ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயில் நுழைய முடியாத பெயர்களைக் கொண்ட பல புதுப்புது நோய்கள்

Go down

வாயில் நுழைய முடியாத பெயர்களைக் கொண்ட பல புதுப்புது நோய்கள்  Empty வாயில் நுழைய முடியாத பெயர்களைக் கொண்ட பல புதுப்புது நோய்கள்

Post by udhayam72 Tue Aug 07, 2018 9:12 pm

இந்த காலத்தில் வாயில் நுழைய முடியாத பெயர்களைக் கொண்ட பல புதுப்புது நோய்கள் தோன்றுகின்றன. இவற்றுக்கு மனித உடலில் அமைந்திருக்கும் நாளமில்லா சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்களின் குறைபாடுகளே காரணம் என்றும் கூறப்படுகின்றன. இந்த சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகின்ற கிரங்களையும் இதனால் எந்தெந்த உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன என்பதையும் காண்போம்.

நமது உடலை சரியான முறையில் இயற்கையாகவே பராமரித்து வரும் எச்சில், கல்லீரல் நீர், இரைப்பை நீர், குடல் நீர், கண் நீர், வியர்வை சுரப்பி நீர் போன்ற நாளமுள்ள சுரப்பி நீர்களை ராகு-கேதுவைத் தவிர ஏனைய ஏழு கிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன என்று மருத்துவ ஜோதிடர்கள் தங்கள் ஆய்வினில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தவிர, மனித மூளையைக் கட்டுப்படுத்தும் ஏழு பெரும் பிரிவுகளான 1. பீனியல், 2. தலாமஸ் - ஹைபோதலாமஸ், 3, பிட்யூட்டரி, 4. பெருமூளை, 5, சிறுமூளை 6. முகுளம், 7. தண்டுவடம் ஆகியவற்றில் ஒன்பது கோள்களும் தங்களது ஆதிக்கத்தினை செலுத்துகின்றன என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்று (கார்த்திகை, உத்திரம், உத்திராடம்) பீனியல் சுரப்பியையும், சந்திரனின் நட்சத்திரங்களில் ஒன்று (ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்) பிட்யூட்டரி சுரப்பியையும், செவ்வாயின் நட்சத்திரங்களில் ஒன்று (மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்) மண்ணீரல் சுரப்பியையும், புதனின் நட்சத்திரங்களில் ஒன்று (ஆயில்யம், கேட்டை, ரேவதி) தலாமஸையும், குருவின் நட்சத்திரங்களில் ஒன்று (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி) விந்து மற்றும் கருப்பையையும், சுக்கிரனின் நட்சத்திரங்களில் ஒன்று (பரணி, பூரம், பூராடம்) ஹைப்போதலாமஸ் சுரப்பியையும், சனியின் நட்சத்திரங்களில் ஒன்று (பூசம், அனுஷம், உத்திரட்டாதி) அட்ரினல் சுரப்பியையும், ராகுவின் நட்சத்திரங்களில் ஒன்று (திருவாதிரை, சுவாதி, சதயம்) கீழ்மண்ணீரல் சுரப்பியையும், கேதுவின் நட்சத்திரங்களில் ஒன்று (அஸ்வினி, மகம், மூலம்) தைராயிடு சுரப்பியையும் சீராக ஊக்குவிக்கின்றன.

இவை தங்களின் ஊக்குவிப்புத் திறனைக் கூட்டினாலும், குறைத்தாலும் உடலில் குறைபாடுகளும் நோய்களும் தோன்றும். உடம்பிலுள்ள சுரப்பிகள் சரியாக இயங்காவிட்டால் நோய்கள் உண்டாகும் என்பது ஒரு புறம் இருந்தாலும், நிறைய நோய்கள் தொற்றுநோய்க் கிருமிகளால்தான் பரவுகிறது என்பதை மறுக்க இயலாது. இன்ஃபெக்ஷன் (வீஸீயீமீநீtவீஷீஸீ) என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்பதுதான் இப்போதைய நிலை. இந்த தொற்றுநோய்க் கிருமிகள் உடலில் நுழையக் காரணமான கிரகம்தான் ராகு.

ராகு என்ற பெயரைக் கேட்கும்போதே நம் எல்லோருக்கும் அடிவயிற்றில் ஒருவித பய உணர்வு தோன்றுகிறது. அறிவியலைப் பொறுத்தவரை ராகு, கேது இருவரும் உண்மைக் கோள்கள் அல்ல. அவைகள் வெட்டும்புள்ளிகள் அல்லது கிரகணப் புள்ளிகள் என்ற பெயரினைப் பெற்றுள்ளன. ஒரு சிலர் யுரேனஸ் மற்றும் நெப்டியூனுடன் இவர்களை இணைத்துப் பார்த்துக் குழம்பிப் போகிறார்கள். உண்மையில் இவர்களுக்கும், உண்மைக் கோள்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் யுரேனஸ் என்கிற கிரகம்தான் ஹிஸ்டீரியா, பக்கவாதம் போன்ற நோய்களை உண்டாக்குகிறது என்பதையும் ஜோதிட விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதை ஆராய்வதற்கு முன்னால் ராகுவைப் பார்த்துவிடுவோம். Bacterial infection, fungal infection, viral infection என பல வகைகளாக நோயினை உண்டாக்கும் கிருமிகளின் அடிப்படையில் நோய்க்கான காரணியை பகுத்தறிகிறோம். உடலைத் தாக்கிய கிருமியின் தரத்திற்கு ஏற்றவாறு மருந்து அளிக்கப்படுகிறது. இன்றைய நவீன மருத்துவ உலகில் எதிர்உயிரி அதாவது, antibiotic மருந்துகளே இவ்வகையான தொற்றுநோய் கிருமிகளை அழிக்க அளிக்கப்படுகிறது. இவ்வகை மருந்துகளைத் தராவிட்டால் தொற்றுநோயிலிருந்து விடுபட முடியாது என்ற நிலையும் உருவாகிவிட்டது.

நோய் உருவாவதற்கு எவ்வகைக் கிருமி காரணமோ, அவ்வகைக் கிருமியிலிருந்தே தயாரிக்கப்படுவதுதான் இந்த எதிர் உயிரி மருந்து என்பது தனிச்சிறப்பு. அது போலவே தான் நோய்க்கிருமிகள் உருவாகி நமது உடலில் உள்புக எந்த ராகு காரணமாக இருக்கிறாரோ, அதே ராகுதான் Doctor of Medicine என்று அழைக்கப்படுகின்ற M.D. டாக்டர் உருவா வதற்கும் காரணமாக இருக்கிறார் என்கிறார் இங்கிலாந்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ஜோதிடர் ஒருவர். திறமையான M.D. டாக்டர்களின் ஜாதகங்களில் சூரியனும், ராகுவும் வலுப்பெற்றிருப்பார்கள் என்ற ஒரு கருத்து மருத்துவ ஜோதிட உலகில் நிலவிக்கொண்டிருக்கிறது.

மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்த வெள்ளணுக்கள் சந்திரன் சம்பந்தப்பட்டவை. ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவற்றில் பிறந்து ஜனன ஜாதகத்திலும் ராகுவின் வலிமை இருக்கப் பிறந்தவர்களுக்கு இயற்கையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்ற கூற்றின் அடிப்படையிலான ஆராய்ச்சியும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. தொற்றுநோய் என்பதில் பல வகைகள் உள்ளன. நிரந்தரமாக நீண்ட நாட்களாக நாம் கேள்விப்படும் காசநோய், தொழுநோய், மலேரியா போன்றவை ஒருவகை.

ஒரு சில சீசனில் தோன்றும் சிக்குன்குனியா, ஃபிளேக், டெங்கு, ஸ்வைன் ஃப்ளூ என்றழைக்கப்படும் பன்றிக்காய்ச்சல் போன்றவை இரண்டாவது வகை. இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்த தொற்றுநோய்கள் தனிப்பட்ட ஒரு மனிதரை மாத்திரம் தாக்குவன அல்ல. ஒரே நேரத்தில், ஒரே பகுதியில் வசிக்கின்ற பலதரப்பட்ட மக்களையும் மொத்தமாக தாக்குகின்றன. இவ்வகைத் தொற்றுநோய்களைத் தருபவரே கேது. இவ்வகைக் கிருமிகளை அவ்வப்போது புதிது புதிதாக உருவாக்குபவர் கேது.

இவ்வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுடைய ஜாதகங்களில் உள்ள கேதுவின் நிலையையும், அதே குடும்பத்தில் வசித்து நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு அருகிலிருந்தும் தத்தம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக தொற்றுநோயால் பாதிக்கப்படாமல் இருக்கும் நபர்களின் ஜாதகங்களில் உள்ள கேதுவின் நிலையையும் ஒப்பிடும் ஆராய்ச்சி மருத்துவ ஜோதிடர்களால் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாது சில ஆண்டுகள் முன்பு வரை நல்ல ஆரோக்யமான நிலையில் இருந்து வந்த குழந்தைகள், இளம்பிள்ளை வாதம் என்றழைக்கப்படும் நோயினால் திடீரென்று பாதிக்கப்பட்டதற்கான காரணமும் கேதுவின் நிலைதான். கேதுவினால் பாதிக்கப்பட்டிருப்போரை உடலமைப்பைக் கொண்டே தெரிந்துகொள்ள முடியும்.

அங்கங்களில் ஒருவிதமான நெளிவுகள், வளைவுகள், சுருள் அமைப்புகள் போன்றவை காணப்படும். கேது உடல்நிலையில் மட்டுமல்ல, மனநிலையிலும் பாதிப்பினை உண்டாக்குவார். ராகுவும் ஒரு வகையில் மனநிலை பாதிப்பைத் தோற்றுவித்தாலும், நன்றாக இருந்த மனிதர் திடீரென்று மனநிலை சரியில்லாத நிலைக்கு தள்ளப்படுவது ராகுவினால் வருவது. அவ்வாறல்லாது கொஞ்சம், கொஞ்சமாக புத்தி பேதலிப்பிற்கு உள்ளாகி மனநோயாளியாக மாற்றுகின்ற பணியைச் செய்பவர் கேது. ராகுவினால் மனநிலை பாதிப்பிற்கு உள்ளானவர்கள் தன்னைச் சுற்றியுள்ளவர்களைத் தாக்கியும், பொருட்களை உடைத்தும் பாதிப்பினை உண்டாக்குவார்கள்.

கேதுவினால் பாதிக்கப்பட்டவர்களால் யாருக்கும், எவ்விதத் தீங்கும் நேராது. எவ்வித அசைவுமின்றி எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் விபத்துகளினால் அல்லாது ஒரு சில நோய்களால் உண்டாகும் “கோமா” நிலைக்குக் காரணம் கேது. பலம் வாய்ந்த ஜாதக அமைப்பை உடையவர்கள் இந்நிலையிலிருந்து விடுபடுவார்கள். பலவீன அமைப்பை உடையவர்கள் வருடக்கணக்கில் கூட கோமா நிலையில் தொடர்ந்து இருப்பார்கள். ராகு - கேதுவினால் உண்டாகும் வெண்குஷ்டம் முதலான சரும நோய்களைப் பற்றி அடுத்த இதழில் காண்போம்...!

சந்திரனுக்குரிய நோய்கள்

சீழ் கட்டிகள், உடலில் ஏற்படும் கொப்பளங்கள், ஜலதோஷம், சீதளம், வறட்டு இருமல், குரல்வளை நோய்கள், சளிப் பிரச்னைகள், நீர்சவ்வு நோய்கள், உணவுப் பாதை நோய்கள், வயிறு உபாதைகள், குழந்தைகளின் வயிற்றில் பூச்சிகள் உண்டாதல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், வாந்தி எடுத்தல், குடல் அடைப்புகள், சுவாசப் பிரச்னைகள், நுரையீரல் அடைப்புகள், இதய வீக்கம், வலிப்பு நோய், ஒழுங்கற்ற மாதவிடாய், கருச்சிதைவு, குறை பிரசவங்கள், கர்ப்பப்பை கோளாறுகள், குறைந்த ரத்தம், ரத்தத்தட்டுக்களின் அளவு (Platelets count), ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறை, பேன்தொல்லை, மனநிலை பாதிப்பு, கண்சவ்வுக் கோளாறுகள். -
udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum