ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !

2 posters

Go down

 தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " ! Empty தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !

Post by udhayam72 Fri Aug 10, 2018 7:45 pm

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/Music_PIllars.jpg/200px-Music_PIllars.jpg
இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்திமூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது .

அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது .

இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைக்கற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது?

இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. "In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது. சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ?

நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல். இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை. ஆனால், இந்தத் தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை.

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது. அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது. ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள். இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்.

தேடல் தொடரும்...

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசை தூண். ஆனால் இதை போன்ற இசை தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

நன்றி: சசிதரன்
https://www.facebook.com/SasidharanGS


Last edited by udhayam72 on Fri Aug 10, 2018 8:11 pm; edited 1 time in total
udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Back to top Go down

 தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " ! Empty Re: தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !

Post by T.N.Balasubramanian Fri Aug 10, 2018 8:07 pm

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசை தூண்.

படம் மிஸ்ஸிங்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " ! Empty Re: தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !

Post by udhayam72 Fri Aug 10, 2018 8:12 pm

 தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " ! 200px-10
udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Back to top Go down

 தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " ! Empty Re: தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !

Post by udhayam72 Fri Aug 10, 2018 8:14 pm

T.N.Balasubramanian wrote:
படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசை தூண்.

படம் மிஸ்ஸிங்

ரமணியன்  
 தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " ! 200px-11

தென்னகத்து இசைத் தூண்கள்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பிரகாரத்திலுள்ள இசைத் தூண்கள்
மதுரை, திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம், செண்பகராம நல்லூர், தென்காசி, திருக்குற்றாலம், சுசீந்திரம், திருவானைக்கா, தாடிக்கொம்பு, தாராசுரம், திருவனந்தபுரம், திருப்பதி, தாட்பத்திரி, லேபாக்சி, ஹம்பி, விஜயநகர், பங்களூரு, சாமராஜன் பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் இசைத்தூண்கள் உள்ளன. இவற்றுள் சில இசைத் தூண்களின் விபரங்கள் வருமாறு:[5][6]

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன. இங்குள்ள இசைத்தூண்கள் நடுவில் ஒரு தூணையும் அதைச் சுற்றிலும் பவேறு வடிவங்களைக் கொண்ட 22 தூண்களோடு கூடிய அமைப்புக் கொண்டவை. தட்டும்போது வெவ்வேறு சுரங்களைக் கொடுக்கும் வெளித்தூண்களைப் பயன்படுத்தி நவரோஸ், குறிஞ்சி போன்ற இராகங்களை இசைக்க முடியும் எனச் சொல்லப்படுகின்றது.

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலின் மணிமண்டபத்திலும், அம்பாள் சந்நிதியிலும் இரண்டிரண்டாக மொத்தம் நான்கு இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நடுவில் பெரிய தூணையும் சுற்றிலும் 48 சிறிய தூண்களையும் கொண்டு அமைந்தவை. வெளித்தூண்கள் வேறுபட்ட வடிவங்களையும், உயரங்களையும் கொண்டவையாக உள்ளன. சிறிய தூண்களைத் தட்டி வெவ்வேறு இசைச் சுரங்களை எழுப்ப முடியும்.

ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிபிரான் கோயிலிலும் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று தட்டும்போது மூன்று சுரங்களை எழுப்பக்கூடிய இசைத்தூணாக அமைந்துள்ளது. மற்றது ஊதி இசையெழுப்பும் தூணாகும். இத்தூணில் உள்ள இரண்டு துளைகளில் ஒன்று சங்கின் ஒலியையும், மற்றது எக்காள ஒலியையும் கொடுக்கின்றன.

செண்பகராம நல்லூரில் உள்ள பெருமாள் கோயிலில் உள்ள இசைத் தூண் ஊதி இசை எழுப்பும் குழல் இசைத் தூண் ஆகும். இதிலிருந்தும் சங்கு, எக்காளம் ஆகிய இசைக் கருவிகளின் ஒலியைப் பெறமுடிகிறது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் முன்னர் குணசேகர மண்டபம் என்றும் தற்போது அலங்கார மண்டபம் என்றும் அழைக்கப்படும் மண்டபத்தில் நான்கு இசைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் வடக்குப் பக்கத்தில் அமைந்த இரண்டு தூண்கள் ஒவ்வொன்றிலும், 24 சிறிய தூண்களும், தெற்குப் பக்கத் தூண்கள் ஒவ்வொன்றிலும் 33 சிறிய தூண்களும் உள்ளன. ஏழு சுரங்களையும் எழுப்பக்கூடியதாக இத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. முற்காலத்தில் இக்கோயிலைச் சேர்ந்த தேவதாசிகள் இத்தூண்களில் இசை மீட்டி நிகழ்ச்சிகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது.[7]

தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த தாடிக்கொம்பு சுந்தரராசப் பெருமாள் கோயிலில் விழாக்கால நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன. இவை வேதம் ஓதுவது போன்ற ஒலியைத் தர வல்லவை எனச் சொல்லப்படுகிறது.

அழகர் கோயிலிலும் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. இங்கே நடுவில் ஒரு தூணும் அதைச் சுற்றி மூன்று அடிகள் உயரமான தூண்களும் உள்ளன. இவை தட்டும்போது ஒன்றிணைந்து ஒத்திசைவான இசையை எழுப்பக்கூடியன.
udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Back to top Go down

 தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " ! Empty Re: தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !

Post by udhayam72 Fri Aug 10, 2018 8:18 pm

ஆலயங்களின் அதிசயம்: இசைத் தூண்கள்

கைகளாலோ குச்சியைக் கொண்டோ தட்டுவதன்மூலம் காற்றை உள்வாங்கி ஒலியை உண்டாக்குவதுதான் இசைக் கருவிகளின் பொதுவான இயல்பு. ஆனால் வெற்றிடம் இல்லாத, காற்று உள்ளே புக முடியாத கல்தூண்களிலும், வட்டக்கல்லிலும் இசை வெளிப்படுவது ஓர் அதிசயம்.

ஆலயங்களின் அதிசயமாகக் கொண்டாடப்படும் இத்தகைய இசைத் தூண்கள், குறிப்பாக தென்னாட்டில் நெல்லையப்பர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோயில், சுசீந்திரம் போன்ற பல கோயில்களில் காணக் கிடைக்கின்றன.

சுசீந்திரம் கோயிலின் சிறப்பு

மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள கோயில் சுசீந்திரம். இக்கோயிலின் மூலவர் பெயர் ஸ்தாணுமாலயன். ஸ்தாணு என்பது சிவனைக் குறிக்கும். மால் என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அயன் என்பது பிரம்மனைக் குறிக்கும். மும்மூர்த்திகளையே லிங்க ரூபத்தில் மூலவராகக் கொண்டிருக்கும் சுசீந்திரம் கோயிலின் இன்னொரு தனிப் பெரும் சிறப்பு அங்கிருக்கும் இசைத் தூண்கள்.

தென்னாட்டு ஆலயங்கள் குறித்து நூல் எழுதியிருக்கும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா. பெருமாளிடம் சுசீந்திரம் கோயிலின் இசைத் தூண்களைக் குறித்துக் கேட்டோம்.

சுசீந்திரம் இசைத் தூண்களின் சிறப்பு

நாயக்கர்கள் காலத்துக்குப் பின்பாகத்தான் (1760 1790) இசைத் தூண்கள் காணக் கிடைக்கின்றன. சுசீந்திரம் கோயிலில் குணசேகர மண்டபம் என்று முன்னால் அழைக்கப்பட்டு தற்போது அலங்கார மண்டபம் என்று அழைக்கப்படும் இடத்தில்தான் இசைத் தூண்கள் அமைந்துள்ளன. மண்டபத்தின் வடக்குப் பகுதியில் 2 தொகுதித் தூண்களும் தெற்குப் பகுதியில் 2 தொகுதித் தூண்களும் அமைந்துள்ளன.

வடக்குப் பகுதியிலிருக்கும் தொகுதித் தூணில் 24 சிறிய தூண்கள் இருக்கும். தெற்குப் பகுதியிலிருக்கும் தொகுதியில் 33 சிறிய தூண்கள் இருக்கும். இந்தத் தொகுதித் தூண்கள் அனைத்தும் ஒரேகல்லில் குடையப்பட்டவை என்பது சிறப்பு. அதோடு, இதன் உருவாக்கத்தில் இசைக் கலைஞர்களின் பங்கும் உண்டு. ஏழு ஸ்வரங்களின் அடிப்படையில் இந்த இசைத் தூண்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த இசைத் தூண்களை வாசித்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். சுசீந்திரம் கோயிலில், தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் ஜெயதேவரின் அஷ்டபதியைப் பாடி, இசைத் தூண்களில் வாசித்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கின்றனர்.

தேவசகாயம் பிள்ளை மவுண்ட்டின் வட்டக்கல்

கன்னியாகுமரி திருநெல்வேலிக்கு இடைப்பட்ட ஆரல்வாய்மொழி சிறுகுன்றின்மீது அமைந்திருக்கும் தேவசகாயம் பிள்ளை மவுண்ட்டில் பெரியதொரு வட்டக்கல் உள்ளது. இந்த வட்டக்கல்லில் தட்டினால், மணி அடித்தது போல் ஒலி எழும். தொடக்கத்தில் சுற்றுலாத்தலமாகவே கருதப்பட்ட இந்த இடம், தற்போது தேவசகாயம் பிள்ளையை நினைத்துக்கொண்டு தங்களின் வேண்டுதலைச் சொல்லி இந்தக் கல்லில் ஒலி எழுப்பினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்னும் நம்பிக்கையையும் அளிக்கும் வழிபாட்டு இடமாக மாறியிருக்கின்றது என்றார் அ.கா. பெருமாள்.
 தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " ! Kal1
udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Back to top Go down

 தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " ! Empty Re: தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum