Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
ஜனனி... ஜனனி... ஜெகம் நீ... அகம் நீ...' பாடலை தனது பிரத்தியேகக் குரலில் பாடி விழாவைத் தொடங்கினார், இளையராஜா. பாடலைப் பாடி முடித்தவுடன், ``எக்ஸாமுக்கு வர்ற ஸ்டூடன்ட் மாதிரிதான் நான் இங்கே வந்தேன். ஏன்னா, என்ன பேசுறதுனு எனக்குத் தெரியலை. இங்கே வந்து பார்த்தா, ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ல ஆர்ட்ஸ் மட்டும்தான் இருக்கு!' எனச் சொல்லிவிட்டு சிரித்தவுடன் எதிரே கைதட்டல்களும், விசில் சத்தங்களும் தெறித்தது. `ஹார்ட்ல, ஆர்ட்டே இல்லேன்னா, அது பிரோயஜனமே இல்ல' என்ற இளையராஜா, தனது அனுபவங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
இளையராஜா
``இதுவரைக்கும் 1300 படங்கள்கிட்ட இசையமைச்சுட்டேன். ஆனா, மூணு நிமிடத்துக்குமேல ஒரு பாட்டை கம்போஸ் பண்ணினதே கிடையாது. கே.சங்கர், எம்.ஜி.ஆருக்கு ரொம்ப க்ளோஸ். இந்த விழா நடக்கிற இதே ஆடிட்டோடிரியம்லதான், எம்.ஜி.ஆர் படங்களுடைய பல ஷூட்டிங் நடந்தது. அவர் நடித்துக்கொண்டிருந்த நேரத்துல என்னால ஷூட்டிங் போக முடியலை. அவர் நடிச்ச `உன்னை விடமாட்டேன்' படத்துக்குத்தான் நான் கடைசியா மியூசிக் போட்டேன். அதுல டி.எம்.எஸ் பாடிய ஒரு பாட்டைக் கேட்டுட்டு, `வேற ஆளைப் பாட வை'னு எம்.ஜி.ஆர் சொன்னார். `அவர் பெரிய ஆள், அவர் பாடினதை எடுத்துட்டு, வேற ஆளைப் பாட வெச்சா தப்பா இருக்கும் அண்ணா'னு சொன்னேன். `நான் சொல்றதைக் கேள், வேற ஆளைப் பாட வை'னு சொன்னார். சரினு மலேசியா வாசுதேவனைப் பாட வெச்சேன். அதையும் கேட்டுட்டு, வேற ஆளைப் பாட வைக்கச் சொன்னார். `இதுக்குமேல நான் என்ன பண்றதுண்ணா'னு கேட்டேன். `நீயே பாடு. நீ பாடுன மாதிரி அவங்கெல்லாம் பாடுனாங்களா'னு கேட்டார். `இல்ல, என் குரல் சின்னப் பையன் மாதிரி இருக்கும். அதுவும் இல்லாம நான் கிராமத்துல இருந்து வந்த ஆளு, என்னுடைய குரல் உங்களுக்குச் சேருமோ, சேராதோ'னு சொன்னேன். `அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ பாடு'னு பாட வைத்தார்." என்று நெகிழ்ந்தார்.
நன்றி
விகடன்
இளையராஜா
``இதுவரைக்கும் 1300 படங்கள்கிட்ட இசையமைச்சுட்டேன். ஆனா, மூணு நிமிடத்துக்குமேல ஒரு பாட்டை கம்போஸ் பண்ணினதே கிடையாது. கே.சங்கர், எம்.ஜி.ஆருக்கு ரொம்ப க்ளோஸ். இந்த விழா நடக்கிற இதே ஆடிட்டோடிரியம்லதான், எம்.ஜி.ஆர் படங்களுடைய பல ஷூட்டிங் நடந்தது. அவர் நடித்துக்கொண்டிருந்த நேரத்துல என்னால ஷூட்டிங் போக முடியலை. அவர் நடிச்ச `உன்னை விடமாட்டேன்' படத்துக்குத்தான் நான் கடைசியா மியூசிக் போட்டேன். அதுல டி.எம்.எஸ் பாடிய ஒரு பாட்டைக் கேட்டுட்டு, `வேற ஆளைப் பாட வை'னு எம்.ஜி.ஆர் சொன்னார். `அவர் பெரிய ஆள், அவர் பாடினதை எடுத்துட்டு, வேற ஆளைப் பாட வெச்சா தப்பா இருக்கும் அண்ணா'னு சொன்னேன். `நான் சொல்றதைக் கேள், வேற ஆளைப் பாட வை'னு சொன்னார். சரினு மலேசியா வாசுதேவனைப் பாட வெச்சேன். அதையும் கேட்டுட்டு, வேற ஆளைப் பாட வைக்கச் சொன்னார். `இதுக்குமேல நான் என்ன பண்றதுண்ணா'னு கேட்டேன். `நீயே பாடு. நீ பாடுன மாதிரி அவங்கெல்லாம் பாடுனாங்களா'னு கேட்டார். `இல்ல, என் குரல் சின்னப் பையன் மாதிரி இருக்கும். அதுவும் இல்லாம நான் கிராமத்துல இருந்து வந்த ஆளு, என்னுடைய குரல் உங்களுக்குச் சேருமோ, சேராதோ'னு சொன்னேன். `அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ பாடு'னு பாட வைத்தார்." என்று நெகிழ்ந்தார்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
`ஹார்ட்ல, ஆர்ட்டே இல்லேன்னா,
அது பிரோயஜனமே இல்ல' - இளையராஜா,
-
-
![ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா 2_14471](https://image.vikatan.com/cinema/2018/10/16/images/2_14471.png)
அது பிரோயஜனமே இல்ல' - இளையராஜா,
-
![ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
-
![ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா 2_14471](https://image.vikatan.com/cinema/2018/10/16/images/2_14471.png)
Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
தொடர்ந்து ஒரு பாடல் உருவான கதையைச் சொல்ல ஆரம்பித்தார். `` `மூகாம்பிகை'யில கொள்ளூர் மகரிஷி இருக்கிற இடத்துக்கு ஆதி சங்கரன் வருகிறார். தியானத்துக்கு வந்த அவருக்கு, மூன்று தேவிகள் ஐக்கியமாகிற காட்சி தெரிகிறது. அந்த நேரத்துல இந்தப் பாடலைப் பாடுகிறார்' என்று இயக்குநர் கே.ஷங்கர் பாடலின் சூழலைச் சொன்னார். நான் முதல்ல ஒரு டியூன் கம்போஸ் பண்ணிட்டேன். அப்போ கம்போஸிங் எப்படி நடக்கும்னு உங்களுக்குத் தெரியாது. ஆர்மோனியத்தோடு சேர்த்து என்னுடைய பக்க வாத்தியங்கள் வாசிக்கிற ரிதம் பிளேயர்ஸ் இருப்பாங்க. உதவி இயக்குநர்கள் நாலு பேர், இயக்குநர், பாடலாசிரியர், என்னுடைய மியூசிக் அசிஸ்டென்ட்ஸ்னு இத்தனை பேரும் இருப்பாங்க. இயக்குநர் கே.ஷங்கர் சூழலைச் சொல்லி முடித்ததும், நான் டியூன் போட்டேன். அப்போவே ஓகே பண்ணிட்டார். `இருங்க சார் நான் வாஷ் ரூம் போயிட்டு வர்றேன்'னு சொன்னேன். போற வழியில பூஜை ரூம்ல ஆதி சங்கரருடைய படம் இருந்தது. நான் ரொம்ப மனம் உருகி வேண்டுற ஆளெல்லாம் கிடையாது. இருந்தாலும், ஆதி சங்கரரைப் பார்த்து, `குருவே நீங்க என்னுடைய டியூன்ல வர்றீங்க'னு சொல்லிட்டு வந்தேன். வந்துட்டு, டியூனை மாத்தி வேற ஒண்ணு போட்டேன். `சார் இது முன்னாடி போட்டது மாதிரி இல்லையே!'னு சொன்னார். `இது நல்லா இருக்கா'னு கேட்டேன். `ரொம்ப நல்லா இருக்கு சார்'னு சொன்னார். இதுக்கு நடுவுல வாலி சார், `யோவ் ஜனனி... ஜனனி... ஜெகம் நீ... அகம் நீனு பாட்டுப் பாடி பாருய்யா'னு சொன்னார். பாட்டைப் பாடி முடிச்சதும் இயக்குநர் அழ ஆரம்பிச்சுட்டார். டியூனைப் போட்டுட்டு யாரைப் பாட வைக்கிறதுனு யோசிச்சுக்கிட்டு இருந்தோம். ஜேசுதாஸைப் பாட வைக்கலாம்னு முடிவு பண்ணி, அவரைத் தேடும்போது, அவர் ஊர்ல இல்லை. அப்போல்லாம் டிராக் எடுத்துப் பாடுற பழக்கம் கிடையாது. `சார் இப்போ நான் டிராக் போட்டுப் பாடுறேன். ஜேசுதாஸ் வந்த உடனே அவரைப் பாட வெச்சு மிக்ஸ் பண்ணிக்கலாம்'னு சொன்னேன். பாடி முடிச்சதும், வாத்தியம் வாசிச்சவங்க, பார்த்தவங்க, ரெக்காடிஸ்ட் ராமநாதன்னு எல்லோருமே அழறாங்க. அப்படி ஒரு சரித்திரம்தான் இந்தப் பாட்டுக்குப் பின்னால இருக்கு." என்று `ஜனனி...' பாடலுக்குப் பின்னால் இருந்த நிஜக் கதையைச் சொல்லி முடித்தார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
எனக்குப் பாடல் வருவதெல்லாம் ஒரு நொடியில் வந்துவிடும். என்னுடைய குழுவோட பெங்களூருக்கு ஒரு கன்னடப் பட ரெக்கார்டிங்காக சாமுண்டேஷ்வரி ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். என் கிட்டாரிஸ்ட் பெயர், சதானந்தம். அங்கே ஒரு டியூனை தப்பா வாசிச்சார். நான் டாக்பேக்ல என்னாச்சுனு கேட்டேன். `மிஸ் ஆகிடுச்சு ராஜா, ஒன்மோர் போகலாம்'னு சொன்னார். இப்படியே ஒரு ரெண்டு மூணு தடவை டியூன் தப்பாகிடுச்சு. அந்த இடத்துல, `சதா... சதா'னு அவரைக் கூப்பிட்டு அது டியூன் ஆகி, `உன்னை... நினைத்து நினைத்து உன்னில்... கலந்திடவே... அருள்வாய்... ரமணா... சதா'னு அப்படியே பாட்டா வந்துருச்சு" எனச் சொல்லி நடந்த சூழலலையும் காட்சிகளையும் கட்டமைத்துப் பாடிய அப்பாடலை அந்த அரங்கில் மீண்டும் பாடிக் காட்டி, அந்தக் கதையைப் பாட்டாகவே பாடினார். மீண்டும் அந்தக் கன்னடப் பட ரெக்கார்டிங் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். ``கன்னடத்துல `சிவசேனா'னு ஒரு படம். அந்தப் படத்துல மாணவர்களைக் கைது பண்ணி ஜெயில்ல போடுறாங்க. சிறைக்குள்ள இருக்கிற மாணவர்களெல்லாம் ஜெயில் வார்டனைக் கிண்டல் பண்ணி ஒரு பாட்டுப் பாடணும்னு சொன்னார், இயக்குநர். என்னைச் சுற்றி நாலு கன்னடப் பாடலாசிரியர்களும், என் டியூனுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருந்தாங்க. டியூனைப் போட்டுக் காட்டினதும், நாலு கவிஞர்கள்ல யாருக்கும் என்ன வரிகள் எழுதுறதுனு தெரியலை. எடுத்துக் கொடுக்கலாம்னு, முழுப் பாடலையும் நானே பாடி முடிச்சுட்டேன்" எனக் கன்னடப் படத்தின் பாடல் கதையை முடித்தவர், மலையாளத்தில் ஒரு படத்துக்கு டியூன் போட்டதைச் சொல்ல ஆரம்பித்தார். அதில் போட்ட டியூனையும், `ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாடலையும் கலவையாக்கிப் போட்ட டியூனுக்குப் பின்னால் இருந்த கதையைச் சொல்லி முடித்தவுடன் அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
சார் உங்க மியூசிக் நல்லா இருக்கு'னு என்கிட்ட யாராவது சொன்னாங்கனா, ரொம்ப நல்லா மூச்சு இழுக்குறீங்க சார்னு சொல்ற மாதிரி இருக்கும். ஏன்னா, அது சுவாசம் மாதிரி, அது பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கு. எனக்கு என்ன கஷ்டமா இருக்குன்னா, என்னைப் பத்தி நானே உங்ககிட்டச் சொல்லணும். இல்லேன்னா உங்களுக்குத் தெரியாது. கடவுள் தன்னைப் பற்றித் தன்னுடைய அடியார்களுக்கு உணர்த்தவில்லை என்றால், அடியார்களுக்குக் கடவுளைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா... முடியாது. தாமே தமக்குச் சுற்றமும், தாமே நமக்கு விதி வகையும்னு மாணிக்க வாசகர் எழுதினார்" எனச் சொல்லி முடித்த பின், அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.
``உங்களுடைய 75-வது பிறந்தநாளைக்கு எங்களுக்கு என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?"
``இப்போதான் நான் சொன்னேன். தாமே தமக்குச் சுற்றமும்னு! உங்களுடைய விதி வகையை நீங்களே விதித்துக்கொள்ள வேண்டும். என்னைப் பார்த்து உங்களுக்கு உற்சாகமாகி, சார் மாதிரி உழைத்து முன்னேறி வரவேண்டுமென்றால், என்னை மாதிரி உழைக்கிற அத்தனை பேரும் முன்னேறி வருவதில்லை. இந்த ஆர்மோனியப் பெட்டியை எடுத்துட்டு 1968-ல் சென்னைக்கு வந்தேன்.
``உங்களுடைய 75-வது பிறந்தநாளைக்கு எங்களுக்கு என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?"
``இப்போதான் நான் சொன்னேன். தாமே தமக்குச் சுற்றமும்னு! உங்களுடைய விதி வகையை நீங்களே விதித்துக்கொள்ள வேண்டும். என்னைப் பார்த்து உங்களுக்கு உற்சாகமாகி, சார் மாதிரி உழைத்து முன்னேறி வரவேண்டுமென்றால், என்னை மாதிரி உழைக்கிற அத்தனை பேரும் முன்னேறி வருவதில்லை. இந்த ஆர்மோனியப் பெட்டியை எடுத்துட்டு 1968-ல் சென்னைக்கு வந்தேன்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
ஏவி.எம் ஸ்டுடியோஸ், ரஜினி, கமல்... யாரையும் நான் நம்பலை. நானும் யார்கிட்டேயும் போகலை. எல்லோரும்தான் என்கிட்ட வந்தாங்க. இதை தற்பெருமையாகச் சொல்லலை. உண்மையாக சத்தியமாகச் சொல்கிறேன். ஆர்மோனியம் மட்டும்தான் என்னுடைய நண்பன். ஆனா, முன்னாடி இதுமேல கையை வெச்சா அம்மா பெரம்பால அடிப்பாங்க. அப்புறம் ஒரு சூழல்ல வாசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. தப்பு தப்பாதான் வாசித்தேன். மக்களெல்லாம் பயங்கரமா உற்சாகப்படுத்தினாங்க. தப்பா வாசித்தாலே கைதட்டல் வருதே, கரெக்டா வாசித்தா எவ்வளவு கைதட்டல் வரும்னு அன்னைக்கு முடிவு பண்ணி, 24 மணி நேரமும் வாசிச்சுப் பயிற்சி எடுத்தேன். இந்த மாதிரி கஷ்டப்பட்டுதான் இந்த இடத்துக்கு வந்தேன். எனக்கு இசையைத் தவிர எதுவும் தெரியாது. இதுல இருந்து என்னை வெளியில எடுத்துட்டா, தண்ணில இருக்கிற மீனை வெளில தூக்கிப் போடுற மாதிரி. இசை இருக்கிறவரை நான் இருப்பேன். எல்லா இசையிலும் நான்தான் இருப்பேன்."
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
நீங்க பலருக்கு ரோல் மாடலா இருந்திருக்கீங்க. உங்களுடைய ரோல் மாடல் யார்?"
``எனக்கு முன் மாதிரியும் கிடையாது, பின் மாதிரியும் கிடையாது."
``உங்களுக்குக் கிடைத்த பாராட்டுகளில் கிடைத்த சிறந்த பாராட்டாக நீங்கள் கருதுவது?"
``திரையுலகிற்கு முதன்முதலாக நீங்க பாடிய அனுபவம் எப்படி இருந்தது. அந்தப் பாட்டுல இருந்து இரண்டு வரிகள் எங்களுக்காக பாடுங்களேன்...?"
- இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு, இளையராஜாவின் பதில்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்!
``எனக்கு முன் மாதிரியும் கிடையாது, பின் மாதிரியும் கிடையாது."
``உங்களுக்குக் கிடைத்த பாராட்டுகளில் கிடைத்த சிறந்த பாராட்டாக நீங்கள் கருதுவது?"
``திரையுலகிற்கு முதன்முதலாக நீங்க பாடிய அனுபவம் எப்படி இருந்தது. அந்தப் பாட்டுல இருந்து இரண்டு வரிகள் எங்களுக்காக பாடுங்களேன்...?"
- இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு, இளையராஜாவின் பதில்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்!
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
மேற்கோள் செய்த பதிவு: 1282298ayyasamy ram wrote:`ஹார்ட்ல, ஆர்ட்டே இல்லேன்னா,
அது பிரோயஜனமே இல்ல' - இளையராஜா,
-
![]()
![]()
-
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
இளையராஜா ஒரு இசை சகாப்தம். தமிழ் மொழியும், தமிழ் மக்களும் இருக்கும் வரை இவரது பெயர் நிலைத்திருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நேற்று இல்லை நாளை இல்லே... எப்பவும் இளையராஜா!!
» நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
» இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை
» இறைவனை நம்பி எந்த பயனும் இல்லை:இயக்குநர் சேரன்
» நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
» இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை
» இறைவனை நம்பி எந்த பயனும் இல்லை:இயக்குநர் சேரன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|