ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்

3 posters

Go down

மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்  Empty மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்

Post by T.N.Balasubramanian Thu Sep 13, 2018 6:43 pm

மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்


மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்  Download%209

தமிழகத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாக சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறையை ஓட்டல் அறைபோல் மாற்றி சொகுசாக வைத்துள்ள புகைப்படங்கள் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம், கஞ்சா புழக்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பணம் கொடுத்தால் கிடைக்கும் என்பது ஊரறிந்த விஷயமாகி போனது. அதிகாரிகளே இவற்றை சிறைக்குள் கடத்திச் சென்று கொடுப்பது வாடிக்கையான விஷயமாக மாறிப்போனது. இதில் சில அதிகாரிகள் அவ்வப்போது சிக்கி நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

 
பரோலில் வர, மற்ற சலுகைகள் பெற ஐயாயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளதாக வந்த புகாரை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து சிறைத்துறை கூடுதல் டிஜிபியிடம் விளக்கம் கேட்டுள்ளதும் சமீபத்தில் நடந்தது.

சிறைக்குள் கஞ்சாவை கடத்திச் சென்று கொடுப்பதற்கும், செல்போன்களை கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும், சிம் கார்டுகள், சார்ஜர்கள் கொடுப்பதற்கு தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகும்.

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு தொகை என பட்டியல் போட்டு கறாராக வசூலிக்கும் லிஸ்ட்டும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


புழல் சிரையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து ஆன்ட்ராய்டு செல்போன்கள், கஞ்சா, புதிய உடைகள், விலை உயர்ந்த ஷூக்கள் உள்ளிட்ட பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சமீபத்தில் சென்னை புழல் சிறைக் கைதிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் எடுக்கப்பட்ட படங்களை சிறையில் உள்ள சில நேர்மையான காவலர்கள் வெளியில் கசிய விட்டுள்ளனர். இவைகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதில் உள்ள புகைப்படங்கள் சிறைத்துறைக்குள் உள்ள முறைகேடுகளை படம்போட்டு காட்டுகிறது. சிறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள கைதிகள் வெளியில்கூட அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ மாட்டார்கள் அவ்வளவு சொகுசாக வாழ்வது தெரிகிறது.

பொதுவாக சிறையின் அறையில் சாதாரண சிமெண்ட் திண்டு படுக்க இருக்கும், அலுமினிய தட்டு, போர்வை, அறைக்குள்ளேயே கழிவறை என்றுதான் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியான காட்சி அனைத்து எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி உள்ளது.

காசு கொடுத்தால் சிறையில் எதையும் பெறலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் கைதிகள் ஜொலிக்கும் உடையில் பளபளவென்று உள்ளனர். அறையில் விரும்பிய வண்ணத்தை அடித்து ஓவியம் தீட்டி, திரைச்சீலைகள் போட்டு, கட்டில், மெத்தை, டிவி, செல்போன், வண்ண வண்ண உடைகள், நாற்காலிகள், விலை உயர்ந்த ஷூக்கள், ஆன்ட்ராய்டு போன் வசதிகளுடன் இருப்பது தெரிகிறது.


அறைகளை பார்த்தால் அவை சிறை அறை என சத்தியம் செய்தாலும் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் படம் வெளியானதும் அதிர்ச்சியடைந்த சிறைத்துறை ஏடிஜிபி அஷுதோஷ் சுக்லா நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் மேற்கண்ட புகைப்படங்கள் உண்மை என ஒப்புக்கொள்ளும் வகையில் அவைகள் கடந்த மாதம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் சிறையில் அதிகாரிகளின் துணையுடன் கைதிகள் கேட்டதெல்லாம் பெற்று சிறைக்குள்ளேயே சொகுசு வாழ்க்கை வாழ்வது உறுதியாகி உள்ளது.

சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில், நடைபாதையில், செடிகளுக்கு நடுவே, அறைக்குள் என அனைத்து இடங்களிலும் நல்ல உடைகள், ஷூக்கள், கூலிங்கிளாஸ் அணிந்து செல்பி எடுத்தும், குரூப் போட்டோ எடுத்தும் உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளனர்.

இது தவிர வெளியிலிருந்து பிரியாணி, கறிக்குழம்பு உள்ளிட்ட வகை வகையான சாப்பாடும் உள்ளது போன்ற காட்சிகளும் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு அறையிலும் தொலைக்காட்சி, கடிகாரம் அனைத்தும் உள்ளது.

நெட் வசதியுடன் உள்ள செல்போன்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தொடர்பு கொள்ளவும், சிறையிலிருந்தே திட்டம் போட்டு கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றவும், தங்கள் கூட்டாளிகளுடன் பேசுவது திட்டத்தை அரங்கேற்றுவது அனைத்தும் சாதாரணமாக நடக்கிறது.,

இவ்வாறு சிறைக்கைதிகளுக்கு உதவும் வரை உயர் அதிகாரிகள் என்ன செய்தார்கள், சிறைக்குள் ஒரு சூப்பிரண்ட் எப்போதும் பணியில் இருப்பார் அவர் காலை மாலை சிறைக்குள் ரவுண்ட்ஸ் போவார் என்று கூறப்படுகிறது. சிறைக்குள் கிடைத்த புகைப்பட காட்சிகள் வெளியானதை அடுத்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி அஷுதோஷ் சுக்லா சிறைக்குள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின் கூடுதல் டிஜிபி அஷுதோஷ் சுக்லா, இது ஒன்றரை மாதத்துக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம், பண்டிகை நேரத்தில் இதுபோன்ற சிறப்பு அனுமதி பெறுவது உண்டு. ஆனால் செல்போன் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். ஏ வகுப்பு சிறைக்கைதிகளுக்கு சற்று வசதி செய்துக் கொடுப்பது உண்டு. இனி நானே நேரடியாக வாரவாரம் ஆய்வு நடத்த உள்ளேன். பிளாக் டு பிளாக் ஆய்வு நடத்த உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்..

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்  Empty Re: மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்

Post by T.N.Balasubramanian Thu Sep 13, 2018 6:48 pm

தமிழ்நாட்டில் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கும் ,பணவசதி இருந்தால்.

மல்லய்யாவும் நீரவ் ஜோஷியும் புழல் சிறை என்றால் நிச்சயமாக இந்தியா
திரும்புவோம் என்று சொன்னாலும் சொல்லுவார்களோ.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்  Empty உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை

Post by சிவா Fri Sep 14, 2018 6:08 am



சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 'போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள், ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், 'பலான' படம் பார்க்க, 'டிவி' என, ராஜ வாழ்க்கை நடத்துவது அம்பலமாகி உள்ளது.

சென்னை, புழல் மத்திய சிறை, 221 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள தண்டனை கைதிகள் சிறையில், உயர் பாதுகாப்பு, 'செல்' என்ற, 'பிளாக்' உள்ளது. இதில், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள்,

பா.ஜ., மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களை கொன்ற வழக்கில் கைதான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறையில் ராஜ வாழ்க்கை நடத்துவது தெரிய வந்துள்ளது.

கூடுதல் டி.ஜி.பி., விசாரணை :
சிறைத்துறை இயக்குனரும், கூடுதல்,
டி.ஜி.பி.,யுமான, அசுதோஷ் சுக்லா
நேற்று, புழல் சிறையில், 2 மணி நேரம்
விசாரணை நடத்தினார். அப்போது,
பயங்கரவாதிகள், இந்த அளவுக்கு
ஆட்டம் போட துணையாக இருந்த
காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்
குறித்து அறிக்கை தருமாறு, சிறை
விஜிலன்ஸ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், விஜிலன்ஸ் போலீசார்
மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், அவர்களின் நடவடிக்கையும்
ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது.
இலவம்பஞ்சு மெத்தையில் துாக்கம், பாட்டு கேட்டு ஆட்டம் போட, ஹோம் தியேட்டர், 'செக்ஸ்' படம் பார்க்க, 'டிவி' மற்றும் 'செல்பி' எடுக்க, விதவிதமான, ஸ்மார்ட் போன்கள் என, சொகுசு வாழ்க்கையின் உச்சத்தில் குதுாகலிக்கின்றனர்.

அத்துடன், வெயிலுக்கு இதமாக, கூலிங் கிளாஸ் கண்ணாடிகள், பூப்பந்து விளையாட, உயர் தர ஷூக்கள், சூடாக பால் குடிக்க, 'பிளாஸ்க்' மற்றும் தினமும், கறி, மீன், முட்டை என, ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, வெளிநாட்டு மது வகைகள், சிகரெட் என, சகல விதமான வசதிகளோடு கும்மாளம் போடுகின்றனர்.

வெளியில் இருப்பவர்களால் கூட இப்படி வாழ முடியாது. குடும்பத்தாருடன், 'வீடியோ' காலில் பேச்சு; கூட்டாளிகளுக்கு சதி திட்டம் தீட்டி கொடுக்க, ரகசிய மொபைல் போன், வெளிநாட்டு வாசனை திரவியங்களையும் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.

பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள், ஸ்மார்ட் போனில் எடுத்த செல்பி மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதனால், சிறையில், காவலர் துவங்கி, உயர் அதிகாரிகள் வரை, லஞ்சம் கொடுத்து, புழல் சிறையை உல்லாச விடுதி போல, பயங்கரவாதிகள் மாற்றி இருப்பது அம்பலமாகி உள்ளது.

[thanks] தினமலர்  [/thanks]




மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்  Empty Re: மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்

Post by சிவனாசான் Fri Sep 14, 2018 7:13 am

எல்லாம் பணம் தான். பணம் பாதாளம் மட்டும் பாயும் என்று
சும்மா சொல்லல ஆன்றோர்கள் பெரியோர்கள். சிறைச்சாலை
திருந்துவதற்காக இல்லை திருட்டை எப்படி விஞ்ஞா முறையில்
கண்டு பிடிக்காமல்செய்வது என்பதை கற்று தேர்ந்து வருவதற்
காகவே எனலாம்.ஒருபோதும் கருப்பு நாய் வெள்ளை நாயாகாதுங்க.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்  Empty Re: மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்

Post by T.N.Balasubramanian Fri Sep 14, 2018 6:52 pm

பெங்களுருவில் சசிகலா ஷாப்பிங் போனது போல் அமுங்கிவிடுமா இதுவும்.?

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Sep 14, 2018 6:53 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்  Empty Re: மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்

Post by சிவா Fri Sep 14, 2018 7:30 pm

T.N.Balasubramanian wrote:பெங்களுருவில் சசிகலா ஷாப்பிங் போனது போல் அமுங்கிவிடுமா இதுவும்.?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277568

மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். அதே நிலைதான் ஏற்படும்!


மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்  Empty Re: மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum