புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
96 Posts - 49%
heezulia
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
7 Posts - 4%
prajai
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
2 Posts - 1%
Barushree
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
223 Posts - 52%
heezulia
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
16 Posts - 4%
prajai
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
2 Posts - 0%
Barushree
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_m10‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:02 pm

‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!   - கவிதைமணி Download

**
பால் மணம் மாற
பாலகனாய்;
பாலினமறியா
பாசப் பறவைகளாய்;
கூடித் திரிந்து
வீடு கட்டி
சோறாக்கிய விளையாட்டும்;

விளையாட்டில் சேர்க்கல
எனும் பரிதவிப்பும்;
மழையில் கப்பல் விட்டதும்;
மண் மணம் மாறா
மழலையாய்; பேச்சிலும்
மூச்சிலும்; கெஞ்சலும்
கொஞ்சலும் கொண்ட
மல்லிகை அரும்புகளின்
தோரண வாயில்கள்;
துவண்ட மனதிற்கு
துடிப்பைத் தரும்
கரும்புப் பருவங்கள்
கூத்தாடும் மேடை;
நஞ்சு வஞ்சமில்லா
நர்த்தன ஓடை...

- ப.வீரக்குமார், திருநின்றவூர்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:02 pm

**

ஆண் பெண் பேதமின்றி இருபாலரும்
அன்று அழகாக சிரித்து மகிழ்ந்தோம் !

காக்கா கடி கடித்து மிட்டாய் பகிர்ந்தோம்
கள்ளம் கபடமின்றி விளையாடினோம் !
.
சாதி மதம் அறியாது எல்லோரும்
சகோதரர்களாய் பழகி மகிழ்ந்தோம் !

பண்டிகை உணவுகளைத் தந்தோம்
பாசத்துடன் பழகி வந்தோம் !

கவலை என்றால் அறியாத காலம்
களிப்புடன் கொண்டாடிய காலம் !

மணலில் வீடு கட்டி மகிழ்ந்தோம்
மனதில் கோட்டை கட்டி வாழ்ந்தோம் !

கபடி விளையாடிய காலம் உண்டு
கிட்டிப்பில் விளையாடிய காலம் உண்டு !

காலையில் சண்டை என்றால் உடன்
மாலையில் சமாதானம் ஆயிடுவோம் !

நொங்கு பதநீர் குடித்து மகிழ்ந்தோம்
நொங்கு வண்டி உருட்டி விளையாடினோம் !

டயர் வண்டி ஒட்டி மகிழ்ந்தோம்
போடி வாடி பேசி மகிழ்ந்தோம் !

அலைபேசியில் விளையாட்டு இன்று
அறைக்குள்ளே விளையாட்டு இன்று !

அதோ ஒரு நிலாக் காலம் உண்மை
அந்தோ போனதே திரும்ப வராதே !

- கவிஞர் இரா .இரவி



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:03 pm


அரைக்கால் சட்டையுடன்
அடுத்தவீட்டுச் சிறுவருடன்
உரையாடி நடந்துபள்ளி
உளம்மகிழ சென்றநாள்கள் !

பள்ளிநுழை வாயில்முன்
படர்ந்தமர நிழலின்கீழ்
நெல்லிக்காய் கூறுகட்டி
நிலம்மீது அமர்ந்தபடி

வறுத்தநிலக் கடலையொடு
வறுக்காத நாவற்பழம்
சுருக்குப்பை பாட்டிவிற்க
சுவையாக உண்டநாள்கள் !

மிட்டாயில் கடிகாரம்
மிடுக்காகக் கையில்கட்டி
கெட்டியான கமர்கட்டைக்
கேட்காத நண்பனுக்கும்

காக்காகடி கடித்தளித்துக்
கரம்கோர்த்து நின்றதெல்லாம்
ஏக்கத்தை நெஞ்சிற்குள்
ஏற்றியது; பேருந்தில்

பூட்டிவிட்ட சீருடையில்
புத்தகங்கள் பொதிசுமந்து
போட்டடைத்த பொட்டலமாய்ப்
பேரன்தான் சென்றகாட்சி !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:03 pm


மூக்கை
சிந்தத் தெரியாத வயதில்
ஒற்றை விரலை கைகள் பிடித்து
வீதி நடக்கையில்...

பொத்தான்கள் விடுபட்ட
சட்டையோடு
அரைக் கால்சட்டையில் விழுந்த
பொத்தல்களை மறைக்க முடியாமல்...

நைந்து
கிழிபட்ட மேலாடையுடன்
பாவாடை விரிச்சலில் நுழையும்
கண்களுக்கு முன்னால் கூனி குறுகி...

பசியும்
பள்ளிக் கல்வியும் குடியிருப்புமென
நிறையும் வாழ்க்கையென
நம்பித் தொடர்ந்த பாதையற்ற
சாலையில்...

யாவரும் நிகரென
விளங்கவும்
கீழ்மை மேன்மையற்ற சமத்துவம் நிலவவும்...

உடைமைகள் இழந்து
உரிமைகளைக் கொண்டாட தம்
உடல் பொருள் ஆவி
யாவும் அர்ப்பணித்து
ஆர்ப்பறித்த காலத்தின்
தியாகப் பருவத்தில்
உழைத்து...

எல்லார்க்கும் எல்லாம்
என்பதெல்லாம் பொய்த்து
மெய்யற்ற பொய் விரல்களில்
சுழன்று கொண்டிருக்கிறது
இடம் மாறிய
விடுதலையின் சாவி...

தியாகிகளின் கண்களில்
இன்னும் தெரிகிறது
ஆறாம் பூதமான மத மொழிகளின்
வன்மங்களும்
பால்ய வீதியில் மாறாத நிலைகளும்...

இருந்து கொள்ள முடியாமல்
வீதி தோறும் அலைகிறது
ரத்த வாடையுடன் சுதந்திரம்...

- கவிஞர்.கா.அமீர்ஜான்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:04 pm


ஆற்றங்கரையில் கட்டிய மணல் வீட்டை
ஆற்றலைகள் அடித்துச் செல்கையில்
மனம் மகிழ்ந்து அதைப் பார்த்து நின்றோம்
அடுத்த நாள் அதைவிடப் பெரிய மணல் வீட்டை
அழகாய்க் கட்டலாமென்ற நம்பிக்கையில்

உருட்டி விளையாடும் இரு நுங்கு உருளை வண்டி
ஓட்டி ஓட்டி இரண்டாய்ப் பிரிந்த வேளையில்
மனம் மகிழ்ந்து அதைப் பார்த்து நின்றோம்.
மறுநாள் இருபுது நுங்கையெடுத்து புது வண்டிதனை
மறுபடியும் செய்திடலாமென்ற நம்பிக்கையில்

கூடிக்கூடிக் கோலி விளையாடுகையில் தோற்றாலும்
வென்றலாம் கூடித் தின்றோம் கடலைமிட்டாய்
காக்காய்க்கடி, கடித்தே கவலையெதுமில்லாமல்
குழவிப்பருவத்தில் குலவி அன்பாய் இருந்தோம் நாளும்
நம்பிக்கை வளர இன்பம் எப்போதும் இருந்தது

- மீனாள் தேவராஜன்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:04 pm


சிறுபாதங்களின் முத்தத்தால்
சிலிர்த்த
பால்ய வீதி
பள்ளிக்கூடம் ஆயின எங்களுக்கு

பீங்கான் கோப்பையும்
குண்டு பல்புமாக ஒளிசிந்திய
தெருவிளக்குக் கூடுகளில்
சிட்டுக்குருவிகள் குடியிருந்த போதே
தெரிந்துகொண்டோம்
சிற்றறையிலும் வாழ்ந்து களிக்க

கண்ணாமூச்சி ரே...ரே...
காட்டுப்பூச்சி ரே...ரே... என
ஒளிந்து விளையாடிய போதே
உணர்ந்துகொண்டோம்
வெற்றியின் ரகசியத்தைக் கண்டறிய

பால்வேறு பாடின்றி
பால்ய நாட்களில்
ஒருகாலில்
சில்லு விளையாடிய போதே
தெரிந்துகொண்டோம்
ஊனத்தை வெல்லும் உத்தியை

சாட்டையைச் சுற்றிப் பம்பரத்தைச்
சுழல விடும்போதே
அறிந்துகொண்டோம்
ஆட்களை
ஆட்டுவிக்கும் நிர்வாகக் கலையை

மூச்சு விடாமல் பாடியும்
மொத்த நபர்களை ஒருங்கிணைத்தும்
கபடி ஆடிய போதே
கற்றுக்கொண்டோம்
கூட்டுப்பணியின் சூத்திரத்தை

- கோ. மன்றவாணன்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:05 pm

*
சின்னச் சிட்டுகளாய் சிறகடித்திருந்தோம்
கன்ன மொட்டுகளில் கள்ளமில்லாச் சிரிப்பு
அன்ன நடையின்றி ஆரவாரக் குதிப்பிருக்க
மன்னர்களாய் மனங்களை ஆட்சி செய்தோம்

சோதர அன்பில் முங்கிக் குளித்திருந்தோம்
ஆதரவுக் கரங்களில் கட்டுண்டுக் களிப்புடன்
மோதலின்றி முகிழ்ந்த நட்புச் சுரங்கங்களாய்
நாதகீதமிசைத்து நன்னெறி கற்றிருந்தோம்

ஓடி விளையாடி ஓய்ந்திருக்காமலிருந்தோம்
கூடிக் கும்மாளமிட்டு மகிழ்ச்சியில் குளித்து
தேடிச் சேர்ந்த அறிவுரைகள் வழி நடந்தே
கோடியின்ப லயிப்பில் துன்பமறியாதிருந்தோம்

ஆல்போல் விழுதுகளாய்க் கூடி வாழ்ந்திருந்தோம்
சூல் கொண்ட மேகங்களாய் உதவிகள் செய்து
பால்வடியும் முகங்களில் சிரிப்புச் சுரங்கங்களாய்
பால்யவீதியில் பாடிடும் பறவைகளாயிருந்தோம்

கவிஞர் ராம்க்ருஷ்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:05 pm


பால்ய வீதியில் பட்டாம்பூச்சி பிடித்தோம்
பம்பரம் விளையாடி நட்பையும் வளர்த்தோம்
கண்ணாமூச்சி விளையாடி கவலைகளை மறந்தோம்
காலங்கள் அழகிய கோலமாவதை அறிந்தோம்
புழுதியில் விளையாடி புதுவாழ்வு கொண்டோம்
புத்தகப்பையை பள்ளிக்கு சுகமாய் சுமந்தோம்
பாடங்கள் படித்து தெளிவை அடைந்தோம்
பள்ளியை கோவிலாக தினமும் தொழுதோம்
நுங்குவை சக்கரமாக்கி வண்டியை ஓட்டினோம்
நூலில்கட்டி பட்டத்தை வானத்தில் ஏற்றினோம்
பங்குவைத்து உண்டு பாசத்தை பகிர்ந்தோம்
பசியையும் மறந்து பறவையாய் திரிந்தோம்
சாதிகளை மறந்து ஒன்றாகக் கலந்தோம்
சகிப்புத்தன்மை அறிந்து பகைமை மறந்தோம்
வஞ்சக நெஞ்சமின்றி வண்ணமாய் வாழ்ந்தோம்
வாழ்வை வசந்தமாய் நாளும் கழித்தோம்
இளமைப்பருவம் என்பது இறைவன்தந்த அருள்தான்
இன்பவாழ்வு என்னும் பயிருக்கு அதுஉரம்தான்
பிள்ளைப்பருவம் என்பது பிழையற்ற பருவம்தான்
பிள்ளையாய் மாறநானும் கேட்கிறேன் ஒருவரம்தான்

- கவிஞர் நா. நடராசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:06 pm


பால பருவத்தில், வீதியில் துளிர்த்து
படித்த பள்ளியில் அரும்பி , கல்லூரியிலும்
மலர்ந்து செழித்தது எங்கள் நட்பு !
நானும் அவனும் பால்ய நண்பர்கள்
என்னும் ஒரே ஒரு பிணைப்பு
இணைத்து விட்டதே எங்களை
இன்று வரை !
வீதியில் விளையாட்டாய் துளிர்த்த நட்பு
வாடவில்லையே இன்னும் !மணக்குதே
இன்றும்! காரணம் என்ன ?
என் வாழ்க்கை வீதியில் முளைத்த பிற
நட்புகள் பல வெறும் "ரயில் நட்பாய் "
மாறிய காரணம் என்ன ?
இனம் ,மதம் ,குலம் மறந்து என் நண்பனுடன்
கை கோர்த்து ஓடி விளையாடிய
அந்த பால்ய வீதியை இன்று தேடுகிறேன்
நான் ! என் கேள்விக்கு விடை தேட !

- கே.நடராஜன்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:08 pm


மழைச்சாரல்.
உணர்வுகள் கரைந்த நினைவுகள்.
உள்ளமெங்கும் சித்திரங்கள்.
நனைந்து எழும் மண்வாசனையில்
சித்திரங்களை மெல்லத்துலக்கிக்
கோர்த்துப் பார்க்கிறேன்.

கண்ணீரும் சிரிப்பும் கள்ளமின்றிக்
கொட்டித்தீர்த்த நாட்கள்.
பெரும் குடும்பம் சிறு வீடு.
உள்ளங்களை நெருக்கி
வேய்ந்த‌ கூரைகள்.

தொலைக்காட்சி வைத்திருந்த
ஒன்றிரண்டு அரண்மனைகள்.
வண்டிமாடுகள் சத்தமிட்ட‌
வழித்தடங்கள்.

வாரச்சந்தையன்று விடுமுறை
என்ற சிறுநகரம்.
எதிர்வீட்டு கெளரி அக்கா
அவள் வருடிப்பூத்த‌
பனிக்காலத்து பவழ‌மல்லி.
தேரோடிய‌ திருவிழாக்கள்
உப்பும்மிளகும் போதுமென்ற சாமியவள்.
சாமியவள் பேரைச்சொல்லி
திருவிழாவின் கறிச்சோறு.
மஞ்சாரைப்பூச் சிதறிமணக்கும்
பள்ளித்தடங்கள் இளவேனில்காலம்..

தீபாவளிக்கு மறுநாள் கட்டாயம்
சீருடைகள்.
பள்ளிகள் உடுத்திச் சொன்ன
நீலவெள்ளைச் சமத்துவங்கள்.
சிலவருடங்கள் தீபாவளிக்குப்
புத்தாடையே சீருடைகள்.
பாவாடைச்சட்டையில் பறந்துகளித்த‌
பட்டாம்பூச்சிகள்.

கிழங்குவிற்கும் புங்க‌மரத்துப்
பாட்டியிடம் கணக்குப்படித்த நாட்கள்.
கள்ளமில்லா நட்புக்கள்..
உயிரோடிய‌ உறவுகள்..
இல்லாதது தெரியாமல்
இருந்தது புரியாமல்
வாழ்ந்திருந்த‌ பெருமகிழ்வுநாட்கள்.

இப்படி
வசந்தகாலத்தின் குறிப்புக்களே
பால்யவீதியெங்கும்.
பால்யவீதி எங்குமுடிந்தது ?


இல்லாதது வலித்தபோதும்
இருந்தபொருளே அடையாளமானபோதும்
பால்யவீதி விலகி
வெகுதூரம் வந்திருந்தேன்..
சாரலும் தூறலும் நின்றிருந்தது.
கடிகார ஊசல்போல்
பின்னூடும் எண்ணங்கள்
முன்னூடும் மாற்றங்கள்
முட்கள் முன்னேயே நகர்ந்திடும்
சில புள்ளிகளில் நாமும்
குழந்தைகளாக வாழ வேண்டும்.
உணர்வுகள் இசைக்கும்.
மழையும் மறுபடி பெய்யும்..

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக