புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_c10இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_m10இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_c10 
21 Posts - 66%
heezulia
இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_c10இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_m10இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_c10இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_m10இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_c10 
63 Posts - 64%
heezulia
இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_c10இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_m10இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_c10இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_m10இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_c10இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_m10இணக்கமாய் ஓர் வணக்கம் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணக்கமாய் ஓர் வணக்கம் !


   
   

Page 1 of 2 1, 2  Next

தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018

Postதூயவள் Wed Oct 17, 2018 5:53 am

பெயர்:  தூயவள்-  வடமொழியில் அமைந்த என் இயற்பெயரின் தமிழாக்கம்
சொந்த ஊர்:  யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆண்/பெண்:  ஆண்பால், பெண்பால்,பொதுப்பால் அதற்கும் அப்பால் ஆன்மாவிற்கு ஏது பால் ? இருப்பினும் இப்பிறவியில் பிறப்பால் பெண்பால்
ஈகரையை அறிந்த விதம்:  இணையத்தினூடே இனியதமிழ்த் தேடல் ஈங்கிழுத்துவந்ததென்னை.
பொழுதுபோக்கு:  இருந்தால் தானே போக்க ?
தொழில்: விளக்கமாய்: முன்னாள் பொதுத்துறை வங்கி ஊழியர்,இந்நாள் இல்லத்தரசி; சுருக்கமாய்: முழுநேர அம்மா
மேலும் என்னைப் பற்றி: கீழ்வரும் இருபதில் இதற்கான பதில் உண்டு. நற்றமிழ்ச் சான்றோர் இதிலுண்டாகும்  குற்றங் குறைகளைப் பொறுத்தருள்வீர். வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி !

வணக்கம் பெரியாரே தமிழ்கூறு புலவோரே
இணக்கத் தோடோர்  அறிமுகம்.  

இலக்கண இலக்கியம் விளக்கிடு மறிஞர்க்  
குலத்திற்கு முதல் வணக்கம்.

பெண்னெனப் பிறந்து தாயென மிளிர்பவள்
கண்ணெனக் கணவரோடு வாழ்வு.

அம்பலக் கூத்திடும் நாயகன் ஊரதே
எம்புலம் வேரூன்று மூர்.

தமிழகம் நீங்கியின்று வேறொரு மண்ணிலே
அமைந்ததே யென்றன் வாழ்வு.

பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.

தாகமுண்டு தமிழுக்கு வேகமுண் டார்வமுண்டு
மோகமுண்டு எம்மொழியின் மேல்.

வலைப்பூ வேறொன்றில் இதுகாறும் பதிவிட்டேன்
விலையற்றத் தமிழ்மொழியில் தான்.

ஈகரையில் எனை யிணைக்க யெண்ணமதில்
தாகமுற்றேன் இன்றினிய நாள்.

நாடோறும் நற்றமிழில் நல்லவர்ப் பதிவிட  
நாடிப் பெறுவேன் பயன்.

ஈடேறும் என்னவா தமிழறிஞ ரிவ்வலையில்
இடுகின்ற தமிழ்ப் படித்தால்.

கள்ளுளே யிட்டதாம் காமலர்ப் போலவேத்  
தெள்ளுதமிழ்ச் சோலை யிதே.

இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு  சேர்த்திடும்.

உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன்.

இருப்பினு மவ்வப்போது கிறுக்கிடும் பதிவுகள்
தருகிறேன் பொறுத் தருள்வீர் !

பதிவிலே தவறுகள் தென்படில் பொறுமையாய்ப்
பதில் தரின் மகிழ்வுறுவேன்.

திருத்தங்கள் செய்திட விழைகுவேன் கட்டாயம்
வருத்தங்க ளென்றும் கொள்ளேன்.

விருப்பந் தெரிவித்து ஊக்க மளித்திடின்
பெருகுமே என்ற னுவகை.

அறிவிலும் வயதிலும் சிறியவள் என்னையே
அறிமுகம் செய்து கொண்டேன்.

புதியவள் எனையேற்றுக் கொள்வதா யிருப்பின்  
பதியுங்க ளுங்க ளெண்ணம்.

நன்றி, வணக்கம்!

kuloththungan
kuloththungan
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017

Postkuloththungan Wed Oct 17, 2018 12:40 pm

பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான். - சபாஷ்!
இணக்கமாய் ஓர் வணக்கம் ! 3838410834
வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன். --- (யானும்)
அன்புடன்
குலோத்துங்கன்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 17, 2018 1:56 pm

அறியாமுகம் தந்த மனம் கவர் அறிமுகம்
கண்டதில்லை கவிதை வடிவிலோர் முகவுரை.
விண்டதில்லை விரிவாக இது போலே எவரும்.
அண்டிவிட்டீர் ஈகரைதனிலே,
இணைந்திடுவீர் ஓர் அங்கமாய்.

கிறுக்கிடும் பதிவுகளையும் ரசித்திடும்
கிறுக்கர்களும் உண்டு இங்கே.
புவிதனில் காணும் நற்கவிதைகளை துய்க்கும்
கவி சிறப்புகளுமுண்டு இங்கே.

ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!:நல்வரவு: :வணக்கம்:

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2018 2:04 pm

தூயவளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இதுவரை ஈகரையில் இணைந்தவர்களில் இவ்வாறு அறிமுகம் செய்து கொண்டவர்கள் யாருமிலர்.

பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.

முற்றிலும் இக்கூற்று சரியானது. தரணியில் எங்கு சென்றிடினும் தாயை மறக்கலாகாது.

இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு சேர்த்திடும்.

மிக்க மகிழ்ச்சி!

தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Oct 17, 2018 4:03 pm

கவிதையால் அறிமுகம் செய்து கொண்ட தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் ... :வணக்கம்:



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Wed Oct 17, 2018 4:09 pm

இணக்கமாய் ஓர் வணக்கம் ! 3838410834 சூப்பருங்க :நல்வரவு:



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 17, 2018 5:54 pm

:நல்வரவு: :நல்வரவு:

தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018

Postதூயவள் Wed Oct 17, 2018 8:11 pm

kuloththungan wrote:
வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
அன்புடன்
குலோத்துங்கன்
[You must be registered and logged in to see this link.]
ஐயா - ஈகரையில் எனக்கு முதன்முதலில் வரவேற்பளித்தமைக்கு மிக்க நன்றி ! என் கருத்தைப் பாராட்டியும், ஆதரித்தும் கூறிய சொற்களுக்கும், என்னை மனமார வாழ்த்தியமைக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றியை நவில்கிறேன். தங்களிடம் ஓர் விண்ணப்பம், அறிவிலும், வயதிலும் இளையவள் ஆகையால், எனக்கு 'ஆர்' விகுதி சேர்க்க வேண்டாம்.

T.N.Balasubramanian wrote:
ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ஐயா- மகிழ்ச்சியூட்டும் உம்மைப் போன்ற பெரியோர் வாய்ச்சொற்கள் தாம் எனக்கு ஊக்கமருந்து. இவ்வலைத்தளத்தில் இணைந்த எனக்கு வரவேற்பளித்தமைக்கு நன்றி ! முகவுரையில் உரைத்தது போல் , அறிஞர் தரும் தமிழமிழ்தைப் பருகும் எண்ணமே எனக்கு மிகவாயுள்ளது. சிறுகிள்ளை போல் நான் மிழற்றுவதையும் பொறுமையாய்ப் படிக்கும் பெரியோர் இங்குள்ளனர் என்பதையறிவதில் பேருவகை உண்டாகின்றது. தாங்கள் உடல் மனநலத்தோடு வாழ வேண்டுமென இறைவனை வேண்டி நாளைப் பிறந்த நாள் காணப்போகும் உங்களை வணங்குகிறேன்! (செய்தி உதவி- முகப்புப் பக்கம் )

சிவா wrote:தூயவளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!
[You must be registered and logged in to see this link.]
ஐயா- உங்களது பதிவு கண்டு களிப்படைந்தேன். இதுவரை வேறொரு பொது வலைத்தளத்தில் தமிழ்ப்பதிவுகளிட்டேன். அங்கே பகிர்ந்தவற்றில் சிலவற்றை அவ்வப்போது இங்கே மீள்பதிவு செய்கிறேன். உங்கள் ஆர்வமான வரவேற்பிற்கு நன்றி ! இவ்வலைத்தளத்தின் நிறுவனர் தாங்களென்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. உலகெங்கிலும் வாழும் தமிழர்களை இணைக்க இணையத்தின் உதவியோடு வலைத்தளம் தொடங்கி அதை மிகச் சிறப்பாக இயக்கிவருதற்கு என்னுடைய நன்றி !
ரா.ரமேஷ்குமார் wrote:கவிதையால் அறிமுகம் செய்து கொண்ட தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்
[You must be registered and logged in to see this link.]
ஐயா- உங்கள் வரவேற்பை இருகரம் கூப்பியேற்கிறேன் , நன்றி!
ஞானமுருகன் wrote:இணக்கமாய் ஓர் வணக்கம் ! 3838410834 சூப்பருங்க :நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]
இணக்கமாய் ஓர் வணக்கம் ! 1571444738 இணக்கமாய் ஓர் வணக்கம் ! 1571444738
ayyasamy ram wrote::நல்வரவு: :நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]
இணக்கமாய் ஓர் வணக்கம் ! 1571444738 இணக்கமாய் ஓர் வணக்கம் ! 1571444738


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 17, 2018 8:44 pm

அறிமுகத்தை மிஞ்சுகிறது உங்கள் மறுமொழி.
ஆராய்ச்சிகள் சில செய்தே அரிதான விஷயங்களை
அழகாக பதிவிட்டுள்ளீர்.
பொதுத்துறை வங்கி ஒரு சிறந்த ஊழியரின் சேவைகளை நினைவு
கூறும் வகையில் உங்கள் உழைப்பு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாடிக்கையாளர்கள் உங்களையும் உங்கள் சேவைகளையும் மறக்காவண்ணம்
பணியாற்றி இருப்பீர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
உங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Oct 17, 2018 11:20 pm

அருமையான அறிமுகம்
தொடர்ந்து இணைந் திருங்கள்
ஈகரையில் தங்களை வரவேற்கிறேன்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக