ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரேஸியைக் கேளுங்கள்!

2 posters

Go down

கிரேஸியைக் கேளுங்கள்! Empty கிரேஸியைக் கேளுங்கள்!

Post by ayyasamy ram Fri Oct 12, 2018 12:49 pm

கிரேஸியைக் கேளுங்கள்! Kalkinews_67600649596
-...
எதற்கெடுத்தாலும் எதிர்கேள்வி கேட்பதுதானே
இளைஞர்களின் அடையாளம்? என்று சில கல்லூரி
இளைஞர்களிடம் கேட்டோம்.

சொல்றது ஈஸி. கேட்டுப் பார்த்தாதான் தெரியும்.
கேள்வி கேட்கிறது எவ்வளவு கஷ்டம்னு! என்று
வரிந்து கட்டினர்.

சரி… அப்படின்னா நீங்களே இந்த வாரம் கிரேஸியைக்
கேளுங்க என்று களத்தில் இழுத்துவிட்டோம்.
அவர்களின் துடிப்பான கேள்விகளும் கிரேஸியின்
துள்ளலான பதில்களும்….
----------------------------

* மஞ்சுப்ரியா
கமலிடம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?

-
கமல் விடாமல் கற்றுக் கொண்டிருக்கும் வாத்தியார்,
நான் அவரிடம் கற்றது கமலளவு…
கல்லாதது உலக(நாயக) அளவு.
-
--------------------------------------

* ராஹி ஜனார்த்தனன்
எந்த மாதிரி டைமிங் ஸென்ஸ், ஹ்யூமர் ஆக மாறும்?

-
ஹ்யூமர் ராமர் போல கிளினாக இருத்தல் நன்று.
டைமிங் ஸென்சைப் பொறுத்தவரையில் ராமர் வில்லை
எடுத்தது கண்டனர் இற்றது கேட்னர் போல,
ஹியூமர் சொல்லை சொன்னத கேட்டனர் சிரித்தது
கண்டனர்.

வேகம் வேண்டும்… நிறுத்தி நிதானமாகச் சொன்னால்
சிரிப்பு சமையல் குறிப்பு ஆகிவிடும்.
-
-------------------------------------

* காவ்ய ப்ரியதர்ஷன்
மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை ப்ளீஸ்?

-
அறிவு என்ற வாளுக்கு உறையாக இருங்கள்.
அறிவு என்ற வாளை உடையவனே அறிவாளி.
ரமணராகட்டும், ஏ.ஆர்.ரஹ்மானாகட்டும்.
பாரதியாராகட்டும், சச்சின் டெண்டுல்கராகட்டும்
எல்லோரும் சாதித்தது இளமையில்தான்.

கற்றது இளமையில்தான்.பயன்படும் வாளாக இருக்கும்.
பயன்படுத்தாமல் போனால் வாள வளைந்து
முதுமையில் பதுங்கும் கேடயமாகிவிடும்.

இளமையில் வீர வாளாக இருங்கள்.
ஓரமாக வளாயிருந்து விடாதீர்கள்!
-
-----------------------------------

* ராகேஷ்
பெண்களைப் பொறுத்தவரையில் காதல் என்றால் என்ன?

-
நீங்கள் சொன்ன அந்த பொறுத்த வரையிலேயே பதில்
இருக்கிறது. ஆண்களைப் பொறுத்தவரையில் பொருத்தம்
பார்க்கும் லவ் அட் பஸ்ட் நைட்;

பெண்களைப் பொறுத்தவரையில் தான் காதலிக்கும்
ஆண் எவ்வளவு தூரம் தன்னைப் பொறுத்துக் கொள்வான்
என்பதைச் சோதித்துப் பார்க்கும் லவ் அட்பஸ்ட் பைட்.

ஆணுக்குக் காதல் இதயத்தில்.
பின்னாள் மனைவியான இந்நாள் காதலிக்கு காதல்
கெட்டிக்கார மூளையில்!
-
--------------------------------------------
நன்றி- கல்கி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிரேஸியைக் கேளுங்கள்! Empty Re: கிரேஸியைக் கேளுங்கள்!

Post by ayyasamy ram Fri Oct 12, 2018 12:51 pm

* யாமினி
நீங்கள் விரும்பி ரசித்த ஜோக்?

-
டீச்சர்: கம்பராமாயணத்தை எழுதியது யார்?
ஒரு மாணவன்: கம்பர்… டீச்சர்.
டீச்சர் : மணிமேகலையை எழுதியது யார்?
அதே மாணவன்: மணி… டீச்சர்.

இந்த ஜோக்கை நான் விரும்பும் காரணம், அன்றைய
மாணவரும் இன்றைய வழக்கறிஞருமான எனது
நண்பன் வானவில் பண்பாட்டு மையத்தின் தலைவர்
ச.ரவியால் மாணவர்களுக்காக 70களில் நடத்தப்பட்ட
மாணவரிஸம் என்ற பத்திரிகையல் அடியேன்
எழுதிய முதல் ஜோக்… சீமந்தப் புத்திரனின் சிரிப்பு…!
-
----------------------------------

* சிவராஜ்
நீங்க சொல்ல வந்த விஷயத்தை ஆடியன்ஸ்கிட்ட
சரியா கொண்டு போய் சேர்க்கிற ஹீரோ யார்…?


இயக்குநர், சொல்ல வந்த விஷயம் என்னும்
Currentஐ, டைரக்டர் என்ற connecting wire
நல்லபடியாகக் கொண்டு போய்ச் சேர்த்து
Hero watts bulb பிரகாசிக்க வைக்கிறார்.
-
-------------------------------------

* கவிதா
திறமை யாரிடம் அதிகம்… ஆண்களிடமா? பெண்களிடமா?

-
திறமை என்ற குணத்துக்கு ஆண், பெண் வித்தியாசம்
கிடையாது. ஆனால் அந்தக் குணம் வெளிப்படுத்தும்
மணத்தில் வித்தியாசம் தெரியும். திறமையைக் காட்டிக்
கொள்வது ஆண்களின் திறமை;
மனசுக்கள் பூட்டிக் கொள்வது பெண்களின் திறவாமை!
-
----------------------------------------

* ஸ்வர்ணமாலினி
மேடை நாடகம், சினிமா எதில் உங்கள் ஒரிஜினாலிடியை
மெய்ன்டெய்ன் செய்ய முடிகிறது?

-
நாடகத்தில் நான் குளத்துத் திமிங்கலம். சினிமாவில் கடல் மீன்,
நாடகத்தை நான் மெய்ன்டெய்ன் செய்கிறேன்…
சினிமா என்னை மெய்ன்டெய்ன் செய்கிறது.

000000000000000000000000000

நன்றி: கல்கி்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிரேஸியைக் கேளுங்கள்! Empty Re: கிரேஸியைக் கேளுங்கள்!

Post by ayyasamy ram Fri Oct 12, 2018 1:16 pm


* தெய்வ பக்திக்கும்,தேசபக்திக்கும் என்ன வித்தியாசம் ?
– அ.மகேஸ்வரி, மதுரை.

தெய்வ பக்தி ஆத்திகம் ; தேச பக்தி தாய் – நாட்டிகம் !

======================================================

* பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொல்கிறார்களே.
அதன் விளக்கம் என்ன ?

– எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

பிச்சை எடுக்க வந்த கதாபாத்திரம் கதாநாயகனா இல்லை
வில்லனா என்று அறிந்து பிச்சை இட வேண்டும்.

சன்னியாசி வேடத்தில் வந்த ராவண வில்லனுக்குப்
பிச்சை இட சீதை,லட்சுமணன் போட்ட கோட்டைத்
தாண்டியதால் எவ்வளவு அல்லலுற்றாள் !

===================================================

* கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்றால்… காதல் ?

– அ.யாழினிபர்வதம், சென்னை.

திவ்யப் பிரபந்த நாலாயிரங் காலத்து நாச்சியார்,
கண்ணனைக் காதலித்த ஆண்டாள் !

================================================
நன்றி; கல்கி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிரேஸியைக் கேளுங்கள்! Empty Re: கிரேஸியைக் கேளுங்கள்!

Post by ayyasamy ram Fri Oct 12, 2018 1:17 pm

*சமீபத்தில் வெளியான “”பத்மஸ்ரீ” விருதுகள் பற்றி ?
– குலசேகரன், சென்னை.
-
எனக்கே கிடைத்த சந்தோஷத்தை, மிஸஸ். ஒய்.ஜி.பி.
அவர்களுக்குக் கிடைத்ததில் அடைந்தேன். மரியாதைக்குரிய
அந்த “”அவ்வைஜி” அவர்களுக்குப் பிறகு, குழந்தைகள்
கல்விக்காக வாழ்கின்றவர் “”இவ்ஒய்.ஜி.பி.” இவர்கள்.
“”பத்மா சேஷாத்ரி” பள்ளிக்கூடம் இவரால் “”பத்மஸ்ரீ
சேஷாத்ரி” ஆகியது. “”இளமையில் கல்” என்பார்கள்.

எண்பது வயது முதுமையிலும் இவர் “”கொன்னக்கோல்
வித்வான் வி.வி.எஸ். மணியனிடம் ”சொற்கட்டுக்களைக்
கற்றுக்கொண்டார்.

இவர் ஒரு முதுநிலைப் பல்கலைக்கழகம்.
கல்வி தவிர சங்கீதம், நாடகம், நாட்டியம் என பல
துறைகளையும் அலசவல்ல சகலகலா வல்லி.
மெட்ராஸூக்குக் கிடைத்த “”மதர் கல்வி-தெரஸா !”

===============================================

* காதல், கல்யாணம், கடவுள்…ஒப்பிடுங்கள் பார்க்கலாம் ?

– வையாபுரி, விழுப்புரம்.

காதல் கும்பிடப் போன கடவுள் ; கல்யாணம்,
குறுக்கே வந்த கடவுள் !

=================================================

* சினிமா உலகை “”கனவுத் தொழிற்சாலை” என்பது போல,
நாடக உலகை என்னவென்று சொல்லலாம் ? –

அனன்யா, திருச்சி.

கனவு நனவாக கற்றுக் கொடுக்கும் கல்விச்சாலை !

==================================================

* வாழ்க்கை ஒரு வெங்காயம் ; அதை உரிக்கும் போது
கண்ணீர் வரும். அது போல காதல் ஒரு … ?

– ச.ராஜசேகர், செய்யாறு.

வேறு யாரையோ மணக்கும்போதும், பழைய காதலை
நினைவுக்குக் கொண்டு வந்து மணக்கும் பெருங்காயம்!

===================================================

* நாம் பிறக்கும்போதே நமது நெற்றியின் காலாவதித்
தேதியோடு பிறந்திருந்தால் ?

– என்.கோமதி,நெல்லை.

இப்பவும் நெற்றியில் காலாவதித் தேதியோடுதான்

பிறக்கிறோம்.
நம் கண்ணுக்கு அது தெரியாது. காலன் கண்ணுக்குத் தெரியும்.

காலன் கண்ணுக்கு அந்தத் தேதி தெரியாமல் மறைக்கத்தான்
நம் முன்னோர்கள் நம்மை நெற்றியில் பட்டையாக திருநீறு,
குங்குமம்,நாமம்,சந்தனம் இட்டுக்கொள்ளச் சொன்னார்கள்.

காலாவதியா இல்லை காலாவசதியா எனத் தீர்மானிக்க
வேண்டியது உங்கள் தலையெழுத்து !

=====================================================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிரேஸியைக் கேளுங்கள்! Empty Re: கிரேஸியைக் கேளுங்கள்!

Post by SK Fri Oct 12, 2018 11:44 pm

அருமை அனைத்து மிகவும் சிறப்பு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கிரேஸியைக் கேளுங்கள்! Empty Re: கிரேஸியைக் கேளுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum