Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்
2 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்
First topic message reminder :
தமிழர் என்ற பெருமை மட்டும் போதுமா... மொழியை அறிய வேண்டாமா?
சொல்லறிவு என்னும் திறப்பு
பேச்சுத் தமிழைக் கொடுந்தமிழ் என்று சொல்வார்கள். ஒரு மொழியின் பேச்சு வழக்கில் கருத்துகளைச் சொல்வதுதான் முதன்மையாக இருக்குமேயன்றி பிற எவையும் முன் நில்லா. ஒரு சொல் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டுமோ அவ்வாறே பேச்சு வழக்கில் ஒலிக்கும் என்று கூறுவதற்கில்லை. ஒலிப்பின் அழுத்தங்கள் குறைந்து, நுண்மைகள் குன்றி வழுக்கலாய் ஒலிக்கும். பேச்சு மொழியின் பயன் அந்தந்த நேரத்து உரையாடலும் செய்தி தெரிவிப்பதுமே. தேவைக்கேற்ப விரைவுக் குறிப்போடு இருப்பதும் இயல்புதான். எழுத்துத் தமிழானது பேச்சுத் தமிழின் வழுக்கள் அனைத்தையும் நீக்கியதாகத்தான் இருக்கும். எழுத்துத் தமிழைத்தான் 'செந்தமிழ்' என்பார்கள்.
மொழி, இலக்கணம் கூறுகின்ற அனைத்து இயல்புகளுக்கும் உட்பட்டவாறுதான் எழுத்து இருக்க வேண்டும். பேச்சில் தவறாகச் சொல்லப்படுவது குற்றமாகாது. ஆனால், எழுத்தில் எந்தத் தவற்றுக்கும் இடமில்லை. அதனால்தான் இம்மொழியானது எழுத்துத் தமிழில் உறைகிறது. பேச்சுத் தமிழில் உலவுகிறது. எழுத்துத் தமிழில் சங்க காலத்து வழக்குக்கும் அண்மைக் காலத்து வழக்குக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளும் எளிதில் விளங்குகின்றன. அண்மைக் காலத்து எழுத்துகள் விளங்குகின்றவாறு சங்கச் செய்யுள்கள் விளங்குவதில்லை. அது ஏன் என்றால், அண்மைக் காலத்து உரைநடை எழுத்துகள் தனித்தனிச் சொற்களாகப் பிரித்து எழுதப்படுகின்றன. சங்கச் செய்யுள்கள் புலமைத் தமிழில் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. படிப்போர்க்கு எளிதில் விளங்க வேண்டும் என்பதற்காகவே செய்யுள்களைப் பிரித்துப் பதிப்பார்கள். அவ்வாறு பிரித்துப் பதிக்கப்பட்ட செய்யுள்கள் மிக எளிமையாக விளங்கும்.
எடுத்துக்காட்டாக, திருக்குறள்களை எடுத்துக்கொள்வோம். ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட செந்தமிழில் குறட்பாக்கள் எழுதப்பட்டுள்ளன. எல்லாக் குறள்களும் நமக்கு விளங்காமல் போயினவா…? இல்லையே. 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று'. இந்தக் குறள் படிக்கின்ற எல்லார்க்கும் தெளிவாக விளங்குகிறது. இதை விளக்கிச் சொல்ல வேண்டுவதில்லை. விளங்காமைக்கு இடமேயில்லை. ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதில்லை, ஒருவர் நமக்குச் செய்த நன்மையல்லாதவற்றை அன்றே மறந்துவிடுவதுதான் நல்லது என்பது அக்குறளின் பொருள். நம் மொழியின் பழைய எழுத்து முறைமையும் இன்றைய எழுத்து வழக்கும் மிகவும் நெருக்கமான தன்மைகளைப் பெற்றிருக்கின்றன என்பது கண்கூடு.
சரி, எல்லாக் குறள்களும் இதே தன்மையோடு இருக்கின்றனவா? 'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு'. மேற்காண்பதும் குறள்தான். ஆனால், முதலில் சொன்ன நன்றி மறப்பது குறளைப்போல இக்குறள் எளிமையாய் விளங்கவில்லை. அதற்குக் காரணம் என்ன ? இக்குறளில் உள்ள சில சொற்களுக்குப் பொருள் தெரியும், சில சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை. கை, கயவர், உடைக்கும், அல்லாதவர்க்கு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியும். ஈர்ங்கை, கூன்கை, விதிரார், கொடிறு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியவில்லை. ஆக, நமக்குச் சொற்பொருள் தெரியவில்லை. அதனால் விளங்கவில்லை. அதாவது தமிழில் உள்ள சொற்கள் பலவற்றின் பொருளை நாம் அறிந்திருக்கவில்லை என்பதால் அச்சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள செய்யுள்கள் விளங்கவில்லை.
அச்சொற்களின் பொருள்களைக் கூறுகிறேன். இப்போது விளங்குகிறதா என்று பார்ப்போம். ஈர்ங்கை என்றால் “உணவு உண்டபின் கழுவிய கை” என்பது பொருள். அதாவது எச்சிற்கை. விதிர்தல் என்றால் நடுங்குதல் என்பது பொருள். உதறும் செயலானது கையை நடுங்கச் செய்வதுதானே ? இங்கே விதிரார் என்பதற்கு “உதறார்” என்ற பொருளைக் கொள்ளலாம். அடுத்து கூன்கை. கூன் என்றால் தெரியும், வளைந்துவிடுவது. கூன்முதுகு என்றால் வளைந்த முதுகு. கூன்கை என்பதற்கு வளையும்கை என்று பொருள். ஒருவரை அடிப்பதற்கோ, ஒன்றை உடைப்பதற்கோ கையை வளைத்து வீசவேண்டும். கொடிறு என்றால் கன்னக்கதுப்பு. இப்போது குறளுக்குச் செல்வோம் வாருங்கள். ஈர்ங்கை விதிரார் கயவர் – உணவு உண்டபின் கழுவிய கையைக்கூட கயவர்கள் நடுங்கவிடமாட்டார்கள் / உதறமாட்டார்கள். கொடிறுடைக்கும் – கன்னத்தை உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு – வளைந்து வருகின்ற கைகள் இல்லாதவர்கட்கு. “தம் தாடையைப் பெயர்க்க வளைந்து வந்து அடிக்கும் கைகளை உடையவர்களுக்கு அல்லாது மற்றவர்க்காகத் தாம் உண்ட எச்சிற்கையைக்கூட உதறமாட்டார்கள் கயவர்கள்” என்பது குறளின் பொருள். இப்போது குறட்பொருள் நன்கு விளங்குகிறது.
நம் மொழியிலுள்ள எண்ணற்ற சொற்களின் பொருள்கள் தெரியவில்லை என்பதால்தான் சங்கச் செய்யுள்கள் விளங்கவில்லை. பழகிய ஆயிரம் சொற்களுக்குள்ளாகவே நாம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் ஏன் நம் சொல்லறிவைப் பெருக்கிக்கொள்ளக்கூடாது?
தமிழர் என்ற பெருமை மட்டும் போதுமா... மொழியை அறிய வேண்டாமா?
சொல்லறிவு என்னும் திறப்பு
பேச்சுத் தமிழைக் கொடுந்தமிழ் என்று சொல்வார்கள். ஒரு மொழியின் பேச்சு வழக்கில் கருத்துகளைச் சொல்வதுதான் முதன்மையாக இருக்குமேயன்றி பிற எவையும் முன் நில்லா. ஒரு சொல் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டுமோ அவ்வாறே பேச்சு வழக்கில் ஒலிக்கும் என்று கூறுவதற்கில்லை. ஒலிப்பின் அழுத்தங்கள் குறைந்து, நுண்மைகள் குன்றி வழுக்கலாய் ஒலிக்கும். பேச்சு மொழியின் பயன் அந்தந்த நேரத்து உரையாடலும் செய்தி தெரிவிப்பதுமே. தேவைக்கேற்ப விரைவுக் குறிப்போடு இருப்பதும் இயல்புதான். எழுத்துத் தமிழானது பேச்சுத் தமிழின் வழுக்கள் அனைத்தையும் நீக்கியதாகத்தான் இருக்கும். எழுத்துத் தமிழைத்தான் 'செந்தமிழ்' என்பார்கள்.
மொழி, இலக்கணம் கூறுகின்ற அனைத்து இயல்புகளுக்கும் உட்பட்டவாறுதான் எழுத்து இருக்க வேண்டும். பேச்சில் தவறாகச் சொல்லப்படுவது குற்றமாகாது. ஆனால், எழுத்தில் எந்தத் தவற்றுக்கும் இடமில்லை. அதனால்தான் இம்மொழியானது எழுத்துத் தமிழில் உறைகிறது. பேச்சுத் தமிழில் உலவுகிறது. எழுத்துத் தமிழில் சங்க காலத்து வழக்குக்கும் அண்மைக் காலத்து வழக்குக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளும் எளிதில் விளங்குகின்றன. அண்மைக் காலத்து எழுத்துகள் விளங்குகின்றவாறு சங்கச் செய்யுள்கள் விளங்குவதில்லை. அது ஏன் என்றால், அண்மைக் காலத்து உரைநடை எழுத்துகள் தனித்தனிச் சொற்களாகப் பிரித்து எழுதப்படுகின்றன. சங்கச் செய்யுள்கள் புலமைத் தமிழில் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. படிப்போர்க்கு எளிதில் விளங்க வேண்டும் என்பதற்காகவே செய்யுள்களைப் பிரித்துப் பதிப்பார்கள். அவ்வாறு பிரித்துப் பதிக்கப்பட்ட செய்யுள்கள் மிக எளிமையாக விளங்கும்.
எடுத்துக்காட்டாக, திருக்குறள்களை எடுத்துக்கொள்வோம். ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட செந்தமிழில் குறட்பாக்கள் எழுதப்பட்டுள்ளன. எல்லாக் குறள்களும் நமக்கு விளங்காமல் போயினவா…? இல்லையே. 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று'. இந்தக் குறள் படிக்கின்ற எல்லார்க்கும் தெளிவாக விளங்குகிறது. இதை விளக்கிச் சொல்ல வேண்டுவதில்லை. விளங்காமைக்கு இடமேயில்லை. ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதில்லை, ஒருவர் நமக்குச் செய்த நன்மையல்லாதவற்றை அன்றே மறந்துவிடுவதுதான் நல்லது என்பது அக்குறளின் பொருள். நம் மொழியின் பழைய எழுத்து முறைமையும் இன்றைய எழுத்து வழக்கும் மிகவும் நெருக்கமான தன்மைகளைப் பெற்றிருக்கின்றன என்பது கண்கூடு.
சரி, எல்லாக் குறள்களும் இதே தன்மையோடு இருக்கின்றனவா? 'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு'. மேற்காண்பதும் குறள்தான். ஆனால், முதலில் சொன்ன நன்றி மறப்பது குறளைப்போல இக்குறள் எளிமையாய் விளங்கவில்லை. அதற்குக் காரணம் என்ன ? இக்குறளில் உள்ள சில சொற்களுக்குப் பொருள் தெரியும், சில சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை. கை, கயவர், உடைக்கும், அல்லாதவர்க்கு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியும். ஈர்ங்கை, கூன்கை, விதிரார், கொடிறு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியவில்லை. ஆக, நமக்குச் சொற்பொருள் தெரியவில்லை. அதனால் விளங்கவில்லை. அதாவது தமிழில் உள்ள சொற்கள் பலவற்றின் பொருளை நாம் அறிந்திருக்கவில்லை என்பதால் அச்சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள செய்யுள்கள் விளங்கவில்லை.
அச்சொற்களின் பொருள்களைக் கூறுகிறேன். இப்போது விளங்குகிறதா என்று பார்ப்போம். ஈர்ங்கை என்றால் “உணவு உண்டபின் கழுவிய கை” என்பது பொருள். அதாவது எச்சிற்கை. விதிர்தல் என்றால் நடுங்குதல் என்பது பொருள். உதறும் செயலானது கையை நடுங்கச் செய்வதுதானே ? இங்கே விதிரார் என்பதற்கு “உதறார்” என்ற பொருளைக் கொள்ளலாம். அடுத்து கூன்கை. கூன் என்றால் தெரியும், வளைந்துவிடுவது. கூன்முதுகு என்றால் வளைந்த முதுகு. கூன்கை என்பதற்கு வளையும்கை என்று பொருள். ஒருவரை அடிப்பதற்கோ, ஒன்றை உடைப்பதற்கோ கையை வளைத்து வீசவேண்டும். கொடிறு என்றால் கன்னக்கதுப்பு. இப்போது குறளுக்குச் செல்வோம் வாருங்கள். ஈர்ங்கை விதிரார் கயவர் – உணவு உண்டபின் கழுவிய கையைக்கூட கயவர்கள் நடுங்கவிடமாட்டார்கள் / உதறமாட்டார்கள். கொடிறுடைக்கும் – கன்னத்தை உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு – வளைந்து வருகின்ற கைகள் இல்லாதவர்கட்கு. “தம் தாடையைப் பெயர்க்க வளைந்து வந்து அடிக்கும் கைகளை உடையவர்களுக்கு அல்லாது மற்றவர்க்காகத் தாம் உண்ட எச்சிற்கையைக்கூட உதறமாட்டார்கள் கயவர்கள்” என்பது குறளின் பொருள். இப்போது குறட்பொருள் நன்கு விளங்குகிறது.
நம் மொழியிலுள்ள எண்ணற்ற சொற்களின் பொருள்கள் தெரியவில்லை என்பதால்தான் சங்கச் செய்யுள்கள் விளங்கவில்லை. பழகிய ஆயிரம் சொற்களுக்குள்ளாகவே நாம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் ஏன் நம் சொல்லறிவைப் பெருக்கிக்கொள்ளக்கூடாது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்
வெசை என்பது என்ன சொல்?
நாம் பேச்சளவில் சில நூறு சொற்களைத்தாம் பயன்படுத்துகிறோம் என்பது ஒரு கணக்கு. ஒருவர் தம் வாழ்நாளில் சில்லாயிரம் சொற்களை அறிந்திருந்தால் போதும், அம்மொழிப் புலத்தில் எவ்வோர் இடையூறுமில்லாமல் வாழ்ந்து முடித்துவிடலாம். ஒவ்வொரு துறையிலும் இயங்கக்கூடியவர்கள் அத்துறை சார்ந்த சில நூற்றுச் சொற்களைக் கூடுதலாக அறிந்திருப்பார்கள். அவ்வெண்ணிக்கைக்கு மேலான சொற்கள் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படவில்லை. அவற்றைக் கற்றுத் தேரும் முனைப்பும் வாய்ப்பும் அவர்கட்கு இல்லை.
பாமரர்கள் பயன்படுத்தும் எளிய சொற்கள்தாமே, அவற்றில் என்ன மொழிநுட்பம் இருந்துவிடப் போகிறது? பொதுப் பயன்பாட்டில் உள்ளவாறு ஒரு சொல்லினைப் பேச்சில் வழங்குவார்கள் என்று நாம் எளிமையாகக் கருதிவிடுகிறோம். ஆனால், உண்மை அஃதன்று. எளியவர்கள் பயன்படுத்தும் மிக எளிய சொல் ஒவ்வொன்றிலும் தொன்மையான மொழி இலக்கணக் கூறு முறையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. இச்செய்தி எவர்க்கும் வியப்பூட்டுவதாகும். அத்தன்மையால்தான் தமிழ் மொழியானது பன்னூற்றாண்டுகளாக வேற்றாட்சி மொழியாளர்கள் ஆண்ட போதிலும் அழியாமல் நலியாமல் உயிர்ப்போடு வாழ்ந்து வருகிறது. பேச்சு வழக்கில் அருஞ்சொற்களும் இலக்கணக்கூறுகளும் தொடர்ந்து வாழ்கின்றன. அவை என்றென்றும் அழியாது நிலைத்தன.
அத்தன்மைக்கு நான் அடிக்கடி கூறும் எடுத்துக்காட்டு ‘அதற்கு, இதற்கு, எதற்கு’ என்னும் சொற்களாகும். அது + அன் + கு என்பதுதான் அதற்கு என்ற சொல்லின் உருபுப் பகுப்பாகும். அது என்னும் சுட்டு முற்றியலுகரத் தன்மையோடு இருப்பதனால் அச்சுட்டோடு ஓர் வேற்றுமை உருபு சேர்வதற்கு அன் என்ற சாரியை இடையில் தோன்றுகிறது. அதற்கு, இதற்கு, எதற்கு என்பனவற்றைத்தாம் நாம் இன்னும் எழுத்து வழக்கில் பயன்படுத்துகிறோம். அதற்கு, இதற்கு, எதற்கு என்பனவற்றைப் பேச்சு வழக்கில் ‘அதுக்கு, இதுக்கு, எதுக்கு’ என்று கொச்சையாகச் சொல்கிறோம். பேச்சில் ற் என்னும் வல்லின மெய்க்குக் கொச்சைத்தன்மை ஏறுவதால் அதுக்கு என்று சொல்லிவிடுகிறோம். அது + அன் + கு என்பதனை அதனுக்கு என்று நாம் எழுதுவதில்லை. சிலர் அவ்வாறு எழுதினால் அது பிழையாகும். நாமனைவரும் அதற்கு என்றே எழுதுகிறோம், அதுக்கு என்றே வாயால் வழங்குகிறோம்.
இங்கே ன்+கு சேர்ந்தால் ற்கு என்று ஆவது திருக்குறள் தொட்டு வழங்கப்பட்டு வரும் புணர்ச்சி இயல்பாகும். மகன்+கு = மகற்கு என்று ஆள்கிறார் வள்ளுவர். ஆனால், தற்காலத்தில் மகற்கு என்ற வழக்கொழிந்து மகனுக்கு என்று எழுதுகிறோம். அவன்+கு அவற்கு என்பதே சரியானதாகும். ஆனால், அவனுக்கு என்றே எழுதுகிறோம். அவனுக்கு, இவனுக்கு, எவனுக்கு என்பனவற்றை அவற்கு, இவற்கு, எவற்கு என்று ஆள்வதே தெள்ளிய தமிழாகும். அவர்களுக்கு என்று எழுதாமல் அவர்கட்கு என்பதே முறையாகும்.
ற்கு என்று பயன்படுத்துவதை மொழிப்பெரும் புலவர்களின் எழுத்துகளில் தொடர்ந்து காணலாம். சொல்+கு = சொல்லுக்கு என்று நாம் எழுதிக்கொண்டிருக்கிறோம். தமிழ்ப்பெருமக்கள் அதனைச் ‘சொற்கு’ என்று எழுதுவார்கள். அவ்வாறுதான் எழுத வேண்டும். ஆனால், நாம் சொல்லுக்கு என்று எழுதுகின்றோம். ஆனால், அது + அன் + கு = அதன்+கு என்பதனை முறையாக ‘அதற்கு’ என்று பயன்படுத்துகிறோம். அதற்கு, இதற்கு, எதற்கு என்பதனையே பேச்சிலும் பயன்படுத்துகிறோம். ஆக, திருக்குறளில் ஆளப்படும் புணர்ச்சி வழக்கு இன்றைய பேச்சு வரைக்கும் தொடர்ந்து உயிர்ப்போடு விளங்குகிறது. அந்த வழக்கம் பிழையாகப் பயிலப்படும் பலவற்றினை அடையாளம் காட்டிக் களையவும் பயன்படுகிறது.
புணர்ச்சி இலக்கணத்தின் நுண்ணிய வடிவமொன்று பாமர மக்களின் பேச்சளவிலும் ஊடிப் பரவியிருக்கிறது. அவ்வாறே அருஞ்சொற்கள் பலவும் மக்கள் பேச்சினில் கலந்திருக்கின்றன.
“என்ன மெதுவாகப் போறே ? வெசையாப் போ” என்று சொல்வார்கள்.
“ஆடி அசைஞ்சு நடந்தா எப்படி… வெசையாத்தான் நடக்கலாமுல்ல…” என்று கடிவார்கள்.
இந்த வெசை என்ற சொல்லை நம் எழுத்துகளில் எப்போதேனும் ஆண்டிருக்கிறோமா ? இல்லை என்றே கூறலாம்.
வெசை என்பது என்ன சொல் ? விசை என்ற சொல்தான் பேச்சு வழக்கில் ‘வெசை, வெசையாக’ என்று வழங்குகிறது. விசை என்ற சொல்லைப் பயன்படுத்தியே விசைத்தறி போன்ற சொற்றொடர்களை ஆக்கியிருக்கிறோம்.
படிப்பாளர்களைப் பொறுத்தவரையில் விசை என்பது அருஞ்சொல். பாமரர்களைப் பொறுத்தமட்டில் அச்சொல் அவர்களின் அன்றாடப் பயன்பாட்டில் வழங்கும் எளிய சொல். இவ்வாறு பேச்சில் பொதிந்திருக்கும் சொற்கள் ஒன்றிரண்டல்ல, பல்லாயிரம் சொற்களை அகழ்ந்து எடுக்க முடியும்.
நாம் பேச்சளவில் சில நூறு சொற்களைத்தாம் பயன்படுத்துகிறோம் என்பது ஒரு கணக்கு. ஒருவர் தம் வாழ்நாளில் சில்லாயிரம் சொற்களை அறிந்திருந்தால் போதும், அம்மொழிப் புலத்தில் எவ்வோர் இடையூறுமில்லாமல் வாழ்ந்து முடித்துவிடலாம். ஒவ்வொரு துறையிலும் இயங்கக்கூடியவர்கள் அத்துறை சார்ந்த சில நூற்றுச் சொற்களைக் கூடுதலாக அறிந்திருப்பார்கள். அவ்வெண்ணிக்கைக்கு மேலான சொற்கள் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படவில்லை. அவற்றைக் கற்றுத் தேரும் முனைப்பும் வாய்ப்பும் அவர்கட்கு இல்லை.
பாமரர்கள் பயன்படுத்தும் எளிய சொற்கள்தாமே, அவற்றில் என்ன மொழிநுட்பம் இருந்துவிடப் போகிறது? பொதுப் பயன்பாட்டில் உள்ளவாறு ஒரு சொல்லினைப் பேச்சில் வழங்குவார்கள் என்று நாம் எளிமையாகக் கருதிவிடுகிறோம். ஆனால், உண்மை அஃதன்று. எளியவர்கள் பயன்படுத்தும் மிக எளிய சொல் ஒவ்வொன்றிலும் தொன்மையான மொழி இலக்கணக் கூறு முறையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. இச்செய்தி எவர்க்கும் வியப்பூட்டுவதாகும். அத்தன்மையால்தான் தமிழ் மொழியானது பன்னூற்றாண்டுகளாக வேற்றாட்சி மொழியாளர்கள் ஆண்ட போதிலும் அழியாமல் நலியாமல் உயிர்ப்போடு வாழ்ந்து வருகிறது. பேச்சு வழக்கில் அருஞ்சொற்களும் இலக்கணக்கூறுகளும் தொடர்ந்து வாழ்கின்றன. அவை என்றென்றும் அழியாது நிலைத்தன.
அத்தன்மைக்கு நான் அடிக்கடி கூறும் எடுத்துக்காட்டு ‘அதற்கு, இதற்கு, எதற்கு’ என்னும் சொற்களாகும். அது + அன் + கு என்பதுதான் அதற்கு என்ற சொல்லின் உருபுப் பகுப்பாகும். அது என்னும் சுட்டு முற்றியலுகரத் தன்மையோடு இருப்பதனால் அச்சுட்டோடு ஓர் வேற்றுமை உருபு சேர்வதற்கு அன் என்ற சாரியை இடையில் தோன்றுகிறது. அதற்கு, இதற்கு, எதற்கு என்பனவற்றைத்தாம் நாம் இன்னும் எழுத்து வழக்கில் பயன்படுத்துகிறோம். அதற்கு, இதற்கு, எதற்கு என்பனவற்றைப் பேச்சு வழக்கில் ‘அதுக்கு, இதுக்கு, எதுக்கு’ என்று கொச்சையாகச் சொல்கிறோம். பேச்சில் ற் என்னும் வல்லின மெய்க்குக் கொச்சைத்தன்மை ஏறுவதால் அதுக்கு என்று சொல்லிவிடுகிறோம். அது + அன் + கு என்பதனை அதனுக்கு என்று நாம் எழுதுவதில்லை. சிலர் அவ்வாறு எழுதினால் அது பிழையாகும். நாமனைவரும் அதற்கு என்றே எழுதுகிறோம், அதுக்கு என்றே வாயால் வழங்குகிறோம்.
இங்கே ன்+கு சேர்ந்தால் ற்கு என்று ஆவது திருக்குறள் தொட்டு வழங்கப்பட்டு வரும் புணர்ச்சி இயல்பாகும். மகன்+கு = மகற்கு என்று ஆள்கிறார் வள்ளுவர். ஆனால், தற்காலத்தில் மகற்கு என்ற வழக்கொழிந்து மகனுக்கு என்று எழுதுகிறோம். அவன்+கு அவற்கு என்பதே சரியானதாகும். ஆனால், அவனுக்கு என்றே எழுதுகிறோம். அவனுக்கு, இவனுக்கு, எவனுக்கு என்பனவற்றை அவற்கு, இவற்கு, எவற்கு என்று ஆள்வதே தெள்ளிய தமிழாகும். அவர்களுக்கு என்று எழுதாமல் அவர்கட்கு என்பதே முறையாகும்.
ற்கு என்று பயன்படுத்துவதை மொழிப்பெரும் புலவர்களின் எழுத்துகளில் தொடர்ந்து காணலாம். சொல்+கு = சொல்லுக்கு என்று நாம் எழுதிக்கொண்டிருக்கிறோம். தமிழ்ப்பெருமக்கள் அதனைச் ‘சொற்கு’ என்று எழுதுவார்கள். அவ்வாறுதான் எழுத வேண்டும். ஆனால், நாம் சொல்லுக்கு என்று எழுதுகின்றோம். ஆனால், அது + அன் + கு = அதன்+கு என்பதனை முறையாக ‘அதற்கு’ என்று பயன்படுத்துகிறோம். அதற்கு, இதற்கு, எதற்கு என்பதனையே பேச்சிலும் பயன்படுத்துகிறோம். ஆக, திருக்குறளில் ஆளப்படும் புணர்ச்சி வழக்கு இன்றைய பேச்சு வரைக்கும் தொடர்ந்து உயிர்ப்போடு விளங்குகிறது. அந்த வழக்கம் பிழையாகப் பயிலப்படும் பலவற்றினை அடையாளம் காட்டிக் களையவும் பயன்படுகிறது.
புணர்ச்சி இலக்கணத்தின் நுண்ணிய வடிவமொன்று பாமர மக்களின் பேச்சளவிலும் ஊடிப் பரவியிருக்கிறது. அவ்வாறே அருஞ்சொற்கள் பலவும் மக்கள் பேச்சினில் கலந்திருக்கின்றன.
“என்ன மெதுவாகப் போறே ? வெசையாப் போ” என்று சொல்வார்கள்.
“ஆடி அசைஞ்சு நடந்தா எப்படி… வெசையாத்தான் நடக்கலாமுல்ல…” என்று கடிவார்கள்.
இந்த வெசை என்ற சொல்லை நம் எழுத்துகளில் எப்போதேனும் ஆண்டிருக்கிறோமா ? இல்லை என்றே கூறலாம்.
வெசை என்பது என்ன சொல் ? விசை என்ற சொல்தான் பேச்சு வழக்கில் ‘வெசை, வெசையாக’ என்று வழங்குகிறது. விசை என்ற சொல்லைப் பயன்படுத்தியே விசைத்தறி போன்ற சொற்றொடர்களை ஆக்கியிருக்கிறோம்.
படிப்பாளர்களைப் பொறுத்தவரையில் விசை என்பது அருஞ்சொல். பாமரர்களைப் பொறுத்தமட்டில் அச்சொல் அவர்களின் அன்றாடப் பயன்பாட்டில் வழங்கும் எளிய சொல். இவ்வாறு பேச்சில் பொதிந்திருக்கும் சொற்கள் ஒன்றிரண்டல்ல, பல்லாயிரம் சொற்களை அகழ்ந்து எடுக்க முடியும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்
தற்காப்பு, தற்பெருமை தெரியும்... தற்படம் தெரியுமா?
தான், தன் என்னும் இரண்டு சொற்களை அறிவீர்கள். தான் என்பது படர்க்கை ஒருமைப் பெயர். “தான் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசினான்” என்னும்போது அங்கே தான் என்பது படர்க்கையிடத்திலுள்ள ஒருமையைக் குறிக்கிறது.
தான் என்பதற்கு ஆண்பால், பெண்பால் வேறுபாடு இல்லை. “தான் நினைப்பதைச் செய்து முடித்தே பழக்கப்பட்டவள் அவள்” என்னும்போது அங்கே தான் என்பது பெண்பாலுக்கும் பொருந்துகிறது.
தான் ஓடினால்தான் தப்பிக்க முடியும் என்று அந்த மான் நினைத்தது – இந்தச் சொற்றொடரைப் பாருங்கள். இங்கே தான் என்பது படர்க்கை ஒருமையில் மானைக் குறிக்கிறது.
ஆண்பால், பெண்பால் உயர்திணைக்கும் வந்தது. மான் என்னும் ஒன்றன்பாலில் அஃறிணைக்கும் வந்தது. தான் என்னும் அச்சொல் அத்துணை வலிமையானது. எழுதுவோர்க்கும், உரியவாறு விளக்கிப் பேசுவோர்க்கும் தான் என்னும் சொல் நன்கு பயன்படும். தான், தன் போன்ற சொற்களை எழுத்திலும் பேச்சிலும் நன்கு பயன்படுத்துவோரை நான் நல்ல மொழிப்பயிற்சி பெற்றுள்ளவர்களாக மதிப்பேன்.
பேச்சு வழக்கிலும் தான் என்பதனைப் பலவாறு பயன்படுத்துவார்கள்.
‘தான் புடிச்ச முயலுக்கு மூனு காலுன்னு நினைக்கறான்’
‘தானே பொண்ணு பார்த்துக் கட்டிக்கிட்டான்’
‘தான் பண்றதை ஒருத்தருமே குறை சொல்லக்கூடாதுன்னு அவளுக்கு நினைப்பு’
தான் என்னும் சொல் எல்லாவிடங்களிலும் நன்றாகப் பயன்படுகிறது. தான் தான் என்றே எப்போதும் சொல்ல முடியுமா ? பெயர்ச்சொல் என்று வந்தாலே அது பல்வேறு சொல்லுருபுகளை ஏற்க வேண்டும். ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகிய வேற்றுமை உருபுகளை ஏற்க வேண்டும். அப்போதுதான் ஒரு சொற்றொடரில் முழுமையாகப் பொருளுணர்த்தி நிற்க முடியும்.
தான் என்ற சொல் ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்று ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அது என்னாகும் ?
தான்+ஐ அழைக்கும்படி கூறினான்.
தன்னை அழைக்கும்படி கூறினான்.
இங்கே தான் என்பது தன் என்று மாறிவிடும். தான் என்னும் படர்க்கை ஒருமைப்பெயர் வேற்றுமை உருபுகள் உள்ளிட்ட ஏதேனும் சொல்லுருபை ஏற்கும்போதோ, அல்லது புதுச்சொல்லாக்கத்திற்கு உடன்படும்போதோ தன் என்று மாறிவிடும்.
தான் + ஐ என்பது தானை என்று ஆகாது. தன்னை என்று ஆகும். வேற்றுமை உருபு வரும்போது தான் என்பது தன் என்று மாறிவிடும்.
தான் + ஐத் தான் காக்கின் சினங்காக்க. இதனை எப்படி எழுத வேண்டும் ?
தன்னைத் தான் காக்கின் சினங்காக்க என்று எழுத வேண்டும்.
தன்னை, தன்னால், தனக்கு, தன்னில், தனது, தன்கண் என்று வேற்றுமை உருபுகள் ஏற்றப்படும். தானை, தானால், தானக்கு என்று எப்போதும் தோன்றுவதில்லை.
தான் என்பது எழுவாயாக நிற்கையில் அடுத்து வரும் பயனிலை வினைச்சொல்லுக்குத் தான் என்பது எவ்வித மாற்றமும் பெறாமல் அப்படியே நிற்கும்.
தான் அடைந்த செல்வம் என்பதைத் ‘தானடைந்த செல்வம்’ என்று புணர்த்தி எழுதலாம். தான் எழுதிய கட்டுரையை மீண்டும் படித்துப் பார்த்தான் என்பதனையும் புணர்த்தலாம். ‘தானெழுதிய’ என்று எழுதலாம். ‘தானாக’ வந்தான் எனலாம்.
தான் என்ற சொல் தன் என்று திரிவதை விளங்கிக்கொண்டால் எண்ணற்ற புதுச் சொற்களை ஆக்கலாம். அப்படித்தான் ஆக்கினார்கள்.
சங்க இலக்கியத்தில் தற்கொலை என்ற சொல்லைக் காண முடியுமா ? அன்பும் அறனுமே வாழ்வின் பயனாக வாழ்ந்தோர் நடுவில் கொலை என்பதே கொடுஞ்சொல். அதனினும் கொடிய சொல்லான தற்கொலைக்கு அங்கே என்ன சூழல் இருக்க முடியும் ? தற்கொலை என்பது தற்காலக் கொடுமை.
பிறிதொன்றைக் கொல்வது கொலை என்றால் தானே தன்னைக் கொல்வதை என்னவென்று சொல்வது ? இங்கேதான் தன் என்ற சொல் உதவுகிறது. தன்னைத்தானே செய்யும் கொலை என்னும் பொருளில் ‘தன் + கொலை = தற்கொலை’ என்று புதுச்சொல் படைக்கிறோம். தன் என்பதை முன்னொட்டாகக்கொண்டு நூற்றுக்கணக்கான சொற்களைத் தோற்றுவிக்கலாம்.
தன்னைத்தான் காத்துக்கொள்வது தற்காப்பு
தனக்குத்தானே பெருமைப்பட்டுக்கொள்வது தற்பெருமை
எவ்விதத் தூண்டலுமின்றித் தானாக நிகழும் செயல் தற்செயல்
தானாற்றியதால் தன்னை விட்டு நீங்காத வினை தன்வினை (தன்வினை தன்னைச் சுடும்)
தன்னைத் தானே எடுத்துக்கொள்ளும் படம் தற்படம் (செல்பி)
தான், தன் என்னும் இரண்டு சொற்களை அறிவீர்கள். தான் என்பது படர்க்கை ஒருமைப் பெயர். “தான் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசினான்” என்னும்போது அங்கே தான் என்பது படர்க்கையிடத்திலுள்ள ஒருமையைக் குறிக்கிறது.
தான் என்பதற்கு ஆண்பால், பெண்பால் வேறுபாடு இல்லை. “தான் நினைப்பதைச் செய்து முடித்தே பழக்கப்பட்டவள் அவள்” என்னும்போது அங்கே தான் என்பது பெண்பாலுக்கும் பொருந்துகிறது.
தான் ஓடினால்தான் தப்பிக்க முடியும் என்று அந்த மான் நினைத்தது – இந்தச் சொற்றொடரைப் பாருங்கள். இங்கே தான் என்பது படர்க்கை ஒருமையில் மானைக் குறிக்கிறது.
ஆண்பால், பெண்பால் உயர்திணைக்கும் வந்தது. மான் என்னும் ஒன்றன்பாலில் அஃறிணைக்கும் வந்தது. தான் என்னும் அச்சொல் அத்துணை வலிமையானது. எழுதுவோர்க்கும், உரியவாறு விளக்கிப் பேசுவோர்க்கும் தான் என்னும் சொல் நன்கு பயன்படும். தான், தன் போன்ற சொற்களை எழுத்திலும் பேச்சிலும் நன்கு பயன்படுத்துவோரை நான் நல்ல மொழிப்பயிற்சி பெற்றுள்ளவர்களாக மதிப்பேன்.
பேச்சு வழக்கிலும் தான் என்பதனைப் பலவாறு பயன்படுத்துவார்கள்.
‘தான் புடிச்ச முயலுக்கு மூனு காலுன்னு நினைக்கறான்’
‘தானே பொண்ணு பார்த்துக் கட்டிக்கிட்டான்’
‘தான் பண்றதை ஒருத்தருமே குறை சொல்லக்கூடாதுன்னு அவளுக்கு நினைப்பு’
தான் என்னும் சொல் எல்லாவிடங்களிலும் நன்றாகப் பயன்படுகிறது. தான் தான் என்றே எப்போதும் சொல்ல முடியுமா ? பெயர்ச்சொல் என்று வந்தாலே அது பல்வேறு சொல்லுருபுகளை ஏற்க வேண்டும். ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகிய வேற்றுமை உருபுகளை ஏற்க வேண்டும். அப்போதுதான் ஒரு சொற்றொடரில் முழுமையாகப் பொருளுணர்த்தி நிற்க முடியும்.
தான் என்ற சொல் ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்று ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அது என்னாகும் ?
தான்+ஐ அழைக்கும்படி கூறினான்.
தன்னை அழைக்கும்படி கூறினான்.
இங்கே தான் என்பது தன் என்று மாறிவிடும். தான் என்னும் படர்க்கை ஒருமைப்பெயர் வேற்றுமை உருபுகள் உள்ளிட்ட ஏதேனும் சொல்லுருபை ஏற்கும்போதோ, அல்லது புதுச்சொல்லாக்கத்திற்கு உடன்படும்போதோ தன் என்று மாறிவிடும்.
தான் + ஐ என்பது தானை என்று ஆகாது. தன்னை என்று ஆகும். வேற்றுமை உருபு வரும்போது தான் என்பது தன் என்று மாறிவிடும்.
தான் + ஐத் தான் காக்கின் சினங்காக்க. இதனை எப்படி எழுத வேண்டும் ?
தன்னைத் தான் காக்கின் சினங்காக்க என்று எழுத வேண்டும்.
தன்னை, தன்னால், தனக்கு, தன்னில், தனது, தன்கண் என்று வேற்றுமை உருபுகள் ஏற்றப்படும். தானை, தானால், தானக்கு என்று எப்போதும் தோன்றுவதில்லை.
தான் என்பது எழுவாயாக நிற்கையில் அடுத்து வரும் பயனிலை வினைச்சொல்லுக்குத் தான் என்பது எவ்வித மாற்றமும் பெறாமல் அப்படியே நிற்கும்.
தான் அடைந்த செல்வம் என்பதைத் ‘தானடைந்த செல்வம்’ என்று புணர்த்தி எழுதலாம். தான் எழுதிய கட்டுரையை மீண்டும் படித்துப் பார்த்தான் என்பதனையும் புணர்த்தலாம். ‘தானெழுதிய’ என்று எழுதலாம். ‘தானாக’ வந்தான் எனலாம்.
தான் என்ற சொல் தன் என்று திரிவதை விளங்கிக்கொண்டால் எண்ணற்ற புதுச் சொற்களை ஆக்கலாம். அப்படித்தான் ஆக்கினார்கள்.
சங்க இலக்கியத்தில் தற்கொலை என்ற சொல்லைக் காண முடியுமா ? அன்பும் அறனுமே வாழ்வின் பயனாக வாழ்ந்தோர் நடுவில் கொலை என்பதே கொடுஞ்சொல். அதனினும் கொடிய சொல்லான தற்கொலைக்கு அங்கே என்ன சூழல் இருக்க முடியும் ? தற்கொலை என்பது தற்காலக் கொடுமை.
பிறிதொன்றைக் கொல்வது கொலை என்றால் தானே தன்னைக் கொல்வதை என்னவென்று சொல்வது ? இங்கேதான் தன் என்ற சொல் உதவுகிறது. தன்னைத்தானே செய்யும் கொலை என்னும் பொருளில் ‘தன் + கொலை = தற்கொலை’ என்று புதுச்சொல் படைக்கிறோம். தன் என்பதை முன்னொட்டாகக்கொண்டு நூற்றுக்கணக்கான சொற்களைத் தோற்றுவிக்கலாம்.
தன்னைத்தான் காத்துக்கொள்வது தற்காப்பு
தனக்குத்தானே பெருமைப்பட்டுக்கொள்வது தற்பெருமை
எவ்விதத் தூண்டலுமின்றித் தானாக நிகழும் செயல் தற்செயல்
தானாற்றியதால் தன்னை விட்டு நீங்காத வினை தன்வினை (தன்வினை தன்னைச் சுடும்)
தன்னைத் தானே எடுத்துக்கொள்ளும் படம் தற்படம் (செல்பி)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்
ஆயுள் எந்த மொழிச்சொல் தெரியுமா?
ஒரு சொல் எப்படியெல்லாம் தோன்றுகின்றது என்பதை ஆராய்ந்தால் அதன் அருமை விளங்கும். வாய்வழக்காகவோ இடுகுறியாகவோ ஏதேனும் காரணம் பற்றியோ தோன்றும் அச்சொல் அதன் பொருளிலிருந்து எப்போதும் வழுவாமல் பற்பல சொற்களை உருவாக்கிச் செல்கிறது. நாம் அறிய வேண்டியது அதன் வேராய் விளங்கும் ஒரு சொல்லைத்தான். அதனைப் பற்றிப் படர்ந்து மலரும் நூறு சொற்களை நாம் அதன் வழியிலேயே பொருள் கண்டுவிடலாம். எல்லாம் ஒரே தன்மையுடையனவாய் ஒரே பொருள் நிழலில் திகழ்வனவாய் விளங்கக் காணலாம்.
வாழ் என்ற ஒரு சொல்லை எடுத்துக்கொள்வோம். எத்துணை அழகிய பொருள் பொதிந்த நற்சொல் ! வாழ் என்ற சொல்லுக்கு மாற்றான வேறு சொல்லே இல்லை என்று கூறலாம். அச்சொல் ஒன்றின் உயிர்த்திருக்கும் தன்மையைச் சொல்கிறது. பிழைத்திருந்து ஆற்றுவனவெல்லாம் ஆற்றியிருக்கச் சொல்கிறது. வாழ் என்று வாழ்த்துகிறது. அதனால் வாழ்க, வாழி, வாழிய, வாழியர் என்று வாயார வாழ்த்துகிறோம். வாழ்க என்பதுதான் மனமுவந்த வாழ்த்துரை. பெருங்காப்பியத்தின் தொடக்கம் வாழ்த்துச் செய்யுள்களோடு தொடங்கும். வாழ்க வாழ்க என்ற முழக்கத்தால் ஆனது நம் அரசியல் களம்.
வாழ் என்ற சொல்லிலிருந்துதான் வாழை என்ற சொல்லும் வருகிறது. வாழையைப் போல் வாழவேண்டும் என்றுதான் ‘வாழையடி வாழையாக வாழ்க’ என்று வாழ்த்துகிறார்கள். வாழ் என்ற சொல்லுக்கு வாழை என்னும் அம்மரம் எத்துணைப் பொருட்பொருத்தம் என்று எண்ணிப் பாருங்கள்.
வாழை என்ற சொல் வாழ்வின் பச்சைப்பெரும்பொருளாக விளங்குகிறது. ஒரே ஒரு வேர்த்தன்மைய்டைய சொல் அதன் பொருள் பிறழாமல் அதனுடன் நெருங்கிய தொடர்புடைய இன்னொரு பொருளுக்குப் பெயராகி நிற்கிறது.
வாழையினடியில் வாழைக்கன்று தோன்றும். தன்னிழலில் தன் கன்று வாழ இடமளிப்பது வாழை. மரங்களில் பெரிய மரம் என்று கருதப்படுகின்ற ஆல மரத்தடியில் இன்னொரு மரம் செழித்து வளர முடியுமா ? வேற்று மரத்தை மட்டுமில்லை, தன்னடியில் தன்னினத்தைச் சேர்ந்த மற்றோர் ஆல மரத்தைக்கூட வாழ விடாது. விழுது விழுதாக மண்ணிலிறங்கிய பிறகு தானொன்றே தனிமரமாக ஆல மரம் வளர்கிறது.
ஆந்திர மாநிலத்தின் கதிரி என்ற சிறு நகரத்திற்கு அருகே மதன பள்ளி செல்லும் வழியில் “திம்மம்மா மாரிமண்ணு” என்ற ஆலமரம் இருக்கிறது. ஆனந்தப்பூர் மாவட்டத்தின் வனத்துறைக் காப்பில் இருக்கும் அம்மரம்தான் உலகின் மிகப்பெரிய ஆலமரம் என்று கூறுகிறார்கள். நான் அவ்விடத்திற்குச் சென்றிருக்கிறேன். அடிமரம் காணமுடியாதபடி ஆயிரம் விழுதுகள் பரவியிருக்கின்றன. அதடியில் வேறு மரங்களும் இல்லை. விரைவில் வளர்ந்தழியும் புல்பூண்டுகள்தாம் காணப்படுகின்றன. தானொன்றே தனியாக வாழும் ஆலமரமெங்கே ? தன்னடியில் தன் கன்றுகளை வாழவைக்கும் வாழை மரமெங்கே ? வாழ் என்ற சொல்லின் தனிப்பெரும் பொருளாக வாழை மரத்திற்குச் சூட்டப்பட்ட பெயர் விளங்குகிறது. இப்படித்தான் ஒரு சொல் அதனோடு உயிரும் உடலும் பொருந்துமாறு பொருள் தொடர்புடைய இன்னொன்றுக்கும் பெயராகும்.
வாழ்வதால்தான் வாழ்வு. வாழ்வதுதான் வாழ்க்கை. ஆயுள் என்பது வடசொல். அதனைத் தமிழில் ‘வாழ்நாள்’ என்று சொல்ல வேண்டும். வாழ்கின்ற நாளைத்தான் வாழ்ந்த நாளாகக் கணக்கில்கொள்ள வேண்டும் என்கின்ற அரும்பொருள் பொதிந்த தமிழ்ச்சொல் வாழ்நாள்.
தனியொருவர்க்கு இங்கே என்ன வாழ்க்கை இருக்க முடியும் ? அவர்க்குத் துணை வேண்டும். அத்துணையால்தான் வாழ முடியும். அதனால் மனைவியை ‘வாழ்க்கைத் துணை’ என்று வாயாரப் புகழ்கிறார் வள்ளுவர். வாழ்க்கைத் துணைநலம் என்று அதிகாரமே வகுத்தார். ஏதேனும் நன்மையாக நடந்துவிட்டால் “அவனுக்கு வந்த வாழ்வைப் பாரேன்…” என்பார்கள். எவ்வொரு நன்மையும் வாழ்க்கையாக மாறுவது.
தமிழில் வாழ்வு என்பது உயிரோடிருத்தல் இல்லை. அதனால்தான் வாழ்வுக்கு எதிர்ச்சொல் சாவு இல்லை. வாழ்வுக்குரிய எதிர்ச்சொல் தாழ்வு. வாழாமல் தாழ்ந்து கிடப்பதைத்தான் எதிர்ச்சொல்லாக்கினோம். வாழ்வுக்கும் சரி, உயர்வுக்கும் சரி, தாழ்வே எதிர்ச்சொல். எனில் வாழ்வென்பதே உயர்வு. வாழ்த்துவதும் வாழ்விப்பதுமே ஒருவர் செய்யத்தகுத்த தகைமையான செயல்கள். வாழ்த்துவது என்றால் கடவுளையும் வாழ்த்தலாம்.
ஒரு சொல் எத்துணைப் பொருட்செறிவோடும் அடர்த்தியோடும் அருமையோடும் மொழியில் வாழ்கின்றது என்பதற்கு ‘வாழ்’ என்ற சொல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
ஒரு சொல் எப்படியெல்லாம் தோன்றுகின்றது என்பதை ஆராய்ந்தால் அதன் அருமை விளங்கும். வாய்வழக்காகவோ இடுகுறியாகவோ ஏதேனும் காரணம் பற்றியோ தோன்றும் அச்சொல் அதன் பொருளிலிருந்து எப்போதும் வழுவாமல் பற்பல சொற்களை உருவாக்கிச் செல்கிறது. நாம் அறிய வேண்டியது அதன் வேராய் விளங்கும் ஒரு சொல்லைத்தான். அதனைப் பற்றிப் படர்ந்து மலரும் நூறு சொற்களை நாம் அதன் வழியிலேயே பொருள் கண்டுவிடலாம். எல்லாம் ஒரே தன்மையுடையனவாய் ஒரே பொருள் நிழலில் திகழ்வனவாய் விளங்கக் காணலாம்.
வாழ் என்ற ஒரு சொல்லை எடுத்துக்கொள்வோம். எத்துணை அழகிய பொருள் பொதிந்த நற்சொல் ! வாழ் என்ற சொல்லுக்கு மாற்றான வேறு சொல்லே இல்லை என்று கூறலாம். அச்சொல் ஒன்றின் உயிர்த்திருக்கும் தன்மையைச் சொல்கிறது. பிழைத்திருந்து ஆற்றுவனவெல்லாம் ஆற்றியிருக்கச் சொல்கிறது. வாழ் என்று வாழ்த்துகிறது. அதனால் வாழ்க, வாழி, வாழிய, வாழியர் என்று வாயார வாழ்த்துகிறோம். வாழ்க என்பதுதான் மனமுவந்த வாழ்த்துரை. பெருங்காப்பியத்தின் தொடக்கம் வாழ்த்துச் செய்யுள்களோடு தொடங்கும். வாழ்க வாழ்க என்ற முழக்கத்தால் ஆனது நம் அரசியல் களம்.
வாழ் என்ற சொல்லிலிருந்துதான் வாழை என்ற சொல்லும் வருகிறது. வாழையைப் போல் வாழவேண்டும் என்றுதான் ‘வாழையடி வாழையாக வாழ்க’ என்று வாழ்த்துகிறார்கள். வாழ் என்ற சொல்லுக்கு வாழை என்னும் அம்மரம் எத்துணைப் பொருட்பொருத்தம் என்று எண்ணிப் பாருங்கள்.
வாழை என்ற சொல் வாழ்வின் பச்சைப்பெரும்பொருளாக விளங்குகிறது. ஒரே ஒரு வேர்த்தன்மைய்டைய சொல் அதன் பொருள் பிறழாமல் அதனுடன் நெருங்கிய தொடர்புடைய இன்னொரு பொருளுக்குப் பெயராகி நிற்கிறது.
வாழையினடியில் வாழைக்கன்று தோன்றும். தன்னிழலில் தன் கன்று வாழ இடமளிப்பது வாழை. மரங்களில் பெரிய மரம் என்று கருதப்படுகின்ற ஆல மரத்தடியில் இன்னொரு மரம் செழித்து வளர முடியுமா ? வேற்று மரத்தை மட்டுமில்லை, தன்னடியில் தன்னினத்தைச் சேர்ந்த மற்றோர் ஆல மரத்தைக்கூட வாழ விடாது. விழுது விழுதாக மண்ணிலிறங்கிய பிறகு தானொன்றே தனிமரமாக ஆல மரம் வளர்கிறது.
ஆந்திர மாநிலத்தின் கதிரி என்ற சிறு நகரத்திற்கு அருகே மதன பள்ளி செல்லும் வழியில் “திம்மம்மா மாரிமண்ணு” என்ற ஆலமரம் இருக்கிறது. ஆனந்தப்பூர் மாவட்டத்தின் வனத்துறைக் காப்பில் இருக்கும் அம்மரம்தான் உலகின் மிகப்பெரிய ஆலமரம் என்று கூறுகிறார்கள். நான் அவ்விடத்திற்குச் சென்றிருக்கிறேன். அடிமரம் காணமுடியாதபடி ஆயிரம் விழுதுகள் பரவியிருக்கின்றன. அதடியில் வேறு மரங்களும் இல்லை. விரைவில் வளர்ந்தழியும் புல்பூண்டுகள்தாம் காணப்படுகின்றன. தானொன்றே தனியாக வாழும் ஆலமரமெங்கே ? தன்னடியில் தன் கன்றுகளை வாழவைக்கும் வாழை மரமெங்கே ? வாழ் என்ற சொல்லின் தனிப்பெரும் பொருளாக வாழை மரத்திற்குச் சூட்டப்பட்ட பெயர் விளங்குகிறது. இப்படித்தான் ஒரு சொல் அதனோடு உயிரும் உடலும் பொருந்துமாறு பொருள் தொடர்புடைய இன்னொன்றுக்கும் பெயராகும்.
வாழ்வதால்தான் வாழ்வு. வாழ்வதுதான் வாழ்க்கை. ஆயுள் என்பது வடசொல். அதனைத் தமிழில் ‘வாழ்நாள்’ என்று சொல்ல வேண்டும். வாழ்கின்ற நாளைத்தான் வாழ்ந்த நாளாகக் கணக்கில்கொள்ள வேண்டும் என்கின்ற அரும்பொருள் பொதிந்த தமிழ்ச்சொல் வாழ்நாள்.
தனியொருவர்க்கு இங்கே என்ன வாழ்க்கை இருக்க முடியும் ? அவர்க்குத் துணை வேண்டும். அத்துணையால்தான் வாழ முடியும். அதனால் மனைவியை ‘வாழ்க்கைத் துணை’ என்று வாயாரப் புகழ்கிறார் வள்ளுவர். வாழ்க்கைத் துணைநலம் என்று அதிகாரமே வகுத்தார். ஏதேனும் நன்மையாக நடந்துவிட்டால் “அவனுக்கு வந்த வாழ்வைப் பாரேன்…” என்பார்கள். எவ்வொரு நன்மையும் வாழ்க்கையாக மாறுவது.
தமிழில் வாழ்வு என்பது உயிரோடிருத்தல் இல்லை. அதனால்தான் வாழ்வுக்கு எதிர்ச்சொல் சாவு இல்லை. வாழ்வுக்குரிய எதிர்ச்சொல் தாழ்வு. வாழாமல் தாழ்ந்து கிடப்பதைத்தான் எதிர்ச்சொல்லாக்கினோம். வாழ்வுக்கும் சரி, உயர்வுக்கும் சரி, தாழ்வே எதிர்ச்சொல். எனில் வாழ்வென்பதே உயர்வு. வாழ்த்துவதும் வாழ்விப்பதுமே ஒருவர் செய்யத்தகுத்த தகைமையான செயல்கள். வாழ்த்துவது என்றால் கடவுளையும் வாழ்த்தலாம்.
ஒரு சொல் எத்துணைப் பொருட்செறிவோடும் அடர்த்தியோடும் அருமையோடும் மொழியில் வாழ்கின்றது என்பதற்கு ‘வாழ்’ என்ற சொல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முத்தமிழ்: சொல்லேர் உழவர்
» யாரோ ஒருத்தியின் நடனம் - மகுடேசுவரன் கவிதைகள் மின்னூல் வடிவில் .
» உழவு
» ஒரு கவிஞனின் உழவு
» சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்
» யாரோ ஒருத்தியின் நடனம் - மகுடேசுவரன் கவிதைகள் மின்னூல் வடிவில் .
» உழவு
» ஒரு கவிஞனின் உழவு
» சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|