ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1

+2
T.N.Balasubramanian
கார்த்திக் செயராம்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1 - Page 2 Empty புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1

Post by கார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 10:03 am

First topic message reminder :

இராஜேந்திர சோழன் காலத்தில் எத்தனையோ போர்களைத் தன் ஆட்சிக் காலத்தில் நடத்திய போதும் அவன் வடக்கே சென்று கங்கையையும், கடல் கடந்து கடாரத்தையும் வெற்றி கொண்டமைதான் அக்கால மக்கள் மனதையும், புலவர்கள் மனதையும் கவர்ந்து நின்றன.


கல்வெட்டுக்கள் பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்று அவனைப் புகழ்ந்தன. கலிங்கத்துப் பரணியில் புலவர் செயங்கொண்டார்,
களிறு கங்கை நீ கருண்ண மண்ணையில்
காய்சினத் தொடே கலவு செம்பியன்
குளிரு தெண்டிரைக் குரைக டாரமுங்
கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும்
என்றும், கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்,
தண்டேவிக்
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
கங்கா புரிபரந்த கற்பகம்
என்றும்
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியர் கோன்
என்றும் இராஜேந்திரனைப் புகழ்ந்தனர்.
சோழன் கடாரம் வென்றது வரலாறு. வீசும் காற்றை நம்பிக் கப்பலை ஓட்டிக் கடாரம் போய்ச் சேர சில நூறு நாட்களாவது ஆகும். அவ்வாறு போய்ப் புதிய தேசத்தில் போர் செய்வது சுலபமானதன்று. ஆயினும் இதனைச் செய்ய நாடு பிடிக்கிற நோக்கத்திற்கு அப்பால் வேறு காரணங்கள் வலுவாய் இருப்பதாக வரலாறு கூறுகின்றது.
சோழர் காலத்திலும் தமிழரின் வர்த்தகம் கடல் தாண்டி நடந்திருக்கிறது. கடாரம் எனும் பகுதியிலும் கடல் தாண்டிய வாணிகம் மேலோங்கி அரபு, சீனா வர்த்தகர்களின் வர்த்தகச் சந்தையும் அவர்களோடு தமிழ் வர்த்தகர்களின் வர்த்தகமும் கொடி கட்டிப் பறந்தன.

தொடக்கத்தில் சோழ ராச்சியமும் கடார ராச்சியமும் தம்முள் நட்புக் கொண்டிருந்தன. ஆனால், காலப் போக்கில் கடாரத்தை ஆண்டு வந்த ஸ்ரீவிசய நாட்டின் அதிகாரிகள் தமிழ் வர்த்தகர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டதை ஒற்றர்கள் மூலமும், வர்த்தகர்கள் மூலமும் அறிந்த சோழ மன்னன் இராஜேந்திர சோழன் கடல் வழியே படையெடுப்பைக் கடாரத்தின் மீது மேற்கொண்டு கடாரத்தை வென்றான்.
கடாரம் சோழ மன்னன் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழரின் கடல் தாண்டிய வர்த்தகம் மட்டுமல்ல; வேறு நாட்டவர்களின் வர்த்தகமும் தடையின்றி நடந்தது. கடாரம் என்ற கடற்கரைப் பிரதேசத்தைப் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய பட்டினப்பாலையில்,
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்
என்ற வரிகள் சொல்லப்படும் காழகம் என அதற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் கருதினார். காழகம் எனத் தமிழின் சங்க இலக்கியம் சொன்ன நிலமே கடாரம் ஆகும். அந்தக் கடாரமே இன்று மலேசியாவின் மேற்குக் கரையின் தென்பக்கத்திலுள்ள கெடா மாநிலமாகும். அக் கெடா மாநிலத்தில் சோழன் ஆட்சி செய்ததற்கான சான்றுகளாகப் புராதனச் சின்னங்கள் குவிந்து கிடக்கும் இடம்தான் பூஜாங் பள்ளத்தாக்கு ஆகும்.

பூஜாங் எனும் மலாய் மொழிச் சொல் நாகப்பாம்பினைக் குறிக்கும். புஜங்க எனும் சமஸ்கிருத மொழிச் சொல்லோடு தொடர்புடையதென்றும் மெர்போக், பூஜாங் ஆகிய பெரிய ஆறுகளின் ஓடுபாதை பெரிய ஒரு நாகப்பாம்பின் உருவத்தை ஒத்த காரணத்தால் அந்த ஆறுகள் பாய்ந்து ஓடும் பள்ளத்தாக்கிற்குப் பூஜாங் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
லெம்பா பூஜாங் என மலாய் மொழியில் அழைக்கப்படும் இந்த பூஜாங் பள்ளத்தாக்கு ஏறக்குறைய ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்புடையதாகும். அந்தப் பெரிய நிலப்பரப்பில் பாய்ந்து ஓடும் ஆறுகளுள் மெர்போக், பூஜாங், மூடா, சிம்போர், பாசிர் எனப்படும் ஆறுகளும், மெர்போக் கெச்சில் எனப்படும் சிற்றாறும் அடங்கும். மேற்கூறிய ஆறுகளில் மிகப்பெரிய ஆறுகளாக விளங்குபவை கிழக்கிலிருந்து மேற்கில் மலாக்கா நீரிணையை நோக்கிப் பாயும் மெர்போக் ஆறும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடி மெர்போக் ஆற்றோடு கலக்கும் பூஜாங் ஆறுமாகும்.
பூஜாங் வெளியில் ஓடும் ஆறுகளின் கரையோரத்தில் புராதனச் சின்னங்களின் சிதைவுகள் நிறையவே இருக்கின்றன. பூஜாங் பள்ளத்தாக்கு 10-ஆம் நூற்றாண்டில் பன்னாட்டு வணிகர்களின் கப்பல்கள் வந்து நிற்பதற்குத் தோதான துறைமுக வசதிகள் கொண்ட கரையோர நகரமாய் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.
இராஜேந்திர சோழன் தமிழகத்திலிருந்து படை திரட்டி வந்து இந்த இடத்தைக் கைப்பற்றினான் எனறால் அது முக்கியமான இடமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இன்றைக்கு இந்தப் பள்ளத்தாக்கில் கிடைத்து வரும் பழங்காலப் பொருள்கள் இந்தப் பள்ளத்தாக்கு சிற்பக்கலை, நெசவுக்கலை, கட்டடக்கலை முதலியவற்றில் நாகரிகம் படைத்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் ஒரு நாகரிக வெளிப்பாடுகள் நிறைந்த பன்னாட்டுத் துறைமுகமும் அதனை நிர்வகிக்கிற அமைப்பும் இருந்ததைத் தெளிவு படுத்துகிறது.
பூஜாங் பள்ளத்தாக்கை ஒட்டி உணவு உற்பத்தியில் நெல் முதலிடம் வகித்ததையும், இரும்பு, பொன் முதலிய பொருள்கள் கிடைத்துள்ளன என்பதையும் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். காழகம் என்பதில் காழ் எனும் வேர்ச்சொல்லில் உருவானது எனப் பார்க்கிற போது, இரும்பு உற்பத்தியில் பூஜாங் வெளி சிறப்புப் பெற்றிருக்கிறது.
பூஜாங் பள்ளத்தாக்கு 14-ஆம் நூற்றாண்டு வரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடமாகவும், செழிப்பும் வனப்பும் நிரம்பிய பகுதியாகவும், கடல் வர்த்தகப் பகுதியாகவும் விளங்கியிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த கடலோடிகளும், வர்த்தகர்களும், பூஜாங் பள்ளத்தாக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தங்கியிருந்தபோது தங்கள் கலாச்சாரத்தையும், மதச் சடங்குகளையும் கடைப்பிடித்திருக்கிறார்கள். இதன் தாக்கம் அக்கால கட்டத்தில் அங்கிருந்தவர்களையும் தழுவியிருக்கிறது.
இந்தியாவிற்கும், சீனாவிற்குமிடையே கப்பல் பயணம் மேற்கொள்கிறவர்கள், வீசும் பருவக் காற்று மாற்றத்திற்காகக் காத்திருக்கவும், ஓய்வெடுக்கவும், பாதுகாப்புத் தேடியும் இப் பூஜாங் பள்ளத்தாக்குத் துறைமுகத்தையே தேர்ந்தெடுத்தனர்.
பூஜாங் பள்ளத்தாக்கில் சைவசமய வழிபாட்டுச் சின்னங்கள், சிதைவுகளில் இருந்து கண்டெடுக்கப்படுவது போல் புத்த மதச் சின்னங்களும் கண்டெடுக்கப் படுகின்றன. கி.பி. 4 முதல் 10-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் புத்தமதத்தைச் சார்ந்தவர்களால் வழிபாட்டுத் தலங்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான புராதனச் சின்னங்களும், கலைப்பொருள்களும் சிவன், விநாயகர், துர்க்கை ஆகிய உருவங்களைக் கொண்ட தெய்வச் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டு அகழ்வாய்வு அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைத்துள்ளனர். சிதைந்த நிலையில் பூஜாங் பள்ளத்தாக்கில் தென்பட்ட முதல் ஆலயம் 1840-இல் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
50-க்கும் மேற்பட்ட சிறு வழிபாட்டுத் தலங்கள் சிதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டன. சாந்தி (சாண்டி) என அழைக்கப்படும் வழிபாட்டுத்தலங்கள், மரணமடைந்த மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக வழிபடவும், மதச்சடங்குகள் மேற்கொள்ளவும் அப்போது பயன்பட்டிருக்கின்றன.


அடுத்த பதிவில் மேலும்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down


புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1 - Page 2 Empty Re: புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1

Post by கார்த்திக் செயராம் Thu Sep 27, 2018 6:53 pm

சிவா wrote: கட்டுரை மிக மிகவும் அருமையாக உள்ளது!

தொடருங்கள் @கார்த்திக் செயராம்  
மேற்கோள் செய்த பதிவு: 1279333
சிவா wrote: கட்டுரை மிக மிகவும் அருமையாக உள்ளது!

தொடருங்கள் @கார்த்திக் செயராம்  
மேற்கோள் செய்த பதிவு: 1279333

நன்றி இது போன்ற ஊக்குவுப்புகள் தான் சாதாரண ஒருவனையும் பல் துறை கலைஞனாக மாற்றுகிறது.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1 - Page 2 Empty Re: புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1

Post by T.N.Balasubramanian Thu Sep 27, 2018 6:53 pm

https://en.wikipedia.org/wiki/List_of_loanwords_in_Malay இதில் உள்ளது மிகக் குறைவு, இன்னும் அதிகமாக தமிழ் மொழிச் சொற்கள் உள்ளன.

நன்றி
ஆம் அதிகம் இல்லைதான்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1 - Page 2 Empty Re: புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1

Post by கார்த்திக் செயராம் Thu Sep 27, 2018 7:06 pm

பகுதி - 3

லெய்டனில் உள்ள ஆனைமங்கல செப்பேடு செய்தி
1. பெரிய லெய்டன் செப்பேடுகள்(21 ஏடுகள்)- இராஜராஜர் -1, இராஜேந்திரர்-1
சமஸ்கிருதம்- 6 ஏடுகள், 111 வரிகள்
தமிழ்- 15 ஏடுகள் ,332 வரிகள்
2. சிறிய லெய்டன் செப்பேடுகள்(3 ஏடுகள்)- குலோத்துங்கன் -1
பெரிய லெய்டன் செப்பேட்டில்,
ஆனைமங்கலம் என்ற பெயர் வளையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. துளை இடப்பட்டு ஏடுகள் கோர்க்கப்பட்டுள்ளன.
”இதி ராஜேந்திர சோழஸ்ய பரகேசரிவர்மனஹ ராஜராஜன்ய மகுடஸ்ரேனி-ரத்னேஷு சாசனம்” என்றும், சோழ சின்னங்களுடனும் பொறிக்கப்பட்டுள்ளது.
சாசனச் செய்தி,
சமஸ்கிருதத்தில் சோழ வம்ச பரம்பரைப் பற்றிய செய்திகள் நமக்கு கிடைக்கின்றன.
தமிழில் பள்ளிச்சந்தம் வழங்கிய செய்தி உள்ளது,
“ஸ்வஸ்தி ஸ்ரீ கோனேரின்மைகொண்டான் க்‌ஷத்ரிய சிகாமணி வளநாட்டு, பட்டினக் கூற்றத்து, ப்ரம்ஹதேயக் கிழவர்க்கும், தேவதான பள்ளிச்சந்தா கனிமுறுட்டு வெட்டப்பேர் ஊர்களிலிருக்கும் நகரங்களிலிருக்கும் நமக்கு யாண்டு,
இருபத்தொன்றாவது நாள் தொண்ணூற்றிரண்டில் தஞ்சாவூர் புறம்படி மாளிகை ராஜஸ்ரியனில் தெற்கில் மண்டபத்து நாம் இருக்க,
கிடாரத்து அரையன் சுளாமணிபன்மன் க்‌ஷத்ரிய சிகாமணி வளநாட்டு, பட்டினக் கூற்றத்து, நாகப்பட்டினத்து எடுப்பிக்கின்ற சுளாமணிபன்ம விஹாரத்து பள்ளிக்கு வேண்டும் நிவந்தத்துக்கு,
க்‌ஷத்ரிய சிகாமணி வளநாட்டு, பட்டினக் கூற்றத்து, ஆனைமங்கலம் பள்ளிச்சந்தம் இரங்கல்-உள்பட அளந்தபடி நீங்கல் நீக்கி,
தொண்ணூற்று ஏழேஇரண்டு மா முக்கானி அரைக்கனி முந்திரிகை-கில் மூன்று மா முக்கானி முந்திரிகை-கில் அரையே இரண்டு மாவினிலிரை கட்டின கனிகடன் நெல்லு எண்ணாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து மூ-காலனி இரு-துணி-குருணி ஒரு-நாழியும,
கடாரத்து அரையன் க்‌ஷத்ரிய சிகாமணி வளநாட்டு, பட்டினக் கூற்றத்து, நாகப்பட்டினத்து எடுப்பிக்கின்ற சுளாமணிபன்ம விஹாரத்து பள்ளிக்கு,
இருப்பதாக யாண்டு இருபத்தோராவது முதல் பள்ளிச்சந்தா இறையிலியாக வரியில் இட்டு கொடுக்கவே என்று நாம் சொல்ல நம் ஓலை எழுதும் நித்தவினோத வளநாட்டு ஆவூர் கூற்றத்து விளத்தூர் கிழவன் அமுதன் தீர்த்தக்காரன் எழுதினாலும்……”
என்னும் செய்தி அவரின் மெய்கீர்த்தியுடனும் காணப்படுகிறது.
ஒரு முழு அரசியல் செயல்பாடுகளும், வரி விளக்கங்களும், நில அளவைக்கான நெறிமுறைகளும், அலுவலர் வருகைப் பதிவுகளும், கையொப்பங்களும், இறையிலி நிலப்பயன்பாடுகளும், உள்கட்டமைப்புச் செய்திகளும் என ஒரு முன்னுதாரண ஆட்சிமுறைகளை இச்செப்பேடுகள் மூலம் பெறமுடிகிறது!!!!


நாகப்பட்டினம் பௌத்த சமயத்தினருக்கு ஒரு முக்கிய மையமாக நீண்ட
காலமாக இருந்து வந்துள்ளது. இராஜராஜசோழன்(கி.பி.985-1014)
ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரம்
எழுப்பப்பட்டது. ஸ்ரீவிஜயத்தின் மாற விஜயோ துங்கவர்மன் தன்
தந்தை சூடாமணிவர்மன் நினைவாக இதை எழுப்பினார். மகாயான
பிரிவைச் சேர்ந்த பௌத்தர்கள் ஸ்ரீவிஜயத்திலிருந்து
நாகப்பட்டினத்திற்கு வந்து இங்குத் தங்கி வாழ்ந்தனர். இப்பௌத்த
பள்ளிக்காக ‘ஆனைமங்கலம்’ என்ற ஊரில் ஏராளமான நிலங்களை
வரி நீக்கி இராஜராஜன் அளித்தார். முதலாம் இராஜேந்திர சோழன்
ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் ‘இராஜேந்திர சோழ
பெரும்பள்ளி ’ தோற்றுவிக்கப்பட்டது. எனவே, கி.பி.11 ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கூறிய இரு பௌத்தப் பள்ளிகளும்
நாகப்பட்டினத்தில் சிறந்து விளங்கின. கி.பி.15ஆம் நூற்றாண்டில்கூட
நாகப்பட்டினம் பௌத்த சமயத்தினருக்கு முக்கிய மையமாக
விளங்கியது என்று கல்யாணி கல்வெட்டுகள் (கி.பி. 1476) மூலம்
அறியப்படுகின்றது. இக்கல்வெட்டுகள் பெகுவிலிருந்து (பர்மா) பௌத்த
சமயக்குருக்கள் நாகப்பட்டினத்திற்கு வருகை தந்ததைக்
குறிப்பிடுகின்றன. கி.பி. 1926 இல் நாகப்பட்டினத்தில் அகழ்ந்து
காணப்பட்ட ஏராளமான புத்தரது வெண்கலச் சிலைகள், இந்நகர் ஒரு
காலத்தில் பௌத்த சமயத்தின் சிறந்த மையமாக விளங்கியதை
எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் அடுத்த பதில் தொடருவோம்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1 - Page 2 Empty Re: புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 28, 2018 10:58 am

நல்ல பதிவு, நன்றி ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1 - Page 2 Empty Re: புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1

Post by சிவா Fri Sep 28, 2018 11:07 am

அறிந்திராத பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது தங்களின் கட்டுரை...

பாராட்டுக்கள் கார்த்தி... தொடருங்கள், படிக்க ஆவலாக உள்ளோம்...


புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1 - Page 2 Empty Re: புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1

Post by krishnaamma Fri Sep 28, 2018 11:46 am

நன்றாக உள்ளது உங்கள் கட்டுரை ...தொடருங்கள் கார்த்தி புன்னகை .......... புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1 - Page 2 3838410834 புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1 - Page 2 3838410834 புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1 - Page 2 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1 - Page 2 Empty Re: புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum