ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித்தன்மைகள்

2 posters

Go down

வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித்தன்மைகள் Empty வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித்தன்மைகள்

Post by kavinele Sun Dec 20, 2009 5:38 pm

வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித்தன்மைகள்

இவர்கள் வெற்றிக்குரிய மனிதர்கள் என்று குறிப்பிடும் வகையில் சில
தனித்தன்மை வாய்ந்த பண்புகள் உண்டா என்றால் உண்டு. அவ்வாறாயின் அந்தப்
பண்புகள் என்னென்ன? அந்தப் பண்புகளை நாம் எவ்வாறு வளர்த்துக்கொள்வது?
அத்தகைய படிப்பு மிகவும் பயனுள்ள படிப்பினையாகும்.
அமெரிக்காவிலுள்ள “காலப்” என்ற நிறுவனம் பல்வேறு துறையைச்
சார்ந்தவர்களில் 15000 சாதனையாளர்களைத் தேர்வு செய்து வெற்றிக்கு
அடிப்படையான அவர்களது பண்புகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள், “முக்கியமான இவர்கள் யார்?” என்ற
நூலிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் (இவர்கள் யார்? என்ற நூல்
அமெரிக்காவில் முக்கியமானவர்களின் பட்டியல் நூலாகும்) பொருளாதாரம், சமூக
அந்தஸ்து என்ற அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படவில்லை. இவர்களது
துறையில் இவர்கள் செய்துள்ள அண்மைக் காலச் சாதனைகளின் அடிப்படையிலேயே
தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அந்த சாதனையாளர்களிடம் உள்ள சிறப்பான
குணங்களை துல்லியமாக முறைப்படுத்திக் காட்டியுள்ளது. அவற்றுள் முதன்மையான
ஐந்து பண்புகள் வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
1. நடைமுறை அறிவு (Common Sence)
சாதனையாளர்களில் 79 விழுக்காடு இந்த நடைமுறை அறிவு உள்ளவர்களாக
இருந்தார்கள். நடைமுறை அறிவு தேவை என்பதையும் குறித்திருந்தார்கள். அதில்
61 விழுகாட்டினர். இந்த நடைமுறை அறிவு தான் தங்கள் வெற்றிக்கு
முக்கியகாரணம் என்பதையும் குறித்திருந்தார்கள்.
நடைமுறை அறிவு என்பது அன்றாட நடவடிக்கைகளில் நடைமுறைக்கு ஒத்த
தீர்வுகளை வழங்குவதாகும். குறிப்பிட்ட பிரச்சனைக்குத் தொடர்பில்லா மற்ற
கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டுச் சரியான தீர்வு காண்பதாகும்.
ஒரு எண்ணெய் நிறுவனத் தலைவர் இந்த நடைமுறை அறிவைப் பற்றிக்
குறிப்பிடும்போது எளிய அணுகுமுறைதான் வெற்றிக்கு முக்கியமாக வேண்டப்படும்
திறமையாகும். என்று கருத்து தெரிவித்துள்ளார் நிறுவனத்திற்கான கூட்டங்கள
நடத்துவது, வாடிக்கையாளர்களைச் சந்திப்பது போன்ற அன்றாட நிறுவனச் செயல்
முறைகளில் சிக்கலான அல்லது ஆடம்பரமான நடைமுறைகளைத் தவிர்த்து, மிக எளிய
முறையில் அணுகுவதுதான் மிகவும் முக்கியம் என்பது அவரது அனுபவமாகும்.
நடைமுறை அறிவு என்பது பிறவியிலிருந்தே வருவதா அல்லது நாமாக வளர்த்துக்
கொள்ள முடிவதா என்றால் – நாமாக வளர்த்துக் கொள்ள முடியும் என்பதுதான்
இதற்குரிய பதில்.
இளமையில் கல்விக்கூடங்களில் விவாதங்கள் நடத்துவன் மூலமும் வாழ்க்கையில்
மற்றவர்களின் நடைமுறைகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலமும் நமது சொந்த
தவறுகளிலிருந்தும் நாம் பெற்ற அனுபவங்கள் மூலமும் வளர்த்துக் கொள்ள இயலும்
என்பதுதான் பல்வேறு சாதனையாளர்களின் கருத்தாக இருந்தன.
2. தான் மேற்கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவினைப் பெறுதல் (Knowing One’s Field)
நடைமுறை அறிவுக்கு அடுத்த இடத்தைப்பெறுவது ஒருவர் தான்
எடுத்துக்கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவினைப்பெறுவதாகும்.
சாதனையாளர்களில் 75 விழுக்காட்டினர் இதை முக்கிய பண்பாகக் கருதுகின்றனர்.
எண்ணெய் வயல்களில் வேலை செய்ததும் எண்ணெய்க் கிணறுகளின் மீது
உட்கார்ந்து கொண்டு கூர்ந்து கவனித்து நேரடி அனுபவம் பெற்றதுமே தனது
வெற்றிக்குக் காரணம் என்று ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் வள நிறுவனத் தலைவர்
கூறுகிறார். குறிப்பாக மேலாளராக பணிபுரிய செல்கின்றவர்கள் அவர்கள் தொழில்
பற்றிய பயிற்சியும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என்பது அவரது
கருத்தாகும்.
புகைப்படக்கருவி எப்படி இயங்குகிறது என்பதை அறிந்து செயல்படுதவே எனது
வெற்றியின் இரகசியம் என்கிறார் புகழ் வாய்ந்த ஒரு புகைப்படக்காரர்.
எல்லாவற்றிற்கும் மேலாக நாமாக கற்கும் அனபவ கல்விதான் நமது வெற்றிக்குப்
பெரிதும் உதவியாக இருக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது.
நாம் என்ன செய்கிறோம் என்பதைப்பற்றிய மிகத் தெளிவான அறிவும், முடியாத
நமது பணிகளை வீட்டில் செய்து கொள்வதும், வெற்றிக்குப் பெரிதும் உதவியான
செயலாகவும் இருக்கும். ஒருமுறை ஒருதுறையில் பெற்ற உயர்தரமான அறிவு
போதுமானது என்று சிலர் கருதுகிறார்கள். அறிவும் ஆராய்ச்சியும் நாளும்
வளர்ந்து வருகிறது. ஆகையால் கல்வி அறிவு என்பது தொடர்ந்து கற்றுத் தெளிய
வேண்டிய ஒன்றாகும். வெற்றி பெற விரும்புவோர் அவர்கள் துறையில் தொடர்ந்து
அறிவை தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.
3. தன்னம்பிக்கை (Self reliance)
மிகச் சிறந்த சாதனையாளர்கள் தங்களிடமுள்ள வளங்களிலும், திறமைகளிலும்
நம்பிக்கை வைத்தே செயல்படுகிறார்கள். 77 விழுக்காட்டினர் தன்னம்பிக்கைதான்
தங்கள் வெற்றிக்கு காரணம் என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.
“தன்னம்பிக்கை” என்பது நாம் எப்படி உணர்கிறோம் அல்லது எவ்வளவு
நல்லவர்களாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததல்ல. தீர்மான முடிவுடன் ஒரு
செயலை எப்படி துணிவுடன் முனைந்து செய்கிறோம் என்பதை பொறுத்தே தன்னம்பிக்கை
அமைகிறது. மன உறுதியும் குறிக்கோளை உருவாக்கிக்கொள்வதும் தன்னம்பிக்கையின்
உள்ளார்ந்த இரு கூறுகளாகும்.
மூன்றில் இரண்டு பங்கில் தங்கள் வாழ்வில் தெளிவான குறிக்கோள்
உடையவர்கள் என்பதைத் தெரிவித்தனர். இவர்கள் பாதிபேருக்கு மேல் நேரில்
சந்தித்தபொழுது மன உறுதிக்கு முதலிடம் அளித்தனர். மற்ற திறமைகளைக்
காட்டிலும் மனம் உறுதியான தானியங்கி போலச் செயல்பட வைக்கிறது என்று
குறிப்பிட்டனர்.
வெற்றி பெறுவதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதைக் காட்டிலும் தைரியமும்
தேவையான அளவு நேரம் உழைப்பதற்குரிய உடல் வலிமையும் தேவை என்பது
சாதனையாளர்களின் கருத்தாக அமைந்தது.
4. புத்திசாலித்தனம் (General intelligence)
வெற்றி பெறுவதற்கு புத்திசாலித்தனம் மிகவும் முக்கியமானது. ஏனெனில்
கடினமான கருத்துகளைக் கூட சுலபமாக புரிந்து கொண்டு தெளிவாக அலசி ஆராய்ந்து
விரைவான முடிவு எடுப்பதற்கு புத்திசாலித்தனம் பெரிதும் பயன்படுகிறது. 43
விழுக்காட்டினர் புத்திசாலித்தனம் காரணம் என்றும் 52 விழுக்காட்டினர் இது
மிகவும் தேவை என்றும் குறிப்பிட்டனர் புத்திசாலித்தனத்திற்கும் மேலாக
விரிவான சொல்வளம், நிறைய படிக்கும் பழக்கம், அதேபோல் எழுதும் பழக்கம்,
ஆகியவையும் இன்றியமையாதது என்று கருதுக்கணிப்பில் தெரிய வந்தது. இந்த
சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு 19 புத்தகங்கள்
படிக்கிறார்கள். மேலும் எதற்கு? ஏன்? என்ற ஆராய்ச்சி மனமும் பரந்துபட்ட
ஆர்வமும் வெற்றிக்கு அடிப்படையான செய்திகளாகும் என்பதும் நாம் அறிந்து
கொள்ள வேண்டிய கருத்துகளாகும்.
5. எடுத்த செயலை முடிக்கும் திறன் (Ability to get things done)
நான்கில் மூன்று பங்கினர் தாங்கள் சாதனை புரிந்ததற்கு எடுத்த செயலை
முடிக்கும் தங்களின் தனித்திறனே காரணம் என்று குறிப்பிட்டனர். தங்கள்
தனித்திறமைக்கு அனைவரையும் அழைத்துச் செல்லும் பண்பு, தாமே வேலைசெய்யும்
மனப்பான்மை, தொழிலில் கவனத்தோடு கூடிய ஈடுபாடு ஆகிய மூன்றுமே வெற்றிக்குக்
காரணமாகும் என்பதையும் குறிப்பிடுள்ளனர்.
வாரத்திற்கு 100 மணி நேரம் என்ற வகையில் “உண்மையாகும் கடினமாகவும்
தொடர்ந்தும் விடாப்பிடியாகவும் உழைத்த உழைப்பே சாதனை நிகழ்த்தக் காரணமாய்
இருந்தது” என்பதை ஓர் இயற்பியல் பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.
நடைமுறை அறிவு, தொழில்துறை அறிவு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம்,
செயல்திறன் ஆகிய மேலே குறிப்பிட்ட ஐந்து பண்புகள் மட்டுமின்றி
தலைமைத்தன்மை, ஆக்கப்பூர்வமான சிந்தனைத்திறன் மற்ற மனிதர்களோடு நாம்
ஏற்படுத்திக்கொள்ளும் இணக்கமான உறவு, சில வேலைகளில் சிறிதளவு அதிர்ஷ்டமும்
தேவையானவையாகும்.
இருப்பினும் மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து பண்புகளும் சாதனை
நிகழ்த்துவதில் முதன்மை பெறுகின்றன. இந்தப் பண்புகளை நாம்
வளர்த்துக்கொண்டோமாயானால் நாம் சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுவது உறுதி.
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித்தன்மைகள் Empty Re: வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித்தன்மைகள்

Post by aarul Sun Dec 20, 2009 7:58 pm

எடுத்த செயலை முடிக்கும் திறன் (Ability to get things done), புத்திசாலித்தனம் (General intelligence), தன்னம்பிக்கை (Self reliance) , தான் மேற்கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவினைப் பெறுதல் (Knowing One’s Field), நடைமுறை அறிவு (Common Sence)
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum