புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
25 Posts - 48%
heezulia
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
7 Posts - 2%
prajai
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_m10அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 31, 2018 11:47 pm

யாரங்கே?
இராத்திரி வரப்போகும்
இராச குமாரிக்கு
மேற்கு அம்மியிலே
மஞ்சள் அரைப்பது யார்?
இத்தனை வண்ணக் கோலம்
ஏனங்கே?

ஓ!
அது
இரவின் வாசலென்றா
இத்தனை அலங்காரம்?

என்ன அது?
தீயில் அங்கே
தேன்வடிகிறதா?

அங்கே
வழிந்தோடுவதெல்லாம்
வானத்துக்கு
ஒரு
பகலை பலிகொடுத்த
இரத்தமா?

இத்தனை
வர்ணப் புடவைகளைக்
கலைத்துப் போட்டும்.....
கடைசியில்
இரவு
கறுப்பைத்தானே
கட்டிக் கொள்கிறது?

நீலத் திரையில்
யாரோ
வரையக் கொண்டுவந்த
வர்ணக் கிண்ணம் -
சூரியனில் தடுக்கிச்
சிந்தி விட்டது!
ஆனால்.....
சிந்தியதெல்லாம்
சித்திரமானது!

புரிகிறது!
மரணப் படுக்கையில்
பகல்
புன்னகைக்கிறதா?

விடைபெறும் சூரியன்
உள்ளங் கையை
உரக்க அசைக்கையில்..
தங்க மோதி்ரங்கள்
தகதகக்கின்றன்!

என் கிராமத்து சோதரி
ஒரு
கிழிந்த பாவாடைக்காரி
கேட்கிறாள்:

"இந்த வானமும் ஏன்
என்னைப் போல்
ஒட்டுப் போட்டு ஆடை
உடுத்துகிறது?"

வானத்தின்
வர்ண மாநாடு அந்தி

பூமியின் பொன்முலாம் அந்தி

உழைத்தவன் கரமா இந்த அந்தி

முத்தமிட்ட கண்ணமா இந்த அந்தி

வானம் துப்பிய தாம்பூலமா இந்த அந்தி

பழுத்த பகலா இந்த அந்தி

சூரியனின் இரத்த தானமா இந்த அந்தி


பாவி மனிதர்களே
பணம் தேடும் மனிதர்களே

நீங்கள் பாராமல் போல பௌர்னமிகள் எத்தனையோ?

அள்ளிப் பருகாத அந்திகள் தான் எத்தனையோ?

வானத்தை விழுங்கும் வசதி உமக்கு இருந்தும்
பட்டினியால் மரிக்கும் பரிதாபம் எத்தனையோ?

கதிரவன் மரணம் கூட கண்ணுக்கு அழகுதான்

ஓ செத்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

ஒவ்வோர் அந்தியும்
ஓர் சாயங்காலக் கவிதை
இதை மொழிபெயர்க்க வேண்டாம்
எந்த லிபியிலும் வாசிக்கலாம்!

இந்த வண்ணங்கள் குடிக்க
கண்ணிரண்டு போதுமா
அடே கௌதமா
என் உடம்பெல்லாம் கண்ணாகச் சபிக்க மாட்டாயா?

வாழும் மனிதர்களே வயிற்று மனிதர்களே

புதையலை வானத்தில் போட்டுவிட்டு
பூமிக்குள் என்னதான் தேடுவீர்கள்?

நீங்கள் நாளைகளை சேமிக்கும் அவசரத்தில்
இன்றையல்லவா அன்றாடம் தொலைக்கிறீர்கள்.

குனிந்து குனிந்தே கூன் விழுந்த மனிதா

வான் பார்க்க நிமிர்!

வானம் முழுக்க உனக்கு
நீ ஏன் வரப்புக்குப் போராடுகிறாய்?

வானத்தைக் கழித்தவனுக்குப் பூமியில் பங்கு இல்லை

வானம் ஒரு நூலகம்
இன்னும் வாசகர் தேவை!

அந்தி ஒரு பந்தி
இன்னும் விருந்தினர் தேவை!

இரவி வர்மனைக் கூப்பிடுங்கள்
அவன் பயன்படுத்தாத வண்ணங்கள் பாக்கியுள்ளன!

காஞ்சிபுரம் தோளர்களே
எந்த தரியில் நெய்வீர்கள்
இப்படியொரு சித்திரச் சேலையை!

பத்மா இந்த வானம் போல் உங்களால்
பாவம் மாற்ற முடியுமா

மனிதா
ஒவ்வோர் அந்தியும் உயிரின் மருந்து
ஆசை தீர அந்தியை அருந்து

உலகத்தில் பெரிய திரையில் வரையப்பட்ட
அரிய ஓவியம் அந்தி!

- வைரமுத்து



அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 31, 2018 11:49 pm

இந்தக் கவிதையையும் கவிஞரையும் தெரிந்த அளவுக்கு, “அந்தியிளங்கீரனார்“ என்னும் சங்கப்புலவரை நாமறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தியை அழகுறப் பாடியதாலேயே இப்புலவர் “அந்தி - இளங்கீரனார்“ என்னும் பெயர் பெற்றிருக்க வேண்டும். வைரமுத்துவின் அந்தி பற்றிய இக்கவிதைக்கு அந்தியிளங்கீரனாரின் இக்கவிதையும் ஒரு சிந்தனைத் திறவுகோலாக இருந்திருக்கலாம்.


தலைவன் பொருள் தேடப் பிரிந்தபோது, அவன் பிரிவைத் தாங்காதவளாக தலைவி வருந்தினாள். அப்போது தலைவியிடம் தோழி சொல்லியது.

பாடல் இதோ,

நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் 5
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
மை இல் மான் இனம் மருள, பையென
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, 10
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக் 15
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,
இது கொல் வாழி, தோழி! என் உயிர்
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?

அகநானூறு -71 பாலை - அந்தியிளங்கீரனார்.


(பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது.)

பாடலின் பொருள்.

வண்டுகளின் கூட்டம் சுனையில் மலர்ந்த மலர்களைவிட்டு, மரக்கிளைகளில் உள்ள மலர்களை நாடிச் செல்கின்றன.

வண்டுகளின் செயல், செல்வம் குறைந்தவர்களால் பயனில்லை என்றுணர்ந்தர்வகள் அவர்களின் தொடர்பைவிட்டு செல்வம் நிறைந்தவர்களை நாடிச்செல்லும் அன்பில்லாத மக்களைப் போல உள்ளது.

குற்றமற்ற மான் கூட்டம் இருள் படர்ந்த அந்தி வானம் கண்டு அஞ்சுகிறது.

(இது போலத்தானே ஒருகாலத்தில் அந்தியைக் கண்டு ஆதிகால மனிதனும் அஞ்சியிருப்பான்!)

உலையில் செந்நிறமாக வெந்து பிறகு மெல்ல ஆறிவரும் இரும்பு போல அந்திவானம் மலர்கிறது.

பகற்பொழுதை வழியனுப்பி, இரவுப்பொழுதை வரவேற்கும் இம்மாலைக்காலம் காதலரைப் பிரிந்து தனிமையில் வாடுவோரைக் குறிவைத்து கூர்மையான வேலை எறிகிறது.

உருவங்காணும் கண்ணாடியின் அகத்தே ஊதிய ஆவி முன் பரந்து பின் சுருங்கினாற்போல், சிறிது சிறிதாகக் குறைந்து வந்து, என் வலிமை மாய்க்க எண்ணியிருந்தது இவ்வந்திப்பொழுது!

மிக்க கடிய சூறாவளி அலைப்ப, அசையும் மரத்திலுள்ள பறவை
போல, மிகவும் அழிவுற்று என்னுயிர் இவ்வுடலைத் துறந்தேகும் காலம், இதுவோ ?

என்கிறாள் தோழி. இவ்வந்திப் பொழுது காதலரைப் பிரிந்து வாடும் உன்னை மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் துன்பமளிப்பதாகத் தான் இருக்கிறது என்று ஆற்றுவிக்க ஆற்றுப்படாத தலைவியிடம் மாலைக் காலத்தின் தன்மைகளை எடுத்தியம்புகிறாள் தோழி.

இப்பாடல் வழி அந்தியின் அழகும், அழகான அகவாழ்வியலும் எடுத்தியம்பப்படுகிறது.



அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 01, 2018 5:32 pm

அருமை தல 

9 மணிக்கு ஆபிஸ் உள்ள வந்தா நைட் 7 மணிக்கு தான் வெளியே அனுப்புறாங்க அப்பறம் எங்க இதெல்லாம் ரசிக்கிறது நெட்ல டவுன்லோட் பண்ணி பாத்த தான் உண்டு



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 01, 2018 6:30 pm

இயற்கையை எப்பொழுது ரசிக்க மறக்கிறோமோ, நம் மனது மரத்துப் போய் விட்டது என்று அர்த்தம்....

இயற்கையை ரசிப்போம், இன்பமாக வாழ்வோம்...

Sent from Topic'it App



அந்தி - அந்தியிளங்கீரனார் மற்றும் வைரமுத்து கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக