ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக ஆசிரியை உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

Go down

தமிழக ஆசிரியை உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது Empty தமிழக ஆசிரியை உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

Post by ayyasamy ram Thu Sep 06, 2018 6:31 am


தமிழக ஆசிரியை உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது 201809060312442467_National-award-for-45-people-including-Tamilnadu-teacher_SECVPF
புதுடெல்லி,

மறைந்த முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி எஸ்.ராதாகிருஷ்ணன்
பிறந்த நாளான செப்டம்பர் 5–ந் தேதி ஆசிரியர் தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாநில அளவிலும்,
தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

பள்ளியின் கல்வித்தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின்
வாழ்க்கையை செழுமையாக்குதல், ஆசிரியப்பணியை
கொண்டாடுதல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில்
ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.

இந்து ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும்
இருந்து 6 ஆயிரத்து 692 பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களில் 45 பேர் விருது பட்டியலில் இடம்பெற்றனர்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு
கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியம், மலுமிச்சம்பட்டி
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை
ஆர்.ஸதி தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
செய்யப்பட்ட ஒரே ஆசிரியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியப் பணியை திறம்பட மேற்கொண்டு இருப்பதுடன்,
சமூகப்பணியையும் சிறப்பாக செய்து வந்ததால், இவர் தேசிய
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஆர்.ஸதி உள்ளிட்ட 45 பேருக்கும் விருது வழங்கும் விழா
டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று நடைபெற்றது.
அவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை
வழங்கி கவுரவித்தார்.

விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி
பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மந்திரிகள், அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.

விருது பெற்றது குறித்து கோவை ஆசிரியை ஸதி கூறியதாவது:–

அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நான் திறம்பட
பணியாற்றினேன். கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை
தடுக்க ‘குட்டி கமாண்டோ’ என்ற அமைப்பை 6 மாணவ,
மாணவிகள் மூலம் உருவாக்கினேன். பள்ளியில் உள்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்தி, கணினி மூலம் தனியார் பள்ளிக்கு
இணையாக கல்வி கற்பிக்க வசதிகளை ஏற்படுத்தி உள்ளேன்.

மேலும், மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி, கணிதப்
பயிற்சி போன்றவற்றையும் தன்னார்வத்துடன் அளிக்கிறேன்.
இதையெல்லாம் பாராட்டி எனக்கு விருது தந்து உள்ளனர்.

எனக்கு விருது அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தற்போது அதை கையில் வாங்கியது அதைவிட மகிழ்ச்சியாக
இருக்கிறது. இந்த விருது என்னை ஊக்கப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியை ஸதியின் கணவர் பிரதீப்குமார், முன்னாள் ராணுவ
வீரர் ஆவார். இவர்களுக்கு பிரசிதா (வயது 20) என்ற மகளும்,
கிருஷ்ண பிரஜ்வின் (14) என்ற மகனும் உள்ளனர். இருவரும்
ராணுவத்தில் சேர விரும்புவதாக ஸதி தெரிவித்தார்.

முன்னதாக விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும்
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சந்தித்து
கலந்துரையாடினார்.

மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆசிரியை ஸதிக்கு
வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அதில் அவர்

‘‘தலைமை ஆசிரியை ஸதி பல்வேறு சமூக நடவடிக்கைகள்
மூலம் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி உள்ளார். பல்வேறு
முயற்சிகள் மூலம் அவரது கிராமத்தை திறந்தவெளி
கழிப்பிடமற்ற கிராமமாக மாற்றி உள்ளார். மேலும், கல்வி சாராத
நடவடிக்கைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு
எனது வாழ்த்துகள்’’ என்று கூறி உள்ளார்.
-
----------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக ஆசிரியை உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது Empty Re: தமிழக ஆசிரியை உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

Post by ayyasamy ram Thu Sep 06, 2018 6:33 am

ஆசிரியர் தின விழாவில் 373 ஆசிரியர்களுக்கு
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
-
----------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது!
» 23 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது
» தமிழக ஆசிரியர்கள் 22 பேருக்கு தேசிய விருது!
» தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு
» 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது- காணொலி காட்சி வாயிலாக ஜனாதிபதி வழங்கினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum