புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_lcapவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_voting_barவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_lcapவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_voting_barவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_lcapவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_voting_barவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_lcapவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_voting_barவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_lcapவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_voting_barவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_lcapவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_voting_barவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_lcapவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_voting_barவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_lcapவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_voting_barவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_lcapவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_voting_barவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_lcapவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_voting_barவிக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 22, 2018 12:29 pm


விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் Saamy_2
-
காவல்துறையை ஊழலும் மோசடியும் நிறைந்ததாக
சித்தரித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா,
அதே துறையில் உள்ளவர்களை நேர்மை, வீரம் போன்ற
நேர்மறை அம்சங்கள் நிறைந்திருக்கும் நாயகர்களாக
வைத்து மிகையாக புகழவும் தயங்கியதில்லை.

இவற்றிற்கு சிவாஜியின் ‘தங்கப்பதக்கம்’ முதல்
ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ‘தமிழ்’ என்கிற
சுமாரான முயற்சியோடு இயக்குநர் ஹரி தமிழ்
சினிமாவின் உள்ளே காலடி எடுத்து வைத்தாலும்
‘சாமி’ என்கிற அட்டகாசமான திரைப்படத்திற்குப்
பிறகு பரவலான கவனம் அவர் மீது குவிந்தது.
-
ஒரு மசாலா திரைப்படம் எத்தனை சுவாரசியமாகவும்
பரபரப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்கான
உதாரணமாக இன்றும் கூட ‘சாமி’யை உதாரணம்
காட்டலாம்.

இந்த திரைப்படம் இதர இந்திய மொழிகளிலும் பிறகு
வெளியானது. ‘சாமி’யை ‘சிங்கம்’ ஆக்கி மூன்று
பாகங்களை முக்கி முக்கி எடுத்து விட்ட பிறகு,
இயக்குநரின் கவனம் இப்போது மீண்டும் சாமி மீது
திரும்பியிருக்கிறது.

முந்தைய படத்தின் மீது பார்வையாளர்களுக்கு இன்னமும்
இருக்கும் விருப்பத்தை வணிகமாக்கிக் கொள்ளும்
முயற்சியில் அவர் உருவாக்கியிருக்கும் திரைப்படம் சாமி2
என்கிற சாமி ஸ்கொயர்.

இதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறாரா என்றால் இல்லை
என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சி வரும் போது அதை
முந்தைய பாகத்தோடு ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது.
அந்த வகையில் சாமி 2, புலியைப் பார்த்து வரைந்த
பூனையின் ஓவியம் போலிருக்கிறது.

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 22, 2018 12:33 pm


விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம் Saamy2-3
-
திருநெல்வேலியில் அராஜகம் செய்து கொண்டிருந்த நிழல்
அரசியல்வாதியான பெருமாள்பிச்சையை, காவல்துறை
உதவி ஆணையர் ஆறுச்சாமி செங்கல்சூளையில் போட்டு
எரிக்கும் காட்சியோடு முதல் பாகம் நிறைவுற்றது.

‘சாமியின் வேட்டை’ தொடரும் என்ற குறிப்பும் இருந்தது.
2003-ல் வெளிவந்த இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியை
2018-ல் வெளியிடுவது அத்தனை பெரிய குற்றம் இல்லை
என்றாலும் அதை மழுப்புவதற்காக திரைக்கதையில்

இயக்குநர் செய்திருக்கும் மாற்றங்கள் நகைச்சுவையாக
இருக்கின்றன.

முதல் பாகத்தை பார்வையாளர்களுக்கு நினைவுப்படுத்தும்
வகையில் சில காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இதில் திரிஷாவின் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை
உபயோகப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் பொருத்தமாக
இல்லை.

பிராமண வழக்கை அவர் உச்சரிப்பது மிகவும் செயற்கையாக
இருக்கிறது. மிகக் குறைவான காட்சிகளில் வரும் இந்தப்
பாத்திரத்தை ஏற்க த்ரிஷா மறுத்தது புத்திசாலித்தனமான
காரியம்.

ஆறுச்சாமிக்கும் புதிய வில்லன்களுக்குமான யுத்தமாக
இத்திரைப்படம் இருக்கும் என்று பார்த்தால் அப்படியில்லை.
பெருமாள்பிச்சையின் குடும்பம் கொழும்புவில் இருக்கிறது.

அவருக்கு மகேந்திர பிச்சை (ஓ.ஏ.கே.சுந்தர்), தேவேந்திர
பிச்சை (ஜான் விஜய்), ராவண பிச்சை (பாபி சிம்ஹா)
என்று மூன்று மகன்கள். தங்களின் தந்தையின் ‘மறைவில்’
ஏதோ மர்மிருப்பதாக கருதும் அவர்கள் தாயின்
ஆலோசனைப்படி தமிழகத்திற்கு வருகிறார்கள்.

தனது தந்தை கோழைத்தனத்துடன் தலைமறைமாகவில்லை,
ஆறுச்சாமியினால் ‘எண்கவுண்ட்டர்’ செய்யப்பட்டார்
என்கிற ‘அரிய உண்மையைக்’ கண்டுபிடிக்கும் அவர்கள்,
பெருமாள்பிச்சைக்கு சிலை வைத்து அவரின் புகழை ஊரில்
வலுக்கட்டாயமாக நிலைநிறுத்துகிறார்கள்.
தந்தையின் அராஜகத்தை தொடர்கிறார்கள்.

ஒருவேளை, பெருமாள்பிச்சையின் மகன்களுக்கும்
ஆறுச்சாமிக்கும் இடையிலான மோதலாக இந்த திரைப்படம்
இருக்குமோ என்று நினைத்தால் அங்கும் ஒரு திருப்பத்தை
வைத்திருக்கிறார் இயக்குநர்.

’28 வருடங்களுக்குப் பிறகு’ என்கிற ஆச்சரியமான
குறிப்புடன் படம் நகர்கிறது. ஆம். நீங்கள் யூகித்தது சரிதான்.
பெருமாள் பிச்சையின் மகன்களால் ‘ஆறுச்சாமி’ கொலை
செய்யப்பட்டு விட, தனது தந்தையின் மறைவிற்கு
காரணமானவர்களை அதே ACP பதவியில் இருந்து
கொண்டு மகன் ‘ராமசாமி’ பழிவாங்குவதுதான் மீதிக்கதை.

ஆக இது ‘ராமசாமி’க்கும் ‘ராவண பிச்சைக்கும்’ இடையில்
நிகழும் நவீன ராமாயணம். இராவணன் என்கிற பிம்பத்தை
‘காலா’வின் மூலம் மாற்றியமைக்க ரஞ்சித் முயலும் போது,
அதை மரபின் பார்வையில் மீண்டும் திருப்பி வைத்திருக்கிறார்
ஹரி.

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 22, 2018 12:35 pm




இளம் நாயகியை (கீர்த்தி சுரேஷ) இத்திரைப்படத்தில்
இணைப்பதற்காக, ‘இருபத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு’
என்று காலத்தை நகர்த்தியிருக்கும் இயக்குநர், அதே
விக்ரமை இளம் நாயகனாக முன்நிறுத்தியிருப்பது, எப்படி
கணக்குப் போட்டுப் பார்த்தாலும் தலைசுற்ற வைக்கும்,
புரியாத நகைச்சுவை.

முதிர்நாயகனாக முன்னேறிக் கொண்டிருக்கும் விக்ரமிற்கும்
கீர்த்திசுரேஷிற்குமான பொருத்தம் உவப்பதானதாக இல்லை.
ஆனால் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.

2003-ல் வெளியான திரைப்படத்தில் வெளியான அதே
தோற்றத்தை ஏறத்தாழ இன்னமும் தக்க வைத்திருக்கும்
விக்ரமின் உழைப்பிற்கு ஒரு பாராட்டு.

முகம் முற்றிப் போனாலும், மனிதர் ஏறக்குறைய அதே
‘ஆறுச்சாமி’யாக களத்தில் இறங்கி எதிரிகளைப்
பந்தாடுவது பெரிய முரணாகத் தோன்றவில்லை.
சண்டைக்காட்சிகள் ரகளையாக இருக்கின்றன.

கீர்த்தி சுரேஷ் வழக்கமான நாயகி. விக்ரமிடம் தொடர்ந்து
காதலைக் கோரும் விஷயத்தில் பரிதாபத்தை
ஏற்படுத்துகிறார்.
தன்னைக் காப்பாற்றும் நாயகனின் மீது காதல்
உருவாவதெல்லாம் ‘கிளிஷே’ என்றாலும், சண்டைக்
காட்சிகளுக்கு இடையில் ஒலிக்கும் ‘அதிரூபனே’ என்ற
பாடல் இனிமையாகவும் ரசனைக்குரியதாகவும்
காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பிரதான வில்லனாக பாபிசிம்ஹா. குருவி தலையில்
பனங்காய் என்கிற அளவில் அவருக்கு இது பெரிய சவால்
என்றாலும் தன்னால் இயன்ற பங்களிப்பை அளித்து
‘மோசமில்லை’ என்று சொல்ல வைத்திருக்கிறார்.

ஆனால், ‘அவன் பேசும் போது கவனிச்சியாலே.. காது ஆடுது
பாரு.. நம்ம சாதிக்காரப் பயதேன்’ என்று பெருமாள்
பிச்சையிடம் இருந்த நகைச்சுவையும் பிரத்யேகமான
வில்லத்தனமும் பாபி சிம்ஹாவிடம் இல்லையென்பதால்
வழக்கமான எதிர்நாயகனாக இவரது பாத்திரம் அ
மைந்திருக்கிறது.

சூரியின் காமெடி வழக்கம் போல் எங்குமே ஒட்டவில்லை.
ரசிக்க வைக்கவில்லை என்பதற்கும் மேலாக எரிச்சலும்
ஊட்டுகிறது. பிரபு, ஐஸ்வர்யா, இமான் அண்ணாச்சி,
உமா ரியாஸ்கான், சுதா சந்திரன் போன்றவர்களோடு
முதல் பாகத்தில் இருந்த டெல்லி கணேஷ், சுமித்ரா,
ரமேஷ் கண்ணா, கிரேன் மனோகர் என்று பல
பாத்திரங்களால் இத்திரைப்படம் நிறைந்திருந்தாலும்
எவருமே மனதில் ஒட்டவில்லை.
-
--------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 22, 2018 12:37 pm


‘டமுக்கு டம்மா’ என்கிற ஒரே டியூனை வைத்துக் கொண்டு
தன் ஒட்டு மொத்த காலத்தையும் இசையமைப்பாளர்
தேவி ஸ்ரீ பிரசாத் ஓட்டி விடுவார் போலிருக்கிறது.

‘அதிரூபனே’ தவிர இதர அனைத்துப் பாடல்களும் கவனத்தைக்
கவரவில்லை என்பதோடு இடையூறாகவும் அமர்ந்து
எரிச்சலூட்டியிருக்கின்றன. பின்னணி இசை சற்று தேவலை.
ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாத குறை வெளிப்படையாகத்
தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் ப்ரியனின் மறைவைத் தொடர்ந்து
வெங்கடேஷ் அங்குராஜ் அந்தப் பணியைத் தொடர்ந்திருக்கிறார்.
‘வேகமான திரைக்கதை’ என்கிற பெயரில் காட்சிகளை
சட்சட்டென்று மாற்றும் கொடுமையை சற்று மட்டுப்
படுத்தியதற்காக எடிட்டர்களுக்கு நன்றி சொல்லலாம்.

மற்றபடி ஹரியின் திரைப்படத்தில் வழக்கமாக இருக்கும்
அனைத்து அம்சங்களும் அபத்தங்களும் இதில் இருக்கின்றன.
நாயகனும் வில்லனும் பரஸ்பரம் சவால் விட்டுக் கொள்வது,
நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி எதிரியின் சதியை
வீழ்த்துவது, பழிவாங்குதலுக்காக புதுமையான வழிகளைப்
பயன்படுத்துவது, வாகனங்கள் ஆகாயத்தில் பறப்பது,
குறுக்கும் நெடுக்குமாக எல்லோரும் ஓடுவது என்று எல்லா
விஷயங்களும் இருக்கின்றன.

ஆனால், ‘ஆறுச்சாமி’யின் வீரம், விவேகம், மற்றும்
பெருமாள்பிச்சையின் ரசிக்க வைத்த வில்லத்தனம்
போன்றவைதான் காணவில்லை. அதற்காகத்தான்
முதல் பாகத்தை பார்வையாளர்கள் கொண்டாடினார்கள்
என்கிற விஷயம் இயக்குநருக்குப் புரிந்தால் சரி.
-
--------------------------
By சுரேஷ் கண்ணன்
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 22, 2018 12:40 pm

அடுத்த பாகத்தில் ராவண பிச்சை மகன் ராமசாமியை பழி தீர்ப்பது போல வரும் 


கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக