Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 8:28 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணக்கமாய் ஓர் வணக்கம் !
+5
ரா.ரமேஷ்குமார்
சிவா
T.N.Balasubramanian
kuloththungan
தூயவள்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இணக்கமாய் ஓர் வணக்கம் !
பெயர்: தூயவள்- வடமொழியில் அமைந்த என் இயற்பெயரின் தமிழாக்கம்
சொந்த ஊர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆண்/பெண்: ஆண்பால், பெண்பால்,பொதுப்பால் அதற்கும் அப்பால் ஆன்மாவிற்கு ஏது பால் ? இருப்பினும் இப்பிறவியில் பிறப்பால் பெண்பால்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தினூடே இனியதமிழ்த் தேடல் ஈங்கிழுத்துவந்ததென்னை.
பொழுதுபோக்கு: இருந்தால் தானே போக்க ?
தொழில்: விளக்கமாய்: முன்னாள் பொதுத்துறை வங்கி ஊழியர்,இந்நாள் இல்லத்தரசி; சுருக்கமாய்: முழுநேர அம்மா
மேலும் என்னைப் பற்றி: கீழ்வரும் இருபதில் இதற்கான பதில் உண்டு. நற்றமிழ்ச் சான்றோர் இதிலுண்டாகும் குற்றங் குறைகளைப் பொறுத்தருள்வீர். வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி !
வணக்கம் பெரியாரே தமிழ்கூறு புலவோரே
இணக்கத் தோடோர் அறிமுகம்.
இலக்கண இலக்கியம் விளக்கிடு மறிஞர்க்
குலத்திற்கு முதல் வணக்கம்.
பெண்னெனப் பிறந்து தாயென மிளிர்பவள்
கண்ணெனக் கணவரோடு வாழ்வு.
அம்பலக் கூத்திடும் நாயகன் ஊரதே
எம்புலம் வேரூன்று மூர்.
தமிழகம் நீங்கியின்று வேறொரு மண்ணிலே
அமைந்ததே யென்றன் வாழ்வு.
பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.
தாகமுண்டு தமிழுக்கு வேகமுண் டார்வமுண்டு
மோகமுண்டு எம்மொழியின் மேல்.
வலைப்பூ வேறொன்றில் இதுகாறும் பதிவிட்டேன்
விலையற்றத் தமிழ்மொழியில் தான்.
ஈகரையில் எனை யிணைக்க யெண்ணமதில்
தாகமுற்றேன் இன்றினிய நாள்.
நாடோறும் நற்றமிழில் நல்லவர்ப் பதிவிட
நாடிப் பெறுவேன் பயன்.
ஈடேறும் என்னவா தமிழறிஞ ரிவ்வலையில்
இடுகின்ற தமிழ்ப் படித்தால்.
கள்ளுளே யிட்டதாம் காமலர்ப் போலவேத்
தெள்ளுதமிழ்ச் சோலை யிதே.
இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு சேர்த்திடும்.
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன்.
இருப்பினு மவ்வப்போது கிறுக்கிடும் பதிவுகள்
தருகிறேன் பொறுத் தருள்வீர் !
பதிவிலே தவறுகள் தென்படில் பொறுமையாய்ப்
பதில் தரின் மகிழ்வுறுவேன்.
திருத்தங்கள் செய்திட விழைகுவேன் கட்டாயம்
வருத்தங்க ளென்றும் கொள்ளேன்.
விருப்பந் தெரிவித்து ஊக்க மளித்திடின்
பெருகுமே என்ற னுவகை.
அறிவிலும் வயதிலும் சிறியவள் என்னையே
அறிமுகம் செய்து கொண்டேன்.
புதியவள் எனையேற்றுக் கொள்வதா யிருப்பின்
பதியுங்க ளுங்க ளெண்ணம்.
நன்றி, வணக்கம்!
சொந்த ஊர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆண்/பெண்: ஆண்பால், பெண்பால்,பொதுப்பால் அதற்கும் அப்பால் ஆன்மாவிற்கு ஏது பால் ? இருப்பினும் இப்பிறவியில் பிறப்பால் பெண்பால்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தினூடே இனியதமிழ்த் தேடல் ஈங்கிழுத்துவந்ததென்னை.
பொழுதுபோக்கு: இருந்தால் தானே போக்க ?
தொழில்: விளக்கமாய்: முன்னாள் பொதுத்துறை வங்கி ஊழியர்,இந்நாள் இல்லத்தரசி; சுருக்கமாய்: முழுநேர அம்மா
மேலும் என்னைப் பற்றி: கீழ்வரும் இருபதில் இதற்கான பதில் உண்டு. நற்றமிழ்ச் சான்றோர் இதிலுண்டாகும் குற்றங் குறைகளைப் பொறுத்தருள்வீர். வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி !
வணக்கம் பெரியாரே தமிழ்கூறு புலவோரே
இணக்கத் தோடோர் அறிமுகம்.
இலக்கண இலக்கியம் விளக்கிடு மறிஞர்க்
குலத்திற்கு முதல் வணக்கம்.
பெண்னெனப் பிறந்து தாயென மிளிர்பவள்
கண்ணெனக் கணவரோடு வாழ்வு.
அம்பலக் கூத்திடும் நாயகன் ஊரதே
எம்புலம் வேரூன்று மூர்.
தமிழகம் நீங்கியின்று வேறொரு மண்ணிலே
அமைந்ததே யென்றன் வாழ்வு.
பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.
தாகமுண்டு தமிழுக்கு வேகமுண் டார்வமுண்டு
மோகமுண்டு எம்மொழியின் மேல்.
வலைப்பூ வேறொன்றில் இதுகாறும் பதிவிட்டேன்
விலையற்றத் தமிழ்மொழியில் தான்.
ஈகரையில் எனை யிணைக்க யெண்ணமதில்
தாகமுற்றேன் இன்றினிய நாள்.
நாடோறும் நற்றமிழில் நல்லவர்ப் பதிவிட
நாடிப் பெறுவேன் பயன்.
ஈடேறும் என்னவா தமிழறிஞ ரிவ்வலையில்
இடுகின்ற தமிழ்ப் படித்தால்.
கள்ளுளே யிட்டதாம் காமலர்ப் போலவேத்
தெள்ளுதமிழ்ச் சோலை யிதே.
இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு சேர்த்திடும்.
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன்.
இருப்பினு மவ்வப்போது கிறுக்கிடும் பதிவுகள்
தருகிறேன் பொறுத் தருள்வீர் !
பதிவிலே தவறுகள் தென்படில் பொறுமையாய்ப்
பதில் தரின் மகிழ்வுறுவேன்.
திருத்தங்கள் செய்திட விழைகுவேன் கட்டாயம்
வருத்தங்க ளென்றும் கொள்ளேன்.
விருப்பந் தெரிவித்து ஊக்க மளித்திடின்
பெருகுமே என்ற னுவகை.
அறிவிலும் வயதிலும் சிறியவள் என்னையே
அறிமுகம் செய்து கொண்டேன்.
புதியவள் எனையேற்றுக் கொள்வதா யிருப்பின்
பதியுங்க ளுங்க ளெண்ணம்.
நன்றி, வணக்கம்!
தூயவள்- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !
பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான். - சபாஷ்!
வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன். --- (யானும்)
அன்புடன்
குலோத்துங்கன்
வேரினை மறக்கிலேன் யான். - சபாஷ்!
வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன். --- (யானும்)
அன்புடன்
குலோத்துங்கன்
kuloththungan- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017
Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !
அறியாமுகம் தந்த மனம் கவர் அறிமுகம்
கண்டதில்லை கவிதை வடிவிலோர் முகவுரை.
விண்டதில்லை விரிவாக இது போலே எவரும்.
அண்டிவிட்டீர் ஈகரைதனிலே,
இணைந்திடுவீர் ஓர் அங்கமாய்.
கிறுக்கிடும் பதிவுகளையும் ரசித்திடும்
கிறுக்கர்களும் உண்டு இங்கே.
புவிதனில் காணும் நற்கவிதைகளை துய்க்கும்
கவி சிறப்புகளுமுண்டு இங்கே.
ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!
ரமணியன்
கண்டதில்லை கவிதை வடிவிலோர் முகவுரை.
விண்டதில்லை விரிவாக இது போலே எவரும்.
அண்டிவிட்டீர் ஈகரைதனிலே,
இணைந்திடுவீர் ஓர் அங்கமாய்.
கிறுக்கிடும் பதிவுகளையும் ரசித்திடும்
கிறுக்கர்களும் உண்டு இங்கே.
புவிதனில் காணும் நற்கவிதைகளை துய்க்கும்
கவி சிறப்புகளுமுண்டு இங்கே.
ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !
தூயவளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இதுவரை ஈகரையில் இணைந்தவர்களில் இவ்வாறு அறிமுகம் செய்து கொண்டவர்கள் யாருமிலர்.
முற்றிலும் இக்கூற்று சரியானது. தரணியில் எங்கு சென்றிடினும் தாயை மறக்கலாகாது.
மிக்க மகிழ்ச்சி!
தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!
பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.
முற்றிலும் இக்கூற்று சரியானது. தரணியில் எங்கு சென்றிடினும் தாயை மறக்கலாகாது.
இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு சேர்த்திடும்.
மிக்க மகிழ்ச்சி!
தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !
கவிதையால் அறிமுகம் செய்து கொண்ட தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் ...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !
[You must be registered and logged in to see this link.]kuloththungan wrote:
வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
அன்புடன்
குலோத்துங்கன்
ஐயா - ஈகரையில் எனக்கு முதன்முதலில் வரவேற்பளித்தமைக்கு மிக்க நன்றி ! என் கருத்தைப் பாராட்டியும், ஆதரித்தும் கூறிய சொற்களுக்கும், என்னை மனமார வாழ்த்தியமைக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றியை நவில்கிறேன். தங்களிடம் ஓர் விண்ணப்பம், அறிவிலும், வயதிலும் இளையவள் ஆகையால், எனக்கு 'ஆர்' விகுதி சேர்க்க வேண்டாம்.
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:
ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!
ரமணியன்
ஐயா- மகிழ்ச்சியூட்டும் உம்மைப் போன்ற பெரியோர் வாய்ச்சொற்கள் தாம் எனக்கு ஊக்கமருந்து. இவ்வலைத்தளத்தில் இணைந்த எனக்கு வரவேற்பளித்தமைக்கு நன்றி ! முகவுரையில் உரைத்தது போல் , அறிஞர் தரும் தமிழமிழ்தைப் பருகும் எண்ணமே எனக்கு மிகவாயுள்ளது. சிறுகிள்ளை போல் நான் மிழற்றுவதையும் பொறுமையாய்ப் படிக்கும் பெரியோர் இங்குள்ளனர் என்பதையறிவதில் பேருவகை உண்டாகின்றது. தாங்கள் உடல் மனநலத்தோடு வாழ வேண்டுமென இறைவனை வேண்டி நாளைப் பிறந்த நாள் காணப்போகும் உங்களை வணங்குகிறேன்! (செய்தி உதவி- முகப்புப் பக்கம் )
[You must be registered and logged in to see this link.]சிவா wrote:தூயவளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!
ஐயா- உங்களது பதிவு கண்டு களிப்படைந்தேன். இதுவரை வேறொரு பொது வலைத்தளத்தில் தமிழ்ப்பதிவுகளிட்டேன். அங்கே பகிர்ந்தவற்றில் சிலவற்றை அவ்வப்போது இங்கே மீள்பதிவு செய்கிறேன். உங்கள் ஆர்வமான வரவேற்பிற்கு நன்றி ! இவ்வலைத்தளத்தின் நிறுவனர் தாங்களென்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. உலகெங்கிலும் வாழும் தமிழர்களை இணைக்க இணையத்தின் உதவியோடு வலைத்தளம் தொடங்கி அதை மிகச் சிறப்பாக இயக்கிவருதற்கு என்னுடைய நன்றி !
[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote:கவிதையால் அறிமுகம் செய்து கொண்ட தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்
ஐயா- உங்கள் வரவேற்பை இருகரம் கூப்பியேற்கிறேன் , நன்றி!
[You must be registered and logged in to see this link.]ஞானமுருகன் wrote:
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:
தூயவள்- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !
அறிமுகத்தை மிஞ்சுகிறது உங்கள் மறுமொழி.
ஆராய்ச்சிகள் சில செய்தே அரிதான விஷயங்களை
அழகாக பதிவிட்டுள்ளீர்.
பொதுத்துறை வங்கி ஒரு சிறந்த ஊழியரின் சேவைகளை நினைவு
கூறும் வகையில் உங்கள் உழைப்பு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாடிக்கையாளர்கள் உங்களையும் உங்கள் சேவைகளையும் மறக்காவண்ணம்
பணியாற்றி இருப்பீர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
உங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
ரமணியன்
ஆராய்ச்சிகள் சில செய்தே அரிதான விஷயங்களை
அழகாக பதிவிட்டுள்ளீர்.
பொதுத்துறை வங்கி ஒரு சிறந்த ஊழியரின் சேவைகளை நினைவு
கூறும் வகையில் உங்கள் உழைப்பு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாடிக்கையாளர்கள் உங்களையும் உங்கள் சேவைகளையும் மறக்காவண்ணம்
பணியாற்றி இருப்பீர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
உங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !
அருமையான அறிமுகம்
தொடர்ந்து இணைந் திருங்கள்
ஈகரையில் தங்களை வரவேற்கிறேன்
தொடர்ந்து இணைந் திருங்கள்
ஈகரையில் தங்களை வரவேற்கிறேன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|