Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!
5 posters
Page 1 of 1
கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!
-
'நான் கல்லூரியில் படிக்கும்போதே, எழுத்தாளராக
மட்டுமின்றி சமூக ஆர்வலராக செயல்பட்ட
சாதத் ஹாசன் மான்ட்டோ பற்றி படித்துள்ளேன்.
அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த அரசியல், மக்களைப்
பற்றி எழுதியிருந்தவிதம் என்னை வெகுவாக கவர்ந்தது.
விலைமாதர்களைப் பற்றி அவர் எழுதியிருந்தது
ஆபாசமாக இருந்தது என்று பிரிட்டிஷ் அரசாங்கம்
மூன்று முறையும், பாகிஸ்தான் அரசு மூன்று முறையும்
அவர் மீது வழக்கு தொடர்ந்தது.
ஆனால், அவர் தன்னுடைய எழுத்துகள் இலக்கியதரமானவை
என்பதை நிரூபிக்க போராட வேண்டியதாயிற்று. அவரது
வாழ்க்கையை இன்றைய முகநூல் தலைமுறையினருக்கு
அர்ப்பணிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் 'மான்ட்டோ'
என்ற பெயரில் அவரது வரலாற்றை திரைப்படமாக
இயக்கியுள்ளேன்' என்று கூறும் நந்திதா தாஸ்,
இதுவரை 12-க்கும் மேற்பட்ட பிறமொழி படங்கள் உள்பட
40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பதோடு முதன்முதலாக 'பைராக்' (2008) என்ற படத்தை
இயக்கிய நந்திதா தாஸ், தற்போது திரைக்கு வந்துள்ள
'மான்ட்டோ'வை இயக்கியுள்ளார்.
இதில் மான்ட்டோவாக நவாசுதீன் சித்திக் என்பவரும்,
மான்ட்டோவின் மனைவி சபியாவாக ரசிகா தூகலும்
நடித்துள்ளனர்.
நடிகை, இயக்குநர், சமூக ஆர்வலர் என்று அனைத்து
துறையிலும் ஈடுபாடு காட்டி வரும் இவர், அண்மையில்
உடலுறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு
பிரசாரத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது இவர் சார்ந்துள்ள கவிதா சாமுவேல்
தலைமையிலான 'டார்க் இஸ் பியூட்டிபுல்' என்ற
அமைப்பைப் பற்றி என்ன சொல்கிறார்:
-
-----------------------
Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!
'டார்க் இஸ் பியூட்டி புல்' என்ற அமைப்பை நான்
தொடங்கியிருப்பதாக தவறான தகவல்கள் பரவியுள்ளது.
இந்த அமைப்புக்கு ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சியாக
உள்ளது.
சாதி, மதம், பாலினம் உள்பட கறுப்பு என்றால் பாரபட்சம்
காட்டுவது குறித்து நான் பல கருத்தரங்களில் எதிர்த்து
பேசியுள்ளேன். பேசி வருகிறேன். இது குறித்து மக்கள்
மனதை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளை வெயிலில் அலையாதே, கறுத்து விடுவாய்
என்று அச்சுறுத்துவதுண்டு. அழகு சாதன பொருள்கள்
விற்பனை மையத்திற்குள் நுழைந்தால் சிவப்பழகை
தரும் கிரீம்களை வாங்குங்கள் என்று விற்பனையாளர்
கூறுவதுண்டு.
சாதாரண தோற்றமுள்ள பெண்ணை அழகுள்ளவராக
மாற்றும் ஒப்பனை கலைஞரிடம் கூட நான் கூறுவதுண்டு.
என்னுடைய நிறத்தை மாற்ற வேண்டாம். நான் எப்படி
இருக்கிறேனோ அப்படியே நடிக்கிறேன்.
ஒப்பனை வேண்டாம் என்று கூறுவேன். என்னுடைய நிறம்
என்னவென்று மக்களுக்கேத் தெரியும்.
என்னைப் பொருத்தவரை என் தோலின் நிறம் கறுப்பாக
இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. வசதியாகவும்
இருக்கிறது. என்னைப் பற்றி எழுதும் போது கறுப்பு மற்றும்
அரையிருட்டு என்று எழுதுவார்கள்.
நான் அதை பொருட்படுத்துவதில்லை. என்னிடம் உள்ள
திறமைகளைப் பாராட்டாமல் என் நிறத்தை மட்டும் ஏன்
குறிப்பிட்டு எழுதுகிறார்கள் என்று நினைப்பதுண்டு.
நடிகை என்றால் சிவப்பாக இருக்க வேண்டும் என்பது
அவர்கள் கருத்தாக இருக்கலாம். அதற்காக கறுப்பாக
இருப்பவர்கள் மீது வெறுப்பை காட்டுவது அழகல்ல.
நீங்கள் அழகாக இல்லாவிட்டாலும் கறுப்பு நிறமாக
இருந்தால் உங்களை நீங்களே தாழ்வாக நினைக்காதீர்கள்
என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்
'டார்க் இஸ் பியூட்டிபுல்' அமைப்பின் நோக்கமாகும்.
கறுப்பு நிறமுடைய இளம் பெண்கள் தங்கள் நிறத்தை
கொண்டாட வேண்டும். அழகு என்பது தோலின் நிறத்தில்
இல்லை.
அகத்தின் அழகுதான் முக்கியம். மின்னும் கண்களும்,
ஒளிரும் கபடமற்ற சிரிப்பும்தான் உண்மையான அழகு
என்பேன்.
உங்கள் நிறத்தை பற்றி யாராவது விமர்சனம்
செய்தால் கவலைப் படாதீர்கள்.
உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள்
நன்னடத்தையும், செயலும்தான் முக்கியம். இயற்கையாக
இருங்கள். அதுவே அழகாகும்' என்கிறார் நந்திதா தாஸ்
-
-----------------------------
- பூர்ணிமா
நன்றி-தினமணி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!
மோனலிசாவே கருப்புத்தானே, நாங்கள் எதற்கு கருப்பாக இருப்பதற்கு வெட்கப்படுகிறோம். கருப்புதான் உண்மையான பேரழகு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1280581சிவா wrote:மோனலிசாவே கருப்புத்தானே, நாங்கள் எதற்கு கருப்பாக இருப்பதற்கு வெட்கப்படுகிறோம். கருப்புதான் உண்மையான பேரழகு!
அதானே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!
கருப்பே அழகு
காந்தலே ருசி
என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
ஆமாம் அதென்ன தலைப்பு "கறுப்பாக இருக்கிறோம் என்று கவலை .........."
அதென்ன கறுப்பு.........தமிழ் ஊடகங்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு
தமிழை கொலை செய்கிறார்கள்?
கறுப்பு என்றால் சினம்/ வெறுப்புஎன்று அர்த்தம்.
இது மாதிரி தமிழில் பதிவு செய்யும் ஊடகங்களின் மீது கறுப்பு
ஏற்படுகிறது .அது கறுப்பாக மாறுகிறது.
ரமணியன்
காந்தலே ருசி
என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
ஆமாம் அதென்ன தலைப்பு "கறுப்பாக இருக்கிறோம் என்று கவலை .........."
அதென்ன கறுப்பு.........தமிழ் ஊடகங்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு
தமிழை கொலை செய்கிறார்கள்?
கறுப்பு என்றால் சினம்/ வெறுப்புஎன்று அர்த்தம்.
இது மாதிரி தமிழில் பதிவு செய்யும் ஊடகங்களின் மீது கறுப்பு
ஏற்படுகிறது .அது கறுப்பாக மாறுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!
இருளின் நிறம் கறுப்பு. சிலர் இதைக் கருப்பு என்று
எழுதுகிறார்கள்.
கருப்பு என்பதற்குப் பஞ்சம், வறுமையான காலக்கட்டம்
என்பது பொருளாகும்.
இருண்ட நிறத்தைக் குறிப்பது கறுப்பு என்னும் சொல்.
நிறத்தைக் குறிப்பதற்குக் கருப்பு என்ற சொல்லைப்
பயன்படுத்தக் கூடாது. கருமை என்பது கறுப்பு
நிறத்தைக் குறிக்கின்ற பண்புப் பெயராகும்.
காரிருள் என்பது கறுத்த இரவைக் குறிக்கிறதே,
அப்படியானால் கருப்பு, கருமை என்பது சரிதானே
என்பர் சிலர்.
கருமை இருள் என்பதுதான் காரிருள் ஆகிறது.
எனவே, நிறத்தைக் குறிக்க கறுப்பு என்றே பயன்படுத்த
வேண்டும்.
-
மகுடேஸ்வரன்
தினமலர்
Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1280601T.N.Balasubramanian wrote:கருப்பே அழகு
காந்தலே ருசி
என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
ஆமாம் அதென்ன தலைப்பு "கறுப்பாக இருக்கிறோம் என்று கவலை .........."
அதென்ன கறுப்பு.........தமிழ் ஊடகங்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு
தமிழை கொலை செய்கிறார்கள்?
கறுப்பு என்றால் சினம்/ வெறுப்புஎன்று அர்த்தம்.
இது மாதிரி தமிழில் பதிவு செய்யும் ஊடகங்களின் மீது கறுப்பு
ஏற்படுகிறது .அது கறுப்பாக மாறுகிறது.
ரமணியன்
நல்லவேளை, எனது மறுமொழியில் சரியாக “கருப்பு” என்றே எழுதியுள்ளேன்!
இல்லையென்றால் என் மீதும் கறுப்பாகியிருப்பீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1280611சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1280601T.N.Balasubramanian wrote:கருப்பே அழகு
காந்தலே ருசி
என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
ஆமாம் அதென்ன தலைப்பு "கறுப்பாக இருக்கிறோம் என்று கவலை .........."
அதென்ன கறுப்பு.........தமிழ் ஊடகங்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு
தமிழை கொலை செய்கிறார்கள்?
கறுப்பு என்றால் சினம்/ வெறுப்புஎன்று அர்த்தம்.
இது மாதிரி தமிழில் பதிவு செய்யும் ஊடகங்களின் மீது கறுப்பு
ஏற்படுகிறது .அது கறுப்பாக மாறுகிறது.
ரமணியன்
நல்லவேளை, எனது மறுமொழியில் சரியாக “கருப்பு” என்றே எழுதியுள்ளேன்!
இல்லையென்றால் என் மீதும் கறுப்பாகியிருப்பீர்கள்!
ஹா ஹா ஹா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1280608ayyasamy ram wrote:
இருளின் நிறம் கறுப்பு. சிலர் இதைக் கருப்பு என்று
எழுதுகிறார்கள்.
கருப்பு என்பதற்குப் பஞ்சம், வறுமையான காலக்கட்டம்
என்பது பொருளாகும்.
இருண்ட நிறத்தைக் குறிப்பது கறுப்பு என்னும் சொல்.
நிறத்தைக் குறிப்பதற்குக் கருப்பு என்ற சொல்லைப்
பயன்படுத்தக் கூடாது. கருமை என்பது கறுப்பு
நிறத்தைக் குறிக்கின்ற பண்புப் பெயராகும்.
காரிருள் என்பது கறுத்த இரவைக் குறிக்கிறதே,
அப்படியானால் கருப்பு, கருமை என்பது சரிதானே
என்பர் சிலர்.
கருமை இருள் என்பதுதான் காரிருள் ஆகிறது.
எனவே, நிறத்தைக் குறிக்க கறுப்பு என்றே பயன்படுத்த
வேண்டும்.
-
மகுடேஸ்வரன்
தினமலர்
மகுடேஸ்வரன் தினமலரில் பதிவிட்ட செய்தி கண்டேன்.
கருப்பு என்பதற்குப் பஞ்சம், வறுமையான காலக்கட்டம்
என்பது பொருளாகும். ஏதாவது ஆதாரம் காட்டி இருக்கலாம் .
நான் கூறிய அர்த்தங்கள் தமிழ் விக்கிஷனரி மூலம் எடுக்கப்பட்டது.
அவர்கள் கருப்புக்கு பஞ்சம் என்றோ வறுமையான காலம் என்ற குறிப்பிடவில்லை.
தமிழ் lexicon பார்த்தால் விளக்கம் கிடைக்கும் என எண்ணுகிறேன்.
நம்முடைய Jagadeesan அய்யா அவர்களும் விளக்கம் தந்தால்
நன்றாக இருக்கும் .நன்றி ayyasami ram .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
» சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று "எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது'' நடிகை சங்கீதா-பாடகர் கிரிஷ் பேட்டி
» கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி
» நடிகை வசுந்தரா தாஸ்
» நாம் இன்னும் பல நூறு வருஷம் பின்னோக்கி தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது இந்த தீண்டாமை கொடுமைகளை காணும்போது.
» சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று "எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது'' நடிகை சங்கீதா-பாடகர் கிரிஷ் பேட்டி
» கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி
» நடிகை வசுந்தரா தாஸ்
» நாம் இன்னும் பல நூறு வருஷம் பின்னோக்கி தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது இந்த தீண்டாமை கொடுமைகளை காணும்போது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|