Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில்
5 posters
Page 1 of 1
கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில்
சில மாதங்களுக்கு முன்பு ஆண்டாளை வைரமுத்து கொச்சைப் படுத்திவிட்டார் என்று சொல்லி ஒருக் கூட்டமே அவரை வாய்க்கு வந்தபடியெல்லாம் வசை பாடியது. கவிஞர் வைரமுத்து அவர்கள் ஆண்டாள் பற்றித் 'தமிழை ஆண்டாள்' என்னும் தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டு அதை கடந்த மார்கழி மாதத்தில் திருவில்லிபுத்தூரில் ஒரு மேடையில் வாசித்தார். அவர் 'ஆண்டாள் திருவில்லிபுத்தூர் கோவிலில் தேவதாசியாக வாழ்ந்து மடிந்தார்' என்று வேறொருவர் சொன்ன ஒரு விஷயத்தை அந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டி இருந்தார். இதைப் பெரிய ஒரு பிரச்சனையாக்கித் தேவையில்லாத ஆர்பாட்டம் செய்து மனிதத்தன்மையே இல்லாமல் நடந்து கொண்டது இந்தக் கூட்டம்.
இது பலநாட்களாக என் மனதில் இருந்து சமூக வலைதளங்களில் மட்டும் இதைப் பற்றி ஏதாவது எழுதிப் பதிவிட்டு வந்தேன். ஆனால் அதைப் பற்றித் தெளிவாகக் கட்டுரை எழுதி, இந்த வீண்போராட்டம் செய்தவர்களைச் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பலநாட்களாக என் மனதில் இருந்தது. அதன்விளைவாக உருவான பதிவுதான் இது.
முதலில் பாரதியார் எழுதிய ஒரு அற்புதமான பாடலை மேற்கோள் காட்டி உங்கள் முன் வைக்கிறேன்:
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகள் -- பால்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?1
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் -- எத
னூடும் நின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? -- பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?3
வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே -- ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.4
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே -- ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.5
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே -- உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம் -- நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?7
உள்ள தனைத்திலு முள்ளொளி யாகி
யொளிர்ந்திடு மான்மாவே -- இங்கு
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?8
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்க தைகள்சேர்த்துப் -- பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்முறை
காட்டவும் வல்லீரோ?9
ஒன்றுபிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் -- என்றும்
ஒன்றுபிரம முளதுண்மை யஃது
உணர்வெனக் கொள்வாயே.10
இன்று இந்துமதத்தைச் சனாதன தர்மத்தைக் காப்பாற்றுகிறோம் என்றுக் கிளம்பியிருக்கும் பலருக்கு, உண்மையாக இந்தச் சனாதன தர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றே தெரியாது. இதைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் வைரமுத்துவைப் பழித்தவர்களே இந்து மதத்தின் உண்மையான எதிரிகள் என்பது விளங்கும்.
பாரதியின் இந்தப் பாடலில் கவனிக்க வேண்டிய வரிகள் இவை:
“வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே -- ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.”
இந்துமதத்தைப் பொறுத்தவரைக் கடவுள் என்பது எங்கும் எல்லாமுமாய் நிறைந்திருக்கிற, ஆதி அந்தம் இல்லாத, குணங்கள் இல்லாத (நிர்குண பிரம்மம்), ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உயிர்தன்மையாய் இருக்கின்ற, தன்னை உணர்ந்தறிந்தால் பிரத்தியக்ஷமாக அனுபவத்தில் உணர்கின்ற வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. மனித மனம் இதை முதலில் புரிந்து கொள்ள முடியாது என்பதால், வெவ்வேறு மனிதர்களின் தன்மைக்கேற்ப வெவ்வேறு உருவங்களை உருவாக்கி சகுண பிரம்ம உபாசனை என்ற ஒரு ஆன்மீக சாதனத்தை உருவாக்கினார்கள்.
இதன் ஒரே நோக்கம் ஒரு மனிதன் வாழும்போதே மனத்துயரத்தில் இருந்து விடுதலையடைந்து முழுமை உணர்வும், பூரண திருப்தியும், மனச்சாந்தியும், பேரின்பமும் அடைந்து , தன்னைப் பிணைக்கும் எல்லாத் தளைகளையும் தகர்த்தெறிய வேண்டும் என்பதே!
ஆனால் இன்று பல மனிதர்களுக்கு பக்தி என்பது, முக்திக்கான சாதனமில்லை. அது கடவுளிடம் பேசும் ஒரு டீலிங் ஆகிவிட்டது. 'கடவுளே, என் பெண்ணிற்குக் கல்யாணம் ஆனால் நான் உனக்கு மொட்டை போடுகிறேன்' என்று வேண்டிக்கொள்ளுவதற்காகத் தான் பலருக்கு இன்று கடவுள் பயன்படுகிறார். ஒரே வரியில் சொல்லப் போனால், இவர்களுடைய ஆசையும் பயமும் உருவாக்கும் ஒரு மனபிம்பம்தான் இந்தக் கடவுள். ஆனால், இதற்கும் சனாதன தர்மத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை. பாரதியாரின் மற்றும் சில அழகான வரிகள் இதோ:
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திட லாமென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்.
1
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்.
2
இன்னொரு முக்கியமான விஷயம். 'வசுதா ஏவ குடும்பகம்' என்கிறது மஹா உபநிஷத். இதற்கு 'இந்த பூமியே ஒரு குடும்பம்' என்று பொருள். கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வாக்கியமும் இதைப் போன்றதே. இந்த வாக்கியங்கள் அன்பை வலியுறுத்துகின்றன. ஆன்மிகப் பாதையில் அன்பு மிக முக்கியமானது. அதனால்தான் 'உன்னைப் போல் பிறரையும் நேசி' என்று மஹாஞானி இயேசுவும் கூறினார். நம் நாட்டில் 'வணக்கம்' 'நமஸ்காரம்' என்று கூறுவதற்கெல்லாம் பொருள், 'நான் உனக்குள் இருக்கும் இறைத்தன்மையை வணங்குகிறேன்' என்பதே. நீ பிற மனிதனை நேசித்தால்தான் கடவுளையும் நேசிக்க முடியும் என்கிறது சனாதன தர்மம்'.
அதைத்தான் திருமூலரும் கீழ்க்கண்ட பாடலில் கூறுகிறார்
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே (திருமந்திரம் : -270)
ஆன்மீகம், மதம், அதன் கோட்பாடுகள் போன்றவை மனிதனுக்காக உருவாக்கப் பட்டவை. மனிதன் அவற்றிற்காக உருவாக்கப் படவில்லை. பைபிளில் கூட இந்தக் கருத்து வருகிறது:
23 ஒரு ஓய்வுநாளில் இயேசு தானிய வயல்கள் வழியே நடந்துகொண்டிருந்தார். அவரது சீஷர்களும் அவரோடு சென்றார்கள். சீஷர்கள் தானியக்கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.24 பரிசேயர்கள் இதனைப் பார்த்து இயேசுவிடம், “உங்கள் சீஷர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ஓய்வு நாளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பது யூதர்களின் சட்டமல்லவா?” என்றனர்.
25 அதற்கு இயேசு, “தனக்கும் தன் சீஷர்களுக்கும் உணவு வேண்டிப் பசித்திருந்த நேரத்தில் 26 தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அபியத்தார் என்னும் தலைமை ஆசாரியன் காலத்தில் நடந்த விஷயம் அது. தாவீது தேவனுடைய வீட்டில் நுழைந்து தேவனுக்குப் படைக்கப்பட்ட அப்பத்தை உண்டான். மோசேயின் விதிகளோ ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்கலாம் என்று கூறுகின்றன. தாவீது தன்னுடன் இருந்த மற்றவர்களுக்கும் அப்பத்தைக் கொடுத்தான்” என்றார்.
27 மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. 28 எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார்.
மாற்கு 23 - 28
அவமதிக்கவே முடியாத பரம்பொருளை ஒருவர் அவமதித்ததாகச் சொல்லி, அந்த மனிதனை வாய்க்கு வந்த படியெல்லாம் மனிதாபிமானம் இல்லாமல் திட்டுவதை பக்தி என்று நினைத்துக் கொண்டிருக்கும், சனாதன தர்மத்தைப் பற்றி உண்மையில் எதுவும் அறியாதக் கூட்டம்தான் வைரமுத்துவை விமர்சித்தது. ஆண்டாள் உயிரோடிருந்திருந்தால் அவளே இந்தக் கூட்டத்தை வன்மையாகக் கண்டித்திருப்பாள்.
வைரமுத்துவுக்கும் கடவுளுக்கும் என்ன விரொதம் இருக்க முடியும்? விரொதம் வைக்கக் கடவுள் மாமன் மச்சானா அல்லது பக்கத்து வீட்டுக்காரனா? சனாதன தர்மத்தைப் பொருத்தவரைக் கடவுள் என்பது ஆத்ம சொரூபம். 'ஆத்மா' என்ற வார்த்தைக்கு உண்மையில் 'தான்' என்று பொருள். 'அஹம் தர்ப்பனே ஆத்மானம் பஷ்யாமி' என்று வடமொழியில் கூறினால், 'நான் என்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறேன்' என்று பொருள். ஆத்மசொரூபம் என்பது ஒருவனின் சுய சொருபமே தவிர வேறில்லை. ஆனால், அவரைப் பற்றி ஒரு பெரும்கூட்டமே என்ன என்ன வசைமொழிகளையெல்லாம் அவர்மேல் வைத்தது? கேட்க முடியாத அசிங்கமான வார்த்தைகளால் உங்கள் மனித இனத்தைச் சார்ந்த ஒரு அழகான மனிதனை, தமிழ்மொழியின் மாபெரும் கவிஞனை இப்படியேல்லாம் பேசுவதை ஆன்மீகம் என்று நினைக்கிறீர்களா?
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், கவிஞர் வைரமுத்துவை விமர்சித்தவர்களில் தொன்னூறு சதவீதம் பேர் அவர் எழுதிய அந்த ஆய்வுக்கட்டுரையைப் படிக்கக் கூட இல்லை. ஒரு விஷயத்தை முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ளாமல் அதைப் பற்றி மற்றவர் வாயால் கேட்டதை வைத்து மட்டுமே விமர்சனம் செய்வது எவ்வளவு பெரிய கண்மூடித்தனம் என்பது இவர்களுக்குப் புரியவில்லை. திருவள்ளுவரின் கீழ்க்கண்ட குறளையும் இங்கு இவர்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டி இருக்கிறது:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
மூன்றாவது, வரலாற்று மனிதர்களைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதவும் பேசவும் தன்கருத்தைச் சொல்லவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அப்படிப்பட்ட ஒருக் கருத்துக்கு, தர்க்க ரீதியாகக் கருத்தாலேயே பதில் சொல்வதுதான் முறை, அறிவார்ந்த செயலும் கூட. அதைவிட்டுவிட்டு அந்தத் தனிபட்ட மனிதரின் குணங்களைப் பற்றிப் பேசுவதும், வசைமொழி பாடுவதும் கண்மூடித்தனம் மட்டுமல்ல, தர்க்கரீதியாக ஒரு பிழையும் கூட. இதை ஆங்கிலத்தில் 'ஆட் ஹோமினம்' (ad hominem) என்று சொல்வார்கள்.
நான்காவதாக ஒரு விஷயம் இருக்கிறது, அதை ஒருச் சிறிய ஒப்புமை மூலமாக விளக்குகிறேன், உங்கள் வீடு பற்றி எரிகிறது என்று நான் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை ஓடிச் சென்று அணைப்பீர்களா அல்லது 'என் வீடு மட்டுமா எரிகிறது, என் பக்கத்து வீட்டுக்காரனின் வீடும்தான் எரிகிறது, என் எதிர்த்த வீட்டுக்காரன் வீடும்தான் எரிகிறது. அவர்களைப் பற்றியெல்லாம் எதையாவது பேசுகிறாயா? ஏன் எப்போதும் என்னையே எதையாவது சொல்கிறாய்?' என்று வாதம் செய்வீர்களா? தீயை அணைக்கத்தானே வழி தேடுவீர்கள்? ஆனால் மதத்தைப் பற்றி வந்தால் மட்டும் இவர்கள், 'ஏன் ஹிந்துக்களைப் பற்றியே எதையாவது சொல்கிறாய்? அவர்கள் மதத்திலும்தான் இப்படியெல்லாம் நடக்கிறது' என்று பேசுவார்கள். இது ஒரு மனம் செய்யும் மாயை, தர்க்கப் பிழையும் கூட. ஆங்கிலத்தில் இதை வாட்டபௌட்டிசம் (whataboutism) என்பார்கள்.
இந்துமதம் என்று பல அரசியல் கட்சிகள் இன்றுப் பேசிக்கொண்டிருப்பது மற்ற மதங்களின் மீதுள்ள வெறுப்பினால் ஏற்பட்ட எதிர்வினைதானே ஒழிய ஆதி சங்கரர், ரமணர், ராமகிருஷ்ணர், அஷ்டவக்ரர், பதஞ்சலி போன்ற ஞானிகள் வளர்த்த சனாதன தர்மம் இல்லை என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஆண்டாளைப் பற்றிக் கூடிய விரைவில் இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.
இது பலநாட்களாக என் மனதில் இருந்து சமூக வலைதளங்களில் மட்டும் இதைப் பற்றி ஏதாவது எழுதிப் பதிவிட்டு வந்தேன். ஆனால் அதைப் பற்றித் தெளிவாகக் கட்டுரை எழுதி, இந்த வீண்போராட்டம் செய்தவர்களைச் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பலநாட்களாக என் மனதில் இருந்தது. அதன்விளைவாக உருவான பதிவுதான் இது.
முதலில் பாரதியார் எழுதிய ஒரு அற்புதமான பாடலை மேற்கோள் காட்டி உங்கள் முன் வைக்கிறேன்:
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகள் -- பால்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?1
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் -- எத
னூடும் நின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? -- பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?3
வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே -- ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.4
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே -- ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.5
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே -- உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம் -- நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?7
உள்ள தனைத்திலு முள்ளொளி யாகி
யொளிர்ந்திடு மான்மாவே -- இங்கு
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?8
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்க தைகள்சேர்த்துப் -- பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்முறை
காட்டவும் வல்லீரோ?9
ஒன்றுபிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் -- என்றும்
ஒன்றுபிரம முளதுண்மை யஃது
உணர்வெனக் கொள்வாயே.10
இன்று இந்துமதத்தைச் சனாதன தர்மத்தைக் காப்பாற்றுகிறோம் என்றுக் கிளம்பியிருக்கும் பலருக்கு, உண்மையாக இந்தச் சனாதன தர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றே தெரியாது. இதைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் வைரமுத்துவைப் பழித்தவர்களே இந்து மதத்தின் உண்மையான எதிரிகள் என்பது விளங்கும்.
பாரதியின் இந்தப் பாடலில் கவனிக்க வேண்டிய வரிகள் இவை:
“வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே -- ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.”
இந்துமதத்தைப் பொறுத்தவரைக் கடவுள் என்பது எங்கும் எல்லாமுமாய் நிறைந்திருக்கிற, ஆதி அந்தம் இல்லாத, குணங்கள் இல்லாத (நிர்குண பிரம்மம்), ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உயிர்தன்மையாய் இருக்கின்ற, தன்னை உணர்ந்தறிந்தால் பிரத்தியக்ஷமாக அனுபவத்தில் உணர்கின்ற வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. மனித மனம் இதை முதலில் புரிந்து கொள்ள முடியாது என்பதால், வெவ்வேறு மனிதர்களின் தன்மைக்கேற்ப வெவ்வேறு உருவங்களை உருவாக்கி சகுண பிரம்ம உபாசனை என்ற ஒரு ஆன்மீக சாதனத்தை உருவாக்கினார்கள்.
இதன் ஒரே நோக்கம் ஒரு மனிதன் வாழும்போதே மனத்துயரத்தில் இருந்து விடுதலையடைந்து முழுமை உணர்வும், பூரண திருப்தியும், மனச்சாந்தியும், பேரின்பமும் அடைந்து , தன்னைப் பிணைக்கும் எல்லாத் தளைகளையும் தகர்த்தெறிய வேண்டும் என்பதே!
ஆனால் இன்று பல மனிதர்களுக்கு பக்தி என்பது, முக்திக்கான சாதனமில்லை. அது கடவுளிடம் பேசும் ஒரு டீலிங் ஆகிவிட்டது. 'கடவுளே, என் பெண்ணிற்குக் கல்யாணம் ஆனால் நான் உனக்கு மொட்டை போடுகிறேன்' என்று வேண்டிக்கொள்ளுவதற்காகத் தான் பலருக்கு இன்று கடவுள் பயன்படுகிறார். ஒரே வரியில் சொல்லப் போனால், இவர்களுடைய ஆசையும் பயமும் உருவாக்கும் ஒரு மனபிம்பம்தான் இந்தக் கடவுள். ஆனால், இதற்கும் சனாதன தர்மத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை. பாரதியாரின் மற்றும் சில அழகான வரிகள் இதோ:
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திட லாமென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்.
1
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்.
2
இன்னொரு முக்கியமான விஷயம். 'வசுதா ஏவ குடும்பகம்' என்கிறது மஹா உபநிஷத். இதற்கு 'இந்த பூமியே ஒரு குடும்பம்' என்று பொருள். கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வாக்கியமும் இதைப் போன்றதே. இந்த வாக்கியங்கள் அன்பை வலியுறுத்துகின்றன. ஆன்மிகப் பாதையில் அன்பு மிக முக்கியமானது. அதனால்தான் 'உன்னைப் போல் பிறரையும் நேசி' என்று மஹாஞானி இயேசுவும் கூறினார். நம் நாட்டில் 'வணக்கம்' 'நமஸ்காரம்' என்று கூறுவதற்கெல்லாம் பொருள், 'நான் உனக்குள் இருக்கும் இறைத்தன்மையை வணங்குகிறேன்' என்பதே. நீ பிற மனிதனை நேசித்தால்தான் கடவுளையும் நேசிக்க முடியும் என்கிறது சனாதன தர்மம்'.
அதைத்தான் திருமூலரும் கீழ்க்கண்ட பாடலில் கூறுகிறார்
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே (திருமந்திரம் : -270)
ஆன்மீகம், மதம், அதன் கோட்பாடுகள் போன்றவை மனிதனுக்காக உருவாக்கப் பட்டவை. மனிதன் அவற்றிற்காக உருவாக்கப் படவில்லை. பைபிளில் கூட இந்தக் கருத்து வருகிறது:
23 ஒரு ஓய்வுநாளில் இயேசு தானிய வயல்கள் வழியே நடந்துகொண்டிருந்தார். அவரது சீஷர்களும் அவரோடு சென்றார்கள். சீஷர்கள் தானியக்கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.24 பரிசேயர்கள் இதனைப் பார்த்து இயேசுவிடம், “உங்கள் சீஷர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ஓய்வு நாளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பது யூதர்களின் சட்டமல்லவா?” என்றனர்.
25 அதற்கு இயேசு, “தனக்கும் தன் சீஷர்களுக்கும் உணவு வேண்டிப் பசித்திருந்த நேரத்தில் 26 தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அபியத்தார் என்னும் தலைமை ஆசாரியன் காலத்தில் நடந்த விஷயம் அது. தாவீது தேவனுடைய வீட்டில் நுழைந்து தேவனுக்குப் படைக்கப்பட்ட அப்பத்தை உண்டான். மோசேயின் விதிகளோ ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்கலாம் என்று கூறுகின்றன. தாவீது தன்னுடன் இருந்த மற்றவர்களுக்கும் அப்பத்தைக் கொடுத்தான்” என்றார்.
27 மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. 28 எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார்.
மாற்கு 23 - 28
அவமதிக்கவே முடியாத பரம்பொருளை ஒருவர் அவமதித்ததாகச் சொல்லி, அந்த மனிதனை வாய்க்கு வந்த படியெல்லாம் மனிதாபிமானம் இல்லாமல் திட்டுவதை பக்தி என்று நினைத்துக் கொண்டிருக்கும், சனாதன தர்மத்தைப் பற்றி உண்மையில் எதுவும் அறியாதக் கூட்டம்தான் வைரமுத்துவை விமர்சித்தது. ஆண்டாள் உயிரோடிருந்திருந்தால் அவளே இந்தக் கூட்டத்தை வன்மையாகக் கண்டித்திருப்பாள்.
வைரமுத்துவுக்கும் கடவுளுக்கும் என்ன விரொதம் இருக்க முடியும்? விரொதம் வைக்கக் கடவுள் மாமன் மச்சானா அல்லது பக்கத்து வீட்டுக்காரனா? சனாதன தர்மத்தைப் பொருத்தவரைக் கடவுள் என்பது ஆத்ம சொரூபம். 'ஆத்மா' என்ற வார்த்தைக்கு உண்மையில் 'தான்' என்று பொருள். 'அஹம் தர்ப்பனே ஆத்மானம் பஷ்யாமி' என்று வடமொழியில் கூறினால், 'நான் என்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறேன்' என்று பொருள். ஆத்மசொரூபம் என்பது ஒருவனின் சுய சொருபமே தவிர வேறில்லை. ஆனால், அவரைப் பற்றி ஒரு பெரும்கூட்டமே என்ன என்ன வசைமொழிகளையெல்லாம் அவர்மேல் வைத்தது? கேட்க முடியாத அசிங்கமான வார்த்தைகளால் உங்கள் மனித இனத்தைச் சார்ந்த ஒரு அழகான மனிதனை, தமிழ்மொழியின் மாபெரும் கவிஞனை இப்படியேல்லாம் பேசுவதை ஆன்மீகம் என்று நினைக்கிறீர்களா?
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், கவிஞர் வைரமுத்துவை விமர்சித்தவர்களில் தொன்னூறு சதவீதம் பேர் அவர் எழுதிய அந்த ஆய்வுக்கட்டுரையைப் படிக்கக் கூட இல்லை. ஒரு விஷயத்தை முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ளாமல் அதைப் பற்றி மற்றவர் வாயால் கேட்டதை வைத்து மட்டுமே விமர்சனம் செய்வது எவ்வளவு பெரிய கண்மூடித்தனம் என்பது இவர்களுக்குப் புரியவில்லை. திருவள்ளுவரின் கீழ்க்கண்ட குறளையும் இங்கு இவர்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டி இருக்கிறது:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
மூன்றாவது, வரலாற்று மனிதர்களைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதவும் பேசவும் தன்கருத்தைச் சொல்லவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அப்படிப்பட்ட ஒருக் கருத்துக்கு, தர்க்க ரீதியாகக் கருத்தாலேயே பதில் சொல்வதுதான் முறை, அறிவார்ந்த செயலும் கூட. அதைவிட்டுவிட்டு அந்தத் தனிபட்ட மனிதரின் குணங்களைப் பற்றிப் பேசுவதும், வசைமொழி பாடுவதும் கண்மூடித்தனம் மட்டுமல்ல, தர்க்கரீதியாக ஒரு பிழையும் கூட. இதை ஆங்கிலத்தில் 'ஆட் ஹோமினம்' (ad hominem) என்று சொல்வார்கள்.
நான்காவதாக ஒரு விஷயம் இருக்கிறது, அதை ஒருச் சிறிய ஒப்புமை மூலமாக விளக்குகிறேன், உங்கள் வீடு பற்றி எரிகிறது என்று நான் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை ஓடிச் சென்று அணைப்பீர்களா அல்லது 'என் வீடு மட்டுமா எரிகிறது, என் பக்கத்து வீட்டுக்காரனின் வீடும்தான் எரிகிறது, என் எதிர்த்த வீட்டுக்காரன் வீடும்தான் எரிகிறது. அவர்களைப் பற்றியெல்லாம் எதையாவது பேசுகிறாயா? ஏன் எப்போதும் என்னையே எதையாவது சொல்கிறாய்?' என்று வாதம் செய்வீர்களா? தீயை அணைக்கத்தானே வழி தேடுவீர்கள்? ஆனால் மதத்தைப் பற்றி வந்தால் மட்டும் இவர்கள், 'ஏன் ஹிந்துக்களைப் பற்றியே எதையாவது சொல்கிறாய்? அவர்கள் மதத்திலும்தான் இப்படியெல்லாம் நடக்கிறது' என்று பேசுவார்கள். இது ஒரு மனம் செய்யும் மாயை, தர்க்கப் பிழையும் கூட. ஆங்கிலத்தில் இதை வாட்டபௌட்டிசம் (whataboutism) என்பார்கள்.
இந்துமதம் என்று பல அரசியல் கட்சிகள் இன்றுப் பேசிக்கொண்டிருப்பது மற்ற மதங்களின் மீதுள்ள வெறுப்பினால் ஏற்பட்ட எதிர்வினைதானே ஒழிய ஆதி சங்கரர், ரமணர், ராமகிருஷ்ணர், அஷ்டவக்ரர், பதஞ்சலி போன்ற ஞானிகள் வளர்த்த சனாதன தர்மம் இல்லை என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஆண்டாளைப் பற்றிக் கூடிய விரைவில் இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில்
அருமையான பதிவு
திரு.சண்முகம் அவர்களே
திரு.சண்முகம் அவர்களே
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில்
" யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற மந்திரச் சொற்கள் கணியன் பூங்குன்றனார் அவர்களால் சொல்லப்பட்டது . பரிமேலழகரால் அல்ல .
ஆண்டாளைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரம் நல்ல செய்திகள் இருக்கும்போது , அவர் தேவதாசியாக வாழ்ந்தார் என்ற செய்தியில் அக்கறை காட்டுவானேன் ? அதையும் தானே சொல்வதற்குத் துணிவின்றி இன்னொருவர் தோள்மீது ஏறிக்கொண்டு சொல்வானேன் ?
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் .
என்ற ஐயன் வள்ளுவனின் இலக்கணத்திற்கு இலக்கியம் ஆயினார் வைரமுத்து .
ஆண்டாளைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரம் நல்ல செய்திகள் இருக்கும்போது , அவர் தேவதாசியாக வாழ்ந்தார் என்ற செய்தியில் அக்கறை காட்டுவானேன் ? அதையும் தானே சொல்வதற்குத் துணிவின்றி இன்னொருவர் தோள்மீது ஏறிக்கொண்டு சொல்வானேன் ?
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் .
என்ற ஐயன் வள்ளுவனின் இலக்கணத்திற்கு இலக்கியம் ஆயினார் வைரமுத்து .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில்
மேற்கோள் செய்த பதிவு: 1275474M.Jagadeesan wrote:" யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற மந்திரச் சொற்கள் கணியன் பூங்குன்றனார் அவர்களால் சொல்லப்பட்டது . பரிமேலழகரால் அல்ல .
ஆண்டாளைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரம் நல்ல செய்திகள் இருக்கும்போது , அவர் தேவதாசியாக வாழ்ந்தார் என்ற செய்தியில் அக்கறை காட்டுவானேன் ? அதையும் தானே சொல்வதற்குத் துணிவின்றி இன்னொருவர் தோள்மீது ஏறிக்கொண்டு சொல்வானேன் ?
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் .
என்ற ஐயன் வள்ளுவனின் இலக்கணத்திற்கு இலக்கியம் ஆயினார் வைரமுத்து .
நன்றி.. ஏதோ ஒரு நினைவில் பரிமேலழகர் என்று எழுதிவிட்டேன். இப்போது திருத்த முடியவில்லை
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில்
மேற்கோள் செய்த பதிவு: 1275474M.Jagadeesan wrote:" யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற மந்திரச் சொற்கள் கணியன் பூங்குன்றனார் அவர்களால் சொல்லப்பட்டது . பரிமேலழகரால் அல்ல .
ஆண்டாளைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரம் நல்ல செய்திகள் இருக்கும்போது , அவர் தேவதாசியாக வாழ்ந்தார் என்ற செய்தியில் அக்கறை காட்டுவானேன் ? அதையும் தானே சொல்வதற்குத் துணிவின்றி இன்னொருவர் தோள்மீது ஏறிக்கொண்டு சொல்வானேன் ?
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் .
என்ற ஐயன் வள்ளுவனின் இலக்கணத்திற்கு இலக்கியம் ஆயினார் வைரமுத்து .
என்னுடைய கருத்தும் இதேதான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில்
மேற்கோள் செய்த பதிவு: 1275487சண்முகம்.ப wrote:
நன்றி.. ஏதோ ஒரு நினைவில் பரிமேலழகர் என்று எழுதிவிட்டேன். இப்போது திருத்த முடியவில்லை
திருத்தப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில்
நன்றி சண்முகம் .
எதற்கு என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.
ரமணியன்
எதற்கு என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Similar topics
» கவிஞர் பார்வையில் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி
» தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஆண்டாள் திருப்பாவை
» கவிப்பேரரசு வைரமுத்துவின் வாரிசுகளான மதன் கார்க்கியும், கபிலன் வைரமுத்துவும்…
» தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஆண்டாள் திருப்பாவை
» கவிப்பேரரசு வைரமுத்துவின் வாரிசுகளான மதன் கார்க்கியும், கபிலன் வைரமுத்துவும்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|