ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

2 posters

Go down

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி Empty தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

Post by ayyasamy ram Tue Jul 31, 2018 6:01 am

மதுரை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக சிப்காட் போலீஸ் நிலையத்தில் 142 வழக்குகளும், தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 100 வழக்குகளும் என மொத்தம் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “தூத்துக்குடியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 274 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 43 பேருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. பலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 24 பேர் மட்டுமே சிறையில் உள்ளனர். சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆவணங்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் கூறியதன் அடிப்படையில்தான் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்” என்று வாதாடினார்.

கலவர நேரங்களில் போலீசார் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான விளக்க கையேடு நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வமான உத்தரவு பெறப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு வக்கீல், “சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுவின் உத்தரவு பெறப்பட்டு தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “144 தடை உத்தரவை பொது மக்கள் அறியும் வகையில் முன்கூட்டியே ஏன் பிறப்பிக்கப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு தமிழக அரசு வக்கீல், “தூத்துக்குடியில் 100-வது நாள் போராட்டம் மே 22-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 22-ந் தேதி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்ற செய்தியை மாவட்ட கலெக்டர் மே 21-ந் தேதி இரவு 8.30 மணி அளவில் வெளியிட்டுள்ளார். அந்த செய்தி அனைத்து தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது” என்றார்.

மேலும், “துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 243 வழக்குகளையும், ஒரே வழக்காக மாற்றினால் விரைந்து விசாரிக்க முடியாது” என்றும் அரசு வக்கீல் தனது வாதத்தின்போது தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்குகளின் விசாரணையை இன்றைக்கு (செவ்வாய்க் கிழமை) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

துப்பாக்கி சூடு குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் பதிவு செய்த குற்ற வழக்கு எண் 191-ன் ஆவணங்களையும், துப்பாக்கி சூடு தொடர்பாக நடத்தப்பட்ட மறுஆய்வு ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறி உள்ளனர்.
-
தின தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி Empty Re: தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

Post by Mr.theni Tue Jul 31, 2018 4:02 pm

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி 1571444738

தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? போலீஸ் ஆட்சியா? என்று நீதிபதிகள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு.
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum