ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம்

Go down

திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Empty திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம்

Post by ayyasamy ram Sun Sep 09, 2018 12:17 pm

திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Bc65256cP150245s2mrjpg
-
கதாநாயகி சாந்தினி தமிழரசன் கொலையாவதோடு
தொடங்குகிறது படம். எதிர்வீட்டுப் பையன் சிபி புவனசந்திரன்
மீது போலீஸுக்கு சந்தேகம் எழுகிறது. அவனுக்கு உதவ
வருகிறார் பத்திரிகையாளர் விசாகன் வணங்காமுடி.

கொல்லப்பட்ட சாந்தினி யின் கணவன் ஜெயப்பிரகாஷ்
ராதா கிருஷ்ணனை போலீஸ் விசாரிக்க, அவருக்கு உதவ
வருகிறார் நிழல் உலக தாதா குரு சோமசுந்தரம்.
இந்த கொலை வழக்கு மூலம் நிழல் உலக முக்கியப் புள்ளியை
பொறி வைத்து பிடிக்க முயற்சிக்கின்றனர்.

சாந்தினியைக் கொன்றது யார்? இந்த கொலை எதற்காக
நடந்தது? அந்த முக்கியப் புள்ளிக்கும் வஞ்சகர் உலகத்துக்கும்
என்ன தொடர்பு என்பதே மீதிக் கதை.

‘ஒரு ஊர்ல ஒரு அப்பா, அம்மா. அவங்களுக்கு அழகான
ஒரு குட்டிப் பொண்ணு..’ என்று அழகாய் கையைப் பிடித்துக்
கொண்டு கதை சொல்வது ஒரு பாணி.

ஒரு கதையை கூறு கூறாக்கி, முன்னும் பின்னுமாக மாற்றி
சஸ்பென்ஸ் ஏற்றிக் கூறுவது இன் னொரு பாணி.
2-வது வகையை தேர்வு செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர்
மனோஜ் பீதா.

இதுபோன்ற சோதனை முயற்சி சில சமயம் பரவசம் தரும்..
‘குடைக்குள் மழை’, ‘விருமாண்டி’, ‘காக்க காக்க’
போல. அல்லது, ஒரே யடியாக பாடாய்ப் படுத்திவிடும்.
அந்த இரண்டுக்கும் நடுவே இடைநிலை காவியமாய்
நிற்கிறது ‘வஞ்சகர் உலகம்’.
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Empty Re: திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம்

Post by ayyasamy ram Sun Sep 09, 2018 12:17 pm



போதைப் பொருள் கும்பல், போலீஸ், புலனாய்வுப்
பத்திரிகையாளர் என வழக்கமான கிரைம் திரில்லர்
படங்களுக்கான கதைக் களத்தை எடுத் துக்கொண்டு,
சொன்ன விதத்திலும் இயக்குநர் ஓரளவு முத்திரை
பதித்திருக்கிறார். கதை, வசனம் விநாயக்.

இவரே திரைக்கதையிலும் இயக்குநருக்கு பக்கத்
துணையாக இருந்திருக்கிறார்.

படத்தின் அசுர பலம் குரு சோம சுந்தரத்தின் உடல்மொழி.
சற்று விசித் திர குணங்கள் கொண்ட இந்த கதா
பாத்திரத்தை, பலர் அதிகமாக குர லெழுப்பி,
தேவையில்லாத உடல் மொழிகள், முகபாவங்கள் கொடுத்து
வீணடித்திருப்பார்கள்.

ஆனால் குரு சோமசுந்தரம் கொஞ்சம்கூட ஓவர் ஆக்ட்
செய்யாமல் அடக்கி வாசித்து அப்ளாஸ் வாங்குகிறார்.

அறிமுக நாயகன் சிபி புவனசந் திரனும் நன்றாகவே
ஸ்கோர் செய்கிறார். துணிச்சலான கதாபாத்திரம் ஏற்றிருக்கும்
சாந்தினி தமிழரசனும் நடிப்பில் குறைவைக்கவில்லை.

இவர்களைத் தவிர அழகம்பெரு மாள், விசாகன் வணங்காமுடி,
பத்திரிகையாளர் அனிஷா அம்ப் ரோஸ், காவல் ஆய்வாளர்
வாசு விக்ரம், மூர்த்தி என ஏராளமான பாத் திரங்கள்.

அவர்களும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.
ஜான் விஜய் கேரக்டர் வலிந்து திணிக்கப்பட்ட பாத்திரமாகவே
படுகிறது.

போதைப் பொருள் கடத்தல், சட்ட விரோத பணப் பரிமாற்றம்,
கொலை யாளியை தேடும் விசாரணை என வெவ் வேறு
தளங்களில் பயணிக்கும் படம் அநியாயத்துக்கு குழப்புவதோடு,
சவ்வாக நீள்கிறது.

இவ்வாறு மெதுவாக நகர்வது, காட்சிகளின் சுவாரஸ்யம்
இன்மையால் அல்ல. நிதானமாக கதை சொல்வதை ஒரு
உத்தியாக பயன் படுத்துகிறார் இயக்குநர். படத்தின்
அடுத்தடுத்த நகர்வுகள், கிளைமாக்ஸ் திருப்பத்தைக்கூட
முன்கூட்டியே வசனங்கள் மூலம் சூசகமாக தெரிவிக்கிறார்.

இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும், எதிர்பார்ப்பு,
விறுவிறுப்பு மற்றும் சாதாரண திருப்பங்கள்கூட இல்லாததால்
ஒரு கட்டத்தில் அயர்ச்சி ஏற்படுகிறது.

விசாகனின் விசாரணைக் காட்சி களில் நம்பகத்தன்மை
இல்லை. என் கவுன்ட்டரில் தப்பித்து திரும்பி வந்த
சோமசுந்தரத்தை காவல் துறை ஏன் விட்டுவைக்கிறது
என்பது போன்ற முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லை.

சமூகத்தால் இழிவுபடுத்தப் படும் தன்பால் உறவாளர்கள்
சமூக விரோதிகள் ஆவதுபோல காட்டுவது அபத்தம்.

குறைகள் ஆங்காங்கே இருந்தா லும், முன்னுக்குப் பின்
நகரும் திரைக் கதையோடு, படத்தின் தொழில்நுட்பத்
தரமும் சேர்ந்து, திரையுடனேயே நம்மை ஒன்ற
வைத்துவிடுகின்றன.

சரவணன் ராமசாமியுடன் மெக்ஸி கோவின் ரோட்ரிகோ
டெல்ரியோ இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அது, காட்சியின் தன்மைக்கேற்ற வண்ணங்களாலும்,
புதுமையான கோணங்களாலும் ஈர்க்கிறது.

சாம்.சி.எஸ் பின்னணி இசை வெகு சிறப்பு. குறிப்பாக,
கர்னாடக இசைப் பின்னணியில் நடக்கும் என்கவுன்ட்டர்
புதிய அனுபவம். நிகழ்வுகளை வெட்டி வெட்டிச் சொல்லும்
திரைக்கதையை சிறப்பாகத் தொகுத்திருக்கிறார் ஆன்டனி.

முன்னும் பின்னுமாக நகரும் கதை, அதில் ஏராளமான
பாத்திரங்கள் என ஓரளவு புரிந்துகொண்டு, கதைக்குள்
லயிப்பதற்குள் முதல் முக்கால் மணி நேரம் சென்று
விடுகிறது.

கதை ஓரளவு பிடிபடத் தொடங்கியதும், ‘அடுத்து என்ன?’
என்ற தேடுதலும் ஏற்படுகிறது. 2 மணி நேரம் தாண்டியும்
ரசிகன் பொறுமை காப்பதே அந்த மையப் புள்ளியில்
சொல்லவரும் வலுவான காரணத்தை தேடவே.

ஆனால், அந்த இடத்தில் பெரிதாக சறுக்கியதில், நம்மிடம்
இருந்து வெகுவாக விலகி, அந்நியப்பட்டு நிற்கிறது
‘வஞ்சகர் உலகம்’.

தொழில்நுட்பத்துக்காகவும், மாறுபட்ட முயற்சிக்காகவும்
வரவேற் கலாம்.இந்து டாக்கீஸ் கருத்து
-
-------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum