஷேகம் பண்ணுவார்கள் – அந்தப் பெரிய சமுத்திரத்திலிருந்தே துளிபோல எடுத்து, அதற்கே ஸ்நானம் செய்வார்கள். வாக் சமுத்திரமாக இருக்கிற அம்பிகைக்கு அதிலிருந்தே கொஞ்சத்தை எடுத்து, துதி செய்வதாக ஆசார்யாள் சொல்கிறார். அந்த ஜலம் பூஜை செய்கிறவருக்கா சொந்தம்? சமுத்திரத்துக்கே சொந்தமானதை எடுத்து அதற்கே மீண்டும் தருகிறாராம்!
அவள் கொடுத்த வாக்காலேயே அவளைத் துதிக்கிறோமே ஒழிய, இதில் தாமாகச் செய்தது எதுவுமே இல்லை என்று அடக்கத்துடன் சாக்ஷாத் ஈசுவராவதாரமான ஆசார்யாள் சொல்கிறார்.
‘சந்திரன் இல்லாவிடில் எப்படி சந்திர காந்தக் கல் ஜலம் வடிக்காதோ அப்படி அவளருளின்றி இந்த வாக்கில்லை. பெரிய சமுத்திரத்திலிருந்து கையளவு ஜலம் எடுக்கிற மாதிரி வாக்கு சாகரத்திலிருந்தே இந்த வாக்கை எடுத்திருக்கிறோம். இதனால் அவள் மகிமையை விளக்கியதாக நினைப்பது, கர்ப்பூரத்தால் சூரியனைக் காட்டிக் கொடுப்பதாக எண்ணுகிற பரிஹாஸத்துக்குரிய செயல்தான்’ என்பதெல்லாம் சுலோகத்தின் தாத்பரியம்.
அவதார புருஷர்களும் அம்பாளிடம் இப்படி அடங்கிப் பேசுகிறார்கள். அப்படி இருக்க நமக்கு எதைப் பற்றியும் அகங்காரம் கொள்ள ஏது நியாயம்? நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம் செய்கிறோம் என்று உலகம் புகழ் மாலை போடுகிறது. அதே சமயத்தில் நமக்குத் தலைகனம் ஏறத்தான் தொடங்கும். அப்போது நமக்குச் சக்தி உண்டா என்று யோசிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து நம் சக்தி வந்ததோ, அந்த அம்பாள் இருக்க, புகழுக்குப் பாத்திரராகி அகம்பாவப்பட நமக்குக் கொஞ்சம்கூட உரிமையில்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் அவற்றுக்குறிய பராசக்தியின் பாதாரவிந்தங்களிலேயே அர்ப்பணம் செய்துவிட வேண்டும். பெருமைப் பூரிப்பில் இருப்பதைவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல்லாமல் லேசாக ஆவதுதான் நமக்கே பரம சௌக்கியமாக இருக்கும். நமக்கு அகம்பாவமே இல்லை என்கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு உண்டாகிவிட்டால், அதுவும்கூட அகம்பாவம்தான். எனவே அகம்பாவம் தலை தூக்க இடமே தராமல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளையே வேண்டி இப்படியாக நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 18 of 19 • 1 ... 10 ... 17, 18, 19
Similar topics
» அங்கே துக்கமும் இல்லை, சுகமும் இல்லை தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
» தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்....
» தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம்
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
» தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை
» தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்....
» தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம்
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
» தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை
Page 18 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|