ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட

4 posters

Go down

துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட Empty துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட

Post by சிவா Mon Sep 24, 2018 2:37 pm

தீர்வு : கோவைக்காய் (10), முருங்கை விதை (5), புதினா (சிறிதளவு) இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மற்றும் மாலை என இரு வேளையும் வெறும் வயிற்றில் குடித்து வரவும். கோவைக்காயை நீராவியில் வேக வைத்து பொரியலாக செய்து அவற்றில் தேங்காயை அதிகமாகப் போட்டு உணவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். பின்பு பசித்தால் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

தினமணி


துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட Empty Re: துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட

Post by சிவா Mon Sep 24, 2018 2:41 pm

உடல் ஆரோக்யத்துக்கு அடிப்படையான குடல் சுத்தம் பேணும் டயட்!


மனித உடலில் குடல் சுத்தமாக இருந்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்யம் மேம்படும். நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் இரைப்பையில் செரிக்கப்பட்டு சத்துக்களாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலந்த பின் எஞ்சும் கழிவுகள் சிறிது, சிறிதாக குடல் வழியே நகர்த்தப் பட்டு இறுதியில் மலக்குடலை அடையும். உணவுப் பொருட்கள் குடலின் வழியே செல்லும் போது அங்கு உணவிலிருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் தேங்கும் அபாயம் உண்டு. இது சில சமயங்களில் விபரீதமாக குடல் புற்றுநோய்க்கும் இட்டுச் செல்லக் கூடும். எனவே அவ்வப்போது குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது நமது கடமையாகிறது. குடலை சுத்தம் செய்வது என்றால் மருந்து, மாத்திரைகளால் அல்ல நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மூலமாகவே நமது குடலை சுத்தம் செய்யமுடியும். அந்த உணவுப் பொருட்கள் அனைத்துமே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய விதத்திலானவையே. அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்... 

காலிஃப்ளவர், பிரக்கோலி, முட்டைக்கோஸ், நூல்கோல், டர்னிப் போன்ற காய்கறிகள்...

மேற்கண்ட காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகைக் காய்கறிகளில் நார்ச்சத்து மிகவும் அதிகம். இவற்றை உண்பதால் நமது உணவு செரித்தலின் போது மாவுச்சத்து திசுக்களில் தேங்காமல் கரைக்கப்பட்டு நார்ச்சத்து மிகுந்திருப்பதால் குடலின் வழியே எளிதாக நகர்ந்து கழிவுகள் வெளியேறுவது தன்னியல்பாக நடந்தேறுகிறது. இதனால் எஞ்சிய உணவுக் கழிவுகள் குடலில் தேங்கும் நிலை தவிர்க்கப்படுகிறது. மேற்கண்ட உணவுப் பொருட்கள் நார்ச்சத்து மிகுந்தவை மட்டுமல்ல அவற்றில் ஆண்ட்டி ஆக்சிடண்டுகளும் அதிகம். இவை ரத்த ஓட்டத்தைச் சீராக்கி ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை சுத்திகரிப்பதால் மந்தநிலை நீங்கி உடல் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய நிலை கிட்டுகிறது.

பூண்டு...


பூண்டில் உள்ள ஆண்ட்டி பாக்டீரியல், ஆண்ட்டி வைரல், ஆண்ட்டி பாராசிட்டிக் தன்மை குடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதோடு குடலில் உண்டாகக் கூடிய சிறு சிறு புழுக்கள் மற்றும் பூச்சிகளையும் அழிக்கக் கூடிய தன்மை கொண்டது. அது மட்டுமல்ல பூண்டில் உள்ள ஆண்ட்டி ஆக்சிடண்ட்டுகள் உடலின் உட்காயங்களை ஆற்றும் தன்மை கொண்டவை. அது மட்டுமல்ல இது உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. அதோடு செரிமானத்தையும் சீராக்குகிறது.

சுத்தமான நீர் மற்றும் உப்பு...


குடலில் போதுமான நீர்ச்சத்து இருந்தால் அது ஆரோக்யமாக இருக்கும். எப்போதெல்லாம் நீர்ச்சத்து குறைகிறதோ அப்போதெல்லாம் மலச்சிக்கல் ஏற்பட்டு குடலில் தங்கும் நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். ஆகவே எப்போதும் உணவு உண்டு முடித்த அரைமணி நேரத்தின் பின் போதுமான அளவு தண்ணீர் அருந்த மறக்கக் கூடாது. நீர் அருந்தும் போது நாளில் ஒருமுறையாவது 1 டம்ளர் நீருடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் குடல் சுத்த செயல்முறை சற்று வேகப்படும்.

அவகாடோ...


இதை வெண்ணெய்ப்பழம் என்றும் சொல்வார்கள். இது செரிமானத்திற்கு மட்டுமன்றி குடல் சுத்தத்திற்கும் உதவுகிறது. அவகாடோவில் உள்ள கரையக் கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தின் ஆரோக்யத்துக்குப் பெரிதும் உதவுகின்றன. இந்தப் பழத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்றுநோயையும் தவிர்க்கும். இதிலிருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து நீரை உறுஞ்சுவதுடன் குடலில் உள்ள இதர பொருட்களுடன் பிணைக்கவும் உதவும்.

பச்சை இலைக் காய்கறிகள்...


பச்சைக் காய்கறிகள் என்றால் அவை பெரும்பாலும் கீரை வகைகள் தான். கீரை வகைகள் செரிமானத்தை அதிகரிப்பதோடு குடல் பாதுகாப்புக்கும் உதவுகிறது. இதிலுள்ள கொழுப்பில் கரையக்கூடிய குளோரோஃபில் குடலின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு குடலில் தங்கும் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை முடக்கி குடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும். இந்த குளோரோஃபில் குடலை மட்டுமன்றி கல்லீரலையும் சுத்தம் செய்ய உதவும்.

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள்...


செரிமான மண்டலமானது ஏராளமான நன்மை வழங்கும் பாக்டீரியாவால் ஆனது. எப்போது செரிமான மண்டலத்தில் நல்ல பாக்டீரியாக்களின் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறதோ அப்போது ஒட்டுமொத்த உடல் ஆரோக்யமும் பாதிக்கப்படும். உடலில் குடல் பகுதியில் தான் 80% நோய் எதிர்ப்பு மண்டலம் அமைந்துள்ளது. ஆகவே குடல் ஆரோக்யமாக அமையாவிட்டால் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட முடியாமல் போகும். இதனை சரி செய்வதற்கு நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளான தயிர், ஊறுகாய், இட்லி, தோசை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கற்றாழை...


கற்றாழை மலச்சிக்கல் பிரச்னையை எளிதில் நீக்கி ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேன்மையாக்கும். எனவே குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் கற்றாழை ஜூஸை அடிக்கடி அருந்துவது நல்லது.

சியா மற்றும் ஆளி விதைகள்...


இவை இரண்டிலுமே நார்ச்சத்து, கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் ஆரோக்யமான செரிமானத்தை ஊக்குவிப்பதோடு குடலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் உதவும். இவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குடல் காயங்களைக் குறைப்பதோடு செல்சுவர்களையும் உறுதிப் படுத்தும். முக்கியமாக இவற்றிலிருக்கும் கரையக் கூடிய நார்ச்சத்து ஒட்டுமொத்த செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும்.

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்...

 
இவற்றில் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ்களும், ஆண்ட்டி ஆக்சிடண்ட்களும் ஏராளமாக இருப்பதால் ஒருவர் அடிக்கடி பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உண்ணும் போது அவரது குடலியக்கம் சிறப்பாக அமைகிறது.

ஆப்பிள்...


ஆப்பிளில் இருக்கும் பெப்டின் எனும் பொருள் உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும். அதோடு ஆப்பிளில் நார்ச்சத்தும் அதிகமிருப்பதால் செரிமான மண்டல ஆரோக்யத்துக்கு இது மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. பெப்டின் உடலில் இருந்து அனைத்து வகையான டாக்ஸின்களையும் நீக்கும் சக்தி கொண்டது. எனவே குடல் சுத்தமாக வேண்டும் என்று விரும்புபவர்கள் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்கலாம்.

க்ரீன் டீ...


இது எடை குறைப்பில் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை குடல் சுத்தத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஆண்ட்டி ஆக்சிடண்டு குடல் இயக்கத்தை மேம்படுத்துவதோடு குடலை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். அதோடு க்ரீன் டீயில் உள்ள விட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்பு மண்டலச் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதால் தினமும் ஒரு கப் க்ரீன் டீ அருந்தினால் உங்களது குடல் இயக்கம் சீராக அமையும்.

எலுமிச்சை...

எலுமிச்சை கல்லீரலில் பித்தநீர் உற்பத்தியைத் தூண்டி குடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டால் குடலில் மட்டுமல்ல உடலில் உள்ள அத்தனை நச்சுக்களையும் கூட அகற்ற முடியும்.

Sent from Topic'it App


துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட Empty Re: துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட

Post by ராஜா Mon Sep 24, 2018 2:55 pm

பயனுள்ள தகவல்கள் தல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட Empty Re: துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட

Post by SK Mon Sep 24, 2018 5:36 pm

இளசான தேங்காய் உணவில் சேர்த்தால் கூட

முறைமாமன் படத்தில் வரும் கவுண்டமணி போல ஆகிவிடும் தல



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட Empty Re: துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட

Post by சிவனாசான் Mon Sep 24, 2018 6:54 pm

அன்பரே பாஸ்ட் புட் சாப்பிடும் காலம் இது. பெண்கள் பேண்ட் சூட் போடும் காலமாய் விட்டது. இனி நாடு அவ்வளவுதான் .தினமணி இதழ் செய்தியாகமட்டுமே பார்ப்படும்
பயன் படித்தி பார்க்க நேரமில்லை.ஆனால் பைக் ஓட்டிக்கொண்டே காதில் செல்பேசியை அழுத்திக்கொண்டு காலம் பொன் போன்றது போல் நினைத்து செயல்பட்டு உடலை பாழாக்குகின்றனரே அவர்களை பற்றி என்னென்பது..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட Empty Re: துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum