புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 31, 2018 11:47 pm

யாரங்கே?
இராத்திரி வரப்போகும்
இராச குமாரிக்கு
மேற்கு அம்மியிலே
மஞ்சள் அரைப்பது யார்?
இத்தனை வண்ணக் கோலம்
ஏனங்கே?

ஓ!
அது
இரவின் வாசலென்றா
இத்தனை அலங்காரம்?

என்ன அது?
தீயில் அங்கே
தேன்வடிகிறதா?

அங்கே
வழிந்தோடுவதெல்லாம்
வானத்துக்கு
ஒரு
பகலை பலிகொடுத்த
இரத்தமா?

இத்தனை
வர்ணப் புடவைகளைக்
கலைத்துப் போட்டும்.....
கடைசியில்
இரவு
கறுப்பைத்தானே
கட்டிக் கொள்கிறது?

நீலத் திரையில்
யாரோ
வரையக் கொண்டுவந்த
வர்ணக் கிண்ணம் -
சூரியனில் தடுக்கிச்
சிந்தி விட்டது!
ஆனால்.....
சிந்தியதெல்லாம்
சித்திரமானது!

புரிகிறது!
மரணப் படுக்கையில்
பகல்
புன்னகைக்கிறதா?

விடைபெறும் சூரியன்
உள்ளங் கையை
உரக்க அசைக்கையில்..
தங்க மோதி்ரங்கள்
தகதகக்கின்றன்!

என் கிராமத்து சோதரி
ஒரு
கிழிந்த பாவாடைக்காரி
கேட்கிறாள்:

"இந்த வானமும் ஏன்
என்னைப் போல்
ஒட்டுப் போட்டு ஆடை
உடுத்துகிறது?"

வானத்தின்
வர்ண மாநாடு அந்தி

பூமியின் பொன்முலாம் அந்தி

உழைத்தவன் கரமா இந்த அந்தி

முத்தமிட்ட கண்ணமா இந்த அந்தி

வானம் துப்பிய தாம்பூலமா இந்த அந்தி

பழுத்த பகலா இந்த அந்தி

சூரியனின் இரத்த தானமா இந்த அந்தி


பாவி மனிதர்களே
பணம் தேடும் மனிதர்களே

நீங்கள் பாராமல் போல பௌர்னமிகள் எத்தனையோ?

அள்ளிப் பருகாத அந்திகள் தான் எத்தனையோ?

வானத்தை விழுங்கும் வசதி உமக்கு இருந்தும்
பட்டினியால் மரிக்கும் பரிதாபம் எத்தனையோ?

கதிரவன் மரணம் கூட கண்ணுக்கு அழகுதான்

ஓ செத்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

ஒவ்வோர் அந்தியும்
ஓர் சாயங்காலக் கவிதை
இதை மொழிபெயர்க்க வேண்டாம்
எந்த லிபியிலும் வாசிக்கலாம்!

இந்த வண்ணங்கள் குடிக்க
கண்ணிரண்டு போதுமா
அடே கௌதமா
என் உடம்பெல்லாம் கண்ணாகச் சபிக்க மாட்டாயா?

வாழும் மனிதர்களே வயிற்று மனிதர்களே

புதையலை வானத்தில் போட்டுவிட்டு
பூமிக்குள் என்னதான் தேடுவீர்கள்?

நீங்கள் நாளைகளை சேமிக்கும் அவசரத்தில்
இன்றையல்லவா அன்றாடம் தொலைக்கிறீர்கள்.

குனிந்து குனிந்தே கூன் விழுந்த மனிதா

வான் பார்க்க நிமிர்!

வானம் முழுக்க உனக்கு
நீ ஏன் வரப்புக்குப் போராடுகிறாய்?

வானத்தைக் கழித்தவனுக்குப் பூமியில் பங்கு இல்லை

வானம் ஒரு நூலகம்
இன்னும் வாசகர் தேவை!

அந்தி ஒரு பந்தி
இன்னும் விருந்தினர் தேவை!

இரவி வர்மனைக் கூப்பிடுங்கள்
அவன் பயன்படுத்தாத வண்ணங்கள் பாக்கியுள்ளன!

காஞ்சிபுரம் தோளர்களே
எந்த தரியில் நெய்வீர்கள்
இப்படியொரு சித்திரச் சேலையை!

பத்மா இந்த வானம் போல் உங்களால்
பாவம் மாற்ற முடியுமா

மனிதா
ஒவ்வோர் அந்தியும் உயிரின் மருந்து
ஆசை தீர அந்தியை அருந்து

உலகத்தில் பெரிய திரையில் வரையப்பட்ட
அரிய ஓவியம் அந்தி!

- வைரமுத்து



அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 31, 2018 11:49 pm

இந்தக் கவிதையையும் கவிஞரையும் தெரிந்த அளவுக்கு, “அந்தியிளங்கீரனார்“ என்னும் சங்கப்புலவரை நாமறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தியை அழகுறப் பாடியதாலேயே இப்புலவர் “அந்தி - இளங்கீரனார்“ என்னும் பெயர் பெற்றிருக்க வேண்டும். வைரமுத்துவின் அந்தி பற்றிய இக்கவிதைக்கு அந்தியிளங்கீரனாரின் இக்கவிதையும் ஒரு சிந்தனைத் திறவுகோலாக இருந்திருக்கலாம்.


தலைவன் பொருள் தேடப் பிரிந்தபோது, அவன் பிரிவைத் தாங்காதவளாக தலைவி வருந்தினாள். அப்போது தலைவியிடம் தோழி சொல்லியது.

பாடல் இதோ,

நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் 5
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
மை இல் மான் இனம் மருள, பையென
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, 10
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக் 15
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,
இது கொல் வாழி, தோழி! என் உயிர்
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?

அகநானூறு -71 பாலை - அந்தியிளங்கீரனார்.


(பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது.)

பாடலின் பொருள்.

வண்டுகளின் கூட்டம் சுனையில் மலர்ந்த மலர்களைவிட்டு, மரக்கிளைகளில் உள்ள மலர்களை நாடிச் செல்கின்றன.

வண்டுகளின் செயல், செல்வம் குறைந்தவர்களால் பயனில்லை என்றுணர்ந்தர்வகள் அவர்களின் தொடர்பைவிட்டு செல்வம் நிறைந்தவர்களை நாடிச்செல்லும் அன்பில்லாத மக்களைப் போல உள்ளது.

குற்றமற்ற மான் கூட்டம் இருள் படர்ந்த அந்தி வானம் கண்டு அஞ்சுகிறது.

(இது போலத்தானே ஒருகாலத்தில் அந்தியைக் கண்டு ஆதிகால மனிதனும் அஞ்சியிருப்பான்!)

உலையில் செந்நிறமாக வெந்து பிறகு மெல்ல ஆறிவரும் இரும்பு போல அந்திவானம் மலர்கிறது.

பகற்பொழுதை வழியனுப்பி, இரவுப்பொழுதை வரவேற்கும் இம்மாலைக்காலம் காதலரைப் பிரிந்து தனிமையில் வாடுவோரைக் குறிவைத்து கூர்மையான வேலை எறிகிறது.

உருவங்காணும் கண்ணாடியின் அகத்தே ஊதிய ஆவி முன் பரந்து பின் சுருங்கினாற்போல், சிறிது சிறிதாகக் குறைந்து வந்து, என் வலிமை மாய்க்க எண்ணியிருந்தது இவ்வந்திப்பொழுது!

மிக்க கடிய சூறாவளி அலைப்ப, அசையும் மரத்திலுள்ள பறவை
போல, மிகவும் அழிவுற்று என்னுயிர் இவ்வுடலைத் துறந்தேகும் காலம், இதுவோ ?

என்கிறாள் தோழி. இவ்வந்திப் பொழுது காதலரைப் பிரிந்து வாடும் உன்னை மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் துன்பமளிப்பதாகத் தான் இருக்கிறது என்று ஆற்றுவிக்க ஆற்றுப்படாத தலைவியிடம் மாலைக் காலத்தின் தன்மைகளை எடுத்தியம்புகிறாள் தோழி.

இப்பாடல் வழி அந்தியின் அழகும், அழகான அகவாழ்வியலும் எடுத்தியம்பப்படுகிறது.



அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 01, 2018 5:32 pm

அருமை தல 

9 மணிக்கு ஆபிஸ் உள்ள வந்தா நைட் 7 மணிக்கு தான் வெளியே அனுப்புறாங்க அப்பறம் எங்க இதெல்லாம் ரசிக்கிறது நெட்ல டவுன்லோட் பண்ணி பாத்த தான் உண்டு



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 01, 2018 6:30 pm

இயற்கையை எப்பொழுது ரசிக்க மறக்கிறோமோ, நம் மனது மரத்துப் போய் விட்டது என்று அர்த்தம்....

இயற்கையை ரசிப்போம், இன்பமாக வாழ்வோம்...

Sent from Topic'it App



அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக