ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை…

3 posters

Go down

 நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை… Empty நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை…

Post by ayyasamy ram Tue 2 Oct 2018 - 8:51


முதியோர் நலன் குறித்தும், அவர்கள் அவமதிக்கப்படும்
விதம் குறித்தும் மாணவர்களிடையே உரையாற்றிய
நீதியரசர் ராஜேஸ்வரன் ஒரு குட்டிக் கதை சொன்னார்.

ஒரு வீட்டில் முதியவர் ஒருவர், தன் மகனது குடும்பத்துடன்
வசித்து வந்தார். அங்கு மகன், மருமகள் இருவரும்
வேலைக்குச் செல்லக் கூடியவர்கள்.

தாத்தாவுக்கு மூன்று பேரக் குழந்தைகள் இருந்தனர்.
தினமும் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் மருமகள்,
மாமானாருக்கு சாப்பாட்டைப் பரிமாற நேரமின்றி
பீங்கான் கிண்ணங்களில் போட்டு மூடி வைத்து விட்டுச்
செல்வது வழக்கம்.

வயோதிகத்தால் ஓரிருமுறை தாத்தா, தான் உணவுண்ணும்
பீங்கான் தட்டுகளை கை தவறி கீழே போட்டு உடைத்து
விடுகிறார். மாலை வீடு திரும்பும் மகன், மனைவி வந்தால்
என்ன சொல்வாளோ? என்ற சஞ்சலத்தில்;

அப்பா, வயதானால் உணவு இருக்கும் தட்டைக் கூடவா
உங்களால் சரியாகப் பிடித்து உண்ண முடியாமல் போய்
விடும்? இனிமேல் உங்களுக்குப் பீங்கான் தட்டு வேண்டாம்,
இந்தாருங்கள் இனிமேல் இந்த மரக்கோப்பையில்
உண்ணுங்கள் என்று புதிதாக ஒரு மரக்கோப்பையை
வாங்கி வந்து கொடுத்து விட்டுப் போய் விடுகிறார்.

மகனது உதாசீனத்தை தாங்க முடியாத தாத்தா அதற்குப்
பின்பு அந்தக் குடும்பத்தில் எவரிடமும் பேசக் கூடப் பயந்து
போய்… வாய் மூடி மெளனியாகி தனியறைக்குள்
தஞ்சமடைந்து விடுகிறார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்
தாத்தாவின் பேரன்கள். சில நாட்களுக்குப் பின், தந்தை
அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழையும் போது,
அவரது கடைக்குட்டிப் பையன் வாசலில் அமர்ந்து
ஒரு மரக்கோப்பையை செதுக்கிக் கொண்டிருக்கும்
காட்சியைக் காண்கிறார்.

வீட்டுப் பாடம் செய்யும் நேரத்தில் இந்தக் குழந்தைக்கு
எதற்கு இந்த வீண் வேலை? என்று யோசித்துக் கொண்டே
சிறுவனை அழைத்து; இப்போது ஏன் இந்த
மரக்கோப்பையை செதுக்கிக் கொண்டிருக்கிறாய்?
என்று கேட்கிறார்.

அதற்கு அந்தப் பையன் வயதான பிறகு தேவைப்படும்
அப்பா என்கிறான். தந்தையோ அவன் தனது தாத்தாவைப்
பற்றித் தான் கூறுகிறான் என்ற நினைப்பில்,
தாத்தாவுக்குத் தான் ஏற்கனவே ஒரு மரக்கோப்பை
இருக்கிறதே, பிறகு இது வேறு எதற்கு என்கிறார்.

அப்போது அப்பாவின் முகத்தை ஏறிட்டு நோக்கும்
அந்தச் சிறுவன்…. நான் இதை தாத்தாவிற்காக
செய்யவில்லை… உங்களுக்காகத் தான் செய்து
கொண்டிருக்கிறேன். நீங்களும் நாளை தாத்தா போல
ஆகும் போது உங்களுக்கும் இது தேவைப்படுமில்லையா?
என்கிறான்.

மகனின் பதிலில் விக்கித்துப் போன தந்தை,
பேச வகையின்றி திகைத்து நிற்கிறார்.
-
-----------------------------------

படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை… Empty Re: நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை…

Post by SK Thu 4 Oct 2018 - 23:46

நல்ல கதை
 நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை… 3838410834  நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை… 3838410834  நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை… 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை… Empty Re: நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை…

Post by சிவா Fri 5 Oct 2018 - 2:57

 நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை… 3838410834 சூப்பருங்க


 நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை… Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை… Empty Re: நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum