ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்

3 posters

Go down

 பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் Empty பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்

Post by ayyasamy ram Mon Oct 22, 2018 7:26 am


நாமக்கல்:
நீர் ஆதாரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாதது,
பாசனக் கட்டமைப்பு மேம்பாடு அடையாதது போன்ற
காரணங்களால் தமிழகத்தில் விவசாயம் மிகவும் ஆபத்தான
நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் நடப்பில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான
சுமார் 1.30 கோடி ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு மட்டும்தான்
இதுவரை பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.

இதில், கால்வாய் பாசனம் மூலம் 29 சதவீதம் , குளத்துப் பாசனம்
மூலம் 21 சதவீதம், கிணற்றுப் பாசனம் மூலம் 50 சதவீதம் நிலங்கள்
பாசனம் பெறுகின்றன.

குளங்கள் மூலம் பாசன வசதி பெற்றவை 1960-இல் 22 லட்சம்
ஏக்கராக இருந்தது. இது 2000-இல் 15 லட்சம் ஏக்கராகவும், தற்போது
8 லட்சம் ஏக்கராகவும் சுருங்கி விட்டது.

சராசரியாக ஒரு குளத்தின் மூலம் 45 ஏக்கர் பாசனம் பெற்றுவந்த
நிலையில், இப்போது 20 ஏக்கருக்கும் கீழாகக் குறைந்துவிட்டது.

அழிந்து போன கிணற்றுப் பாசனம்: 90 சதவீத இடங்களில் நிலத்தடி
நீர் மட்டம் 1,000 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால், தமிழகத்தில்
கிணற்றுப்பாசனத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
மாநிலத்தில் சுமார் 20 லட்சம் கிணறுகள் உள்ளன.

சுமார் 15.36 லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கு கிணற்றுப் பாசனம்
ஆதாரமாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே 53 சதவீத கிணறுகள் முற்றிலும்
வறண்டு விட்டன. 27 சதவீதம் கிணறுகள் விவசாயப் பயன்
பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீர் உள்ளதாகி விட்டன.

மீதியுள்ள 20 சதவீதக் கிணறுகளில் தினமும் 2 முதல் 5 மணி நேரம்
இறைப்பதற்கே நீர் இருக்கிறது என ஆய்வறிக்கை கூறுகிறது.

பசுமைப் புரட்சிக்குப் முன்பு 1960-களில் இருந்த நீராதாரங்களின்
நிலையையும் இழந்து, புதிய பாசன வசதியையும் பெறாமல்,
எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இப்போது மிகவும் ஆபத்தான
நிலையில் தமிழக விவசாயம் உள்ளது என்பதை இந்த புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.

தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை: நீர்வரத்து வாய்க்காலை
சுத்தம் செய்வது, குளங்களைத் தூர் வாருவது, கரைகளை
உயர்த்துவது, அணைகளில் படிந்துள்ள மண்ணை அகற்றுவது
ஆகியவை எல்லாம் குடியிருக்கும் வீட்டைக் கூட்டிப் பெருக்குவது
போன்ற பராமரிப்பு வேலைகள்தான். நீர்வளத்தைப்
பெருக்குவதற்கும், அதை நிரந்தரமாக தக்கவைப்பதற்கும்
தொலைநோக்கான, அறிவியல் பூர்வமான திட்டங்கள் வேண்டும்.
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் Empty Re: பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்

Post by ayyasamy ram Mon Oct 22, 2018 7:27 am


நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் முக்கால் அடி ஆழம்
வரையிலான மண் மேல்மண் என வரையறுக்கப்படுகிறது.

பெரும்பாலான தாவரங்கள் இம் மேல் மண்ணில் இருந்துதான்
தங்களின் வளர்ச்சிக்கான நுண்ணூட்டச் சத்துகளை எடுத்துக்
கொள்கின்றன.

மழைநீரை உள்வாங்கி மண்ணுக்குள் கசியச்செய்து நிலத்தடி
நீர் வளத்தைப் பெருக்குவதிலும் மேல்மண் முக்கியப் பங்கு
வகிக்கிறது. வனப்பரப்பு அழிக்கப்படும்போது வளமான
மேல்மண்ணும் வெளியே கிளறப்பட்டு, மேற்பரப்பு மண்ணும்
மழைநீரால் அரித்துச் செல்லப்பட்டு, நீர்த்தேக்க அணைகளில்
வண்டல் மண்ணாக மேடிட்டு நிற்கிறது.

இதனால் அணைகளின் கொள்ளளவு குறைகிறது. மேலும்
நிலத்தடி நீர்வளம் பெருகுவதும் பெருமளவு தடைபடுகிறது.
எனவே, வனத்தையும், வன அடிவாரத்திலுள்ள நீர்பிடிப்புப்
பகுதியிலும் உள்ள மேல்மண்ணையும் வெளிக் கிளறாமல்
தடுத்து பாதுகாப்பதன் மூலமே நீர்வளத்தைப் பெருக்க முடியும்.

திட்டங்கள் யாருக்காக:


2050-ஆம் ஆண்டில் தற்போதுள்ளதை விடக் கூடுதலாக
57,725 மில்லியன் கன மீட்டர் நீர் தேவைப்படும் என மதிப்பீடு
செய்துள்ள நிபுணர்கள் அதற்கான திட்டங்களை நிறைவேற்ற
அறிவியல் பூர்வமான பல்வேறு திட்டங்களையும்
20 ஆண்டுகளுக்கு முன்பே அரசிடம் முன்மொழிந்து
அறிக்கையாகக் கொடுத்தனர்.

இதில் நிலத்தடி நீர் வளத்தைப் புதுப்பிப்பதற்காக, முக்கிய
நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள மலையடிவார சாய்வு நிலப்
பகுதிகளில், சிறு அளவிலான நீர்த்தேக்கங்களை உருவாக்குவது,
நீரோடைகளில் தடுப்பணை கட்டுவது, மேலும் வாய்ப்புள்ள
இடங்களில் கசிவு நீர் குட்டைகள், சம மட்டக் கரைகளை
அமைப்பது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் புதிய கட்டுமானப்
பணிகளையும், சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளையும்
முற்றாகத் தடை செய்ய வேண்டும்.

மேலும், விவசாயப் பயன்பாடற்ற நிலங்களில் புதிய குளங்களை
உருவாக்குவது, நீண்ட கால அடிப்படையில், சேதமடைந்த வனக்
காடுகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது, விவசாய
நிலங்களில் உரம், பூச்சி மருந்து பயன்பாட்டைக் குறைப்பது,
ஆற்று நீரில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதைத்
தடுப்பது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில்தான், வறட்சிப் பகுதி மேம்பாட்டுத்
திட்டம், ஒருங்கிணைந்த நீர்த்தேக்கத் திட்டம், தேசிய
நீர்ப்பிடிப்புப் பகுதிக்கான நீர்தேக்கத் திட்டம் ஆகிய மத்திய
அரசுத் திட்டங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டது.

தமிழக அரசு தன் பங்கிற்கு தமிழ்நாடு நீர்தேக்க வளர்ச்சி
ஆணையத்தை அமைத்தது. இவற்றின் வாயிலாக தமிழகத்தில்
சிறியதும், பெரியதுமாக 20,000 நீர்தேக்கங்கள்(குளம், குட்டைகள்)
ஏற்படுத்தப்பட்டன.

இதில் பெரும்பாலானவை இப்போது பராமரிப்பின்றி
சேதமடைந்து கிடக்கின்றன. இந்த திட்டங்கள் மூலம் நிலத்தடி
நீர் மட்டம் மேம்பாடு அடைந்ததாகவோ, விவசாயம் வளர்ச்சி
அடைந்ததாகவோ கண்டிப்பாகக் கூற முடியாது.
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் Empty Re: பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்

Post by ayyasamy ram Mon Oct 22, 2018 7:27 am




தொடரும் நீர் மாசுபாடு:

1960-களில் தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதமாக
இருந்த வனப்பரப்பு இப்போது 16 சதவீதமாக சுருங்கிவிட்டது.
தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆலைகள் அதிக மாசு
படுத்துபவை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தி
வைத்துள்ளது.

ஆனால் இதையும் தாண்டி தினமும் 6 லட்சம் லிட்டர் ஆலைக்
கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கிறது என்பதையும் அரசுதான் கூறுகிறது.

விரக்தி நிலையில் விவசாயிகள்: இதுகுறித்து நாமக்கல் மாவட்டம்,
சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச்
சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.ஜி.ராஜேந்திரன் தெரிவித்தது:

இயற்கை வளங்களை முக்கியமாக நீர்வள ஆதாரங்களைப்
பாதுகாப்பது மாநில அரசின் கடமை. நீண்ட காலம் நீர் தேங்காமல்
இருக்கும் குளங்களைக் கூட தனியாரோ, அரசோ ஆக்கிரமிக்கக்
கூடாது.

தண்ணீர் பஞ்சம் வராமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வுடன்
மாநில அரசுகள் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.

நீர்நிலைகள் மீதான அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனே
அகற்ற வேண்டும். நீர்நிலைகளை அரசு மற்றும் தனியார்
கையகப்படுத்தாமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான
மாவட்டக் கமிட்டி உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஏராளமாக வந்துவிட்டன.

தமிழக நில ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம் 1965, 1975, 1996, தமிழக
நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம்
2007 என பல சட்டங்களும் இருக்கின்றன.

இருப்பினும் இந்தச் சட்டங்கள், நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள்
முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக செயல்படுத்தப்பட்ட மாற்றுத்
திட்டங்கள் எல்லாம் நீர்வளத்தைப் பெருக்கவோ, விவசாயத்தை
வளப்படுத்தவோ உதவவில்லை.

இனியும் விவசாயத்தை நம்பி வாழ முடியாது என்ற விரக்தி
நிலைக்கு பெரும்பாலான விவசாயிகள் வந்துவிட்டனர் என்றார்.
-
-------------------------------------
- கே.விஜயபாஸ்கர்
-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் Empty Re: பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 22, 2018 9:48 am

நீராதாரங்களை நிச்சயம் காக்க வேண்டும்.
அரசு இதில் எந்த ஒரு முயற்சியையும்
எடுப்பதாக தெரியவில்லை.
நீரின்றி எதுமே இல்லை..
விவசாயம் முற்றிலும் அழிந்து போகும்.
உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு தலைவிரித்தாடும்.
பஞ்சம் பட்டினி பேய்யாட்டம் போடும்.
விலைவாசி விண்ணெட்டும்.
எனவே உடன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் Empty Re: பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Oct 22, 2018 11:17 am

மக்களும் முயற்சி செய்தால் மட்டுமே முடியும் ... இது நாங்கள் கண்ட உண்மை ...
அரசாங்கத்திடம் இருந்து மட்டும் அனைத்தும் எளிதாக வந்து விடாது.. பல பேரின் உழைப்புகள் தன்னலமற்ற சேவை உள்ளம் வேண்டும் ....

https://eegarai.darkbb.com/t135062-topic#1282392


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

 பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் Empty Re: பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர்
» மெக்சிகோவில் ட்ரக் வண்டியொன்றிலிருந்து ஆபத்தான நிலையில் இலங்கையர் மீட்பு
» உலக்கை அடியால் கணவனும் மனைவியும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!
» காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தகராறு செய்கிறது : கர்நாடகா முதல்வர் காட்டம்
» கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் கள்ளக்காதலர்கள் விஷம் குடித்தனர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum