ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

+5
சிவனாசான்
ayyasamy ram
T.N.Balasubramanian
சிவா
ஞானமுருகன்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? - Page 2 Empty கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by ஞானமுருகன் Fri Sep 21, 2018 4:13 pm

First topic message reminder :

'கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - Thamizvanan   
.
.
அன்பர்கள் எவரேனும் இந்த புத்தகத்தை படித்தது உண்டா. உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down


கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? - Page 2 Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by ஞானமுருகன் Mon Sep 24, 2018 6:49 pm

கீழ் உள்ள பதிவு வலை தளத்தினுள் எடுக்க பட்டது. மேலும் என்னை இந்த பதிவு இந்த புத்தகத்தை படிக்க தூண்டியது. நேற்று தான் படிக்க ஆரம்பித்து உள்ளேன். இருந்தாலும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆராந்து இந்த கதையை எழுதி இருந்தாலும் இந்த பதிவை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நான் படங்களையும் சிறு வயது வரலாறு படித்து கட்ட பொம்மன் இப்படி தான் இருந்துருப்பார் என்று நினைத்தது உண்டு. இந்த புத்தகம் முழுமையாக படித்து என் சொந்த கருத்துக்களை பதிவிடுகிறேன்.

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’
‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’
(ஒர் பார்வை)

கடந்த சனவரி 2011 அன்று சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன் அதில் மூன்று புத்தகங்களை வாங்கினேன் அதில் ஒன்று தமிழ்வாணன் எழுதிய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ என்ற நூலாகும்.
அந்நூலில் உள்ள பல செய்திகள் நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்கு மாறாக இருந்தன எனவே அதனைத் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலில் என்னை வியப்பில் ஆழ்த்தியது கட்டபொம்மனின் தாய் மொழி தெலுங்கு என்பதாகும். பலபேர் இன்று வரை கட்டபொம்மனை பச்சைத் தமிழன் என்றே போற்றிப் பரப்புரை செய்து வருகிறார்கள். ஒரு தெலுங்கனைத் தமிழன் என்று காட்டிக்கொள்வதில் தமிழர்களுக்கு என்ன பெருமையோ அல்லது தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களுக்குத் தான் என்ன சிறுமையோ தெரியவில்லை. ஆகமொத்தத்தில் கட்டபொம்மன் தெலுங்கன் என்பதில் தெளிவு கொள்வோம்.
கட்டபொம்மனின் பரம்பரையில் முதலாமவன் கட்ட பிரமையா ஆவான் இவன் மகன் கட்டபிரமையா என்ற முதலாம் ஜெகவீரப் பாண்டிய கட்டபொம்மன் என்பவனே முதல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனாவான் (1709-1736) இவரே வீரபாண்டியக் கட்டபொம்மனின் கொள்ளுப் பாட்டனும் ஆவார்.
வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கும் வெள்ளையன் கலெக்டர் ஜாக்சனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழ்வாணன் அவர்கள் தன்னுடைய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ நூலில் குறிப்பிட்டுள்ளதை மிகச் சுருக்கமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன், வரிகட்டச் சொல்லி வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்புகிறார். வீரபாண்டியக் கட்டபொம்மனோ தவணை மேல் தவணை சொல்லித் தட்டிக்கழித்து வருகிறான். இதனால் ஆத்திரம் கொண்ட ஜாக்சன், தன்னை 05.09.1798 அன்று இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து பார்த்து விளக்கம் (பேட்டி) தரவேண்டும் இல்லையேல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் பறிமுதல் செய்யப்படும் என்று கடிதம் அனுப்பினார்.
ஜாக்சனின் கடிதத்தைக் கண்டதும் கட்டபொம்மன் குறிப்பிட்ட நாளில் ஜாக்சனைப் பார்க்க இராமநாதபுரத்திற்குத் தன் பறிபாரங்களுடன் செல்கிறார். கட்டபொம்மன் தன்னைப் பார்க்க வருகிறார் என்று அறிந்ததும் ஜாக்சன் குற்றாலத்திற்குக் கிளம்பிவிடுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திப்பதற்காக, ஜாக்சனை பின் தொடர்ந்து குற்றாலத்திற்கு செல்கிறார் அங்கும் கட்டபெம்மனை பார்க்க ஜாக்சன் மறுத்துவிடுகிறான். இப்படியே ஒவ்வொரு ஊராக அதாவது சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, சிறிவில்லிபுத்தூர், பேரையூர், பவாலில், பள்ளிமடை, கமுதி என்று சுற்றி இறுதியில் இராமநாதபுரத்தை வந்தடைந்தார் ஜாக்சன். கட்டபொம்மனும் ஜாக்சன் சென்ற ஊருக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதில் எந்த ஊரிலும் கட்டபொம்மனை சந்திக்க விரும்பாமல் அலைகழித்து வந்தார்.
இறுதியில் கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்து விளக்கம் கொடுத்தான், வரிகட்டாமையைப் பற்றி ஜாக்சன் கேட்க, தான் கட்ட வேண்டிய பணத்தையும் கையோடு கொண்டுவந்துள்ளதாகக் கூறினான். அடுத்து அரசு கிராமங்களில் குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பாக கேட்க, அப்படியேதும் நான் செய்யவில்லை என்று கட்டபொம்மன் மறுத்துக் கூறுகிறார். இறுதியாக, “நமக்குள் ஏற்பட்ட இந்த உரையாடலைச் சென்னைத் தலைமைக்கு அனுப்புகிறேன் அதற்கான பதில் வரும் வரை நீங்கள் இங்கு இருக்கவேண்டும்” என்று ஜாக்சன் கூறியதும் கட்டபொம்மன் அஞ்சி அங்கிருந்து தப்பிவிடுகிறார். அவர் தப்பும் போது ஏற்படுகிற கலவரத்தில் ஒரு வெள்ளையன் கொலை செய்யபடுகிறான். கட்டபொம்மனின் அமைச்சனும் ஆலோசகனுமான தானாபதிப் பிள்ளை கைது செய்யப்படுகிறார்.
இந்த நிகழ்வு கட்டபொம்மனை வீரனாகக் காட்டுகிறதா? அல்லது வெள்ளையனுக்கு அடிபணிந்தவனாகக் காட்டுகிறதா? மேற்கண்ட நிகழ்வு பற்றிய பதிவு இன்றும் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்கிறார். அப்படி என்றால் கட்டபொம்மன் வெள்ளையனுக்கு அஞ்சினான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அந்நூலில் குறிப்பிட்டுள்ள மற்றுமொரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும் அதாவது கட்டபொம்மனைத் தூக்கில் போடுவதற்கு கூறப்பட்ட காரணங்களும் நிகழ்வுகளும் ஆகும்.
கட்டபொம்மனை பற்றிக் கூற ஆரம்பித்ததில் இருந்தே கட்டபொம்மன் தன்னுடைய பாளையத்தை விடுத்து மற்றைய பாளையங்களில் அவ்வப் போது கொள்ளையடித்து வந்துள்ளான் என்று கூறிப்பிட்டுள்ளார். அதில் ஊற்று மலைப் பாளையத்தார் தங்கள் பாளையத்தில் கட்டபொம்மன் கொள்ளையடித்ததை வெள்ளையனிடம் புகார் தெரிவித்துள்ளார். அடுத்து சிவகிரி பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஆட்சியைப் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கட்டபொம்மன் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியது மற்றுமொன்று தனது தம்பி மற்றும் தனது அமைச்சன் தானாபதிப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வெள்ளையனின் நெற் களஞ்சியத்தைத் தன் ஆட்களை விட்டுக் கொள்ளையடித்தது. இது போன்ற புகார்களை அடுத்து கட்டபொம்மனை மேஜர் பானர்மென் தன்னை சந்தித்து விளக்கம் தரக் கூறுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க அஞ்சு நாட்களைக் கடத்துகிறார். தன்னை சந்திக்காமல் காலம் கடத்தியதால் பானர்மென் பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுக்கிறார். சண்டை நடக்கும் போதே கட்டபொம்மன் தனது பாளையத்தில் இருந்து தப்பிவிடுகிறார். (இந்த இடத்தில் தமிழ்வாணன் ஒன்றைக் குறிப்பிடுகிறார் அதாவது கட்டபொம்மன் தப்பித்ததே திருச்சியில் உள்ள வெள்ளைகார மேல் அதிகாரியிடம் சென்று மன்னிப்புக்கேட்டு தப்பிவிடலாம் என்பதற்காகவே தப்பினான் என்கிறார்).
கட்டபொம்மனைப் பிடிப்பதற்காக பானர்மேன் எட்டயபுர பாளையத்திடம் இருந்து நன்கு வழிகளைத் தெரிந்த சில வீரர்களை கேட்டுப் பெற்றுக் கொண்டு கட்டபொம்மனைத் தேடலானான். அதன் பிறகு கட்டபொம்மன் புதுக்கோட்டைப் பாளையத்தில் உள்ள ஒரு காட்டில் மறைந்திருப்பதை அறிந்ததும் பானர்மேன் கட்டபொம்மனைப் பிடித்துத் தரும்படி கேட்கப் புதுக்கோட்டைப் பாளையத் தளபதி அம்பலக்காரன் தலைமையிலான குழு கட்டபொம்மனைப் பிடித்து பானர்மேனிடம் ஒப்படைத்தார்கள். மேற்கண்ட பத்தியில் குறிப்பிட்டுள்ள காரணங்களைக் காட்டி தூக்கில் போடுகிறார்கள்.

நமக்குள்ள வருத்தங்கள் எவையென்றால்

 ஒரு தெலுங்கனைத் தமிழன் என்று பரப்புரை செய்வது,

 வெள்ளைக்காரனுக்கு அவ்வப்போது பணிந்து சென்ற ஒருவரை முழுக்க முழுக்க வெள்ளையனை எதிர்த்தான் என்று பரப்புரை செய்வது.

 எட்டப்பன் என்ற ஒருவனைத் தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிடவேயில்லை. ஆனால் திரைபடத்தில், காட்டிக் கொடுத்தான் என்று எட்டப்பன் என்ற ஒருவனைக் காட்டியுள்ளது.

 ஆக, கட்டபொம்மன் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் பாதிக்கு மேல் வரலாற்றுப் பிழையாகவே இருக்கும் என்று கருதுகிறேன். அதில் “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் தரவேண்டும் கிஸ்தி (வரி)” போன்ற நீண்ட வசனத்தைப் பேசியிருக்க மாட்டான். அப்படியே பேசியிருந்தாலும் தெலுங்கில் தான் பேசியிருக்க வேண்டும்.

ஆக, தெலுங்கனுக்குத் தமிழன் அடிமை, வெள்ளையனுக்குத் தெலுங்கன் அடிமை அப்படியென்றால் அன்றைக்குத் தமிழகத்தை ஆண்ட தெலுங்கனுக்கு தமிழன், அடிமைக்கு அடிமையாகத் தான் இருந்துள்ளான்.
தமிழர்களே அவசியம் இந்நூலை வாங்கிப் படித்து தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை அறிந்துக் கொள்ளுங்கள்.

சபெ






“வெள்ளையனுக்கு அடிமைப்படாத ஒரு சுதந்திர அரசுக்கு அதிபதியாக இருந்திருந்தால், கட்டபொம்மன் கலெக்டரைக் காணப் போயிருக்க வேண்டியதில்லை. கலெக்டரின் ஆணையை அவன் ஆண்மையுடன் மறுத்து நின்றிருக்கலாம். அவன் என்றுமே கும்பினிக்கு வரி செலுத்தாதவனாக இருந்தால், புதிதாக வந்து வரி கேட்பவர்களிடன் கொடுக்க முடியாது என்று உறுதியுடன் கூறியிருக்கலாம். அவன் எழுதியுள்ள எந்த ஒரு கடிதத்திலும், கட்டபொம்மன் ஆங்கிலக் கும்பினியின் மேலாதிக்கத்தை எதிர்க்கவில்லை. வரி கொடுக்க முடியாது என்றும் சொல்லவில்லை. அதற்கு மாறாக, வரி செலுத்துவதற்கு தவணைகள் தாம் கேட்டிருக்கிறான் அல்லது சாக்குப்போக்குகள் சொல்லி வந்திருக்கிறான்” (பக்கம் 159, கட்டபெம்மன் கொள்ளைக் காரன்)


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? - Page 2 Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by ஞானமுருகன் Mon Sep 24, 2018 7:00 pm

சிவனாசான் wrote:அன்பரே வியூ ப்ரோபைல் என்பது சேர்ந்த நாள் வசிக்குமிடம் பெயர்மட்டும் போதாது.
வயது , செல்பேசி எண், ஈ மெயில், கல்வி தகுதி, பணியாற்றும் தொழில், உங்கள் மனம் விரும்பும் செயல்பாடுகளை அளித்தலே சரி . பூத்தாக இருக்கூடாது. அது புரோபைல் அல்ல சிலர் இப்படித்தான் திருடனாக உலாவருகின்றனர் ,அது சிறப்பல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1278938

ஐயா,
நான் புதிதாக இணைந்து உள்ளேன். இந்த வலை தளத்தை முழுவதும் அறிந்து கொள்ள சிறிது நேரம் தேவை படுகிறது. மேலும்  நான் முழு நேரம் இங்கு இருப்பதில்லை. நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் அவ்வப்போது தகவல் அளித்து கொண்டு இருக்கிறேன். சிறிது அவகாசம் கொடுங்கள். முழுவதுமாக தகவல்களை நிரப்புகிறேன். நான் எந்த தவறான எண்ணத்திற்காகவும் இங்கு வரவில்லை. எங்களுக்கு தமிழ் புத்தகம் இந்த நாட்டில் கிடைப்பதில்லை. அப்படியே நமது நாட்டில் இருந்து வாங்கினால் புத்தகத்தின் விலை விட  மடங்கு சேவை விலை உள்ளது. இந்த வலைத்தளத்தில் நல்ல பதிவுகளை கண்டு மட்டுமே உறுப்பினர் ஆகி இருக்கிறேன். ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.




ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? - Page 2 Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by T.N.Balasubramanian Mon Sep 24, 2018 7:12 pm

தொடருங்கள் ஞானமுருகன் அவர்களே.
உங்கள் மேல் குற்றம் ஒன்றுமில்லை.
சிலரிடம் இருந்து சில நேரங்களில் வெளிவரும்
மறுமொழிகள் அவசரத்தில் உதிர்ந்தவையாக இருக்கலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? - Page 2 Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by ஞானமுருகன் Fri Nov 09, 2018 3:39 pm

முழு புத்தகம் தரவிறக்கம் செய்துகொள்ள

https://www.4shared.com/office/6unewypRfi/Kattabomman_Kolliyan-Thamizhva.html


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? - Page 2 Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by ஞானமுருகன் Fri Nov 09, 2018 4:01 pm

கட்டபொம்மன் கொள்ளையன் 75% படித்து விட்டேன். தமிழ்வாணன் ஆராய்ச்சி புத்தகம். நிறைய ஆவணம் சொல்லி இருக்காரு , ஆனால் எல்லாமே சென்னை எழும்பூர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வரலாறு ஒரே காலத்தை காட்ட மருதநாயகம், திப்புசுல்தான், ஆற்காடு நவாபு எல்லோரையும் மேற்கோள் காட்டி உள்ளார். ஆனால் ஏன் எல்லோரும் (ம. போ. சி உட்பட) கட்டபொம்மு ஆங்கிலேயரை எதிர்த்தார் என்று மாற்றி கூறினார்கள் என்று தெரியவில்லை .

எப்படியோ தமிழ்வாணன் தவிர மேலும் சில வரலாற்று பாடல்கள், கவிதாள்களையும் மேற்கோள் காட்டி கட்ட பொம்மன் கோழை, நயவஞ்சகம் செய்தவர் அவர் மட்டும் இல்லாமல் அவர் தாத்தா, அப்பா அனைவரும் தவறானவர்கள்னு இந்த புத்தகத்தில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? - Page 2 Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 09, 2018 7:00 pm

கட்டபொம்மன் கள்வன் என்ற கூற்று
பதிவுகளாக இருப்பினும் , நம் அனைவரின்
மனதிலும் வெள்ளையனை எதிர்த்து நின்ற
மாவீரனாக வேரூன்றி உள்ளார். அதை சிதைக்க வேண்டாமே.
நன்றி ஞானமுருகன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? - Page 2 Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by ஞானமுருகன் Fri Nov 09, 2018 7:09 pm

புத்தகங்களை தேடி தேடி படிக்க வேண்டும் என்ற கூற்றுக்கு ஏற்ப ஒரு ஆர்வத்தில் பதிவிட்டு விட்டேன். தவறு இருந்தால் தயவு செய்து இந்த திரியை அழித்து விடவும்.

மேலும் நாணயத்தின் இரு பக்கங்களையும் பார்ப்பவன் நான். ஆகையால் இந்த புத்தகத்தின் கூறப்பட்டுள்ள கட்டபொம்மனின் களங்கத்தை துடைப்பதற்க்காக இதை வாசித்தேன். ஆனால் ஆசிரியர் அப்படி ஒரு வாய்ப்பையே தராமல் மிக நேர்த்தியாக கையாண்டு உள்ளார். சரியான வரலாறை அறிந்துகொள்ள ஆசிரியரின் உழைப்புக்கு பாராட்டுக்கள் கூறிக்கொள்வதில் கடமை பட்டுளேன் (புத்தகத்தை படித்ததினால் மட்டும்)

உண்மையை அறிந்து கொள்ளவதே அன்றி கட்டபொம்மனில் புகழை சிதைப்பது என் நோக்கம் அல்ல.

ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து மேலே கூறியது போல இந்த திரியை அழித்து விடவும். நன்றி


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? - Page 2 Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 10, 2018 7:21 am

ஞானமுருகன் wrote:புத்தகங்களை தேடி தேடி படிக்க வேண்டும் என்ற கூற்றுக்கு ஏற்ப ஒரு ஆர்வத்தில் பதிவிட்டு விட்டேன். தவறு இருந்தால் தயவு செய்து இந்த திரியை அழித்து விடவும்.

மேலும் நாணயத்தின் இரு பக்கங்களையும் பார்ப்பவன் நான். ஆகையால் இந்த புத்தகத்தின் கூறப்பட்டுள்ள கட்டபொம்மனின் களங்கத்தை துடைப்பதற்க்காக இதை வாசித்தேன். ஆனால் ஆசிரியர் அப்படி ஒரு வாய்ப்பையே தராமல் மிக நேர்த்தியாக கையாண்டு உள்ளார். சரியான வரலாறை அறிந்துகொள்ள ஆசிரியரின் உழைப்புக்கு பாராட்டுக்கள் கூறிக்கொள்வதில் கடமை பட்டுளேன் (புத்தகத்தை படித்ததினால் மட்டும்)

உண்மையை அறிந்து கொள்ளவதே அன்றி கட்டபொம்மனில் புகழை சிதைப்பது என் நோக்கம் அல்ல.

ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து மேலே கூறியது போல இந்த திரியை அழித்து விடவும். நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1285058
ஞானமுருகன் உங்கள் பதிவு நீங்கள் படித்து
அறிந்து தெளிவு பெற்ற பின்பு தான் இதை
பதிந்து இருக்கிறீர்கள்.
உங்கள் உழைப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது.
எனவே நீங்கள் எந்த வித தயக்கமின்றி இதை தொடரலாம்.
நன்றி ஞானமுருகன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? - Page 2 Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by கண்ணன் Sat Nov 10, 2018 2:36 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:கட்டபொம்மன் கள்வன் என்ற கூற்று
பதிவுகளாக இருப்பினும் , நம் அனைவரின்
மனதிலும் வெள்ளையனை எதிர்த்து நின்ற
மாவீரனாக வேரூன்றி உள்ளார். அதை சிதைக்க வேண்டாமே.
நன்றி ஞானமுருகன்.
மேற்கோள் செய்த பதிவு: 1285056

ஐயா

அடுத்த தலைமுறையாவது உண்மையான வரலாறைத் தெரிந்து கொள்ளட்டும்
வரலாற்று திரிபுகளை நாமும் நம்ப வேண்டாம்.
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? - Page 2 Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 12:28 pm

கண்ணன் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:கட்டபொம்மன் கள்வன் என்ற கூற்று
பதிவுகளாக இருப்பினும் , நம் அனைவரின்
மனதிலும் வெள்ளையனை எதிர்த்து நின்ற
மாவீரனாக வேரூன்றி உள்ளார். அதை சிதைக்க வேண்டாமே.
நன்றி ஞானமுருகன்.
மேற்கோள் செய்த பதிவு: 1285056

ஐயா

அடுத்த தலைமுறையாவது உண்மையான வரலாறைத் தெரிந்து கொள்ளட்டும்
வரலாற்று திரிபுகளை நாமும் நம்ப வேண்டாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1285118
உங்கள் கூற்று உண்மை
நிச்சயமாக நான் இதை
ஏற்றுக் கொள்கிறேன்.
நன்றி கண்ணன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? - Page 2 Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum