புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_m10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_m10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_m10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_m10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_m10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_m10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_m10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_m10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_m10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_m10'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 06, 2018 2:28 pm



தீபக் மிஸ்ரா. சமீபமாக இந்தியாவில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர். ஆம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து, அக்டோபர் 1-ம் தேதி ஓய்வுபெற்றார்.

தலைமை நீதிபதியான இவரது தலைமையிலான அமர்வுகள் பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தது. விசாரணை முடிந்து பல ஆண்டுகள் ஆன வழக்குகளில்கூட தீர்ப்பு அளிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு முன்பாக அவரது தலைமையிலான அமர்வுகள், சில முக்கிய வழக்குகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க, பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியது.

அவற்றில் குறிப்பாக,

* சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து, ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்று தீர்ப்பளித்தது;

* சட்டப்பிரிவு 497 மற்றும் 198-ஐ ரத்து செய்து, திருமண பந்தத்தை மீறிய வேறொரு நபருடனான உறவு தவறல்ல என்று தீர்ப்பளித்தது;

* சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பளித்தது.

இந்த மூன்று தீர்ப்புகள் குறித்தும் பாராட்டுகளும் விமரிசனங்களும் எழுந்தன. ஆனால், சட்டப்பிரிவு 497 மற்றும் 198-ஐ ரத்து செய்து, திருமண பந்தத்தை மீறிய வேறொரு நபருடனான உறவு தவறல்ல என்று அளித்த தீர்ப்பின் மீது அதிகப்படியான விமரிசனம் எழுந்தது.

அப்படி விமரிசனம் அதிகமாக எழ என்ன காரணம்? விரிவாகப் பார்க்கும்முன், சட்டப்பிரிவு 497 குறித்துப் பார்ப்போம்.

“வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண்ணின் கணவரின் சம்மதம் இல்லாமல் அல்லது அவர் நீக்குப்போக்காக அறியும் வகையில், அந்தப் பெண்ணுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வது என்பது, பாலியல் வன்கொடுமைக்கு ஈடானது அல்ல என்றபோதிலும், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு என்றும், அது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும். அதன்படி, குற்றச் சாட்டப்பட்ட ஆணுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இந்த விஷயத்தில், அந்தப் பெண் (வேறொருவரின் மனைவி) தவறுக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்காக அவரைத் தண்டிக்க இயலாது”.

இதுதான் அந்தச் சட்டப்பிரிவு குறித்த விளக்கம். இதன்மூலம் நாம் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

இந்தச் சட்டம், கணவன் என்பவன் பெண்களுக்கான எஜமானன் என்பதை சூசகமாகச் சொல்கிறது. ஒரு பெண் தனது கணவரின் சம்மதத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டால் அது குற்றமல்ல. அதுவே கணவரின் சம்மதம் இல்லாமல் உடலுறவு வைத்துக்கொண்டால் அது குற்றம் என்றால், திருமணம் என்ற ஒன்று நடந்துவிட்டால், அதன்பிறகு ஒரு பெண்ணின் உடல் உள்பட மொத்தமும் கணவனின் உரிமையாகிவிட வேண்டும் என்பதைத்தான் இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

இதில், வேறொரு ஆணுடன் உடலுறவில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் வழக்குத் தொடரலாம். அதே உடலுறவில், ஒரு பெண்ணின் கணவர் ஈடுபட்டிருந்தால், அவரது மனைவி தனது கணவருடன் உடலுறவில் ஈடுபட்ட பெண்ணின் மீது எந்தவிதமான வழக்கையும் தொடர சட்டப்பிரிவுகள் 497 மற்றும் 198 அனுமதிக்கவில்லை.

இந்த இரண்டு முக்கியமான விஷயங்களையே கருத்தில் கொண்டு, தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, சட்டப்பிரிவு 497 மற்றும் 198-ஐ ரத்து செய்து கடந்த 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பில், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு குற்றமல்ல என்றும்; திருமணப் பந்தத்துக்கு எதிரான குற்றங்களை தண்டனைக்குரியதாகக் கருதுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றும் நீதிபதிகள் அனைவரும் ஒருமித்த குரலில் தெரிவித்த போதிலும், தீர்ப்புகளை தனித்தனியாக வாசித்தனர்.



‘இந்தச் சட்டப் பிரிவுகள், திருமணத்துக்கு அப்பாற்பட்டு ஒரு கணவர், திருமணமாகாத பெண் அல்லது கணவரை இழந்த பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வது குறித்த விஷயத்தை இந்த சட்டம் உள்ளடக்கி இருக்கவில்லை’.



‘பெண்களை சமத்துவமின்றி நடத்தும் எந்தவொரு சட்டப்பிரிவையும், அரசமைப்புச் சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாது. கணவர் என்பவர் பெண்ணின் எஜமானர் அல்ல என்று சொல்ல வேண்டிய தருணம் இது’.



‘அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் வகையில் சட்டப்பிரிவு 497 அமைந்துள்ளது. அந்த சட்டப்பிரிவு இனியும் தொடர்வதில் எந்தவித நியாயமும் இருக்க முடியாது’.



‘சட்டப்பிரிவு 497 திருமணத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதாகக் கருதப்படுகிறது. திருமணமான ஆண், திருமணமாகாத பெண் அல்லது கணவரை இழந்த பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டால் அது திருமணத்தின் புனிதத்தை சிதைக்கிறது. ஆனால், அது குற்றமாகக் கருதப்படவில்லை. அப்படி இருக்கையில், இது திருமணத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதாக அல்லாமல், கணவரின் உரிமையாகவே இது இருக்கிறது’.



‘கண்ணியமிக்க மனிதச் சமூகத்தில் தனியுரிமை என்பது உள்ளார்ந்த விஷயம். இந்நிலையில், சட்டப்பிரிவு 497-ஆனது, பெண்கள் தனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதைத் தடுக்கிறது. திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவை குற்றமாக்குவது கடந்த காலத்தின் எச்சம். பெண்களுக்கான கண்ணியம், சுயமரியாதை ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், கணவனின் சொத்தாகப் பெண்ணைக் கருதும் வகையிலும் அந்தச் சட்டப்பிரிவு உள்ளது’.

நான்கு நீதிபதிகளும் தனித்தனி கருத்துகளாகப் பதிவு செய்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, திருமணப் பந்தத்தை மீறிய ஆண்-பெண் உறவு குற்றமல்ல என்பதே முக்கியக் கருத்தாக உள்ளது.

அதாவது. சட்டப்பிரிவு 497 என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் 14, 15 மற்றும் 21 ஆகியவற்றுக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கள்ளக் காதல் தண்டனைக்குரிய குற்றமல்ல, தகாத உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல, முறையற்ற உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என பல தலைப்புகளில் விவாதிக்கவும், பகிரவும்பட்டது.

இதில், 3 முக்கியமான விஷயங்களை நாம் கவனிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.



உச்ச நீதிமன்றம், இந்த சட்டம் அரசமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் தீர்ப்பை வழங்கியுள்ளதே தவிர, திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவை ஆதரித்து தீர்ப்பை வழங்கவில்லை.



இந்தச் சட்டம் (சட்டப்பிரிவு 497) கலாசாரத்தை அல்லது திருமணம் என்ற புனிதத்தைப் பாதுகாக்கிறது. அதனால், இந்தச் சட்டத்தை நீக்கக் கூடாது என்பதுதான் இங்கு பெரும்பாலான மக்களின் வாதமாக இருக்கிறது.

ஆனால், இந்தச் சட்டம், கணவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொண்டால் அது குற்றமல்ல என்று சொல்கிறது. அப்படி இருக்கையில், கணவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்ளும்பொழுது அது திருமணத்தின் புனிதத்தைப் பாதிக்காதா என ஒரு கேள்வி எழுகிறது. மேலும், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஆர்.எஃப்.நாரிமன் குறிப்பிட்டபடி, திருமணம் ஆன ஒரு நபர் திருமணம் ஆகாத அல்லது கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டால் அதுவும் திருமணப் புனிதத்தைப் பாதிக்காதா என்கிற கேள்வியையும் இந்த சட்டம் எழுப்புகிறது.



இது கள்ளக் காதல், தகாத உறவு, முறையற்ற உறவு என பல அணுகுமுறையில்தான் இந்தச் செய்தி பகிரப்பட்டது. திருமணத்துக்கு அப்பாற்பட்ட ஒரு உறவை கள்ளக் காதலாகவோ, முறையற்ற உறவாகவோ, தகாத உறவாகவோ அணுகுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். பொதுத்தளங்களில் இதுதான் முறையற்ற உறவு, தகாத உறவு என சித்தரிப்பதுதான் சமூகத்தில் மிகப்பெரிய கேள்விகளை எழுப்புகிறது.

திருமணம் செய்த பிறகு வைத்துக்கொள்ளும் உறவு மட்டும்தான் சமூகத்தில் தகுந்த உறவு, முறையான உறவு என்கிற விளக்கவுரை எங்கு வரையறுக்கப்படுகிறது?

பெரும்பான்மையான மக்களின் பார்வையில், திருமணம் செய்த பிறகு வைத்துக்கொள்ளும் உறவுதான் முறையான உறவு, தகுந்த உறவாக இருக்கிறது. அப்படி இருக்கையில், தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் பெரும்பான்மையான மக்களின் உணர்வை அடிப்படையாகக் கொண்டு அதன்வழி அணுகலாம்.

ஆனால், பொதுத்தளங்களில் ஒரு சமூகம் என்று வரும்போது அதனை திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக முன்வைப்பதே சரியானதாக இருக்கும். தகாத உறவு, முறையற்ற உறவு, கள்ளக் காதல் என சித்தரிப்பது இந்தத் தீர்ப்பின் அம்சத்தை முற்றிலும் திசை திருப்பி, தவறான ஒரு தூண்டுதலை சமூகத்தில் விதைக்கிறது.

ஆக, எந்த ஒரு விஷயத்திலும் மேலோட்டமாகப் பார்க்காமல் உள்ளார்ந்து ஆராய்ந்து பார்த்தால்தான் அதன் உண்மைத்தன்மை என்பது புலப்படும். இந்த விஷயத்தில், தீர்ப்பு மீதான மேலோட்டமான பார்வையே தவறான புரிதல்களுக்கு வழிவகுத்துவிட்டது.

தினமணி இணையதளத்தின் இச் சிறப்புக் கட்டுரை, முன்னர் இருந்த சட்டப்பிரிவு என்ன சொன்னது, இப்போது உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பின் உண்மைத் தன்மை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் என்று நினைக்கிறோம்.

தினமணி




'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 06, 2018 8:39 pm

தீர்ப்பின் விளக்கம் அருமை .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:34 pm

எனக்கு தலையை சுற்றுகிறது.........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 07, 2018 7:29 pm

இந்த சட்டத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் இடிக்கிறது.
இதை முன் உதாரணமாக வைத்து விளையாட்டு அரங்கேற்றாமல் இருந்தால் சரி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக