புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_c10இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_m10இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_c10இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_m10இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_c10 
3 Posts - 7%
heezulia
இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_c10இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_m10இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_c10இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_m10இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_c10இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_m10இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84173
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 3:17 pm

இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? Sivajijpg
-

நாம் தேர்ந்துகொள்ளும் துறையில் புகழோடு விளங்க
வேண்டும் என்பதே இக்குறளின் உட்பொருள். தம்பி கணேசன்
இக்குறளுக்கு முழுவதும் தகுதி பெற்றவர். இன்று புகழ்
குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய்
திகழ்கிறார்.

ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்னரே, இதற்கான அடிப்படைத்
திறன்களை அவர் பெற்றிருந்தார் என்பதை நான் அறிந்தவன்.

அந்நாட்களில் ‘கவியின் கனவு’ நாடகத்தைப் பலரும்
பார்த்திருப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். அந்த
நாடகத்தில் தம்பி கணேசன் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரம்
அனுதாபமோ பாராட்டோ பெறத்தக்கது அல்ல.

மேலும், இப்போதுபோல அப்போது அவர் விளம்பரம்
பெற்றிருக்கவும் இல்லை. ஆயினும், நாடகத்தை பார்ப்போர்
அவரை மறக்க முடியாதபடி தனது கதாபாத்திரத்துக்கான
நடிப்பால் மக்கள் மனதில் தன்னை நிலைநிறுத்திகொண்டு
விடுவார் அவர்.

இயற்கையை மீறிய இயற்கையான நடிப்பு

‘மனோகரா’ நாடகத்தை எடுத்துக்கொள்வோம். பத்மாவதி
வேடம் ஏற்று, தாய்மை உணர்வையும் பாசத்தையும்
நெஞ்சுருகப் பொழிந்து, வீறுகொண்டெழும் மகனை தடுத்து,
“ ஏந்தியவாளை இறக்கு; மறுப்பாய் என்றால், இதே வாளால்
உன்னைப் பெற்றெடுத்த என்னை முதலில் வெட்டி வீழ்த்தி
விட்டு உன் விருப்பம்போல் செய் மகனே..” என்று அவர்
கூறுகின்ற கட்டம், ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாதது.

ஆண் ஒரு ஆணாக நடிப்பது இயல்பு. பத்து அல்லது
பன்னிரண்டு வயதில் நாடக ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை
உள்ளத்தில் தேக்கி, பெண் என நம்பும்படியாக தோற்றத்துக்காக
அலங்காரம் செய்து, பூச்சூடி, சிறுவன் ஒருவனை, சிறுமி போலத்
தோன்றச் செய்வது நடிப்பைக் கற்றுக்கொள்ள உதவி செய்யும்
வழிமுறைகளில் ஒன்று. அதோடு வயதுக்கு உரிய
இளங் குரலுக்கூடச் சிறுவர்களுக்கு ஒத்துழைக்கும்.

ஆனால், வாலிப வயதை அடைந்த ஓர் ஆண், பெண்ணாக
நடிப்பது அத்தனை சுலபமல்ல.

இனிமையான இளங் குரல், கடினமாக மாறிவிட்ட பருவத்தில்
இயற்கைக்கே எதிராக, இயற்கையோடு போராடி, இயற்கையாக
நடித்துப் புகழ்பெற்றார் தம்பி கணேசன் என்றால் அது மிகப்
பெரிய சாதனையே அல்லவா? அன்று நாடக மேடையில்
எல்லாவிதமான வேடங்களிலும் தனிச்சிறப்போடு நடித்து,
ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கும் நாடகக் கலைக்கும்
தனது நடிப்பால் பொலிவூட்டியவர். மேடையில் சண்டைக்
காட்சிகளிலும் துணிந்து நடித்தவர்.

முரண்களிலும் மிளிர்ந்தார்

நல்ல குணங்கள் கொண்டக் கதாபாத்திரங்களில் நடித்து,
மக்கள் மனதில் இடம்பெறுவது எளிது. ஒரு கதாபாத்திரம்
மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரையும்
ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், மக்களால் வெறுக்கப்படும் கதாபாத்திரத்தைத்
தாங்கி, மக்கள் இதயத்தில் இடம்பெறுவது சாதாரண
விஷயமல்ல. ‘திரும்பிப் பார்’ படத்தில் முழுக்க முழுக்க
வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றார். பல பெண்களை ஏமாற்றும்
கதாபாத்திரம் அது. ஆனால், படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும்
காண்போரை தன்பால் ஈர்த்துக்கொள்ளும் அளவுக்கு,
‘ஆங்கிலப் பாணி’ நடிப்பு என்று உயர்த்திச் சொல்லப்படும்
தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார்.

தம்பி கணேசன் நாடகத்தில் நடித்தபோது அந்த நடிப்புக்குப்
பாராட்டு குவிந்தது. சினிமாவில் நடிக்கும் முன்பு வேறு
நடிகர்களுக்குக் அவர் குரல் கொடுத்தபோது அந்தக் குரலுக்குப்
பெருமை. பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது
வெற்றிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தன.

எந்த நிலையிலும் தான் ஏற்றுக்கொண்ட கலைத் தொழிலில்
தனக்கென்று ஒரு இடத்தை பெறக்கூடிய தகுதி அவரிடம்
வேரூன்றியிருந்தது.

எதற்காக முணுமுணுப்பு?

அமெரிக்க அரசாங்கத்தின் விருந்தினராக அழைக்கப்பட்டு,
அந்த நாட்டுக்குச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி
கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி
வரவேற்பும் பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்?”
எனக் கேள்வி கேட்டவர்களும் சிலர் இருக்கிறார்கள் என்பதை
அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்க
முடியவில்லை.

உலக வல்லரசுகளுக்கிடையே முக்கியமானது எனக்
குறிப்பிடத்தக்க தகுதியைப் பெற்றுள்ளது அமெரிக்க
அரசாங்கம்.

அப்படிப்பட்ட அமெரிக்கா, ஒரு தமிழ் மகனை, அதிலும்
நாடக மேடையிலிருந்து சினிமா நடிப்புக் கலையில் சிறந்து
நிற்கும் கலைஞனை அரசாங்க விருந்தினர் என்ற
அந்தஸ்தோடு அழைத்துப் பெருமைப்படுத்தியது இதுவரை
எந்தத் தமிழ் நடிகனுக்கும் கிடைக்காத பெரும் பேறு.
அதனைப் பெற்ற தம்பி கணேசனை வரவேற்காமல் வேறு
யாரை வரவேற்பது?

அவரைப் பாராட்டாமல் வேறு எவரைப் பாராட்டுவது?
அவருக்குப் புகழ்மாலை சூட்டாமல் வேறு யாருக்குச்
சூட்டுவது?

மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்று அடிப்படைகளின்
மீது தோன்றி, அவற்றைச் சார்ந்ததாக விளங்குவதே நடிப்பு
எனும் உயரிய கலை. நாடகத்திலோ, சினிமாவிலோ
நடிக்கிற ஒருவர் தமிழைத் தாய்மொழியாகக்
கொண்டிருப்பாரானால், அவருக்கு வருகிற பெருமை,
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற அத்தனை
பேருக்கும் வருகிற பெருமையாகும்.

அவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்
என்னும்போது, ‘தமிழர்’ என்ற இனத்தைச்
சார்ந்தவராகிறார். தமிழ் இனத்தைச் சேர்ந்த அவருக்குக்
கிடைக்கக்கூடிய பெருமைகள் யாவும் தமிழினத்துக்கு
அதாவது, நமக்கு வழிகாட்டியாக விளங்கிய
நம் முன்னோருக்கும் இன்று நம்முடன் இருந்து வாழ்வோருக்கும்,
இக்கலையை இனி எதிர்காலத்தில் பின்பற்றப்போகும்
புதிய தலைமுறைக்கும் உரிய பெருமை அல்லவா!

தமிழ்ப் பண்பாடு உலகிலேயே மிகச் சிறந்த பண்பாடு
என ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தகைய பண்பாட்டைத்
தாய்மொழியாம் தமிழில் எடுத்துச்சொல்லிய
கலைத்திறனுக்காக, உலக அரங்கத்தால் பாராட்டப்பட்டால்
அது தமிழ்மொழிக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ்ப்
பண்பாட்டுக்குக் கிடைத்த பாராட்டே அல்லவா?

இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று
பாராட்டப்படும் சிவாஜி கணேசன் யார் என்ற கேள்வி
பிறக்கும்போது, ‘அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய
தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப் பண்பாடு!”
என்ற பதில்தான் கிடைக்கும்.

அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக
எல்லோரும் பாராட்டுவதற்கு! தம்பி கணேசனுடைய புகழ்
இன்னும் மேலோங்கட்டும்!
-
---------------------------------
- ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் | படங்கள் உதவி: ஞானம்
தி இந்து



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Oct 01, 2018 4:03 pm

ஆம் இன்று நடிகர் திலகம் பிறந்த நாள்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 01, 2018 4:40 pm

இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா? 3838410834 திரையுலகம் இருக்கும் வரை அன்னாரின் புகழ் நீடித்திருக்கும்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 01, 2018 5:07 pm

பிறவி கலைஞன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக