புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
59 Posts - 58%
heezulia
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
54 Posts - 58%
heezulia
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா அருள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 25 Sep 2018 - 10:19

மகா பெரியவா அருள் !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

 ஒரு சமயம் மடத்துல இருக்கறவாளோட பேசிண்டு இருக்கறச்சே, "இங்கே காஞ்சிபுரத்துல ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் பக்கத்துல சிவாவிஷ்ணு ஆலயம் ஒண்ணு இருந்ததாமே. உங்கள்ள யாராவது கேள்விப்பட்டிருக்கேளா?

எங்கே இருந்தது, இப்போ எப்படி இருக்குனு யாருக்காவது தெரியுமா? அப்படின்னு கேட்டார் பெரியவா.எல்லாருமே தெரியாதுன்னு சொன்னதும் பரமாசார்யா ஒரு தீர்மானத்துக்கு வந்தார். மறுநாள் காலம்பறவே புறப்பட்டு குறிப்புகள்ல இருக்கிற அந்த இடத்தைத் தேடிண்டுபோய்பார்க்க முடிவு பண்ணினார்.

ஆச்சு, அடுத்தநாள் காலையில் எழுந்ததும் நித்ய அனுஷ்டானங்களையெல்லாம் முடிதுக்கொண்டு பெரியவா புறப்பட்டார்.  பெரியவாளோடு சுமார் முப்பதுபேர் கிளம்பினா. மடத்துக்குறிப்புகள்ல இருந்த இடத்தைக் கண்டுபிடிச்சு கோயிலை எதிர்பார்த்துப்போய் நின்னவாளுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.ஏன்னா, ஆண்டவன் குடியிருக்கற கோயில் இருக்கும்னு நினைச்சுப் போன இடத்துல ஆட்கள் குடி இருக்கிற வீடுதான்இருந்தது!

பெரியவா அங்கே வந்திருக்காங்கற விஷயம்தெரிஞ்சதும் தெருவே அங்கே கூடிடுத்து."அந்த வீட்டுக்கு சொந்தக்காரா யாருன்னு விசாரிங்கோ?" தனக்குப் பக்கத்துல நின்னவா கிட்டே சொன்னார் பெரியவா.

கொஞ்சநாழி கழிச்சு,ஒரு நடுத்தர வயதுக்காரர் பவ்யமாக பெரியவாள் முன் நின்றார். என்ன விஷயம்னு கேட்டார்.
"இந்த வீட்டை மடத்துக்குத் தரியா?" நெத்தியில அடிச்சாப்புல ரத்ன சுருக்கமா கேட்டார் ஆசார்யா. பதறிப்போனார் வீட்டின் சொந்தக்காரர்.  இப்படி ஒரு கோரிக்கை வரும்னு அவர் மட்டுமல்ல, யாருமே நினைக்கவில்லை. அதனால் அனைவருக்குமே திகைத்துப்போய் விட்டார்கள்.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்த அந்த நபர், "பெரியவா மன்னிச்சுக்கணும். இது எனக்கு ப்ராசீனமா வந்த வீடு எனக்குன்னு இருக்கிறது இந்த சொத்து மட்டும்தான் அதானால...!" தயங்கித் தயங்கி இழுத்தார்.

அங்குள்ள ஜனங்களுக்கு ஒரே வியப்பு! "பெரியவா கேட்டு ஒருத்தர் இல்லைன்னு சொல்றதா என்ன மனுஷன் இவர்? இப்படி ஒரு பாக்கியம் நமக்கு கிடைக்காதா ?  நம்மகிட்டே அவர் ஏதவது கேட்க மாட்டாரான்னு ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருக்கும்போது, தானா வலிய வருகின்ற நல்ல வாய்ப்ப இவர் இப்படி நழுவ விடுகின்றாரே என்றெல்லாம் ஆளாளுக்கெல்லாம் முணுமுணுத்தார்கள்.  
ஆனா, பெரியவா கொஞ்சம்கூட முகம் மாறலை.

"சரி...அதனால ஒண்ணும் இல்லை. உனக்கு எப்பவாவது தோணித்துன்னா, அப்போ குடுத்தா போதும்!" அப்படின்னு சொல்லிட்டு மளமளன்னு நடந்து மடத்துக்கு வந்துட்டார்.

இந்த சம்பவம் நடந்து கொஞ்சநாளைக்கு அப்புறம், அந்த வீட்டோட சொந்தக்காரர் பெரியவாளை தரிசனம் பண்ண மடத்துக்கு வந்தார். "பெரியவா, என்னோட பிள்ளைக்கு ஒடம்புக்கு முடியலை. வைத்தியத்துக்கு நிறைய செலவாகும்கறா. அதனால வீட்டை வித்துடலாம்னு தோணித்து.  ஆனாலும் நீங்க கேட்டதால உங்களுக்கே தந்துட்டு, ஊரோட போய் இருந்துடலாம். அங்கேயே ஏதாவது வைத்தியம் பார்த்துக்கலாம்னு தீர்மானிச்சிருக்கேன்அதான்... தயக்கமாகச் சொன்னார்.

"ஒம் புள்ளையாண்டானுக்குஒண்ணும்ஆகாதுஅவன்தீர்ர்க்காயுசா,ஆரோக்யமாஇருப்பான். அவனுக்குவைத்தியத்துக்கு நானே டாக்டர்கிட்டே சொல்றேன். அதோடஉன்னோட கிருஹத்துக்கு பர்த்தியா (நீ தரும் வீட்டுக்கு பதிலா) உனக்கு ஒரு வீட்டைக் கட்டித்தரச் சொல்றேன்.சொன்ன ஆசார்யா, ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார். அதுக்கப்புறம் பத்துப் பதினைஞ்சு நாள்ல அந்த வீடு மடத்துக்கு வந்தது. 

அந்த நபரோட புள்ளைக்கும் மருத்துவ சிகிச்சைல பூரண குணமாயிடுத்து.  மடத்து சார்பாவே ஒரு கிரஹத்தைக்கட்டி அதை அந்த நபருக்குக் கிடைக்கப் பண்ணினார் பெரியவா.


தொடரும்..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 25 Sep 2018 - 10:20

அதுக்கப்புறம் ஒரு நாள். பிரபலமான ஸ்தபதி ஒருத்தரை வரச்சொன்ன பெரியவா தான் கேட்டு வாங்கின வீட்டோட குறிப்பிட்ட திசையில ஒரு இடத்தை முதல்ல தோண்டச் சொன்னார். சொன்ன திசையில் இருந்த அறை ஒரு கழிப்பறை.

பெரியவா உத்தரவை மீற முடியாமல்.அதை இடிச்சுட்டு ஆறு ஏழு அடி தோண்டினதுக்கப்புறம் லேசா லிங்கம் மாதிரி ஏதோ தெரிஞ்சுது.அதை வெளீல எடுக்க முயற்சி செஞ்சார்.

ஊஹூம்! எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியலை. ஏகாம்பரேஸ்வரர் கோயிலோட யானையைக் கூட்டிண்டு வந்து இழுக்க வைச்சுப் பார்த்தா. பிரயோஜனமே இல்லை.

லிங்கம் அசையைக்கூட இல்லை.  விஷயம் தெரிந்த பெரியவா, அந்த இடத்துக்குப்   போய் கொஞ்சம் கங்கா ஜலத்தால் லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணி வில்வபத்ரத்தைப் போட்டுட்டு கற்பூர ஆரத்தி காட்டினார்.

"இப்போ எடுங்கோ வரும்" என்று பெரியவா சொன்னதும்அடுத்த முயற்சியில் தாய்ப் பசுவைப் பார்க்க தாவிண்டு வர்ற
கன்னுக்குட்டி மாதிரி சட்டுன்னு வெளீல வந்தது சிவலிங்கம்.

அமைதியா ஒரு புன்னகையைத் தவழவிட்ட ஆசார்யா,  "இதோட போதும்னு நிறுத்திட வேண்டாம்.  இன்னும் கொஞ்சம் தோண்டுங்கோ!" அப்படின்னார்.

அப்படித் தோண்டும்போது 'டங்குனு' ஒரு சத்தம். அங்கே அனந்த சயனத்துல இருக்கிற ரங்கநாதரோட திருமேனி இருக்கிறது தெரிஞ்சது.   அவ்வளவுதான் ஸ்தபதிக்கு  கண்ணுல இருந்து ஜலமா பெருகி வழிந்தது.
"பெரியவா இந்த இடத்தைப் போய் தோண்டச் சொல்றேளே இப்படிப்பட்ட இடத்துக்கெல்லாம் வரவேண்டி இருக்கேன்னு மனசுக்குள் நினைச்சேன்.

ஆனா சாட்சாத் பரமேஸ்வரனும், பெருமாளுமே எல்லாத்தையும் சகிச்சுண்டு இத்தனை காலம்இங்கே புதைஞ்சு கிடந்திருக்கான்னா, நாமெல்லாம் எம்மாத்திரம்னு இப்போ புரியறது" தழுதழுத்தார் ஸ்தபதி.

அப்புறம் சின்னதா ஒரு கோயிலமைச்சு அந்த சிவலிங்கத்திருமேனியையும், ரங்கநாதரையும் அங்கே பிரதிஷ்டை செய்யச் சொன்னார். 

ஹரியும், ஹரனும் சேர்ந்து கிடைச்சதால ரெண்டுபேரோட திருநாமத்தையும் இணைச்சு
'ஸ்ரீ அனந்தபத்மநாபேஸ்வரர்' னு திருப்பெயர் சூட்டினார் மகாபெரியவா.

காஞ்சிபுரத்துல உள்ள நூத்தியெட்டு சிவாலயங்கள்ல ஒண்ணான அனந்தபத்மனாப ஈஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சமீபமா இருக்கிற லிங்கப்பன் தெருவுல இருக்கு.

ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர... 

ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக