Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீமராஜா - திரைவிமர்சனம்
2 posters
Page 1 of 1
சீமராஜா - திரைவிமர்சனம்
சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்துவிட்டதாகவும், மாஸ் ஓப்பனிங் வசூல் பெரும் நடிகர் என்ற பெயரை எடுத்துவிட்ட சிவகார்த்திகேயனின் இந்த படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம்
திருநெல்வேலி அருகேயுள்ள சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ராஜா பரம்பரையில் வந்த நெப்போலியனின் மகன் தான் சீமராஜா சிவகார்த்திகேயன். மற்ற ராஜாக்கள் போலவே எடுபிடுகளுடன் ஊர் சுற்றி திரியும் ராஜாவான சிவகார்த்திகேயனுக்கு பக்கத்து ஊராகிய புளியம்பட்டியை சேர்த்த சமந்தாவை பார்த்தவுடன் காதல் வருகிறது. சிங்கம்பட்டிக்கு புளியம்பட்டிக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் காதல் கைகூடியதா? என்பதே இந்த படத்தின் கதை.
சிவகார்த்திகேயன் இந்த படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் காமெடியை அள்ளி அள்ளி வழங்கியுள்ளார். இருபது நிமிட பிளாஷ்பேக் காட்சி தவிர முழுக்க முழுக்க காமெடிதான். இதனால் ஒருசில காட்சிகளில் அவர் சீரியஸாக நடித்தாலும் அதுவும் சிரிப்பு காட்சியாகவே தெரிகிறது.
சமந்தாவின் அழகும் நடிப்பும் இன்னும் அவர் பல வருடங்கள் தமிழ் சினிமாவில் இருப்பார் என்பதை உறுதி செய்கிறது. இயல்பான நடிப்பு, கிராமத்து காஸ்ட்யூம் என சமந்தா இந்த படத்திலும் ஸ்கோர் பெறுகிறார்.
சூரியின் வழக்கமான வசன உச்சரிப்பு எரிச்சலை தந்தாலும், காமெடி இந்த படத்தில் நன்றாக எடுபடுகிறது. 'நாக சைதன்யாவே வந்தாலும் சமந்தாவை தூக்காமல் விடமாட்டேன் என்று சூரி பேசும் வசனத்தின்போது தியேட்டரில் நல்ல கலகலப்பு. அதேபோல் ஊருக்குள் சிறுத்தை புகுந்த காட்சியில் சூரியின் காமெடி அட்டகாசம்
சிம்ரனின் நடிப்பை பார்க்கும்போது நான் திரைப்படம் பார்க்கின்றோமா? அல்லது சீரியல் பார்க்கின்றோமா? என்ற சந்தேகம் வருகிறது. அதிலும் அவருக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் சற்றும்
பொருந்தவில்லை. கர்ண கொடூரமாக உள்ளது.
வில்லனாக லால் நடித்துள்ளார். 'சண்டக்கோழி' படத்தில் அற்புதமாக நடித்த நடிகரை இந்த படத்தில் வீணடித்துள்ளனர். அதேபோல் நெப்போலியன் நடிப்பும் இந்த படத்தில் எடுபடவில்லை.
டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும் பிரமாதம் என்று சொல்ல முடியாது. பின்னணி இசையும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. பாலசுப்பிரமணியன் கேமிரா, கிராமத்து அழகை அழகாக காட்டுகிறது. இந்த படத்தின் தேவையில்லாத காட்சிகளை எடிட்டர் விவேக் ஹர்சன் கட் செய்திருக்கலாம். ஆனால் அப்படி கட் செய்வதென்றால் முதல் பாதி முழுவதையும் கட் செய்ய வேண்டும்
இயக்குனர் பொன்ராம் இந்த படத்தில் கதைக்கு முக்கியத்துவம் தராமல் முழுக்க முழுக்க காமெடியை வைத்தே ஓட்டிவிடலாம் என்று முடிவெடுத்துள்ளார். முதல் பாதி படத்தை பார்க்காமலே இந்த படத்தின் கதை என்ன என்பதை கூறிவிடலாம். முதல் பாதியில் மருந்துக்கு கூட ஒரு வரி கதை கூட இல்லை. இரண்டாம் பாதியில் ஓரளவு கதை தொடங்குகிற போது திடீரென ஒரு மொக்கையான பிளாஷ்பேக் வந்து படத்தின் கொஞ்சம் இருந்த விறுவிறுப்பையும் போக்கி விடுகிறது. ஒரு கேவலமான போர்க்காட்சியை படத்தில் வைத்துவிட்டு 'பாகுபலி'க்கு இணையான போர்க்காட்சி உள்ள படம் என விளம்பரப்படுத்தியதுதான் பெரிய காமெடி
விவசாயிகளின் நிலைமை, நிலம் கையகப்படுத்துதல், வளரி என்ற ஆயுதத்தை முதல் முதலில் பயன்படுத்தியது தமிழன் தான் போன்ற சில காட்சிகள் மட்டும் படத்தின் ஹைலைட். மற்றபடி சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்களை தவிர மற்றவர்களுக்கு இந்த படம் ஒரு சொதப்பல் ராஜா தான்
[thanks]வெப்துனியா[/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சீமராஜா - திரைவிமர்சனம்
-
சமந்தாவைக் காதலிக்க வைப்பதற்காக சிவகார்த்திகேயன்
போடும் ராமர் வேடம், புறாக்களைக் கண்டுபிடிப்பதற்காக
போடும் வாட்ச் விற்பவர் வேடம், நாயைப் புலி என்று
நம்பவைக்கும் காட்சிகள் என அத்தனையும் ரிப்பீட் என்பதால்
சலிப்பை வரவழைக்கின்றன.
வரலாறு பேசும் கடம்பவேல் ராஜா குறித்த காட்சிகள்
படத்தில் செயற்கையாக உள்ளன.
இதற்கெல்லாம் காரணம் திரைக்கதை என்ற அம்சத்தைப்
பற்றி பொன்ராம் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பதுதான்.
பார்த்த படங்களில் இருந்து பழக்கப்பட்ட காட்சிகளே மறுபடி
மறுபடி வருவதால் மசாலா படத்தின் அத்தனை டெம்ப்ளேட்களும்
அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கதாபாத்திரப் படைப்பில் கனத்தைக் கூட்டி, திரைக்கதையில்
கவனம் செலுத்தியிருந்தால் 'சீமராஜா' சிரிக்கவும், ரசிக்கவும்
வைத்திருப்பான்.
-
-------------------
தமிழ்,தி இந்து
Re: சீமராஜா - திரைவிமர்சனம்
“சீமராஜா” – சிவகார்த்திகேயனுக்கு பெரும் சறுக்கல்!
பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் சீமராஜா திரைப்படம் இரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருப்பதோடு, அடுத்தடுத்து வெற்றிப்படங்களைத் தந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சறுக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் நாட்டிலும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்ட தொடர் விடுமுறை என்பதால் படத்தின் முதல் கட்ட வசூல் (opening collection) அபாரமாக இருக்கும் என்பதைத் தவிர, படம் வசூல் ரீதியாகக் தோல்வி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரண படமாக இதே காலகட்டத்தில் வெளிவந்திருக்கும் ‘யூ-டர்ன்’ அற்புதமாக இருக்கிறது என அந்தப் படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பு சீமராஜாவின் வசூலைப் பாதிக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.
முதலாவதாக சீமராஜா படம் முழுக்க சிவகார்த்திகேயனை ஏதோ சூப்பர் ஸ்டார் அளவுக்கு, வழக்கமாக விஜய் படங்களில் காட்ட முற்படுவதுபோல் காட்ட இயக்குநர் பொன்ராம் முயற்சி செய்திருக்கிறாரே தவிர, அந்த அக்கறையை கதையிலோ, திரைக்கதையிலோ காட்டவில்லை.
விளைவு? முதல் பாதி படம் முழுக்க ஒரே மொக்கை நகைச்சுவையாக சிவகார்த்திகேயனும், சூரியும் படத்தை நகர்த்த முற்படுகிறார்கள். பொன்ராமின் முந்தைய படங்களில் (வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்) வித்தியாசமான திரைக்கதையின் சூழலும், சம்பவங்களின் பின்னணியும் நகைச்சுவைக் காட்சிகள் எடுபடுவதற்கு உதவி புரிந்தன.
ஆனால், இதிலோ படம் தொடங்கியது முதல் பகைமை பாராட்டும் பக்கத்து ஊர் பெண்ணை விரட்டி விரட்டி சிவகார்த்திகேயன் காதலிப்பதையே திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். இன்னும் எத்தனை படங்களில் இந்த மாவையே அரைப்பார்களோ தெரியாது.
சமந்தா சிலம்பம் சுற்றுகிறார் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. வழக்கம்போல் அழகு பொம்மையாக வந்து போகிறார்.
தேவையில்லாத திணிப்புகள்
அடுத்ததாக, இடைவேளைக்குப் பின்னரும் அதே காதல் கதைதான் தொடர்கிறது. அந்தக் கால மன்னராக சிவகார்த்திகேயன் வருவதும், அந்தக் காட்சிகளில் பாகுபலி அளவுக்கு தொழில்நுட்பத்துடன் சண்டைக் காட்சிகள் அமைத்ததும், தேவையில்லாத செலவை ஏற்படுத்தும் திணிப்பு. விவசாய நிலங்களை மேம்பாட்டுக்காக விற்பனை செய்வது என்ற தமிழ் நாட்டின் முக்கியமான நடப்புப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கும் படக்குழு அதை எத்தனையோ நிகழ்கால சம்பவங்களைக் கொண்டு வடிவமைத்திருக்கலாம். கோட்டை விட்டு விட்டார்கள்.
மீண்டும் நெப்போலியனைப் பார்க்கும் போது, நிமிர்ந்து உட்காருகிறோம். ஆனால் அவரை காமெடியாகவும் இல்லாமல், சீரியசாகவும் இல்லாமல் காட்டி, அவரது கதாபாத்திரத்தையே சொதப்பி விட்டார்கள்.
சமந்தாவைக் கவர சிவகார்த்திகேயன் மாறுவேடங்களில் வருவதும் எம்ஜிஆர் காலத்துப் படங்கள் அளவுக்கு மிகப் பழைய உத்திகள். எந்த காலகட்டத்தில் வாழ்கிறீர்கள் பொன்ராம்?
சிம்ரன் – ஆறுதல்
படத்தின் ஒரே ஆறுதல் – கவர்கின்ற அம்சம் – சிம்ரன்! வயதானாலும் கவர்ச்சி குறையவில்லை அம்மணிக்கு. ஆனால், அவர் சில காட்சிகளிலேயே வருவதும், ஒரே மாதிரியான லம்பாடி சண்டை வசனங்களையே திரும்பத் திரும்பப் பேசுவதும் பெரும் குறை. அவரது கதாபாத்திரத்தை இன்னும் நன்கு செதுக்கியிருந்தால், படத்திற்கு இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கும், படையப்பாவின் நீலாம்பரி, ரம்யா கிருஷ்ணன் போல! அவருக்கு இணையாக வரும் வில்லன் லால் அதட்டலாகப் பேசுகிறாரே தவிர, சிம்ரனுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.
படத்தை இரசிக்க வைக்கும் இன்னொரு அம்சம் சிறந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் வழங்கியிருக்கும் ஒளிப்பதிவு. குறையில்லாமல் செய்திருக்கிறார்.
படத்தின் மற்றொரு ஆறுதல் பாடல்களும், பின்னணி இசையும்! டி.இமான் நன்றாக உழைத்திருக்கிறார். பாடல்கள் எங்கேயோ கேட்ட தாளத்தை மீண்டும் கேட்பது போல் இருந்தாலும், பிரபலமாகிவிட்டன. பின்னணி இசையில், அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயனைக் காட்டும் காட்சிகளில் ஓவரான சத்தம்! அதை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
சூரிக்கு கதாநாயகனோடு இணைந்து வரும் வழக்கமான வேடம் என்றாலும், மனதில் ஒட்டவில்லை! வசனகர்த்தாவும், இயக்குநரும் இணைந்து மொக்கை நகைச்சுவை சம்பவங்களை அமைத்திருப்பதால் சூரியால் சோபிக்க முடியவில்லை. அவருக்கு 3 பெண்டாட்டிகள் என்று ஒரே காட்சியில் காட்டிவிட்டு பின்னர் அதை வைத்தே சில வசனங்களை வைத்திருக்கிறார்கள். அதுவும் தேவையில்லாத இணைப்பு! ஒரு காட்சியில் தனது கட்டுமஸ்தான சிக்ஸ்-பேக் உடம்பைக் காட்டி கைத்தட்டல் வாங்குகிறார் சூரி.
சிவகார்த்திகேயனுக்கு ஒரு செய்தி! சாதாரண நிலையிலிருந்து இந்த அளவுக்கு உயர்ந்த நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது! கதைகளுக்கு முக்கியத்துவம் இல்லாத – கதாநாயகனை பந்தாவாகக் காட்டும் ‘சீமராஜா’ போன்ற படங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களை இன்னொரு ராமராஜனாக்கி விடுவார்கள்!
பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் சீமராஜா திரைப்படம் இரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருப்பதோடு, அடுத்தடுத்து வெற்றிப்படங்களைத் தந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சறுக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் நாட்டிலும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்ட தொடர் விடுமுறை என்பதால் படத்தின் முதல் கட்ட வசூல் (opening collection) அபாரமாக இருக்கும் என்பதைத் தவிர, படம் வசூல் ரீதியாகக் தோல்வி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரண படமாக இதே காலகட்டத்தில் வெளிவந்திருக்கும் ‘யூ-டர்ன்’ அற்புதமாக இருக்கிறது என அந்தப் படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பு சீமராஜாவின் வசூலைப் பாதிக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.
முதலாவதாக சீமராஜா படம் முழுக்க சிவகார்த்திகேயனை ஏதோ சூப்பர் ஸ்டார் அளவுக்கு, வழக்கமாக விஜய் படங்களில் காட்ட முற்படுவதுபோல் காட்ட இயக்குநர் பொன்ராம் முயற்சி செய்திருக்கிறாரே தவிர, அந்த அக்கறையை கதையிலோ, திரைக்கதையிலோ காட்டவில்லை.
விளைவு? முதல் பாதி படம் முழுக்க ஒரே மொக்கை நகைச்சுவையாக சிவகார்த்திகேயனும், சூரியும் படத்தை நகர்த்த முற்படுகிறார்கள். பொன்ராமின் முந்தைய படங்களில் (வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்) வித்தியாசமான திரைக்கதையின் சூழலும், சம்பவங்களின் பின்னணியும் நகைச்சுவைக் காட்சிகள் எடுபடுவதற்கு உதவி புரிந்தன.
ஆனால், இதிலோ படம் தொடங்கியது முதல் பகைமை பாராட்டும் பக்கத்து ஊர் பெண்ணை விரட்டி விரட்டி சிவகார்த்திகேயன் காதலிப்பதையே திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். இன்னும் எத்தனை படங்களில் இந்த மாவையே அரைப்பார்களோ தெரியாது.
சமந்தா சிலம்பம் சுற்றுகிறார் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. வழக்கம்போல் அழகு பொம்மையாக வந்து போகிறார்.
தேவையில்லாத திணிப்புகள்
அடுத்ததாக, இடைவேளைக்குப் பின்னரும் அதே காதல் கதைதான் தொடர்கிறது. அந்தக் கால மன்னராக சிவகார்த்திகேயன் வருவதும், அந்தக் காட்சிகளில் பாகுபலி அளவுக்கு தொழில்நுட்பத்துடன் சண்டைக் காட்சிகள் அமைத்ததும், தேவையில்லாத செலவை ஏற்படுத்தும் திணிப்பு. விவசாய நிலங்களை மேம்பாட்டுக்காக விற்பனை செய்வது என்ற தமிழ் நாட்டின் முக்கியமான நடப்புப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கும் படக்குழு அதை எத்தனையோ நிகழ்கால சம்பவங்களைக் கொண்டு வடிவமைத்திருக்கலாம். கோட்டை விட்டு விட்டார்கள்.
மீண்டும் நெப்போலியனைப் பார்க்கும் போது, நிமிர்ந்து உட்காருகிறோம். ஆனால் அவரை காமெடியாகவும் இல்லாமல், சீரியசாகவும் இல்லாமல் காட்டி, அவரது கதாபாத்திரத்தையே சொதப்பி விட்டார்கள்.
சமந்தாவைக் கவர சிவகார்த்திகேயன் மாறுவேடங்களில் வருவதும் எம்ஜிஆர் காலத்துப் படங்கள் அளவுக்கு மிகப் பழைய உத்திகள். எந்த காலகட்டத்தில் வாழ்கிறீர்கள் பொன்ராம்?
சிம்ரன் – ஆறுதல்
படத்தின் ஒரே ஆறுதல் – கவர்கின்ற அம்சம் – சிம்ரன்! வயதானாலும் கவர்ச்சி குறையவில்லை அம்மணிக்கு. ஆனால், அவர் சில காட்சிகளிலேயே வருவதும், ஒரே மாதிரியான லம்பாடி சண்டை வசனங்களையே திரும்பத் திரும்பப் பேசுவதும் பெரும் குறை. அவரது கதாபாத்திரத்தை இன்னும் நன்கு செதுக்கியிருந்தால், படத்திற்கு இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கும், படையப்பாவின் நீலாம்பரி, ரம்யா கிருஷ்ணன் போல! அவருக்கு இணையாக வரும் வில்லன் லால் அதட்டலாகப் பேசுகிறாரே தவிர, சிம்ரனுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.
படத்தை இரசிக்க வைக்கும் இன்னொரு அம்சம் சிறந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் வழங்கியிருக்கும் ஒளிப்பதிவு. குறையில்லாமல் செய்திருக்கிறார்.
படத்தின் மற்றொரு ஆறுதல் பாடல்களும், பின்னணி இசையும்! டி.இமான் நன்றாக உழைத்திருக்கிறார். பாடல்கள் எங்கேயோ கேட்ட தாளத்தை மீண்டும் கேட்பது போல் இருந்தாலும், பிரபலமாகிவிட்டன. பின்னணி இசையில், அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயனைக் காட்டும் காட்சிகளில் ஓவரான சத்தம்! அதை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
சூரிக்கு கதாநாயகனோடு இணைந்து வரும் வழக்கமான வேடம் என்றாலும், மனதில் ஒட்டவில்லை! வசனகர்த்தாவும், இயக்குநரும் இணைந்து மொக்கை நகைச்சுவை சம்பவங்களை அமைத்திருப்பதால் சூரியால் சோபிக்க முடியவில்லை. அவருக்கு 3 பெண்டாட்டிகள் என்று ஒரே காட்சியில் காட்டிவிட்டு பின்னர் அதை வைத்தே சில வசனங்களை வைத்திருக்கிறார்கள். அதுவும் தேவையில்லாத இணைப்பு! ஒரு காட்சியில் தனது கட்டுமஸ்தான சிக்ஸ்-பேக் உடம்பைக் காட்டி கைத்தட்டல் வாங்குகிறார் சூரி.
சிவகார்த்திகேயனுக்கு ஒரு செய்தி! சாதாரண நிலையிலிருந்து இந்த அளவுக்கு உயர்ந்த நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது! கதைகளுக்கு முக்கியத்துவம் இல்லாத – கதாநாயகனை பந்தாவாகக் காட்டும் ‘சீமராஜா’ போன்ற படங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களை இன்னொரு ராமராஜனாக்கி விடுவார்கள்!
படம் பார்க்கலாமா என்ற இரசிகர்களின் கேள்விக்கு…
சிவகார்த்திகேயனுக்காக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து படம் பார்த்து விட்டு பின்பு ஏன் பார்த்தோம் என்று திட்டப் போகிறீர்களா? அல்லது பார்க்காமலே தவிர்த்து விட்டு நிம்மதியாக இருக்கப் போகிறீர்களா?
இரசிகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
சிவகார்த்திகேயனுக்காக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து படம் பார்த்து விட்டு பின்பு ஏன் பார்த்தோம் என்று திட்டப் போகிறீர்களா? அல்லது பார்க்காமலே தவிர்த்து விட்டு நிம்மதியாக இருக்கப் போகிறீர்களா?
இரசிகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
-இரா.முத்தரசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
» நல்ல தொகைக்கு விலைபோன ‘சீமராஜா’ வெளியீட்டு உரிமை
» நண்பேன்டா – திரைவிமர்சனம்
» அகிலன் திரைவிமர்சனம்
» உத்தமவில்லன் - திரைவிமர்சனம்
» நல்ல தொகைக்கு விலைபோன ‘சீமராஜா’ வெளியீட்டு உரிமை
» நண்பேன்டா – திரைவிமர்சனம்
» அகிலன் திரைவிமர்சனம்
» உத்தமவில்லன் - திரைவிமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|