புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 12:28 pm

தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Tamil_News_large_1624066_318_219
-
பறவைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர்
வெங்கடேஷ் கூறியதாவது:

இறக்கைகள் கொண்ட ‘இருகாலி’களைப் பறவை
எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய,
இளஞ்சூட்டுக் குருதியுடைய இறகுகள் கொண்டவை.
மேலும் முட்டையிட்டு இனம் பெருக்கம் செய்யக் கூடியவை.

விலங்குகளிலேயே இறகுகள் உள்ள
ஒரே பிரிவு பறவைகள்தான். விலங்குகளில் பறவை
என்னும் பிரிவில் மொத்தம் 9 ஆயிரத்து 672 இனங்கள்
உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.

மனிதர்தம் விரல் நீளமும் (5 செ.மீ.,) 1.8 கிராம் எடையுமே
உள்ள மிகச் சிறிய பறவையான ஒரு வகை ‘தாரிச்சிட்டு’
(ஓசனிச்சிட்டு) களிலிருந்து 9 அடி உயரமும் 156 கிலோ
எடையும் கொண்ட (பறக்காத) பெரிய தீக்கோழி மற்றும்
ஈமு வரை, பறவைகள் பல பரும அளவுகளில் உள்ளன.

அதிக எடையுள்ள ‘பறக்கும்’ பறவையான ‘கானமயில்’
18 கிலோ வரை பெருக்கும்.

பறவைகளில் மணிக்கு 160 கி.மீ.,வரை பறக்கும் இனமும்
உண்டு. நிலம் நீர் வானம் இவற்றில் விரைந்து நகரக்கூடிய
விலங்கினங்கள் யாவற்றிலும் மிக விரைந்து செல்லக்கூடியது

‘பொரி லகடு’ அல்லது அலையும் வல்லுாறு என்னும்
பறவையே. சில பறவைகள் நெடுந்
தொலைவு (17,000 கி.மீ.,வரை) செல்லும் தன்மை உடையன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 23, 2018 12:47 pm

தலைப்புக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லையே...



தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 1:24 pm

-
சில பறவைகள் பறக்க முடியாதவையாகவும் உள்ளன.
பல இனங்கள், குறிப்பாக தீவுகளில் வசிப்பவை பறக்கும்
இயல்பை இழந்துவிட்டன.
பென்குயின்கள் தீக்கோழிகள், நியூசிலாந்தின் கிவிகள்,
அழிந்துபோன ‘டோடோக்கள்’ இதில் அடங்கும்.

சிறகுகள்:
பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் ஆண்டுக்கு
ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக்
கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவானால் பறப்பதற்கு
ஏற்ற ‘ஏரோ டைனமிக்’ மேற்பரப்பை பறவைகளுக்கு
அளிக்கிறது.

அலகு:
வானம்பாடி போன்ற மலர்களில் தேன் குடிக்கும்
பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை
போன்ற ஊன்தின்னிப் பறவைகளுக்கு சதையைப் பிய்த்து
உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு
வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கவல்ல
இரையை பிடித்துக் கொள்ள வாகான ரம்பம் போன்ற அலகு.
பழக்கொட்டைகள் உடைக்க உறுதியான அலகு.
மரங்கொத்திப் பறவைக்கு உளி போன்ற உறுதியும் கூர்மையும்
கொண்ட அலகு என உள்ளன.

இரை:
பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை இரை தேடவும்,
உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு
இடையூறு என்பதால் பறவைகளால் உடலில் உணவைச்
சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி
உண்பது அவசியமாகிறது.

பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு.
காக்கை போன்றவை இரண்டையுமே உண்கின்றன.
சில பறவைகள் சிறப்பாக குறிப்பிட்ட இரைகளை மட்டுமே
உண்ணும். எடுத்துக்காட்டாக ‘எவர்கிளேட் கைட்’
என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 1:24 pm


பறவைகளின் வயிறு சிறப்புத் திறன் பெற்றது. கடினமான
கொட்டைகள் போன்றவற்றைக்கூட நொறுக்கிச்
செரிமானம்செய்து விடும். சில பழக்கொட்டை தின்னும்
பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து தின்கின்றன.

இவை வயிற்றில் கொட்டைகளை நொறுக்க உதவுகின்றன.
குஞ்சுகளுக்கு இரை எடுத்துச் செல்ல பல பறவைகள்
வாய்க்குள் சிறிய பை போன்ற அமைப்பை கொண்டுள்ளன.

உறக்கம்:
இரவில் வேட்டையாடும் ஆந்தை போன்றவற்றைத்
தவிர பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில்
உறங்குகின்றன. குஞ்சு பொரிக்கும் காலங்களில் மட்டுமே
கூட்டில் உறங்குகிறது. மற்ற நேரங்களில் கிளையோ,
மரப்பொந்தோ, சில சமயம் ஒற்றைக் காலிலோ கிடைத்த
இடத்தில் உறங்கிக் கொள்ளும்.

இடப்பெயர்ச்சி:
உணவுத் தேவைகளுக்காகவும் மிக வெப்பம்,
மிக குளிர் கால நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள்
இடப்பெயர்ச்சி செய்கின்றன.

கடல் பறவைகள் மிக அதிக துாரம் (சில வகைகள் ஒரு ஆண்டில்
32,000 கி.மீ., வரை) பயணிக்கின்றன. இடப்பெயர்ச்சி செய்யும்
போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான
இடத்தை அடைகின்றன.

பகலில் சூரியனின் திசையை கொண்டும், இரவில் சில
நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், பூமியின்
காந்த அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக்
கொண்டும், சில தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளைக் கொண்டும்
பாதையை உணர்ந்து கொள்கின்றன.

பறவைகள் கூட்டமாகச் செல்லும் போது வீ போன்ற வடிவத்தில்
பறப்பதைப் பார்க்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல்
பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால்
செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும்
காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது.

தனியே பறந்து செல்லும் சில இளம் பறவைகள் சமயங்களில்
வழி தப்பி அதன் இனம் செல்லும் வழியை விட
ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தள்ளி வந்து விடும்.

இந்த பறவைகள் தான் காட்டில் தாவரங்களின் பரவலுக்கு
முக்கிய காரணியாக திகழ்கிறது.

பறவைகள் உண்டு துப்பிய பழக் கொட்டைகள் உடனே
முளைக்கும் திறன் கொண்டது. எனவே காட்டில் பல்லுயிர்
தாவரங்கள் பெருக வேண்டுமென்றால் பறவை இனங்கள்
மிக இன்றிமையாதது ஆகும். எனவே பறவைகளை பாதுகாக்க
உறுதி ஏற்போம், என்றார்.
-
----------------------------------------

தினமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 23, 2018 8:35 pm

பறவைகள் பற்றிய பல அறிய தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.
அனைத்து தகவலும் உபயோகமானது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக