ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அமைதி:

3 posters

Go down

மன அமைதி: Empty மன அமைதி:

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sun Dec 20, 2009 10:25 am

மன அமைதி: Medit



மன அமைதி:
பெரும்பாலும் அனைவருமே சொல்லக்கூடிய வார்த்தைகள்

"மனுசனுக்கு எவ்வளவு பிரச்சனை, எப்படித்தான் சமாளிக்கிறது. என்ன மட்டும்
ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறார். நான் என்ன பாவம் பன்னினேன். சே நிம்மதியே
இல்ல"
"யாரையுமே நம்ப முடியலை, எல்லாருமே ஏமாத்துராங்க"


"எனக்கு அவன் துரோகம் செய்துவிட்டான்"


நாம் அனைவரும் தினமும் கேட்ககூடிய வார்த்தைகள். அல்லது பேசக்கூடிய
வார்த்தைகள் இல்லையா?


எனக்கு தெரிந்த அல்லது என் மனதில் பட்ட சில கருத்துக்களை சொல்கிறேன்.
தவறென தெறிந்தால் உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே


மேலே சொன்ன அனைத்திலும் வரும் முடிவினைப் பாருங்கள் எனக்கு நிம்மதியே இல்லை
என்பது தான் முடிவாயிருக்கும்.


நிம்மதி அதாவது மனதின் அமைதி என்பது எல்லோருமே யாரோ வந்து
கெடுத்துவிட்டார்கள், அல்லது யாராவது எடுத்துக்கொண்டு போய்விட்டதாகவே
நினைக்கிறோம். அதுவா உண்மை. இல்லையே


நிம்மதியும் சந்தோசமும் நம்க்குள்ளேயேதான் இருக்கிறது. ஆனால் இல்லையென்று
வெளியே தேடுகிறோம்.
நமக்கு விருப்பமானதை பார்க்கும்போதோ அல்லது கேட்கும்போதோ நாம் மகிழ்ச்சியை
உணர்கிறோம். அதே நேரத்தில் நமக்கு விருப்பமில்லாமல் உள்ள ஒன்றினால் நாம்
வெறுப்பை உணர்கிறோம்.
இந்த உணர்வு நாம் வெளியில் இருந்து பெறவில்லை. நமக்குள்ளேயேதான் உள்ளது.


அடுத்து அவன் என்னை மதிப்பதில்லை என்பது. ஒருவர் மதிக்கவில்லை என்பதான்
நாம் நம் மன அமைதியை இழந்து நம்மையே துன்பப்படுதிக்கொள்கிறோம். அடுத்தவர்
நம்மை ஏன் மதிக்க வேண்டும். நாம் நம் கடமையை மட்டும் செய்தால் மதிப்பு
நம்மைதேடி வரும், மதிக்கவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு அது இல்லாமல்
போகும் போது ஏமாற்றமாகிறது. இந்த ஏமாற்றமே மன அமைதியை பாதிக்கிறது.


இவன் எனக்கு எதிராகவே நடக்கிறான். இதனால் எனது நிம்மதி போய்விட்டது.
உண்மையை சொல்லுங்கள் ஏன் மற்றவர் நம் விருப்பப்படி நடக்கவேண்டும். நாம்
எத்தனை பேர் மற்றவர் விருப்பத்திற்கேற்ப நடந்துள்ளோம். நாம் மட்டும் நமக்கு
எது சரியென்று தோன்றுகிறதோ அதை மட்டும் செய்வோம். ஆனால் மற்றவர் மட்டும்
நம் விருப்பம்போல் செயல்படவேண்டும் என்று விரும்புவோம். இது எந்தவிதத்தில்
சரி. இதனால் நமக்குள்ளே உள்ள மகிழ்ச்சியை இழக்கிறோம்.


அவன் என்னை ஏமற்றிவிட்டான் -
எப்படி பிறர் நம்மை ஏமாற்றமுடியும். இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து
இருக்கலாம். ஏன் ஏமாற்ற முடியாது என்று. பொதுவாக யாராவது நான் முட்டால்
என்று எப்போதாவது நாம் ஏற்றுக்கொண்டோமா நம்மை. எப்போதும் நாம் நம்மை
அறிவாளிகளாவே நினைக்கிறோம். அப்படி இருக்கும் போது நம்மை
ஏமாற்றிவிட்டார்கள் என்பது பொய். நாம் ஏமாந்துவிட்டதுமில்லாது அதனால் நம்
அமைதியையும் இழந்து தவிக்கிறோம்.


நானே கவலையில் இருக்கிறேன் என் சூழ்நிலை தெறியாது இவர்கள் வேறு என்
நிம்மதியை கெடுக்கின்றனர் என்பது.


மனிதனின் மற்றொரு மடத்தனம் நாம் கவலையில் இருந்தால் என்னோடு எல்லோரும்
கவலைப்பட வேண்டும் என்பது. அந்த நேரத்தில் யாராவது சந்தோசமாக இருந்தால்
நமக்கு கோபம் வரும். நாம் நம் மகிழ்ச்சியை இழந்து தவிப்போம். என்ன ஒரு
மடத்தனம்.
உண்மயில் நாம் யோசித்துப்பார்த்தால் கவலைப்படுவதால் நாம் ஏதாவது
சாதித்துள்ளோமா என்றால் ஒன்றும் இல்லை. ஆனால் இழப்பு நிச்சயம். மகிழ்ச்சி,
உடல் நிலை, சுற்றி உள்ளவர்களின் சந்தோசம், நேரம் ஆக அனைத்தையும் இழக்கிறோம்
என்பது மட்டும் உண்மை. கவலைப் படுவதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை.
அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் நடக்காதவாறு பார்த்துக்கொண்டால்
துன்பதை தேடவேண்டியது இல்லை.


அடுத்து மிகவும் கவனிக்க வேண்டியது அவன் அப்படி செய்தான், இவன் இப்படி
செய்தான் என்பது.
மற்றவர்கள் ஏதாவது செய்தாலே நாம் நம் நிம்மதியை இழந்துவிடுகிறோம். ஒன்றைப்
புரிந்து கொள்ள மறுக்கிறோம். நம்மை படைத்த அதே சக்திதான் மற்றவரையும்
படைத்துள்ளது. நாம் மற்றவரை குற்றம் சொல்லும் போது நாம் படைத்தவனை குற்றம்
சொல்கிறோம். நம்மை எப்படி வழி நடத்துகிறானோ, அதே போல்தான் மற்றவரையும் வழி
நடத்துகிறான். நம்மை நன்மை செய்யத்தூண்டும் அதே சக்தி மற்றவரை தீமை
செய்யதூண்டுகிறது. எல்லோரும் நல்லவராக இருந்துவிட்டால் அதைவிட துன்பம் வேறு
இல்லாமல் போய்விடும்.
இரட்டைகள் இருந்தால்தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். துன்பத்தை
உணர்ந்தால்தான் இன்பத்தின் அருமை தெரியும். ஏழ்மை இருந்தால்தான் பணத்தின்
அருமை தெரியும். உண்மையில் இறைவன் நமக்கு 80% நன்மையையும் 20% கஸ்டத்தையும்
கொடுத்துள்ளான். அந்த 20% கூட நன்மையை உணர வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால் நாம் 20% நினைத்து நினைத்து 80% இழந்து படைத்தவனை குற்றம்
சொல்கிறோம்.


உன்னையே நினைத்து வாழ்ந்தேனே, உனக்காக என்னவெல்லாம் செய்தேன். எத்தனை முறை
விரதம் இருந்தேன். எத்தனை முறை அதைச்செய்தேன், இதைச்செய்தேன் ஆனால் நீ எனை
சோதிக்கிறாய்- அல்லது நீ எனக்கு இதை செய்தால் நான் உனக்கு இதை செய்வேன்
என்பது.


பொதுவாக கடவுளிடம் நமது உரையாடல்கள் இந்த மாதிரி தான் இருக்கும். கடவுளை
நாம் ஏதோ நமது முகவராகவோ அல்லது ஒரு வங்கி அதிகாரி போலவோ பார்கிறோம்.
நமக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்றால் கடவுளுக்கு கூட லஞ்சம் தர தயாராக
இருக்கிறோம். ஏதாவது எதிர்பார்த்து நடக்கவில்லை என்றால் உடனே ஏன் என்னை
சோதிக்கிறாய் என்கிறோம்.


கடவுளுக்கு வேறு வேலையே இல்லையா. நம்மையும் படைத்து நமக்கு சிந்திக்கும்
ஆறாம் அறிவையும் படைத்து மிக உயர்ந்த நிலையை அளித்த இறைவனை பெறும்பாலும்
சபிக்கிறோம். ஏன் நம்முடிய அறிவினை வைத்து முன்னேற முடியவில்லை என்ற
சிந்தனை இல்லாமல் இறைவனை திட்டுகிறோம். எப்போது நாம் நம் அறிவினைப்
பயன்படுத்தி முன்னேறவேண்டுமென்று உழைக்கிறோமோ அப்போது இறைவன் நம்முடன்
பாடுபட தயாராகிறான். இதை உணராமல் மன அமைதியை இழந்து இறைவனையும்
பழிக்கிறோம்.


சில நபர்கள் உணவிலும், மதுவிலும், மங்கையிலும் சந்தோசம் என்று
நினைக்கின்றனர். அப்படி அதில்தான் மகிழ்ச்சி என்றால் அது நிரந்தரமானதாக
அல்லவா இருக்கவேண்டும். ஆனால் அது கிடைத்தால் இன்பம் இல்லையென்றால்
துன்பம்,


தினம் உண்கிறோம், வசதி இருந்தால் தினம் மது அருந்தலாம், மங்கையர்களிடம்
போகலாம். ஆனால் நாம் நிரந்தரமாக மகிழ்ச்சி பெறுகிறோமா. இல்லையே. வந்து
போகும் சந்தோசம் நமக்கு தேவையில்லை. நிரந்தரமான் மகிழ்ச்சி நமக்குள்ளேயே
உள்ளது. நாம்தான் தேட மறந்து விட்டோம்.


மகிழ்ச்சி, மன அமைதி எனும் இறைவன் நமக்குள்ளே ஒளிந்துகொண்டுள்ளான். அவனை
நமக்குள் தேடுவதைவிட்டு வேறு எங்கெங்கோ தேடுகிறோம்.


எப்பொழுது நாம் இந்த நிமிடங்களில் வாழ்கிறோமோ அப்போது சந்தோசத்தை
இழப்பதில்லை.


எப்பொழுது நாம் நம் கடமையை சரியாக செய்கிறோமோ அப்போது சந்தோசத்தை
இழப்பதில்லை


எப்பொழுது பிறர் குற்றங்களை பார்க்காது நம் குறைகளை சரி செய்கிறோமோ அப்போது
சந்தோசத்தை இழப்பதில்லை.


எப்பொழுது எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ பழகுகிறோமோ அப்போது சந்தோசத்தை
இழப்பதில்லை.


கடந்த கால தவறுகளை நினைத்து வருத்தம் கொள்வதில் அர்த்தம் இல்லை.


எதிர் காலத்தை நினைத்து பயம் கொள்வதில் லாபம் இல்லை.


நிகழ்காலத்தில் வாழ்வதே வாழ்க்கை.


எப்படி ஒரு ஆட்டுக்குட்டி பிறந்த உடனே தாயின் மடி இங்குதான் உள்ளது என்று
யாராவது சொல்லிக்கொடுத்தா பால் குடிக்கிறது. இல்லையே. அது இறைவன் கொடுத்த
வரம். ஐந்தறிவுள்ள ஜீவன்களிடமே இவ்வளவு கருனையுள்ள இறைவன் நமக்கு எவ்வளவு
நண்மை செய்யக்காத்திருப்பான்.


ஆக கடமையை செய்வோம் நிகழ்காலதில். பலனை படைத்தவன் தறுவானோ என்று
கவலைப்படுவதை விட நாம் செய்த கடமை பலனைத்தரும் என்று நம்பிக்கையோடு
மகிழ்ச்சியாய் இருப்போம்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

மன அமைதி: Empty Re: மன அமைதி:

Post by செந்தில்குமார் Sun Dec 20, 2009 1:09 pm

மிக்க நன்றி ஸ்ரீ கிருஷ்ணன்
தீதும் நன்றும் பிறர் தர வார என்பதை உணர மறுக்கிறோம்
மன உறுதி இல்லாமல் வேதனையுடன் அலைகிறோம் ,
இன்பத்தை ஓரிடத்தில் தொலைத்து விட்டு வேறிடத்தில் தேடுகின்றோம்
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Back to top Go down

மன அமைதி: Empty Re: மன அமைதி:

Post by mdkhan Sun Dec 20, 2009 2:09 pm

"ஆக கடமையை செய்வோம் நிகழ்காலதில். பலனை படைத்தவன் தறுவானோ என்று
கவலைப்படுவதை விட நாம் செய்த கடமை பலனைத்தரும் என்று நம்பிக்கையோடு
மகிழ்ச்சியாய் இருப்போம்"


அன்பு....... ஸ்ரீகிருஷ்னா.....

இந்த மன அமைதி கட்டுரையை இங்கு தந்தமைக்கு மிக்க நன்றி.......

கடைசியாக குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த பொன்மொழி மிக முக்கியமானது.

பலனை படைத்தவன் தருவானோ என்று கவலைப்படுவதை விட நாம் செய்த கடமை பலனைத்தரும் என்று நம்பிக்கையோடு மகிழ்ச்சியாய் இருப்போம்.

இது என் வாழ்க்கையில் நான் கடைபிடித்ததனால் இன்றும் அதன் காரணமாக பல நல்ல நண்பர்களைபெற்று பல ஆக்கப்பூர்வமான வேலைகளையும் தெரிந்துகொண்டு எல்லோரிடமும் மதிப்பையும் மரியாதையைம் பெற்று இருக்கின்றேன்.

ஒரு செயலில் பலனை எதிர்பாக்காமல் நாம் செயல்பட்டால்தான் நாம் நம் திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டு வரமுடியும் என்பது நான் கண்டறிந்த உண்மை.

நன்றி.


மன அமைதி: Eegaraitkmkhan
மன அமைதி: Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மன அமைதி: Empty Re: மன அமைதி:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum