ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் !

Go down

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Empty திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் !

Post by krishnaamma Thu Oct 11, 2018 9:41 pm

108 திவ்யதேசங்களில் 42  வது  திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில்.

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! 20170810

எண்ணிலடங்காப் பெருமைகளைக் கொண்டது, திருக்கோவிலூர் திரிவிக்ரம சுவாமி எனும் உலகளந்தப் பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பிறந்த இடம்.பஞ்ச கிருஷ்ணாரண்யத் தலங்களுள் ஒன்று, நடுநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று, முதலாழ்வார்கள் முக்தி பெற்ற தலம், வாமனருக்குத் தனிக்கோவில் கொண்ட தலம், பல்லவர், சோழர், விஜயநகர மன்னர்கள் என பலரும் திருப்பணி செய்து மகிழ்ந்த கோவில் என எண்ணிலடங்காப் பெருமைகளைக் கொண்டது, 

பத்ம புராணம், பிரமாண்ட புராணம் இரண்டிலும் புகழப்படும் தலமாக திருக்கோவிலூர் திகழ்கிறது. பெருமாள் வாமன அவதாரம் எடுப்பதற்கு முன்பு இந்த ஆலயம் கிருஷ்ணன் கோவில் என அழைக்கப்பட்டது. கோபாலன் என்ற சொல்லே கோவாலன் என்று அழைக்கப்பட்டு, திருக்கோவலூர் என ஆனது.

மகாபலி என்ற மன்னன் தர்ம நியாயங்களின்படி ஆட்சிபுரிந்து வந்தான். என்றாலும் தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தியவாறு இருந்தான். அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் இவனுக்குத் துணையாக இருந்து ஆதரித்து வந்தார். மகாபலியின் இன்னலைப் பொறுக்காத தேவர்கள், திருமாலிடம் தஞ்சம் புகுந்தனர். தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பதாக உறுதி அளித்தார் திருமால்.

இந்த நிலையில் குழந்தை வரம் கேட்டு காசியபர் -அதிதி தம்பதியினர், திருமாலை வேண்டி காமேஷ்டி யாகம் செய்தனர். அவர்களுக்கு குட்டையான வடிவம் கொண்டு மகனாக பிறந்தார். இது வாமன அவதாரம் என்று அழைக்கப்படுகிறது.

வாமனர் பூமி தானம் பெற மகாபலிச் சக்கரவர்த்தியிடம் வந்தார். அவர் கேட்ட மூன்றடி மண்ணை கொடுக்க மகாபலி ஒப்புக்கொண்டான்.

வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணன் என்பதை உணர்ந்த சுக்ராச்சாரியார், தன் சீடனைக் காக்க எண்ணி, அவனிடம் உண்மையைக் கூறி தானம் கொடுக்க வேண்டாம் என்றார்.

ஆனால் கொடுத்த வாக்கை மீறாத மகாபலி, ‘வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணன் என்றால், அது தமக்குப் பெருமையே’ என்று கூறி, கமண்டலத்தைச் சாய்த்து தாரை வார்க்கத் தொடங்கினான்.

இதனைத் தடுக்க விரும்பிய சுக்ராச்சாரியார், வண்டாக மாறி, கமண்டலத்தில் தண்ணீர் வரும் வழியை மூடினார். ஆனால் வாமனர், ஒரு புல்லை எடுத்து துவாரத்தில் குத்தியதால் சுக்ராச்சாரியார் தமது ஒரு கண்ணை இழந்தார். முடிவில், மகாபலி தண்ணீர் விட்டுத் தாரை வார்த்தான்.

வாமனர், ஓரடியை வைத்து மண்ணுலகை அளந்தார். மற்றொரு அடியால் விண்ணுலகம் முழுவதையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று வாமனர் கேட்க, மகாபலி தன் செருக்கை இழந்து மூன்றாவது அடியைத்

தன் தலை மீதே வைக்க வேண்டினான். அதன்படியே பெருமாள் வைக்க பாதாளம் சேர்ந்தான் என்பது இந்தத் தல வரலாறு.

ஞானிகளும், நாரதரும், கின்னரர்களும் இத்தலத்தில் தவமி யற்றிய தாகக் கூறப்படுகிறது. மார்க்கண்டேயரின் தந்தையான மிருகண்ட முனிவர், திருமாலின் வாமன அவதாரத்தைக் காண விரும்பித் தவமியற்றிய தலம் இது.

திருக்கோவிலூர், திருக்கண்ண புரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக் கண்ண கவித்தலம் என ஐந்து தலங்கள் பஞ்ச ஷேத்திர தலம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் முதன்மையானது திருக்கோவிலூர்.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Empty Re: திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் !

Post by krishnaamma Thu Oct 11, 2018 9:41 pm

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! 20170811

உலகளந்த பெருமாள் :

ஆலயத்தின் நாயகனாக விளங்கும் திரிவிக்ரம சுவாமி களின் பிரமாண்டத் திருக்கோலம் நம் கண்ணுக்கும், கருத்துக்கும் வியப்பூட்டுகிறது. இவரே உலகளந்தப் பெருமாள் என அழைக்கப்படுகின்றார். வலது காலை உயரத் தூக்கி, இடது திருவடியில் நின்று புன்னகையுடன் சேவை சாதிக்கின்றார். வலது கையில் சங்கு, இடது கையில் சக்கரம் ஏந்தி ஞானத்தை அருள்கின்றார். (பொதுவாக வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு இருப்பது வழக்கம்).

ஓரடியால் வானத்தை அளந்தும், மற்றொரு அடியால் பாதாள உலகை அளந்தும், மூன்றாவது அடியை எங்கே வைப்பது என மகாபலியை கேட்கும் விதமாக வலது கையை வைத்துள்ளார். மேலே உள்ள திருவடியை பிரம்மா ஆராதனை செய்ய, கீழே உள்ள திருவடியை லட்சுமி, பிரகலாதன், மகாபலி, நமச்சு மகாராஜா ஆகியோர் பூஜை செய்கின்றனர்.

சுக்ராச்சாரியார், மிருகண்டு மகரிஷி, அவரது பத்தினி, முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், கருடன் ஆகியோர் கருவறையின் வலது பக்கமும், இடது பக்கமும் காட்சி தருகின்றனர்.

மூலவரின் திருமேனி 21 அடி உயரம் கொண்ட பழமையான தேவதாருவால் (மரத்தால்) ஆனதாகும். இவருக்கு உலகளந்த பெருமாள், ஆயனார், இடைக்கழி ஆயார் என பல்வேறு திருநாமங்கள் உண்டு. எம்பெருமான் பச்சிலை மூலிகைகளைக் கொண்டு வண்ணம் பூசப்பட்டு பேரழகனாக வீற்றிருக்கிறார்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Empty Re: திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் !

Post by krishnaamma Thu Oct 11, 2018 9:45 pm

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Sri-tr10

நாச்சியார் சன்னிதி :

திரிவிக்ரம சுவாமியின் வலதுபுறம் தாயார் பூங்கோவல் நாச்சியார் சன்னிதி அமைந்துள்ளது. இது, கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை கொண்டு எழிலோடு தனிக்கோவிலாக அமைந்துள்ளது. மூலவர் பூங்கோவல் நாச்சியார் என்றும், உற்சவர் புஷ்பவல்லித் தாயார் என்றும் அழைக்கப்படுகின்றாள். திரிவிக்ரம சுவாமியை பிரம்மா, இந்திரன், மகாபலி, மிருகண்டு, குஷி, காசியபர் மற்றும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

விழாக்கள் :
 
தமிழ் புத்தாண்டு, ராமநவமி, ராமானுஜர் விழா, வைகாசி வசந்த உற்சவம், ஆனியில் திருமாலுக்கு ஜேஷ்டாபிஷேகம், ஆடியில் பத்து நாட்கள் ஆண்டாள் பூர விழா, ஆடி வெள்ளி, கடைசி வெள்ளி தாயாருக்கும், பெருமாளுக்கும் புஷ்பங்கி சேவை, ஆவணியில் வேணுகோபாலருக்கு 10 நாட்கள் விழா, வாமன ஜெயந்தி மூன்று நாட்கள், புரட்டாசி பவித்ர உற்சவம், தாயாருக்கு நவராத்திரி விழா, திருமாலுக்கு தினப்படி திருமஞ்சனம், ஐப்பசி திருவோணத்தன்று முதலாழ்வார் களுக்கு 5 நாள் விழா, மணவாள மாமுனிகள் பத்து நாள் உற்சவம், கார்த்திகை தீப உற்சவம் மூன்று நாள், கைசீக ஏகாதசி, மார்கழியில் பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து, தைத் திருநாள், மாசியில் மகம், பங்குனி பிரம்மோற்சவம் என விழாக்களுக்கு பஞ்சமில்லாத் திருக்கோவிலாகத் திகழ்கின்றது.

காலை 5.30 மணி முதல் 6.45 மணி வரை, 8.30மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 5.45 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். விழாக் காலங்களில் இது மாறுபடும்.

ஓம் நமோ நாராயணாய ! .... அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Empty Re: திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் !

Post by krishnaamma Thu Oct 11, 2018 9:46 pm

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Ulagal10


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Empty Re: திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum