புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
91 Posts - 61%
heezulia
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
7 Posts - 5%
eraeravi
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
viyasan
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
283 Posts - 45%
heezulia
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
19 Posts - 3%
prajai
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_m10வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 21, 2018 12:20 pm

வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

ஆகஸ்ட் கடைசியில் வாட்ஸ்அப்பில் ஒரு வதந்தி வேகமாக வலம்வந்தது. ‘செப்டம்பர் முதல் வாரத்தில் வரிசையாக வங்கி விடுமுறைகள் வருகின்றன; செப்டம்பர் 2 ஞாயிறு, 3 கிருஷ்ண ஜெயந்தி, 4-5 தேதிகளில் வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்; ஏடிஎம் இயந்திரங்களில்கூடப் பணம் இல்லாமல் போகும்’ என்று அந்தச் செய்தி பீதியூட்டியது. அடுத்த நாள் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்தது: ‘செப்டம்பர் 3-ல் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை; 4-5 தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவது ரிசர்வ் வங்கி ஊழியர்கள்தாம், பொதுத்துறை வங்கிகள் வேலைசெய்யும்.’

இப்படியான விளக்கத்தை வெளியிட எல்லாச் சமயங்களிலும் அவகாசம் வாய்ப்பதில்லை. கடந்த ஆண்டின் கார்காலத்தில் மும்பையில் ஓர் அடைமழை நாளின் அதிகாலையில் நகரத்தின் பலருடைய செல்பேசிகள் ஒளிர்ந்தன. நகரைப் பியான் எனும் புயல் தாக்கப்போவதாக வந்த தகவல், உடன் றெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. உண்மையில், பியான் 2009-ல் இலங்கையைத் தாக்கிய புயலின் பெயர். மும்பைக்குப் புயல் அபாயம் ஏதுமில்லை என்று வானிலை மையம் அறிவிக்க நண்பகலானது. அதற்குள் பள்ளிகளுக்கும் பணியிடங்களுக்கும் போக வேண்டிய பலர் வீடுகளிலேயே தங்கிவிட்டனர்.

இதில் உச்சமாகச் சில வாட்ஸ்அப் வதந்திகளைத் தொடர்ந்து குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பல மாநிலங்களில் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கடந்த மே, ஜூன் மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். அரசாங்கம் கும்பல் கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

யார் பொறுப்பு?

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வதந்திகள் பரவுவதைத் தடுப்பது வாட்ஸ்அப் நிறுவனத்தின் பொறுப்பு என்கிறது. வாட்ஸ்அப் நிறுவனத்தைக் கடுமையாக எச்சரிக்கவும் செய்தது. வாட்ஸ்அப் நிர்வாகமும் வதந்திகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக வாக்களித்திருக்கிறது. அதே வேளையில், சில அறிவியலாளர்கள், வாட்ஸ்அப் ஒரு தொழில்நுட்பம், அது சூதுவாது அறியாதது, பயனர்கள்தான் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். இந்த அவலத்தை யார் கட்டுப்படுத்துவது? பயனர்களா? வாட்ஸ்அப் நிர்வாகமா?

சிலகாலம் முன்பு வரை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் மூலமாகவே செய்திகள் வெளியாகின. அவை ஒரு தலைப்பட்சமாகவோ ஊதிப் பெருக்கியதாகவோ இருக்கலாம். ஆனால், பொய்ச் செய்திகள் குறைவு. ஏனெனில், எழுதியவருக்கும் வெளியிடுபவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் 20 கோடிப் பேர் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். இன்று வாட்ஸ்அப் வெறும் வலைதளம் இல்லை. அதுவே ஊடகமாக வளர்ந்திருக்கிறது. இதற்குத் தளம் அமைத்துக் கொடுக்கும் நிறுவனத்துக்கும் பொறுப்பு இருக்கிறது.

ஃபேஸ்புக்கில் இப்படியான பொய்ச் செய்திகளோ அவதூறுகளோ வெளியானால், அந்தப் பதிவுகளை நிர்வாகத்தால் நீக்கவிட முடியும். ஆனால், வாட்ஸ்அப் மறையாக்கம் செய்யப்பட்டது. அதாவது, அனுப்புநரும் பெறுநரும்தான் தகவலைப் படிக்க முடியும், வாட்ஸ்அப்பின் சர்வர் அதைச் சேமித்து வைத்துக்கொள்வதில்லை.

ஒருவேளை பெறுநரின் அலைபேசி அந்தத் தகவலைப் பெற்றுக்கொள்வதில் சுணக்க மிருந்தால், சர்வர் அதை 30 நாட்கள் வரை வைத்திருந்துவிட்டுப் பின்னர் அழித்துவிடும். இந்த மறையாக்கத்தால் பயனர்கள் தகவல்களை அந்தரங்கமாகப் பரிமாறிக்கொள்ள முடிகிறது. இதை நிலைநிறுத்திக்கொண்டே, உண்மைச் செய்திகளின் பரிமாற்றத்துக்கு வகைசெய்கிற சவால் வாட்ஸ்அப்புக்கு இருக்கிறது.

அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து வாட்ஸ்அப் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சமீப காலமாக ஒரு தகவலை ஃபார்வேர்டு செய்தால், அது ஃபார்வேர்டு என்கிற அடையாளத்தோடுதான் பகிரப்படுகிறது. இப்போது ஒரு தகவலை ஒரு சமயத்தில் ஐந்து முறைக்கு மேல் பகிர முடியாது. வாட்ஸ்அப் திரையில் வலதுமூலையில் ஒளிரும் துரித ஃபார்வேர்டு விசை விரைவில் அகற்றப்படும். குழுமங்களில் யார் யார் பதிவேற்றலாம் என்று அட்மின் நிர்ணயிக்க முடியும். சமீபத்தில் நடந்த மெக்ஸிகோ தேர்தலின்போது பயனர்கள் வேண்டிக் கேட்டுக்கொண்ட தகவல்கள் மெய்தானா என்று ஒரு சமூகக் குழு பரிசோதித்தது. இந்த மாதிரியை 2019 பொதுத் தேர்தலின்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் வாட்ஸ்அப் ஆலோசித்து வருகிறது. ஆனால், தொழில்நுட்பரீதியாக வாட்ஸ்அப்பால் இன்னும் அதிகம் செய்ய முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

வாட்ஸ்அப் வதந்திகள் சில முறை கும்பல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களுக்கு இட்டுச்செல்கிறது. தனி நபராகச் செய்வதற்கு அஞ்சுகிற செயல்களைக் கும்பல் சேருகிறபோது சிலர் செய்யத் துணிகிறார்கள். ஏனெனில், கும்பலுக்கு முகம் இல்லை. முகவரி இல்லை. அதற்கு வழக்கும் விசாரணையும் தேவை இல்லை. தானே தீர்ப்பு எழுதித் தண்டனையையும் நிறைவேற்றத் துடிக்கிறது. கும்பலின் வன்முறையில் உயிரிழப்பதும் காயப்படுவதும் மனிதர்கள் மட்டுமில்லை சட்டத்தின் மாட்சிமையும்தான். அரசு இதை அனுமதிக்கலாகாது. உச்ச நீதிமன்றமும் இதையேதான் வலியுறுத்தியிருக்கிறது.

பயனரின் பொறுப்பு

இந்தியாவில் வாட்ஸ்அப் பயனர்கள் பலரும் முதல் முறையாக இணையத்தைத் துய்ப்பவர்கள். அவர்களுக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவே செய்திகள் வருகின்றன. அவர்கள் எல்லாத் தகவல்களையும் உண்மை என்று நம்புகின்றனர். அவர்களுக்கு டிஜிட்டல் கல்வி அவசியம். இதை வாட்ஸ்அப் நிர்வாகமும் சமூகசேவை அமைப்புகளும் வழங்க முடியும்.

சில நாட்களுக்கு முன்னர், பயனர்களுக்காக வாட்ஸ்அப் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த ஆலோசனைகள் பலவும் பயன் தரக்கூடியவை. ஒரு தகவலை ‘ஃபார்வேர்டு’ செய்வதற்கு முன்னால் பரிசீலிக்க வேண்டும்.

குறிப்பிட்ட தகவல் உண்மைதானா என்று பிற இணையதளங்களில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான பொய்ச் செய்திகளில் தகவல் பிழையும் எழுத்துப் பிழையும் மலிந்திருக்கும். அதிகம் பகிரப்பட்ட தகவல் உண்மையாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.

வாட்ஸ்அப், தகவல் பரிமாற்றத்துக்கு வராது வந்த மாமணி. அதைக் கூத்தாடி உடைத்துவிடக் கூடாது. அதன் களைகளை அகற்றுவதில் வாட்ஸ்அப் நிறுவனத்துக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அரசாங்கமும் சட்டத்தின் மாட்சிமை பேணப்படுவதில் கண்ணாக இருக்க வேண்டும். கூடவே, பயனர்களும் பண்பட வேண்டும்!

ரமணியன்

நன்றி : தமிழ் ஹிந்து - மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 21, 2018 12:31 pm

அடிக்கடி இது மாதிரி வாட்சப்பில் வருவதுண்டு.
காரணம் : நாந்தான் முதலில் எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன் .எனக்குதான் முதலில்
எல்லாச்செய்தியும் வரும் என்ற பொய்யான தற்பெருமை.

எனக்கு ஒரு முறை, வந்த வீடியோ மே மாதத்தில்.. திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அலைகள் எல்லாம் ஐஸ்
கட்டிகளாக இருந்தன. ( இந்தியால அதுவும் தென்னிந்தியாவில் நீர் எல்லாம் ஐஸ்கட்டியாக மாறுவது.யோசிக்கும் திறன் உள்ளவர்கள் இது போன்ற செய்திகளை அனுப்பவே மாட்டார்கள்.)
நேற்று இன்னொரு படம் ஒரே பிரவசத்தில் 17 குழந்தைகளால். வெளிநாட்டில்தான். ஜான் /ஜேம்ஸ்/ ஜெஸ்ஸி -------என J இல் ஆரம்பிக்கும் பெயர்கள்.

இன்னும் பல வீடியோக்கள் . கடவுள் பக்தி உள்ளவனும் நாஸ்திகன் ஆகிவிடுவான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 21, 2018 1:40 pm

இனி வதந்தி என்று சொல்ல வேண்டாம் வாட்சப் செய்தி என்று சொல்லலாம் 
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 21, 2018 2:32 pm

எங்கள் குரூப்பில் இருந்து ஒரு படம். குபேரன் கையிலிருந்து ஒளிக்கற்றை .
வருவது போல். அதை 7 பேருக்கு கிடைத்த உடனே அனுப்பினால் ஒரு நாளில்
எதிர்பாராத இடத்தில இருந்து பணம் வருமாம். நான் யாருக்கும் அனுப்பவில்லை.
2 நாட்கள் கழித்து, படம் போட்ட ஆளுக்கு எதிர் பாராத இடத்தில இருந்து பணம் வந்ததா என்று கேட்டேன். வரவில்லை என்று சொன்ன அவர், ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஒட்டிய இவரை போலீஸ் பிடித்து எதிர்பாராத விதமாக இவர் அபராதம் கட்டினாராம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 21, 2018 2:36 pm

T.N.Balasubramanian wrote:எங்கள் குரூப்பில் இருந்து ஒரு படம். குபேரன் கையிலிருந்து ஒளிக்கற்றை .
வருவது போல். அதை 7 பேருக்கு கிடைத்த உடனே அனுப்பினால் ஒரு நாளில்
எதிர்பாராத இடத்தில இருந்து பணம் வருமாம். நான் யாருக்கும் அனுப்பவில்லை.
2 நாட்கள் கழித்து, படம் போட்ட ஆளுக்கு எதிர் பாராத இடத்தில இருந்து பணம் வந்ததா என்று கேட்டேன். வரவில்லை என்று சொன்ன அவர், ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஒட்டிய இவரை போலீஸ் பிடித்து எதிர்பாராத விதமாக இவர் அபராதம் கட்டினாராம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1278532

ஒருவேளை இவருக்கு அந்த படத்தை அனுப்பியதே அந்த பணம் வசூல் செய்த போலீசாக இருக்குமோ



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 21, 2018 2:57 pm

இருக்காது, நிச்சயமாக இருக்காது.
எந்த தெய்வமாவது, மனுஷன் கிட்ட வந்து, எனக்கு பாப்புலாரிட்டி குறைந்து விட்டது
பணம் இல்லை, நீதான் சிரமேற்கொண்டு எனக்காக பிரசாரம் பண்ணு என்று கேட்குமா?
ஹெல்மெட் இல்லாமல் போலீஸ் இருக்கும் வழியாக வண்டியை ஒட்டி சென்ற இவர் மேல்தான்
தப்பு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2018 6:40 am

வாட்ஸப்பில் வரும் தகவல் உண்மையா பொய்யா என்று யாருமே அறிய முற்படுவதில்லை, உடனடியாக அந்தக் குப்பையை அடுத்தவர்களுக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு..

குப்பைச் செய்திகளைப் பகிர்வதால் என்ன கிடைக்கப் போகிறது என்பது தெரியவில்லை..

இவ்வாறு தகவல்களை அனுப்புபவர் அடிமுட்டாள் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்...





வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2018 6:45 am

'இவருக்கு உடல்நிலை சரியில்லை, இவருக்கு மருத்துவ செலவு இத்தனை லட்சம், இந்த தகவலைப் பகிர்ந்தால் வாட்ஸப் நிறுவனம் ஒரு பகிர்வுக்கு ஒரு ரூபாய் தருவதாக அறிவித்துள்ளது, எனவே பகிரவும்"

இதைப் பார்த்ததும் ஒரு நொடி கூட தாமதிப்பதில்லை, உடனடியாக மற்றவர்களுக்கு அனுப்பி விடுவார்கள்..

இது ஒரு முழுப் பொய் என்பதை அவர்கள் உணரத் தயாராக இல்லை என்றால் அவர்களுடன் வாட்ஸப் நட்பு வைத்து என்ன பயன், உடனடியாக தடை செய்து விரட்டிவிடுங்கள்..



வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2018 6:49 am

மேலும், இந்த தகவலை 10 குரூப்புக்கு அனுப்பவில்லை என்றால் உங்களுக்கு கெடுதல் நடக்கும் என்ற மன உளைச்சலை ஏற்படுத்தும் தகவலை அனுப்புவார்கள்.

இவர்கள் தானாக திருந்த வேண்டுமே தவிர வாட்ஸப் நிறுவனம் எப்படி இவர்களை கட்டுப்படுத்த முடியும்..



வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 22, 2018 10:55 am

சிவா wrote:'இவருக்கு உடல்நிலை சரியில்லை, இவருக்கு மருத்துவ செலவு இத்தனை லட்சம், இந்த தகவலைப் பகிர்ந்தால் வாட்ஸப் நிறுவனம் ஒரு பகிர்வுக்கு ஒரு ரூபாய் தருவதாக அறிவித்துள்ளது, எனவே பகிரவும்"

இதைப் பார்த்ததும் ஒரு நொடி கூட தாமதிப்பதில்லை, உடனடியாக மற்றவர்களுக்கு அனுப்பி விடுவார்கள்..

இது ஒரு முழுப் பொய் என்பதை அவர்கள் உணரத் தயாராக இல்லை என்றால் அவர்களுடன் வாட்ஸப் நட்பு வைத்து என்ன பயன், உடனடியாக தடை செய்து விரட்டிவிடுங்கள்..
மேற்கோள் செய்த பதிவு: 1278606


ஆம் தல நேத்து என் பனியன் தொலைந்து விட்டது 
வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? BUu0ynWbSBOlHe0jamhv+mens-vest-250x250
இந்த பனியன் படத்தை 10  பேருக்கு அனுப்பினால்  எனக்கு 10 பனியன் தருவதாக சோம்ராஜ் கம்பெனி சொல்லி இருக்காங்க 

தமிழனாக இருந்தால் பகிரவும்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக