ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை

5 posters

Go down

 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Empty கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை

Post by ayyasamy ram Sat Sep 29, 2018 5:37 pm


நாகை:
திருக்குவளை அருகே கீழை ஈசனூர் பகுதியைச் சேர்ந்தவர்
சேகர். இவர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக
பணியாற்றி வந்தார்.

இவருக்கு குடல் இறக்க நோய் இருந்ததால், நாகையில்
உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு
அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவருக்கு ரத்தக்
கசிவு இருந்ததால், 8ம் தேதி தஞ்சையில் உள்ள மற்றொரு
தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு ரூ.2.50 லட்சம் கட்டும்படி மருத்துவமனை நிர்வாகம்
கூறியுள்ளது. பணம் கட்டியதும் தொடர்ந்து சிகிச்சை
அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்வதாகவும்
மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் அவரது உடல்
நிலையில் முன்னேற்றம் இல்லாததால்
அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாக
உறவினர்கள் கூறியுள்ளனர்.

அப்போது, மருத்துவமனை நிர்வாகம் சேகரின்
சிகிச்சைக்காக ரூ.5 லட்சத்தைக் கட்டுமாறு கோரியுள்ளது.
தற்போது பணமில்லை, இருந்த ரூ.50 ஆயிரத்தைக்
கட்டிவிட்டு மிச்சப்பணத்தை பிறகு தருகிறோம் என்று
எழுதிக் கொடுத்துவிட்டு சேகரை தஞ்சை மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர்
உறவினர்கள்.

அங்கு சேகரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,
அவர் இறந்து 3 நாட்கள் ஆகிவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த
குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகே அவர் எப்போது
உயிரிழந்தார் என்பது சரியாக தெரியவரும் என்பதால்
அதன்பிறகு மருத்துவமனை மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி
ரூ.3 லட்சம் வரை பிடுங்கியிருப்பது, விஜயகாந்த் நடித்த
ரமணா படத்தையே நினைவுபடுத்துகிறது.
-
-----------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Empty Re: கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை

Post by T.N.Balasubramanian Sat Sep 29, 2018 7:03 pm

நடைமுறையில் சிறிய பெரிய கார்பொரேட் ஆசுபத்திரிகளில் நடக்கும்
விஷயம்தான். டாக்டர்களை தெய்வமாக நினைத்த காலம் போயி
அவர்களை வியாபாரிகளாக பார்க்கும் காலம்.
முன்பெல்லாம் படித்து, நல்ல மார்க்கு வாங்கியவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது.
இப்போதெல்லாம் 50 /60 லக்ஷம் பணம் கொடுத்து இடம் பிடிக்கிறார்கள்.
போட்ட முதலை நம்மிடம் இருந்து கறக்கிறார்கள்.
வெட்கக்கேடு.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Empty Re: கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை

Post by T.N.Balasubramanian Sat Sep 29, 2018 7:19 pm

எனக்கு ஏற்கனவே வந்த செய்தி.வாட்சப் மரபிற்கேற்ப இன்றும் வந்தது.
ஆனால் சரியான சமயத்தில் வந்துள்ளது ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள.
As received
An Excellent write up by XXX narrating the way Apollo Hospitals treated his dad
அப்போல்லோவா??? அப்பால போ!
நான்கு நாட்களாக motion போகாமல் அவதிப்பட்டு, மேலும் அவதிப்பட [அதுவும் லக்ஷக்கணக்கில் குடுத்து] 73 வயதான ஒருவர் அப்போல்லோ ஹாஸ்பிடல் போனார். எனிமா குடுத்தும் முழுவதும் சுத்தம் செய்ய முடியாமல் போனதால், வாய் வழியாக டியூப் போட்டு உள்ளே சுத்தப்படுத்துவதற்காக ஒரே ஒரு நாள் அட்மிட் ஆனார். அவருக்கு பத்து வருஷமாக ஹைப்போநட்ரேமியா. அதாவது ஸோடியம் [உப்பு] குறைவதால் மிகவும் வீக்காகி, நினைவு தப்பும் குறை. அந்த சமயத்திலெல்லாம் நாட்ரைஸ் என்ற மாத்திரையை சாப்பிட்டதும் சரியாகிவிடும். அப்போலோவில் எனிமா குடுக்கும் படலத்தில் அவருடைய உப்பு சத்து குறைந்ததால், மூச்சுவிட மிகவும் ஸ்ரமப்பட்டார். அவருடைய மனைவி டாக்டரிடம், ஸோடியம் ஏற்றினால் சரியாகிவிடுவார் என்று சொன்னதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், ICU வில் அட்மிட் பண்ணி, ஒருநாளில்லை இரண்டு நாளில்லை கிட்டத்தட்ட 45 நாட்கள் [ஒரு நாளைக்கு சுமார் Rs 30000 த்திலிருந்து 50000/- வரை ] அதிலேயும் வென்டிலேட்டரில் சுமார் 20 நாட்கள், அதிலும் CCU வில் கொஞ்ச நாட்கள் என்று அவரையும், குடும்பத்தாரையும் நொந்து நூலாக்கி விட்டார்கள் அப்போல்லோ அரக்கர்கள். தினமும் பேஷண்ட்டுக்கு போடவேண்டிய ஊசியைக் கூட, அவர்கள் கேட்கும் பணத்தை கட்டிய பின் தான் போடும் அவலம் !
அவசியமே இல்லாமல், ட்ரக்காஸ்ட்டமி என்ற ஆபரேஷனை தொண்டையில் பண்ணி, ஒரு குழாயைச் சொருகி விட்டு, "இனி இவருக்கு குரல் வரவே வராது; speech theraphy குடுத்தால் ஒரு வேளை குரலும், பேச்சும் வரலாம்" என்று குடும்பத்தை பயமுறுத்தி சில லக்ஷங்களைக் கறந்தார்கள். கடைசியாக தொண்டையில் சொருகி இருந்த டியூபை எடுத்தாலும் speech theraphy குடுக்காமல் அவரால் பேச முடியாது என்று சொல்லி, கையில் விதவிதமான டியூபுகளோடு வந்து, அவருக்கு ஏற்கனவே போட்டிருந்த டியூபை தொண்டையிலிருந்து எடுத்ததும், அவர் பேச ஆரம்பித்துவிட்டார்! அத்தனை நாள் இந்த டியூபால்தான் அவரால் பேச முடியவில்லை என்று அந்த அறிவாளிகளுக்கு யார் புரிய வைப்பது? எல்லா "logist" டாக்டர்களும் அவரை ICUவில் வந்து பார்த்து, கிட்டத்தட்ட 12 ஸ்கேன்கள் [ஒவ்வொன்றும் Rs 12500/-] இதில் ஒரு ஸ்கேன் எடுக்க மற்றொரு அப்போல்லோவுக்குப் போக ஆகும் ஆம்புலன்ஸ் இத்யாதி [Rs 3000+] இவர்கள் தலையில். பல வகை டெஸ்ட்டுகள், கைகளிலும் கால்களிலும் மாத்தி மாத்தி ஊசியால் குத்தி, அவர் உடம்பை ரணகளமாக்கி, கடைசியில் ஹார்ட், கிட்னி, lungs, மற்ற எல்லாம் "Normal" என்று முத்திரை குத்தினார்கள். ஒவ்வொரு நாளும், "அவருக்கு எல்லாம் நார்மல்" என்பதை லக்ஷக்கணக்கில் செலவழித்து திரும்பத் திரும்ப எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட் மூலம் சொல்ல ICU வுக்கு "விசிட்" செய்யும் 10-12 "....logist" களுக்கு விஸிடிங் fees குடுத்தே ஒழிந்து போனார்கள்.
அவருடைய மனைவி ஸோடியம் குறைவுதான் காரணம் என்று அத்தனை டாக்டர்களிடமும், நர்ஸ்ஸுகளிடமும் முட்டிக் கொண்டதை "எல்லாம் தெரிந்த மேதாவிகள்" அலட்சியம் பண்ணினார்கள். ஒருநாள் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் மிகுந்த ஸ்ரமம் உண்டானதால், அவருடைய மகன் ஒரு டாக்டருக்கு போன் செய்து விவரத்தை சொல்லி, உதவி கேட்டதிற்கு அந்த டாக்டரின் பொறுப்பான பதில், "உனக்கு யார் இந்த நம்பரைக் குடுத்தது? மூளை இருக்கா உனக்கு? முதல்ல போனை வை!.." அந்த டாக்டர் நீடூழி வாழ்க!
சுமார் ஒண்ணரை மாதங்கள் அப்போலோவில் படுத்திய பாட்டில், அவர் மனைவி அவரை டிஸ்சார்ஜ் செய்து விடுங்கள் என்று சொன்னதும், வீட்டில் வாட்டர் பெட், ஆக்ஸிஜன் இத்யாதிகளுக்கு ஏற்பாடு பண்ணிக்கொண்டபின் சொல்லுங்கள், டிஸ்சார்ஜ் செய்து விடுகிறோம் என்று பெருங்கருணை கொண்டு சொன்னதும், மற்றொரு நண்பர் சொன்னதன் பேரில், மாம்பலத்தில் உள்ள Public Health Centre க்கு அவரை கொண்டுபோய் அட்மிட் செய்தார்கள். அப்போலோவின் ஆம்புலன்ஸில் [தனியாக Rs 3000+] Public Health Centre வந்தார். எப்படி? மூக்கு, வாய்,தொண்டை, என்று உடல் முழுதும் டியூப் மயமாக அட்மிட் ஆனார்.
PHC யில் இருந்த டாக்டர் பாஸ்கர் உண்மையிலேயே அவரை மிக அழகாகக் கையாண்டார். அப்போல்லோவின் "எல்லாம் நார்மல்" என்று கூறும் ஏகப்பட்ட ஸ்கேன், டெஸ்ட் ரிப்போர்ட்டுகளை ஒரு நோட்டம் விட்டுவிட்டு, "எதுக்கு இத்தனை டியூப்? அவருக்கு ஒன்றுமே இல்லையே! என்று கூறி, மூக்கில் உள்ள டியூபைத் தவிர அத்தனையையும் எடுத்தார். ஒண்ணரை மாதங்களுக்குப் பின் நன்றாகத் தூங்கினார் அந்த முதியவர். அவர் மனைவியுந்தான்! PHC யில் நல்ல திறமை வாய்ந்த டாக்டர்கள், அன்பான, அனுபவசாலியான,ஆத்மார்த்தமாக சேவை மனப்பான்மையோடு பணி புரியும் திருமதி சாந்தா போன்ற நர்ஸ்களுடைய கவனிப்பால், பத்தே நாட்களில் எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டார்.
மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டர் அப்போலோ மாதிரியோ, மற்ற பெரிய ஹாஸ்பிடல்ஸ் மாதிரி hi-fiயாக இல்லாமல் இருக்கலாம். அப்போல்லோ மாதிரி "பெரிய" multi speciality ஹாஸ்பிடல் எல்லாம் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று தெரியாமல் தவிக்கும் பெரிய மனிதர்களுக்கென்றே இருக்கட்டும். நடுத்தர வர்கத்துக்கும், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கும், உண்மையில் உழைத்து உழைத்து சம்பாதிப்பவர்களுக்கும், பப்ளிக் ஹெல்த் சென்டர் மாதிரி நோயாளிகளின் மனநிலையை சரிவரப் புரிந்து கொள்ளும் பக்குவம் வாய்ந்த, காசு பிடுங்காத, தைரியமும் நம்பிக்கையும் ஊட்டக்கூடிய வகையில் பணிபுரியும் டாக்டர்களும், நர்ஸ்களும் நிச்சயம் இருக்கிறார்கள். பத்து நாட்கள் அங்கு ஆனா மொத்த செலவு Rs 12000/- only!!!
நன்றாக நடந்து வந்து ஆஸ்பத்ரிக்குள் வந்தவரை, ஒண்ணரை மாதம் கழித்து கிழிந்த நாராக ஆம்புலன்ஸில் PHC க்கு அனுப்பி வைத்த பெருமை அப்போலோவுக்கே! இதற்கு அவர்களுக்கு அழுத அநியாய fees சுமார் Rs 12 லக்ஷம்!!
அப்போல்லோவில் கடைசியாகக் குடுத்த ரிப்போர்ட்டின் highlight என்னவென்றால்....."நோயாளிக்கு ஹைப்போநட்ரிமியா..உப்பின் அளவு கவனிக்கப்பட்டது. குடும்பத்தார் வேண்டுகோளுக்கிணங்க அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்..!!!"
இதைத்தானேய்யா நான் மொதல்லேர்ந்தே சொன்னேன்! அவர் குடும்பத்தார் அங்கலாய்ப்பு அப்போல்லோ காதில் விழுந்தாலும், நோ யூஸ்!
கஷ்டப்பட்டு சம்பாதித்து, சிறுக சிறுக சேர்த்ததை, எந்தவித பிரயோஜனமும் இல்லாமல், லக்ஷலக்ஷமாய் அப்போலோவில் கொண்டுபோய்க் கொட்டுவதை விட, வசதிக் குறைவான PHC மாதிரி ஹாஸ்பிடல்களுக்கு மனமாரக் குடுத்து வளமாக வாழ்வோம்.
தயவு செய்து இதை படிப்பவர்கள் இனியாவது சுதாரித்துக் கொள்ளுங்கள்.

நன்றி வாட்சப்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Empty Re: கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை

Post by SK Sat Sep 29, 2018 8:00 pm

தனியாரோ அல்லது அரசோ மருத்துவமும் கல்வியும் இலவசம் என்று சட்டம் வரவேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Empty Re: கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை

Post by சிவனாசான் Sun Sep 30, 2018 7:16 am

அய்யா அவர்கள் சுய சிந்தனைக்கு வேலை தராமல் அயல் பதிவை தேடி தேடியே பதிகின்றார் . பிறர் அறியசெய்கிறார் நல்லது....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Empty Re: கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Sep 30, 2018 1:20 pm

SK wrote:தனியாரோ அல்லது அரசோ மருத்துவமும் கல்வியும் இலவசம் என்று சட்டம் வரவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1279831
நோயை உருவாக்கி அதற்கு சிகிச்சை என்று
பணம் பறிக்கும் கும்பல் இருக்கும் வரை இது தொடரும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Empty Re: கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum