ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

2 posters

Go down

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Empty நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram Mon Aug 20, 2018 8:56 am

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Kolamavu344411
-
இத்திரைப்படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல
வேண்டுமென்றால், ‘ஓர் அப்பாவி பூனை, புலி வாலைப்
பிடித்த கதை’.

ஆனால், புலியைப் பிடிப்பதாக நினைத்துக்கொண்டு
பூனையை பிடித்திருக்கிறார் இயக்குநர்.
அதுவும் குருட்டுப்பூனை.

‘அவல நகைச்சுவைப்’ பாணியில் சில காட்சிகளும்
வசனங்களும் சுவாரசியமாக இருக்கிறது என்றாலும்
ஒட்டுமொத்தப் பார்வையில் இந்தத் திரைப்படம்
ரசிக்கத்தக்கதாக இல்லை.

நம்பகத்தன்மை, தர்க்கம் போன்ற அடிப்படையான
விஷயங்கள் திரைக்கதையில் பெரும்பாலும் இல்லை.
கதாபாத்திரங்களின் சிக்கலை உணர்வுபூர்வமாகப்
பார்வையாளர்களோடு இணைப்பதில்தான் ஒரு
திரைக்கதையின் வெற்றி அடங்கியிருக்கிறது.
அது இந்தத் திரைப்படத்தில் நிகழவில்லை.

தாயின் மருத்துவச் செலவிற்காக வேறு வழியின்றி
நாயகன் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது
என்பதெல்லாம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய
சமாச்சாரம். இதில் நாயகி அதைச் செய்கிறார் என்பது
மட்டுமே வித்தியாசம்.

பெண்மையத் திரைப்படம் என்கிற வகையில் இந்தத்
திரைப்படத்தை சற்று வரவேற்கலாம். அவ்வளவே.

**
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Empty Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram Mon Aug 20, 2018 8:57 am

இத்திரைப்படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல
வேண்டுமென்றால், ‘ஓர் அப்பாவி பூனை, புலி வாலைப்
பிடித்த கதை’.

ஆனால், புலியைப் பிடிப்பதாக நினைத்துக்கொண்டு
பூனையை பிடித்திருக்கிறார் இயக்குநர்.
அதுவும் குருட்டுப்பூனை.

‘அவல நகைச்சுவைப்’ பாணியில் சில காட்சிகளும்
வசனங்களும் சுவாரசியமாக இருக்கிறது என்றாலும்
ஒட்டுமொத்தப் பார்வையில் இந்தத் திரைப்படம்
ரசிக்கத்தக்கதாக இல்லை.

நம்பகத்தன்மை, தர்க்கம் போன்ற அடிப்படையான
விஷயங்கள் திரைக்கதையில் பெரும்பாலும் இல்லை.
கதாபாத்திரங்களின் சிக்கலை உணர்வுபூர்வமாகப்
பார்வையாளர்களோடு இணைப்பதில்தான் ஒரு
திரைக்கதையின் வெற்றி அடங்கியிருக்கிறது.
அது இந்தத் திரைப்படத்தில் நிகழவில்லை.

தாயின் மருத்துவச் செலவிற்காக வேறு வழியின்றி
நாயகன் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது
என்பதெல்லாம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய
சமாச்சாரம். இதில் நாயகி அதைச் செய்கிறார் என்பது
மட்டுமே வித்தியாசம்.

பெண்மையத் திரைப்படம் என்கிற வகையில் இந்தத்
திரைப்படத்தை சற்று வரவேற்கலாம். அவ்வளவே.

**
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Empty Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram Mon Aug 20, 2018 8:57 am


கோக்குமாக்கு கோகிலாவாக நயன்தாரா வாழ்ந்திருக்கிறார்
எனலாம். அப்படியொரு ரகளையான பாத்திரம். முதற்காட்சி
முதல் இறுதிக்காட்சி வரை அப்பாவித்தனமான முகத்தை
வைத்துக்கொண்டு சிக்கலான வியூகங்களுக்குள்
சாமர்த்தியமாக இவர் பயணிக்கும் விதம் அபாரம்.

நயன்தாரா என்றல்ல, ஒவ்வொரு பாத்திரங்களுக்குமே
பிரத்யேகமான குணாதியசத்தையும் தோரணையையும்
தர இயக்குநர் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.

கழுத்து வலியால் அவதிப்படும் மெயின் வில்லன், ஆர்வக்
கோளாறில் வில்லனையே மிரட்டும் மச்சான், எப்போதும் க
ண்களில் போதை தெரியும் உலவும் அடியாள், காதலிக்காக
எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஹைபர்-டென்ஷன்
இளைஞன், சாலை வணிகர்களை உளவிற்காகப் பயன்
படுத்திக்கொள்ளும் இன்ஸ்பெக்டர் (சரவணன்),

அசந்தர்ப்பமான நேரத்திலும் எதுகை மோனையில் பேசி
இம்சைப்படுத்தும் மொட்டை ராஜேந்திரன் என்று
விதவிதமான பாத்திரங்கள். ஆனால் திறமையான
திரைக்கதையின் மூலம் இவர்களை ஒருங்கிணைத்திருந்தால்
இந்தத் திரைப்படம் குறிப்பிடத்தகுந்ததாக மாறியிருக்கும்.

நயன்தாராவை ஒருதலையாகக் காதலிக்கும் மளிகைக்
கடை ஆசாமியாக யோகி பாபு. சில காட்சிகளில் சிரிக்க
வைக்கிறார். அந்தக் குடும்பம் செய்வதின் பின்னணி
தெரியாமல் ஆர்வமாக உதவப் போவதும், தெரிந்ததும்
பதறிப் பின்வாங்குவதுமாக சில காட்சிகளில் புன்னகைக்க
வைத்திருக்கிறார்.

‘எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி’ என்று
இவருக்காகவே உருவாக்கப்பட்ட பாடல் யோகி பாபுவிற்கான
பம்பர் பரிசு.

ஒரு கையாலாகாத தந்தையின் பாத்திரத்தை
ஆர்.எஸ்.சிவாஜி இயல்பாகக் கையாண்டிருக்கிறார். இயல்பும்
நகைச்சுவையும் கலந்த பாத்திரமெல்லாம் சரண்யா
பொன்வண்ணனுக்கு கைவந்த கலை.

ஆகையால் பெரிய பிரமிப்பு ஏதுமில்லை. சீனு, அறந்தாங்கி
நிஷா போன்ற சிறிய பாத்திரங்கள் ஆங்காங்கே
வருகிறார்கள். ஜாக்குலின், வடிவேல் பாலாஜி உள்ளிட்ட
‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் நட்சத்திரங்கள்
ஆங்காங்கே வருவதால் விஜய் டிவியை பார்த்துக்
கொண்டிருப்பது போலவே ஒரு பிரமை ஏற்படுகிறது.

இயக்குநர் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியில் இருந்து
உருவாகி வந்தவர் என்பதால் இது நேர்ந்திருக்கிறது போல.
யோகி பாபு நடத்தும் மளிகைக்கடையின் உதவியாளாக
வரும் சிறுவன் பேசுவதெல்லாம் அதீதமானது என்றாலும்
தன் நடிப்பால் கவர்கிறான்.

அனிருத்தின் இசையில் உருவான ‘கல்யாண வயசு’
பாடல், இந்தத் திரைப்படத்திற்கு ஒரு நல்ல விளம்பரமாக
நின்று உதவியிருக்கிறது.

ஆனால் இதர பாடல்கள் எதுவும் கவரவில்லை.
மரண அவஸ்தையில் திடீர் திடீரென்று அனிருத்தின் குரல்
உச்சஸ்தாயியில் கதறி வெறுப்பேற்றுகிறது.
காட்சிகளுக்கேற்ப ஒலிக்கும் பின்னணி இசை ஆங்காங்கே
கவர்கிறது.

சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவு இத்திரைப்படத்திற்கு
மிகப் பெரிய பலம். கும்மிடிப்பூண்டி என்கிற சென்னை
புறநகரின் பின்னணியை கேமரா சிறப்பாகப் பதிவு
செய்திருக்கிறது.

நயன்தாராவின் நடுத்தர வர்க்க வீடு உள்ளிட்ட இடங்கள்
இயல்பான பின்னணியில் உள்ளன. மைலாப்பூரில் உள்ள
ஒரு பிரபலமான சிறு உணவகத்தின் மீது இயக்குநருக்கு
என்ன கோபமோ தெரியவில்லை, அதே பெயரையும்
பின்னணியையும் உபயோகித்து கடத்தல் தொழில் அங்கு
நடைபெறுவதாகச் சித்தரித்திருக்கிறார்.


ஊதிய உயர்வு வேண்டுமென்றால் ‘அந்த’
விஷயத்திற்காக ஒப்புக் கொள்ள மறைமுகமாக வலியுறுத்தும்
மேலாளரிடம், ‘அதற்கு’ தயார் என்றால் எம்டியிடமே
நேராகப் பேசி விட்டு உங்கள் இடத்தில் அமர்ந்திருப்பேனே’
என்று நயன்தாரா பதில் அளிக்கும் இடம் போன்று, வசனங்கள்
சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன.

தாயாரின் மருத்துச் செலவிற்காக ஒரு நடுத்தர
வர்க்கத்துப் பெண் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிற
முரணைக் கொண்ட ஒரு சுவாரசியமான பின்னணிதான்.

ஆனால் இதை நம்பகத்தன்மையோடும் தர்க்கத்தோடும்
இயக்குநர் காட்சிகளாக உருவாக்கவில்லை. பல இடங்களில்
செயற்கையான நாடகம் போலிருக்கிறது. ‘அவனையும்
சுட்டாத்தான் நான் போவேன்’ என்று நயன்தாரா
சொல்லும் காட்சிகள் எல்லாம் படுசெயற்கை.

மருத்துவச் செலவிற்காக பல இடங்களில் உதவி கேட்கும்
நாயகிக்கு, அரசு மருத்துவமனை என்று ஒன்று இருப்பதே
தெரியாமல் போனது ஆச்சரியம். சிக்கலான நோய்
என்றால் அது தனியார் மருத்துவமனையில், அதிக
செலவோடுதான் குணமாகும் என்கிற பொதுப்புத்தியை
இயக்குநரும் பிரதிபலிக்கிறார்.

‘ஆரண்ய காண்டம்’ என்கிற புலியைப் பார்த்து சூடு
போட்டுக் கொண்ட பூனை மாதிரியிருக்கிறது
‘கோலமாவு கோகிலா’. கோலம் சரியாக உருவாகததால்
அலங்கோலமாகியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

——————————-

By சுரேஷ் கண்ணன் |
நன்றி-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Empty Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

Post by SK Mon Aug 20, 2018 10:14 am

அப்போ என்னோட 640 mb வேஸ்ட்டா  சோகம் சோகம் சோகம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Empty Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram Wed Aug 29, 2018 7:49 am

இந்த படத்தில் நடித்தது குறித்து யோகிபாபு சொன்னவை:
-----------------
நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Capture_10235
-
நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Nayan_16002
-
நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Capture_10114
-
` 'கோலமாவு கோகிலா' பாட்டு யூடியூப்ல முதல்
இடத்துல இருக்குனு எல்லோரும் சொல்றாங்க,
கேட்கவே சந்தோஷமா இருக்கு. 

இதுக்கெல்லாம் காரணம், இயக்குநர்
நெல்சன் சார்தான். அவர் சொல்லிக் கொடுத்ததை 
அப்படியே நான் செஞ்சேன்!"
-
--------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Empty Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum