ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்!

3 posters

Go down

 அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்! Empty அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்!

Post by ayyasamy ram Mon Oct 22, 2018 7:34 am

 அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்! Kanchi2
-

-
By நமது நிருபர், காஞ்சிபுரம் |
தினமணி
-------------------------------

குக்கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஒருவரின் முயற்சியால்
அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களுக்கு புகலிடம் கிடைத்துள்ளது.

"குன்றத்து இருந்த குரீஇ இனம் போல்', "தூக்கலாம் குரீஇத் தூங்கு கூடு'
எனும் புறநானூற்றுக் கூற்றுப்படி, சங்க காலம் தொட்டே
சிட்டுக்குருவிகள் குறித்து அறிந்துள்ளோம்.

ஆனால், வளர்ந்து வரும் நவீன உலகத்தால் சுற்றுச்சூழலில் மாற்றங்கள்
ஏற்பட்டு, மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும்
வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி
இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன.

அந்த ஒரு நிலையில்தான், நகர்ப்பகுதிகளில் சிட்டுக்குருவி இனங்கள்
முற்றிலுமாக அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. செல்லிடப்பேசிகள்
மற்றும் அவற்றுக்கான கோபுரங்களிலிருந்து வெளியாகும் நுண்ணிய
மின்காந்த அலைகளின் தாக்கத்தால் இக்குருவி இனத்தின் இனப்
பெருக்க மண்டலம் பாதிக்கப்படுவதால், இவ்வினங்கள் வேகமாக
அழிந்து வரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இப்பறவையைப் பாதுகாக்க பல்வேறு பறவை நல ஆர்வலர்களும்,
சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பல்வேறு நாட்டினரும் முயற்சி எடுத்து
வருகின்றனர்.

இதன் காரணமாகவே, மார்ச் 20ஆம் தேதியை உலக ஊர்க்குருவிகள்
தினமாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர்.

இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் சிறப்பு அஞ்சல்
தலைகளை வெளியிட்டு குருவி இனங்களைப் பெருமைப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டத்துக்குட்பட்ட
மல்லியங்கரணை ஊராட்சியில் உள்ள நாரைமேடு எனும்
குக்கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமணன் (70).

அவர் தனது சொந்த நிலத்தில் சிட்டுக்குருவி உள்ளிட்ட பல்வேறு
பறவை இனங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் கடந்த பல
ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, தனது நிலத்தில் ஆங்காங்கே குளங்களை வெட்டியும்,
பல்வேறு வகையான மரங்களை நட்டும் சிட்டுக்குருவி இனங்களுக்கு
சரணாலய இடமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது இந்த முயற்சியின் காரணாக, அவரது நிலப்பகுதியில் சுமார்
20க்கும் மேற்பட்ட குருவி இனங்கள் கூடு அமைத்தும், மரங்கள்,
புதர்களில் தஞ்சமடைந்தும் வசித்து வருகின்றன.

அதன்படி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருவிகள் அவரது
நிலப்பகுதியில் வசிக்கின்றன. முழுக்க முழுக்க
பறவையினங்களுக்காகவே சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கி
குருவி இனங்களைப் பாதுகாத்து வருகிறார் பறவை லட்சுமணன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்! Empty Re: அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்!

Post by ayyasamy ram Mon Oct 22, 2018 7:35 am


இதுகுறித்து அவர் கூறியதாவது:

எனது சொந்த ஊர் உத்தரமேரூர். இந்தப் பேரூராட்சியில் குடிநீர்க்
குழாய் பழுதுநீக்கும் பணியில் சேர்ந்து, படிப்படியாக பேரூராட்சி
செயல் அலுவலர் வரை பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றேன்.

பணியில் இருக்கும்போது, பறவை இனங்கள் மீது தனி அன்பு உண்டு.
அதிலும், வேகமாக அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களைப்
பாதுகாக்க வேண்டும் என நினைத்து, அதற்காக சுமார் 25 ஏக்கர்
நிலத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மல்லியங்கரணை
பகுதியில் வாங்கினேன்.

அதோடு, லட்சுமண குருசாமி அறக்கட்டளை எனும் பெயரில்
பறவைகள் தாகம் தணிக்கும் தடாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலப்பரப்பில், குளம், பயிர் செய்யும் பகுதி, மரங்கள்
நடும் பகுதி என பிரிக்க திட்டமிடப்பட்டு, தற்போது குளம் வெட்டி
அதில் நீரை தேக்கிவைக்கப்பட்டுள்ளது.

24 வகை இனங்கள்


இந்த தடாகத்தில், மீன்கொத்தி, மரங்கொத்தி, கருப்புவால்,
ஆந்தை, மஞ்சள்குருவி, சிட்டுக்குருவி, தேன்சிட்டு, கிளி, காடை,
தவிட்டுக்குருவி, மைனா, தூக்கணாங்குருவி என 24 வகையான
பறவை இனங்கள் வசித்து வருகின்றன.

தொடக்கத்தில், சில நூறு குருவிகள் இருந்தன. தற்போது,
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசித்து வருகின்றன.

பறவைகளின் பசிக்கு..!

குருவிகள் மற்றும் பறவையினங்களின் பசிக்காக, வேம்பு, ஆலம்,
அரசு, சீத்தா, கொய்யா, நாவல் உள்ளிட்ட பழமரங்கள் வளர்க்கப்
பட்டு வருகின்றன. இதன் மூலம், அந்தந்த பருவத்தில் கிடைக்கும்
பழங்களுக்கேற்ப பறவைகள் பசியாறுகின்றன.

அதேபோல், குளம் வெட்டப்பட்டு, அதில் மீன்கள் வளர்க்கப்
படுகின்றன. மேலும், குளக்கரையையொட்டிய பகுதியில் உள்ள
சிறு பூச்சியினங்களை உணவாகக் கொண்டு பறவைகள்
வசிக்கின்றன.

மேலும், வன்னி, கருங்காளி, வெள்ளெருக்கு, முருங்கை, இலுப்பை
உள்ளிட்ட பல்வேறு மரங்களும் வளர்க்கப்படுகின்றன.
பறவைகளுக்காக நெல் உள்ளிட்டதானியப் பயிர்களும் செய்யப்
படுகின்றன. இம்மரங்களில் பறவைகள் கூடுகளை அமைத்து
முட்டையிட்டு, குஞ்சு பொறித்து பறவையினங்கள் அதிகரித்து
வருகின்றன.

இதற்காக, பிரத்யேக பானை அமைத்து கூடுகளும்
அமைக்கப்பட்டுள்ளன.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்! Empty Re: அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்!

Post by ayyasamy ram Mon Oct 22, 2018 7:35 am


கருடனுக்கு கோயில்


பறவையினங்களுக்குக் தலைவனாக கருடன் விளங்குகிறது.
இந்தப் பறவை இனம் முற்றிலும் அழிந்து விட்டது. இதன்
நினைவாக நாட்டிலேயே முதன்முதலாக கருடபட்சி கோயில்
நாரை மேடு பகுதியில் கட்டப்பட்டுள்ளது.

அதுபோல், சிட்டுக்குருவி இனங்களைப் பாதுகாக்க தடாகம்
அமைக்கப்பட்டுள்ளது.


மரக்கன்றுகள் அதிகம் தேவை

இந்தப் பகுதியில் நடப்படும் மரங்களை ஒருபோதும் வெட்டக்
கூடாது எனும் நோக்கில் பல்வேறு வகையான மரக்கன்றுகள்
தற்போது வளர்ந்துள்ளன. மேலும், இப்பகுதியைச் சுற்றி சுமார்
2,000 பனைக்கன்றுகள் வேலி போல் அமைத்து நடப்பட்டுள்ளன.

மேலும், குருவினங்களுக்கு சரணாலயமாக இருக்க ஆயிரக்
கணக்கான மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், போதிய நிதியின்மை காரணமாக மரக்கன்றுகளை
வாங்கமுடியாத சூழல் உள்ளது.

இருப்பினும், மாவட்ட நிர்வாகம் வனத்துறை சார்பில் அதிகளவில்
மரக்கன்றுகளை வழங்கினால், அவற்றை நட்டுப் பராமரிப்போம்.
அதன்மூலம், சிட்டுக்குருவிகளுக்கென்று ஓர் சரணாலயத்தை
உருவாக்கிக் காட்டுவோம் என்றார் அவர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,

"சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க முதியவர் லட்சுமணன்
எடுத்துள்ள இம்முயற்சி வரவேற்கத்தக்கதும், மகிழ்ச்சி அளிக்கக்
கூடியதும் ஆகும். எனவே, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட சுற்றுச்
சூழல் அமைப்பினர், சிட்டுக்குருவிகளுக்கென
ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தத் தடாகத்துக்கு போதிய உதவிகள்
செய்ய முன்வர வேண்டும்' என்றனர்.
-
---------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்! Empty Re: அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 22, 2018 10:41 am

இதே போன்ற பதிவு சீமைக்கருவிலை காடு அழித்து என்று வந்தது
அருமையான பணி பாராட்டுவோம்.
எந்த ஒரு பலனும் எதிர்பார்க்காது இவர் செய்யும்
அபாரம்
வாழ்த்துக்கள் ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்! Empty Re: அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்!

Post by ராஜா Mon Oct 22, 2018 11:50 am

பழ.முத்துராமலிங்கம் wrote:இதே போன்ற பதிவு சீமைக்கருவிலை காடு அழித்து என்று வந்தது
அருமையான பணி பாராட்டுவோம்.
எந்த ஒரு பலனும் எதிர்பார்க்காது இவர் செய்யும்
அபாரம்
வாழ்த்துக்கள் ஐயா.
நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு இவர் தான் உதாரணம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்! Empty Re: அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum