புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_c10மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_m10மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_c10மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_m10மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_c10 
3 Posts - 7%
heezulia
மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_c10மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_m10மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_c10மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_m10மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_c10மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_m10மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 02, 2018 8:35 am

“மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப்
போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும்
சுதந்திரப் போராட்ட வீரர்.

‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி
போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப்
பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது.

இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை”
என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை”
என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை
உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர்.

இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து
அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக
இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும்
வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான
அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம்
முழுவதும் கொண்டாடுகிறோம். த

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே
அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின்
வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக்
காண்போம்.

பிறப்பு:

--------
அக்டோபர் 02, 1869

இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம்,
-------------
இந்தியா

பணி:
-------------

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர்

--------

இறப்பு: ஜனவரி 30, 1948
-------------------------------------------




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 02, 2018 8:36 am


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள்,
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்”
என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும்
மகனாகப் பிறந்தார்.

இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய
தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக
பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்
போதே நேர்மையான மாணவனாக விளங்கினார்.
தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம்
செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள்,
பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர்
கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.

தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து,
பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம்
வழக்கறிஞராகப் பணியாற்றினார்

இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்


பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய
மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய
நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய
பயணம் ஆனார்.

அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின்
மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை
ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது.

குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள
நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது
எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள்
பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில்
பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற
காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும்,
அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின
மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய
மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம்
ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி,
அதற்கு அவரே பொறுப்பாளரானார்.

பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில்,
அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து
கொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார்.
இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில்
வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட
மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும்,
கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர்
போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட
காரணமாக அமைந்தது.
-
----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 02, 2018 8:42 am


இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு


இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல
1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய
காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான
விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை
ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின்
தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.

ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு
குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில்
இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை
ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி
ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922 ஆம் ஆண்டு
தொடங்கினார்.

மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது,
வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது,
பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும்
பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை
இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது.

இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே
இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல்,
ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய
தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக
உருவெடுத்தார்.

பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா
என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம்
கைவிடப்பட்டது.

காந்தியின் தண்டி யாத்திரை


1930 ஆம்
ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது.

ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய
நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’
எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு
செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார்
240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடை
பயணம் மேற்கொண்டார்.

இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை
வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி
ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார்.

இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது
மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி
உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில
அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை
நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று
கொண்டனர்.

‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய
விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக
அமைந்தது என கூறலாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 02, 2018 8:43 am


வெள்ளையனே வெளியேறு இயக்கம்


1942 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக
‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே
வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார்.

காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும்
கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின்
இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட்
15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது.

ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை
பெரிதும் பாதித்தது.

இறப்பு


அகிம்சை என்னும் வார்த்தைக்கு
அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம்
ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம்
அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில்
நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்
கொல்லப்பட்டார்.

ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும்
அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம்,
வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம்,
வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப்
போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி,
துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்க…
ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர்.

பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும்
காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு
மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட
அழியா சுவடுகள் ஆகும்.
-
------------------------
வாட்ஸ் அப் பகிர்வு


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக