புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 16:19

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:42

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 20:54

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:57

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:37

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:23

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:05

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 08:05

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 06:45

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 19:19

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:17

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:16

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:44

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:09

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:05

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:02

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:59

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:57

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:58

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:56

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024, 19:46

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024, 18:15

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:21

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:18

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:14

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:10

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024, 12:12

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:16

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:15

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:13

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:10

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
73 Posts - 35%
Dr.S.Soundarapandian
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
36 Posts - 17%
T.N.Balasubramanian
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
324 Posts - 48%
heezulia
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
23 Posts - 3%
prajai
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
3 Posts - 0%
manikavi
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Mon 23 Jul 2018, 22:52

மனித வாழ்வில் இந்த பதினான்கு வயதிலிருந்து இருபது வரையிலான பதின் பருவம் (டீன் ஏஜ் ) என்பது எப்போதும் புதிர் நிரம்பியதாகவே இருக்கிறது. சுய சந்தேகங்கள் அதிகமாக தோன்றுகின்றன. உடலளவிலும், மனதளவிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்பட குடும்பங்களும் தயாராக இல்லை , சமூகமும் தயாராக இல்லை. ஆனால் அவர்களைப் பற்றி ஆயிரத்தெட்டு குறைகள் சொல்ல மட்டும் எப்போதும் தயாராக இருக்கின்றன குடும்பங்களும் , சமூகமும். பெரும்பாலும் இந்த வயதுகளில் தான் நல்ல பழக்கங்கள் , தீய பழக்கங்கள் என வரையறை செய்பவை குடிகொள்கின்றன.பிற்காலத்தில் இந்த பழக்கங்கள் அவ்வளவு எளிதாக விட்டு விலகுவதில்லை. அதனால் தான் இந்த பருவம் முக்கியமானதாகிறது.

உடலளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஹார்மோன்கள் எனப்படும் ரசாயனங்கள் காரணமாக இருக்கின்றன. நமது உடலிலேயே உற்பத்தியாகும் இந்த ரசாயனங்கள் மனித உடலின் பல்வேறு விதமான செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன. பசி , தூக்கம் போன்ற சின்ன வேலைகள் முதல் இனப்பெருக்கம் போன்ற பெரிய வேலைகள் வரை ஒழுங்காக நடைபெறுவதற்கு சரியான அளவில் ஹார்மோன்கள் சுரப்பது அவசியமாகிறது. உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை என்று மனித உடலைச் சொல்கிறார்கள். இது முற்றிலும் உண்மை.இன்று வரை இந்த மனித உடலின் ஒழுங்குபடுத்தப்பட்ட சீரான, தொடர்ச்சியான இயக்கம் என்பது நமக்கு ஆச்சரியத்தையே தான் தருகிறது.

ஹார்மோன்கள் உதவியில்லாமல் மனித உடல் வளர்ச்சியைப் பெறாது. பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் வயதிற்கு வந்த பிறகு (Growth Hormone ) மனித உடலின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. பதின் பருவத்தில் தான் அதிகப்படியான வளர்ச்சி ஆணிலும் , பெண்ணிலும் நிகழ்கிறது. அதனால் தான் பதின் பருவத்திற்கு முன் பார்த்த ஒருவரை , பதின் பருவத்திற்கு பின் பார்க்கும் போது அதற்குள் இவ்வளவு வளர்ந்து விட்டாரா ? என்று தோன்றும். அந்த அளவிற்கு அதிகப்படியான வளர்ச்சி இந்த பருவத்தில் தான் நிகழ்கிறது.வயதிற்கு வந்த பின் பதின் பருவ பெண்ணின் உயரம் அதிகரிக்கிறது , மார்பகங்கள் வளர ஆரம்பிக்கின்றன, இடுப்பு பகுதியில் கொஞ்சம் சதை வளருகிறது , அக்குல் மற்றும் பிறப்புறுப்பில் முடி வளர ஆரம்பிக்கிறது. பதின் பருவ ஆணின் உயரம் அதிகரிக்கிறது , உடல் எடை அதிகரிக்கிறது , முகம் , மார்பு , அக்குல் மற்றும் பிறப்புறுப்பில் முடி வளர ஆரம்பிக்கிறது, குரல் உடைந்து கடின குரலாக மாறுகிறது.

உடல் வளர்ச்சியடைந்தாலும் உள்ளத்தாலும் 'தான் ஒரு பெண் ' ,' தான் ஒரு ஆண் ' என உணர வைக்கவும் ஹார்மோன்கள் தான் தேவையாய் இருக்கின்றன. இந்த ஹார்மோன்கள் தான் பால் ஹார்மோன்கள் என அழைக்கப்படுகின்றன. டெஸ்டோஸ்டீரான் ஆண்பால் ஹார்மோன். இந்த ஹார்மோன் மற்றும் சில துணை ஹார்மோன்கள் சரியான அளவில் சுரந்து கொண்டே இருந்தால் தான் ஆண் , ஆணாக இருக்க முடியும் . ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்பால் ஹார்மோன். கருமுட்டை வளர்ச்சி ,மாதவிடாய் சுழற்சி போன்றவை சரியாக நடைபெற இந்த ஹார்மோன் அவசியமாகிறது.

பதின் பருவத்தில் தான் மாற்றுபாலினத்தவர்களின் அடையாளம் வெளியே தெரிகிறது. இன்று வரை மாற்றுப்பாலினத்தவர்களைக் குடும்பங்களும் , சமூகமும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. வானத்திலிருந்து குதித்த அந்நியர்கள் போலவே அவர்கள் நடத்தப்படுகிறார்கள்.நம்மைப் போலவே ஒரு பெண்ணிற்கும் , ஒரு ஆணிற்கும் பிறந்தவர்கள் தான் அவர்களும் என்பதை நம்மில் பெரும்பாலானோர் உணருவதில்லை. குரோமோசோம் குறைப்பாட்டால் அவர்களுக்கு பால் குறைபாடு ஏற்படுகிறது. அதாவது உடல் (பாலுறுப்புகள் உட்பட ) ஆணைப் போல இருந்தாலும் மனமும் உணர்ச்சிகளும் பெண்ணாகவே உணரச் செய்யும். அப்படி உணருபவரை திருநங்கை என்கிறோம். மீதி இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க அவர் பெண்ணாக மாறுவது தான் சரியான தீர்வாக இருக்கிறது. மிகுந்த போராட்டத்திற்கு பிறகே அறுவை சிகிச்சை மூலம் உடலளவிலும் பெண்ணாக மாறுகிறார்கள். அறுவை சிகிச்சையும் அதன் பிறகான ஒரு ஆண்டும் மிகவும் வலி நிறைந்ததாக இருக்கிறது. தொடர்ந்து பெண்பால் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனை ஊசிகள் மூலம் எடுத்துக் கொள்வதன் மூலமே தொடர்ந்து பெண்ணாக உணர முடியும். இதே நிலை தான் திருநம்பிகளுக்கும். அதாவது உடலளவில் பெண்ணாக இருப்பார்கள் , மனமும் , உணர்ச்சிகளும் ஆணைப் போல இருக்கும். இவர்களுக்கும் அறுவை சிகிச்சை தான் தீர்வு. இவர்கள் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானை ஊசிகள் மூலம் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. மாற்றுப் பாலினத்தவர்களுக்கு இவை எல்லாமே பெரும் செலவு வைக்கக்கூடியவை. குடும்பங்களும் கைவிட்ட சூழலில் பணம் திரட்டுவது பெரும் போராட்டம்.

உடலில் ஏற்படும் மற்ற எந்தவிதமான குறைபாட்டையும் ஏற்றுக்கொள்ளும் குடும்பங்கள் , பால் குறைபாட்டை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை. குடும்பம் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தாலும் உறவுகளும் , சமூகம் அப்படி இருக்க அனுமதிப்பதில்லை. பால் குறைபாட்டின் காரணமாக மாற்றுப்பாலினத்தவர்களாக மாறியவர்களை குடும்பங்கள் கைவிடாமல் இருந்தாலே போதும் , நம்மால் ஒரு திருநங்கை , திருநம்பியைக் கூட தெருவில் பார்க்க முடியாது. குடும்பங்களும், சமூகமும் ஒதுக்கிய நிலையில் வேறு வழியில்லாமல் தான் யாசகம் பெறுவதையும் , பாலியல் தொழிலையும் செய்கிறார்கள். அவர்களின் வாழ்வில் பல தன்னார்வ அமைப்புகள் மூலம் சின்ன சின்ன முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவர்கள் கேலியாக பார்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாக சினிமா தான் இருக்கிறது.தொடர்ந்து அவர்களை தரக்குறைவாகவே சித்தரித்து வருகிறது. பள்ளி பருவத்தின் இறுதியிலும் , கல்லூரி பருவத்தின் தொடக்கத்திலும் தான் இந்த பால் குறைபாடு வெளியே தெரிகிறது. இதை கல்விக்கூடங்கள் சரியான விதத்தில் அணுக வேண்டும். அப்படி அணுகுவதன் மூலம் அவர்களின் அச்சத்தையும் , தயக்கத்தையும் , பயத்தையும் போக்க முடியும். குடும்பங்களும் அவர்களை கைவிடாமல் இருக்க வேண்டும்.குறைந்தபட்சம் தங்கள் வீட்டில் சேர்த்துக் கொள்ளா விட்டாலும் அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை தொடர்ந்து செய்ய முன்வர வேண்டும். மாற்றுப்பாலினத்தவர்களின் வாழ்க்கை மேம்பட அரசும் இன்னும் பெரிய அளவில் நலத்திட்டங்கள் அறிவிக்க வேண்டும். இவையெல்லாம் சரியாக நடந்தால் எந்த திருநங்கையும்(நம்பியும்) நம்மிடம் யாசகம் கேட்க வரமாட்டார்கள். அப்படி நடக்காதவரை நம்மை நோக்கித் தான் வருவார்கள். நீங்கள் உதவுங்கள் , உதவாமல் போங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் அவர்களை உங்களுக்கு நிகராக மதியுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் கேலி செய்ய அனுமதிக்காதீர்கள். ' இவங்க பாடு தான். ஜாலியான பாடு ' என்று போகிற போக்கில் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களின் வாழ்க்கை நாம் நினைப்பதை விடவும் மிகவும் வலி நிறைந்தது. தங்களால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது என்பது அவர்களின் வாழ்நாள் சோகம்.

பதின் பருவம் சிக்கலானது தான். பார்பதற்கு ஜாலியான வாழ்க்கை போல தோன்றினாலும் இந்த இளமை பருவம் மற்றவர்களிடம் யதார்த்தமாக கேட்க முடியாத கேள்விகளுடனே தான் கடந்து போகிறது. இந்த லட்சணத்தில் தான் நமது சமூக அமைப்பு இருக்கிறது. முதலில் வயதிற்கு வந்த பிறகு தங்களை பெரியவர்களாக கற்பனை செய்து கொள்வார்கள். அந்த அளவிற்கு மரியாதையையும் எதிர்பார்ப்பார்கள். பெரும்பாலான குடும்பங்களில் இந்த மரியாதை கலந்த அந்தஸ்து பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. வயதிற்கு வந்த பிறகும் சிறு குழந்தை போல தான் சொல்வதைத் தான் அவர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முதல் சிக்கல் அங்கு தான் உருவாகிறது. அடுத்ததாக பால் ஹார்மோன்கள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிக்கின்றன. தங்களின் உயரம் , நிறம் , உருவம், தலைமுடி , முகம் குறித்த சிந்தனைகளும் , கவலைகளும் அதிகரிக்கின்றன. ஆண்களும் , பெண்களும் மிக அதிகமாக கண்ணாடியைப் பார்க்கும் பருவம், பதின் பருவம் தான்.

பருவ வயதை அடைந்தவுடன் ஆண்களில் சுரக்கும் பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் உடலில் கலந்தவுடன் தன்னை ஆணாக உணர ஆரம்பிப்பார்கள். எதிர் பாலினமான பெண்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். அவர்கள் தன்னை கவனிக்க வைக்க எதை எதையோ செய்யத் தோன்றும். தன் உடலைப் பற்றி அறிந்து கொள்ளவும் , எதிர்பாலினத்தின் உடலைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஆர்வம் கூடும். எப்படி குழந்தைகள் பிறக்கிறார்கள் என்ற கேள்வி ஆணிற்கும் , பெண்ணிற்கும் இந்த பருவத்தில் தான் தோன்றும். விந்து வெளியேற்றம் என்பது தான் இந்த பருவத்தில் ஆண்களின் பெரும் கவலையாக இருக்கிறது. ஏன் வருது ? எதுக்கு வருது ? அதுவும் வெள்ளையாக வருது ? அடிக்கடி வெளியேறினா பெரிய பிரச்சனைனு தொ(ல்)லைக்காட்சியில வேற ஒரு பெருசு பேசிப் பேசியே தொல்லை பண்ணுது ? என்று விந்து வெளியேற்றம் தொடர்பான கேள்விகளும் , அச்சமும் நீண்டுகொண்டே தான் போகிறது. 'விந்து என்பது எச்சில் மாதிரி , கண்ணீர் மாதிரி , வியர்வை மாதிரி ஆண் உடல் சுரக்கும் ஒரு நீர்மம் அவ்வளவு தான் ' என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒரு சராசரி ஆணின் உடலில் ஒரு நாளுக்கு 200 மில்லியன் விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன.குறிப்பிட்ட அளவில் விந்து நீரும் சுரக்கிறது. இவற்றை தொடர்ந்து தேக்கி வைக்க முடியாததால் வெளியேறிக்கொண்டே இருக்கிறது. இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

பால் ஹார்மோனால் காமம் உடலில் பரவ ஆரம்பிக்கும். கலவி பற்றி அறிந்து கொண்ட பிறகு அதை செய்து பார்க்க உடலும் மனமும் ஏங்கும். ஆனால் அந்தப் பருவத்தில் அதற்கான பக்குவம் இருக்காது. எந்த வயதிலும் எப்படிப் பார்த்தாலும் காமத்திற்கு வடிகால் தேவை. நாம் வடிகாலை ஏற்படுத்தாவிட்டால் அதுவே ஏதோ ஒரு வகையில் ஏற்படுத்திக் கொள்ளும். எளிதான வடிகாலாக சுய இன்பம் இருக்கிறது. ஆண்களின் திருமண வயது கூடிக்கொண்டே போகும் இன்றைய காலகட்டத்தில் சுய இன்பம் தீங்கற்ற காம வடிகாலாக இருக்கிறது. இதனால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பாலியல் கதைகள் படிப்பதாலும் , பாலியல் காணொளிகளைக் காண்பதாலும் காம உணர்வுகள் அதிகரிக்குமே தவிர குறையாது. ஆனால் சுய இன்பம் மூலம் காம உணர்வுகள் குறையும். நடைமுறையில் சுய இன்பம் என்பது ஒரு பெரும் குற்றமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் குற்ற உணர்ச்சியுடனே தான் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். பாலியல் வேட்கை ஏற்படும் போது சுய இன்பம் செய்வதில் எந்த தவறும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் சரியான இடைவெளியில் ஆண்களின் உடலிலிருந்து விந்து சரியான முறையில் வெளியேறிக்கொண்டே இருந்தால் அவர்களால் சமூகத்திற்கு பெரிய அளவில் தீங்குகள் நேராது.

பதின் பருவ பெண்ணின் முதல் பிரச்சனையாக மாதவிடாய் இருக்கிறது.சுற்றி இருக்கும் பெண்களால் ஓரளவு புரிதல் உருவாகிறது.பாலியல் கல்வி இல்லாத சூழலில் முழுமையான புரிதலுக்கு புத்தகங்களும், சரியான காணொளிகளும் தான் உதவி. அடுத்த சந்தேகம் தங்களின் மார்பகங்கள் குறித்து உருவாகிறது. அறிவியல் படி மார்பகங்கள் இருந்தால் பெண் என்று அடையாளம் காணவும் , குழந்தை பிறப்பின் போது பால் உற்பத்தி நடைபெற்று குழந்தைக்கு புகட்டவும் , கலவியின் போது பாலியல் நாட்டத்தை அதிகப்படுத்தவும் செய்கின்றன. மற்றபடி மார்பகங்களின் அளவிற்கும் அவற்றின் செயல்பாடுகளும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்து தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிகம் மெனக்கெடுவார்கள். தங்களை யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாமலேயே நோட்டம் விடுவார்கள். வீடுகளில் அர்த்தமேயில்லாமல் சண்டையிடுவார்கள். பெண்களின் காம உணர்வுகள் குறித்தும் , அவர்களின் காம வடிகால் குறித்தும் , அவர்களின் சுய இன்பம் குறித்தும் தெரியவில்லை. பொதுவெளியில் என்றில்லை எழுத்தில் கூட பெண்களின் காம உணர்வுகள் பற்றி எழுத இன்னமும் முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. பாலியல் துன்புறுத்தல்கள் அடுத்த பிரச்சனையாக இருக்கிறது. லேசாகத் தொடுவது , தட்டுவது , தடவுவதிலிருந்து பாலுறுப்புகளைத் தீண்டுவது வரை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யாரோ ஒரு மனிதனால் ஏதோ ஒரு அளவிற்கு கிட்டதட்ட எல்லா பெண்களுமே பாலியல் துன்புறுத்தலைச் சந்தித்தவர்களே என்கிறார்கள். ஆனால் இதைப் பற்றிய எச்சரிக்கையும் , விழிப்புணர்வும் இன்னமும் அந்த வயதில் நிறைய பெண்களுக்கு கிடைப்பதில்லை. சமீபத்தில் கூட மீ டூ ஹேஷ்டேக் ( #MeToo ) மிக வேகமாக உலகெங்கும் பரவியது நினைவில் இருக்கலாம். இதையெல்லாம் கடந்து தான் பெண்கள் நம்முடன் வாழ்ந்து வருகிறார்கள்.

பதின் பருவத்தில் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக பெண்களும் , ஆண்களும் இருக்கிறார்கள். சிறிய தோல்வியை , ஏமாற்றத்தைக்கூட தாங்கிக் கொள்ள அல்லது அதைக் கடந்து போக பழக்கப்படவில்லை. இந்த மனநிலை தான் பள்ளித் தேர்வில் ஏற்படும் தோல்வியைக்கூட தாங்கிக்கொள்ள முடியாமல் ஒரு சிலரை தற்கொலை வரை கொண்டு போகிறது. தற்போது நிலைமை கொஞ்சம் மாறி இருக்கிறது. அடுத்தடுத்து தேர்வுகள் நடத்தப்படுவதால் முன்பு போல விபரீதங்கள் நிகழ்வதில்லை. குழந்தையாக இருக்கும் போதே ஏமாற்றத்தையும் , தோல்வியையும் பழக்கப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.ஆனால் நமது குடும்பங்கள் குழந்தைகளை அப்படி பழக்கப்படுத்துவதில்லை. அவர்கள் கேட்டதையெல வாங்கிக் கொடுத்தே பழக்குகிறார்கள். ஏமாற்றம் என்பதை அறியாமலேயே வளருகிறார்கள். அப்படி பழக்கப்படாத மனம் தான் தன்னையும் வருத்திக்கொண்டு அடுத்தவரையும் பழிவாங்கும் மனநிலையை உருவாக்குகிறது. இந்த மனநிலை தான் இன்னொரு மனிதரைப் பாதிக்கும் குற்றத்தில் போய் முடிய வைக்கிறது. குழந்தைகளை மனவலிமை பெற்றவர்களாக, எத்தகைய துன்பங்களையும் தாங்குபவர்களாக, மற்றவர்களின் வாழ்க்கையைப் பாதிக்காதவர்களாக வளர்க்க முயற்சிக்க வேண்டும். அவர்களுக்குப் புரிதல்களை உருவாக்க பெற்றோர்களும் , ஆசிரியர்களும் தோழமை உணர்வுடன் நடந்து கொள்வது அவசியமாகிறது.

எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதையெல்லாம் செய்து பார்க்கும் ஆர்வம் இந்த பதின் பருவத்தில் தான் அதிகமாக இருக்கிறது. இந்தக் காரணத்தால் தான் புகைப்பழக்கமும் , மதுப்பழக்கமும் உள் நுழைகின்றன. இவற்றில் புகைப்பழக்கத்தை விட மதுப்பழக்கம் தான் நிறைய பேர்களின் வாழ்வை சீரழிவிற்கு கொண்டு வருகிறது. புகைப்பழக்கத்தை நிறைய பேர்களால் எளிதில் விட முடிகிறது. அதே நேரத்தில் மதுப்பழக்கத்தை அப்படி விட முடிவதில்லை. அதனால் தான் இந்தப் பருவத்தில் அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறான சரியான வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன. ' ஆண்களிடம் பேசக்கூடாது ' என்று சொல்லியே பெண்களை வளர்ப்பதால் ஆண்களிடம் பேசிப் பார்க்கும் ஆர்வம் இந்த பருவத்தில் பெண்களுக்கு அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் ஒரு ஆணே அவளிடம் வந்து பேசும் போது , அவன் பேசுவது பிடித்துப் போனால் தொடர்ந்து அவனிடம் பேசிக்கொண்டே இருக்க விரும்புகிறார்கள். இதைக் காதலென்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் பதின் பருவ பெண்களும் , ஆண்களும்.
எதிர்பாலின ஈர்ப்பை காதலென்று மிகத்தப்பாக புரிந்து கொள்ளும் பருவமாக பதின் பருவம் இருக்கிறது. பாலியல் ஈர்ப்பை காதலென்று நம்ப வைக்கும் வேலையை தமிழ் சினிமா ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறது. இந்த பருவத்தில் வருவது காதலே அல்ல, வெறும் ஈர்ப்பு தான். ஆனால் இதை அவர்களிடம் சொல்லக்கூட யாரும் தயாராக இல்லை. இந்த வயதில் இப்படித்தான் தோன்றும் இது காதல் அல்ல என்று அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டாலே போதுமே , ஈர்ப்பை காலென்று நம்ப மாட்டார்களே. இந்த புரிதலை குடும்பங்களும் , கல்விக்கூடங்களும் தான் உருவாக்க வேண்டும். முதலில் இதைப்பற்றி பேசவே அவர்களை அனுமதிப்பதில்லை.அப்புறம் எப்படி புரிதலை உருவாக்குவது ? இந்த வயதுகளில் காதலி அல்லது காதலனுடன் வீட்டை விட்டு ஓடுவது இன்னமும் குறைந்தபாடில்லை. நமது சமூக அமைப்பிலேயே தவறிருக்கிறது.

இந்த பருவத்தை கடந்த பிறகு தான் நாமா இப்படியெல்லாம் நடந்து கொண்டோம் என்று தோன்றும். என்ன செய்வது ? யாராக இருந்தாலும் அந்த பருவத்தின் குழப்பங்களையும் , சந்தேகங்களையும் , கேள்விகளையும் கடந்து தான் வரவேண்டியுள்ளது.முந்தைய காலத்தில் பாலிய விவாகம் என்று ஒன்று நடைமுறையில் இருந்தது. சமூக பொருளாதார காரணங்களின்படி வேண்டுமானால் குழந்தை திருமணம் தவறானதாக இருக்கலாம். இயற்கையின் நியதிபடி வயது வந்த இருவர் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை . வயதிற்கு வந்த உடனேயே அருகிலேயே துணை இருப்பதால் காமத்தை அடக்கியாள வேண்டிய கட்டாயம் அப்போது இல்லை. காமத்திற்கான வடிகாலை வேறு வழிகளில் அடைய வேண்டிய நிர்பந்தமும் இல்லை. அதனால் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்களும் அப்போது அவ்வளவாக இல்லை என்கிறார்கள் , உளவியல் நிபுணர்கள்.

நாகரிக சமூகம் என்று சொல்லி குழந்தை திருமணம் என்பதை நீக்கி விட்டோம்.மிகவும் நல்லது தான்.இன்றைய குழந்தைகள் அந்த வயதில் உடலளவிலோ , மனதளவிலோ முதிர்ச்சியாக இருப்பதில்லை. ஆனால் அதற்கு பதிலாக எதையும் அங்கே வைக்கவில்லை. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் , '' ஒரு இடத்திலிருந்து ஒன்றை எடுக்கும் போதே அதற்கு பதிலாக எதை வைக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும் '' என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். இதை எல்லா இடத்திலும் பொருத்திப் பார்க்க முடியும். அரசியலில் கூட ஒரு குறிப்பிட்ட கட்சி, ஆட்சிக்கு வரக்கூடாது என்று முடிவெடுக்கும் போதே யார் வரவேண்டும் என்பதையும் சேர்த்தே முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

குழந்தை திருமணம் தடை செய்யப்பட்ட பிறகு 18 வயதானவர்களை மேஜர் என வகைப்படுத்துகிறோம்.தன் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என சட்டம் சொல்கிறது. ஆனால் அவர்களுக்கு அந்த உரிமையை சமூகம் கொடுப்பதில்லை. ஆண்கள் , பெண்கள் இந்த இரண்டு பிரிவுகளில் பெண்களில் பெரும்பாலானோருக்கு விரைவில் திருமணம் நடந்துவிடுகிறது. அந்த திருமணம் விருப்பப்பட்டோ , நிர்பந்தத்தாலோ நடக்கிறது. அதே நேரத்தில் ஆண்கள் , திருமணத்திற்காக வயதிற்கு வந்ததிலிருந்து பத்து, பதினைந்து ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலோ காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவரை அவன் காமத்தை கட்டுப்படுத்த வேண்டுமா ? அல்லது எந்த வழியிலாவது பெற்று கொள்ளலாமா ? என்று எதுவும் சொல்லித்தரப்படுவதில்லை. பொத்தாம் பொதுவாக விளையாட்டுகளிலும் , கலைகளிலும் ஆர்வத்தைச் செலுத்துவதன் மூலம் தொடர்ச்சியான பாலியல் எண்ணங்களிலிருந்து விடுபடலாம் என்று மட்டும் சொல்கிறார்கள். இப்படியாக பதின் பருவம் கடந்து போகிறது...

பேசுவோம்...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 24 Jul 2018, 11:15

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! 3838410834 இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 ! 3838410834


தொடருங்கள் நண்பா தொடர்ந்து பேசுவோம்



seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Tue 24 Jul 2018, 20:54

மகிழ்ச்சி நண்பா. பேசுவோம். மிகவும் நன்றி !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக