புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
44 Posts - 60%
heezulia
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
viyasan
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
236 Posts - 42%
heezulia
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
13 Posts - 2%
prajai
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_m10நவராத்திரி விழா - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி விழா - தொடர் பதிவு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2015 6:23 am

நவராத்திரி விழா - தொடர் பதிவு KMAUMPbTQJaMahrDmSqP+navarathiri
-


மராட்டியத்தில், நவராத்திரி விழா இன்று தொடங்கி
9 நாட்கள் நடக்கிறது.

நவராத்திரி விழா
சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றும், அம்பிகைக்கு
9 ராத்திரி நவராத்திரி என்றும் இந்துக்களால் கொண்டாடப்பட்டு
வருகிறது. புரட்டாசி மாதத்தின் வளர்பிறையில் முதல் நாளிலிருந்து
தொடங்கி 9 நாட்கள் வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
9 நாட்கள் விழாவில் துர்கா, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய
முப்பெரும்தேவிகளையும் தலா மூன்று நாட்களாக பிரித்து பூஜை
செய்வது வழக்கம்.

கொலு
தமிழகத்தில் கொலு அமைத்து நவராத்திரி விழா கொண்டாடப்
படுகின்றது. இதேபோன்று மும்பை, தானே, புனே, நவிமும்பை உள்ளிட்ட
மராட்டியத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் நவராத்திரி
விழாவினையொட்டி கொலு அமைத்து தேவியை வழிபடுவார்கள்.

மகிசாசூரனை அழிப்பதற்கு அம்பிகை அவதரித்தபோது தேவர்கள்
தங்கள் சக்திகளை ஸ்ரீதேவியிடம் கொடுத்துவிட்டு பொம்மைப்போல
நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைத்து வழிபாடு
செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நவராத்திரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற
21–ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மும்பை
நகர் மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் தானே, நவிமும்பை பகுதிகளில்
பிரதான மண்டல்கள், அமைப்புகள் சார்பில் தேவி சிலைகள் பிரதிஷ்டை
செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.

தாண்டியா நடனம்
இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை
செய்வார்கள். பின்னர் 9 நாட்கள் பூஜைக்குப்பின்னர் தேவி சிலைகளை
பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
நவராத்திரியையொட்டி பெண்கள் தங்கள் வேண்டுதல்கள்
நிறைவேறுவதற்கு 9 நாட்களும் விரதம் இருந்து தேவியை வழிபடுவார்கள்.
தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்படும் 9 நாட்களும் மும்பையில் தினந்
தோறும் இரவு பாரம்பரிய முறைப்படி தாண்டியா நடனம் ஆடுவது வழக்கம்.

இதில் இளைஞர்கள், முதியவர்கள் என வயது பாரபட்சமின்றி பெண்களும்,
ஆண்களும் தாண்டியா நடனம் ஆடுவார்கள்.

மகாலட்சுமி கோவில்
நவராத்திரி திருவிழாவினையொட்டி மும்பையில் பிரசித்தி பெற்ற
மகாலட்சுமி கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது
வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து
மகாலட்சுமியை தரிசனம் செய்து செல்வார்கள்.

இதேபோன்று மும்பாதேவி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி
விழாவினையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கொலு அமைத்து
வழிபாடுகள் நடக்க உள்ளன.

செம்பூர் உள்ள முருகன் கோவிலில் நவராத்திரி விழா நடக்கிறது.
இதையொட்டி இன்று துர்காதேவிக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம்
செய்யப்பட்டு பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நவசண்டி மகாயாகம்
வளர்க்கப்படுகிறது. இரவு கலாபிஷேகம் செய்யப்படுகிறது.
விழா நாட்களில் நவவரண பூஜை, நவகிரக கலசபூஜை, லலிதா சகஸ்ரநாம
அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.

செம்பூர் செட்டா நகரில் உள்ள ஆதிசக்தி மாரியம்மன் கோவிலில்
நவராத்திரியையொட்டி இன்று காலை மகாகணபதி ஹோமம், துர்காதேவி
ஹோமம் வளர்க்கப்படுகிறது. பின்னர் தினசரி விக்னேஸ்வர பூஜை,
துர்காதேவி, லெட்சுமி தேவி, வித்யாதேவி ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை
ஆகியவை நடக்கின்றன. காட்கோபர் காமராஜ் நகர் ஸ்ரீதேவி
முத்துமாரியம்மன் கோவில், பாண்டுப் பஜனை சமாஜ், தாராவி
கருமாரியம்மன், சந்தனமாரியம்மன் கோவில், மகமாயி மாரியம்மன் கோவில்,
முத்துமாலை அம்மன் கோவில் உள்பட தமிழர்கள் பகுதிகளில் உள்ள அம்மன்
கோவில்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
-
----------------------------------
தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2015 8:59 am

நவராத்திரி விழா - தொடர் பதிவு 0iuJevjJSFO3cswm3xWX+navarathiri
-

இந்த வருடம் 13-10-2015 முதல் 22-10-2015 வரை நவராத்திரி
கொண்டாடப்படுகிறது.
-
சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி.
சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி.
நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து
வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு
'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2015 9:04 am

நவராத்திரி விழா - தொடர் பதிவு 6TtQ4wGOT265AawGXbqD+navarathri681
-
சக்தி வடிவம்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி
ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது
கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம்.

முதல் நாள் மஹேஸ்வரி பாலா
இரண்டாம் நாள் கௌமாரி குமாரி
மூன்றாம் நாள் வாராஹி கல்யாணி
நான்காம் நாள் மஹாலட்சுமி ரோகிணி
ஐந்தாம் நாள் வைஷ்ணவி சுபத்ரா
ஆறாம் நாள் இந்திராணி காளிகா
ஏழாம் நாள் சாமுண்டி சண்டிகா
எட்டாம் நாள் நரசிம்ஹி தருணி
ஒன்பதாம் நாள் சரஸ்வதி சுமங்கலி
-

மேற்கண்ட அட்டவணைப்படி கன்னியின் வயதிற்கேற்ப
ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாட்களும்
ஒன்பது கன்னிகைகளையும் ஒன்பது சுமங்கலிகளையும்
பூஜை செய்வது அளவிட முடியாத புண்ணியம் ஏற்படும்.

கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக
அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய
அம்சமாகும்.
--------------------------------------------------
-
ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2015 9:11 am

நவராத்திரி விழா - தொடர் பதிவு KN5Lkd3ySxmthg7xMy1c+navarathri-pooja

-
ஆனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை
முதல் ஒன்பது நாட்கள்
வாராஹி நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

புரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை
முதல் ஒன்பது நாட்கள்
சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

தை மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை
முதல் ஒன்பது நாட்கள்
சியாமளா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை
முதல் ஒன்பது நாட்கள்
வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2015 9:24 am

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம்
-
நவராத்திரி விழா - தொடர் பதிவு Aa4LN1JcSx6cZz9PUkGj+bram_2577882a

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2015 9:47 am

இந்த கோலங்கள்
செப்டம்பர் 16 - 30, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. .
-
நவராத்திரி விழா - தொடர் பதிவு 4uNgHgKFQsanIUJAM89x+KOLAM_0005
-
நவராத்திரி விழா - தொடர் பதிவு 0yaD2BwiR2SfK5yO3lsq+KOLAM_0005(1)
-
நவராத்திரி விழா - தொடர் பதிவு Oq268dpaST2xgMHWdnZL+KOLAM_0006
-
நவராத்திரி விழா - தொடர் பதிவு FIksLSmRTWjbCtG7ZFRQ+KOLAM_0006(1)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 13, 2015 10:21 am

அருமையான பகிர்வு அண்ணா ! புன்னகை
.
.
.

.
இதையும் உங்களின் 'நவராத்திரி - தொடர் பதிவு' உடன், இணைத்து விடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 13, 2015 10:23 am

ayyasamy ram wrote:திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம்
-
நவராத்திரி விழா - தொடர் பதிவு Aa4LN1JcSx6cZz9PUkGj+bram_2577882a

மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 15, 2015 1:23 pm

நவராத்திரி - கொலு வைப்பது குறித்து அறிய ஆசையா?

நவராத்திரி என்பதே, வீட்டில் நடக்கும் குட்டித் திருவிழா தான். வீட்டை அலங்கரித்து, கொலு படிக்கட்டுகளை அமைத்து, பொம்மைகளை அடுக்கி மாவிலை தோரணங்கள் கட்டி, அழகுபடுத்துவதே தனி கலை. அதை எல்லாருக்கும் சாத்தியம் ஆக்குகிறது, ஒரு அமைப்பு.

சென்னை, மயிலாப்பூரில் இயங்கி வரும், தி மயிலாப்பூர் ட்ரையோ என்ற அந்த அமைப்பு, நவராத்திரியின் சிறப்பு, கொலு வைப்பது எப்படி, அதன் அவசியம் என்ன என, எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கிறது. அந்த அமைப்பை, எஸ்.சுரேந்தர், எஸ்.அபர்ணா, எஸ்.அமர்நாத்,
எம்.சுகதன் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர்.

ஆன்மிகம் பற்றிய புரிதலை...எஸ்.சுரேந்தர் கூறியதாவது:கொலு வைப்பதன் அடிப்படை தத்துவத்தை, இளம்பெண்களுக்கு தெரியப்படுத்த, 2003ல் இந்த அமைப்பை உருவாக்கினோம். மார்கழி உற்சவம், தியாகராஜ ஆராதனை, பால குருகுலம், பாலர் சித்திரை கலை விழா என்று, ஆண்டு முழுதும் விழாக்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆன்மிகம் சார்ந்த பல கலை நிகழ்ச்சிகளையும் இவர்கள் நடத்தி வருகின்றனர். கொலுவில் எத்தனை படிகள் இருக்க வேண்டும், கொலு எப்படி வைக்க வேண்டும், எந்த மாதிரியான பொம்மைகள் இடம் பெற வேண்டும் என்பது துவங்கி, கொலு முடிந்து எப்படி பொம்மைகளை பாது

காப்பாக வைக்க வேண்டும் என்பது வரை கற்றுத் தருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிக்கு, இரண்டு வாரங்களுக்கு முன் இவர்கள் வீட்டிலேயே, சிறிய அளவில் ஒருநாள் பயிற்சி நடைபெறுகிறது.

கருத்தை மையமாக வைத்து...இந்த பகுதியில் நடக்கும் கொலு போட்டிகளுக்கு, நடுவராகவும் செயல்படுகின்றனர்.கடந்த, ௨009ல் சென்னை, கபாலீஸ்வரர் கோவிலில், மகாமேரு கொலு என்ற தலைப்பில் இவர்கள் நடத்திய கொலு கண்காட்சி எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது.

கடந்த, 2010ல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், அல்லிக்கேணி அலங்கார கொலு என்ற தலைப்பில் கொலு அமைத்து இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கோவிலில் கொலு அமைத்து, அந்த பகுதிவாசிகளுக்கு, கொலு குறித்து சொல்லிக் கொடுக்கின்றனர். தற்போது, மதுரையிலும், ஸ்ரீரங்கத்திலும், கொலு வைத்துஉள்ளனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 15, 2015 1:25 pm

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை நவராத்திரி நான்காம் நாள்!

நவராத்திரி விழா - தொடர் பதிவு LzjffgeCRqq3g4l3H4UQ+LRG_20151015111145753556

மதுரை: நவராத்திரி நான்காம் நாளில், மதுரை மீனாட்சி ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி தருகிறாள். திருமலை நாயக்கர் காலத்தில், குமரகுருபரர் மதுரை வந்தார். பிறக்கும் போதே பேச முடியாத அவர், திருச்செந்துார் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றதை மன்னர் கேள்விப்பட்டார். அவரிடம், மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடும் படி வேண்டினார். மன்னரின் முன்னிலையில், குமரகுருபரர் பிள்ளைத்தமிழை அரங்கேற்றினார். அதன் இனிமையில் ஈடுபட்ட அம்பிகை, சிறுமி வடிவில் தோன்றினாள்.

மன்னரின் கழுத்தில் இருந்த முத்து மாலையைக் கழற்றி, குமரகுருபரருக்கு அணிவித்து சன்னிதிக்குள் சென்று மறைந்தாள். அன்னையின் அருளை எண்ணி அனைவரும் வியந்தனர்.
சிறுமியாக வந்த மீனாட்சி ஊஞ்சலில் ஆடும் அழகினை குமரகுருபரர் ஊசல்(ஊஞ்சல்) பருவ பாடலில் வர்ணித்து மகிழ்ந்தார். இக்கோலத்தை தரிசித்தால் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.

நைவேத்யம்: அவல் கேசரி, பால் பாயாசம், கல்கண்டு சாதம், பட்டாணி சுண்டல்

பாடல்: ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமாய்
வானந்த மான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக