Latest topics
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசுby ayyasamy ram Today at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ட்ரெஸ் உடலுக்கு நல்லது... எப்பொழுது தெரியுமா?
3 posters
Page 1 of 1
ஸ்ட்ரெஸ் உடலுக்கு நல்லது... எப்பொழுது தெரியுமா?
மன அழுத்தம், இதை எல்லா வயதினரும், பல அன்றாட அனுபவங்களுக்கு ‘ஸ்ட்ரெஸ்’, ‘டென்ஷன்’ என்று குறிப்பிடுவோம். இதனால் நமக்கு நன்மை, தீமை இரண்டும் நேரலாம். எந்தத் தருணங்களில் இது நமக்கு உதவுகிறது என்பதை முதலில் பார்வையிட்டு, பிறகு எப்பொழுது பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும், அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
‘யூஸ்ட்ரெஸ்’: ஜமாய்க்க வைக்கும் ஸ்ட்ரெஸ்
ஒன்றிற்காகக் கடினமாக உழைத்து, அல்லது தீவரமாக தயார் செய்து, செயல் படுத்தும் நேரங்களில், நாம் அனுபவிப்பது நன்மை தரும் ஸ்ட்ரெஸாகும். நம் தினசரி வாழ்வில் நிகழ்கின்றதுதான். ஓர் சில உதாரணங்கள்: நமக்குப் பிடித்த ஒருவருக்குப் பிறந்த நாள் என்று திடீரென்று ஞாபகம் வர, அவர்களுக்கு உடனடியாக நாமே ஒன்றை தயாராக்கித் தருவது, மற்றவர் முன் பேசுவதற்கு வாய்ப்பு அமைந்ததும், பேசுவதற்கு ஓர் சில நிமிடங்களுக்கு முன்னால், இன்டர்வியூவுக்குப் போகும் முன், விளையாட்டு மைதானத்தில் அந்த ஒரு பாயின்ட் வாங்கும் தருணம், என்று எவ்வளவோ சூழ்நிலைகள் பட்டியலிடலாம்.
இந்த ஒவ்வொரு தருணங்களிலும் ஆவலுடன் காத்திருப்பது நேரும். நமக்குள் ஒரு பரபரப்பு உண்டாகும். ‘நம்முடைய வாய்ப்பு எப்பொழுது வரும்?’, ‘சரியாகச் செய்வோமா?’ என்ற சிறு கேள்விகள் நமக்குள் எழும். இவை எல்லாமே நமக்கு ஆர்வமூட்டும், மறுபுறம் குதுகலமாகவும் இருப்போம். இந்தக் கலவையின் விளைவாக, சவாலைச் சந்திக்க முடியும் என்ற எண்ணம் மேலும் தீவிரமாக இயங்கச் செய்கிறது. வெல்லுவோம் என்று உறதி கொள்கிறோம்.
இது நம்மைத் தயார் படுத்திக் கொள்ள, நல்ல உணர்வுகளை எழுப்பும். இந்த நன்மை தரும் ஸ்ட்ரெஸிற்கு ‘யூஸ்ட்ரெஸ்’ என்ற பெயர். இதில், அதாவது, ‘யூஸ்ட்ரெஸ்’ என்றதில் நேர்மறையான சிந்தனையும் உணர்வும் சூழ்வதால் இதை ‘யூஸ்ட்ரெஸ்’ அதாவது, ‘நல்ல’ ஸ்ட்ரெஸ் என்று அழைப்பதுண்டு. வாட்டும் மன அழுத்தத்திற்கு இடமே கிடையாது!
இதுவே முடியுமோ, முடியாதோ என்று தத்தளித்து, தவித்து, சஞ்சலப் பட்டால், அதனால் வலுவிழந்து, முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டால், அல்ல மிக பதற்றத்துடன் எப்படியோ தேவையானதை செய்து முடித்தால், மனநலப் பிரிவில் இதைத் தான் ‘ஸ்ட்ரெஸ்’ ‘மன அழுத்தம்’ என்போம். ‘யூஸ்ட்ரெஸ்’ நிலைமைகள் இந்தத் திசைக்கு திரும்பினால் மன அழுத்தம் தோன்றலாம். உதாரணத்திற்கு, நுழைவுத் தேர்வு எழுத, பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள, அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், தன்னைத் தயார் படுத்திக் கொள்வது அவசியம் தான். நம் மனப்பான்மை உறுதி, தைரியம் என்று நேர்மறையாக இல்லாமல் பயம், சந்தேகம் என்ற எதிர்மறைகள் நம்மை ஆட்கொண்டால், மன அழுத்தம் தோன்றும்.
போராடுவது - ஓடுவது - உறைவது
மன அழுத்தத்தை தரக் கூடிய சூழ்நிலைகளை, நாம் கையாளும் முறைகளை ஆராய்ச்சியில் மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று, வெற்றிகரமான முடிவிற்காகப் போராடுவது (ஃபைட், Fight). மற்றொன்று, முடியாதென்று விட்டு விட்டு அதிலிருந்து ஓடுவது (ஃப்ளைட், Flight). மூன்றாவதாக, என்ன செய்வதென்று புரியாமல், எந்த முடிவும் எடுக்காமல், உறைந்து நிற்பது (ஃப்ரீஸ், Freeze). இந்த ‘Fight-Flight-Freeze’ (ஃபைட்- ஃப்ளைட் - ஃப்ரீஸ்) நாம் சூழ்நிலைகளை கையாளுவதைக் குறிக்கிறது.
சூழ்நிலைகளைச் சந்திக்கும் பொழுது, நம் உடல் இரண்டு முக்கியமான ரசாயனங்களான, ஆட்ரினலின், கார்டிஸால் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் நமக்கு பலம் அதிகமானது போல் தோன்றும். பரபரப்பாக வேலையை முடிப்போம். வேலைகளை முடித்த பிறகு தான் அசதி, சோர்வு இருப்பதையே கவனிப்போம்.
சில தருணங்களில் மட்டும், சிறிது நேரம் மட்டும் இப்படி நிகழ்ந்தால், இவற்றால் நன்மையே. ஆனால், தினந்தோறும் எந்த வேலையை எடுத்துக் கொண்டு செய்யும் பொழுதோ, அல்ல அவற்றை ஆரம்பிக்க வேண்டுமே எனத் தோன்றியதுமே, அல்ல இயல்பாகவே ஒன்றைச் செய்வதென்றாலே பதற்றம் ஏற்பட்டு, வெகு நேரத்திருக்கு இப்படி படபடவென இருந்தால், அது மன அழுத்தப் பாதிப்பை ஏற்படுத்தும்.
காரணிகள், நம்முடைய எதிர்பார்ப்புகளினால், கோரிக்கைகளினால், நாம் தனக்காக வகிக்கும் எட்டாத குறிக்கோள்களினால் இந்த மன அழுத்தம் வரலாம். அதே போல், ஒரு இழப்பு நேர்ந்து இருந்தாலோ, ஏதோ நஷ்டம் ஏற்பட்டிருந்தால், போட்டிகளும், மற்றவர்களுடன் நாமே நம்மை ஒப்பிடுவதும் மன அழுத்தத்தின் காரணமாகலாம்.
மன அழுத்தத்தின் அறிகுறிகளும் ‘ப்ளாஸ்டீஸிடீ’யும்
மன அழுத்தத்தால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்று உணர்வதற்கு, அதன் அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது, பல விதங்களில் தோன்றும்: அசதி, கிடுகிடுப்பு, வியர்வை ஊற்றும், நடந்து கொண்டே இருக்கத் தோன்றும், கையைப் பிசைந்து, காலை ஆட்டிக் கொண்டே இருப்பது போன்றவை. மனதளவில், உணர்வுகளில்: சஞ்சலம், எரிச்சல், பதட்டம், கலக்கம். சமூக அளவில், தனிமையை நாடுவது, தடுமாறுவது என்று பல வகைகள் உண்டு.
இவற்றால், நம்பிக்கை இழந்து, தோல்வி தான் என்றே முடிவெடுத்து விடக் கூடும். அதனாலேயே கவனம் சிதறி, எதிலும் ஆர்வம், ஈடுபாடு இல்லாமல் போகும். இது தான் மேலே விவரித்த ஓடிப் போய்விடுவது / உறைந்து (ஃப்ளைட் - ஃப்ரீஸ்) இருப்பது.
இதே நிலைமையில் இருந்து விடுவோம் என்பதும் இல்லை. ஏனென்றால், நம்முடைய மூளையின் அமைப்பு அப்படி! இடையூறுகளிருந்து மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. இதைச் சமீபத்தில், ஆராய்ச்சிகளின் மூலமாக, இந்த உருமாறும் தன்மையே நம்மை மேலும் சரி செய்து கொள்ள உதவும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். மூளையின் இந்தச் செயல் திறனை மூளையின் ‘ப்ளாஸ்டீஸிடீ’ (Plasticity) என்று பெயர் இட்டார்கள். நமக்கு ஏதோ ஒன்று நேர்ந்து விட்டால், அதே நிலையில் இருக்க வேண்டியதென்பதே இல்லை. அதிலிருந்து மீண்டு வர முடியும்!
இப்படி மீண்டு வர, நமக்கு மன அழுத்தம் எப்பொழுது தோன்றுகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதை நம் உடல் எப்படி எல்லாம் தெரிவிக்கின்றது, நம் மனநிலை எவ்வாறு அதைப் பிரதிபலிக்கின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
உடல்-மனம் ஒருங்கிணைப்பு
எப்பொழுதும், உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படும். உதாரணத்திற்கு, மன அழுத்தத்தில் நாம் பயந்து விட்டால், கை கால் நடுங்கி, நாக்கு உலர்ந்து போய், வியர்வை ஊற்றி என்று நம் உடல் பல விதங்களில் தெரிவிக்கும். மனதளவில், சந்தேகங்கள் எழும், குழப்பம் வளரும்.
அதே போல, ‘யூஸ்ட்ரெஸ்’ உணருகையில், உடலில் பல வகைகளில் தெரிவிக்கும். ஒன்றைச் செய்யப் போகிறோம் என்றால் உடலில் மெய் சிலிர்ப்பு, புன்னகை, ஒரு இடத்தில் இருக்க இருப்புக் கொள்ளாது. மனம் மிக ஆனந்தம் அடையும், புத்துணர்ச்சி பூத்துக் குலுங்கி தெம்பாக உணருவோம்.
எதுவானாலும் உடல்-மனம் இரண்டின் இணைப்பு உண்டு. அதனால் தான், மன அழுத்தத்திற்கு உடல்-மனம் இரண்டும் ஒருங்கிணைந்த விடைகளைத் தேட வேண்டும்.
மன அழுத்தத்தை எதிர் கொள்ள, தினசரி உடற் பயிற்சியினால், மனமும் சாந்தமாகி, உடலும் வலுவாகும். நடப்பது, நீச்சல், ஓடுவது, விளையாட்டு ஏதேனும் ஒன்றைத் தினம் தவறாமல் 30-40 நிமிடத்திற்குச் செய்தால் நன்மை தெரியும்.
தினந்தோறும் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கொடுப்பவற்றில் சிறிது நேரம் ஈடுபட்டால் அது நலனைக் கூட்டும். தோட்ட வேலை, படிப்பது, பாட்டு, நடனம், மற்றவர்களுக்கு உதவுவது என்று ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொண்டு, செய்ய வேண்டும்.
நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகளில், முதியோர், அனாதை இல்லங்களில் இருப்பவருக்கு நம் திறன்களை கற்றுத் தரலாம். இப்படி, பலருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்வதால், நமக்கும் நலன், மன நிறைவும் ஏற்படும், வாழ்க்கைக்கும் அர்த்தம் தரும். அதில் வரும் தெம்பினால், சந்திக்கும் இன்னல்களுக்கு விடை கிடைக்கும்! இப்படியெல்லாம் செய்தால் மன அழுத்தம் நமக்கு நமை தருவதாக மாறும்!
[thanks] மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்[/thanks]
‘யூஸ்ட்ரெஸ்’: ஜமாய்க்க வைக்கும் ஸ்ட்ரெஸ்
ஒன்றிற்காகக் கடினமாக உழைத்து, அல்லது தீவரமாக தயார் செய்து, செயல் படுத்தும் நேரங்களில், நாம் அனுபவிப்பது நன்மை தரும் ஸ்ட்ரெஸாகும். நம் தினசரி வாழ்வில் நிகழ்கின்றதுதான். ஓர் சில உதாரணங்கள்: நமக்குப் பிடித்த ஒருவருக்குப் பிறந்த நாள் என்று திடீரென்று ஞாபகம் வர, அவர்களுக்கு உடனடியாக நாமே ஒன்றை தயாராக்கித் தருவது, மற்றவர் முன் பேசுவதற்கு வாய்ப்பு அமைந்ததும், பேசுவதற்கு ஓர் சில நிமிடங்களுக்கு முன்னால், இன்டர்வியூவுக்குப் போகும் முன், விளையாட்டு மைதானத்தில் அந்த ஒரு பாயின்ட் வாங்கும் தருணம், என்று எவ்வளவோ சூழ்நிலைகள் பட்டியலிடலாம்.
இந்த ஒவ்வொரு தருணங்களிலும் ஆவலுடன் காத்திருப்பது நேரும். நமக்குள் ஒரு பரபரப்பு உண்டாகும். ‘நம்முடைய வாய்ப்பு எப்பொழுது வரும்?’, ‘சரியாகச் செய்வோமா?’ என்ற சிறு கேள்விகள் நமக்குள் எழும். இவை எல்லாமே நமக்கு ஆர்வமூட்டும், மறுபுறம் குதுகலமாகவும் இருப்போம். இந்தக் கலவையின் விளைவாக, சவாலைச் சந்திக்க முடியும் என்ற எண்ணம் மேலும் தீவிரமாக இயங்கச் செய்கிறது. வெல்லுவோம் என்று உறதி கொள்கிறோம்.
இது நம்மைத் தயார் படுத்திக் கொள்ள, நல்ல உணர்வுகளை எழுப்பும். இந்த நன்மை தரும் ஸ்ட்ரெஸிற்கு ‘யூஸ்ட்ரெஸ்’ என்ற பெயர். இதில், அதாவது, ‘யூஸ்ட்ரெஸ்’ என்றதில் நேர்மறையான சிந்தனையும் உணர்வும் சூழ்வதால் இதை ‘யூஸ்ட்ரெஸ்’ அதாவது, ‘நல்ல’ ஸ்ட்ரெஸ் என்று அழைப்பதுண்டு. வாட்டும் மன அழுத்தத்திற்கு இடமே கிடையாது!
இதுவே முடியுமோ, முடியாதோ என்று தத்தளித்து, தவித்து, சஞ்சலப் பட்டால், அதனால் வலுவிழந்து, முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டால், அல்ல மிக பதற்றத்துடன் எப்படியோ தேவையானதை செய்து முடித்தால், மனநலப் பிரிவில் இதைத் தான் ‘ஸ்ட்ரெஸ்’ ‘மன அழுத்தம்’ என்போம். ‘யூஸ்ட்ரெஸ்’ நிலைமைகள் இந்தத் திசைக்கு திரும்பினால் மன அழுத்தம் தோன்றலாம். உதாரணத்திற்கு, நுழைவுத் தேர்வு எழுத, பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள, அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், தன்னைத் தயார் படுத்திக் கொள்வது அவசியம் தான். நம் மனப்பான்மை உறுதி, தைரியம் என்று நேர்மறையாக இல்லாமல் பயம், சந்தேகம் என்ற எதிர்மறைகள் நம்மை ஆட்கொண்டால், மன அழுத்தம் தோன்றும்.
போராடுவது - ஓடுவது - உறைவது
மன அழுத்தத்தை தரக் கூடிய சூழ்நிலைகளை, நாம் கையாளும் முறைகளை ஆராய்ச்சியில் மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று, வெற்றிகரமான முடிவிற்காகப் போராடுவது (ஃபைட், Fight). மற்றொன்று, முடியாதென்று விட்டு விட்டு அதிலிருந்து ஓடுவது (ஃப்ளைட், Flight). மூன்றாவதாக, என்ன செய்வதென்று புரியாமல், எந்த முடிவும் எடுக்காமல், உறைந்து நிற்பது (ஃப்ரீஸ், Freeze). இந்த ‘Fight-Flight-Freeze’ (ஃபைட்- ஃப்ளைட் - ஃப்ரீஸ்) நாம் சூழ்நிலைகளை கையாளுவதைக் குறிக்கிறது.
சூழ்நிலைகளைச் சந்திக்கும் பொழுது, நம் உடல் இரண்டு முக்கியமான ரசாயனங்களான, ஆட்ரினலின், கார்டிஸால் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் நமக்கு பலம் அதிகமானது போல் தோன்றும். பரபரப்பாக வேலையை முடிப்போம். வேலைகளை முடித்த பிறகு தான் அசதி, சோர்வு இருப்பதையே கவனிப்போம்.
சில தருணங்களில் மட்டும், சிறிது நேரம் மட்டும் இப்படி நிகழ்ந்தால், இவற்றால் நன்மையே. ஆனால், தினந்தோறும் எந்த வேலையை எடுத்துக் கொண்டு செய்யும் பொழுதோ, அல்ல அவற்றை ஆரம்பிக்க வேண்டுமே எனத் தோன்றியதுமே, அல்ல இயல்பாகவே ஒன்றைச் செய்வதென்றாலே பதற்றம் ஏற்பட்டு, வெகு நேரத்திருக்கு இப்படி படபடவென இருந்தால், அது மன அழுத்தப் பாதிப்பை ஏற்படுத்தும்.
காரணிகள், நம்முடைய எதிர்பார்ப்புகளினால், கோரிக்கைகளினால், நாம் தனக்காக வகிக்கும் எட்டாத குறிக்கோள்களினால் இந்த மன அழுத்தம் வரலாம். அதே போல், ஒரு இழப்பு நேர்ந்து இருந்தாலோ, ஏதோ நஷ்டம் ஏற்பட்டிருந்தால், போட்டிகளும், மற்றவர்களுடன் நாமே நம்மை ஒப்பிடுவதும் மன அழுத்தத்தின் காரணமாகலாம்.
மன அழுத்தத்தின் அறிகுறிகளும் ‘ப்ளாஸ்டீஸிடீ’யும்
மன அழுத்தத்தால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்று உணர்வதற்கு, அதன் அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது, பல விதங்களில் தோன்றும்: அசதி, கிடுகிடுப்பு, வியர்வை ஊற்றும், நடந்து கொண்டே இருக்கத் தோன்றும், கையைப் பிசைந்து, காலை ஆட்டிக் கொண்டே இருப்பது போன்றவை. மனதளவில், உணர்வுகளில்: சஞ்சலம், எரிச்சல், பதட்டம், கலக்கம். சமூக அளவில், தனிமையை நாடுவது, தடுமாறுவது என்று பல வகைகள் உண்டு.
இவற்றால், நம்பிக்கை இழந்து, தோல்வி தான் என்றே முடிவெடுத்து விடக் கூடும். அதனாலேயே கவனம் சிதறி, எதிலும் ஆர்வம், ஈடுபாடு இல்லாமல் போகும். இது தான் மேலே விவரித்த ஓடிப் போய்விடுவது / உறைந்து (ஃப்ளைட் - ஃப்ரீஸ்) இருப்பது.
இதே நிலைமையில் இருந்து விடுவோம் என்பதும் இல்லை. ஏனென்றால், நம்முடைய மூளையின் அமைப்பு அப்படி! இடையூறுகளிருந்து மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. இதைச் சமீபத்தில், ஆராய்ச்சிகளின் மூலமாக, இந்த உருமாறும் தன்மையே நம்மை மேலும் சரி செய்து கொள்ள உதவும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். மூளையின் இந்தச் செயல் திறனை மூளையின் ‘ப்ளாஸ்டீஸிடீ’ (Plasticity) என்று பெயர் இட்டார்கள். நமக்கு ஏதோ ஒன்று நேர்ந்து விட்டால், அதே நிலையில் இருக்க வேண்டியதென்பதே இல்லை. அதிலிருந்து மீண்டு வர முடியும்!
இப்படி மீண்டு வர, நமக்கு மன அழுத்தம் எப்பொழுது தோன்றுகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதை நம் உடல் எப்படி எல்லாம் தெரிவிக்கின்றது, நம் மனநிலை எவ்வாறு அதைப் பிரதிபலிக்கின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
உடல்-மனம் ஒருங்கிணைப்பு
எப்பொழுதும், உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படும். உதாரணத்திற்கு, மன அழுத்தத்தில் நாம் பயந்து விட்டால், கை கால் நடுங்கி, நாக்கு உலர்ந்து போய், வியர்வை ஊற்றி என்று நம் உடல் பல விதங்களில் தெரிவிக்கும். மனதளவில், சந்தேகங்கள் எழும், குழப்பம் வளரும்.
அதே போல, ‘யூஸ்ட்ரெஸ்’ உணருகையில், உடலில் பல வகைகளில் தெரிவிக்கும். ஒன்றைச் செய்யப் போகிறோம் என்றால் உடலில் மெய் சிலிர்ப்பு, புன்னகை, ஒரு இடத்தில் இருக்க இருப்புக் கொள்ளாது. மனம் மிக ஆனந்தம் அடையும், புத்துணர்ச்சி பூத்துக் குலுங்கி தெம்பாக உணருவோம்.
எதுவானாலும் உடல்-மனம் இரண்டின் இணைப்பு உண்டு. அதனால் தான், மன அழுத்தத்திற்கு உடல்-மனம் இரண்டும் ஒருங்கிணைந்த விடைகளைத் தேட வேண்டும்.
மன அழுத்தத்தை எதிர் கொள்ள, தினசரி உடற் பயிற்சியினால், மனமும் சாந்தமாகி, உடலும் வலுவாகும். நடப்பது, நீச்சல், ஓடுவது, விளையாட்டு ஏதேனும் ஒன்றைத் தினம் தவறாமல் 30-40 நிமிடத்திற்குச் செய்தால் நன்மை தெரியும்.
தினந்தோறும் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கொடுப்பவற்றில் சிறிது நேரம் ஈடுபட்டால் அது நலனைக் கூட்டும். தோட்ட வேலை, படிப்பது, பாட்டு, நடனம், மற்றவர்களுக்கு உதவுவது என்று ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொண்டு, செய்ய வேண்டும்.
நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகளில், முதியோர், அனாதை இல்லங்களில் இருப்பவருக்கு நம் திறன்களை கற்றுத் தரலாம். இப்படி, பலருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்வதால், நமக்கும் நலன், மன நிறைவும் ஏற்படும், வாழ்க்கைக்கும் அர்த்தம் தரும். அதில் வரும் தெம்பினால், சந்திக்கும் இன்னல்களுக்கு விடை கிடைக்கும்! இப்படியெல்லாம் செய்தால் மன அழுத்தம் நமக்கு நமை தருவதாக மாறும்!
[thanks] மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்[/thanks]
Last edited by T.N.Balasubramanian on Sat Sep 15, 2018 11:22 am; edited 1 time in total (Reason for editing : spelling correction of topic)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஸ்ட்ரெஸ் உடலுக்கு நல்லது... எப்பொழுது தெரியுமா?
ரொம்ப ரொம்ப அருமையான கட்டுரை.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஏலக்காய் உடலுக்கு எவ்வளோ நல்லது தெரியுமா?
» உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
» உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்!
» காலை உணவு, உடலுக்கு நல்லது!
» உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்!
» உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
» உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்!
» காலை உணவு, உடலுக்கு நல்லது!
» உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|